"சின்ன சின்ன திகில் கதைகள்"
" சின்ன சின்ன திகில் கதைகள்" (கதை 1 : மாடி அறையின் மர்ம மனிதன்) ரா.பிரபு. கொஞ்ச நாளாய் தான் எனக்கு இது நடக்கிறது. மிக சில தினங்களுக்கு முன்பு இருந்து தான் அந்த உணர்வு தோன்றுகிறது. அது வரும் போது எல்லாம் என் நிம்மதி பறி போய் என்னை பரிதாப ஜீவனாக தவிக்க வைக்கிறது. என்னால் இதை ....இந்த இதய பிசைவை தாங்க முடியும் என்று தோன்ற வில்லை. எந்த கனத்திலும் அளவுக்கு மீறி ஊத பட்ட பலூன் போல நான் வெடித்து சிதறி விடுவேன் போல இருக்கிறது. அதன் ஆரம்ப அறிகுறியாக தானோ என்னவோ எனது உடல் எடையை இழக்க தொடங்கி உள்ளது . அதுவும் அசுர வேகத்தில் ...இன்னும் கொஞ்ச நாளில் இந்நிலை நீடித்தால் என் உடலை நானே உணர கூட முடியாமல் போகும் போல இருக்கிறது. எல்லாத்துக்கும் காரணம் இந்த அரசாங்கம் தான் சார்.. தன் பிள்ளைகளுக்கு சோறு போட வக்கு இல்லாத பெற்றோர் க்கு எதுக்கு பிள்ளைகள்... தன் குடிமகனுக்கு வேலை கொடுக்க முடியாத அரசாங்கத்திற்கு எதற்கு இத்தனை மக்கள் ?? என் புலம்பல் பெரிது காரணம் நான் ஒரு வேலை இல்லா பட்ட தாரி . ஆனால் உங்களிடம் நான் சொல்ல வந்தது எனது பர்சனல் பிரச்சனைகளை பற்றி அல்ல. மாறாக எனக்கு சில தினங்