சைத்தானின் ஓவியம் (பாகம் 2 )
#சைத்தானின்_ஓவியம் (பாகம் 2.) #ரா_பிரபு அபிஷேக்.. இண்டஸ்ட்ரியலிஸ்ட் அபிஷேக்.. அந்த மகா சொகுசான ஆபீஸின் ஜன்னல் கண்ணாடி வழியே சோகமும் குழப்பமும் நிறைந்த முகத்துடன் வெளியே கூடி இருந்த மக்கள் கூட்டத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.. 'பிலடி பெக்கர்ஸ்..' என்றான் உதடுக்குள்... ஒரு பிரான்ஸ் நாட்டு இறக்குமதி சிகரெட் ஒன்றை பற்ற வைத்தான். ஏழைகளை கண்டாலே நெஞ்சில் வெறுப்பு நெருப்பு சுரக்கும் அவனுக்கு. காம்பவுண்ட் சுவர் பக்கம் ஒருத்தன் தலையில் சிகப்பு துண்டு கட்டி கட்டம் போட்ட சட்டையில் அருகில் மனைவி மற்றும் கையில் ஒரு பெண் பிள்ளை வைத்து இருந்தான் .வெயில் ஐ சட்டை பண்ணியதாக தெரிய வில்லை. "ஹ்ம்ம் நான்சென்ஸ் எல்லா குடும்பத்தோட வந்து இருக்காங்க என் கம்பெனியை மூட.. ராஸ்கல்ஸ்.. " " கேடு கேடு மக்களுக்கு கேடு.. நாடு நாடு கெட்டுப் போகும் நாடு.. ஓடு ஓடு ஊரை விட்டு ஓடு... மூடு மூடு பாக்டரியை மூடு.. " எவனோ ஒருத்தன் ரைமிங் இல் கூவி கொண்டிருந்தது காதில் எரிச்சல் அம்புகளாய் பாய்ந்து கொண்டு இருந்தது..வெறுபாய் சிரித்தான்.. வெளிச்சம் குறைவான அந்த ஹாலில் ஏழு பேர் கூடி இருந்தார்கள்