"மனம் எனும் மாய பிசாசு"
" மனம் எனும் மாய பிசாசு" (இந்திய சைக்கோகளின் உலா ) ரா.பிரபு (பாகம் 1 ) நீண்ட நாட்களுக்கு முன் மதன் அவர்களின் மனிதனுக்குள் ஒரு மிருகம் புத்தகம் படித்தேன். மனித வரலாற்றில் வெளிப்பட்டுள்ள பல மிருக முகத்தை தோல் உரித்து காட்டி இருப்பார். ஆனால் கலிகுலா, செங்கிஸ்கான்,நீரோ மன்னன், மற்றும் சிக்காடிலோ ,டெட்பாண்டி ,ஜாக் தி ரிப்பர் போன்ற சைக்கோ கொலையாளிகளை பற்றி ஒரு உலக சுற்றுலா சென்று விவரித்திருப்பார். ஆனால் அப்படி பட்ட பிசாசு மனம் உலகில் எங்கயோ ஏதோ ஒரு மூலையில் இருக்கிறது என நினைப்பது தான் முட்டாள் தனம். இங்கயே நம்ஊரிலேயே உள்ள மனம் எனும் மாய பிசாசு உங்களை திகைக்க செய்யும்.. இத்தொடரில் நாம் பாரக்க போவது நமது நாட்டில் இருந்த சில சைக்கோகள் ..தொடர் கொலையாளிகள் கொடுரர்கள் பற்றி தான்... சைக்கோக்களை தொடருவோம் வாருங்கள்........... ஒரு பகீர் க்ரைம் சம்பவத்தை யார் செய்தார்கள் என சொல்லாமல் சஸ்பென்ஸாக விளக்கி விட்டு கடைசியாக இவ்வளவையும் செய்தது வெறும் பள்ளி மாணவர்கள் என சொன்னால் நீங்கள் திகைப்படைவீர்கள் .ஆனால் இப்போது ஒரு சம்பவத்தை முன்கூட்டியே சொல்லிட்டே விவரிக்கிறேன் இவர்