"நான் இனி சாக மாட்டேன் "
"நான் இனி சாக மாட்டேன் " (சிறுகதை ) ரா.பிரபு (கதை எழுதி ரொம்ப நாள் ஆச்சி என்பதால் இன்று ஒரு சிறுகதை .....) அந்த சிறுவன் மிக விசித்திரமாக இருந்தான் உடல் முழுக்க சுருண்டு சுருண்டு கூன் விழுந்ததை போல. அவனை அந்த பிறந்த நாள் கூட்டத்தில் அனைவரும் விசித்திரமாக பார்த்தார்கள். இந்த விழாவிற்கு திடீரென எங்கே இருந்து வந்தான் இவன்... யார் இவன்..?? என்று ஆச்சரியம் கலந்து இருந்தது அவர்கள் கண்களில். அந்த பணக்கார பங்களாவின் மாடியில் அந்த பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. வந்தவர்கள் அனைவர் முகத்திலும் பணக்கார தனம் ஒட்டி இருந்தது. முகத்தில் சிரிப்பை மறைக்கும் அளவு அலங்காரம் செய்திருந்த பெண்கள் தனி கும்பலாக சேர்ந்து அரட்டை துவங்கி இருந்தார்கள். விழா ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்கள் இருந்தது. அப்போது....தான். அந்த கூட்டத்திற்கு பொருந்தாத ஒன்றாக அந்த சிறுவன் அந்த கூட்டத்தில் நுழைந்திருந்தான். அந்த சிறுவனிடம் ஏதோ விசித்திரம் இருந்தது. அனைவரிடமும் ஏதோ சொல்ல துடித்தது ஆனால் தொண்டையில் வார்த்தை வர வில்லை என்பதை போல சைகை காட்டியது. கைகால் களை வேகமாக ஆட்டி எதையோ சொல்ல