கடைசி கடிதம்.
கடைசி கடிதம் (கதை, கற்பனை ,எழுத்து :ரா.பிரபு) வணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு குட்டி தொடரில் உங்களை சந்திக்கிறேன். சங்கர் ராமன் என்கிற ஒரு நடுத்தர வயது மனிதனின் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் நடந்த ஒரு நாள் சம்பவம் தான் இந்த "கடைசி கடிதம்" கதைக்கு செல்வோம் வாருங்கள்...... அது 1992 ஆம் வருடம். கோடை தினத்தில் ஒரு குறிப்பிட்ட நாள். சங்கர ராமன் ஒரு விளக்க முடியாத மனநிலையில் இருந்தார். சங்கர ராமன் ஒரு சாதுவான நல்ல மனிதர். அதிகம் அதிர்ந்து பேசாதவர். வேலையில் அதிக கடமை உணர்ச்சியும் கடின உழைப்பும் கொண்டவர். விளைவு, இத்தனை நல்ல உள்ளங்களை சம்பாதித்திருந்தார். நடுத்தர வர்க்கம் என்பதன் மிக சரியான அச்சு வார்ப்பு இந்த சங்கர ராமன். குடும்பம் கொஞ்சம் பெரிசு. அன்பான பண்பான மனைவி தவிர 4 பெண்கள். அப்புறம் ஆன் குழந்தையை பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கத்தோடு விடா முயற்சியில் பிறந்த கடைசி கடைக்குட்டி பய்யன். தனது போஸ்ட் மேன் உத்யோகத்தில் இத்தனை பேரை வளர்த்து ஆளாக்கியதற்கு அவருக்கு ரெண்டு நோபல் பரிசு கூட கொடுக்கலாம். அவருக்கு இருக்கும் கவலை தனது கடைசி பெண் இன்னும் க