"மர்மங்கள் முடிவதில்லை"



"மர்மங்கள் முடிவதில்லை"

(மயக்கும் மர்ம நிகழ்வுகளின் தொகுப்பு )

ரா.பிரபு 

(பாகம்1 : மரண மலை )

இந்த உலகம் பல வகை மர்மங்களை மர்ம நிகழ்வுகளை மர்ம இடங்களை மர்ம மனிதர்களை கொண்டது.
சொல்ல போனால் இந்த பூமியே ஒரு மர்ம கிரகம் தான் .
யோசித்து பாருங்கள்
"Observable univerce " என்று நாம் சொல்ல கூடிய அதாவது இன்று வரை வானத்தில் நாம் அண்டத்தின் அளவை எட்டி பார்த்து அளக்க முடிந்த தொலைவாகிய இந்த அண்டத்தின் அளவு 9300 கோடி ஒளி ஆண்டுகள்.
இவ்வளவு பெரிய பரந்து விரிந்த பரப்பில் இந்த தம்மாந்துண்டு பூமியில் இருப்பதை போன்ற காற்று தண்ணீர் மற்றும் உயிரினத்தை இது வரை ஆதார பூர்வமாக நம்மால் எங்கும் கண்டு பிடிக்க முடியவில்லை.. இது மிக பெரிய மர்மமாக  தெரியவில்லையா ? இவ்ளோ பெரிய அண்டம் அதில் நாம் மட்டும் தான் தனியா இருக்கோம் இது மிக பெரிய ஆச்சர்யமாக இல்லையா ?இவ்வளவு பெரிய அண்டசராசரத்தில் நாம் மட்டும் தனியாக என்ன செய்து கொண்டிருக்கின்றோம் ?

அண்டத்தின் நமது இருப்பை பற்றி ஒரு விஞ்ஞானி ஒரு முறை இப்படி சொன்னார் ,
" இரண்டே உண்மைகள் தான் சாத்தியம் ஒன்று இவ்ளோ பெரிய மகா பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தான் தனியா இருக்கோம். அல்லது இந்த பிரபஞ்சத்தில் நாம தனியா இல்லை.... இந்த இரண்டில் எது உண்மையானாலும் இரண்டுமே ஒரே அளவு திகிலை கொடுக்க கூடிய உண்மைதான் " என்றார்.
இந்த பிரபஞ்சத்தில் நாம் தனித்து இருக்கும் ஆச்சர்யத்தை பற்றி தலையை கிறுகிறுக்க வைக்கும் பல கோட்பாடுகள் உள்ளன அவற்றை பற்றி விளக்கினால் இந்த கட்டுரை தொடர் அறிவியல் கட்டுரையாக மாறிவிடும் என்பதாலும் மர்மங்கள் தலைப்பு தாங்கி இந்த கட்டுரை தொடர் ஆரம்பிக்க பட்டுள்ளதாலும் மர்மங்கள் சிலதை பற்றி வரிசையாக அலசி விட்டு தொடரின் கடைசி அத்யாயத்தில் அந்த கோட்பாடுகள் பற்றிய விளக்கத்திற்கு மீண்டும் வருகிறேன்.
இப்போதைக்கு மர்மங்கள் மட்டும்......

 மர்மமே வடிவான இந்த மர்ம பூமியில் அடங்கியுள்ள நிகழ்வுகள் பல வற்றில் பஞ்சம் இல்லாமல் மர்மங்களும் அமானுஷ்யங்களும் நிறைந்து கிடக்கின்றன. அதில் பலது அவ்வபோது விஞ்ஞானத்தால் தீர்க்க படுகின்றன. உதாரணமாக நீண்ட நாள் மர்மத்திற்கு பின் பெர்முடாவில் ஏதும் மர்மம் இல்லை என்று அங்கு நடந்த பல சம்பவங்களுக்கு விளக்கம் அளித்தது விஞ்ஞானம். ஆனால் இன்னும் விஞ்ஞானம் விடை காண முடியாத மர்மங்கள் இங்கு ஏராளம்.
நமக்கு அதிகம் பரிட்சய பட்ட பிரமிட் ,பயிர் வட்டங்கள் ,பெர்முடா, நாஸ்கா கோடுகள்,ஸ்டோன் எஜ்,ஏரியா 51  தொடங்கி பல சின்ன பெரிய விடை தெரியாத வில்லங்கங்கள் நிறைந்தது தான் இந்த உலகம்.(ஒன்றை இப்போதே சொல்லி விடுகிறேன் நமக்கு அதிகம் பரிச்சயமான அதிக பிரபலமான உலக மர்மங்களை பற்றி நான் கட்டுரையில் சொல்ல போவது இல்லை )

இம்முறை இந்த கட்டுரை வாயிலாக அப்படி ஒரு மர்ம உலகத்திற்குதான் உங்களை ஒரு குட்டி உலா அழைத்து செல்ல இருக்கிறேன். ஒரு சின்ன முன் விளக்கத்தை இப்போதே சொல்லி விடுகிறேன் இந்த கட்டுரையில் நாம் விளக்க முடியாத பல மர்மத்தை தான் பார்க்க போகிறோம் என்பதால் இதில் வரும் அனைத்திற்கும் அறிவியல் பூர்வமான ஆதாரமோ விளக்கமோ என்னால் கொடுக்க முடியாது. ஏனென்றால் இந்த தொடரில் சொல்ல போகும் பல சம்பவங்கள் விஞ்ஞானதாலேயே விளக்க முடியாதவை .
சரி .. அந்த முடிவிலா மர்ம உலகத்திற்குள் நுழையலாமா....

        ✴             ✴             ✴              ✴

1959 ஆண்டு அது ....இடம் ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள உறைய வைக்கும் பனி படர்ந்த ஒரு மலை.
மலை ஏறும் சாகச குழு ஒன்று அந்த பயங்கர குளிர் சூழ்ந்த பனி மலை அடிவாரத்தை வந்து அடைந்து இருந்தது. அன்று தேதி ஜனவரி 31.
9 பேர் கொண்ட இளைஞர்கள் கூட்டம் அது . அவர்கள் அனைவரும் ரஷ்யாவை சார்ந்த " Ural Polytechnical Institute " ஐ சார்ந்த மாணவர்கள் . அவர்களில் Igor Dyatlov எனும் 23 வயது மாணவன் தான் அந்த டீமின் லீடர்.
அந்த குழு ஒரு திறமையான மலை ஏறும் குழு . அவர்கள் அங்கே மலை ஏற வந்து இருந்ததில் ஒரு நோக்கம் இருந்தது. அவர்கள் அனைவருமே ஹைக்கர்ஸ் காண grade 2 தகுதியை பெற்றவர்கள் அவர்கள் இந்த மலை ஏற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு grade 3 வழங்க படும்.
அதனால் தான் Sverdlovsk Oblast எனும் இடம் வரை ரயில் பிடித்து பின் அங்கிருந்து லாரி பிடித்து 5 நாள் பயணம் கடந்து இந்த  Kholat Syakhl எனும் மலையை வந்து அடைந்து இருந்தார்கள் (Kholat Syakhl எனும் ரஷ்ய பெயரின் ஆங்கில அர்த்தம்..dead mountain )

அங்கே அடிவாரத்தில் தங்களுக்கான உணவு மற்றும் கருவிகளை தயார் செய்து எடுத்து கொண்டார்கள். பிப்ரவரி 1 ஆம் தேதி அவர்கள் அந்த மலையில் ஏற துவங்கினார்கள் அந்த மலையை கடந்து அடுத்து அவர்கள் செல்ல இருக்கும் இலக்கை அவர்கள் நிற்காமல் கடந்து  செல்ல முடிவு செய்தார்கள். இலக்கை அடைந்த பின் அடுத்த நாள் இரவு அங்கே கேம்ப் போட்டு தங்கி கொள்ளலாம் என முடிவு செய்திருந்தார்கள் .ஆனால் அன்று இரவு கடுமையான பனி பொழிவால் அவர்கள் பாதை கண்ணில் தெரியாமல்  மறைந்து போன போது தங்கள் தவறை உணர்ந்தார்கள் அன்று இரவு அங்கேயே டென்ட் போட்டு தங்கிவிட முடிவு செய்தார்கள். அந்த 9 பேர் கொண்ட குழு அன்று தங்கள் வாழ்நாளில் கடைசி இரவு அது என தெரியாமல் அன்றைய இரவு அங்கேயே தங்கினார்கள். ஆம் அடுத்த நாள் அவர்களில் ஒருவர் கூட உயிரோடு இல்லை.

அவர்களின் பிணத்தை பிற்பாடு கண்டு பிடித்த போது மக்களுக்கு எக்க சக்க ஆச்சர்யமும் மர்மமும் காத்து கிடந்ததது.
முதலில் கிடைத்த 6 பிணத்தில் உயிரை போக்கும் எந்த காயமும் இல்லை அவர்கள் ஹைப்போ தெர்மியாவால் (குளிரால் ) இறந்து இருப்பதாக முடிவு செய்தார்கள். அதில் ஒருவருக்கு மட்டும் கபாலத்தில் லேசாக விரிசல் கண்டு இருந்தது ஆனால் அது உயிரை குடிக்க போதுமானதல்ல என்று டாக்டர்கள் சொன்னார்கள்.

மீதி 3 பிணங்கள் கிடைத்த போது தான் பார்த்தவர்களுக்கு பித்து பிடித்தது. அங்கே நடந்துள்ளது விளக்க முடியாத ஒரு மர்மம் சம்பவம் என்று புரிந்தது. அங்கு கிடைத்த பிணங்களில் 3 பேரில் ஒருவர் மண்டை பிளந்து இருந்தது .இருவருக்கு நெஞ்சு எலும்பு நொறுக்க பட்டிருந்தது ஆனால் ஆச்சர்யமாக அதை நொறுக்கிய அடையாளமாக அந்த உடலில் வெளி காயங்கள் ஏதும் இல்லை. அந்த பாதிப்பை ஆராய்ந்த டாக்டர்கள் இந்த அளவு நெஞ்சு எலும்பை நொறுங்க செய்ய மனிதனால் முடியாது குறைந்தது ஒரு கார் அளவு அழுத்தம் தர பட்டு நொறுக்க பட்டுள்ளது என்றார்கள் . ஆனால் அவர்கள் இருந்த இடத்தை சுற்றி அவர்கள் காலடி தவிர வேறு ஏதும் தடயம் அங்கு இல்லை.
அந்த குழுவில் dubunina என்ற பெண்ணின்  பிணத்தை ஆராய்ந்தவர்கள் மேலும் அதிர்ந்தார்கள்.
அந்த பிணத்தில் நாக்கு துண்டிக்க பட்டு இருந்தது மேலும் ஒரு கண்ணை காண வில்லை. முகதின் தோல் கொஞ்சம் பிய்க்க பட்டு இருந்தது  மேலும் மண்டை ஓட்டில் சிறு பகுதி உடைத்து எடுக்க பட்டிருந்தது.

அந்த மர்ம மரணத்தை சரியாக விளக்க முடியாமல் நிபுணர்கள் திணறினார்கள். அவர்களின் பிணங்கள் ஒரே இடத்தில் கிடைக்க வில்லை சம்பந்தா சம்பந்தம் இல்லாம வேறு வேறு இடத்தில் கிடைத்து குழப்பியது. அதில் ஒருவன் உடல் பாதி புதைக்க பட்டு இன்னும் குழப்பினான் .  அங்கே மிக விசித்திரமான ஒன்று காண கிடைத்தது .அவர்கள் தங்கள் உடைகளை அவர்களுக்குள் மாற்றி மாற்றி அணிந்திருந்தார்கள் .
அவர்கள் தங்கி இருந்த டென்ட் உள் பக்கமாக கிழிக்க பட்டிருந்தது . அவர்கள் காலடி தடங்கல் அவர்கள் அர்த்த ராத்திரியில் திடீரென டென்டை கிழித்து கொண்டு வெளியே ஓடி வந்து  இருப்பதாக காட்டியது. நன்கு சாப்பிட்டு தூங்கிய அந்த குழு திடீரென நள்ளிரவில் டென்டை கத்தியால் கிழித்து கொண்டு வெளியேற வேண்டிய தேவை என்ன ? அந்த குழுவிற்கு நள்ளிரவில் நடந்த மர்ம பயங்கரம் தான் என்ன ? மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்டு அவர்கள் நெஞ்சை நொறுக்கி கால் அடி தடம் கூட தெரியாமல் அவர்களை வேட்டையாடி நாக்கை அறுத்து கண்ணை தோண்டி சிலரை சில அடி ஆழம் பூமியில் புதைத்து அவர்கள் உடையை அவர்களுக்குள் மாற்றி போட்டு..அந்த கொடூர வி்சித்திர செயலை செய்தது யார் அல்லது எது ? கடைசி வரை அந்த கேஸில் யாரும் சரியான  விளக்கம் சொல்ல முடியவில்லை.

எக்க சக்க யூகங்கள் மட்டுமே மிஞ்சியது.
அங்கு வாழும் மான்சி இன மக்களால் அவர்கள் தாக்க பட்டிருக்கலாம் என்றார்கள் ஆனால் அந்த அதீத அழுத்தத்தை கொடுத்து நெஞ்சை நொறுக்குவது மனித சக்திக்கு அப்பார் பட்டு இருந்ததும் அந்த இடத்தில் வேறு எந்த காலடி தடமும் கிடைக்காததும் இடித்தது. இதை ஏதோ கொடூர விலங்கு செய்து இருக்கலாம் என்றார்கள் ஆனால் அப்போதும் காலடி தடம் இருந்து இருக்க வேண்டுமே.
'குளிர் அதிகமாகி அனைவரும் திடீர் பைத்தியம் பிடித்து மன நிலை பாதிக்க பட்டார்கள் 'என்று ஒரு தியரி சொன்னது  ஆனால் காணாமல் போன கண் நாக்கு எல்லாம் தியரிக்கு பொருந்தி வர வில்லை.
ஏதோ infra sound என்று ஒரு திகில் தியரியும் சொன்னார்கள் அதாவது இரவில் மலை சிகரங்களில் ஒரு வகை ஒலி எதிரொலிக்குமாம் அதை கேட்டு விட்டால் மனிதன் மன நிலை பாதிக்க பட்டு பைத்தியம் ஆகி விடுவானாம்.
இப்படி நிறைய தியரி இருந்தும் இன்று வரை அன்று அந்த பனி மலையில் மைனஸ் 25 டிகிரி குளிரில் அன்று நடந்ததை யாராலும் சரியாக விளக்க முடியவில்லை.

இந்த இடத்தில் Yuri Yudin, எனும் அதிர்ஷ்ட சாலியை பற்றி சொல்ல வேண்டும் அந்த குழு உண்மையில் 9 பேர் அல்ல இவருடன் சேர்த்து 10 பேர் ..பாதி வழியில் உடல் நிலை சரியில்லாமல் திரும்பிவிட்டவர் இவர். ஐயோ தன்னால் போக முடியவிலையே  என்று வருத்த பட்டு புலம்பி கொண்டிருந்தவர் ( சம்பவம் கேள்வி படும் வரை... )
பிற்காலத்தில் ஒரு பேட்டியில் "நான் கடவுளை காண நேர்ந்தால் தயவு செய்து அன்றிரவு என் நண்பர்களுக்கு நடந்தது என்ன என்று மட்டும் சொல் என்று கேட்பேன் " என்றார்.

சரியாக இந்த சம்பவம் நடந்த அதே நேரம்........
சம்பவ இடத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தள்ளி இருந்த இன்னோரு மலை ஏறும் குழு ஒன்று இந்த சம்பவ இடத்தில் வானத்தில் மர்மமான ஆரஞ்சு நிற வட்ட வடிவ அமைப்பு ஒன்றை கண்டதாக பதிவு செய்தார்கள். அந்த பிப்ரவரி முதல் மார்ச் வரை அப்படி பட்ட ஆரஞ்சு வட்டங்களை பார்த்ததாக (பறக்கும் தட்டு ???) மேலும் சில பேர் பதிவு செய்தார்கள் அதில் ராணுவ ஆட்களும் கூட அடக்கம்.

அந்த ரஷ்ய சம்பவம் Dyatlov pass incident என்ற பெயரில் பின்னனாளில் புகழ் பெற்றது (அந்த டீம் லீடர் பெயர் )
அன்று அவர்களுக்கு நடந்தது என்ன என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.

      ✴              ✴              ✴                ✴

ஆமா...ம்...  ஏலியன்கள் நம்மை கண்காணிக்கிறார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு உண்டா ?
கண்காணிப்பது என்ன ..ஏலியனால் கடத்த பட்டு மனிதனை சோதனை எலி போல பயன்படுத்த பட்ட கதைகளே கூட நிறைய உண்டு..
அந்த மர்ம கதைகளை பற்றி அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.

மர்மங்கள் தொடரும்.......🕷  🕷  🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ ''மர்மங்கள் முடிவதில்லை" ☠

பாகம் 2 :  (கடத்தும் ஏலியன்கள் )

ஏலியன்கள் இருப்பது  இது வரை ஆதார பூர்வமாக நிரூபிக்க பட்டு இருக்கா ? இந்த கேள்வியை நீங்கள் நாசா விடம் கேட்டால் அவர்கள் அதை திட்டவட்டமாக மறுப்பார்கள்.
உண்மையில் அவர்கள் மிக உறுதியான ஆதாரத்தோடு அதை கண்டு பிடித்து இருந்தாலும் அதை மறுக்கவே செய்வார்கள் .ஏலியன் குறித்த உண்மை செய்திகள் மிக மிக விலைமதிப்பில்லாதவை , மிக மிக முக்கியமானவை எனவே உண்மையை உங்களுடன் பகிர நாசா என்றைக்கும் விரும்பாது .
அதனால் இந்த விஷயத்தில் நாசாவை நம்புவது முட்டாள் தனம். உலகமெங்கும் நாசா சாராத நூற்று கணக்கான ஏலியன் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் குடோன் கணக்கில் ஆதாரங்கள் வைத்திருக்கிறார்கள் ஏலியன் இருப்பதற்கு . அவர்கள் அதில் பல இடங்களில் பல பேரால் எடுக்க பட்ட போட்டோ வீடியோ தொடங்கி பல பேர் நேரில் சந்தித்ததாக சொல்ல படும் சாட்சிகள் வரையில் பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள். History tv, Discovery  tv போன்ற உலகமெங்கும் உள்ள முக்கிய அறிவியல் சேனல்கள் ஏலியன் இருப்பதாய் பரிந்துரைகின்றன . அவ்வபோது வலிமையான ஆதாரங்கள் அடங்கிய டாக்குமென்ட்ரிகளை வெளியிடுகின்றன.
ஏலியனை நிஜமாகவே நேரில் சந்தித்தவர்கள் இருக்கிறார்களா ?

இந்த விஷயத்தில் ஏலியனும் ஆவியும் ஒன்னு அதாவது அதை பார்த்ததாக சொல்ல படுவதில் உண்மை கொஞ்சம் பொய் அதிகம் கொண்ட 'உண்மை'கள் அவை. ஆனால் ஏலியன் கதைகளை முற்றிலுமாக பொய் என்றும் நாம் ஒதுக்கி விட முடியாது. குறிப்பாக ஏலியன் கதைகளில் உலகம் எங்கும் பலர் ஒரே மாதிரி சொல்வது பலரையும் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. குறிப்பாக சில பேரின் அனுபவங்கள் ஒரே மாதிரி இருப்பது வியப்பு தருகிறது. அதில் மிக சுவாரஷ்யமானது ஏலியனால் மனிதர்கள் கடத்த படுவதாக சொல்ல படும் கதைகள்.

உலகில் பல பேர் தங்களை ஏலியன் கடத்தியதாக பதிவு செய்திருக்கிறார்கள். அவற்றில் பல பேர் ஏலியன் தன்னை கடத்தி அவர்கள் விண்கலத்தில் வைத்து ஏதேதோ சோதனை செய்தார்கள் என்று குறிபிட்டு இருக்குறார்கள். பல பேர் ஏலியன் தங்கள் உடலில் எதையோ செலுத்தி பரிசோதனை செய்ததாக சொல்கிறார்கள். பலர் அவர்கள் 'இப்படி இருந்தார்கள் 'என்று கடத்தல் அனுபவத்திற்கு பின் படம் வரைந்தும் காட்டி இருக்கிறார்கள். ஒரு பெண் இந்த புகார் கொடுத்த போது அவர்கள் தங்கள் மூக்கில் எதையோ பொருத்தினார்கள் என்று குறிப்பிட்டாள் . ஆச்சர்யம் என்ன வென்றால் இது நடந்து அடுத்த நாளே அந்த பெண்ணின் மூக்கில் உள்ளே ஒரு சிறு கட்டி உருவாகி இருந்தது.
பொதுவாக இந்த மாதிரி கதைகள் பரபரப்பு விரும்பிகளால் கட்ட பட்ட பொய் கதைகளாக இருக்கும். ஆனால் எல்லா நேரத்திலும் எல்லா கதைகளும் அப்படி அல்ல.

சில பிரபலமான ஏலியன் கதைகளை இப்பொது பார்க்கலாம்.
Barney எனும் ஏலியன் சாட்சியாளர் சிவில் உரிமை இயக்கத்தில் அந்த ஊரில் கவுரவமான பதவியில் உள்ளவர். அவர் மனைவி  Betty  ஒரு சமூக சேவகி .
அவர்கள் கதை விடுவார்கள் என்றால் அந்த ஊரில் யாரும் நம்ப மாட்டார்கள் அவர்கள் அனுபவம் என்ன என்று பார்ப்போம்.
1961 ஆம் வருடம் அது . அவர்கள் இருவரும் விடுமுறை முடிந்து நயாகரா நீர்வீழ்ச்சி பார்த்துவிட்டு காரில் திரும்பி கொண்டிருந்தார்கள். அப்போது தங்கள் கார் மேல் ஏதோ ஒளி வெள்ளம் பாய்ந்ததை உணர்ந்தார்கள் அதை தொடர்ந்து தலை மேல் பறந்த அந்த வாகனத்தை நன்கு பார்க்க முடிந்தது .ஹில் தனது காரை விட்டு இறங்கி பைனாகுலரை கொண்டு அங்கே 11 மனிதன் வடிவை ஒத்த மனிதன் அல்லாத ஒன்றை பார்த்ததாக சொன்னார்.
அவர்கள் கருப்பு நிற பளபளக்கும் உடையும் தலையில் தொப்பி போன்று அணிந்து இருந்ததாகவும் பார்க்க பயங்கரமாக இருந்ததாகவும் சொன்னார். அவர்கள் இருவரும் வீட்டுக்கு கிளம்பி வந்த பின் பல சின்ன சின்ன விசித்திரதை உணர்ந்தார்கள் .

 இருவருக்கும் தோலில் எரிச்சல் அரிப்பு போன்ற உணர்வு இருந்தது. ஹில் அணிந்து இருந்த  துணிகள் பல இடங்களில் மர்மமாக கிழிந்து இருந்தது. betty தனது துணியில் மர்மமான ரோஸ் நிற துகள்கள் இருபதை கண்டாள். அவர்கள் ஒரு விசித்திரத்தை குறித்து கொண்டார்கள் அதாவது வழக்கமாக தங்கள் வீட்டிற்கு செல்ல 4 மணி நேரம் தான் ஆகும் ஆனால் அன்று அவர்கள் சென்றடைய 7 மணி நேரம் ஆனதை உணர்ந்தார்கள். 3 மணி நேரம் அதிகமாக எங்கே விரையம் ஆனது என்று அவர்களுக்கு எதுவும் நினைவில் இல்லை.  என்ன விசித்திரம் என்றால் அதன் பின் பெட்டிக்கு அந்த அனுபவம் குறித்து கனவு வந்தது. அந்த கனவில் அவள் தோல் சேம்பிலை ஏலியன்கள் எடுத்ததாகவும் தொப்புளில் ஏதோ ஊசி சொருகியதாகவும் கனவில் நினைவு வந்தது. நிஜத்தில் அவர்கள் அது நடந்ததை மறந்து இருந்தார்கள்.

குறிப்பாக விமான ஓட்டிகளுக்கு ஏலியன் கடத்தல் அனுபவம் இருக்கிறது பல பைலட்கள் தங்கள் விமானத்தை UFO கடத்த பார்த்ததாக..தங்கள் திறமையால் விமானம் தப்பியது என்ற ரீதியில் சொல்லி இருக்கிறார்கள்.
ஒவொரு ஆண்டும் CAA எனும் நிறுவனத்திற்கு (Civil Aviation Authority ) விமானத்தில் பணி புரியும் பல பேர் தாங்கள் வானதில் வி்சித்திர பறக்கும் வஸ்துவை பார்த்ததாக நிறைய பதிவு செய்து இருக்கிறார்கள்.
CAA இந்த தகவல்களை பத்திரமாக வைத்திருக்கிறார்கள் பொது மக்களுக்கு தெரியாமல். கேட்டால் அவர்கள் எந்த தகவலும் மக்களுக்கு தருவது இல்லை. 'தங்கள் விமான பாதுகாப்பு அம்சங்களை பலபடுத்த இது உதவுகிறது இது ரகசியம் பொது மக்களுக்கு தருவதற்கு இல்லை' என்கிறார்கள்.

Antônio Vilas Boas என்பவரின் அனுபவத்தை பாருங்கள் 23 வயது  பிரேசில் நாட்டு விவசாயி இவர்.  இவர் பகல் வெப்பத்தை தவிர்க்க இரவில் வேலை செய்வது வழக்கம்.
1957 இல் ஒரு நாள் இரவு தங்கள் நிலத்தில் டிராக்டரை கொண்டு வேலை செய்து கொண்டிருந்த போது தலைக்கு மேலே வானத்தில் ஒரு சிகப்பு நட்சத்திரத்தை பார்த்தார் பார்க்க பார்க்க அது பெரிதாகி கொண்டே வந்த போது தான் அது சிகப்பு நிற ஒளியை முன் பகுதியில் வெளியிடும் ஒரு முட்டை வடிவ பறக்கும் வஸ்து என புரிந்தது. இந்த காட்சி ஏற்படுத்திய பயத்தால் டிராக்டரில்  தப்ப முயன்ற போது டிராக்டர் ஹெட் லைட் மற்றும் இன்ஜின் மர்மமாக செயலிழந்து போனது.
கால்நடையாகவே ஓட பார்த்த அவரை சில சாம்பல் நிற வேற்றுகிறவாசிகள் துரத்தி பிடித்து இழுத்து சென்று அந்த பறக்கும் தட்டில் போட்டார்கள். அங்கே தனது உடை முழுதும் கழட்ட பட்டு உடல் முழுவதும் ஒரு வகை ஜெல் கொண்டு மூடினார்கள். அதன் பிறகு பெரிய அரைவட்ட வடிவ அறை ஒன்றில் அழைத்து செல்ல பட்டார் . அங்கே புதிரான சிகப்பு நிற எழுதுக்கள் எழுத பட்டிருப்பதை கண்டார். அங்கே இவருடைய தாடை பகுதியில் இருந்து ரத்தம் எடுத்து கொண்டார்கள். அதன் பிறகு மூன்றாவது அறை யில் அழைத்து செல்ல பட்டதாகவும் அங்கே ஒரு பெண் ஏலியன் தன்னை சந்தித்ததாகவும் சொன்னார். அந்த பெண் ஏலியன் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தது என்று வேறு சொன்னார்.
Boas விவசாயியாக இருந்தாலும் பிறகு கவுரவமான லாயர் ஆனவர். அதனால் அவர் பொய் சொல்லி இருக்க வாய்ப்புகள் குறைவு (அல்லது லாயர் என்பதனாலேயே நிறைய பொய் சொல்லி இருக்கலாமோ !! ? )

உலகம் எங்கும் இந்த "alien abduction" கதைகள் எக்க சக்கமாக உண்டு . Pascagoula Abduction என்ற சம்பவத்தை பார்க்கலாம்...
October 11, 1973,  மாலை நேரம் அது.
42 வயது Charles Hickson மற்றும்  19 வயது Calvin Parker  இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்ய கூடிய co workers . மிஸ்ஸிசிபி நதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது ஒரு ஹிஸ்ஸிங் சப்தம் கேட்டு நிமிர்ந்தார்கள் அங்கு ஒரு ஓவல் வடிவ 30 ..40 அடி அகலம் கொண்ட 8 ..10 அடி உயரம் கொண்ட ஒரு பறக்கும் பொருளை கண்டார்கள். நீல நிற ஒளியை கொண்டுள்ள அது தன்னை கடந்த போது இருவரும் பேரலைஸ் க்கு ஆளானதாக சொன்னார்கள் தங்கள் நினைவு முழுதும் இருந்ததாகவும் ஆனால் உடலை அசைக்க முடியாதவாறு செயலிழந்து போனதாக தெரிவித்தார்கள். அந்த விசித்திர உயிரினங்கள் தங்களை நீண்ட நேரம் வைத்து பல சோதனைகள் செய்த பின் தன்னை போக விட்டதாக சொன்னார்கள்.

Travis Walton UFO incident  இல் நவம்பர் 5 1975 இல் walton என்பவர் தங்களுடன் வேலை செய்யும் 6 பேருடன் ட்ரக்கில் செல்லும் போது தங்கள் தலை மேல் பறந்த ஒளி வட்டத்தை 6 பேரும் பார்க்க முடிந்தது. அதில் walton என்பரின் நினைவில் மட்டும் தான் ஒரு ஹாஸ்பிடல் போன்ற அறையில் அடைக்க பட்டதாகவும் அங்கே சொட்டை தலை சாம்பல் நிற ஜந்துகளால் தான் பரிசோதிக்க பட்டதாகவும் பிறகு ஒரு ஹைவே யில் தன்னை இறக்கி விட்டு அவர்கள் பறந்து சென்றதாகவும் தெரிவித்ததார்.

Frederick Valentich  எனும் இளம் விமானியின் அனுபவம் மிக குறிபிட தக்கது காரணம் அவர் விமானதுடன் கானாமல் போனார் பிறகு கிடைக்கவே இல்லை.
21 அக்டோபர் 1978 இல் 235 கிலோ மீட்டர் ட்ரைனிங் புரோக்ராமில் இருந்த விமானி அவர். ஆளில்லா தீவு ஒன்றின் மேல் பறக்கும் போது திடீரென கானாமல் போனார். அவர் கானாமல் போவதற்கு முன் கண்ட்ரோல் ரூமில் தொடர்பு கொண்டு பேசியது தான் குறிப்பிட தகுந்தது. தன்னுடைய விமானதின் மேல் வேறொரு விமானம் பறப்பதாகவும்  தனது விமானத்தின் இன்ஜின் தாறுமாறாக வேலை செய்வதாகவும் சொன்னார் ..பிறகு கொஞ்சம் நேரம் கழித்து தன்னை தொடருவது ஒரு விமானம் அல்ல என்றார். பிறகு அவருடன் தொடர்பு துண்டிக்க பட்டது அதன் பின் அவர் கிடைக்கவே இல்லை...
(இந்த சம்பவம் நடந்த நேரத்தில் அந்த சுற்று வட்டாரத்தில் தாங்கள் UFO வை பார்த்ததாக பலர் பதிவு செய்து இருந்தது குறிபிட தக்கது.)

இது போன்ற ஏலியன் கடதல் அனுபவங்கள் உலகில் பல பகுதிகளிலும் பதிவு செய்ய பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் சில விஷயத்தில் பொதுவாக இருப்பது குறிப்பிட தக்கது. பொதுவாக பலர் தன்னை கடத்தி போய் ஏலியன் பல சோதனைகள் செய்ததாக தெரிவித்தார்கள் .அவர்கள் எலியனை வர்ணித்தது பெரும்பாலும் ஒத்து போனது. பலர் தன்னுடன் அது பேச முயற்சி செய்ததாக சொன்னார்கள்.
இதுவரை 300 க்கும் மேற்பட்ட ஏலியன் கடத்தல் நிகழ்வுகள் பதிவு செய்ய பட்டுள்ளன.

இந்த அனுபவம் இருப்பவர்களை ஆராய்ந்து பெற பட்ட தகவல் படி இவர்கள் பெரும்பாலும் அவர்கள் கடத்த பட்ட இடத்திலேயே திரும்ப விட பட்திருந்தார்கள்.  இவர்கள் பெரும்பாலும் அந்த சம்பவத்தை மறந்து இருந்தார்கள் . தங்களின் கடிகார நேரம் திடீரென பாதியில் காணாமல் போனதை வைத்து தான் இடையில் தாங்கள் எதையோ மறந்து இருப்பதாக அவர்கள் உணர்ந்து இருந்தார்கள். அவர்களில் பலருக்கு பிறகு இது கனவில் தான் நினைவு வந்ததாக தெரிவித்தார்கள்.
மொத்தம் 1700 கும் மேற்பட்டவர்கள் தாங்கள் கடத்த பட்டதாக சொல்லி இருக்கிறார்கள். மொத்த ஜனதொகையில் 5 சதம் ஆட்கள் கடத்தும் அனுபவம் இருக்கலாம் என்றும் அதில் பல பேர் வெளியே சொல்லாமல் இருக்கலாம் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.

ஒரு மனோதத்துவ நிபுணர் சொல்வது மிக குறிப்பிட தக்கது .தங்களிடம் வரும் நோயாளிகள் பல பேரை ஆழ் நிலை தூக்கத்திற்கு உட்படுத்தி அவர்களிடம் வேறு நோய் தொடர்பாக பேசி கொண்டு இருக்கும் போது பலர் தங்கள் கடத்த பட்டு இருந்ததை சொன்னார்களாம். அவற்றில் யாருக்கும் சுயநினைவில் இருக்கும் போது அது எதுவும் நினைவில் இல்லை என்பதையும் அவர் கண்டார்.

பொதுவாக உங்களுக்கு எப்போதாவது திடீரென இடையில் சில மணிநேரம் எப்படி போனது என்று தெரியாத மாதிரி மறதி அனுபவம் உண்டா அல்லது கனவில் உங்களை ஏலியன் கடத்தியது போல வந்தது உண்டா... உங்கள் உடலில் திடீர் என காயம் அடையாளம் ஏதும் உண்டாகி இருக்கிறதா ... தனியே நடந்து செல்லும் போது தலைக்கு மேல் எப்போவாவது வெளிச்சம் பின் தொடர்ந்த அனுபவம் உண்டா... எனில் எச்சரிக்கை . ..நீங்கள் ஏலியனால் கடத்த பட்டவராக இருக்கலாம் என்கிறார்கள்.
நம்மை விட பல மடங்கு தொழில் நுட்ப முன்னேற்றம் கொண்ட ஏலியன்கள் இப்படி அசட்டு தனமாக நம்மை கடத்தி கொண்டு பரிசோதித்து கொண்டா இருக்கும் ?என்பது பல பேருக்குள் எழுந்துள்ள கேள்வி தான். ஆனால் உலகமெங்கும் இந்த விடை தெரியாத கடத்தல் அனுபவம் பதிவு செய்ய பட்டு கொண்டிருப்பது ஒரு மறுக்க முடியாத மர்மம் தான்.

      ✴               ✴              ✴             ✴

ஆமாம் ..... இந்த ஏலியன்கள் இருக்கா இல்லையா ..?
இது இருப்பதை எப்படி கண்டு பிடிக்கிறது ? அதுக்கு எதுனா அறிகுறி இருக்கா இல்லையா ?
சொல்கிறேன்.

மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம் 3 : 'UFO 'மறைந்த குறிப்புகள் )

"UFO sight " செய்திகளை படிக்கும் போது நமக்குள் வரும் ஒரு கேள்வி , "ஏன் எல்லா நிகழ்வுகளும் வெளிநாடுகளில் நிகழ்கின்றன இந்தியாவில் ஏன் ஏலியன் வருவது இல்லை ? "
உண்மை என்னவென்றால் அவ்வபோது பல UFO கள் குறைவில்லாமல் இங்கே கிடைத்து கொண்டு தான் இருக்கின்றன . ஆனால் வெளிநாடுகள் போல் இங்கே பிரபலம் ஆவது இல்லை. மேலும் நம் நாட்டில் வி்சித்திர நிகழ்வு ஏதாவது நிஜமாகவே நடந்தாலும் நாம் முதலில் பழியை போடுவது ஆவிகள் மேல் தான். ஏலியன் மேல் நமக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. வேற்றுகிரகவாசி என்றால் என்ன என்றே தெரியாதவர்களும் பல பேர் இருக்க தான் செய்கிறார்கள்.(ஆனா ஆவியை அறியாதவர் யாரும் இல்லை )

உண்மையில் இந்தியாவில் இந்த நிகழ்வுகள் நடக்கிறதா இல்லையா ?
 நடந்தால் அது எங்கே நடக்கிறது.?
"Kongaka la paas " இது இமாலையாவில் 16965 அடி உயரத்தில் உள்ள இந்திய சீன எல்லை பகுதி. இங்கே ஒரு மர்ம இடம் இருக்கிறது . அதாவது UFO பேஸ் இந்த இடத்தில் மட்டும் சீனாவும் சரி இந்தியாவும் சரி ராணுவ வீரர்களை அங்கே நிறுத்திவைபதில்லை ஆனால் தவறாமல் தூரத்தில் இருந்து கண்காணித்து வருகின்றன. அதற்க்கு காரணம் அங்கே அவ்வபோது பார்த்த சில மர்ம பறக்கும் பொருட்கள் தான். அதை பல முறை பல பேர் பார்த்து உறுதி செய்து உள்ளனர் 2012 இல் ஒரு ராணுவ வீரர் மிக உறுதியான பல ஆதாரங்கள் பதிவு செய்தார். அவ்வளவு ஏன் அங்கே செல்லும் பயணிகள் கூட அதை பார்த்து இருக்கிறார்கள். அதில் ஒரு பயணியின் அனுபவம் ..ஆச்சர்யத்துடன் தான் பார்த்த பறக்கும் பொருள் பற்றி அங்கே கூட வந்த கைடு இடம் கேட்டாராம். அதற்க்கு அவன் சொன்ன பதில் " இது நான் அடிக்கடி பாத்துட்டு தான் சார் இருக்கேன் இதில என்ன ஆச்சர்யம் "
(இமாலையாவில் ஆவியை பார்த்து இருந்தா அந்த கைடு பயந்து இருப்பது நிச்சயம் )

சரி இப்போ சில சம்பவங்களை பாருங்கள்

👽 15 March, 10:20 காலை டெல்லி flying club ஐ சேர்ந்த 25 பேர் வானில் ஒரு சுருட்டு வடிவ அமானுஷ்ய பறக்கும் பொருளை பார்த்தார்கள் அதுவும் கிட்ட தட்ட 100 அடிக்கு .
பார்த்து கொண்டிருக்கும் போதே மறைந்து போனதாக அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

👽 2007 ஆம் ஆண்டுஆக்டோபர் 29 இல் கொல்கத்தாவில் அதிகாலை 3.30 தொடங்கி 6.30 வரை ஒரு விசித்திர பொருளை பலரும் பார்த்தார்கள் அதன் வேகம் பிரமிக்க தக்கதாய் இருந்தது மேலும் முக்கோண வடிவத்தில் இருந்து நீண்ட வடிவமாக உருமாற கூடியதும் ஒளி உமிழ கூடியதுமாய் அது இருந்தது . 100 கணக்கான ஆட்கள் அதை E.M bypass எனும் இடத்தில ஒன்று கூடி பார்த்தார்கள் பலர் அதை வீடியோ எடுத்தார்கள் தொலைக்காட்சி செய்திகளில் அது இடம் பெற்றது. அப்போது பிர்லா பிளானிடோரியத்தின் இயக்குனராய் இருந்த D.P துரையும் இதை பார்த்தார்"extremely interesting and strange". என்று கருத்து தெரிவித்தார்.

👽 2013 ஆகஸ்ட் 4 இமயமலை லாடாக் இல் ராணுவ வீரர் ஒருவர் முதலில் UFO பார்த்ததாக பதிவு செய்தார். ஆசர்யம்
என்ன வென்றால் அதன் பின் 100 கு மேற்பட்டவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்.

👽 2014 இல் 23 ஜூலையில் லக்னவ் ராஜாஜி புறத்தில் எடுக்க பட்ட சூரிய அஸ்தமன போட்டோ பலவற்றில் UFO பதிவாகி உள்ளது.

👽 2013 ஜூன் 20 இரவு 8.55 க்கு சென்னை முகப்பேர் இல் வசிக்கும் பல பேர் UFO பார்த்து இருக்கிறார்கள் .(இக்கட்டுரை படிக்கும் வாசக நண்பர் யாரும் அதில் அடக்கம் எனில் எனக்கு தெரிய படுத்தினால் மகிழ்வேன் )

ஒரு ஆச்சர்யமான விஷயம் சொல்கிறேன். இந்திய விமானிகள் ஒவொரு மாதமும் குறைந்தது 5 க்கு மேற் பட்ட விசித்திர பறக்கும் பொருள் பார்ப்பதாக பதிவு செய்கிறார்கள் .
ஆகையால்............
ஏலியன் இந்தியர்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறது என்ற சந்தேகம் இனி உங்களுக்கு வேண்டாம்.

வேற்றுகிரகவாசிகள் பற்றிய நிகழ்வுகள் பறக்கும் தட்டு பற்றிய செய்திகள் இன்று நேற்று கிடைத்தவை அல்ல. கிட்ட தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பே பறக்கும் தட்டு சாட்சியாளர்கள் இருக்கிறார்கள். என்ன ஒன்னு தான் பார்த்தது பறக்கும் தட்டுதான் என்று அவர்களுக்கே தெரியாது.
பறக்கும் தட்டுகான வர்ணனைகள் அந்த கால எல்லா மத புராணங்களிலும் உண்டு. எல்லா பழைய கதைகளிலும் வேற்றுகிரகவாசிகள் பற்றிய "மறைந்த குறிப்புகள் " இருப்பதாக தோன்றுகிறது.

வானத்தில் ஏதோ வெளிச்சமாக பார்த்ததை... வானத்தில் இருந்து நெருப்பு வந்ததாக பார்த்ததை தன்னை பின் தொடரும் நட்சத்திரம் அல்லது வானத்தின் ஒளியை பார்த்ததை பல இடங்கில் புராண காலத்தில் வர்ணிக்க பட்டு இருப்பது பறக்கும் தட்டுகளாக இருக்கலாம் என்கிறார்கள்.
பைபிளில் பறக்கும் தட்டு பார்த்ததற்கான வர்ணணைகள் உண்டு.
பைபிளில் வரும் எசேக்கியேல் 1. 1-28 வசனம் பாருங்கள் வர்ணனைகள் உங்களை ஆச்சர்யபடுத்தும்...

" இதோ, வடக்கேயிருந்து புழல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன், அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது.
அதன் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின, அவைகளின் சாயல் மனுஷசாயலாயிருந்தது.
அவைகள் ஒவொன்றுக்கும் நான்கு முகமும் நான்கு இறக்கைகளும் இருக்க கண்டேன் " ....என தொடங்கி அவைகள் தீ போல இருந்தது அவைகள் ரக்கையின் விதம் முக அமைப்பு என்று அந்த வசனம் விரிவாக வர்ணித்து சொல்கிறது.
"அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷ முகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன. " என்று வசனம் வர்ணிப்பது நிச்சயம் வேற்றுகிரக வாசிகளின் விசித்திர முகரைகளை தான் என்கிறார்கள். அத்துடன் நிற்கவில்லை அதை தொடர்ந்து அந்த வசனம் பறக்கும் தட்டை வர்ணிப்பதை பாருங்கள்
"சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது, அவைகள் நாலுக்கும் ஒரேவிதசாயல் இருந்தது, அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாபோல் இருந்தது.
 அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை. அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன, அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன. அந்த ஜீவன்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின, அந்த ஜீவன்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின. "
இந்த வர்ணனை ஒரு ஸ்பேஸ் ஷிப் டேக் ஆப் ஆவதை சொல்வது போல இருக்கிறது அல்லவா.
மேலும் வசனம் 24 இல் அவைகள் பறக்கும் போது சப்தம் எப்படி இருக்கும் என்று சொல்ல பட்டுள்ளதை பாருங்கள்
"அவைகள் செல்லும்போது அவைகளுடைய செட்டைகளின் இரைச்சலைக்கேட்டேன், அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், சர்வவல்லவருடைய சத்தம்போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது, அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன. " (செட்டைகள் என்றால் ரக்கைகள் )

குர்ஆனில் பல வசனங்கள் பல்வேறு விதமான சொர்கங்களை பல உலகங்களை பற்றி பேசுகிறது ..
மற்றும் குர்ஆனில் சொல்ல படும் 'ஏஞ்சல் ' வேற்றுகிரகத்தினராக இருக்கலாம்

இது போன்ற ஏலியன் வர்ணனைகள் எல்லா மத புராணங்களிலும் காண படுகிறது.
ஹிந்துக்கள் புராணங்களில் வரும் இந்திர லோகம் , விஷ்ணு லோகம்,ப்ரம்மலோகம் போன்றவை வேறு வேறு கிரகங்களாக இருக்கலாம். இன்று நமக்கு ஐன்ஸ்டைனின் ரிலேடிவ்
தியரி படி வெவேறு ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு இருக்கும் வெளியின் வெவ்வேறு இடங்களில் காலங்கள் வெவ்வேறாக மாறுபடும் என்று தெரியும் மிக ஆச்சர்யமாக இதை அப்படியே ஹிந்து புராணங்கள் வர்ணிக்கிறது . உதாரணமாய் பிரம்மாவின் ஒரு நாள் என்பது நமது சாதாரண சோலார் சிஸ்டதின் வருடம் படி  306,720,000 ஆண்டுகளுக்கு சமம் .

டைம் டைலேஷன் கான்செப்டுகள் புராணங்கில் வர்ணிக்க பட்டு இருப்பது உங்களை ஆச்சர்ய படுத்தும் .. வெவ்வேறு லோகத்தின் கால வேறு பாட்டை பற்றி அவைகள் சொல்வதை பாருங்கள்..
அதாவது மனிதனின் ஒரு வருடம் என்பது தான் தேவர்களின் ஒரு நாளாம் . அப்படி அவர்களின் 365 நாள் தான் தேவர்களின் ஒரு வருடம்.(அதாவது நமக்கு 365 வருடம் ) அப்படி தேவர்களின் வருட படி 12000 தேவர்கள் வருடம் சேர்ந்ததை தான் ஒரு சதுர யுகம் என்கிறார்கள். அப்படி 2000 சதுர் யுகம் சேர்ந்தது தான் பிரம்மாவின் ஒரு நாள் .(அதாவது முன்பு சொன்னது போல நம்ம பூமி கணக்கு படி 306,720, 000 ஆண்டுகள்) இப்படி பட்ட பிரம்மாவின் 365 நாள் தான் பிரம்ம வருடம் அப்படி மொத்தம் 100 பிரம்மா ஆண்டுகள் தான் பிரம்மாவின் ஆயுட்காலம் என்று புராணங்கள் வர்ணிக்கின்றன. அப்புறம் அவர் ஆயுள் முடிந்த பின் "மகா பிரளயம் வரும் அதில் பிரம்மா அழிக்க படுவார் அதன் பின் 100 பிரம்ம ஆண்டுகளுக்கு எந்த உருவாக்கமும் இருக்காது அதன் பிறகு மீண்டும் பிரம்மாவை மகா விஷ்ணு உருவாக்குவார் " என்று வர்ணிக்க பட்டு இருப்பது பிரபஞ்ச அழிவா அல்லது பிக் பேங் நிகழ்வா என்று நம்மை யோசிக்க வைக்கிறது.
பொதுவாக பல யுகங்களுக்கு ஒரு முறை நம்மை அவர்கள் வந்து பார்த்து விட்டு செல்வதாக நாம் நினைக்கலாம் ஆனால் நமக்கும் அவர்களுக்குமான கால வேறு பாட்டை கணக்கில் கொண்டால் நம் பூமி ஆரம்பம் முதல் அழியும் வரை அப்போபோ அவர்கள் வந்து பார்த்து விட்டு போவது அவர்கள் ஊர் கணக்கில் ஏதோ ஒரு மாத டூர் ஆக கூட இருக்கலாம்.

பொதுவாக பறக்கும் தட்டுகளை பல இடங்களில் நாம் நமக்கே தெரியாமல் படம் எடுத்து வைத்திருகிறோம் என்கிறார்கள் ஏலியன் ஆய்வாளர்கள். பல புகை படங்களில் தற்செயலாக பறக்கும் தட்டுகள் படம் பிடிக்க பட்டுள்ளடன. பழைய ஓவியங்கள் பல வற்றில் பறக்கும் தட்டுகள் போன்ற அமைப்புகள் வரைய பட்டு இருக்கின்றன அவ்வளவு ஏன் பழங்காலத்து குகை ஓவியங்களில் கூட பறக்கும் தட்டுகள் காண படுகின்றன . தட்டுகள் நமக்கு தெரிவது இன்று நேற்று இல்லை போல.

1998 இல் ஒரு இத்தாலிய பெண் எழுத்தாளர் இப்படி பட்ட ஓவியங்களில் ஒளிந்துள்ள பறக்கும் தட்டுகள் பற்றி கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தார் . அதில் பல ஆச்சர்யமான விஷயங்கள் தெரிந்தன. ஒரு ஓவியர் மிக தெளிவாக ஊர் மக்கள் வானத்தில் ஏதோ விசித்திர பறக்கும் பொருள் நெருப்பு கக்கி செல்வதை வரைந்து இருந்தார்.
குறிப்பாக.."Madonna with Saint Giovannino" என்ற புகழ் பெற்ற 15 ஆம் நூற்றாண்டு ஓவியத்தை அவர் மிக முக்கியமாக குறிப்பிட்டு இருந்தார் .(முடிந்தால் அதை தேடி பாருங்கள் ) அந்த ஓவியத்தில் மடோனா ஓவியத்திற்கு பின் புலத்தில் வானத்தில் ஒரு மர்ம பொருள் பறப்பதையும்  அதை தூரே ஒருவர் ஆச்சர்யத்துடன் அண்ணாந்து பார்பதையும் மிக தெளிவாக ஓவியர் வரைந்து இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

ஏலியன்கள் இருப்பதற்கான அன்றாட ஆதாரங்கள் இன்றளவும் நிறைய கிடைத்து கொண்டே தான் இருக்கிறது. வேற்றுகிரக வாசிகள் நம்மை எப்போதும் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள் என்று சொல்ல படுகிறது.
உலகமெங்கும் பல இடங்களில் திடீரென உண்டாகும்  கிராப் சர்கில் எனும் பயிர் வட்டங்கள் வெறும் பயிரில் மட்டும் அல்ல பாலைவனத்தில் பனி படலத்தில் மற்றும் பெரும் சேற்று பகுதிகளிலும் உண்டாகி இருக்கிறது அந்த விசித்திர வடிவமைப்பு என்ன சொல்ல வருகிறது என்ற மர்மம் ஒரு புறம் இருக்கட்டும் .நம்மை விட மிக மிக உயர்ந்த தொழில் நுட்பத்தில் வாழும் அவர்கள் ஏன் இப்படி கற்கால ஸ்டைலில் படம் வரைந்து பாகம் குறிக்க வேண்டும் ? அவைகள் நம்மை டிஜிட்டல் மார்க்கத்தில் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்கு சிலர் ஒரு காரணத்தை சொல்கிறார்கள் அதாவது வேற்றுகிராகவாசிகள் ஒரே இனம் அல்ல அதில் பல இனங்கள் உண்டு. ( ஏலியன் vs பிரடேட்டர் !! ? ) அதில் நல்லது கெட்டது உண்டு.. அவற்றில் ஒரு இனம் அடுத்த இனத்திற்கு தெரியாமல் நம்மை தொடர்பு கொள்ள பார்க்கிறது உயர் தொழில் நுட்பம் வாயிலாக தொடர்பு கொண்டால் அடுத்த குழு க்கு அது தெரிந்து விடும் என்பதால் தான் இந்த ஏற்பாடு என்கிறார்கள்.

அதே சமயம் ஒரு முறை நம்மை அவர்கள் அட்வான்ஸ் டெக்னாலஜி மூலம் தொடர்பு கொண்டதாக சொல்ல படும் சம்பவம் ஒன்று உண்டு..
அதை பற்றி அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.

மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம் 4 : ஏலியன்களும் ஆதாரங்களும் )


ஏலியன் ஆய்வாளர்கள் பலர் அவைகள் நம்மை உயர் தொழில் நுட்பம் வாயிலாகவும் தொடர்ந்து தொடர்பு கொள்கிறார்கள் என்கிறார்கள்.
ஆண்டு தோறும் பல காஸ்மிக் சிக்னல்களை நாம் பெற்று கொண்டு இருக்கின்றோம் . பிக் பாங் நேரத்தில் உண்டான சிக்னல்கள் கூட இன்றைய சாதாரண தொலை காட்சி மூலம் கிரகிக்க படுகிறது .. டிவி யில் திடீரென தோன்றும் சில புள்ளிகள் ஹிஸ் சப்தம் அது தான் . ஆனால் இப்படிபட்ட பல காஸ்மிக் சிக்னல்களில் பல அடையாளம் தெரியாத இனம் காண முடியாதவை. சாதாரணமாக நட்சத்திரங்களிலோ பிளாக் ஹோலிலோ உண்டாகாத அந்த மர்ம சிகனல்கள் எங்கிருந்து எப்படி வருகிறது என்பதை அறிய முடியாதவை . சிலர் அதை இணை பிரபஞ்சத்தில் இருந்து வருகின்றன என்கிறார்கள் சிலர் அதை வேற்றுகிரக வாசிகளின் சிக்னல் என்கிறார்கள்.
அப்படி பட்ட சந்தேக சிக்னல்களில் சங்கேத சிக்னல் ஒன்றை பற்றி நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள் அது தான் 1977 இல் பதிவு செய்ய பட்ட wow சிக்னல்.

நாள் முழுதும் பல வகையான கண்ணுக்கு தெரியாத கதிர்களை ரேடியோ சிக்னல்களை பூமி உள்வாங்கி கொண்டு இருக்கிறது அப்படி பட்டதில் ஏதாவது பூமி சாராத அல்லது விசித்திரமான வேற்றுகிரக சிக்னல் வந்தால் அதை பதிவு செய்ய அமைக்க பட்டது தான் Ohio State University யின்  Big Ear radio telescope .
அது குறிப்பாக 1420 megahertz அதிர்வெண்ணில் வரும் சிக்னல்களை உள்வாங்கும் படி தயார் செய்ய பட்ட ரேடியோ டெலஸ்கோப் ஆகும் .(1420 mhz என்பது ஹைட்ரஜன் வெளியிடும் அதிர்வெண் ஆகும் மேலும் நமக்கு தெரியும் பிரபஞ்சம் எங்கும் நீக்க மற நிறைந்து இருப்பது ஹைட்ரஜன் தான் என்று )
1977 ஆம் வருடம் ஆகஸ்ட் 15 இல் jerry ehaman என்பவர் அங்கே ஒரு ரெடியோ சிக்னலை பதிவு செய்தார் அது மிக வலிமையான சிக்னலாக 72 வினாடிகள் நீடித்தது . அதை டீகோட் செய்து சாதாரண எழுத்தாக மாற்றி பார்த்த போது அது "wow "என ஆங்கிலத்தில் கிடைத்தது . மேலே இருந்து நமக்கு யாருப்பா வாவ் னு சிக்னல் அனுபறது என்று விஞ்ஞானிகள்  சுறுசுறுபானார்கள். இது எதோ ஏலியன் அனுப்பிய சிக்னல் தான் என்றார்கள்.
40 ஆண்டுகள் கழித்து அதை ஆராய்ந்த டீம் ஒன்று அதற்கான விடையை கண்டு பிடித்து விட்டதாக சொன்னார்கள் அந்த அலைவரிசையில் அந்த சிக்னலை வெளியிட்டது ஒரு வால் நட்சத்திரம் என்றார்கள்.
அதை இரண்டு மூன்று முறை மறு பதிவு செய்து உறுதி செய்தார்கள் ஆனால் மிக சரியாக அந்த வால் நட்சத்திரம் wow என்று ஏன் சிகனல் கொடுத்தது மேலும் அன்றைய தினம் அது அதற்க்கு மேல் ஏன் மீண்டும் சிக்னலை கொடுக்க வில்லை போன்ற கேள்விக்கு அவர்களிடம் சரியான விடை இல்லை.

ஏலியன் நமக்கு சிகனல் கொடுப்பது இருக்கட்டும் நாம் ஒரு பக்கம் ஏலியனுக்கு சிக்னல் கொடுத்து கொண்டிருக்கின்றோம் தெரியுமா ? பூமியில் இருந்து இது வரை "மிக அதிக தொலைவு சென்ற மனிதனால் படைக்க பட்ட பொருள்"  என்ற பெருமை கொண்ட வாயெஜெர் 1 என்ற விண்கலத்தில் நாம் ஒரு காரியத்தை செய்து வைத்து இருக்கின்றோம் அதில் உள்ள தங்க டிஸ்கில் 24 மணிநேரமும் ஒலிபரபாகும் படி சிக்னலை வைத்து இருக்கிறோம் மேலும் அதில் பூமியில் உள்ள பல வகை ஒலிகள் உதாரணமாக கடல் அலை சப்தம் ,பறவை சப்தம், குழந்தை அழும் குரல் ,அமெரிக்க ப்ரேஸிடெண்ட் பேச்சு இப்படி பலதையும்
பதிவு செய்து "கேட்க காது உடையவன் கேட்கட்டும் "என்ற பைபிள் வசனம் போல அநாமத்தாக அனுப்பி இருக்கின்றோம் .. இருட்டில் கல்லெறியும் முயற்சி தான் இது என்றாலும் நம்மை போல ஏலியனை தேடும் ஏலியன் யாரவது அதை பார்க்கும் பட்சத்தில் கேட்கும் பட்சத்தில் நம்மை தொடர்பு கொள்வான் என்று தான் இந்த ஏற்பாடு. (அப்படி தொடர்பு கொள்பவன் நல்ல ஏலியனாக இருக்க வேண்டும் என்று பிராத்திப்போம் ..)

         ✴            ✴           ✴            ✴

Alien பற்றி பேசும் போது von daniken என்ற ஆய்வாளரை பற்றி வெகு நிச்சயமாக நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
ஆதி காலத்தில் பூமியில் ஏலியன்கள் நடமாட்டமும் ஆதிக்கமும் இருந்தது என்று நம்பிய அவர் அது சார்ந்த ஆய்வுகளில் இறங்கிய போது பல அதிசய தக்க உண்மைகளை கண்டு கொண்டார். குறிப்பாக ஏலியன்கள் பூமிக்கு வந்ததை துளியும் நம்பாதவர்கள் அவரது ஆதாரங்களையும் ஆய்வு அறிக்கையும்
பார்த்த பின் வாய் அடைத்து போனார்கள்.

நம் நாட்டில் நாம் பண்டைய வரலாறை செப்பேடுகளில் கல்வெட்டில் தேடுவது போல அவர் ஏலியன் வருகையை பண்டைய காலத்து கட்டிடங்கள் ,கோவில்கள் , சிற்பங்கள், ஓவியங்கள், புராணங்களில் தேடினார் அதுவும் உலகம் முழுவதும் . அதில் அவர் கண்டு கொண்ட ஒரு விஷயம் மத வாதிகளிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. மத நூல்களில் சொல்ல பட்ட தேவ தூதர்கள் எல்லாம் ஏலியன்களாக இருக்கலாம் என்றார். காரணம் அவர் உலகமெங்கும் உள்ள பண்டைய மத நூல்கள் ..புராணங்களில்  ஒரு ஒற்றுமையை கவனித்தார். அவை எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக ஏலியன் வருகையை பற்றிய தகவல் இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தார் அவைகள் வெவேறு பெயர்களில் குறிப்பிட பட்டு இருந்தன சிலதில் தேவர்கள் என்று சிலதில் கந்தவர்கள் என்று சிலதில் ஏஞ்சல்கள் என்று..... அவை அனைத்திலும் நிறைய ஒற்றுமை இருபதை கண்டார் . அவர்கள் மந்திரம் போட்டது போல சூப்பர் மேன் போல பறப்பது இல்லை.. அவர்கள் வந்து செல்ல நெருப்பு கக்கும் நெறய சப்தம் எழுப்பும் வாகனம் தேவை பட்டது.  அவைகள் வானத்தில் இருந்து வரும் போது மக்கள் பார்த்த வர்ணனைகள் நெருப்பு கக்கி செல்லும் விதம் இன்ஜின் போல நெருப்பு உமிழும் காட்சி இவைகளை பார்த்து அவருக்கு ஒன்று தோன்றியது. பறந்து வந்து செல்ல இவைகள் எல்லாம் கடவுளுக்கு அவசியமே இல்லையே. பிறகு அச்சர்யமாக தான் கண்டு கொண்டதை உலகிற்கு உரக்க சொன்னார்.
"அட வந்தது கடவுள் எல்லாம் இல்லை அதுங்க எல்லாம் வேற்றுகிரக வாசிங்க" அவர் பல மதவாதிகள் சாபத்திற்கு ஆளானலும் அவர் ஒரு நாத்திகர் அல்ல மிகவும் கடவுள் நம்பிக்கை கொண்ட தவறாமல் பூஜை செய்யும் ஒரு ஆள் அவர்.

 அவர் சொன்னது எல்லாம் கடவுளை பற்றி அல்ல கடவுள் தூதர்கள் என்று நாம் அழைப்பது வேற்றுகிரக வாசிகளை என்பதை தான் அவர் சொன்னார். இதை குறித்து ஆராய்ந்து பல ஆதாரங்களை கொண்டு 1968 இல் அவர் எழுதிய "chariots of the god" புத்தகம் பல பெயரை இந்த துறையில் ஆர்வம் கொள்ள செய்தது.
அதன் பிறகு பல வருடம் இந்த துறையில் கொஞ்சம் ஆழமாக அவர் இறங்கி தேடிய தேடல் அதிர்ச்சிகரமான பல உண்மைகளை கொண்டு வந்தது.

அவர் பல இடங்களில் இக்காலத்தாலும் கட்ட முடியாத தொழில் நுட்பதை பயன் படுத்தி கட்ட பட்ட பல கட்டிட அமைப்பை கண்டார். அதில் சில ராட்ச எடை கொண்ட பாறைகள் ..சில வெட்ட முடியாத லேசர் வெட்டுகள் ,பண்டைய காலதில் இங்கிருந்த தொழில் நுட்பத்திற்கு சம்பந்தபடாமல் இருப்பதை கண்டார்.
உதாரணமாக ஒரு இடத்தில் ஏதோ பிளாஸ்டிக்கை உருகி வைத்து ஒட்டியதை போல பாறைகளை சூடாக்கி ஒட்டி ஒரு சுவர் செய்யப்பட்டிருந்ததை பார்த்தார் . அவ்வளவு டிகிரி சூட்டை உண்டாகும் கருவி அன்றைய காலத்தில் எப்படி வந்தது ? மாயன் கல்லறை ஒன்றில்" kinich janab pacal " என்பரின் கல்லறையில் செதுக்கி வரைய பட்டிருந்தது சித்திரம் ஒன்றை அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது . அதில் அங்கே பண்டைய காலத்தில் வருகை புரிந்த "அவர்'' ராக்கெட் மாதிரி இயந்திரத்தை ஓட்டி வானதிற்கு செல்வது செதுக்க பட்டிருந்தது. (மூக்கில் ஆக்சிஜன் சப்ளை கூட ) நான் சொன்னவை வெறும் "மாதிரிகள்" தான். இப்படி பட்ட ஆதாரங்கள் அவரிடம் ஏக்கச்சமாக உண்டு.

பிரமிட் போன்ற கட்டிடத்தை மனிதன் கட்டினான் என்பதை அவர் மறுக்க வில்லை ஆனால் ஏலியன் தனது அறிவை அவர்களுக்கு கொடுத்து கட்ட வைத்தது என்றார். பல கோடி ஆண்டுகள் பரினாம வளர்ச்சியில் மந்தமாக வளர்ச்சி கொண்ட உயிரினம் சில ஆயிரம் ஆண்டுகளில் இவ்வளவு அறிவு திறன் உடன் வானில் பயணம் செல்லும் அளவு வளர்ந்தது தற்செயலானது அல்ல என்கிறார் அவர். அவர் பார்வையில் ஏலியன்கள் வில்லன்கள் அல்ல நமக்கு அறிவை பரிசளித்த தேவ தூதர்கள்.  (அவர் கண்டு பிடிப்பை பற்றி விவரமாக ஹிஸ்ட்ரி டிவி சேனலில் வந்த anciant aleans சீசன் 5 இல் தேடி பாருங்கள் )

       ✴           ✴             ✴               ✴

இந்த ஏலியன்கள் உண்மையில் பார்க்க எப்படி இருக்கும் என்று என்றாவது யோசித்தது உண்டா... ஹாலிவூட் புண்ணியத்தில் பல வகை ஏலியன்களை நாம் கற்பனை பண்ண முடிகிறது .. பிரடேட்டர் படத்தின் ஏலியன் ஒருவகை என்றால் alien படத்தின் ஏலியன் ஒரு வகை.
அவதார் , எட்ஜ் ஆப் டுமாரோ, ஜான் கர்டர், ட்ரான்ஸ்பார்மர், சூப்பர் மேன், அண்டர் தி ஸ்கின், ஸ்டார் வார், இண்டிபெண்டன்ஸ் டே , ஈடி , மென் இன் பிளாக், ப்ரோமித்தியஸ், தி அரைவல், ரிட்டிக் .. இப்படி பல கணக்கற்ற படங்களில் தங்கள் கற்பனைக்கேற்ற ஏலியன்கள் பல வடிவங்களில் காட்ட பட்டுள்ளன. ஆனால் உண்மையில் அவைகள் படத்தில் காட்ட படுவதை போல மனிதனை ஒத்த சாயலில் தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. அது நம் வசதிக்காக உருவாக்க பட்ட கதாபாத்திரங்கள்  (இதில் ஸ்பைடர் மேன் 3 ஆம் பாகத்தில் வரும் ஒரு ஒட்டுனி போல செயல் பட்டு தங்கள் இறையின் குணத்திற்கு ஏற்றாற்போல மாறி இறையை அடிமையாக்கி இயக்கும் ... நீர் போல வடிவம் மாற கூடிய..கன்னங்கரேல் என்ற நிறம் கொண்ட தார் போன்ற விச்சித்திர  ஏலியன் ஜந்துவான " venaom "அந்த கருப்பு ஜந்து தான் என்னை மிக கவர்ந்தது )
பொதுவாக ஏலியன் என்று சொன்னால் நமக்கு கற்பனைக்கு வருவது சாம்பல் நிற அந்த குள்ளர்கள் தான் அதற்க்கு காரணம் உலகமெங்கும் இப்படி பட்டவர்களை பார்த்ததாக மக்கள் சொல்வது தான் . தான் வணங்கும் கடவுளை மனிதன்  தனது சாயலில் செய்து கொண்டது போல ஏலியன் ஐ யும் அவன் தனது சாயலிலேயே கற்பனை செய்து கொண்டான். (அல்லது நம்மை தொடர்பு கொள்ள வசதியாக அவர்கள் நம்மை போல தற்காலிக உருமாற்றத்துடன் வந்து போகிறார்களா ? )
ஏலியன் தோற்றம் குறித்து பெரும் ஆய்வாளர்கள் கருத்து என்ன தெரியுமா ?

ஒரு வேற்றுகிரக வாசி எப்படி வேணா இருப்பான். மனித வடிவத்தில் அல்லது வடிவமே இல்லாமல் அல்லது அவ்வபோது வடிவம் மாற கூடிய அல்லது பாக்ட்ரியாவை விட சின்னதாக அல்லது நாம் நேரடியாக உணர முடியாத ரேடியோ அலைகள் போல அலை வடிவத்தில். யோசித்து பாருங்கள் நம்மை சுற்றி உள்ள பல்வேறு வகை அலைகளை நாம் தகுந்த கருவிகள் இல்லாமல் உணர முடிவது இல்லை அதே போல நம்மால் உணர முடியாத... ஏன் இன்னும் அவனை உணரும் கருவிகள் கண்டுபிடிக்க படாத படி ஒரு பரிமாணத்தில் கூட வேற்று கிரகத்தினன் இருக்கலாம். பொதுவாக விஞ்ஞானிகள் அதிகம் பரிந்துரைப்பது பாக்டிரியா போன்ற நுண்ணுயிர் ஏலியன்களின்  இருப்பை தான். அதுவும் அவைகளை தேடி அதிக தூரம் செல்ல தேவை இல்லை நம்ம சூரிய  குடும்பத்தில் சனியின் நிலவின் பணிக்கு அடியிலோ அல்லது வியாழனின் நிலவிலோ இருக்கலாம் என்கிறார்கள்.

ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இதை பற்றி சொல்லும் போது அங்கே உறைந்த நீருக்கு அடியில் இருக்கும் ஜந்துக்கள் என்றால் கிட்ட தட்ட பூமி உயிர்கள் போல தான் அவைகள் இருக்கும் காரணம் நாமும் நீரை அடிப்படையாக கொண்டு உருவாகி வந்தவர்கள் தான்.
ஆனால் நமது சூரிய குடும்பத்தை தாண்டின ஏலியன்களை பற்றி சொல்வதற்கு இல்லை. அவைகள் நுன்னுயிரியாக இல்லாமல் ஒரு நட்சத்திரத்தையே தங்கள் வண்டிக்கு எரிபொருளாக பயன்படுத்தும் அளவு சக்தியும் பிரமாண்டமும் கொண்டவர்களாக இருக்கலாம் ஆம்.. அப்படி ஒரு சந்தேகம் இருக்கிறது.

இங்கிருந்து மிக தொலைவில் இருக்கும் KIC 8462852 என்ற நட்சத்திரத்தில் தான் உள்ளது அந்த சந்தேகம். அதன் இன்னோரு பெயர்  TABBY'S STAR .
இந்த நட்சத்திரத்தின் ஒளி மிக சந்தேக படும் அளவு நம்ம வீட்டு பல்பு டிம் பிரைட் டிம் பிரைட் ஆக எரிவதை போல எரிவதை கண்டார்கள். அதை ஆராய்ந்த ஆய்வாளர்கள் ஒரு மிக பெரிய கட்டிடம் போல அமைப்பு அந்த நட்சத்திரத்தை சுற்றி வருவதாகவும் அது தான் ஒளியை மங்க வைக்கிறது என்றும் கண்டார்கள். அந்த நட்சத்திரத்தை சுற்றி வரும் அந்த பிரமாண்ட அமைப்பு ஒரு ஸ்பேஸ் ஷிப் ஆக இருக்கலாம் என்றும் அது தனக்கு தேவையான ஆற்றலை அந்த நட்சத்திரத்தில் இருந்து எடுக்கிறது என்றும் ஒரு தியரியை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஏலியன்கள் இன்று வரை மனிதனால் விளக்க படாத மகா மர்மங்கள். தனி பட்ட முறையில் என்னிடம் நீங்கள் ஏலியன் இருப்பது உண்மையா என்றால் எனது பதில் "ஆம் உண்மை". இது வரை உலகில் சொல்ல பட்ட ஏலியன் கதைகள் .. அனுபவங்கள் எல்லாம் உண்மையா என்றால் எனது பதில் "இல்லை " .
ஏலியன்களை அறிவியல் ரீதியாக மனிதன் ஆராய்ந்ததை விட அறிவியல் வளரும் முன் பண்டைய மாயன் இன காட்டுவாசிகளின் குறிப்புகளிலும் பழைய சித்திரங்கள் கல்வெட்டுகள் பழைய புராண புத்தகங்களிலுமே அதிக தகவல்கள் பதிவு செய்ய பட்டு இருக்கின்றன.
இன்னும் நாம் அறியாத கல்வெட்டுகள் சித்திரங்கள் எத்தனையோ ! நாம் ஆராயாத தடயங்கள் எத்தனையோ ... ஏலியன்கள் பற்றி நாம் அறியாத ரகசிய குறிப்புகள் கொண்ட  "மர்ம புத்தகங்கள்" உலகில் எத்தனையோ... !
சரி ....நாம் பார்க்க வேண்டிய மர்மங்கள் இன்னும் நிறைய இருக்கிறது அதனால் வேற்றுகிரக வாசி தலைப்பை இத்துடன் முடித்து கொள்கிறேன்.

          ✴           ✴            ✴             ✴

மர்ம புத்தகம் என்றதும் தான் நியாபகம் வருகிறது. The mummy படத்தில் காட்ட படும் பிளாக் புக் போல உலகில் உள்ள  புத்தகங்களில் ரகசிய மர்ம புத்தகங்கள்  என்று ஏதும் உண்டா... அது என்ன விதமான மர்மத்தை உள்ளடக்கிய புத்தகங்கள் ?? அறிவியலா அமானுஷ்யமா ??
அடுத்த பாகத்தில் சொல்கிறேன்...

மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம் 5 : மர்ம புத்தகங்கள் )

 உலகில் மர்மங்கள் பற்றிய புத்தகங்கள் நிறைய இருக்கிறது. ஆனால் சில இடத்தில் புத்தகங்களே மர்ம புத்தகங்களாகவும் இருக்கிறது. சில நேரத்தில் தற்செயலாக புத்தகத்தில் எழுத பட்டது மர்மமாக மாறிய கதைகளும் உண்டு. சில மர்ம புத்தகத்தை பற்றி பார்க்கும் முன் அந்த தற்செயலாக மர்மமாக மாறிய புத்தகங்களை பற்றி பார்ப்போம்.

☯ 1898 ஆம் ஆண்டு ஆங்கில எழுத்தாளர் morgan robertson என்பவர் "futility "என்ற தலைப்பில் ஒரு நாவலை எழுதினார் அதில் உலகின் மிக பெரிய கப்பல் ஒன்று வடக்கு அட்லாண்டிக் இல் ஐஸ் பாறையில் இடித்து மூழ்கியது போல எழுதி இருந்தார். அவர் எழுதிய ஆண்டு 1898.
 4 ஆண்டுகள் கழித்து நிஜமாகவே வடக்கு அடலாண்டிக்கில் உலகின் மிக பெரிய கப்பல் ஐஸ் பாறையில் இடித்து மூழ்கியது. கதையில் அந்த கப்பலை மூழ்காத கப்பல் என்று வர்ணித்து இருந்தார் .நிஜத்திலும் அந்த கப்பல் அப்படி தான் வர்ணிக்க பட்டது. கதையில் அது நடந்தது ஏப்ரல் மாதம் நிஜத்திலும் அது ஏப்ரல் மாதம் தான் மூழ்கியது. கதையில் நியூ பவுண்ட்லேண்ட் எனும் இடத்தில இருந்து 400 மைல் தள்ளி விபத்து நடந்ததாக எழுதி இருந்தார். நிஜத்திலும் விபத்து அங்கு தான் நடந்தது. கதையில் அந்த கப்பல்  அதிகபட்சமாக 3000 பயணிகளை ஏற்ற கூடியதாகவும் 2000 பயணிகள் உயிர் இழந்ததாகவும் எழுதினார் .நிஜத்தில் நடந்ததும் அதே தான். எல்லாவற்றிற்கும் மேலாக கதையில் அந்த கப்பலின் பெயர் "டைட்டன் "நிஜத்தில் அந்த கப்பலின் பெயர் "டைட்டானிக் ".

 ☯ எட்கர்ட் ஆலன் போ ஒரு புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர். 1838 ஆம் ஆண்டு அவர் "The Narrative of Arthur Gordon Pym of Nantucket. " என்ற பெயரில் ஒரு நாவல் எழுதி இருந்தார்.
புயலில் சிக்கிய ஒரு கப்பலில் இருந்து லைஃப் போட் மூலம் ஒரு நான்கு பேர் கொண்ட குழு ஒன்று கடலில் சிக்கி உயிருக்கு போராடுகிறது. உன்ன உணவு இல்லாமல் அங்கே கிடைத்த ஆமைகளை பிடித்து அதை கொன்று அதன் ரத்தத்தை குடித்து உயிர் வாழ்கிறது ஆனால் அதிக நாள் தாக்கு பிடிக்க முடியாமல் உயிர் தப்பிக்க ஒரு கொடூர முடிவை எடுக்கிறது. அதாவது தங்களில் ஒருவரை கொன்று அவரை தின்று உயிர் வாழ்வதை தவிர வேறு வழி இல்லை மூவர் வாழ ஒருவரை கொல்வதை தவிர வேறு வழி இல்லை என்று முடிவு செய்கிறது. பிறகு தங்களில் இளைய வயது உடைய ஒரு சிறுவனை அவர்கள் தேர்ந்தெடுகிறார்கள் அவனை கொன்று தின்று ரத்தம் குடித்து உயிர் தப்புகிறார்கள். அவர்கள் மீட்க படும் போது அவர்களில் இருவர் சாகும் தருவாயில் இருக்கிறார்கள்.
தனது இந்த கதை பற்றி ஆலன் போ வே "very silly " என்று கருத்தை சொல்லி இருந்தார்.

இது நடந்து 46 ஆண்டுகள் கழித்து 1884 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து சிட்னி நோக்கி சென்ற ஒரு கப்பல் புயலில் சிக்கி அதிலிருந்து 4 பேர் லைஃப் போட்டில் கடலில் தப்புகிறார்கள். உன்ன உணவு மற்றும் தண்ணீர் இன்றி அவர்கள் அங்கே கிடைத்த ஆமைகளை பிடித்து ரத்தத்தை குடிக்கிறார்கள். ஆனாலும் அதிக நாள் தாக்கு பிடிக்க முடியவில்லை. அப்போது அவர்களில் இளைய வயது உடைய சிறுவன் ஒருவன் தாகம் தாங்காமல் கடல் நீரை பருகி உடல் நிலை கெட்டு போகிறது. அவன் நிலை மோசமாகி இறக்க தான் போகிறான் எனும் போது எப்படியும் அவன் இறக்க தான் போகிறான் அவனை நாமே கொன்று அவன் ரத்தத்தை குடிக்கலாம் என்று அந்த குழு ஒரு முடிவிற்கு வருகிறது காரணம் அவன் நோயால் இறக்கும் வரை காத்திருந்தால் அவன் ரத்தம் கெட்டு போய் பயன்படாமல் போகலாம் . அவர்கள் திட்ட படி அந்த சிறுவனை சின்ன கத்தியை வைத்து கழுத்தை அறுக்கிறார்கள்.  பிறகு ரத்தத்தை குடித்து தாங்கள் மீட்க படும் வரை உயிர் தப்புகிறார்கள் .
இதில் விசித்திரம் என்ன வென்றால் ஆலன் போ எழுதிய அந்த கதையில் வரும் சிறுவன் பெயர் "ரிச்சர்ட் பார்க்கர்." இந்த நிஜ கதையில் அந்த சிறுவன் பெயரும் ரிச்சர்ட் பார்க்கர். (லைஃப் ஆப் பை எனும் படத்தில் படகில் கடலில் மாட்டி கொள்ளும் சர்வைவல் கதையில் அந்த புலிக்கு ரிச்சர்ட் பார்க்கர் என பெயர் வைத்தது ஏனோ !)

இந்த பயங்கர நிஜ சம்பவம் அந்த காலத்தில் வைரலாக பேச பட்ட ஒரு வழக்கு ஆகும். மீட்க பட்ட 3 பேரில் இருவருக்கு தூக்கு தண்டனை அறிவித்தது நீதி மன்றம். பிற்பாடு தண்டனை குறைத்து கொண்டது. கற்பனை கதைக்கும் நிஜ சம்வத்திற்குமான இந்த அபூர்வ மர்ம  ஒற்றுமை பலரையும் ஆச்சர்யத்தில்
ஆழ்த்தியது.

மேற்கண்ட புத்தகங்களில் அந்த படைப்புகள் எப்படி நடந்தன என்று படைவர்களுக்கே தெரியாது ஆனால் குறைந்தபட்சம் படைத்தவர்கள் யார் என்றாவது நமக்கு தெரியும் ஆனால் யார் படைத்தார்கள் எப்போது படைத்தார்கள். எதற்காக படைத்தார்கள்... அந்த புத்தகங்களில் என்ன எழுத பட்டுள்ளது... என்றே தெரியாத சில மர்ம புத்தகங்கள் உலகில் உண்டு உதாரணத்திற்கு மண்டையை குழப்பி எடுக்கும் சில மர்ம புத்தகங்களை பற்றி பார்ப்போம்..

🕷 THE BOOK OF SOYGA :

இது  நம்ம தி மம்மி படத்தில் வருகிறது போன்ற அமானுஷ்யம் ,ஆவி , மாந்திரீகம் ,பிளாக் மேஜிக் கொண்ட மர்ம புத்தகம்.
15 ஆம் நூற்றாண்டை சார்ந்த இந்த ஆவி சார்ந்த மர்ம புத்தகத்தை முதல் முதலில் john dee எனும் கனிதவியலாளர் 1551 இல்  கண்டெடுத்தார் ஆனால் அதன் பின் பல நூற்றாண்டுக்கு இது மர்மமாய் காணாமல் போய் 1994 ஆம் ஆண்டு திடீரென்று பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டெடுக்க பட்டது.
இந்த 200 பக்கம் கொண்ட மர்ம புத்தகத்தில் முழுக்க முழுக்க ஆவிகளை வர வழிப்பதற்கான வழிமுறைகளும் ,மாந்திரீகம் செய்வதற்கான வழிமுறைகளும், வான சாஸ்திர குறிப்புகளும், மேலும் அதற்க்கு மேல் பலது நம்மால் புரிந்து கொள்ள முடியாத மர்மமான பல விஷயங்களையும் உள்ளடக்கி உள்ளது.

1551 ஆண்டு இதை கண்டெடுத்த ஜான் டீ ஒரு ஆவியுடன் பேசும் மீடியம் ஒருவரை உதவிக்கு அழைத்து இதில் என்ன இருக்கு என அறிய முற்பட்டார். புத்தகத்தில் சில இடங்கள் 'லேட்டின் ' மொழியில் ஏதோ ஓரளவு புரிந்து கொள்ளும்படி இருந்ததை படிக்க முடிந்தது ஆனால் அதில் 40000 வார்த்தைகள் மிக விசித்திரமான வகையில் 36 கட்டங்களில் அடுக்க பட்டிருந்தது எதை குறிக்கிறது என்பதை கண்டு கொள்ள முடியவில்லை. அதையும் மீறி இதில் ஒளிந்துள்ளதை புரிந்து கொள்ள முயன்றவர்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் மர்மமான முறையில் இறந்து போனதாக சொல்லப்படுகிறது. அந்த ஆவி புத்தகம் இன்றளவும் அமானுஷ்யமாகவே உள்ளது நமக்கேன் வம்பு என்று பெரும்பாலும் இப்போதெல்லாம் பலர் அதை படிக்க முயலுவதே இல்லை.

 🕷 ROHONC CODEX :

448 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம்
19 ஆம் நூற்றாண்டை சார்ந்தது. ஹங்கேரி நாட்டுக்கு சொந்தமானது.
இதில் ராணுவ சண்டை களம் முதல் மத குறியீடுகள் வரை பல வற்றை பற்றியும் வரைய பட்டு எழுத பட்டு இருக்கிறது. கிறிஸ்து... முஸ்லீம்...ஹிந்து என அனைத்து மத குறியீடுகளும் இதில் பயன்படுத்த பட்டிருகிறது ஆனால் என்ன எழுத பட்டு இருக்கிறது என்று தான் யாராலயும் படிக்க முடியவில்லை.. அப்படி ஒரு ரகசிய குறிஈடுகளை கொண்ட 200 எழுத்துக்களால் இது எழுத பட்டுள்ளது இதை எழுதியது யார் எதற்கு இதை எழுதினார்கள் என்ற எந்த தகவலும் யாரிடமும் இல்லை.

  🕷 CODEX SERAPHINUS :

இந்த புத்தகத்தை... அதில் உள்ள படத்தை பார்க்கும் நபர்கள் தாங்கள் ஒரு வித்தியாசமான கற்பனை உலகிற்கு செல்வதை தவிர்க்க முடியாது. அந்தளவு வித்யாசமான பல படங்களை கொண்டது பலது பார்க்க ரொம்ப விபரீத கற்பனை போலவும் தெரிகிறது.. யாரோ கிறுக்கு விஞ்ஞானி  தனது விபரீத உயிரியல் ஆய்வை பதிவு செய்தது போலவும் இருக்கிறது. (உதாரணம் ஒரு படுத்திருக்கும் பெண் அவள் மேல் ஒன்றிணைந்து இருக்கும் ஆன் பார்க்க ஒரு முதலை போன்ற வடிவத்தில் இருக்கிறார்கள்...பின் அடுத்தடுத்த படத்தில் அவர்கள் முதலையாகவே மாறிவிடுகிறார்கள். ) ஆனால் பலர் இதை ஒரு மருத்துவ நூலாக இருக்கலாம் என்கிறார்கள்.
படங்கள் பார்க்க ஏதோ உயிரற்றதையும் உயிருள்ளதையும் ஒன்றாக கலந்து ஆய்வு செய்தது போலவும்... விலங்குகளையும் தாவரங்களையும் ஒன்று கலந்து ஆய்வு செய்தது போலவும் பல விசித்திரங்கள் நிரம்பி உள்ளது இந்த புத்தகத்தில்.
360 பக்கம் கொண்ட 1981 இல் பதிவிட பட்ட இந்த புத்தகம் நல்ல வேலை இதை எழுதியவர் யார் என்று நமக்கு தெரியும்.
இது இத்தாலிய ஆர்ட்டிஸ்ட் மற்றும் வடிவமைப்பாளர் உருவாக்கிய கற்பனை உலகம் இது. அவர் இதை பற்றி கூறுகையில் தனக்கு சின்ன வயதில் வந்த பல விச்சித்திர கற்பனைகளுக்கு விடை தெரியவில்லை அதை தான் இந்த வித்யாசமான என்சைக்ளோபீடியாவில் பதித்து இருக்கிறேன் என்றார். அந்த படங்களை பார்க்கும் போது ஒரு சிறுவனுக்கு இந்தளவு வித்யாசமான கற்பனைகள் எப்படி வந்தது என்ற கேள்வி உண்டாகிறது.

🕷 VOYNICH MANUSCRIPT :

மேலே நாம் பார்த்த புத்தகங்களிலேயே மிக விசித்திரமான.. உள்ளத்தை கொள்ளை கொள்ள கூடிய ...அழகிய மற்றும் அறிவை குழப்ப கூடிய மர்மத்தை உள்ளடக்கிய புத்தகம் தான் voynich manuskript.
ஏதோ ஒரு வேற்றுகிரக விஞ்ஞானியின் ஆராய்ச்சி கையேடை திருடி வந்ததை போல அப்படி ஒரு வித்யாசமான படங்களை கொண்ட புத்தகம் (அதிலும் குறிப்பாக அந்த விஞ்ஞானி தாவரவியளில் அதிக ஆர்வம் போல தெரிகிறது ) புத்தகம் முழுக்க முழுக்க கைகளால் வரைய பட்ட அழகிய வண்ண வண்ண சித்திரம் மற்றும் கைகளால் எழுத பட்ட எழுத்துக்களை கொண்டது.
 அந்த படங்கள் ..அதன் வண்ண கலவைகள் அவ்வளவு துல்லியமாக அழகாக இருக்கின்றன ..ஒவொரு படங்களும் விளக்க முடியாத விசித்திரங்களை கொண்டுள்ளன. ஒவொன்றும் மிக ஆழமாக எதையோ சொல்ல வருவது தெளிவாக தெரிகிறது. சில பக்கங்கள் இடம் பற்றாமல் பெரிய சைஸ் பக்கங்களில் வரைய பட்டு அந்த பக்கங்கள் மட்டும் மடித்து வைத்து இணைக்க பட்டுள்ளது.  அதை எழுதியவன் அறிவியலில் உயிரியலில் ஆழ்ந்த அறிவு கொண்டவனாக தெரிகிறது. அந்த எழுத்துக்கள் இந்த கால அச்சு களுக்கு சவால் விடும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக செதுக்க பட்ட எழுத்துக்களை போல மிக அழகிய கையெழுத்தை கொண்டது. வானவியல்  உயிரியல் தாவரவியல் ,மருத்துவம், என்று பல தலைப்புகளில் அந்த ஓவியங்கள் வரைய பட்டுள்ளன. ஓவியங்களின் தரமும் பார்க்க இன்றைய கிராபிக்ஸ் ஓவியங்களை ஒத்த அளவில் அவ்வளவு தரமாக வரைய பட்டுள்ளது. ஆனால் அந்த புத்தகம் என்ன சொல்ல வருகிறது என்று யாருக்கும் தெரியவில்லை அதில் எழுத பட்ட எழுத்துக்கள் ஒன்று கூட உலகில் எந்த வகை எழுத்துகளுடனும் ஒத்து போக வில்லை மிக மர்மமான வேற்றுகிரக எழுத்துக்கள் போல அவை தோற்றம் அளிக்கின்றன.

இந்த புத்தகத்தை டீகோட் செய்ய FBI முதல் பெரிய பெரிய ப்ரொபெசர்கள் வரை... டீகோட் நிபுணர்கள் வரை.. இரண்டு உலக யுத்தங்களில் வேலை செய்த டீ கோடர்கள் வரை முயன்று தோற்று இருக்கிறார்கள். பலர் இது ஏலியன்களால் எழுத பட்டது என்று நம்புகிறார்கள்.
15 ஆம் நூற்றாண்டை சார்ந்த இந்த புத்தகத்தை 1912 இல் வாங்கிய பழம் புத்தக விற்பனையாளர் Wilfrid M.
Voynich, அவர்களின் பெயரால் இது வழங்க படுகிறது. இதன் நிஜ பிரதி இன்று yale இல் உள்ள Beinecke Library இல் உள்ளது. இதில் பல பக்கங்கள் தொலைந்தது போக இப்போது 240 பக்கங்கள் உள்ளது.
இந்த மர்ம புத்தகத்தை யார் எழுதியது ஏன் இப்படி யாருக்கும் புரியாத மொழியில் எழுத பட்டது ? அதில் பயன்படுத்த பட்டுள்ள மொழி என்ன ? அந்த புத்தகதம் சொல்ல வரும் மகா அறிவியல் என்ன என்பது இன்று வரை தீர்க்க முடியாத மர்மமாக இருக்கிறது.

இந்த வரிசையில் இது போன்று உலகில் பல மர்ம புத்தகங்கள் உண்டு இதோ மேலும் சில மர்ம புத்தகங்களின் பெயர்கள் :
☯ The Dead Sea Scrolls
☯ The Oera Linda Book
☯ Prodigiorum ac Ostentorum Chronicon
☯ The Smithfield Decretals
☯ The Ripley Scrolls
☯ The Story Of The Vivian Girls
☯ Codex Mendoza
☯ The Popol Vuh
மற்றும் விற்பனையில் செக்க போடு போடும் நாஸ்டர்டாமின்...
☯ Prophecies of Nostradamus

(நண்பர்களே இந்த மர்ம புத்தகங்களை படிக்க உங்களுக்கு ஆர்வம் உண்டாகுமாயின் ஒன்னும் பிரச்னை இல்லை இவைகளின் காபி பிரதிகள் இன்று சாதாரணமாக ஆன் லைன் விற்பனையில் கிடைக்கிறது. வாங்கி எதையாவது டீகோட் செய்ய முடிகிறதா என்று முயன்று பாருங்களேன் ...)

         ✴              ✴            ✴              ✴

மர்ம புத்தகங்களே இப்படி இருக்கிறது என்றால் மர்ம இடங்களை பற்றி என்ன சொல்ல....
அடுத்த பாகத்தில் சொல்கிறேன்

மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம்  6 :  மர்ம 'மோய்'கள்  )

கடந்த பாகத்தில் நாம் பார்த்து போல உலகதில் பல மர்ம புத்தகங்களை மனிதன் ஏன் எழுதினான் என்றே தெரியாமல் இருப்பதை போல.. எதற்கு கட்டினான் ஏன் கட்டினான் என்றே தெரியாமல் பல கட்டிடங்களும் , சிலைகளும் இருக்கின்றன.
உதாரணமாக நமக்கு மிகவும் பரிட்சயமான உலகின் முதன்மை மர்ம கட்டிடமான பிரமிடை எடுத்து கொள்ளுங்கள். அதை ஏன் கட்டினான் என்பதற்கு நமக்கு சொல்ல படும் காரணம் என்ன ? மன்னர்கள் மீண்டும் உயிர்த்து வருவார்கள் அதற்காக உடலை பாதுகாக்க வேண்டும் . இதில் ஒன்றை தர்க்க பூர்வமாக யோசித்தால் ஒரு பொருந்தாத விஷயம் ஒன்றை கவனிக்கலாம்.
அதாவது இக்கால நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூட கட்ட முடியாத, மிகுந்த அறிவியல் நுட்பம் கொண்ட, வானவியல் அறிவை கொண்டு பிரமாண்டமாக  டன் கணக்கில் எடை கொண்ட கற்களை வைத்து அந்த பாலைவன பகுதியில் இவ்வளவு பிரமாண்ட அசாத்திய கட்டிடம் கட்ட தெரிந்தவர்களுக்கு, இறந்து போனவன் உடல் மீண்டும் உயிர்த்து எழாது என்ற குழந்தைக்கு கூட தெரிந்த அடிப்படை உண்மை கூடவா தெரிந்திருக்காது ?
நிச்சயம் வேற ஏதோ உயர ரக தொழில் நுட்பத்தை பயன் படுத்திய களம் தான் பிரமிடுகள். அவர்கள் வேறு உலகில் உயிர்தெழுவார்கள் என்பது டெலிபோர்டேஷ்னா ? பிரமிடு ஒரு "வார்ம்ஹோல் "போர்டராக செயல் பட்டு இருக்குமா போன்ற பல கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது.(பிரமிட் பற்றி நிறைய பேர் நிறைய இடங்களில் நிறைய முறை எழுதி விட்டார்கள் என்பதால் நான் அதை தவிர்த்து விடுகிறேன் )
இது போன்று எதற்கு செய்தார்கள் என்று தெரியாத ஒரு இடம் தான் ஈஸ்டர் தீவும் அதில் உள்ள மர்ம 'மோய்'கள் சிலையும். அதை பற்றி பார்க்கலாம்.

தெற்கு பசிபிக் கடலில் மிகவும் தன்னித்து ஒதுக்க பட்டு நடு கடலில் இருக்கும் ஒரு தீவு தான் ஈஸ்டர் தீவு.  அநேகமாக வேறு எந்த தீவும் இவ்வளவு தனிமையில் நில பகுதியை விட்டு இவ்வளவு தொலைவில் இல்லை.
Chile யிலிருந்து செல்ல வேண்டும் என்றால் அந்த தீவுக்கு 3700 கிலோமீட்டர் கடலில் பிரியாணிக்க வேண்டும். அல்லது tahiti யிலிருந்து செல்ல வேண்டும் என்றால் 4000 கிலோமீட்டர் கடலில் செல்ல வேண்டும்.
அவ்வளவு ஏன் அந்த தீவுக்கு அடுத்த அருகாமை தீவுக்கு செல்ல வேண்டும் என்றால் அந்த தீவில் இருந்து நாம் 2250
கிலோ மீட்டர் கடலில் செல்ல வேண்டும் அந்தளவு ஒதுக்க பட்ட ஒரு பூகோள அமைப்பில் இருக்கிறது ஈஸ்டர் தீவு.
அந்த தீவு மொத்தமே 24 கிலோமீட்டர் நீளமும் 16 கிலோமீட்டர் அகலமும் கொண்டது தான்.

1772 இல் ஒரு டச்சு மாலுமி ஒரு ஈஸ்டர் திருநாளில் அந்த தீவை கண்டுபிடிக்கும் வரை அப்படி ஒரு தீவு இருப்பதோ அதில் கி. பி 400 களில் கடலில் நட்சத்திர வழி காட்டலையும் கடல் நீர் போக்கையும் திறமையாக கையாண்டு கடலில் நீண்ட தூரம் பிரியாணிக்கும் 'பாலிநேசியன்'கள் எனும் பழங்குடி இன மக்கள் அங்கே குடியேறி நூற்றாண்டு கணக்காக வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வருவது பற்றியும் வெளி உலகிற்கு தெரியாது.  (கண்டுபிடிக்க படும் முன் அந்த தீவின் பெயர் "Rapanui")

முதல் முதலில் ஐரோப்பியர்கள் அந்த தீவை அடைந்த போது அங்கு எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் அந்த மர்ம சிலைகளை பார்த்து வாய் பிளந்து நின்றார்கள். அதை அந்த பழங்குடியினர்கள் "மோய் " என்று அழைக்கிறார்கள்.
ஒன்று இரண்டு இல்லை அந்த விசித்திர மோய்கள் அந்த தீவு முழுவதும் மொத்தம் 887 சிலைகள் இருபதை கண்டார்கள். ஒவொன்றும் 30 அடிக்கும் மேலான உயரங்கள் கொண்ட டன் கணக்கில் எடையை கொண்ட சிற்பங்கள்.
 மோய்கள் பார்க்க மிக விசித்திரமானவை. அவைகளின் முகங்கள் சாதாரண மனித முகத்தின் வழக்கத்திற்கு மாறாக  நன்கு நீண்டதாக செதுக்க பட்டு உறுதியான கூர்மையான மூக்கு தடித்த உதடுகள் மற்றும் அடர்த்தியான புருவங்கள் கொண்டிருந்தன. அந்த தீவு வாசிகள் அதை எதற்காக செய்தார்கள் என்பது ஆச்சர்யம் என்றால் அதை எப்படி செய்தார்கள் என்பது இன்னும் பெரிய ஆச்சர்யம் .காரணம் அவைகளை செதுக்குவதும் இட பெயர்ச்சி செய்வதும் தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத அந்த தீவு வாசிகளின் சக்திக்கு அப்பார் பட்டது. அவர்கள் மொத்தமாக சேர்ந்தால் கூட அத்தனை சிலைகளை இடபெயர்ச்சி செய்து கொண்டு வந்து நிறுவுவது சாத்தியம் இல்லை. அவர்கள் அதை எப்படி செய்தார்கள் மேலும் இப்படி ஒரு கடினமான வேலையை ஏன் செய்தார்கள் என்று புரியவில்லை. அந்த சிலைகளை அவர்கள் அந்த தீவில் உள்ள எரிமலை உச்சியில் இருந்து செய்து கொண்டு வந்து இருந்தார்கள்.

அந்த மோய்கள் எதை குறிக்கின்றன ? ஏன் எல்லா மோய்களும் ஒரே போல முக அமைப்பை கொண்டிருக்கின்றன என புரியவில்லை. ஒரு பம்மிய பென்குவின் போல உடல் அமைப்பில் கைகளை உடலுடன் ஒரு மாதிரியாக அணைத்து வைத்திருக்கும் அந்த மோய்களுக்கு கால்கள் கிடையாது. எல்லா மோய்களும் ஏதோ சாதித்தது விட்ட உணர்வு போல சற்றே தலையை உயர்த்திய நிலையில் ஒரு கர்வமான பார்வை பார்க்கின்றன. எல்லா சிலைகளுமே கடல் பக்கம் திரும்பாமல் தீவின் மைய பகுதியில் எதையோ ஊற்று பார்க்கின்றன. ஒன்றே ஒன்று மட்டும் கடலை நோக்கி உள்ள மோய் ஒன்று உண்டு... இதை தவிர ஒரு மோய் மற்ற அனைத்தையும் விட வித்தியாசமாக முட்டி போட்டு கொண்டு உள்ளது அதற்க்கு தாடியும் உண்டு... மற்றதை போல இல்லாமல் இது மட்டும் கொஞ்சம் பார்க்க மனித சாயல் அதிகம் நிரம்பி காண படுகிறது. எல்லா மோய் களுமே பிரமாண்டமானவை அல்ல சில சின்ன மோய்களும் உள்ளன. அங்கே இருப்பதிலேயே உயரமான மோய் பாரோ என்று அழைக்க படும் மோய் ஆகும். அது 33 அடி உயரமும் 90 டன் எடையும் கொண்டது. இருப்பதிலேயே அதிக எடை கொண்ட மோய் உயரம் குறைந்து அகலம் பெருகி 86 டன் எடையுடன் காண படுகிறது. இன்னோரு பிரமாண்ட மோய் செதுக்க பட்டு பாதியில் விட பட்டுள்ளது அது செதுக்க பட்டு இருந்தால் 69 அடியும் 270 டன் எடையும் கொண்டதாக இருந்து இருக்கும்.

இந்த பழங்குடி இனத்தில் இருந்த ஜன தொகை அதிகபட்சமாக 15000 வரை உயர்ந்து இருக்கிறது. பிறகு மர்மமான முறையில் ஆச்சர்யமாக திடீரென வெகுவாக குறைந்து போய் 2000 அளவில் வந்து விட்டது என்கிறார்கள்.
ஐரோபியர் குடியேறிய பின் அவர்களை அடிமையாக்கி அவர்களுக்கு நோய்கள் பரிசளித்து 1877 இல் ஜன தொகையை வெறும் 111 க்கு குறைத்து விட்டார்கள்

அந்த rapanui  பழங்குடியில் இரு விதமான இனங்கள் இருந்து இருக்கிறார்கள். ஒன்று நீண்ட காது உடைவர்கள் இன்னொன்று குட்டை காது உடையவர்கள். இதில் நீண்ட காது கொண்டவர்கள் ஆட்சிசெய்பவர்களாகவும் குட்டை காது உடையவர்கள் அடிமைகளாகவும் இருந்திருக்கிறார்கள் அதனால் தான் பெரும்பான்மையான மோய்களுக்கு நீண்ட காதுகள் இருக்கின்றன. பிறகு ஒரு கட்டத்தில் குட்டை காது குழுவினர் புரட்சி செய்து நீண்ட காதுகாரர்களை கொன்று குவித்து இருக்கிறார்கள்.

அந்த தீவு வாசிகள் சிலைகளை மலை யிலிருந்து அதன் அதன் இடத்திற்கு அதை எப்படி நடத்தி கூட்டி வந்தனர் என்று பல தியரிகள் சொல்ல படுகிறது. வழக்கம் போல இது ஏலியன்கள் வேலை என்றும். இல்லை இல்லை இது ராட்சத மனிதர்கள் உதவியுடன் கட்ட பட்டது என்றும் பல கருத்து உள்ளது. சமீப ஆய்வாளர்கள் அந்த தீவில் வளரும் ஒருவகை புற்கள் வகையை சேர்ந்த செடிகளை கயிறு போல தயாரித்து சிலைக்கு மேலே கீழே என்று கட்டி எதிர் எதிர் திசையிலிருந்து அதை மாற்றி மாற்றி இழுப்பதன் மூலம் நாம் எடை அதிகமான வீட்டு பொருளை அறக்கி அறக்கி நகர்த்துவது போல அதை நடத்தி கூட்டி வந்து இருக்கலாம் என்கிறார்கள்.
இருந்தாலும் இவ்வளவு கடினமான வேலையை அவர்கள் ஏன் எதற்கு எப்படி செய்தார்கள் என்று இன்று வரை யாராலும் தீர்க்கமாக சொல்லவே முடியவில்லை.
இன்றும் மர்மமான தனது பார்வையால் தீவின் மைய பகுதியில் உள்ள ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத அமானுஷயத்தை  உற்று பார்த்து கொண்டே இருக்கின்றன அந்த " மர்ம மோய்கள்" .

           ✴            ✴           ✴           ✴

ஈஸ்டர் தீவு ஒரு மர்ம தீவு தான் ஆனால் ஆபத்து இல்லாத ரம்மியமான தீவு. ஆனால் உலகில் சில தீவுகள் மனிதர்கள் செல்ல அச்ச படுகின்ற அளவு திகில் நிரம்பிய தீவுகளும் உள்ளன.
அப்படி பட்ட திகில் தீவுகளை பற்றி அடுத்த பாகத்தில்.........


மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம்  7 :  திகில் தீவுகள் )

உலகில் பல தீவுகள் அழகானவை, ரம்யமானவை ,பலது மர்மமானவை ஆனால் சில தீவுகள் கொஞ்சம் திகிலானவை உதாரணமாக பொம்மைகளின் தீவு (island of the dolls)
மெக்சிகோ சிட்டியின் தெற்கு பகுதியில் Xohimico கால்வாய்களுக்கு மத்தியில் உள்ள ஒரு குட்டி தீவு தான் (island of dolls)
திகில் ,த்ரில் ..விரும்பிகள் சாகச விரும்பிகள் .. செல்வதற்கு ஏற்ற தீவு தான் இந்த island of doll.

இந்த தீவில் மனிதர்கள் யாரும் இல்லை மாறாக இங்கே வசிப்பது எண்ணற்ற பொம்மைகள் தான். அதுவும் anabelli படங்களில் காட்ட படுவதை போல திகில் வகை பொம்மைகள். இங்கே செல்பவர்கள் அங்குள்ள மரங்களில் செடிகளில் எங்கு பார்த்தாலும் பொம்மைகள் தொங்கி கொண்டிருப்பதை பார்க்கலாம்.  அங்குள்ள பொம்மைகளில் ஆவிகள் புகுந்து இருப்பதாக அங்கே சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களால் நம்ப படுகிறது. அங்கு சென்று வந்தவர்கள் பல திகில் கதைகள் சொல்வார்கள். அங்குள்ள பொம்மைகள் தன்னை தலை நிமிர்ந்து பார்த்ததாக கண்ணை சிமிட்டியதாக இரவில் அவைகளுக்குள் அவை பேசி கொள்வதாக சொல்வார்கள். இரவில் அந்த பொம்மைகள் மிகவும் மிரட்டலாக இருக்கும் என்று சொல்லவே தேவை இல்லை.
அந்த தீவில் அந்த பொம்மைகள் எப்படி வந்தன என்பது தான் இன்னும் திகிலான கதை.

Don Julian Santana Barrera என்பவர் தான் அந்த  தீவின் பாதுகாவலர் . ஒரு முறை அங்கே ஒரு சுழலில் சிக்கி இறந்து இருந்த ஒரு அடையாளம் தெரியாத சிறுமியை கண்டெடுத்தார். அந்த கால்வாயில் அந்த சிறுமியின் பினதுடன் சேர்ந்து ஒரு பொம்மையும் மிதந்து கொண்டிருப்பதை பார்த்தார்.
அந்த பொம்மையை தூக்கி எறிய மனம் இல்லாமல் அந்த இறந்த சிறுமிக்கு மரியாதை செய்யும் விதமாக அந்த பொம்மையை ஒரு மரத்தில் கட்டி தொங்க விட்டார். அதன் பின் தான் அந்த அமானுஷ்யம் ஆரம்பமானது .
திடீரென ஜூலியன் போக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டன அவர் மேலும் பல பொம்மைகளை வாங்கி வந்து மரத்தில் கட்ட தொடங்கினார். அவரது இந்த செயல் மூலம் சிறுமியின் ஆவி திருப்தி அடைவதாக சொல்ல படுகிறது. அதன் பின் தொடர்ச்சியாக பொம்மைகளை கட்டி கொண்டே இருந்தார். அந்த பொம்மைகள் எல்லாம் அவிகளால் ஆட்கொள்ள பட்டது என்கிறார்கள் . ஜூலியன் மன நிலை பாதிக்க பட்டவர் போல் ஆனார். இயல்பு வாழ்க்கையில் இருந்து மாறி தொடர்ச்சியாக பொம்மைகளை கட்ட தொடங்கினார். இப்படி அவர் பித்து பிடித்ததை போல தொடர்ந்து 50 ஆண்டுகள் கட்டி கொண்டே இருந்தார். அந்த தீவு முழுவதும் பொம்மைகளால் தனி ஒருவனே கட்டி நிறப்பினார்.
பிறகு....
திடீரென ஒரு நாள் 2001 ஆம் ஆண்டு மர்மமான முறையில் தண்ணீரில் மூழ்கி சரியாக அந்த சிறுமி இறந்து போய் இருந்த அதே இடத்தில் இறந்து போய் இருந்தார். அவரும் அந்த தீவு ஆவிகளுடன் கலந்து விட்டதாக மக்கள் நம்புகிறார்கள்

கால போக்கில் அந்த தீவு டூரிஸ்ட் ஸ்பாட் ஆக மாறி பல டூரிஸ்ட்களை கவர்ந்தது. பத்திரிக்கை ஆர்டிக்ள் டிவி தொடர்களில் வந்தது பல டூரிஸ்ட்கள் மேலும் பல பொம்மைகள் கொண்டு வந்து காட்டினார்கள். இப்பொது வெறும் பொம்மைகள் ஆட்சி செய்யும் அமானுஷ்ய தீவாக இருக்கிறது அந்த பொம்மைகளின் தீவு.

         ✴            ✴            ✴            ✴

உலகம் பல முன்னேறிய நாகரிகமும் தொழில் வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் அடைந்து விட்டாலும் இன்னும் இது எதுவுமே தெரியாத முற்றிலும் இன்றைய நவீன உலத்தின் தொடர்பே துளியும் இல்லாத இன்னும் ஆதி கால காட்டுவாசிகளை போல வாழும் ஒரு தனி தீவு ஒன்று உள்ளது.
அதன் பெயர் "Sentinel Island "
"Skull island " படத்தில் காட்ட படும் வெளி மனிதர்கள் நெருங்க முடியாத மர்ம தீவை போன்ற ஒரு தீவு தான் இந்த  சென்டினல் தீவு . இது அந்தமான்க்கு மேற்கு அமைந்து இருக்கும் இந்தியாவிற்கு சொந்தமான ஒரு தீவு ஆகும். இங்குள்ள சென்டினல் இன மக்கள் 40000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இங்கே வசித்து வருகிறார்கள்.
அவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக தான் இருக்கும் என கணிக்க படுகிறது .அதிகபட்சமாக 400 பேர் இருக்கலாம் என்கிறார்கள்.  அந்த தீவில் இருபவர்கள் வெளி உலகத்தாருடன் தொடர்பு வைத்து கொள்ளாதது மட்டும் அல்ல... வெளியில் இருந்து யாரையும் அவர்கள் தீவில் அனுமதிப்பதும் இல்லை. மீறி அங்கே நெருங்கினால் அவர்களை அந்த ஆதிவாசிகள் கொன்று விடுகிறார்கள். ஒரு முறை அந்தமான் சிறையில் இருந்து ஒரு கைதி தப்பி போய் அந்த தீவில் பதுங்கி இருக்கிறான் அவனை அந்த தீவு வாசிகள் கொன்று கடலில் வீசி விட்டார்கள்.
நிலைநடுக்கமும் சுனாமியும் பாதித்த பின் அந்த தீவு வாசிகள் கணிசமாக இறந்து போய் இருப்பார்கள் என்று கனிக்க பட்டது ஆனால் ஆய்வு செய்த போது ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த தீவு வாசிகள் இயற்கை பேரிடரில் யாருமே சாக வில்லை... இயற்கை இடரில் உயிர் தப்பும் ஏதோ ஒரு நுட்பத்தை அவர்கள் கற்று வைத்து இருந்தார்கள். தங்களை ஆய்வு செய்ய வந்த ஹெலிகாப்டரை நோக்கி அவர்கள் கற்களை கட்டைகளை ஈட்டிகளை வீசி எறிந்து அவர்கள் எதிர்ப்பை வெளி படுத்தினார்கள்.
இந்திய அரசங்கம் அவர்களை நட்பு ரீதியாக அணுகி பார்க்க தேங்காய் மற்றும் பன்றிகள் போன்ற பரிசு பொருட்களுடன் நெருங்கி பார்த்தார்கள் ஆணால் அவர்களுக்கு கிடைத்தது அம்புகள் வரவேற்பு தான். (ஆணால் ஏதோ சில முறை சுற்றுலா பயணிகள் கொடுத்த பரிசை அவர்கள் அன்போடு வாங்கி கொண்டதாக சொல்ல படுகிறது .

1981 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2 ஆம் நாள் primrose என்ற பெயருடைய கப்பல் ஒன்று அந்த தீவை சுற்றியுள்ள பவள பாறைகளின் அருகில் தரை தட்டி நின்றது. கப்பலின் கேப்டன் அங்கே இருந்து தீவு வாசிகள் தம்மை மிக தீவிரமாக இரண்டு மூன்று நாட்களாக  கண்காணிப்பதையும் தீடீரென அவர்கள் சுறுசுறுப்பாக எதையோ செய்வதையும் கண்டார். கொஞ்சம் உற்று கண்காணித்து பார்த்த கேப்டன் அதிர்ந்தார். அவர்கள் ஈட்டி கட்டுதல் அம்புகள் வில்கள் தயாரித்தலுடன் ஒரு போருக்கு தயாராகி இவர்கள் இருக்கும் இடத்தை அடைய படகுகளை தயார் செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
பயத்தில் உறைந்த கேப்டன் தங்கள் தற்காப்புக்காக ஆயுதம் வேண்டும் என்று ரேடியோ தகவல் அனுப்பினார். அவர் கேட்ட உதவி அவருக்கு வந்து சேரவே இல்லை. கேப்டனின் நல்ல நேரம் கடல் கொஞ்சம் இயற்கை சீற்றத்துடன் காண பட்டதால் அவர்கள் இந்த கப்பலை நெருங்குவதில் தாமதம் ஆனது. ஒரு வாரம் கழித்து அவர்கள்
 Indian Oil And Natural Gas Commission. இல் ஒப்பந்த அடிபடையில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு ஹெலிகாப்டரால் மீட்க பட்டார்கள்.

அவர்களுடன் நட்பு பாராட்டும் முயற்சியில் பல சில முறை ஈடு பட்ட இந்திய அரசு தோல்வியை கண்டு முயற்சியை கை விட்டது. அதன் பின் அந்த தீவை சுற்றியுள்ள 3 கிலோமீட்டர் வரை மனிதர்கள் செல்ல தடை செய்ய பட்ட பகுதியாக அறிவித்தது.
இன்றும் "உங்க பேச்சுக்கு நாங்க வரமாட்டோம் எங்க பேச்சுக்கு நீங்க வராதீங்க " என்கிற ரீதியில் வெளி உலக தொடர்பு இல்லாமல் தனித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அந்த மர்ம செண்டினல் தீவு வாசிகள்.

      ✴             ✴             ✴              ✴

பிரேசிலில் உள்ள ஒரு தீவு தான்
"Ilha de Queimada Grande, "இதன் இன்னோரு பெயர்  "Snake Island, "
அதாவது பாம்புகளின் தீவு. 43 ஹேக்கர் நிலபரப்பில் விரிந்து இருக்கும் இந்த தீவில் மனிதர்கள் சென்றால் சில மணி நேரங்கிளில் இறக்க நேரிடும் அந்தளவு கிட்டத்தட்ட 4000 விஷ பாம்புகள் இந்த தீவில் வாழ்கின்றன.
ஓவொரு சதுர அடிக்கும் குறைந்தது 5
Golden Lancehead வகை விரியன் பாம்புகள் அங்கே காண படுகின்றன. அந்த தீவில் மனிதர்கள் செல்ல முடியாத அளவு இத்தனை விஷ பாம்புகள் அங்கே எப்படி உண்டாகின என்பது மர்மமான ஒன்று தான்.

         ✴           ✴             ✴           ✴

சரி தீவில் ரொம்ப நேரம் சுத்தி கொண்டிருக்க முடியாது கொஞ்சம் நிலத்திற்கு வருவோம்.....
நீங்கள் இரவில் தனியாக எங்கோ செல்கிறீர்கள் ...உங்களை  மின் மினி  ஒளி பின் தொடர்ந்தால் எப்படி இருக்கும் ??
நல்ல ரம்மியமாக தான் இருக்கும் அல்லவா ?

நான் சொல்ல போகும்  ஒளிகள் மனிதர்களை பின் தொடரும் திகில் ஒளிகள்...
அதை பற்றி அடுத்த பாகத்தில்.

மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம்  8 :  மர்ம ஒளி/லிகள் )

ஆஸ்திரேலியாவில் உள்ள குவின்ஸ்லாந்தின் புற பகுதிகளில் பல காலமாக மக்களை அச்சுறுத்தி வந்த மர்ம ஒளி ஒன்றை பற்றி தான் இன்று பார்க்க போகின்றோம்.
அந்த ஒளிகள் யாரோ ஒருவர் இருவர் மட்டும் பார்த்த புரளி ..வதந்தி டைப் ஒளி அல்ல கிட்ட தட்ட அந்த சுற்று புற கிராமங்களில் வசித்து வந்தவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் கண்ணில் தென்பட்ட மர்ம ஒளிகள் அவை . முதல் முதலில் பவுலியாவில் உள்ள மின் மின் ஹோட்டலில் இருந்து தான் இதை பார்த்ததாக சொன்னனார்கள் அதனால் மக்கள் மத்தியில் இது 'மின் மின்' ஒளிகள் என்று புகழ் பெற்றது. (ஆமாம் அது நீங்கள் நினைத்தது போல மின் மினி ஒளி அல்ல)
அந்த பகுதியில் இரவில் யாராவது தனியாக சென்றால் தூரே தொடுவானில் அந்த ஒளி எட்டி பார்க்கும் .புதிதில் வெட்ட வெளி தொடுவானத்தில் அதை பார்த்தவர்கள் இங்கே என்ன அது ஒளி என்று அதை நோக்கி சென்று பார்த்தவர்களுக்கு அந்த ஒளி மாயமாய் மறைந்து போனது.
இரவில் வெளியே செல்லும் போது குறிப்பாக வெட்ட வெளி மாதிரி இடங்களில் தூரே தொடுவானில் அந்த ஒளி எட்டி பார்க்கும்.  கால போக்கில் அந்த ஒளி மக்களை அமானுஷ்ய அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது. மக்கள் தனியே செல்ல பயந்தார்கள். அந்த ஒளி தங்களை நீண்டகாலமாய் கண்காணிப்பதாக நம்பினார்கள் . கிட்ட தட்ட 100 ஆண்டுகளாக இது நடந்து வருவதாக தெரிந்தது. பல பேர் அந்த ஒளி தங்களை பின் தொடர்ந்ததாக நம்பினார்கள். அங்கே ஒளி கதை மிக பிரபலம் ஆனது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இது இந்த மாதிரி ஒளி இடம் என்று குறிப்பிடும் பலகையை வைத்திருந்தார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

பல பேர் அதை வர்ணித்து இருந்தார்கள். ஒரு புட்பால் போல தோன்றும் ஒளி அப்படியே பெரிசாகும்... சில சில நேரம் டல்லடிக்கும் என்றும் திடீரென பிரகாசமாக எரியும் என்றும் தங்களை கண்காணிபதில் அது ஆர்வம் காட்டுகிறது என்றும் தங்களை தொடர்ந்து பல காலமாக அது கண்காணிக்கிறது என்றும் சொன்னார்கள். பயணிகள் நடந்தோ கால்நடையாகவோ.. வண்டியிலோ எப்படி போனாலும் அவைகள் வருகின்றன. ஆனால் குறிப்பிட தக்க ஒரு விஷயம் என்ன வென்றால் அந்த ஒளியால் யாருக்கும் எந்த ஆபத்தும் வந்தது இல்லை. ஆனால் 100 ஆண்டுகளாக தங்களை கண்காணிக்கும் ஒளி அவர்களுக்கு ஒரு வகை அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.

உலகில் தீர்க்க படாத விடை தெரியாத பல மர்மங்களை போல தான் ஆஸ்திரேலியா வின் இந்த மின் மின் ஒளி மர்மமும் தீர்க்க படாத மர்மமாக இருக்க இருந்தது.
ஆனால்.......
நல்ல வேலையாக Jack Pettigrew எனும்  குவின்ஸ்லேண்டின்..neuro scientist ஒருவர் இதை தீர்த்து தெளிவாக்கி நீர்த்து போக செய்தார். ஆம் மின் மின் ஒளிகள் இப்போது மர்ம ஒளிகள் அல்ல.

பல பேர் சொல்லி கேட்டு இருந்த கதையை ஜாக் நேரில் சந்திக்க நேர்ந்ததது. வயது வந்த ஆட்கள் கூட அந்த ஒளியை பார்த்து பயந்து அழுது கூட விடும் செய்திகள் கேள்வி பட்டு வருந்தி இருந்தார் ஜாக் ஆனால் அவர் பயப்பட வில்லை மாறாக இது என்னவாக இருக்கும் என ஆழ்ந்து சிந்தித்தார் . தூரே தொடுவானில் சாலையில் நரிகள் நிற்கிறது அதன் கண்கள் தனது கார் வெளிச்சத்தில் பிரதிபளிக்கிறது  என யோசித்தார். தனது கார் ஹெட் லைட்டை அணைத்தார் ஆனால் அப்போதும் அந்த ஒளிகள் அங்கே இருந்தது. தனது தியரி தவறு என உணர்ந்தார். வேகமாக அங்கே கார் ஓட்டி சென்று பார்த்த போது வழக்கம் போல ஒளிகள் காணாமல் போய் விட்டன.

அது UFO அல்லது ஆவி அல்ல என்று உறுதியாக நம்பிய ஜாக் , அது என்ன என்பதை விளக்க முடியாமல் திணறினார் . ஆனால் அதை குறித்த ஆழ்ந்த ஆய்வு மனப்பான்மையில் இருந்தார். அதன் பிறகு ஒரு பகல் வேளையில் அதன் ரகசியம் அவருக்கு பிடி பட்டது. அந்த பகுதியில் இல்லாத மலை பகுதி ஒன்று ஒருமுறை தூரே கண்ணுக்கு தெரிவதும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் மறைவதும் பார்த்தார். அதே போல கடல் பகுதியில் தொடுவானில் கடல் பரப்பில் படகுகள் காற்றில் வானில் மிதப்பது போன்ற காட்சியை பார்த்தார். அதாவது Morgana mirage, எனும் இயற்கை நிகழ்வு தான் அதற்க்கு காரணம் என கண்டார். சமதள நிலம் தன்னை சுற்றி உள்ள காற்றை குளுமையாக வைத்து இருக்க அதை சுற்றி உள்ள சூடான காற்று வழியே ஒளி செல்லும் போது அது தடைகளை வளைந்து கடந்து நம் கண்ணுக்கு அடைகிறது என கண்டார். அது அந்த பகுதி நிலங்களில் மட்டும் நடக்கும் சிறப்பு நிகழ்வு என கண்டார்.
இதை நிரூபிக்க ஒரு காரியம் செய்தார். தனது காரை எடுத்து கொண்டு போய் தூரே கண்ணால் காண முடியாத இடத்தில் கொண்டு போய் நிறுத்தினார் அதன் ஹெட் லைட் ஆன் செய்தார் ..மேலும் ஆறாய வசதியாக வண்ண விளக்குகளை பயன்படுத்தினார் அணைத்து அணைத்து போட்டு பார்த்தார். வெகு தூரத்தில் இந்த ஒளி அந்த மர்ம ஒளி போலவே காண கிடைந்ததது .இவர் கார் லைட்டை அணைத்தத்தும் அந்த ஒளிகளும் நின்று போயின.  நீண்ட தொலைவில் உள்ள நகரங்களின் ஒளி காற்றில் வளைந்து வந்து மர்ம ஒளியாக தெரிகிறது என அறிவித்தார்.
நூற்றாண்டு கால மர்மத்தை விளக்கி ஒரு முடிவிற்கு கொண்டு வந்தார்..jack pettigrew.

       ✴               ✴                ✴             ✴

பெரும்பாலும் மர்ம கதைகள் நிகழ்வுகள் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கும் முன்பு இருந்திடும் காரணம் பின்னோக்கி செல்ல செல்ல மர்மங்களை விளக்க அறிவியல் வளர்ச்சி குறைவாக இருந்தது தான்.
கையில் எப்போதும் கேமாராவும் இணையத்தையும் வைத்து கொண்டு திரியும் இக்காலத்தில் பல மர்மங்கள் உடனடியாக விடை கண்டு பிடிக்க பட்டு விடுகின்றன. சமீப கால உதாரணம் ஒன்றை சொல்கிறேன்.
செப்டம்பர் 7 -2017 இல் மெக்சிகோவில் 8.1 magnitude  அளவில் ஒரு பூகம்பம் வந்ததது அதன் பின் மெக்சிகோ வானில் பல வண்ணங்களில் மர்ம ஒளிகள் நடனம் ஆடுவதை கண்டார்கள். இக்காலத்தில் 24 மணி நேரமும் இயங்கி கொண்டிருக்கும் பல cc டிவி கேமராகளில் இந்த காட்சி பதிவாகி இருந்தது. பூகம்பமும் அதை தொடர்ந்து தெரியும் வண்ண ஒளிகள் பற்றிய கதையும் கிமு 89 களிலேயே பதிவு செய்ய பட்டு பல கதைகள் சொல்ல பட்டு வந்துள்ளன. ஆனால் இன்றைய விஞானதிற்கு அதன் காரணம் மிக துல்லியமாக தெரியும்.  பூமிக்கு அடியில் பாறைககள் அழுத்தத்தில் அதன் மூலக்கூறு பிணைப்பு விடுபட்டு ionized ஆக்சிஜனை (ion என்றால் ஒரு அணு மின்னூட்டம் பெற்று இருப்பது) வெளியிடுகிறது அது காற்றில் ஒரு எலக்ட்ரிக்கல் பீல்டை உண்டாக்கி  கொரானோ டிஸ்சார்ஜ்  ஆகிறது .
இந்த சாதாரண அறிவியல் உண்மை கி.மு களில் மர்ம ஒளிகளாக தான் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

      ✴              ✴              ✴                ✴

மனிதர்களை அச்சுறுத்தியத்தில் ஒளிகளுக்கு மட்டும் அல்ல ஒலிகளுக்கும் பங்கு உண்டு உதாரணமாக உட்லண்ட் சிட்டியில் கேட்ட மர்ம ஹம்மம்..ஒலி.
அந்த நகரத்தில் அதிகாலை 3 மணி அளவில் திடீரென அந்த மர்ம ஹம்மம் ஒலி கேட்கும் மிகவும் லோ பிட்சில் இருக்கும் அந்த மர்ம ஒலியை நகரத்தில் பல பேர் கேட்டார்கள். அது ஒரு விளக்கம் அளிக்க முடியாத மர்ம ஒலி யாக இருந்தது. பல பேர் அது தூரத்தில் டீசல் இன்ஜின்களின் சப்தம் என்றார்கள் .பலர் அது கடற் கரை ஓரம் என்பதால் கடல் ஏற்படுத்தும் சப்தம் என்றார்கள் ஏன்... மீன்கள் உண்டாக்கும் சப்தம் என்று கூட சொன்னார்கள். ஆனால் சரியாக அந்த ஒலி விளக்க பட வில்லை.. அது டர்ஹாம் ஹம் என்ற தலைப்பில் பல இடங்களில் செய்தி ஆனது. Uk நியூஸ் களில் the phyenomenon  மற்றும் the hum என்ற தலைப்பில் விவாதிக்க பட்டது. "நீங்கள் அந்த ஹம் ஒலியை கேட்டது உண்டா" என்று அந்த ஊரில் எடுத்த கணக்கெடுப்பில் 800 பேர் அதை கேட்டதாக சொன்னார்கள்.  பலர் அதை கேட்டு தலைவலி வந்ததாக பதிவு செய்தார்கள் அந்த ஒலி கேட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஒரே ஒரு இடத்தில பதிவு செய்ய பட்டது. இதை மையமாக வைத்து ஹாலிவூட்டில்" the hum" என்ற படம் 2015 இல் வெளியானது. விஞ்ஞானிகள் ஆய்வாளர்கள் மிகுந்த ஆராய்ச்சிக்கு பின் இந்த ஒலி பூமி ஏற்படுத்தும் ஒலி என்றார்கள் பூமிக்கு அடியில் உண்டாகும் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி கடல் வழியாக வெளியேறி மனிதன் உணரும் ஒலியாக கிடைக்கிறது என்கிறார்கள்.
ஆனாலும் எதனால் அது உண்டாகிறது என்பது கொஞ்சம் மர்மமாகவே உள்ளது.

இந்த ஹம் ஒலி மேலே சொன்ன ஊரில் மட்டும் நடந்த ஒன்று அல்ல.. இதே கதை உலகில் பல பகுதிகளில் நடந்துள்ளது... நியூ மெக்சிகோ வின் Tao's hum அதில் பிரபலமானது.

        ✴             ✴             ✴            ✴

இந்த பாகத்தில் அறிவியலால் தீர்க்கபட்ட மர்மங்கள் சிலதை பார்த்தோம். ஆனால் அடுத்ததாக பார்க்க இருப்பவை அறிவியலே தலையை பிய்த்து கொள்ளும் சில விளக்க முடியாத மர்மங்களை பற்றி.
அதை பற்றி அடுத்த பாகத்தில்.....

மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம்  9 : கற்பனைகெட்டா    
 கட்டிடங்கள்  )

உலகின் மிக பிரபலமான மர்மங்களான பிரமிட், நாஸ்கா கோடுகள், ஸ்டோன் ஹெட்ஜ்,ஏரியா 51, பயிர்வட்டங்கள், பெர்முடா முக்கோணம், போன்றவற்றை பற்றி நாம் ஏற்கனவே பல முறை பல இடங்களில் கேள்வி பட்டு இருக்கின்றோம். ஓரளவு அனைவரும் அவைகளை பற்றி தெரிந்து வைத்திருக்கின்றோம். அதனாலேயே அவைகளை பற்றி நான் இந்த கட்டுரை தொடரில் முடிந்தளவு எழுதாமல் தவிற்கிறேன்.
ஆச்சர்யத்தை..மர்மத்தை தேடி நாம் பிரமிடுக்கு தான் செல்ல வேண்டும் என்பது இல்லை... நமக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு கோவில் உலகில் யாராலும் விளக்க முடியாத மர்மங்களை கொண்டிருக்கலாம். அல்லது நாம் தினம் பார்க்கும் ஏதோ ஒரு கட்டிடம் அதிசயத்தை மர்மத்தை சுமந்து இருக்கலாம் . அப்படி ஒரு இரண்டு கோவில்களை பற்றி தான் இன்று பார்க்க போகின்றோம்.

உலகில் பிரமிட் ,ஸ்டோன்ஹென்ச் போன்று பல கட்டிடங்கள் எப்படி கட்ட பட்டன என்ற விளக்கம் நம்மிடம் இல்லை சில கோவில்களும் அந்த மாதிரி அசாத்திய கட்டிட வரிசையில் இருக்கின்றன. உதாரணமாக எல்லோரா குகை கோவில் கைலாயநாதர் ஆலயம்.
இந்த கோவில் வழக்கமான கட்டிட கலை நிபுணர்கள் மேஸ்திரிகள் வைத்து கட்ட பட்ட கோவில் அல்ல. ஒரு மலையை... பாறையை அப்படியே வெட்டி செதுக்கி எடுத்து முழு கோவிலாக வார்த்து எடுத்து இருக்கிறார்கள். (இக்கோவில் பற்றி ஏற்கனவே தனி கட்டுரை "எல்லோரா கைலாய நாதர் கோவில் ஒரு சாத்தியமற்ற கட்டிடம் "என்ற தலைப்பில் எழுதி இருக்கின்றேன் )

ஒரு சிக்கலான அமைப்பை அல்லது ஒரே ஒரு சிலையை ஒரே கல்லில் செதுக்கி இருந்தால் நாம் எவ்வளவு ஆச்சர்ய படுவோம். இவ்வளவு பெரிய ஒரு கட்டிட அமைப்பு..
சுற்றி பிரகாரம்...
 தூண்கள்....
சுவற்றில் நூற்று கணக்கான சிற்ப வேலைபாடுகள்...
ஒரு இணைப்பு பாலம் ...
அங்கங்கே பால்கனி அமைப்பு...
படிக்கட்டுகள் ....
பல நுணுக்கமான சிற்பங்கள்...
நடுவில் லிங்கம்....
அடியில் பல குகைகள்......
ஆங்காங்கே விலங்குகளின் சிற்பங்கள்
இதை எல்லாம் கொண்ட ஒரு மொத்த கோவிலை ஒரே பாறையில் மேலே இருந்து குடைந்து உருவாக்குவது என்பது எவ்வளவு ஆச்சர்யமான அசாத்தியமான விஷயம்?
ஆச்சர்யம் அதோடு முடியவில்லை.
கொஞ்சமும் சாத்தியம் அற்ற பல சாத்திய கூறை எல்லோராவின் கைலாஷ் நாத் கோவில் கொண்டிருப்பது தான் நமது புருவத்தை உயர்த்தி நம்மை இன்னும் ஆச்சர்யதில் ஆழ்த்துகிறது.

அதை செய்தவர்கள் மொத்தம் 18 வருடத்தில் இதை செய்திருக்கிறார்கள் அதுவும் அன்றைய தொழில் நுட்பத்தை கொண்டு.
கோவிலை ஆராய்ந்து பார்த்த ஆய்வாளர்கள் கருத்து படி இன்றைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதை செய்வது என்றால் கூட அப்படி பட்ட ஒரு கோவிலை முழுமையாக மலையில் வெட்டி உண்டாக்குவதற்கு கிட்ட தட்ட ஒரு நூற்றாண்டு ஆகும் என்கிறார்கள்.
இதை அக்கால மனிதன் 1000 வருடத்திற்கு முன் உளி ,சுத்தி வெட்டு கருவியை கொண்டு வெறும் 18 ஆண்டுகளில் சாதித்தது எப்படி?
ஆய்வாளர்களிடையே யூகமாக கூட பதில் இல்லை.

அந்த மொத்த மலையின் பரப்பு ... அதில் அந்த கோவிலின் பருமனை கழித்து விட்டு மீதி இடத்தை கணக்கிட்ட ஆய்வாளர்கள் அந்த கோவிலை செய்து முடிக்க மொத்தம் 4 லட்சம் டன் பாறையை வெட்டி அப்புற படுத்தி இருப்பதாக கணக்கிட்டு இருக்கிறார்கள்.
ஒரு கணக்கு படி மொத்த தொழிலாளர்களும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் இடையில் இடைவேளை இன்றி வெட்டி எடுத்தாலும் கணக்கு படி ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 60....65 டன் பாறைகளை தொடர்ந்து அப்புற படுத்தி இருக்க வேண்டும்.
இது அக்கால மனிதர்களுக்கு சாத்திய பட்டது எவ்வாறு??

அடுத்த ஆச்சர்யம் வெளியேற்ற பட்ட அந்த மொத்தம் 4லட்சம் டன் பாறைகள் எங்கே...?
சுற்று வட்டாரத்தில் அதை எங்கேயும் கொட்டி இருப்பதற்கோ அல்லது வேறு விதமாக வேறு கட்டிடம் கட்ட பயன்படுத்தி இருப்பதற்காகவோ எந்த அறிகுறியும் இல்லை..
அவ்வளவு பாறைகளை முற்றிலும் தடயம் தெரியாமல் மாயமாக்கியது  எப்படி?

ஒரு யூக அடிப்படையில் ஆய்வாளர்கள் இதற்கு விடை வைத்திருக்கிறார்கள்.
பஹ்மாஷ்திரம் என்ற ஒரு கருவியை பற்றி வேதத்தில் குறிப்பு இருப்பது அவர்கள் கவனத்தை ஈர்த்தது .
மலைகளை பாறைகளை ஆவியாக்கும் வலிமை அந்த அஷ்த்திரத்துக்கு இருப்பதாக வர்ணிக்க பட்டுள்ளது.
அப்படி ஏதாவது கருவி இருந்தால் அதை கொண்டு மட்டும் தான் இவ்வளவு பாறை களை ஆவி ஆக்கி இருக்க முடியும் என நம்புகிறார்கள் ஆய்வாளர்கள்.

அந்த கோவிலில் அடியில் உள்ள விடை தெரியாத பல மர்ம சுரங்கள் ஏன் எதற்கு வெட்ட பட்டன என்ற சந்தேகம் இன்னும் நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
ஆய்வாளர் சிலர் கருத்து படி இது வெற்றுகிரக வாசி களின் பதுங்கும் இடமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

மற்ற குகை கோவிலில் இருந்து மாறு பட்டு இது வானில் இருந்து பார்த்தால் தெரியும் படி வடிவமைக்க பட்டது...ஏன்?
அதில் ஒரு சிற்ப அமைப்பை மேலே இருந்து பார்த்தால் x குறியீடு தெரிவது இதெல்லாம் தற்செயலானதா அல்லது காரணக்காரியம் உடையதா அதை அவர்கள் அப்படி  செய்தது ஏன்? என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

மேலும் அந்த கட்டிடத்தை உற்று நோக்கிய சில ஆய்வாளர்கள் அதில் சில அமைப்பை (உதாரணம் அந்த இணைப்பு பாலம் அதற்கு கீழே உள்ள தூண் சிற்பங்கள் ) உற்று நோக்கும் போது அதை முதலில் மேலே இருந்து செதுக்கி பின் கீழே உள்ள வற்றை செதுக்கி இருக்க முடியாது .
இதை மொத்தமாக கீழ் இருந்து மேல் நோக்கி செதுக்கி கொண்டு போனால் தான் அது சாத்தியம் என்கிறார்கள்.
இந்த கட்டிட அமைப்பே கண்டிப்பாக மனித சக்தியால் படைக்க பட்டதாக இருக்க முடியாது என்று அடித்து சொல்லிகிறார்கள்.

என்ன தலை சுற்றுகிறதா ? அடுத்தது நான் சொல்ல போகும் கோவில் நமது தலையை தலைகீழாக சுற்ற செய்யும்.

        ✴         ✴           ✴           ✴

கர்நாடகாவில் உள்ள 12 ஆம் நூற்றாண்டில் கட்ட பட்ட(கிபி 1121 - 1160) தான் ஹாசலேஸ்வரா எனும் சிவன் கோவில்.
இந்த கோவில் சில நம்ப முடியாத கற்பனைக்கு எட்டாத கட்டிட அமைப்பை தனக்குள் வைத்துள்ளது.
முதலில் நம்மை ஆச்சர்ய படுத்தி வரவேற்பது அங்குள்ள அந்த விசித்திர கற்தூண்கள் . கீழே பெருத்தும் மேலே சிறுத்தும் காண படும் அந்த கற்தூண்கள் சாதாரண கல் தூண் போல கட்டமாக அல்லாமல் உருளை வடிவ தூண்கள் அவை. அவைகளின் மேற்பரப்பு நன்கு மெருகேற்ற பட்டு பளபளப்பை காட்டுகின்றன. அந்த மாதிரி ஒரு தீர்க்கமான உருளையாக கீழே பெருத்து மேலே சிறுத்து ஒரு தூனை உண்டாக வேண்டுமானால் லேத் பட்டறைகளில் வைத்து டர்னிங் செய்து தான் செய்ய முடியும் ஆனால் அதுவும் கூட 12 அடி கல் தூனில் இப்படி செய்ய இக்கால தொழில் நுட்பத்தில் கூட இடம் இல்லை.
ஆனால் மிக தெளிவாக அது டர்னிங் செய்து தான் உருவாக்க பட்டிருக்கிறது என்பதை அதன் மேல் காண படும் வளையங்கள் எடுத்து சொல்கின்றன.
அக்காலத்தில் அவர்கள் இதை செய்ய பயன்படுத்திய தொழில் நுட்பம் என்ன என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

தூணில் ஆச்சர்யம் வெறும் ஆரம்பம் தான் உள்ளே சென்றால் இன்னும் சில ஆச்சரியங்கள் காத்து இருக்கிறது.
மாசான பைரவா எனும் கடவுள் சிலை ஒன்று கையில் இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் கியர் அமைப்பு சாதனம் ஒன்றை வைத்திருப்பதை செதுக்கி இருக்கிறார்கள் ஆச்சர்யம் என்ன வென்றால் இக்காலத்தில் பயன்படுத்த படுவதை போலவே 2 : 1 என்ற விகிதத்தில் அந்த கியர் அமைப்பின் பற்கள் வெளியில் 32 உள்ளே 16 அமைந்து இருப்பது தான்.
இதில் இன்னொன்று கவனிக்க வேண்டிய விஷயம் மாசான பைரவ என்பதில் மாசான என்றால் அளபவர் அல்லது அளத்தலை குறிக்கும். அந்த மாசான பைரவா ஒரு இன்ஜினியர் போன்ற ஆசாமியா ??

உள்ளே 7 அடி சிலை ஒன்று இருக்கிறது அதன் தலையில் அணிந்துள்ள கிரீடத்தில் சில முக அமைப்புகள் செதுக்க பட்டுள்ளன அவைகளின் அளவு வெறும் ஒரு அங்குலம் மட்டுமே. அந்த முகங்களில் காது வழியாக ஒரு நூலை விட்டு அடுத்த காது வழியாகவோ அல்லது வாய் வழியாகவோ எடுக்க முடியும் . அதாவது உள் பக்கமாக அவைகள் செதுக்கி எடுக்க பட்டுள்ளன. வெறும் நூல் நுழையும் இடைவெளியில் உள் பக்கமாக செதுக்கி எடுத்தல் எப்படி சாத்தியம் ? அந்த கிரீடத்திற்கும் தலைக்கும் இடையில் ஒரு மெல்லிய இடைவெளி உள்ளது அதில் நூல் கூட செல்லுவது இல்லை. அவ்வளவு மெல்லிய இடைவெளி அது.
அங்குள்ள ஒரு பெண் சிலை கழுத்தில் அணிந்துள்ள நகைகளுக்கு இடையில் அதே போல நூல் நுழைய முடியாத அளவு இடைவெளி விட்டு செய்ய பட்டுள்ளது.
900 ஆண்டுகள் முன் செதுக்க பட்ட அங்குள்ள நந்தி நேற்று செய்தது போல பளபளப்பாக காட்சி தருகிறது.
இக்காலத்திலும் செய்ய முடியாத பொறியியல் நுட்பத்தை 900 ஆண்டுகள் முன் செய்தது எப்படி என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
(மேலும் தகவல் விரும்புபவர்கள் phenomental travel video என you tube இல் தேடி பாருங்கள் )

       ✴            ✴           ✴             ✴

அக்காலத்தில் ராட்சத மனிதர்கள் வாழ்ந்தார்களாமே உண்மையா ??
அது உண்மையோ என்னவோ தெரியாது .ஆனால் சில கட்டிட அமைப்புகள் அக்காலத்தில் ராட்சத மனிதர்கள் இருந்திருந்தால் மட்டுமே சாத்தியம். அப்படி பட்ட கட்டிடங்களை பற்றி அடுத்த பாகத்தில்....

மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம்  10  :   ராட்சதனின் கட்டிடங்கள்)

சில சின்ன வயது கதைகளில் அக்காலத்தில் ராட்சதர்கள் வாழ்ந்தாக சொல்வார்கள். ஆனால் நாம் ஆதார பூர்வமாக கண்டெடுத்த நிஜ ராட்சதர்கள் டைனோசர்கள் தானே தவிர மனிதர்கள் இல்லை.
ஆனால் சில மனிதனால் கட்ட பட்ட அமைப்புகள் பார்ப்பதற்கு ராட்சத உருவமைப்பு கொண்ட மனிதனால் கட்ட பட்டிருபது போல தெரிவது தான் ஏன் என்று புரியாத மர்மமாக உள்ளது. அது போன்ற சில உதாரணங்களை தான் இன்று பார்க்க போகின்றோம்.
முதலில் அமேசானின் அடர்ந்த காட்டில் ஆளரவமற்ற Ecuador எனும் இடத்தில காணப்படும் அந்த பிரமிட் போன்ற அமைப்பு....அங்கே போகலாம் வாங்க...

☯ Ecuador megalith :
தோராயமாக 80 மீட்டர் அடித்தளம் மற்றும் 80 மீட்டர் உயரம் கொண்ட அந்த அமைப்பு 2 டன் எடை கொண்ட பெரிய பெரிய கல்லை கொண்டு அடுக்கி செய்ய பட்ட அமைப்பு ஆகும். இப்படி பல நூறு கணக்கில் கற்கள் வெட்ட பட்டு அடுக்க பட்டுள்ளன.
அதற்க்கு மேலே ஏறி சென்றால் அங்கே காண படும் சமதள அமைப்பு மதகுருகள் சடங்குகளை செய்ய பயன்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். அது ஒரு பலி பீடமாக இருக்கலாம் எண்பவர்களும் உண்டு. அதில் மர்மத்தை கூட்டிய விஷயம் என்ன வென்றால் அங்கு கிடைத்த உளி சுத்தி போன்ற கருவிகள் தான் .காரணம் அது எதுவுமே சாதாரண மனிதன் பயன் படுத்தும் அளவில் இல்லை எல்லாமே ராட்சத வடிவில் இருந்தன. அப்போ அந்த நகரம் நிஜமாகவே ஒரு மறைந்த ராட்சதர்களின் நகரமா ? என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது. இது போதாது என்று பாறைகளில் தெளிவாக பதிந்து இருக்கும் ராட்சத வடிவ கால் தட படிமங்கள் கிடைத்து இன்னும் பயமுறுத்துகின்றன.
அமேசான் காட்டுக்குள் அந்த பகுதியில் வாழ்ந்த ராட்சதர்கள் வரலாற்று பக்கத்தில் இருந்து அழிக்க பட்டுள்ளார்கள் என்று கருதும் ஆட்கள் உண்டு.

        ✴            ✴             ✴             ✴

☯ Inka wall :
அடுத்தாக பார்க்க போவது மேலே பார்த்ததை விடவும் அட்டகாசமான ஒரு கட்டமைப்பு.
'பெரு'வில் உள்ள அந்த வி்சித்திர கல் சுவரை கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டியது இன்கா பேரரசின் ஆட்கள்.
அந்த கற்சுவர் சில பல டன் எடை கொண்ட தனி தனி கற்களால் கட்ட பட்டுள்ளது .வெறும் கல்லை அடுக்கி வைத்திருப்பதில் என்ன ஆச்சர்யம் என்று நினைத்தால் அப்படி அல்ல அந்த கற்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தும் படி ஏதோ பிரெட் துண்டை அடுக்கியது போல அவ்வளவு நேர்த்தியாக பிசிறு இல்லாமல் வெட்ட பட்டு ஆங்காங்கே zig zag வடிவில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு காகிதம் கூட நுழைய முடியாத அளவு கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் அவ்வளவு பெரிய கற்களை ஒன்றோடு ஒன்று அடுக்கி பொருத்தியது எப்படி என்று இன்று வரை தீராத மர்மமாகவே உள்ளது. (Inka wall என தேடி பாருங்க)
அந்த கற்கள் வடிவமைப்பு வான சாஸ்திரங்களை சந்திர பூமி சுழற்சிகளை குறிக்கும் வகையில் அமைந்து இருப்பதாகவும் ஒரு ஆய்வு சொல்கிறது.

      ✴             ✴              ✴               ✴

☯ Ural mountain megalith russya :  பிரமாண்ட கல் அமைப்புகள் உலகின் பல மூலைகளில் காண கிடைபத்தை பார்க்க முடிகிறது உதாரணமாக மேற்கு ரஷ்யயாவில் வடக்கு தெற்காக 2000 கிலோ மீட்டருக்கு பரவி இருக்கும் Ural mount பகுதியில் சில பிரமாண்ட கல் அமைப்புகள் உள்ளன. அதில் பிரமாண்ட பெரிய பெரிய கல்லை கொண்டு அமைக்க பட்ட குகை வழி அமைவுகள் உள்ளன ஆள் அரவமற்ற அந்த இடங்களில்  யாரால் எப்படி அவைகள் அமைக்க பட்டன என்பது மர்மமாகவே உள்ளது.

      ✴             ✴              ✴               ✴

☯ "Baalbek lebanon" இது ரோம் பேரரசின் பண்டைய கால மெகா கட்டமைப்புக்கு சான்றாக இருக்கிற ஒரு இடம் ஆகும். இங்குள்ள 2000 ஆண்டு பழமை வாய்ந்த ஜூபிடர் கோவில் மொத்தம் 3000 டன் எடை கொண்ட கற்களை கொண்டு வடிவமைக்க பட்டுள்ளது .(இதனுடன் ஒப்பிடும் போது ஸ்டோன் ஹென்ச் கல் தூணின் எடை 40 இல் ஒரு பங்கு தான் )
இந்த கற்கள் அருகே உள்ள limestone quarry, யிலிருந்து வெட்டி எடுக்க பட்டவை. அங்கே ஜெர்மன் ஆர்க்கையாலஜிஸ்டுகள் ஒரு வெட்ட பட்ட கல்லை கண்டெடுத்தார்கள். அந்த கல் மனித வரலாற்றில் மனிதனால் வெட்ட பட்ட கற்களில் மிக பெரியது என்கிறார்கள். அதன் ஒரே ஒரு கல் தூண் எடை 1650 டன். யார் இதை வெட்ட சொன்னார்கள் ஏன் வெட்டினார்கள் என்ற தகவல்கள் ஏதும் தெளிவாக இல்லை.

      ✴           ✴           ✴             ✴

☯ The Stone Spheres of Costa Rica :
இது costa rica வின் டெல்டா பகுதிகளில் 1930 களில் கண்டெடுக்க பட்ட மர்மமான கல் உருண்டைகள் ஆகும். இந்த கல் உருண்டைகள் கோலி குண்டுகளை போல மிக சிறப்பாக உருண்டையாக செதுக்க பட்டு கிட்ட தட்ட 300 கணக்கில் கிடைத்தன. அவை களின் அளவு சில செண்டி மீட்டர் சுற்றளவு தொடங்கி  2 மீட்டர் வரை கொண்டவை இவற்றில் சிலதின் எடை 16 டன். பெரும்பாலும் அனைத்து கற்களும் கிரானைடில் செதுக்க பட்டவை.
இவைகள் terraba ஆற்று படுக்கைகளில் இருந்து அடித்து வரப்பட்டு கிடைத்து இருக்கலாம் என்கிறார்கள் .
இன்று அந்த அழகிய மர்ம கல் உருண்டைகள் அங்குள்ள அரசு அலுவலகம் முன் ,மருத்துவ மனைகளில், பள்ளிகளில்,  அருங்காட்சியகங்களில் அலங்காரத்திற்காக வைக்க பட்டுள்ளன. அரைகுறையாக செதுக்க பட்ட உருண்டை ஏதும் அங்கே கிடைக்க வில்லை.

இந்த கற்களை அக்காலத்தில் வேலை மெனக்கெட்டு பண்டைய காலத்தினர் ஏன் செதுக்கினார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.

        ✴            ✴             ✴           ✴

உலகின் சில பிரமாண்ட கட்டமைப்புகளை ராட்சதர்கள் தான் கட்டி இருக்க வேண்டும் என்பதில்லை. ராட்சதர்கள் மேல் நம்பிக்கை கொண்ட மனிதர்கள் ராட்சதர்களை திருப்தி படுத்த கட்டிவையாக இருக்கலாம். அல்லது ஜூபிடர் போன்ற கடவுள் கோவில்களில் தங்கள் கடவுளின் பிரம்மாண்டத்தை கணக்கில் கொண்டு அவருக்கு பொருத்தமானதாக கருதி அந்த தேவைக்கு அதிக பிரம்மாண்டத்தை கட்டிடத்தில் உட்புகுத்தி இருக்கலாம்.
கிட்ட தட்ட இதே போன்ற ஒரு பிரமாண்டம் நம் ஊரில் உண்டு .
அது ...
"தஞ்சை பெரிய கோவில்."

நாம் பார்க்கும் எல்லா கோவில் கோபுரங்களும் அகல வாட்டத்தில் விரிந்து காணப்படுவதை பார்க்கலாம். ஆனால் தஞ்சை கோவில் பிரதான விமானம் பிரமிட் வடிவத்தை ஒத்த கூர் வடிவ கோபுர அமைப்பை கொண்டது. 'பெரு' கல் சுவரில் இன்கா இனத்தினர் பயன் படுத்திய கற்களின் inter lock தொழில் நுட்பத்தை ஒத்து தஞ்சை கோவில் கோபுரம் சுட்ட செங்களையோ அல்லது ஒட்டும் பசைக்கு கார வேலையோ துளியும் பயன் படுத்தாமல்
கற்கள் தங்களுக்குள் பொருந்தி கொள்ளும் இன்டர் லாக் சிஸ்டம் படி வடிவமைக்க பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் மேலே உள்ள கலச அமைப்பின் எடை மட்டும் 81 டன். அதாவது ஒரே நேரத்தில் கிட்ட தட்ட 13 நன்கு வளர்ந்த ஆப்ரிக்க யானைகள் ஒன்று சேர்ந்து ஏறி நிற்பதற்கு சமம். இந்த மொத்த கோபுரம் வேறு எந்த கோபுரமும் இல்லாத அளவில் 1 லட்சத்து 30 ஆயிரம் டன் எடை கொண்டது.

அந்த கோவிலின் தூண்கள் சாதாரண தூண்களை காட்டிலும் அதிக பிரமாண்டமாக ராட்சத தனமாக உள்ளது. வாயிலில் வரவேற்கும் துவாரபாலகரும் வழக்கத்தை விட அதிக பிரமாண்டமாக 12 அடி உயரம் கொண்டவராக மிரட்டுவதை பார்க்கலாம். திரை படங்களில் கதாநாயகனின் வலிமை எடுத்து சொல்ல சில buildup காட்சி அமைப்புகள் வைக்க படுவதை போல துவாரபாலகரின் பிரம்மாண்டத்தை நாம் கற்பனை செய்ய அதை செய்த சிற்பி ஒரு காரியம் செய்து உள்ளார். அதாவது ஒரு யானையை ஒரு பாம்பு விழுங்குவதை போன்ற ஒரு சிற்பம் செய்துள்ளார். அந்த பிரமாண்ட பாம்பு எங்கேயுள்ளது என்றால் துவாரபாலகர் கையில் வைத்திருக்கும் கதை ஆயுதத்ததில் ஒரு சிறு புழு போல காட்ட பட்டுள்ளது. (அதாவது யானையை பாம்பு விழுங்குகிறது என்றால் அது எவ்வளவு பிரமாண்டமானதாக இருக்கும் அந்த பாம்பு துவாரபாலகரின் முன் புழு போல இருக்கும் என்றால் அப்போ துவாரபாலகர் வடிவம் எவ்வளவு பிரமண்டமானது என்று நம்மை கற்பனை செய்ய வைக்க ஏற்பாடு )
உள்ளே இருக்கும் கர்ப்ப கிரக சுவரின் அகலம் எதோ அணு உலை சுவரை போல 13 அடி அகலத்தில் செய்ய பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக அந்த கோவிலின் நாயகனின் லிங்க வடிவம் வழக்கமான வடிவம் போல இல்லாமல் கிட்ட தட்ட 13 அடி உயரம் 5 அடி அகலம் கொண்டது.

இப்படி ஒவொரு அடியிலும் அசாத்திய பிரமாண்டம் காட்டும் தஞ்சை கோவில் சந்தேகம் இல்லாமல் உலக அதிசய கட்டிடங்களில் ஒன்று தான்.

        ✴            ✴           ✴            ✴

சில மர்மங்கள் நம்மை ஆச்சர்ய படுத்தி 'அட 'என ரசிக்க வைப்பவை...
சில மர்மங்கள் நம்மை அச்சுறுத்தி 'ஐயோ' என அலற வைப்பவை .அப்படி திகில் கிளப்பும் சில மர்மங்கள் பற்றி அடுத்ததாக பார்ப்போம்.

மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙

☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம் 11 : சில மர்ம நிகழ்வுகள்)

கடந்த பாகம் வரை நாம் உலகத்தின் பல விளக்க படாத மர்ம கட்டிடங்கள் ,மர்ம இடங்கள் ,ஏலியன் மர்மங்கள், ஆச்சர்யமான கோவில்கள் ,இப்படி பார்த்து வந்தோம் அவற்றில் கொஞ்சம் அறிவியல் சாயலும் இருந்தது . இனி வரும் பாகங்களில் அறிவியல் சாயல் இல்லாத விளக்க படாத மர்ம நிகழ்வுகள்  சிலவற்றை பார்க்க இருக்கின்றோம் எல்லாமே மிக வி்சித்திரமானவை.
அப்படி உலகில் ஆங்காங்கே நடந்திட்ட சில சின்ன சின்ன மர்ம சம்பவங்களை இப்போது பார்க்கலாம்.

( அடுத்து வரும் 4 பாகங்களில் நாம் 13 மர்ம சம்பவங்களை பற்றி வரிசையாக பார்க்க இருக்கின்றோம்.)

( 1 ) ☸"மரத்தில் ஒரு மர்ம பிணம் " ☸

🕸 April 18, 1943,  இங்கிலாந்தில் ஒரு 4 சிறுவர்கள் ஒரு காட்டு பகுதியில் வேட்டைக்கு சென்றிருந்தார்கள். அதில் ஒரு 15 வயது சிறுவன் wych elm எனப்படும் ஒரு வகை மரத்தை கண்டான். 'இதில் நிச்சயம் பறவை கூடுகள் கிடைக்கும் ' அதில் பரபரவென ஏறியவன் அங்கே உள்ள ஒரு பெரிய பொந்தில் கையை விட்டான். அங்கே ஏதோ ஒரு வித்தியாசமான ஒன்று கையில் தட்டு பட்டது. அதை வெளியில் எடுத்தவன் அதிர்ந்தான். அது ஒரு அழுகிய நிலையில் இருந்த பிணத்தின் எலும்பு கூடு.

அந்த எலும்பு கூடு ஒரு பெண்ணின் எலும்பு கூடு என்று புரிந்தது. அதன் மண்டையில் இன்னும் கொஞ்சம் தசை பகுதியும் அதில் தொங்கும் முடிகளும் காண பட்டன அந்த கருவாடாய் போன பிணத்தின் ஒரு கை காணவில்லை. அந்த மண்டை ஓட்டின் இரண்டு முன் பற்கள் உடைத்து எடுக்க பட்டிருந்தது.
சிறுவர்கள் அலறி கொண்டு ஓடி ஊர் மக்களை அழைத்து வந்து ஆராய்ந்த போது மரத்திற்கு பக்கத்தில் அந்த பெண்ணின் துணிகள் புதைத்து வைக்க பட்டிருந்தது தெரிந்தது . கூடவே அவளது காணாமல் போன கை.
நிபுணர்கள் இதை ஆராய்ந்து இந்த பென்னின் வயது 30 35 இருக்கலாம் என்றார்கள். அவளுக்கு இந்த கொடூரம் ஒரு 18 மாதம் முன் நடந்து இருக்கலாம் என்றார்கள். கொடூரத்தின் உச்சமாய் அவள் மர பொந்தில் கைகள் பிய்க்க பட்டு சொருக பட்ட போது  அவள் உயிரோடு இருந்ததாக சொன்னார்கள்.

எவ்வளவு துப்பறிந்தும் அந்த பெண் யார் என்ன என்று சிறு துப்பும் கிடைக்க வில்லை. அந்த ஊர் மக்கள் அந்த பெண்ணுக்கு பெல்லா என்ற கற்பனை பெயரை வைத்தார்கள். அந்த கேஸ் அந்த ஊரில் மிக பரபரப்பாக பேச பட்டது.
 “Who put Bella down the wych-elm?”
என்று அந்த ஊர் மக்கள் பார்க்கும் சுவரில் எல்லாம் எழுதி வைத்தார்கள்..
கடைசி வரை ... இன்று வரை...விடை தான் கிடைக்க வில்லை. தீர்க்க படாத மர்மமாகவே இருக்கிறாள் பெல்லா. (மேலும் அறிய Bella in wych elam என்று தேடி பாருங்கள் )

       ✴              ✴             ✴             ✴

( 2 )☸" பாலத்தில் ஒரு பயங்கரம்'' ☸

🕸 கிட்ட தட்ட மேலே பார்த்த மாதிரியான ஒரு சம்பவம் தான் அடுத்ததாக பார்க்க போவதும்.
February 8, 1981, இல் சான் பிரான்சிசுகோவில் உள்ள கோல்டன் கேட் தொங்கும் பாலத்தில் Leroy Carter
என்பவரின் சடலம் கண்டெடுக்க பட்டது. அது ஒரு "முண்டம் சடலம் ".அதாவது அந்த சடலத்தின் தலையை காண வில்லை. அதை விட விசித்திரம் ஒரு கோழியின் சடலமும் கூடவே கிடைந்ததது அந்த கோழிக்கும்  தலை வெட்ட பட்டு இருந்ததது. அந்த கோழியின் உடல் கார்டரின் வெட்ட பட்ட தலை இருக்க வேண்டிய இடத்தில சொருக பட்டிருந்ததது.
வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் இதை ஆராய ஒரு Sandi Gallant என்ற சிறப்பு அதிகாரியை நிர்ணயித்தார்கள் .
அவர் இதை ஆராய்ந்து பார்த்து அந்த காணாமல் போன தலை 42 நாள் கழித்து கிடைக்கும் என்றார். அவர் சொன்னது போலவே 42 கழித்து வெட்ட பட்ட தலையை அங்கே திருப்பி வைத்திருந்தான் கொலைகாரன்.
அனைவரும் ஆச்சர்யம் அடைய அந்த அதிகாரி அதற்க்கு விளக்கம் அளித்தார்
“Palo Mayombe”, என்ற ஒரு கொடூர சடங்கு இது சாத்தானை வழி படுபவர்களால் செய்ய படுவது என்றார். கொலை காண காரணம் அவர் யூகித்து இருந்தாலும் கொலையாளி கடைசி வரை மர்மமாகவே இருக்கிறான் .கடைசி வரை அவன் பிடிபட வில்லை.

       ✴              ✴             ✴            ✴

( 3 )☸ ''ஒரு முகமூடி மரணம்'' ☸

 🕸 1966 இல் பிரேசிலில் ஒரு நாள்...பட்டம் விட்டு கொண்டு விளையாடி கொண்டிருந்த சிறுவன் ஒருவன் எதிலோ தடுக்கி விழ பார்த்தான். அது என்ன வென்று பார்த்தால். அங்கே இரண்டு பேரின் பிணங்கள் கிடந்ததது. அவைகள் மிக விசித்திரமான பிணங்கள்.

அந்த இருபிணங்களும் டிப் டாப்பாக கோட் சூட் அணிந்து இருந்தன ஏதோ கூட்டத்திற்கு அல்லது விழாவிற்கு செல்பவர்களை போல. ஆனால் இருவருமே விசித்திரமாக கண்ணை மறைக்கும் lead mask அணிந்து இருந்தனர்.
போலீஸ் ஆராய்ந்த போது அவர்களுடன் நோட் ஒன்று கிடைந்ததது. அதை வைத்து ஆராய்ந்த போது குழப்பம் தான் கூடியது. அந்த நோட் குறிப்பில் இருந்து அவர்கள் நிச்சயம் தற்கொலைக்கு முயன்றவர்கள் அல்ல என்பது தெரிந்தது.  அவர்கள் உடலை ஆராய்ந்த ஆய்வாளர்கள் அவர்கள் உடலில் எந்த காயமோ போராட்ட அறிகுறியோ இல்லை என்றார்கள். அவர்கள் ஏதோ ஒரு நிகழ்வுக்கு காத்து இருந்ததாக மட்டும் கணிக்க முடிந்ததது. அது என்ன நிகழ்வு... எதுக்காக கோட் சூட் சகிதம் கிளம்பி இருந்தார்கள். கண்ணில் ஏன் அந்த கருப்பு பட்டை.. எப்படி இறந்தார்கள் போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்க வில்லை.
( மேலும் தகவலுக்கு lead mask case என்று தேடி பாருங்கள் )

            ✴           ✴           ✴           ✴

( 4 )☸ " மர்ம கப்பல் mery celeste " ☸

🕸 வரலாற்றில் மிக பிரபலமான ஒரு மர்ம கப்பல் தான்" mery celeste"
1872 டிசம்பரில் ஒரு நாள் நியூயார்கிலிருந்தது genoa நோக்கி அந்த சிறு கப்பல் கிளம்பியது...
கேப்டனுடன் மொத்தம் 8 பேர் அதில் கிளம்பி இருந்தார்கள். ஒரு தம்பதி ஒரு 2 வயது சிறு குழந்தை மற்றும் ஒரு பெண்.. அதில் அடக்கம்.
அந்த கப்பல் தனது இலக்கை வந்து சேர வேண்டிய நாளை கடந்து ஒரு வாரம் ஆகியும் வந்து சேரவில்லை..
சம்பந்தமில்லாமல் கடலில் ஒரு 400 கிலோமீட்டர் தள்ளி ஒரு இடத்தில ஒரு குழுவால் அந்த கப்பல் கண்டு பிடிக்க பட்டது. அதில் அருகே சென்று பார்த்தவர்கள் ஆச்சர்யம் அடைந்தார்கள்.

அந்த கப்பலில் இருந்தவர்கள் அப்படியே மாய மாகி இருந்தார்கள். அங்கே ஒருவரும் இல்லை... ஆளே இல்லாமல் பேய் கப்பல் போல அது தனியாக சுற்றி கொண்டிருந்தது.
சரி ஏதாவது நடந்து இருக்கும் என நினைத்தால் அந்த ஏதாவது என்ன என்பதில் தான் பெரும் குழப்பமும் அமானுஷ்யமும் இருந்தது. காரணம்
அது கொள்ளையர்கள் கைவரிசை என்று சொன்னால் அங்கே கப்பலில் எந்த பொருளும் கொள்ளை அடிக்க பட வில்லை. அங்கே இருந்தவர்கள் இயற்கை பேரழிவு எதாவதில் சிக்கி இறந்திருக்கலாம் என்றால் அந்த கப்பலில் எந்த சேதாரமும் காண பட வில்லை. உணவு இல்லாமல் இறந்து இருப்பார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை காரணம் அந்த கப்பலில் இன்னும் 40 நாளைக்கு தேவையான உணவு வைக்க பட்டு இருந்தது.
அது மட்டுமின்றி அப்படி ஒரு வேளை இறந்து இருந்தால் கூட பிணங்கள் அங்கே தானே இருக்க வேண்டும்.
இப்படி சுத்தமாக காற்றில் கரைந்த கற்பூரம் போல அவர்கள் மறைந்தது எப்படி அவர்களுக்கு நடந்தது என்ன என்பது இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது.
(மேலும் தகவலுக்கு mery celeste mystery என்று தேடி பாருங்கள் )

( 5 )☸ "திகில் கப்பல்" ☸

🕸 அடுத்து சொல்ல போகும் "duch ss ourang medan " எனும் கப்பலின் மர்மம் சம்பவம் இன்னும் திகிலானது.
 June 1947 ஆம் ஆண்டு ஒரு நாள். சுமத்ரா விற்கும் மலேசியாவிற்கும் இடையில் உள்ள பாதையில் பயணித்த சில கப்பல்கள் ஒரே நேரத்தில் SOS சிக்னல் ஒன்றை கிடைக்க பெற்றன (உயிர் ஆபத்து காலத்தில் கொடுக்க படும் சிக்னல் SOS.. அதாவது SAVE OUR SOLE ) அடையாளம் தெரியாத அந்த கப்பல் ஒன்றில் இருந்து அந்த சிக்னலை தொடர்ந்து மோர்ஸ் கோடில் வந்து சேர்ந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அந்த செய்தி இது தான்...
“All officers including captain are dead, lying in chartroom and bridge. Possibly whole crew dead.” (கேப்டன் உள்ளிட்ட அனைத்து ஆபிசர்களும் இறந்து விட்டார்கள் அநேகமாக பயணிகள் அனைவரும் கூட இறந்து விட்டார்கள் )
கடைசியாக அதை தொடர்ந்து வந்த செய்தி..." இப்போது நான் இறக்கிறேன்"
இந்த செய்தியை அமெரிக்க கப்பலும் அதே சமயம் பிரிட்டிஷ் கப்பலும் பதிவு செய்தன. இந்த செய்தியை அளித்த கப்பல்  SS Ourang Medan எனும் டச்சு கப்பல் என்பதை கண்டு பிடித்தனர். அமெரிக்க வியாபார கப்பல் சில்வர் ஸ்டார் தான் முதலில் அந்த ஸ்பாட் க்கு வந்து சேர்ந்தது. அங்கே சென்று கப்பலை பார்த்த மாலுமிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள்.

அங்கே காணும் இடங்கள் எல்லாமே டச்சு பயணிகளின் பிணங்கள் தான் கிடைத்தன. அவைகள் மர்மத்தையும் விசித்திரத்தையும் தாங்கி இருந்தன.
அவர்கள் அனைவரின் கண்களும் திறந்தே இருந்தன. அந்த பிணங்கள் அனைத்துமே கண்களை திறந்து வானத்தில் எதையோ அதிர்ச்சியாக பார்த்த படி இருந்தன. அவர்கள் அனைவருமே விசித்திரமாக கைகளை முன்னே கொண்டு வந்து எதையோ தடுப்பது போல அரண் அமைத்த கோணத்தில் இருந்தன.(போதும் போதும் என்று சைகையால் சொல்வது போல)
அங்கே சென்று பார்த்தவர்கள் நடந்தது என்ன என்று புரியாமல் திணறினார்கள்.. ஒரு கப்பலில் இத்தனை பேரை அடித்து கொன்ற அந்த மர்ம சக்தி எது என்று யாருக்குமே புரியவில்லை. ஏன் எல்லோருமே ஒரே மாதிரி முகத்தில் திகிலை காட்டிய படி இறந்து இருந்தார்கள் ?? அவர்கள் அப்படி கடைசியாக பார்த்த அந்த காட்சி தான் என்ன ??
அந்த கப்பலில் இருந்த நாயும் கூட இறந்து இருந்தது.
கடைசியாக தனக்கு"i die "  செய்தி அனுப்பிய அந்த மனிதன் இன்னும் ஆச்சர்யத்தை கொடுத்தான். அவன் கடைசியாக செய்தி அனுப்பி விட்டு தந்தி கருவியில் அவன் விரல்களை வைத்த படி இறந்து இருந்தான். அதாவது தந்தி அனுப்பி அடுத்த கணம் அவனை ஏதோ அடித்து கொன்றுள்ளது.

இந்த கப்பலை கரை சேர்க்க அமெரிக்க கப்பல் ஒரு கயிறை கட்டி முயன்ற போது . அதில் தீடீரென அமானுஷ்யமாக புகை கிளம்பியது. அமெரிக்க கப்பல் பயந்து கயிறை அறுத்து விட அந்த மர்ம கப்பல் திடீரென  வெடித்து சிதறி உடைந்து கடலில் கரைந்து தனது மர்மங்களுடன் சமாதியானது.

அன்று அவர்களுக்கு நடந்த கொடூரம் என்ன வென்று யாருக்கும் தெரிய வில்லை. மக்கள் அந்த கப்பலை the most deadliest gost ship in hystory என்று வர்ணித்தார்கள்.
(மேலும் தகவலுக்கு "duch ss ourang medan " என்று தேடி பாருங்கள்)

      ✴              ✴             ✴              ✴

வரலாற்றில் இப்படி பட்ட மர்ம சம்பவங்கள்  ஏராளமாய் கொட்டி கிடக்கின்றன அடுத்த வரும் சில பாகங்களுக்கு  இது போன்ற மர்ம நிகழ்வுகளின் தொகுப்புகள் சில வற்றை தொடர்ச்சியாக பார்க்கலாம்.


மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம்  :  12 : சில மர்ம  நிகழ்வுகள் (2 )

கடந்த பாகத்தின் தொடர்ச்சியாக மேலும் சில மர்ம நிகழ்வுகளின் தொகுப்புகளை பார்ப்போம்.

( 6 )☸ அந்த மர்ம வெடிப்பு ☸

🕸 Tunguska event :

1908 ஆம் ஆண்டு ஜூன் 30 தேதி .. சைபிரியாவின் ஒரு தொலைவான காட்டு பகுதி அது. அங்கே tunguska நதியின் அருகே இருந்த காட்டு பகுதியில் ஒரு மர்ம நிகழ்வு ஒன்று நடந்தது. 100 ஆண்டுகள்  கழிந்தும் இன்றும் அது tunguska event என்ற விளக்க முடியாத மர்ம நிகழ்வாக திகழ்கிறது.
அன்றைய தினம் அந்த காட்டு பகுதிக்கு மேலே இருந்த வானம் திடீரென வெடித்தது. ஒரு பெரிய நெருப்பு கோளமாக அது ஒரு மகா வெடிப்பாக வெடித்து சிதறியது. அந்த நெருப்பு கோளத்தின் அளவு கிட்ட தட்ட 300 அடிகள் அகலம் . அதன் சக்தி ஆச்சர்ய பட தக்க வகையில் ஹிரோஷிமாவில் போட பட்ட சக்திவாய்ந்த அணுகுண்டை போல கிட்ட தட்ட 380 மடங்கு அதிக சக்தி
கொண்டதாக இருந்தது. அது வெடித்த போது அங்கே இருந்து 35 கிலோ மீட்டர் தள்ளி இருந்த இடத்தில் வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. அந்த காட்டில் 2000 சதுர கிலோ மீட்டருக்கு சுத்தமாக பஸ்பமாக்கி இருந்தது அந்த மர்ம நெருப்பு பந்து . மேலும் அத்துடன் அந்த காட்டின் எட்டு கோடி மரங்களை பிரமாண்டமாக அது அழித்து இருந்தது.

இவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு வெடிப்பை நாம் வானத்தில் பார்த்தது மிக சொற்பமே... அந்தளவு ஒரு சக்தியோடு அன்று வெடித்தது என்ன என்பது தான் இன்று வரை புரியாத மர்மம். பலர் அது ஒரு வின் கல் ..பூமியில் மோதும் முன்பே வெடித்து விட்டது என்றார்கள். பலர் அது ஒரு ஏலியன் ஷிப் ஆக்சிடெண்ட் என்றார்கள். அந்த மோதல் அரிசோனா வில் உள்ள ஏரிகல் விழுந்த இடத்தில உண்டான பள்ளம் போல் ஏன் பள்ளத்தை உண்டாக்க வில்லை என்பது இன்னொரு புரியாத புதிர்.
20 ஆண்டுகள் கழித்து Leonid kuli என்பவர் தலைமையில் ஒரு ரஷ்ய குழு அங்கே ஆய்வு செய்த போது 20 ஆண்டுகள் கழித்து அங்கே மரங்கள் நொறுங்கி கிடந்ததை கண்டார்கள். அவைகள் விசித்திரமான ஒரு பெரிய பட்டாம் பூச்சி வடிவில் நொறுங்கி சிதைக்க பட்டிருபதை கண்டார்கள்.
இது பூமி சாராத ஏதோ ஒன்றால் தான் நடந்துள்ளது என்று கருத்தை சொன்னார்கள்.
சிலர் அதை மேட்டர் ஆண்டி மேட்டர் களின் இணைவு என்றார்கள் (இயற்கையில் மேட்டருக்கு எதிரான ஒரு அதே போல பொருள் தான் ஆண்டி மேட்டர். இரண்டும் ஒன்று சேர்ந்து விட்டால் அளப்பரிய சத்தியுடன் ஒன்றை ஒன்று அழிக்க கூடியவை. ஆரம்ப கால பிரபஞ்சத்தில் ஒவ்வொரு ஆண்ட்டி மேட்டருடன் மேட்டர் மோதி அழிந்து மிஞ்சி இருபது தான் இன்றைய நாம் காணும் பிரபஞ்சம். மேல் சொன்ன அளவு வெடிப்பு சம்பவம் நடக்க ஒரு கோலி குண்டு அளவு மேட்டர் ஆண்ட்டி மேட்டர் மோதினால் போதுமானது)
அன்று என்ன பொருள் வெடித்தது என கருத்துக்கள் பல இருந்தாலும் tanguska சம்பவம் ஒரு விளக்க முடியாத மர்ம சம்பவமாகவே இருக்கிறது.

        ✴           ✴           ✴              ✴

( 7 )☸ லிப்ட் பயங்கரம் ☸

🕸 Elisa lam இவள் உலகத்தின் மிக மர்மமான சம்பவங்களில் ஒன்றாக கருத படும் சம்பவத்திற்கு சொந்தமான பெண். அப்படி என்ன மர்ம நிகழ்வு அவளுக்கு நிகழ்ந்தது ??

எலிசா லேம் ஒரு 21 வயது கல்லூரி மாணவி. லாஸ் ஏஞ்சல்சிலிருந்து வெண்கொவர் செல்லும் ஒரு தனிமை பயணி அவள். cecil hotel இல் தங்கி இருந்த போது தான் மர்மமாக அவள் காணாமல் போனால்.
சில நாள் கழித்து அந்த ஹோட்டலின் மற்ற விருந்தினர்கள் ஒரு புகார் கொடுத்தனர் அதாவது ஹோட்டல் ரூமில் முன்பு போல தண்ணீர் வேகமாக வருவது இல்லை குழாயில் ஏதோ அடைப்பு உள்ளது. மேலும் தண்ணீரின் சுவை மற்றும் வாசனையும் வித்தியாசமாக உள்ளது . அதை தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை சோதித்தது பார்த்த போது தான் "அது" கிடைத்தது .
காணாமல் போன எலிசா வின் பிணம். அதுவும் உடலில் துணி ஏதும் இல்லாமல் தண்ணீர் தொட்டியில் மிதந்த படி.
விசித்திரமாக அவளது துணி ஷூ மற்றும் வாட்ச் அதே தொட்டியில் தனியாக வைக்க பட்டு கிடந்து மிதந்தது.

இந்த கேஸில் ஒரு பெரிய விச்சித்திரம் இருந்தது அது நாடு முழுவதும் எலிஸாவை பற்றி பேச வைத்தது. அது ஒரு மர்ம வீடியோ. தேடும் பணியில் ஹோட்டல் cc டிவியில் இருந்து போலீஸ் க்கு கிடைத்த விடீயோ.
அந்த வீடியோ வில் எலிசா லேம் லிப்ட் இல் ஏறுவது தெரிந்தது. அங்கே அவள் செய்தது மிக விசித்திரமான காரியம். முதலில் லிப்ட் இல் சாதாரணமாக தான் ஏறுகிறாள். பிறகு தேவை இல்லாமல் அணைத்து புளோர் பட்டனையும் அழுத்துகிறாள். அந்த லிப்ட் இன் கதவுகள் சாத்தவே இல்லை..  அப்படியே திறந்தே இருக்கின்றன. பிறகு மெல்ல யாருக்கோ பயந்து எட்டி பார்க்கிறாள். பிறகு மிகுந்த அச்சத்துடன் லிப்ட் உள்ளே ஒரு ஓரமாக கோழி குஞ்சு போல பயந்த படி நடுங்குகிறாள். ஒளிகிறாள். லிப்ட் கதவு அப்போதும் மூடவே இல்லை. பிறகு மெல்ல தயக்கத்துடன் யாரையோ எதிர் பார்ப்பது போல மெல்ல எட்டி பார்க்கிறாள். பிறகு மெல்ல மெல்ல லிப்டை விட்டு வெளியேறி நிற்கிறாள். இங்கே இவள் செய்தது தான் இன்னும் விசித்திரம் அங்கே காற்றில் கைகளை வித விதமாக ஆட்டி சைகை காட்டி யாரிடமோ பேசுகிறாள். ஆனால் கேமராவில் அங்கே அவள் எதிரில் யாருமே இல்லை. கண்ணுக்கு தெரியாத யாருடனோ காற்றில் அவள் பேசி கொண்டிருக்கிறாள்.
லிப்ட் கதவுகள் இப்போது மர்மமாக மூடுகின்றன.(இந்த வீடியோ இணையத்தில் உள்ளது elisa lame lift video என்று தேடி பாருங்கள் )

இந்த விசித்திர சம்பவத்திற்கு பிறகு தான் எலிசா தண்ணீர் தொட்டியில் நிர்வாண பிணமாக கண்டெடுக்க பட்டாள். போதாதென்று அங்கே வேறு சில மர்மங்களை விட்டு சென்றிருந்தாள் . அதாவது அது கொலையாகவோ தற்கொலையாகவோ  இருந்தால் உடைகள் கழட்ட பட்டு இருப்பது ஏன். ? லிப்ட் இல் அவள் நடவடிக்கை பார்த்தவர்கள் அவள் ஏதோ போதை பொருள் எடுத்திருக்கலாம் என்றார்கள் மூளை குழம்பி போய் தண்ணீர் தொட்டியில் குளிக்க இறங்கி இருக்கலாம் என்றார்கள். ஆனால் தொட்டியின் மூடி வெளி பக்கமாக மூட பட்டு இருந்தது. மேலும் அந்த தொட்டி 10 அடி உயரத்தில் இருந்தது. அங்கே ஊழியர்களே ஏணி போட்டு தான் ஏறினார்கள். அவர்கள் வரும் முன் அங்கே ஏறியதற்கான எந்த வாய்ப்பும் தடயமும் இல்லை.
மேலும் அங்கே சென்றடைய ஊழியர்கள் செக்யுரிட்டி லாக்கை பயன் படுத்தினால் தான் முடியும்.
அவளை அங்கே மர்மமாக கொன்று போட்டது யார் ?அல்லது எது ?
அவள் நிச்சயமாக தீய சக்தியால் ஆட்கொள்ள பட்டாள் என்று பலர் நம்புகின்றனர். பலர் அவளுக்கு போதையால் ஏற்பட்ட மாய தோற்றம் ..ஹாலுசினேஷன் தான் காரணம் என்றார்கள் ஆனால் இன்று வரை அவள் மரணத்தின் சரியான காரணத்தை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த சம்பவம் சார்ந்த மேலும் இரண்டு கொசுறு தகவல்...சொல்கிறேன்.

1. Richard Ramirez — aka the Nightstalker — எனும் தொடர் கொலையாளி 1984 இல் வசித்த இடம் இந்த ஹோட்டல் தான். (அவன் ஆவி தான் காரணமா ????)
2. எலிசா லேம் ஒரு போதை அடிமை என்று பலர் சந்தேகிக்கும் நிலையில் அங்கே பக்கத்து அக்கது ஏரியாவில் ஒரு போதை பொருள் பயன் பாட்டில் இருந்தது கண்டு பிடிக்க பட்டது. ஆச்சர்யம் என்னன்னா அந்த போதை பொருளின் பெயர்' எலிசா லேம் .'.. என்ன ஒரு co insident.

       ✴           ✴           ✴           ✴

விச்சித்திர சம்பவங்கள் இன்னும் நிறைய நிறைய இருக்கின்றன அதில் இன்னும் சில சம்பவ தொகுப்பை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம்  :  13 : சில மர்ம நிகழ்வுகள்( 3 )

கடந்த பாகத்தின் தொடர்ச்சியாக மேலும் சில மர்ம நிகழ்வுகளை பார்ப்போம்.

( 8 )☸ பெல்மிஷின் மர்ம முகங்கள் ☸

🕸 மேகங்களை வேடிக்கை பார்க்கும் போது அதில் பல வடிவங்கள் யானை பூனை குதிரை போல  நமக்கு தெரியும் அல்லவா.. அப்படி வீட்டு சுவர்களில் தரைகளில் மனித முகங்கள் தெரிந்த ஒரு நிகழ்வு தான் "belmez faces " ஆனால் நாம் நினைபது போல அவை சாதாரண கற்பனை மேக வடிவம் போன்றது அல்ல. மிகவும் மர்மம் நிறைந்த நிகழ்வு அது.

1971 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 இல் maria gomez என்பவர் தனது கிச்சன் தரையில் மனித முகம் தெரிவதை போல இருக்கிறது என்று தன் கணவர்
ஜூயான் பெரேராவிடம் சொன்னார். அதை தொடர்ந்து அவள் கணவன் மற்றும் அவரது மகன் migual இருவரும் சேர்ந்து அந்த முகத்தை தட்டிவிட்டு புது சிமெண்ட் போட்டு ஒழுங்கு செய்தார்கள். ஆனால் ஆச்சர்யமாக மீண்டும் அங்கே முகம் தோன்றியது. அவைகள் மேகத்தில் நாம் செய்யும் கற்பனை வடிவங்கள் போல அல்லாமல் மிக தெளிவாக மனித முகங்களை காட்டி கொண்டிருந்தது அதுவும் முக பாவனைகளுடன் .
பெல்மேஷின் மேயரே அந்த சிமெண்ட் முகத்தை உடைத்து ஆய்வுக்கு கொண்டு வாருங்கள் என்று உத்தரவு போட்டார். அந்த வீட்டில் மர்ம முகங்கள் தெரிவது தொடர்ந்தன. முகத்தில் முக பாவனைகள் தெளிவாக காட்டின. அழிக்க அழிக்க அவைகள் மீண்டும் மீண்டும் தோன்ற தொடங்கின. ஆன் முகம் பெண் முகம் என்று சரியாக அடையாளம் தெரிந்தன. வித விதமாக அவைகள் காட்சி தந்தன.

கால போக்கில் அந்த வீட்டில் மர்ம முகத்தை பார்க்க கூட்டம் கூட தொடங்கியது அந்த வீடே டூரிஸ்ட் ஸ்பாட் போல மாறி போனது .1972 ஈஸ்டர் அன்று நூற்று கணக்கான மக்கள் அங்கே படை எடுத்தார்கள் அந்த முகங்களை பார்க்க.
அடுத்தது வித விதமான வடிவங்களில் முகங்கள் தெரிவது தொடர்ந்து கொண்டே இருந்தது என்று பெரேரா குடும்பம் விளக்கம் அளித்தது.
இந்த மர்ம நிகழ்வு பற்றி  பேராசைகாலிஜிஸ்டுகள்.....
"without doubt the most important paranormal phenomenon in the 20th century".என்ற கருத்தை சொன்னார்கள்.

அந்த இடத்தை ஆய்வு செய்தவர்கள் இதற்க்கு முன் அங்கே என்ன இருந்தது என்று ஆராய்ந்தார்கள். கிடைத்த பதில் அர்த்தமுள்ளதாக இருந்தது. அங்கே இதற்க்கு முன் சுடுகாடு இருந்தது.
அங்கே தோண்டி பார்த்தவர்கள் சில சரியாக புதைக்க படாத எழும்புக்கூடுகளை கண்டார்கள். அவைகளை சரியாக புதைத்து மீண்டும் சிமெண்ட் போட்டார்கள் .இதான் பிரச்னை இனி முகங்கள் வராது என்றார்கள் ஆனால் ஒரு வாரம் கழித்து ஒரு பெண் முகமும் அதை சுற்றி ஒரு 10 சின்ன சின்ன முகங்களும் தோன்றி மீண்டும் மர்மத்தை கிளப்பியது. அங்கே தரைத்தளம் பல முறை தோண்ட பட்டு புதுப்பிக்க பட்டது ஆனால் முகங்கள் தோன்றுவது மட்டும் நிற்கவே இல்லை.
டிடெர்ஜென்டை வைத்து அந்த முகங்களை கழுவி பார்த்தார்கள் அவைகள் கண்களை அகல திறப்பது முகபாவங்களை மாற்றுவது என்று தொடர்ந்தனர் ஆனால் மறைய வில்லை. 1972 வரை தொடர்ந்து தோன்றி கொண்டே இருந்தன. இன்று வரை அந்த மர்ம முகங்கள் தோன்றிய காரணம் யாருக்கும் கிடைக்க வில்லை.

        ✴            ✴          ✴              ✴

அடுத்து பார்க்க இருப்பதும் ஒரு மர்ம முகம் பற்றிய தகவல் தான்...

( 9 )☸ கணவில் வரும் மர்ம மனிதன் ☸

🕸 ஜனவரி 2006 இல் ஒரு நாள் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் தனது பேஷண்டை கவனித்து கொண்டிருந்தார். அவருக்கு கணவில் ஒரு ஆள் அடிக்கடி தோன்றி கொண்டே இருக்கிறானாம் அதான் கேஸ். இதை கேட்ட டாக்டர் ஒரு மெல்லிய ஆச்சர்யத்துக்கு சென்றிருந்தார். காரணம் கொஞ்சம் நேரத்திற்கு முன் இவர் கவனித்த இன்னோரு வழக்கும் இதே பிரச்னைதான் 'கனவில் யாரோ ஒருவன் தொடர்ந்து வருகிறான் டாக்டர்'
"அவன் எப்படி இருப்பான் ''?
கேட்ட டாக்டரை பார்த்தார் பேஷண்ட் தனக்கு தெரிந்த வரை வர்ணித்து கொண்டே வந்த நோயாளி திடீரென நிறுத்தி "அட இவன் தான் அது " என்று மேஜையை காட்டினார். "அவன் போட்டோவை எப்படி கரெக்ட்டா முன்னாடியே வரைஞ்சி வச்சிருக்கிங்க" அதிர்ச்சியுடன் கேட்டார் அந்த நோயாளி.
இப்போ அதிர்ச்சி அடைந்தது டாக்டர்.
காரணம் இதற்க்கு முன் வந்த பேஷண்ட் தனது கணவில் வருபவனை வரைந்து காட்டுவதாக கூறி வரைந்த சித்திரம் தான் அது.
'அதெப்படி இருவர் கனவில் ஒரே ஆள் வர முடியும். '
அந்த இருவருமே இந்த மூஞ்சியை தங்களது நிஜ வாழ்வில் பார்த்ததே கிடையாது என்று தெரிவித்தார்கள்.

அதன் பின் டாக்டர் ஒரு காரியம் செய்தார் தனது சக தோழர் டாக்டர்களுக்கு இந்த படத்தை அனுப்பி வைத்து. இப்படி பட்ட கேஸ் ஏதும் வந்துள்ளதா என்று கேட்டு பார்த்தார்.
ஒரு வாரத்தில் 4 பேர் அந்த முகத்தை பார்த்ததாக சொன்னார்கள்.
அவர்கள் அவனை this man எண்று அடிக்கடி குறியிடுவதால் திஸ்மேன் என்ற பெயரிலேயே பிரபலம் ஆனான் அந்த நிஜ உலகத்திற்கு வராத திஸ் மேன்.
அதன் பின் அந்த டாக்டர் ஒரு இணையதளத்தை தொடங்கி உலகம் பூரா அந்த முகத்தை பற்றி கேட்டு பார்த்தார். ஆச்சர்யமாக இன்று வரை உலகில் பல மூலைகளில் இருந்து அவனை கனவில் கண்டதாக 2000 கும் மேற்பட்ட ஆட்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். பல பேரின் கனவில் மட்டுமே வரும் அந்த மர்ம மனிதனை பற்றி www.thisman.Org என்பதில் தேடி பாருங்கள். கூடவே அந்த ஆணழகன் உங்கள் கனவில் வந்திருக்கிறானா என்றும் சொல்லுங்கள்.

           ✴          ✴           ✴           ✴

இப்பொது நான் சொல்ல போகும் சம்பவம் கேட்பதற்கு ஹாலிவூட் பட காட்சிகள் போல இருக்கலாம். ஆனால் அது ஒரு குடும்பம் பதிவு செய்துள்ள மர்ம அனுபவம்.

(10)☸ கருப்புகண் மர்ம குழந்தைகள் ☸

🕸 ஒரு நாள் காற்றும் மழையும் கலந்த ஒரு இரவு மணி 2 வெளியில் யாரோ அவசரமாக கதவை தட்டுவதை உணர்ந்த அந்த பெண்மணி எட்டி பார்த்த போது இரண்டு 8 வயது மதிக்க தக்க சிறுவர்கள் நிற்க கண்டார். குளிரில் நடுங்கும் அவர்களுக்கு உதவ கதவை திறந்தார். அந்த குழந்தைகள் ஒரு ஆண் ஒரு பெண் என கண்டார்.
என்ன பிரச்னை என்று விசாரித்த போது அவர்கள் "தங்கள் பெற்றோர் விரைவில் இங்கே வருவார்கள்" என்று மட்டும் சொன்னார்கள். அப்போது அந்த பெண்மணி கவனித்த இரண்டு விஷ்யங்கள் ஒன்று அந்த குழந்தைகளின் குரல்.. அது ஏதோ ஒரு மிஷின் தனமான சங்கீதம் ஒலிப்பது போன்ற ஒரு செயற்கைத்தனமான குரல்.  இரண்டாவதாக அவர்கள் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்து கொண்டே பதில் சொன்ன விதம். கொஞ்சம் ஆச்சர்யத்துடன் குழபத்துடன் அந்த பெண்மணி அவர்களுக்கு குடிக்க ஏதோ கொண்டு வர சென்றார்.

 அவர் கொண்டு வந்த போது அவரது கணவர் மெலிதான தலை சுத்தலை உணர்வதாக சொன்னார். அந்த ஜுசை நீட்டிய போது நிமிர்ந்து பார்த்த குழந்தைகள் முகத்தை பார்த்த அந்த பெண்மணி அதிர்ச்சி அடைந்தாள். அவர்களது கண்கள் மிக அமானுஷ்யமாக இருந்தது அதில் வெள்ளை நிறம் துளி கூட இல்லை. முழுக்க முழுக்க அட்டை கருப்பாக அவர்களது கண்கள் இருந்தன . இது வரை அப்படி பட்ட கண்களை அவள் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.

அந்த சிறுவர்கள் பாத்ரூம் உபயோகிக்க அனுமதி கேட்டார்கள். சரி என்றதும் பாத்ரூம் நோக்கி சென்று மறைந்தார்கள்.
சரியாக அப்போது அந்த கணவரின்  மூக்கில் ரத்தம் வெடித்து சிதறி ஊற்றியது அதிர்ச்சியில் அந்த பெண்மணி துடைக்க நாப்கின் கொண்டு வந்த போது திடீரென கரெண்ட் கட் ஆகி வீடு இருட்டில் ஆழ்ந்தது. அந்த இருட்டில் மின்னல் வெளிச்சத்தில் அந்த இரு குழந்தைகள் வாசல் ஓரத்தில் நின்று இவர்களை பார்ப்பது தெரிந்தது.
திகிலின் உச்சத்தில் இருந்த அவர்களை நோக்கி தங்கள் பெற்றோர்கள் வந்து விட்டார்கள் என்று கூறி விட்டு மழை யில் இறங்கி சென்றார்கள் அந்த மர்ம குழந்தைகள்.

இது நடந்து சில நாளில் அந்த கணவனுக்கு மூக்கில் கேன்சர் வந்தது அதை ஆராய்ந்த டாக்டர் அதிக கதிர்வீச்சு பாய்ந்து இது ஏற்படதாக  சொன்னார்.

இந்த சம்பவம் ஒரு திகில் கதை எழுத்தாளரின் அழகிய கற்பனையாக இருக்கலாம் ஆனால் இதில் ஒரு விசித்திரம் இருந்தது. அதாவது இந்த கருப்பு கண் மர்ம குழந்தைகளை பார்த்ததாக சொன்ன ஒரே குடும்பம் அல்ல இவர்கள்.

பல மூலையில் பல பேர் இப்படி பட்ட கருப்பு கண்கள் கொண்ட குழந்தைகளை கண்டதாக பதிவு செய்திருக்கிறார்கள்.  அவர்கள் வெளிறிய முகம் விச்சித்திர குரல் கொண்டவர்கள் என்று வர்ணித்தார்கள். பதிவு செய்த அனுபவங்களில் பெரும்பாலும் காரில் லிப்ட் கேட்டதாக சொல்ல பட்ட கதைகள் தான் அதிகம்.

எல்லோருடைய அனுபவமும் கிட்ட தட்ட ஒரே மாதிரி இருந்தது. அதாவது அந்த குழந்தை கார் கதவை திறக்க சொன்னால் அது மனோவசிய கட்டளை போல தன்னை அறியாமல் தனக்கு செய்ய தோன்றியது என்றார்கள். அவர்கள் கண்களை உற்று பார்த்தால் மனோவசியத்திற்கு ஆளாக நேருகிறது தலை சுற்றுகிறது என்றார்கள். அணைத்து கதைகளிலும் அந்த குழந்தைகள் காரில் பாதி வழியில் மறைந்து போனார்கள்.

இதை தவிர அடுத்த படியாக வீட்டு கதவை தட்டி பாத்ரூம் ஐ உபயோகிக்க அனுமதி கேட்ட கதைகள் தான் ஏராளம்.
1996 வாக்கில் இது மிக பிரபலமாக பேச பட்ட மர்ம சம்பவம் ஆகும்."the black eyed child " என்பதை வைத்து பல டிவி சீரியல்களும் வலம் வந்தன. இந்த சம்பவத்தை வைத்து "black eye children என்ற தலைப்பில் -let me in " என்ற சப் டைட்டில் தலைப்பு போட்டு 2015 இல் ஒரு திகில் திரைபடம் கூட ஹாலிவூட்டில் வெளியானது.
எதற்க்கும் அடுத்த முறை குழந்தைகள் யாரவது லிப்ட் கேட்டால் அல்லது இரவில் கதவை தட்டினால் அவர்கள் கண்கள் என்ன நிறத்தில் உள்ளது என்பதை பார்த்து கொள்ளுங்கள்.

          ✴           ✴          ✴            ✴

அடுத்த பாகத்தின் மர்ம சம்பவங்களையும்  ஒரு  மர்ம குழந்தைகள் சம்பவத்தில் இருந்தே தொடங்குகிறேன்.

மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம்  :  14 : சில மர்ம நிகழ்வுகள் (4 )

கடந்த பாகத்தில் கருப்பு கண்கள் கொண்ட மர்ம குழந்தை பற்றி பார்த்தோம் இம்முறையும் ஒரு மர்ம குழந்தைகள் பற்றி தான் பார்க்க போகின்றோம். ஆனால் இந்த குழந்தைகள் கடந்த பாக குழந்தைகள் போல ஆபதானவைகள் அல்ல ஆனால் மர்மமானவைகள்.

(11 )☸ பச்சை நிற மர்ம குழந்தைகள் ☸

🕸 " Green children of voolpit " என்ற பெயரில் பிரபலமான இந்த குழந்தைகள்.. வூல்பிட் கிராமத்தில் அனாதையாக கண்டெடுக்க பட்ட குழந்தைகள் .
பயிர் அறுவடை செய்து கொண்டிருக்கும் நில பகுதியில் இந்த அண்ணன் தங்கைகளை கிராம வாசிகள் கண்டுபிடித்தார்கள் அவர்கள் உடல் பச்சை நிறத்தில் வித்தியாசமாக இருந்தது. அவர்கள் பேசிய போது இது வரை கேட்காத விச்சித்திர பாஷையாக அது இருந்தது. பிறகு இருவரையும் கொண்டு சென்று கிராம வாசிகள் வளர்த்த போது நீண்ட நாட்களுக்கு அவர்கள் எதையும் உன்ன வில்லை. கஷ்ட பட்டு அவர்களுக்கு பீன்ஸ் உன்ன கொடுக்க பட்டது. அதில் அந்த பையன் உடல் நிலை பாதிக்க பட்டான். விரைவில் இறந்து போனான். அந்த பெண் உடல் மிகவும் பலவீனமாக காண பட்டாலும் கால போக்கில் உடல் தேறியது மட்டும் இல்லாமல் படி படியாக ஆங்கிலம் பேசவும் கற்று கொண்டாள். மேலும் அவள் உடல் நிறமும் படி படியாக மறைந்து சாதாரண நிறத்திற்கு திரும்பியது.

வூல்பிட் கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு சிலர் இணை பிரபஞ்சத்தை விளக்கமாக சொல்கிறார்கள். இந்நூற்றாண்டின் பெரிய விஞ்ஞானிகள் பலரும் நம்பும் இன்னோரு பரிமாண உலகம் இணை பிரபஞ்சம் கருதோட்டதின் படி இவர்கள் தற்செயலாக வேற டைமன்ஷனில் இருந்து தற்செயலாக வார்ம் ஹோல் போன்ற போர்டல் வாயிலாக வழி தப்பி வந்தவர்களாக இருக்கலாம் என்கிறார்கள்.
அந்த குழந்தைகள் தங்கள் நினைவுகளை திரட்டி தங்களை பற்றி சொன்ன கதைகள் இந்த கருத்துக்கு வலுவூட்டுவதாக இருந்தது.

தனது அப்பாவுடன் இருண்ட குகை வாயிலாக நடந்து வந்த போது தாங்கள் சூரிய ஒளி கண்டு அங்கே வந்ததாகவும் அங்கே தான் வயலில் கண்டெடுக்க பட்டதாகவும் சொன்னார்கள்.
மேலும் அவர்கள் இருந்த ஊரை அவர்கள் வர்ணித்ததும் இருந்தார்கள் அங்கே சூரியன் மறைவது இல்லை அங்கே எப்போதும் மாலை நேரம் தான் என்றார்கள். அங்கே உயிர்கள் எல்லாமே பச்சை நிறத்தில் இருந்ததாக சொன்னார்கள்.

12 ஆம் நூற்றாண்டில் வூல்பிட் கிராமத்தில் நடந்ததாக சொல்ல படும் இந்த கதையில் அந்த பெண் கடைசியாக அங்கேயே ஒருவனை திருமனம் செய்து கொண்டு வாழ்ந்ததாக சொல்லபடுகிறது.

      ✴           ✴             ✴             ✴

( 12 )☸ மரன நாட்டியம் ☸

🕸 இது என்னை அதிக நேரம் சிந்திக்க வைத்து அமானுஷ்யதில் ஆழ்த்திய பல சம்பவங்களில் ஒன்று...
1518 ஆம் ஆண்டு  பிரான்சின் strasburg எனும் ஊரில் frau troffea எனும் பெண்மணி அந்த நகர வீதிகளில் மெதுவாக நடனம் ஆட தொடங்கினாள். மெதுவாக அசைவுகளை போட்டு ஆட தொடங்கிய அவள் தொடர்ந்து நாள் முழுதும் ஆடி கொண்டே இருந்தாள். பிறகு இரவும் தூங்காமல் ஆடினாள் அப்புறம் அடுத்த நாளும் கூட அடுத்த இரவும் கூட மெதுவாக ஆடி கொண்டே இருந்தாள்.
இப்படி 6 நாள் ஆகியும் அமானுஷ்யமாக அவள் ஆடி கொண்டே இருந்தாள். ஏதோ ஒரு போதைக்கு வச பட்டதை போல அவள் ஆடி கொண்டே இருந்தாள்.

அந்த வார இறுதியில் அவளுடன் 34 பேர் சேர்ந்து திடீரென ஆட தொடங்கினார்கள். ஏதோ மகுடிக்கு மயங்கிய பாம்புகளை போல அவர்கள் லேசான அசைவுகளுடன் தொடர்ந்து அந்த மர்ம நடனம் ஆடினார்கள். அந்த மாத முடிவில் கூட்டம் 400 ஆக அதிகரித்தது. அதில் நடனத்தை ஆரம்பித்தவர்கள் நடனத்தை நிறுத்தவே இல்லை மாறாக தங்கள் சக்தி தீரும் வரை ஆடி விட்டு பிறகு கீழே விழுந்து இறந்து போனார்கள். அதாவது தங்கள் உயிர் போகும் வரை அவர்கள் நடனம் ஆடினார்கள்.

தொடர்ந்து ஆடிய நடந்ததால் அதில் பலர் ஹார்ட் அட்டாக் வந்தும் பலர் வலிப்பு வந்தும் பலர் உடல் நீர் அளவு வற்றிபோயும் விழுந்து இறந்தார்கள் ஆனால் அந்த கும்பலில் இணைந்தவர்கள் நடனத்தை மட்டும் நிறுத்தவே இல்லை.
அதில் ஒரு நம்ப முடியாத ஒன்றை சொன்னார்கள் அந்த முதலில் நடனம் தொடங்கிய பெண்மணி உடலை பார்த்தவர்கள் முதல் 3 நாளிலேயே அவள் இறந்து விட்ட்டிருக்க வேண்டும் என்றார்கள் .
மிகுந்த உடல் வலு மிக்க மாரத்தான் வீரர்கள் கூட இந்த மாத கணக்கில் சாப்பிடாமல் தூங்காமல் ஆடுவது சாத்தியம் அல்ல என்று கருத்து தெரிவித்தார்கள். வரலாற்றில் dancing plague என்று அழைக்க படும் இந்த சம்பவம் ஒரு விளக்க முடியாத மர்மம். அந்த கும்பல் அப்படி ஒரு மர்ம மரண நாட்டியத்தை ஏன் ..எப்படி ஆடினார்கள் என்பது புரியாத புதிர்.
(மேலும் தகவலுக்கு dancing plague என்று தேடி பாருங்கள் )

        ✴           ✴             ✴            ✴

அடுத்து ஒரு மிக விசித்திரமான சம்பவம் ஒன்றை பார்ப்போம்...

( 13 )☸ மாயமான மர்ம கிராமம் ☸

🕸 1930 ஆம் ஆண்டு அது ...
கனடா நாட்டின் குளிர் மிகுந்த மலை பாங்கான ஓர் இடம்... தான் lake anjikuni எனும் ஏரிக்கரை கிராமம்.
அந்த ஒரு குறிபிட்ட தினத்தில் Joe Labelle என்பவர் அந்த குளிர் நிறைந்த இரவை கழிக்க அந்த கிராமத்திற்கு வந்தார். அங்கு அவர் வருவது இது முதல் தடவை அல்ல. பல முறை ஏற்கனவே வந்தவர் அவர். அந்த கிராமத்தின் சுறுசுறுப்பான இடம்... நல்ல வரவேற்பு இவருக்கு பரிச்சியமான ஒன்று தான். ஆனால் இன்றோ ஆச்சர்யமாக அங்கே மயான அமைதி நிலவியது கொஞ்சம் விசித்திரமாக இருந்தது.
இன்னும் கொஞ்சம் உள்ளே சென்ற போது ஆச்சர்யம் அதிகமாகியது அங்கே இருந்தவர்கள் அனைவருமே காணாமல் போய் இருந்தார்கள் அதுவும் போட்டது போட்ட படி.
 எரிந்து கொண்டிருந்த விறகுகள் எரிந்து கொண்டே இருந்தது. சாப்பிட்ட பொருட்கள் கூட அப்படியே வைக்க பட்டு  இருந்தது. வீடுகள் பூட்ட பட வில்லை. எல்லாம் அப்படியே இருக்க திடீரென மந்திரதால் மாயமானதை போல அவர்கள் காற்றில் கரைந்து போய் இருந்தார்கள். (இதே போல மொத்தமாக கிராம வாசிகள் மாயமான சம்பவம் ஒன்று ராஜஸ்தான் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ளது . அதை பற்றி இத்தொடர் கட்டுரையின் இறுதி பகுதிகளில் சொல்கிறேன் )

அதிர்ச்சி அடைந்த labella அந்த மர்மம் நிகழ்ந்த கிராமத்தில் அதன் பின்  தங்கும் மன நிலையில் இல்லை. உடனே வெளியேறி அருகாமையில் இருந்த தந்தி நிலையத்தில் இருந்து ராயல் கனேடியன் போலீஸ் க்கு தகவல் கொடுத்தார்.
சில மணிநேர இடைவெளிக்கு பின் அங்கே வந்த போலீஸ் ஆய்வுக்கு பின் கிராம வாசிகள் வெளியேறிய கால் தடம் ஏதும் பணியில் இல்லாமல் இருந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்தது. அங்குள்ளவர்கள் எப்படி காணாமல் போனார்கள் என்று புரியாமல் குழம்பியது. அந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த கல்லறையை ஆய்வு செய்த போது மேலும் ஆச்சர்யம் காத்திருந்தது. கல்லரைகள் ...சவ பெட்டிகள் திறந்தே கிடக்க அவைகள் காலியாக இருந்தன. ஆம் அந்த ஊர் மக்களுடன் சேர்ந்து அந்த ஊர் சுடுகாட்டு பிணங்களும் காணாமல் போய் இருந்தன.

Anjikuni lake க்கு அருகாமையில் தென்பட்ட மலையேறிகள் சில பேரை விசாரித்த போது சில தினங்களுக்கு முன்பு வானில் ஒரு ஒளி உருவம் மிதந்ததாகவும் அது உருவம் மாறும் படி இருந்ததாகவும் அந்த கிராமத்தை நோக்கி சென்றதாகவும் சொன்னார்கள்.
(நம் கட்டுரை தொடர் முதல் பாகத்தில் ரஷ்ய திகில் சம்பவதில் கூட அருகாமையில் இருந்த மலையேறிகள் இப்படி தானே சொன்னார்கள் ??!! )

Anjikuni lake இன் காணாமல் போன கிராம வாசிகள் கிடைக்கவே இல்லை.. அன்று அவர்களை கடத்தியது யார் அல்லது எது என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது

        ✴         ✴            ✴            ✴

கடந்த நாலு பாகங்களாகளாக நாம் 13 மர்ம சம்பவங்களை பார்த்தோம். (13 எண் மர்மத்திற்கு ராசியானதாக்கும் ) சரி அவைகளை இந்த பாகத்துடன் விட்டு விட்டு இப்போது கொஞ்சம் வேறு விதமான மர்மத்தை பற்றி பார்க்கலாம்.

            ✴        ✴        ✴         ✴

மண்டை ஓடுகள் பொதுவாக ஆபத்தின் சின்னமாக சித்தரிக்க படுகிறது. மண்டை ஓட்டை பார்த்தால் மெல்லிய பயம் வருவது இயல்பு தான் . ஆனால் அடுத்ததாக நான் சொல்ல போகும் மண்டை ஓடு உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.


மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம்  :  15 : மர்ம மண்டை ஓடுகள் )

மாயன் மற்றும் aztek இனத்தினர் பல வகையில் மர்மங்களில் தொடர்புடையவர்கள் என்பதை நாம் அறிவோம். அவர்கள் இடத்தில கிடைத்த ஒரு மர்ம பொருள் தான் crystal skull
க்ரிஸ்டலில் செதுக்க பட்ட ஒரு மர்ம மண்டை ஓடு.
1927 இல் ஆய்வாளர் ஒருவர் பூமியை தோண்டும் போது இது கிடைத்தது. இது 5000 வருடம் பழமையானது என்கிறார்கள் . சிலர் இது அதைவிட பழமையானது என்கிறார்கள். ஆச்சர்யம் என்ன வென்றால் இது செய்ய பட்ட விதம் இன்றைய தொழில் நுட்பதால் கூட செதுக்க முடியாத அளவு மிக துல்லியமாக க்ரிஸ்டலில் செதுக்க பட்டிருப்பது தான். மிக மிக சக்தி வாய்ந்த நுண்நோக்கி கொண்டு பார்த்தால் கூட செதுக்க பட்டது கண்டு பிடிக்க முடியாத அளவு அப்படியே அச்சில் வார்த்தை போல க்ரிஸ்டலில் செதுக்குவது அன்றைய கால ஆட்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று என்பது ஒரு பக்கம் மர்மம் என்றால் அதை எதற்காக செய்தார்கள் என்பது அடுத்த மர்மம்.

அதற்க்கு முன் நின்று அதை உற்று பார்த்தால் மன நிலை தாக்கத்திற்கு ஆளாகியது என்கிறார்கள் (இப்போ உங்களுக்கு இந்தியானா ஜோன்ஸ் இன் கிரிஸ்டல் ஸ்கல் படம் நினைவிற்கு வந்து இருக்குமே ) இந்த கிரிஸ்டல் ஒரு ஹை டேக் டேட்டா ரெக்கார்டர் என்பது சிலரின் நம்பிக்கை. இது கண் முன் நடந்த உலக சம்பவங்கள் எல்லாவற்றையும் இது சேமித்து வைத்திருக்கிறது . இது ஒரு வரலாற்று ரெகார்ட் டிவைஸ் மேலும் இதை கொண்டு எதிர்காலத்தையும் பார்க்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.
மொத்தம் 13 இந்த மாதிரி மண்டை ஓடுகள் செய்ய பட்டு உலகமெங்கும் அனுப்ப பட்டுள்ளது என்கிறார்கள் (வேறு இடங்களில் அடுத்த சில கிரிஸ்டல் மண்டைகள் கிடைத்துள்ளது )

பின்னால் வந்த ஆய்வாளர்கள் இது ஏதும் உண்மை அல்ல இது 18 ஆம் நூற்றாண்டில் செய்ய பட்டதாக இருக்கலாம் என்றும் சொன்னார்கள் ஆனால் இதை செய்தது யார் எதற்காக இதை செய்தார்கள் என்பது அறியப்படாத மர்மமாகவே உள்ளது.

        ✴           ✴            ✴              ✴

இப்பொது வேறு சில வித்யாசமான மர்ம மண்டை ஓடுகளை பற்றி பார்ப்போம்.

☯ Elongated Skulls of Mexico ☯

மெக்சிகோவில் தோல் பொருள் ஆய்வாளர்கள் விச்சித்திர மண்டை ஓடுகளை தோண்டி எடுத்தார்கள் அவைகள் எல்லாமே ஏலியன் தலைகளை போல பின்னால் நீண்டு காண படுபவை மொத்தம் 13 மண்டை ஓடுகள் கிடைத்தன (இதிலும் 13 ஆ ) இவைகள் கிபி 945 தொடங்கி 1308 காண கால கட்டத்தை சார்ந்தது . சில பழங்குடிகள் 5 யிலிருந்து 16 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தலையில் வளையங்கள் போட்டு தலையை நீண்ட மண்டை ஓடு கொண்டவர்களாக மாற்று கின்றன என்கிறார்கள். அவர்கள் அந்த வடிவத்தை எங்கே பார்த்து கவர பட்டார்கள் என்பது புரியவில்லை. அந்த மண்டை ஓடுகள் ஏதும் நோய் காரணமாக இப்படி இருந்ததற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.

  ☯ The Starchild Skull ☯

900 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த ஒரு குழந்தையின் மண்டை ஓடு இது பார்க்க மிக விசித்திரமாக வழக்கத்தை விட உருண்டை வடிவில் பெரிதாகவும் கண் குழிகள் சுருங்கி விசித்திரமாகவும் இருந்தது.
இது ஏதோ மரபணு கோளாறு என்றும் ஏலியன் மண்டை என்றும் பல கருத்துக்கள் உண்டு.
ஆய்வாளர்கள் 25 முக்கிய வேறுபாட்டை சாதாரண மண்டை ஒட்டிற்கும் இதற்கும் கண்டார்கள்.

☯ The Rhodope Skull of Bulgaria ☯

2001 இல் பல்கெரியாவில் ஒரு மண்டை ஓட்டை கண்டெடுத்தார்கள். அதன் DNA டெஸ்ட்டுகள் அது மனித மண்டை ஓடே அல்ல என்று சொன்னது. மேலும் அதன் விச்சித்திர தோற்றமும் வியப்பாக இருந்தது. அதை விட இன்னோரு ஆச்சரயம் அந்த மண்டை ஓட்டின் கூடவே ஒரு உலோக டிஸ்க் போன்ற ஒன்று கிடைத்தது.
இது பார்க்க சாதாரண வடிவமைப்பில் இல்லை இப்படி ஒரு விச்சித்திர தோற்றத்தில் யாரும் மண்டை ஓட்டை பார்த்ததும் இல்லை. இது முன்பே செய்ய பட்ட மரபணு சோதனையில் விளைந்த தோல்வி சோதனையா ?? அது மறைக்க பட்டு புதைக்க பட்டதா என்று தெரியவில்லை.

☯ The Horned Skull ☯

கதைகளில் வரும் சைத்தான் அல்லது பிசாஸிற்கு நெற்றி மேல் இரண்டு கொம்புகள் இருப்பது போல சித்தரிக்க பட்டிருக்கும்.
நிஜத்தில் அப்படி வடிவமைப்புடன் எந்த மனிதனும் இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் 1880 இல் சிரியாவில் ஒரு மண்டை ஓடு கண்டுபிடிக்க பட்டது .
உடலியல் கூறு படி சாதாரண மனிதர்களுடன் அது மிகவும் ஒத்து போனது ஆனால் ஒன்றே ஒன்று தான் விசித்திரமானது புருவதிற்கு 2 அங்குலம் மேலே இரண்டு கொம்புகள் காண எலும்புகள் புடைத்து கொண்டிருந்தது. மண்டை ஓடும் சாமான்ய ஓட்டை விட மிக பெரிதாக இருந்தது. குறைந்தது அந்த மண்டை ஒட்டிற்கு சொந்த காரன் ஒரு 7 அடி இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

☯ Hobbit skull ☯

Homo floresiensis, வகை மனிதர்கள் ஆம் மனிதர்களில் இன்னோரு வகை 10000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்று இந்த hobbit skull. அந்த இனத்தின் நன்கு வளர்ந்த மனிதனின் அளவே 3.5 அடி தான்  அவன் மண்டை ஓடு எவ்வளவு சின்னதாக இருந்து இருக்கும் பாருங்கள்.

     ✴              ✴               ✴              ✴

மர்ம கதைகள் பொதுவாக கிராம புறங்களில் அதிகம் புழக்கத்தில் இருப்பது உண்டு.
அடுத்து பார்க்க இருப்பது கிராம புற மர்ம கதைகள் அல்ல.
முழு கிராமமே மர்மமாக திகழும் சில "மர்ம கிராமங்கள் " பற்றி.


மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம்  :  16:  மர்ம கிராமங்கள் )


மர்மங்களை தனக்குள் புதைத்து வைத்திருக்கும் சில கிராமங்களை பற்றி இன்று பார்க்கலாம்..

"Dargavs " இது தெற்கு ரஷ்யாவின் osetia விற்கு சொந்தமான ஒரு பனி படர்ந்த மலை பிரதேச இடம்.  3 மணி நேர அபாயகரமான ...பாதையை கடுமையாக வீசும் காற்றுக்கு இடையில் கடந்து இங்கே அடைந்தால்... கீழே பள்ளத்தாக்கு கிராமத்தில் இருந்து  13000 அடி உயரத்தில் ஒரு 17 கிலோ மீட்டருக்கு பரவி இருக்கும் இந்த இடத்தை அடையலாம். Fiagdon நதியை பார்த்த படி இருக்கும் மலை சரிவில் அமைந்து இருக்கும் ஒரு அழகிய கிராமம் இது.
அழகிய சிறு சிறு ஒரே மாதிரியான ஒரு மாதிரி பிரமிட் போன்ற  கூம்பு வடிவ வீடுகளை கொண்ட ஒரு சிறு கிராமம் .வீடுகள் அதிக பட்சம் 2 அல்லது 3 அடுக்கு உயரம் கொண்டவை.
பார்க்க பள்ளத்தாக்கில் இருக்கும் மற்ற கிராமங்களை போல சாதாரண கிராமம் போல தான் தெரியும் ஆனால் அருகே போய் பார்த்தால் தான் அங்கே எந்த ஒரு உயிருள்ள மனிதனும் வாழ்வது இல்லை என்று புரியும். அந்த ஊரின் பெயர் "the city of the dead"

ஆம் அங்கே இருப்பது வித விதமான பிணங்கள் மட்டும் தான். எல்லாமே பள்ளத்தாக்கில் வாழும் கிராமங்களில் வசித்தவர்களின் பிணங்கள். இவைகளை கல்லறையில் புதைக்காமல் எதற்கு இவ்ளோ தூரம் அன்ட முடியாத இடத்தில ஊரை கட்டி அங்கே கொண்டு போய் வைத்தார்கள் என்று தான் தெரியவில்லை.
அங்கே இருக்கும் பிணங்கள் சிலது வித்யாசமான முறையில் புதைக்க பட்டுள்ளதை காணலாம் உதாரணமாக சிலரை படகுடன் சேர்த்து புதைத்து இருந்தார்கள். அந்த மலை சரிவில் படகிற்கு என்ன வேலை ?? (ஆன்மா படகில் ஏறி சொர்க்கம் செல்ல இந்த ஏற்பாடு என்கிறார்கள் ) அப்புறம் கூடவே நிறைய நாணயங்கள் கிடைக்க பெற்றன. அங்கே கிணற்றில் அந்த நாணயத்தை போட்டால் அது உள்ளே கல்லில் மோதியது என்றால் ஆன்மா சொர்க்கம் போகும் என்றும் அவர்கள் நம்பிக்கையாம்.

இப்போ மிரட்டும் விஷயம் என்ன வென்றால் அந்த இறந்தவர்களின் கிராமத்திற்கு உயிருள்ளவன் எவனும் அனாவசியமாக செல்வது இல்லையாம். காரணம் அப்படி சென்ற பல பேர் மீண்டும் உயிரோடு திரும்ப வில்லையாம். அந்த பக்கமா போனீங்கனா ஒரு நைட் தங்கி பாருங்களேன்.

         ✴           ✴          ✴           ✴

"Yangsi "  இது சைனாவின்  Sichuan Province பகுதியில் மிக ஒதுக்கு புறமாக  அமைந்திருக்கும் ஒரு மிக மிக சிறிய கிராமம்.
இந்த கிராமத்திற்கு சீன அரசாங்கம் ஒரு போதும் பார்வையாளர்களை அனுமதிப்பது இல்லை. காரணம் அங்கே வாழும் மிக சிறிய எண்ணிக்கையிலான கிராம வாசிகள் ஒரு வி்சித்திர நோயால் பாதிக்க பட்டுள்ளனர்.  அது ஒருவன் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி குள்ள மனிதனாக மாற்றும் நோய். இந்த நோய் உலகத்தில் புதிது அல்ல தான் ஆனால் இது உலகில் 20000 மனிதர்களில் ஒருவருக்கு வரும் மிக அறிய வகை நோய். அது இந்த ஒட்டு மொத்த கிராமத்தை ஆட்கொண்டுள்ளது எப்படி என்பது தான் விஞ்ஞானிகளும் குழம்பி நிற்கும் ஒரு கேள்வி. இங்கு நன்கு வளர்ந்த மனிதனின் உயரம் வெறும் 3 அடி . அவன் பெற்றெடுக்கும் குழந்தையும் அதற்க்கு மேல் வளருவது இல்லை.

இதற்கான காரணத்தை ஆராய அந்த இடத்தின் மண் தண்ணீர் காற்று எல்லா வற்றையும் சோதித்த ஆய்வாளர்களுக்கு சரியான காரணம் ஏதும் கிடைக்க வில்லை. அந்த கிராமதில் ஒரு 60 ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு மர்ம நோய் பரவியதாம் அதன் பிறகு தான் எல்லோரும் இப்படி ஆகி விட்டார்களாம்.

அந்த yangsi கிராமம் தீய சக்தியின் பிடியில் இருப்பதாக கிராம வாசிகள் நம்புகிறார்கள். மேலும் சிலர் அதற்க்கு காரணமாக ஒரு கருப்பு ஆமையை சொல்கிறார்கள். அந்த ஆமையை கிராம வாசிகள் தொடர்ந்து உண்ணு வருவது தான் அவர்கள் வளர்ச்சியை நிறுத்திய அபூர்வ நோய் வர காரணம் என்கிறார்கள்.
சரியான காரணத்தை தெரியாமல் பல வருடங்களாக வாழ்ந்து வந்தது அந்த விசித்திர குள்ளர்களின் மர்ம கிராமம்.
(இப்போது கொஞ்ச கொஞ்சமாக அந்த நோயின் பிடியில் இருந்து மீளுவதாகவும் இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு அந்த நோய் பாதிப்பு குறைந்த காண படுவதாகவும் செய்தி)

          ✴            ✴            ✴            ✴

கஜகஸ்தானில் இருக்கிறது kalachi எனும் கிராமம்.
செப்டம்பர் 2014 இல் புதிய கல்வி ஆண்டில் முதல் நாள் வகுப்பு சென்ற அந்த கிராமத்து குழந்தைகள் மட்டும் மர்மமாக தூங்கி விழுந்தன . பள்ளியில் குழந்தைகள் தூங்குவதில் என்ன மர்மம் இருக்கிறது பள்ளியில் குழந்தை தூங்காமல் இருந்தால் தான் மர்மம் என்று நினைப்பவர்களுக்கு... அந்த kalachi கிராமவாசிகள் தூங்கினால் உடனே விழிகாத மர்ம நோயால் பாதிக்க பட்டிருந்தார்கள் என்பது தான் ஆச்சர்யம். உடனே என்றால் சில பல மணி நேரங்கள் அல்ல. நான் சொல்வது சில பல நாட்கள்.

ஆம் அவர்கள் தூங்கினால் சிலர் 2 அல்லது 3 நாளும் சிலர் வார கணக்கிலும் தூங்கி முழிப்பார்கள் அப்படி முழிக்கும் போது தங்கள் நினைவு பாதிக்க பட்டிருப்பதை உணர்ந்தார்கள். சிலருக்கு வலிப்பு வந்ததது. சிலருக்கு அதற்க்கு பின் உயரத்தை கண்டால் அச்சம் உண்டானது. சிலருக்கு ஹாலுசினேஷன் என படும் மாய எண்ணங்கள் தோன்றின. இதில் கொடுமை என்ன வென்றால் பலர் தூக்கத்தில் இருந்து மீளுவதே இல்லை இறக்கும் வரை தூங்கி கொண்டே இருப்பார்கள்.

அந்த kalachi கிராமத்தின் விசித்திர நோய் பல இடங்களில் பீதியை கிளப்பியதை தொடர்ந்து கசகஸ்தான் அரசு அந்த கிராமத்தார்களை காலி செய்ய சொல்லி கேட்ட போது பலர் மறுத்து விட்டார்கள்.
ஆய்வாளர்கள் அங்குள்ள காற்று நீர் மண் மற்றும் விலங்குகள் மனிதர்கள் எல்லாவற்றையும் சோதனைக்கு உட்படுத்தினார்கள். மொத்தம் 20000 திற்கு மேற்பட்ட லேப் சோதனைக்கு பிறகு அவர்கள் அறிவித்த உண்மை என்ன வென்றால் காற்றில் அதிக அளவு கார்பன் மோனாக்சைடு கலந்து இருகிறது என்பது தான். Kalachi யிலிருந்து பல கிலோ மீட்டர் தள்ளி இருந்த 1990 களில் மூட பட்ட யரேனியம்
சுரங்கம் ஒன்று தான் மோனாக்சைடு ஏற்றத்திற்கும் மர்ம தூக்க நோய்க்கும் காரணம் என்று அறிவித்தார்கள்.
(மேலும் தகவலுக்கு kalachi sleeping village என்று தேடி பாருங்கள் )

      ✴             ✴               ✴              ✴

அடுத்து சொல்ல போவது இவை எல்லாவற்றையும் விட விசித்திரமான ஒரு  மர்ம கிராமத்தை பற்றி.

Dominican குடியரசில் உள்ள ஒரு கிராமம் தான் "salinas "
இந்த கிராமதில் பல சுட்டி பெண் குழந்தைகளை காணலாம் . பள்ளிக்கு செல்லும் அந்த பெண் குழந்தைகளை கண்ட வேறு வெளியாட்கள் யாரும் சில பல வருடங்கள் கழித்து அந்த பெண் குழந்தைகள் இப்போது வயது வந்த பெண்ணாக வளர்ந்து இருப்பார்கள் என்று எண்ணி வந்து பார்த்தால் அதிர்ச்சி அடைவார்கள். காரணம் அந்த பெண் குழந்தைகள் எல்லாமே இப்போது  வாட்ட சாட்டமான ஆன் பிள்ளைகளாக மாறி விட்டு இருப்பார்கள்.

மிக வித்தியாசமா ஒரு மரபணு நோயால் பாதிக்க படுகிறார்கள் அந்த கிராம மக்கள் . அதன் விளைவு அங்கு பிறக்கும் பெண் குழந்தைகள் 12 வயதை அடைந்ததும் கன்னி பருவம் நோக்கி செல்வது இல்லை மாறாக ஆன் பிள்ளையாக மாறி விடுகின்றனர்.
மிக விசித்திரமான இந்த மரபணு நோய் நடப்பது எப்படி என்பதை கொஞ்சம் அறிவியல் பூர்வமாக பார்த்தோமேயானால்......

இவர்களுக்கு ஆன்பாலின் ஹார்மோனாகிய "dihydro-testosterone " ஐ சுரக்கும் என்சைம்  குறைபாடு இருப்பது தான் காரணம். கொஞ்சம் அறிவியல் பூர்வமாக சொல்ல வேண்டும் என்றால் அதாவது ஆன் குழந்தையோ பெண் குழந்தையோ எதுவாகினும் கருவில் இருக்கும் போது
Gonads என்கிற ஒரு உள்ளுறுப்பை கொண்டிருக்கும் மேலும் இருபால் குழந்தைகளுமே பொதுவாக கால் களுக்கு இடையில்  tubercle எனும் பகுதியை கொண்டிருக்கும் . இப்போது இது ஆணும் அல்ல பெண்ணும் அல்ல.
8 வாரங்களில் y குரோமோசோம்களை சுமந்துள்ள ஆன் சிசு அதிகளவில் dihydro-testosterone ஐ சுறக்க செய்கிறது. இந்த கட்டத்தில் தான் அந்த tubercle எனும் இவ்வளவு நாளாக பொதுவாக இருந்த பகுதி ஆன் உறுப்பாக மாறுகிறது. பெண் சிசுவிற்கு அதே tubercle பெண் உறுப்பாகிறது.
ஆனால் மேலே பார்த்த படி மரபனு குறைபாடாக இருக்கும் ஆன் குழந்தைகள் இந்த ஹார்மோனை சுரக்கும் enzyme 5-α-reductase ஐ தவற விடுகின்றன. அதனால் ஆன் குழந்தை பெண்ணாக பிறக்கிறது. பிறகு 12 வயதில் அடுத்த ஹார்மோன் சுறப்பிற்கு உடல் ஆளாகும் போது ஆணுக்கான உடல் மாற்றம் நடக்கிறது. அதாவது கருவில் சில வாரங்கில் நடக்க வேண்டிய நிகழ்வு இவர்களுக்கு 12 ஆண்டு கால தாமதமாக நடக்கிறது.

சரி இதற்க்கு அறிவியல் பூர்வமான விளக்கம் கொடுத்தாலும் அந்த கிராமத்தில் மட்டும் ஏன் இத்தனை பேர் இந்த மாதிரி என்பது மர்மமாக தான் இருக்கிறது.

        ✴           ✴            ✴           ✴

நீங்கள் கார்ட்டூன் சீரியல்கள் பார்ப்பது உண்டா..?
குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களும் கார்ட்டூன்கள் விரும்பி பார்ப்பது உண்டு. கார்ட்டூன்கள் சிரிப்பை ஏற்படுத்தி மகிழ்ச்சியை தருபவை .
ஆனால் அடுத்து நான் சொல்ல போகும் அந்த மர்ம கார்ட்டூன்  திகைப்பை ஏற்படுத்தி ஆச்சர்யத்தை... அமானுஷ்யத்தை தரும்.


மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம்:17 சிம்சன் எனும் மர்ம கார்ட்டூன்)

"Simsons "ஒரு அமெரிக்க அனிமேஷன் கார்ட்டூன் தொடர் .1987 முதல் நீண்ட நாட்களாக ஒளி பரப்ப படும் ஒரு நெடிய கார்ட்டூன் தொடர். இதில் சிம்சன் குடும்ப உறுப்பினர்களான Homer, Marge, Bart, Lisa, மற்றும் Maggie யை கொண்டு கற்பனை நகரமான  Springfield இல் வாழும் ஒரு அமெரிக்க குடும்பத்தை சுற்றி நடக்கும் இயல்பான அமெரிக்க வாழ்க்கையை பிரதி பளிக்கும்  படி நிறைய நிஜ கேரக்டர்கள் காட்ட படும் ஒரு தொடர்.

இந்த சாதாரண அனிமேஷன் தொடர் கவனத்தை பெற காரணம் உலகில் நடந்த நடக்கிற பல முக்கிய நிகழ்வுகள் இதில் அது நடப்பதற்கு பல காலம் முன்பே காட்ட படுவதால் தான். இதென்ன டைம் டிராவல் மேஜிக் போல உள்ளதே என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் இதில் காட்ட பட்ட பல நிகழ்வுகள் நிஜ உலகில் நடந்தது எல்லா சம்பவங்களிலுமே தற்செயலாக இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக 9.11 அமெரிக்க இரட்டை கோபுர இடிப்பு பற்றி இதில் காட்ட பட்டுள்ளது. அது போன்ற காட்சிகள் மிக சில வினாடிகளே இதில் இடம் பெறும் ஏதோ ஒரு காட்சியில் தற்செயலாக கவனித்தால் சம்பந்தமில்லாமல் பின்னால் ஒரு பிரேம் இல் அமெரிக்க இரட்டை கோபுரம் கட்டிடமும் 911 என்கிற எண்ணையும் காணலாம்.

இந்த கட்டுரை தொடரின் முன்பு ஒரு பாகத்தில் டைட்டாணிக்கை பற்றி முன் கூட்டியே எழுத பட்ட நாவலை பற்றியும் எட்கர்ட் ஆலன் போ சிறுகதை ஒன்றில் கொல்ல பட்ட ரிச்சர்ட் பார்க்கர் சிறுவன் கதை நிஜத்தில் நடந்தது பற்றியும் சொல்லி இருந்தேன். அதை எல்லாம் கூட ஏதோ ஒரு தற்செயலான ஒற்றுமை என்று விட்டு விடலாம் ஆனால் சிம்சனின் சில முன் கணிப்புகள் தற்செயல் என கொள்ள முடியாத அளவு ஆச்சர்யமானவை. பின் வரும் உதாரணத்தை ஒவ்வொன்றாக பாருங்கள்.

☯  2008 இல் சீசன் 20, எபிசோட் 4 இல் சிம்சனின் ஹோமர் கேரக்டர் அமெரிக்க எலெக்சனில் ஒபாமாவுக்கு ஒட்டு போட முயற்சிக்க அந்த ஓட்டிங் மெஷின் கோளாறாகி வேறு கட்சிக்கு ஒட்டு விழுவது போல காட்சி வைக்க பட்டிருந்தது. 4 ஆண்டுகள் கழித்து இது நிஜத்தில் நடந்தது கோளாரான ஒட்டு மிஷினில் ஒபாமா ஓட்டு மிட் ரோம்னி க்கு விழுந்தது கண்டு பிடிக்க பட்டது.

☯  2003 இல் tobacco வும் tomatto வும் கலந்து tomacco என்ற ஹைபிரிட தாவரத்தை உண்டாக்கினார்கள் ஆனால் 1999 இல் சீசன் 11 எபிசோட் 5 இல் ஹோமர் கேரக்டர் அதை செய்து இருந்தது.

☯ 2014 இல் எபோலா வைரஸ் தனது தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது நமக்கு தெரியும் .(அது கண்டு பிடிக்க பட்ட ஆண்டு 1976 ) சிம்பசன்ஸ் தொடரில் 1997 இல் சீசன் 9 எபிசோட் 3 இல்
Bart கதாபாத்திரம் ஜுரதால் பாதிக்க பட்டு படுத்து இருப்பார் அப்போது அவர் படிக்கும் புத்தகத்தின் பெயர்  "Curious George and the Ebola Virus." 1999 களில் எபோலா உலகில் பரவி இருக்க வில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

☯ ஹிக்ஸ் பூஸான் எனும் அணு துகள் 1964 இல் பீட்டர் ஹிக்ஸ் ஆல் அவதானிக்க பட்டு 2013 இல் 13 பில்லியன் டாலர் பொருட் செலவுக்கு பின் ஆய்வில் நிரூபிக்க பட்டது.
ஆனால் 1998 ஆம் ஆண்டு சிம்சன் தொடர் சீசன் 8 எபிசோட் 1 இல் ஹோமர் சிம்சன் கதாபாத்திரம் ஒரு ஆராய்ச்சியாளனாக மாறி இருப்பார் அவர் எதிரே கரும்பலகையில் ஒரு சமன் பாடு எழுத பட்டிருக்கும் என்ன ஆச்சர்யம் என்றால் அது பிற்காலத்தில் கண்டு பிடிக்க பட்ட ஹிக்ஸ் பூஸான் துகளில் நிறையை கான்பதர்கான சமன்பாடு.

☯ lisa's wedding எனும் 1995 எபிசோடில்
லண்டன் டவர் பிரிஜ் காட்ட பட்ட போது பின்னால் shard கட்டிட அமைப்பு காட்ட பட்டது ஆனால் சரியாக அதே இடத்தில் 14 ஆண்டு கழித்து 2009 இல் தான் அந்த கட்டிடமே கட்ட பட்டது.

☯ சிம்சனின் நிறைய நிஜ கேரக்டர்கள் காட்ட படுவது உண்டு .1993 இல் சீசன் 5 எபிசோட் 10 இல்  Siegfried மற்றும் Roy
எனும் சர்க்கஸ் கலைஞர்கள் பழக்க பட்ட
வெண் புலியால் தாக்க படுவதை போல காட்சி வைக்க பட்டிருந்தது. 2003 இல் அந்த இருவர் நிஜமாகவே பழக்க பட்ட வெண் புலியால் தாக்க பட்டார்கள்.

☯ 1990 இல் bart கதாபாத்திரம் ஒரு அணு உலையில் பயன்படுத்த படும் தண்ணீரில் இருந்து மூன்று கண் கொண்ட மீன் ஒன்றை பிடித்து வருவதாக காட்சி இருந்தது.
பல வருடங்கள் கழித்து அரஜென்டினா வில் அணு உலை தண்ணீர் சேர்த்து இருக்கும் நீர் தேக்கத்தில் கதிர் வீச்சால் மாற்றம் அடைந்த 3 கண் கொண்ட மீன் பிடிக்க பட்டது.

இப்படி சிம்சனின் ஆருடம் அடுக்கி கொண்டே போகலாம் இதில் ட்ரம்ப்ட் அமெரிக்க அதிபர் ஆனது கூட அடக்கம் (எந்த பகுதியில் எவ்வளவு வாக்குகள் என்று கூட கணிக்க பட்டிருந்தது )
ஒரு விஷயம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அது போலி சிம்ப்சன்களை பற்றி. அவ்வபோது போலி சிம்சன்கள் உதவுவது உண்டு. உதாரணமாக 2017 இல் ட்ரம்ப்ட் சவூதி சென்று அங்கு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டதை 2002 இல் வெளியிட்டதாக ஒரு சிம்ப்சன் கார்ட்டூன் வெளியாகி நாட்டில். பரவியது ஆனால் உண்மையில் அது 2017 மே மாதம் பத்திரிக்கையில் கிண்டலாக வெளியிட பட்ட சித்திரம். இப்படி சில போலிகள் இருந்தாலும்..
அமெரிக்க பிரதமர் தொடங்கி
ஜானி டெப் எனும் ஹாலிவூட் நடிகர் விமான நிலையத்தில் மன்னிப்பு கேட்டது . மாமிச கடையில் குதிரை கரி கலக்க பட்டது...  greace நாட்டு பொருளாதாரம் சரிந்தது பிரின்ஸ் எனும் பாடகர் இறந்தது தொடங்கி... ஒரு எலுமிச்சை மரம் வேரோடு காணாமல் போனது போன்ற பல  சிறு சம்பவங்கள் வரை சிம்சன் முன் கூட்டியே கணித்து உள்ளது அவ்ளோ ஏன் ஆபில் நிறுவன ஸ்மார்ட் வாட்ச் கூட சிம்சனின் பல ஆண்டுகளுக்கு முன்பே காட்ட பட்டது என்றால் என்ன சொல்வது.
கடைசியாய் ஒரு ஆச்சர்யம் சொல்லி முடிக்கிறேன் 20 th century fox க்கு சொந்தமான சிம்சனை பிற்காலத்தில் டிஸ்னி வாங்கியது. இதையும் பல ஆண்டுகளுக்கு முன்பே தனது தொடரில் காட்டி இருந்தது சிம்சன்.

ஒரு சின்ன கதை :
ஒரு ஊரில் மிக சிறந்த ஜோதிடன் இருந்தானாம் அவன் சொல்லும் எதுவும் மிக சரியாக பலித்ததாம். இங்கே பற்றி எரியும் என்றால் எரிந்தது. இங்கே திருடு போகும் என்றால் போனது. கடைசியில் பார்த்தால் அந்த திருட்டை .. அந்த தீ விபத்தை செய்ததே அந்த ஜோதிடன் தான் என்று தெரிய வந்ததது.

சிம்சனின் எழுத்தாளர் Dan Greaney என்ன மந்திர வாதியா இல்ல டைம் ட்ரைவலரா  அல்லது சிறந்த ஜோதிடரா என்று சிலர் குழம்பி கிடக்க
பலர் இல்லை இல்லை இப்படி அவர் சரியாக கணித்து சொல்ல முடிவதற்கு காரணம் அவர் "அவர்களில்"
ஒருவராக இருப்பது தான் என்கிறார்கள் .
எவர்களில்  ஒருவர் ???
அவர்கள் தான் உலகை மறைமுகமாக ஆண்டு கொண்டிருக்கும் நிழல் மனிதர்கள்.
உலக அரசியலை தங்கள் அறையில் உட்கார்ந்து நிர்ணயிக்கும் சூத்திரதாரிகள். உலக வர்த்தகத்தை தங்கள் கட்டுபாட்டில் வைத்திருக்கும் உலக வியாபாரிகள்.
அவர்களின் பெயர்.....

"இலுமிநாட்டிகள் "

       ✴            ✴             ✴             ✴

சரி நிறைய உலக மர்மங்களை அலசியாயிற்று கட்டுரை தொடர் முடியும் தருவாயை நெருங்கும் சமயத்தில் சில
இந்திய மர்மங்களை பற்றி வரும் பாகங்களில் பார்க்கலாம்.

மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம்:18 : மர்ம இந்தியா )

பொதுவாக இந்தியாவை பொறுத்த வரை வித்யாசமான பல கோவில்கள் தான் நவீன விஞ்ஞானத்திற்கு சவால் விடும் வகையில் மர்மம் தாங்கி நிற்கின்றன. ஆனால் கோவில்கள் தாண்டி பல வகை மர்ம நிகழ்வு மர்ம இடங்கள் மர்ம மனிதர்களுக்கும் இங்கே பஞ்சம் ஒன்றும் இல்லை. அவற்றில் சிலவற்றை இப்பொது பார்க்கலாம்.

☯ ஜெட்டிங்கா கிராமத்து பறவைகள் :

" jatinga " இது அசாமில் உள்ள ஒரு சிறு கிராமம். அழகிய மலைசிகரங்கள் பசுமை போர்த்திய இயற்கை ஓவியங்கள் சூழ்ந்த ஒரு அழகிய கிராமம்.
 1900 ஆண்டுகளின் தொடக்கதில் ஒரு நாள் zeme naaga எனும் பழங்குடியினர் வசித்த வந்த நேரம் அது செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்திற்கு இடையில் ஒரு நாள் அந்த கிராம வாசிகள் முதல் முதலில் அந்த நிகழ்வை கண்டனர். ஒரு பறவை பறந்து வந்து தன்னை தானே கட்டிடத்தில் மோதி உயிரை விட்டது . அதை தொடர்ந்து மேலும் சில பறவைகள் அதை செய்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்த தற்கொலை பழக்கம் ஏதோ வைரஸ் நோய் பரவியதை போல மற்ற பறவைகளுக்கு பரவியது. பிறகு இரவு முழுவதும் பறவைகள் பறந்து கொண்டே இருந்தன மோதி கொண்டே இருந்தன. இப்படி  பறவை தற்கொலை செய்து கொள்வதை அந்த கிராம வாசிகள் பார்த்ததே இல்லை நூற்றுக்கணக்கான பறவைகள் அப்படி விசித்திரமாக தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டன.

அது அந்த கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது இது கடவுளின் சாபம் என்று பேசி கொண்டனர். காரணம் புரியாமல் அதை பற்றி ஆச்சர்யமாக பேசி கொண்டே இருந்தனர். அடுத்த வருடம் அதே மாதம் காத்திருந்தது ஆச்சர்யம் .
கடந்த ஆண்டு நடந்த கிட்ட தட்ட அதே கால கட்டத்தில் மீண்டும் கும்பல் கும்பலாக பறவைகள் தங்களை மாய்த்து கொண்டன. அந்த கிராம வாசிகள் அச்சத்தில் உறைந்தார்கள்.
அடுத்து வந்த ஆண்டுகளில் அந்த பறவை மர்மம் மேலும் தொடர்ந்து அவர்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியது.
கடவுளின் சாபதிற்கு ஆளாக விரும்பாத அந்த jatinga கிராம வாசிகள் 1905 ஆம் ஆண்டு தங்கள் நிலங்களை புதியவர்களுக்கு விற்று விட்டு அச்சம் காரணமாக புலம் பெயர்ந்தனர்.

அடுத்து வந்த அந்த குடியிருப்பாளர்கள் அதே செப்டம்பர் -நவம்பர் இடையில் அந்த மர்ம சம்பவத்தை கண்டனர். சரியாக அந்த மாதங்களில் பறவைகள் நடவடிக்கை விசித்திரமாக மாறுவது தொடர்ந்து வந்தது ஆனால்  இவர்கள் பார்வை வேறாக இருந்தது. இது கடவுள் தனக்கு கொடுக்கும் கொடை என்று கொண்டாடினர். அந்த மாதங்களில் அனைவர் வீட்டிலும் பறவை மாமிசதால் ஆனந்தமாக நிரம்பியது.
நூற்றாண்டு காலமாக இன்று வரை அந்த மர்ம நிகழ்வு அங்கே தொடர்ந்து நடப்பது விஞ்ஞானிகள் கவனத்தை ஈர்த்தது. அங்கே தொடர் ஆய்வுகளை மேற்கொண்ட பின் ஒரு வழியாக அதற்க்கு ஒரு விளக்கத்தை கொடுத்தனர். பறவைகள் அந்த கிராமத்தின் விளக்கு வெளிச்சத்தால் கவர பட்டு விட்டில் பூச்சி பாணியில் தன்னை மாய்த்து கொள்கின்றன என்றார்கள். அது ஏன் சரியாக அந்த மாதத்தில் மட்டும் அவைகள் அதை செயகின்றன ? என்ற கேள்விக்கு அவர்கள் அது பருவ மாற்றம் நடக்கும் போது தான் பறவைகள் இந்த மாதிரி ஒரு மூளை குழப்பத்திற்கு ஆளாகின்றன என்று பதிலளித்தார்கள்.

காரணம் என்னவோ ஆனால் jatinga கிராம வாசிகள் நம்பியது போல அந்த நிகழ்வு நிஜமாகவே அவர்களுக்கு கடவுள் கொடுத்த வரமாக மாறியது. பறவைகள் மரணம் ஒரு சோக நிகழ்வு என்றாலும் கால போக்கில் அந்த நிகழ்வு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்ததது ஒவ்வொரு ஆண்டும் அந்த கிராமத்திற்கு கணிசமான அளவில் பண வரவிற்கு அது வழி செய்தது. இன்றும் கூட jatinga வில் குறிபிட்ட மாதங்களில் அந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

☯ சிகப்பு மழை :

நீங்கள் மழையில் ஆனந்தமாக நனைந்து கொண்டிருக்கும் போது வானம் திடீரென்று ரத்தம் போல சிகப்பு நிறத்தில் பிய்த்து கொண்டு ஊற்றினால் எப்படி இருக்கும் ?
கேரளாவின் இடுக்கி பகுதியை சார்ந்த மக்கள் 2001 ஜூலை 25 தொடங்கி செப்டம்பர் 23 வரை அந்த அமானுஷ்ய மழையை அனுபவித்தார்கள் . சிகப்பு நிறத்தில் வானம் ரத்ததை கரைத்து ஊற்றியதை போல பொழிந்ததை பார்த்து அதிர்ந்தார்கள். இதற்க்கு முன் 18 ஆம் நூற்றாண்டில் அதே பகுதியில் இந்த நிகழ்வு பதிவு செய்ய பட்டிருப்பது குறிப்பிட தக்கது.

☯  ஜோத்பூர் மர்ம வெடிப்பு :

December 18, 2012, ஜோத்பூர் மக்கள் அந்த பயங்கர வெடி சப்தத்தை கேட்டனர் . சூப்பர் சோனிக் ஜெட் வானத்தில் ஏற்படுத்தும் "sonic boom" மாதிரியான ஒலி அது ஆனால் மிக பெரிய வெடி விபத்தை போல மிகுந்த சப்தமானது.
வெடியின் காரணத்தை ஆராய்ந்த போது மர்மம் தான் மிஞ்சியது.
அந்த நேரத்தில் அந்த பகுதியில் வானில் எந்த ஒரு விமானமும் பறந்திருக்க வில்லை. அருகாமையில் எங்கேயும் வெடி விபத்து நடந்த தகவல் இல்லை. அரசாங்கம் எந்த ஆயுத சோதனையும் அந்த நேரத்தில் செய்ய வில்லை என்று தெரிவித்தது .
ஆச்சர்யம் என்ன வென்றால் அதே நேரத்தில் உலகில் பல மூலைகளில் இந்த மாதிரி வெடி ஒலி கேட்டதாக நிகழ்வுகள் பதிவானது தான். சிலர் அந்த நிகழ்வின் போது வானில் பச்சை ஒளி தெரிந்ததாக சொன்னார்கள். பலர் இது ஒரு ஏலியன் செயல் என்றார்கள். பலர் இது அரசாங்கம் நடத்தும் ரகசிய ஆயுத சோதனையாக இருக்கலாம் என்றார்கள் இன்று வரை அன்றைய ஜோத்பூர் வெடியின் காரணம் மர்மமாகவே தான் இருக்கின்றது.

☯ லடாகின் காந்த மலை :

ஜம்மு காஸ்மீரின் 11000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் லாடாகில் கார்கில் செல்லும் வழியில் 30 கிலோமீட்டருக்கு
அமைந்துள்ள சாலையில் ஓரிடத்தில் உள்ளது அந்த காந்த மலை. என்ன மர்மம் என்றால் அந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாலை மேடாக ஏறுவதை காணலாம் அங்கே காரில் செல்பவர்கள் தங்கள் காரை அணைத்து விட்டால் கார் தானாக மேட்டை நோக்கி ஏதோ மலையால் காந்தம் போல இழுக்க படுவதை போல ஒரு 20 கிமி வேகத்தில் ஓடி ஏறுவதை பார்க்கலாம். புவி ஈர்ப்பு சக்திக்கு எதிராக வாகணங்கல் எப்படி அப்படி ஏறுகின்றன என்ற ஆச்சர்யம் அங்கே வரும் 1000 கணக்கான பயணிகளை கவர்ந்துள்ளதால் அவர்கள் அங்கே தங்கள் வண்டிகளை நிறுத்திவைத்து அந்த நிகழ்வை காணுகின்றனர்.

மலை ஈர்க்கிறது என்ற கருத்து போல சில ஆய்வாளர்கள் அது ஒரு ஆப்டிகள் இலுஷன் என்கிறார்கள் அதாவது பள்ளமாக தான் அங்கே சாலை இருக்கிறது ஆனால் பார்க்க மேடு போல ஒரு காட்சி பிழையை அது ஏற்படுத்துகிறது என்கிறார்கள்.

      ✴             ✴           ✴             ✴

இன்னும் சில இந்திய மர்மங்ளின் தொடர்ச்சியை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

மர்மங்கள் தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம்:19 : 'மர்ம இந்தியா 'தொடர்ச்சி )

கடந்த பாக தொடர்ச்சியாக மேலும் சில இந்திய மர்மங்களை பார்க்கலாம்.

☯ திகில் கிராமம் :

மேற்கு ராஜஸ்தானில் ஜெய்சல்மாரில் இருந்து 15 கி.மி தொலைவில் உள்ளது "kuldhara " கிராமம். கிட்ட தட்ட 500 ஆண்டுகளுக்கு மேலாக அங்கே கிட்ட தட்ட 1500 கிராம வாசிகள் வசித்து வந்தார்கள்.
திடீரென்று.....ஒரு நாள் இரவோடு இரவாக அனைவரும் மாயமாகி விட்டார்கள். (கனடாவின் lake anjikuni கிராமத்து மக்கள் மாயமானதை பற்றி இந்த கட்டுரை தொடரில் ஏற்கனவே ஓர் இடத்தில் பார்த்தோம் நினைவு இருக்கிறதா இது இந்தியாவில் நடந்த அதை ஒத்த ஒரு சம்பவம் தான் )

அந்த மக்கள் யாரும் இறக்க வில்லை ..கடத்த படவும் இல்லை. எங்கே போனார்கள் என்று தெரியாமல் காணாமல் போய் விட்டார்கள் அவ்ளோ தான். இதற்கு பின்னால் ஒரு கதை சொல்ல படுகிறது. அந்த இடத்தை ஆண்டு வந்த தீயவனான திவான் ஒருவன் அந்த கிராமத்து தலைவரின் மகளை பார்த்து ஆசை கொண்டதாகவும் அவளை ஒப்படைக்க கிராம வாசிகளுக்கு கால கெடு கொடுத்ததாகவும் அப்படி ஒப்படைக்காத பட்சத்தில் அணைவரையும் நாசம் செய்து பெண்ணை கடத்தி செல்ல போவதாகவும் சொல்லி இருந்தானாம். அதனால் இரவோடு இரவாக 84 கிராம தகைவர்கள் ஒன்று கூடி ஒரு முடிவெடுத்தார்களாம் அதன் படி அந்த கிராமதத்தை சபித்து விட்டு மொத்தமாக காலி செய்து விட்டார்களாம்.

அதன் பின் அங்கே யாரும் தங்க துணிவது இல்லை. காரணம் அங்கே தங்க முயன்ற சிலர் மர்மமாக மிக கொடூரமாக இறந்து போனார்கள் . பலர் அங்கே ஆவிகள் வேட்டை ஆடுவதாக தங்கள் அனுபவத்தை சொன்னார்கள். இன்றும் பாலைவனமாக குட்டிசுவராக  யாரும் தங்க துணியாத ஒரு இடமாகவே உள்ளது kuldhara கிராமம்.

☯ மர்ம கோட்டை  :

இந்தியாவில் ஆவி நடமாட்ட பகுதி என்று எடுத்து கொண்டால் அதில் முதல் இடம் பிடிப்பது  Bhangarh, எனும்  கோட்டை தான். இது ராஜஸ்தானில் உள்ள ஒரு கைவிட பட்ட கோட்டை. எந்தளவு மர்ம கோட்டை என்றால்  இந்திய அரசாங்கமே அங்கே சூரியன் மறைந்த பின் அங்கே தங்குவதற்கு தடை என்ற பலகையை வைத்து இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். காரணம் அங்கே யாரும் சூரியன் மறைந்த பின் தங்குவது இல்லை. காரணம் அங்கே சொல்ல படும் வித விதமான மர்ம கதைகள். அந்த கிராமம் சபிக்க பட்டதற்க்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் கதைகள் சொல்ல படுகிறது. ஆனால் அந்த இடத்தை நிஜமான திகிலாக மாற்றியது என்ன வென்றால் அங்கே இருட்டிய பின் தங்க போன யாரும் உயிரோடு திரும்புவதில்லை என்ற உண்மை தான்.

☯ சிவாபூரின் மர்ம கல் :

மகாராஷ்டிராவில் மும்பையில் இருந்து 160 கி.மி மேற்ககே உள்ளது சிவாபூர் .
இங்கே Hazrat Qamar Ali, எனும் சுபி ஞானியின் சன்னதி உள்ளது. கூடவே ஒரு மர்ம கல்லும்...
அந்த ஞானி தனது கடைசி காலத்தில் மரண படுக்கையில் இந்த கல்லை தனது கல்லறை அருகே வைக்க சொன்னாராம். உடல் பலத்தை விட ஆன்ம பலம் தான் மேலானது என்பதை காட்ட அவர் ஒரு காரியம் செய்தாராம். அதன் படி 70 கிலோ எடை கொண்ட அந்த கல்லை 11 பேர் ஒன்றாக சேர்ந்து வெறும் சுட்டு விரலால் மட்டும் தொட்டு கொண்டு தனது பெயரை ஒரே நேரத்தில் சப்தமாக அழைத்தால் அந்த கல் எடையற்று போய் 11 பேரின் விரல்களால் தூக்க முடிய கூடிய அளவில் மிதக்கும் கல்லாக மாறிவிடும் என்றார்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இன்றும் அதை அங்கே செல்லும் மக்கள் முயற்சித்து பார்த்து அது வேலை செய்வதை கண்டு அதிசையிக்கின்றனர் என்பது தான். தனியாக முயன்று பார்த்தால் தூக்க முடியாத அந்த கல் 11 பேரின் விரல் மட்டும் பட்டதும் எப்படி தூக்க முடிகிறது என்பது இன்னுமும் மர்மம் தான். வரும் காலத்தில் அதில் ஏதும் விஞ்ஞானம் இருந்து கண்டு பிடிக்க படலாம் ஆனால் இன்று வரை அது ஒரு மர்மம் தான்.

☯ ஒன்பது மர்ம மனிதர்கள் :

உலகில் இலுமிநாட்டி எனும் ரகசிய கூட்டத்திற்கு ஒப்பான ஒரு ரகசிய குழு அசோக பேரராசரால் கிமு 273 இல் உண்டாக்க பட்டதாக சொல்ல படுகிறது. கலிங்க போரில் 1 லட்சம் பேர் கொல்ல பட்டத்தை தொடர்ந்து அரசர் அசோகர் புத்த ஞானியின் சிந்தனையால் ஆட்கொள்ள பட்டு புத்த மதத்தை தழுவியது நமக்கு தெரிந்த வரலாறு தான். ஆனால் அரசாங்கத்தை விட்டு அவர் துறவறம் செல்லலும் முன் அவர் ஒரு 9 பேர் கொண்ட ரகசிய குழுவை உண்டாக்கினார் என்கிறார்கள். அவர்களது வேலை தவறான தகுதி அற்றவர்கள் கையில் அரசாங்கம் செல்லாமல் பார்த்து கொள்வது. மேலும் அவர்கள் 9 பேரும் ஒரு மர்ம புத்தகத்தை பாதுகாக்கும் படி பணிக்க பாட்டார்கள். அந்த புத்தகம் மனோத்துவம் , யுத்த நுணுக்கம், நுன்உயிர் அறிவியல் , தொலை தொடர்பு, வான சாஸ்திரம், ஈர்ப்பு விசை ,போன்ற பல விஷயங்களை உட்கொண்ட அறிவு களஞ்சியம் என்றும். அந்த 9 பேரின் பரம்பரை இன்னுமும் தொடர்வதாகவும் இன்னுமும் ரகசியமாக அந்த புத்தகத்தை பாதுகாப்பதாகவும் சொல்கிறார்கள். ( தகுதி அற்றவர்கள் கையில் அரசாங்கம் போகாமல் பார்த்து கொள்வது தான் அவர்கள் வேலை என்றால் அந்த 9 பரம்பரை தங்கள் வேலையை ஒழுங்காக செய்வதாக தெரியவில்லையே )

☯  எலும்பு கூடுகளின் ஏரி :

"Roopakund " இது கடல் மட்டத்தில் இருந்து 16500 அடி உயரத்தில் இமயமலையில் அமைந்திருக்கின்ற ஒரு மனித நடமாட்டம் அற்ற ஒரு ஏரி.
1942 ஆம் ஆண்டு ஒரு British forest guard அந்த ஏரியில் சில எலும்புகூடுகளை கண்டார். கோடை காலத்தில் பணிகள் கரைந்த நிலையில் தண்ணீரில் மிதந்து கொண்டும் ஆங்காங்கே தொற்றி கொண்டும் கிடந்த எலும்பு கூடுகளை அவர் பார்த்தார். அதன் பிறகு ஆராய தொடங்கிய போது அந்த ஏரி முழுவதுமே மனித எலும்பு கூடுகளால் நிரம்பி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். இத்தனை பேருக்கு கும்பலாக என்ன நடந்து இருக்க முடியும் என ஆச்சர்ய பட்டார்கள் இவர்கள் உலக போரில் கொல்ல பட்ட ஜப்பானிய வீரர்கள் என்று சொல்லி வந்தார்கள் ஆணால் அந்த எலும்பு கூடுகளின் வயதை ஆராய்ந்த போது அது கிபி 850 இல் வாழ்ந்த மனிதர்களின் எலும்பு கூடுகள் என்று தெரிந்தது. இப்படி நூற்று கணக்கான மனிதர்கள் ஒரே நேரத்தில் அந்த ஏரியில் வைத்து ஏன் கொல்ல பட்டார்கள் என்பது ஒரு புரியாத மர்மமாகவே இருக்கிறது.

       ✴           ✴             ✴              ✴

நண்பர்களே இந்த உலகம் நிகழ்வுகளால் நிரம்பியது . அந்த நிகழ்வுகளில் பலது மர்மங்களால்  நிரம்பியது. இந்திய நாட்டை எடுத்து கொண்டாலும் அல்லது எந்த நாட்டை எடுத்து கொண்டாலும் அங்கே வரலாறுகளை நிகழ்வுகளை தோண்ட தோண்ட மர்மங்கள் ஊற்று போல கிடைத்து கொண்டே இருக்கின்றன. தீர்க்க படாத மர்மங்கள் இவ்வுலகில் கணக்கில் அடங்காதவை. மர்மங்களுக்கு முடிவே இல்லை.

மர்மங்களுக்கு முடிவே இல்லை என்றாலும் நமது "மர்மங்கள் முடிவதில்லை "கட்டுரையை நாம் முடித்து தானே ஆக வேண்டும்.
அடுத்த பாகத்தில் முடிக்கிறேன்.

         ✴        ✴         ✴          ✴

கடைசி பார்டில்  பிரமாண்டமாக எதையாவது போடணுமே..!!. எதை போடலாம்....!! ??
ரைட் ' அதை 'பற்றி போடலாம்.....


மர்மங்கள் (இன்னும் ஒரு பாகம்)  தொடரும்............🕷🕷🕷


⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙


☠ "மர்மங்கள் முடிவதில்லை " ☠

(பாகம்:20 : 'மர்மங்கள் முடிவதில்லை )

இக்கட்டுரையின் ஆரம்ப அத்தியாயத்தை நான் பூமி எனும் மர்ம கிரகம் என்று தொடங்கி இருந்தேன். 'அதை பற்றி கடைசி அத்தியாயத்தில் தொடர்கிறேன் 'என்று சொல்லி நிறுத்தி இருந்தேன்.
ஆம் இது நாம் அவ்வபோது கண்டுபிடிக்கும் பல கெப்ளர் கிரகங்களை விட  மிக மிக அபூர்வமான ஒரு மர்ம கிரகம் தான் .  சுற்றி பல கிலோமீட்டருக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தகிக்கும் மணல் நிரம்பிய பாலைவனதில் நடுவே ஒரே ஒரு ஒற்றை ரோஜா பூத்திருப்பதை போல "Observable univerce " என்று சொல்ல கூடிய 9300 கோடி ஒளி ஆண்டுகள் அளவு பரவிய பாலைவனத்தில் ஒற்றை ரோஜாவாய் நீரும் ,காற்றும், பசுமையும் விலங்குகளையும் பறவைகளையும்  ,உங்களையும் என்னையும் கொண்ட ஒரு உயிருள்ள கிரகமாக பூமி இருப்பது மிக பெரிய மர்மங்களிலும் மர்மம். கிட்ட தட்ட 50... 55  வருடங்களாக தேடி கொண்டிருக்கின்றோம் . இவ்ளோ தூரத்துக்கு ஒருத்தன் கூடவா துணைக்கு இல்லை ??

இதை பற்றி பல கோட்பாடுகள் உண்டு
அதில் Fermi paradox கள் மிக பிரபலம்.
இந்த தலைப்பை பற்றி பல பேர் பல கருத்துக்கள் சொல்லி இருந்தாலும் இப்போது நாம் குறிப்பாக Fermi யை நாடுவதற்கு காரணம் உண்டு. அதை அறிய முதலில் fermi பற்றி 4 வரிகள் தெரிந்து கொள்வோம்.

இவர் ஒரு Italian-American physicist . முழு பெயர் Enrico Fermi.
statistical mechanics  இல் புகழ் பெற்ற இவர் தான் நியூட்ரினோவின் இருப்பை பற்றி முதலில் எடுத்து சொன்னவர். உலகின் முதல் நியூக்ளியர் ரியாக்டரை கட்டமைத்தது வேறு யாரும் அல்ல இவர் தான். மேலும் "manhattan project " பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள் அதாவது முதல் அணுகுண்டு உருவாக்கம் அதிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. 1938 நோபல் பரிசை பெற்ற விஞ்ஞானி இவர்.
இவரிடம் ஒரு தனி தன்மை இருந்தது அதாவது சின்ன சின்ன நடைமுறை  டேட்டாகளை வைத்து பெரிய பெரிய விஷயங்களை கணிபதில் கில்லாடி.
உதாரணமாக முதல் அணுகுண்டு சோதனையின் போது அதன் சக்தி என்னவாக இருந்தது என்பதை பிற்பாடு நிறைய ஆய்வுகள் எல்லாம் செய்து பார்த்து சொன்னார்கள் ஆனால் வெடி நடந்த நேரத்தில் fermi காற்றில் சில சின்ன சின்ன துண்டு காகிதங்களை பறக்க விட்டு வேடிக்கை பார்த்து விட்டு அது காற்றில் பயணிக்கும் தூரத்தை வைத்து காற்று அழுத்தம் மாறுபாட்டையும் அதன் மூலம் வெடிப்பின் சக்தியையும் கிட்ட தட்ட சரியாக அப்போதே ஆய்வுகள் ஏதும் இன்றி சொன்னார்.

அப்படி பட்டவர் 1950 இல் இந்த பிரபஞ்சத்தில் நாம் நோக்கி இன்று வரை நாம் அறிய கிடைத்த தகவலை வைத்து சொன்ன சில (ஒன்றுக்கொன்று முரண்பாடான) கருத்துக்கள் தான் Fermi paradox.

முதலில் ubservable univarse பற்றிய சில சின்ன சின்ன( ! ?) டேட்டாகள் :
முதலில் இந்த அண்டதின் வயது எவ்ளோ தெரியுமா ? 13.82 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது இந்த பிரபஞ்சம் தோன்றி. அதாவது 1382 கோடி ஆண்டுகள்.  பிக் பேங் வெடிப்புக்கு பின் பிரபஞ்சம் விரிவடையும் வெகம் கூடி கொண்டே போவதால் இன்று நமது பிரபஞ்சம் 9300 கோடி ஒளியாண்டுகள் அளவு பறந்து விரிந்துள்ளது.  இந்தளவுக்கான பரப்பளவை கற்பனை செய்வது கடினம். இது மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு அளவு. இதில் உள்ள மொத்த நட்சத்திரத்தின் எண்ணிக்கையை எழுத நீங்கள் 10 பக்கத்தில் 26 சைபர் போட்டு பிறகு அதனை septillian களாக மாற்ற வேண்டும். (மொத்தமாக ஒரு 60 சைபருக்கு மேல் தேறும்.)
அண்டத்தில் உள்ள மொத்த காலக்சியின் எண்ணிக்கை 100 பில்லியன்.  இதில் 50 sextillian பூமி போன்ற கிரகங்கள் உள்ளன.

நம்ம பால் வெளி திரள்வரை மட்டும் பார்த்தோமேயானால் கூட 100 இலிருந்து 400 பில்லியன் நட்சத்திரங்களும் 100 பில்லியன் பூமி போன்ற கிரகங்களும் இருக்கின்றன. நமது கேலக்சியின்  வயது 13.21 பில்லியன் ஆண்டுகள். இதன் பரப்பளவு 1 லட்சம் ஒளி ஆண்டுகள் அளவு அகலம்.
இந்தளவு கற்பனைக்கு எட்டாத பரப்பளவில் நாம் மட்டும் தான் தனி ஆள் என்பது முட்டாள் தனமான கருத்து என்கிறார் பெர்மி . அவர் கருத்து படி 1ஐ தொடர்ந்து 16 சைபர் போட்டு அந்தளவு எண்ணிக்கையிலான மேம்பட்ட உயிரினங்கள் இந்த அண்டத்தில் இருக்கலாம் என்கிறார்.
சரி அப்படியானால் ஏன் நம்மை தவிர வேறு யாரும் கண்ணுக்கு தெரியவில்லை?  அதற்க்கு பல காரணங்கள் சொல்கிறார் Fermi.
வரிசையாக சிலதை பார்ப்போம்.

☯ இந்த பூமி உருவாகி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. நாம சில லட்சம் வருடமா தான் இங்க இருக்கோம். ஆதாவது நமக்கும் முன்பு பல கோடி ஆண்டுகள் ஏலியன் இந்த கிரகத்தை ஆண்டு அனுபவித்து விட்டு போய் விட்டன நாம தான் இங்க கால தாமதமாய் வந்து இருக்கிறவங்க.

☯ கினற்றுக்குள் இருக்கும் தவளை எவ்ளோ சுத்தி வந்தாலும் வெளி உலகில் உள்ள உயிரினம் பற்றி அவைகளால் அறிய முடியாது என்பதை போல வெளி என்பது நம் அறிவுக்கு எட்டியத்தை விட மிக பெரியது . இதில் வெளியில் ஒரு குறிப்பிட்ட தொலைவு தாண்டி நம்மால் எதையும் கண்டுகொள்ள முடியாத படி தனிமை படுத்த பட்ட ஒரு இடத்தில் தான் நாம் வாழுகிறோம். நாம் அறிந்த அண்டம் வெறும் ஒரு கிணறு தான்.

☯ நம்மை போல சாதாரணமாக வாழ்வது குடியிருப்பு அமைப்பது இதெல்லாம் "அவர்களை "பொறுத்த வரை மிக மிக பின் தங்கிய நிலை... காரணம் அவர்கள் நம்மை போல பழைய மாடலாக வெறும் 3 டைமன்ஷனில் வாழ்பவர்கள் அல்ல. அவர்கள் நம்மால் இப்போதைக்கு அண்டமுடியாத வேறு வகை உயர்ரக பரிமாணத்தில் வாழ்பவர்கள். பிரபஞ்சத்தை நம்ம ரேஞ்சுக்கே வச்சி யோசிக்கறது நமது பிழை

☯ அங்கே ரெண்டு வகை ஏலியன்கள் உள்ளார்கள் அதில் ஒருவகை வேட்டையாடுபவை...ஆக்ரமிப்பவை. அதனால் மற்ற சாதா வகை வேற்று ஜீவிகள் தங்கள் இருப்பை மற்றும் இருப்பிடத்தை காட்டி கொடுக்கும் எந்த சிக்னலையும் அவைகள் வெளியிடுவது இல்லை.

☯ நம்மால் வெறும் காதால் கேட்க முடியாத கண்ணால் பார்க்க முடியாத ஆனால் நம்மை சுற்றியே இருக்கும் ஒரு ரேடியோவின் மின்காந்த அலை போல அவைகள் அண்டத்தில் நம்மை சுற்றி பரவி இருக்கிறார்கள் அவர்களை கண்டு கொள்ளும் அளவு நமக்கு தான் தொழில்நுட்பம் போதவில்லை

☯ மானின் நடமாட்டத்தை ஒளிந்திருந்து கவனிக்கும் ஒரு புலி போல அவர்கள் தங்களை வெளிப்படுத்தி கொள்ளாமல் நம்மை முற்றுலுமாக கண்காணித்து கொண்டு தான் இருக்கிறார்கள். நாம் அவர்களை ஆராய்வதை பற்றியும் அவர்களுக்கு தெரியும்.

☯ இது கொஞ்சம் சுவாரஷ்யமானது... அதாவது அவர்கள் நம்மை எப்போதோ தொடர்பு கொண்டு விட்டார்கள் நாமளும் பதில் சொல்லியாச்சு... அதனுடன் சில பல ஒப்பந்தம் கூட போட்டாச்சு ஆனால் நம்ம அரசாங்கம் அதை நம்மிடம் இருந்து  மறைக்கிறது .

☯ மேம்பட்ட உயிரினங்கள் நிறையவே இருக்கின்றன ஆனால் அதீத இடைவெளி காரணமாக நாம் அவர்களை இன்னும் அடைய முடியவில்லை.  ரொம்ப தொலைவில் உள்ளார்கள்.

இப்படி போகிறது Fermi Paradox .
அண்டத்தை பொறுத்த வரை அதன் மர்மத்தை கண்டுபிடிப்பது இன்றைய மனிதனுக்கு சாத்தியம் இல்லை என்றே படுகிறது. அண்டத்தை ஒப்பிடும் போது மனிதனின் கால கட்டம் மிக சின்னது. ஒரு 1 லட்சம் பக்கம் கொண்ட மகா புத்தம் ஒன்றில் இரு வரிகளை படித்து விட்டு கதை புரியவில்லையே என்று சொல்வது போல நாம் இந்த குறுகிய கால கட்டத்தை அளந்து ஒன்றும் கிடைக்காமல் தினறுகின்றோமா ?? நிஜமான கதை மொத்த மனிதன் இனம் அழிந்தும் பல கோடி ஆண்டுக்கு பின் தான் தொடங்க இருக்கிறதா ..? அல்லது நாம் தான் வெறும் ஆரம்பமா மற்றவைகளின் வரவு இனி தானா ?
அவ்வபோது பூமியை பார்வையிடுவதாக சொல்ல படும் ஏலியன்கள் எல்லாம் யார் அது நாமே தானா ?? அதாவது எதிர்காலத்தில் மேம்பட்ட இனமாக மாறிய நாம் டைம் டிராவல் செய்து நம்மையே கடந்த காலத்தில் காண அவ்வபோது வருகை தருகிறோமா ?? அல்லது நாம் பார்க்கும் உணரும் மொத்த பிரபஞ்ச நிதர்சனமும் ஒரு மாய தோற்றமா? ???

பிரபஞ்சத்தின் மர்மங்களுக்கு முடிவே இல்லை.

       ✴             ✴              ✴             ✴

நண்பர்களே !  கட்டுரை என்ன அமானுஷ்யத்தில் இருந்தும் மர்மத்தில் இருந்தும் அறிவியலுக்கு தாவி விட்டதே என்று நினைப்பவர்களுக்கு... என்னை பொறுத்த வரை அமானுஷ்யமும் அறிவியலும் வேறு அல்ல.
 ஒரு குறிப்பிட்ட  விஷயம் அது விளக்க படும் வரை அமானுஷ்யமாக இருக்கிறது. விடை கிடைத்து விளக்க பட்டவுடன் அவை அறிவியல் உண்மையாகி விடுகின்றன. (என்ன தான் அமானுஷ்யத்தில் ஆரம்பித்தாலும் அறிவியலில் வந்து முடித்தால் தான் நமக்கும் ஒரு திருப்தி )
இதில் அமானுஷ்யம் என்பவை அறிவியலை விட அதிக ஈர்ப்பை ஏற்படுத்து கின்றன. இதில் நாம் கவனமாக இருக்க வேண்டிய இடம் ஒன்றை பற்றி நான் கொஞ்சம் பகிர விரும்புகிறேன்.

அதாவது நாம் பரபரப்பு விறுவிறுப்பு  விரும்பியா அல்லது 'உண்மை விரும்பியா ' என்பது தான் அது. இதை நான் சொல்ல காரணம் உலகில் பேய் கதைகள் ..புரளிகள்... அமானுஷ்யங்கள் பெரும்பாலும் இந்த பரபரப்பு விரும்பிகளால் தான் பேச படுகின்றது.
மர்மங்களை இரு வகையினரும் அதிகம் விரும்புவார்கள் ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.

ஒரு உண்மையை ஆராயும் மன நிலையும் அறியும் தேடலும் கொண்ட ஒருவர் மர்மத்தை விளக்கி உண்மையை அறிவதில் அந்த மர்மத்தை நீர்த்து போக செய்வதில் அதிகம் ஆர்வம் கொள்கிறார். ஆனால் ஒரு பரபரப்பு விரும்பி மர்மத்தை அழிய விடாமல் காப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார். இன்று பெர்முடாவின் மர்மம் முற்றிலும் விஞ்ஞானிகளால்  விளக்க பட்டுவிட்ட பின்பும் "இல்லை அதெல்லாம் இல்லை பெர்முடாவில் மர்மம் உள்ளது . இல்லை என்றால் கப்பல் எப்படி காணாமல் போகும் "?  என்று இவர்கள் தொடர்ந்து சொல்லுவார்கள். இவர்களை பொறுத்த வரை இவ்வளவு நாளாக பரபரப்புக்கு தீனி போட்ட பெர்முடாவை விளக்கி விடுவதில் கொஞ்சம் வருத்தம் இவர்களுக்கு.

நீங்கள் மர்மத்தை தொடர்ந்து நீடிக்க விரும்புகிறீர்களா அல்லது அதில் உள்ள மர்மத்தை ஆராய்ந்து உண்மையை கண்டு அந்த மர்மத்தை அழிக்க ஆசை கொள்கிறீர்களா என்பதில் கவனமாக இருங்கள். காரணம் உலகில் உண்மை அறியும் ஆவல் துளியும் இல்லாத பரபரப்பு விரும்பிகள் பலரால் தான் தொடர்ந்து புரளிகள் கட்டுக்கதைகள் கிளப்ப படுகின்றன .உண்மையான அறிவியல் விரும்பிகளுக்கு எதிரிகள் இவர்கள்.
நீங்கள் ஒரு போதும் பரபரப்பு விரும்பியாக இல்லாமல் உண்மை விரும்பியாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை..

மர்மங்கள் அழகானவை....
மர்மங்கள் சுவாரஸ்யமானவை..
மர்மங்கள் ஆவலை தூண்டுபவை...
அவற்றை அறிவு தேடலுக்கு பயன் படுத்துமாறு கேட்டு கொண்டு கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
அடுத்து வேறு தலைப்பில் சந்திக்கும் வரை..

உங்கள் அன்பு நண்பன்
அறிவியல் காதலன்
ரா.பிரபு.  🙏












Comments

  1. Super i could not stop reading from start to end. Very nice.

    ReplyDelete
  2. எழுத்தாளர் மதன் மனிதனும் மர்மங்களும் என்ற புத்தகத்தை படித்திருக்கிறீர்களா?உலகின் பல அமானுஷ்யங்களை பற்றி அற்புதமாக விளக்கி இருப்பார்.ஆச்சர்யங்கள் முடிவதில்லை.

    ReplyDelete
  3. Semma intresting bro. Waitng 4 nxt edition

    ReplyDelete
  4. சூப்பர் அண்ணா

    ReplyDelete
  5. Brother...can i share this story through videos at youtube..with ur permission..with mentioning ur name?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"