"மர்மங்கள் முடிவதில்லை"
" மர்மங்கள் முடிவதில்லை" (மயக்கும் மர்ம நிகழ்வுகளின் தொகுப்பு ) ரா.பிரபு (பாகம்1 : மரண மலை ) இந்த உலகம் பல வகை மர்மங்களை மர்ம நிகழ்வுகளை மர்ம இடங்களை மர்ம மனிதர்களை கொண்டது. சொல்ல போனால் இந்த பூமியே ஒரு மர்ம கிரகம் தான் . யோசித்து பாருங்கள் "Observable univerce " என்று நாம் சொல்ல கூடிய அதாவது இன்று வரை வானத்தில் நாம் அண்டத்தின் அளவை எட்டி பார்த்து அளக்க முடிந்த தொலைவாகிய இந்த அண்டத்தின் அளவு 9300 கோடி ஒளி ஆண்டுகள். இவ்வளவு பெரிய பரந்து விரிந்த பரப்பில் இந்த தம்மாந்துண்டு பூமியில் இருப்பதை போன்ற காற்று தண்ணீர் மற்றும் உயிரினத்தை இது வரை ஆதார பூர்வமாக நம்மால் எங்கும் கண்டு பிடிக்க முடியவில்லை.. இது மிக பெரிய மர்மமாக தெரியவில்லையா ? இவ்ளோ பெரிய அண்டம் அதில் நாம் மட்டும் தான் தனியா இருக்கோம் இது மிக பெரிய ஆச்சர்யமாக இல்லையா ?இவ்வளவு பெரிய அண்டசராசரத்தில் நாம் மட்டும் தனியாக என்ன செய்து கொண்டிருக்கின்றோம் ? அண்டத்தின் நமது இருப்பை பற்றி ஒரு விஞ்ஞானி ஒரு முறை இப்படி சொன்னார் , " இரண்டே உண்மைகள் தான் சாத்தியம் ஒன்று இவ்ளோ பெரிய மகா பிரபஞ்சத்தில்