தேடல் கேள்விகள்
" தேடல் கேள்விகள் " அறிவியல் காதலன் ரா.பிரபு. நண்பர்களுக்கு வணக்கம் ! இந்த தேடல் கேள்விகள் நமது" தேடல் திடல் " என்கிற முக நூல் பக்கத்தில் அவ்வபோது நண்பர்கள் கேட்ட கேள்விகளில் ஒரு 10 கேள்விகளுக்கு நான் கொடுத்த பதில்களின் தொகுப்பு ஆகும். நல்ல கேள்விகளே நல்ல பதிலை கொடுக்க உதவுகின்றன. கேள்வி கேட்ட அனைவருக்கும் நன்றி அதை படித்து பயனடைய போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கேள்விகள் மூலம் தேடலை தொடருவோம். 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 "தேடல் கேள்விகள் " (கேள்வி : 1 ) 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🎯 கேள்வி : உயிர்கள் வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் ?? -கார்த்திக் கோயமுத்தூர் - 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 ✍️பதில் : வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு போவதற்கு முன் வலியை உணரும் உலகத்தைப் பற்றி சில விஷயத்தைப் பார்ப்போம். உயிரினங்களுக்கு வலிகள் தொல்லையை கொடுப்பதற்கு படைக்கப்பட்டது அல்ல. அவைகள் மிகச்சிறந்த உயிர்காக்கும் கட்டமைப்புகள் .அவைகள் நமது உடலில் கொடுக்க பட்டுள்ள Survival Mechanism . உலகில் மிக அபூர்வமாக சில குழந்தைகள் நீங்கள்