தேடல் கேள்விகள்













 "தேடல் கேள்விகள் "


அறிவியல் காதலன் 

ரா.பிரபு.          


நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த தேடல் கேள்விகள் நமது" தேடல் திடல் " என்கிற முக நூல் பக்கத்தில் அவ்வபோது நண்பர்கள் கேட்ட கேள்விகளில் ஒரு 10 கேள்விகளுக்கு நான் கொடுத்த பதில்களின் தொகுப்பு ஆகும்.

நல்ல கேள்விகளே நல்ல பதிலை கொடுக்க உதவுகின்றன. கேள்வி கேட்ட அனைவருக்கும் நன்றி அதை படித்து பயனடைய போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கேள்விகள் மூலம் தேடலை தொடருவோம்.


💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥


"தேடல் கேள்விகள்  "


(கேள்வி : 1 )


〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰


🎯 கேள்வி : உயிர்கள் வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் ??



-கார்த்திக் கோயமுத்தூர் -



〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰



 ✍️பதில் : வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு போவதற்கு முன் வலியை உணரும் உலகத்தைப் பற்றி சில விஷயத்தைப் பார்ப்போம்.


உயிரினங்களுக்கு வலிகள் தொல்லையை கொடுப்பதற்கு படைக்கப்பட்டது அல்ல.  அவைகள் மிகச்சிறந்த உயிர்காக்கும் கட்டமைப்புகள் .அவைகள் நமது உடலில் கொடுக்க பட்டுள்ள Survival Mechanism .



உலகில் மிக அபூர்வமாக சில குழந்தைகள் நீங்கள் கேட்டது போல வலியை உணராத உயிரிகளாக பிறப்பது உண்டு ஆனால் அந்த குழந்தைகள் அதிக நாள் தாக்குப் பிடித்து உயிர் வாழ்வது இல்லை.  வலி எனும் சர்வைவல் மெக்கானிஸம் உயிர் வாழ மிக முக்கியம் .



"உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய அவசரம் " -என்று மூளை உடலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம்தான் வலி.


உடலில் ஏதாவது ஒரு பகுதி காயமடைந்தால் அந்த பகுதியில் இருந்து சிக்னல் நமது மூளைக்கு செல்கிறது என்பதை நாம் அறிவோம்.


இதில் ஒரு சின்ன ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நாம் உணர்வதைப் போல வலி என்கின்ற ஒன்றை அந்த அடிபட்ட பாகம் நமக்கு தருவதில்லை. அவைகள் இப்படி ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கிறது என்ற தகவலை மூளைக்கு நரம்புகள் மூலமாக அனுப்பி வைக்கின்றன அவ்வளவு தான். அதை ஆராய்ந்து பார்த்து வலி என்கின்ற உணர்வை நமக்கு கொடுப்பது மூளையின் வேலை தான்.



ஒரே மாதிரியான காயத்திற்கு ஒரே மாதிரியான வலியை மூளை தருவதில்லை என்பது இன்னொரு ஆச்சரியம். அவைகள் அந்த வலி தொடர்புடைய பழைய வரலாறு புரட்டி பார்க்கின்றன அந்த மனிதனின் உணர்வுகளை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. காயம் ஏற்பட்ட சூழலைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன இவையெல்லாம் வைத்து அலசி ஆராய்ந்து எவ்வளவு வலியை எப்போது தரவேண்டும் என்று மூளை முடிவு செய்கிறது. உதாரணமாக ஒரு விளையாட்டு வீரன் மிக கடுமையாக அடி பட்டாலும் அந்த விளையாட்டு முடியும் வரை அவன் அந்த வலியை உணராமல் இருப்பது பல முறை நடக்கிறது. அது வரை விளையாடி கொண்டு இருந்தவன் விளையாட்டு முடிந்த பின் காலை ஊன்ற கூட முடியாமல் அவதி படுவதை பார்க்கலாம். பலமுறை சுறாவால் கடிபட்டு கையை இழந்தவர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறது.



அடியே பட்டு இருந்தாலும் மூளை தகவலை கொடுக்கவில்லை என்றால் வலியை நாம் உணர மாட்டோம் என்பதை போல இந்த உண்மை தலைகீழாக நடப்பதும் உண்டு . அதாவது எந்த காயமும் இல்லாத ஓரிடத்தில் காயம் இருப்பதாக மூளை சொல்லமுடியும் சிலநேரம் குழம்பிப்போய் அப்படி சொல்வது உண்டு. ஒரு போரில் ராணுவ வீரன் தனது கால் கட்டை விரலில் கடுமையான வலி இருப்பதாக இரவு முழுவதும் கதறிக் கொண்டு இருந்த கதையைச் சொல்வதுண்டு என்ன ஆச்சரியம் என்றால் அவரது முழு காலையே வெட்டி எடுத்து விட்டார்கள் ஆனால் அவன் தொடர்ந்து தனது கால் கட்டைவிரலில் கடுமையான வலி இருப்பதாக சொல்லி கொண்டே இருந்தான். ஆம் இல்லாத கட்டைவிரலில் வலியை உணர வைக்க கூட மூளையால் முடியும்.



பொதுவாக ஆண்களைவிட பெண்கள் அதிக வலியை உணர்வதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதற்கு காரணம் ஆண்களைவிட பெண்கள் அதிக  உணர்வுகளை கொண்டிருப்பதுதான்.


நம்மைப் போலவே பாலூட்டி விலங்குகள் வலியை உணரும் போது முகத்தில் உணர்வுகளை காட்டுகின்றன. ஊர்வன வகுப்பை சேர்ந்தவர்கள் வலியை உணர்ந்தாலும் அவைகளால் உணர்வை காட்ட முடிவதில்லை. ஆனால் வலியை மறக்கடிக்கும் மருந்துகள் நம்மைப்போலவே அவைகள் உடம்பிலும் வேலை செய்கிறது.



சரி ஒரு கேள்வி ... எறும்புகள் போன்ற சிறு பூச்சிகள் வலியை உணருமா?


பலவகையான பூச்சிகள் வலியை ஏதும் உணர்வது இல்லை என்பதுதான் உண்மை. காரணம் வலி சிக்னலை மூளைக்கு அனுப்பும் நரம்பமைப்பு போன்ற கட்டமைப்பு ஏதும் அவைகள் உடலில் இருப்பதில்லை.



வலியின் அளவை அளக்க முடியுமா அதற்கான அளவீடு ஏதும் உண்டா ??


ஆம் உண்டு வலியின் அலகு dol. (வலிக்கான Latin வார்த்தை dolor இல் இருந்து வந்தது )  பல இடங்களில் del என்று குறிப்பிடுவதை பார்க்கலாம்..


இதை எப்படி அளக்கிறார்கள்.??


தொழில்நுட்பம் கொஞ்சம் வளராத காலத்தில் வலியை அளப்பதற்கு கையில் நிஜமாக சூடு வைத்தார்கள் அதன்பின் சிறிது நாட்களுக்கு கையில் அழுத்தத்தை கொடுத்து அளந்து பார்த்தார்கள்..  நல்லவேளையாக இப்பொது எளிய வழியை கண்டுபிடித்து விட்டார்கள். இப்போது அதை எப்படி அளக்கிறார்கள் தெரியுமா ?


வலி நேரத்தில் மூளையை படம் பிடிப்பதன் மூலம். அந்த நேரத்தில் மூளை கொண்டிருக்கும் சென்ஸ் ஐ கவனிப்பதன் மூலம் அந்த நேரம் உடல் உணரும் வலியின் அளவை கணக்கிட முடியும். .  (உடல் முழுக்க வலியைக் கொடுக்கும் மூளையில் வலி உணரும் நரம்புகள் இல்லை மூளையை அப்படியே வெட்டி எடுத்தாலும் கூட மனிதனுக்கு துளியும் வலிக்காது )



வலியை உணராத படி இருப்பது நல்ல உடலுக்கு அறிகுறி அல்ல அது ஒரு நோய் அந்த நோயின் பெயர் congenital insensitivity to pain with anhidrosis, அதாவது சுருக்கமாக CIPA . இந்த நோயாளிகள் துளியும் வலியை உணர்வது இல்லை.



மன்னிக்கவும் நீங்கள் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொன்னதாக தெரியவில்லை நீங்கள் கேட்டது போல உயிர்கள் வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் ??


விடை : நாம் நினைப்பதைப் போல வலியில்லாமல் இன்பமாக இருந்து இருக்காது மாறாக வாழ்வதே கடினமாக இருந்திருக்கும் என்பதுதான் சுருக்கமான விடை.



சரி நண்பர்களே... உங்களுக்கு ஒரு சின்ன கேள்வி ...


வலியை உணராத நோய் இருப்பதைப் பற்றி சொன்னேன் இதற்கு எதிரான ஒரு நோய் ஒன்று உண்டு. அந்த நோய் இருப்பவர்களை உடலில் மெதுவாகத் தொட்டாலோ சீண்டினாலோ ..ஏன் தலையைக் கோதினாலோ கூட வலியால் துடிப்பார்கள் அந்த நோயின் பெயர் என்ன தெரியுமா ?


விடை : Allodynia 


💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥


தேடல் கேள்விகள்" 

(கேள்வி 2 )

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 

🎯 கேள்வி : Bro van allen belts patri konjam post podunga regardings to nasa moon landing


-Raj kumar ips -

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰


✍️ பதில் : ஒரு நாட்டிற்கும் அடுத்த நாட்டிற்கும் உள்ள எல்லை பகுதியை கடக்க முயன்றால் அங்கே எல்லையில் பாதுகாப்பும் கெடுபிடியும் ஆபத்தும் அதிகம் இருப்பதை போல... பூமியை கடந்து வெளியில் செல்ல வேண்டும் என்றால் பூமியின் எல்லையில் அதாவது பூமியில் இருந்து கிட்ட தட்ட ஒரு 1000 கிலோ மீட்டருக்கு மேல் ஒரு ஆபத்தான பகுதி ஒன்று உள்ளது.


நமது பாட புத்தகத்தில் காந்தத்தின் படத்தை பார்த்து இருப்பீர்கள். காந்தத்தின் இரண்டு முனைகளிலும்  காந்த புலம் அரைவட்ட வடிவில் வரைந்து இருப்பார்கள். கண்ணால் பார்க்க முடியா விட்டாலும் உண்மையில் ஒரு காந்தத்தை சுற்றி அதன் புலம்  மாய உருவில் அந்த வடிவத்தில் தான் இருக்கும்.

நமது இந்த பூமி ஒரு மிக பெரிய காந்தம் என்று நமக்கு தெரியும் எனவே இதற்கும் அந்த புல வடிவம் இருக்கிறது.

அந்த புலத்தில் கண்ணுக்கு தெரியாத இரண்டடுக்கு பாதுகாப்பு வளையம் ஒன்று உள்ளது . நமது எல்லையை பாதுகாக்கும் அந்த பாதுகாப்பு வளையம் தான் "van allen belt "


1958 ஆம் வருடம் அது...

Explorer 1 என்ற U.S செயற்கைகோள் ஒன்று கதிர்வீச்சை அளக்கும் கருவி மற்றும் ஒரு டேப்ரிகார்டர் சகிதம் ஏவ பட்டது.  அதில் கிடைத்த தகவல்களை வைத்து முதல் முதலில்

Lowa பல்கலை கழகத்தை சார்ந்த இயற்பியலாளர் ஒருவர் இந்த மாதிரி பெல்ட் இருப்பதை கண்டு பிடித்து சொன்னார். அந்த ஆய்வாளர் பெயர்

"James Van Allen " எனவே அந்த பெல்ட்டுக்கு  van allen பெல்ட் என்ற பெயரை வைத்து விட்டார்கள்.


அதற்க்கு பின் அடுத்தடுத்து 3 செயற்கைக்கோள்கள் ஏவ பட்டன

(Explorer 3, Explorer 4 மற்றும் Pioneer )

இவைகள் கண்டு சொன்ன உண்மை மூலமாக தான் அந்த பெல்ட் ஒன்று அல்ல மொத்தம் 2 என்பதை கண்டு கொள்ள முடிந்தது. அதன் பிறகு 2012 இல் அனுப்ப பட்ட van allen probe மூலம் மேலும் பல உண்மைகள் அறியப்பட்டன்.

உண்மையில் பெல்ட் 2 மட்டும் அல்ல 3 ஆவதாக ஒரு தற்காலிக பெல்ட் அவ்வபோது தோன்றி மறைவதையும் கண்டார்கள்.


சரி இந்த பெல்ட் அப்படி என்ன தான் பாதுகாப்பை தருகிறது.. ? எந்த ஆபத்தில் இருந்து இது நம்மை காக்கிறது??

நாம் குளிர்காலத்தில் இதமாக வெயிலில் நிற்கிறோம் ...நினைத்தபோது எல்லாம் வெயிலில் ஜாலியாக நடக்கிறோம் அல்லவா. ஒருவேளை நீங்கள் செவ்வாயில் இருந்தால் இதுபோன்ற வெயிலில் எல்லாம் நிற்க முடியாது  அதற்குக் காரணம் சூரியனின் ஒளி உண்மையில் மனித உடலுக்கு ஏற்றது அல்ல . அது உடனடி புற்றுநோயை கொடுக்கக்கூடியது.


வேகமான காற்றில் அடித்துக் கொண்டு வரும் ஒரு தூசு மண்டலத்தின் நடுவில் நீங்கள் நிற்பதாக கற்பனை செய்யுங்கள் அப்படி சூரியனில் இருந்தும் இதர நட்சத்திரங்களில் இருந்தும் எல்லா நேரமும் வந்து கொண்டிருக்கும்  தீங்குவிளைவிக்கும் பல துகள் மண்டலத்திற்கு நடுவில் தான் பூமி நின்று கொண்டிருக்கிறது . (சரி.... சரி... சுழன்றுகொண்டிருக்கிறது.)

இந்த பயங்கர துகளை தடுத்து நிறுத்தும் கேடயமாக நமக்கு இயற்கை கொடுத்து இருக்கும் கொடை தான் "van allen belt "


இந்த துகள்கள் எல்லாம் சூரியனில் உண்டாகும் சூரிய புயலில் இருந்து கிளம்பி வரக்கூடியவை. அவைகள் என்ன ஐட்டம் என்று பார்த்தால் எல்லாம் சார்ஜ் பார்ட்டிகள் , எனர்ஜி பார்ட்டிகல் ,ஐயான்கள், காஸ்மிக் கதிர்கள், மின்னேற்றம் பெற்ற துகள்கள், ஆல்பா துகள்கள். இவைகள் எல்லாம் பாதுகாப்பு அரண் இல்லாமல் பூமிக்கு  அனுப்ப பட்டால் என்ன ஆகும் தெரியுமா ?


சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பூமியில் எந்த உயிரினமும் இல்லாமல் சுத்தமாக துடைத்து விடும்.

ஆம் இவைகள் முதலில் வளிமண்டலத்தில் உள்ள காற்றை கிழித்து பிரித்து அவைகளை கரைத்து பூமிக்கு வளிமண்டலமே இல்லாமல் செய்ய கூடியவை (காந்த புலம் போதிய வலிமையில் இல்லாததால் செவ்வாய்க்கு இந்த கதி தான் இப்போது நேர்ந்து உள்ளது. ) பூமியில் உள்ள மொத்த உயிரினங்களுக்கும் ஒரு உலகளாவிய புற்றுநோயை இவைகள் உண்டு பண்ணும். காஸ்மிக் கதிர்கள் நேரடியாக உங்களை தீண்டினால் நீங்கள் உங்கள் கண்களை இறுக்கி மூடினாலும் மூடிய கண்ணுக்குள்  பயங்கர வெளிச்சத்தை காண முடியும்.

(சில astronaut கள் தங்களை cosmic ray கடந்து செல்லும் போது மூடிய கண்ணுக்குள் பிளாஷ் வெளிச்சத்தை பார்த்ததாக சொல்லி இருக்கிறார்கள் )

இந்த காஸ்மிக் கதிர்கள் நமது D.N.A

வையே பாதித்து அவைகளை மாற்றி அமைக்க கூடியவை.

அப்புறம் குறிப்பாக நமது தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் மின்சாரத்தை ஸ்தம்பிக்க செய்யும்.

அதாவது இவைகளை பூமிக்கு தொடர்ந்து அனுமதித்தால் இவைகள் படிப்படியாக பூமியில் உயிரினங்கள் ,வளிமண்டலம் ,கடல், காற்று ..தொழில்நுட்பம்....எல்லாவற்றையும் துடைத்து எறிந்து கால போக்கில் பூமியை பாலைவனமாக்கிவிடும்.


இப்படி பட்ட ஆபத்துகளில் இருந்து தான் van allen பெல்ட் நம்மை காத்து வருகிறது.

இரண்டு பெல்ட் இருப்பதாக சொன்னேன் . அதில் பூமியை ஒட்டிய  முதல் பெல்ட் (inner belt) கிட்ட தட்ட 1000 கிலோமீட்டர் தொடங்கி 6000 கிலோ மீட்டர் வரை இருகிறது .  இங்கே தான் அதிக சக்தி வாய்ந்த charge partical கள் தடுத்து நிறுத்த படுகின்றன . காரணம் வெளி அடுக்கை மீறி உள்ளே நுழைந்த கொலைகார துகள்கள் இங்கே தடுத்து நிறுத்த படுகின்றன.  இங்கே அதிகம் காண படுவது சார்ஜ் செய்ய பட்ட புரோடான்கள். இவைகள் 10 யிலிருந்து 100 மெகா எலெக்ட்ரான் வோல்ட் (100 mev ) சக்தியை கொண்டவை.

(ஒரு Electron volt என்பது ஒரு வோல்ட் மின்சாரத்தில் முடுக்கம் பெரும் ஒரு எலக்ட்ரானால் செய்ய படும் வேலையில் வெளி படும் ஆற்றலின் அளவு. )


வெளி அடுக்கில் குறைந்த சார்ஜ் புரோட்டானும் அதிக சார்ஜ் எலக்ட்ரானும், ion களும் காண படுகின்றன இவைகளின் சக்தி 10 kev முதல் 10 mev வரை .

நமது இந்த பாதுகாப்பு பெல்ட் எப்போதும் ஒரே மாதிரி நிலையான அளவில் வடிவம் கொண்டிருப்பதில்லை இவைகள் எப்போதும் அளவு மாறிக் கொண்டே இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் மனிதன் பயன்படுத்தும் low frequency டிவைஸ்கள் (உதாரணமாக நீர்மூழ்கியை தொடர்பு கொள்ளும் தொலைத்தொடர்பு சாதனம் ) இவைகளை ஓரளவு பாதிக்கின்றது. இவற்றைச் சுற்றி ஒரு bubble ஐ உண்டு பண்ணுகிறது.


பொதுவாக இந்த van allen பெல்ட் ஆபத்தான சார்ஜ் பார்டிகல்களை கொண்டிருப்பதால் இந்த பகுதியை கடக்க ஸ்பேஸ் ஷிப்கள் அதீத பாதுகாப்பு கேடயத்தை கொண்டிருக்க வேண்டியது முக்கியம்.

அதுவும் மனிதர்கள் செல்லும் விண்கலம் என்றால் ஆபத்து இன்னும் அதிகம். தற்போது  மனிதர்களை ஆபதில்லாமல் இந்த அபாய எல்லையை கடக்க orian வகை  விண்கலங்களை தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள்.


இப்போது உங்களில் பலருக்கு அந்த நியாயமான சந்தேகம் வந்து இருக்கலாம். " இப்போ தான் மனிதன் வான் ஆலன் எல்லையை கடக்க ஆராய்ச்சி நடக்கிறதா அப்படி என்றால் 1969 இல் மனிதனை நிலவுக்கு அனுப்பிய அப்போலோ விண்கலம் எப்படி இதை கடந்தது .??"


இந்த கேள்வியை நாசாவுக்கு கேட்டால் அது பல பதில்கள் வைத்து இருக்கிறது என்றாலும் அதன் மைண்ட் வாய்ஸ் " நாங்க நிஜமாவே நிலவுக்கு போய் இருந்தா தானே பாஸ் அதை பற்றி கவலை படுவதற்கு " என்று இருப்பதாகவே தோன்றுகிறது.


💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥


"தேடல் கேள்விகள்"

(கேள்வி  : 3) 

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰


  🎯கேள்வி : நாம் இறந்த பிறகு நமது ஆத்மா என்ன செய்யும் 


-Sajikumar cpv-


〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰️〰️〰️


  ✍️பதில் :  அறிவியல் ரீதியாக இதற்க்கு பதில்  வேண்டும் என்றால் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும் . ஆம் அறிவியலில் இதற்க்கு சரியான விடை இன்று வரை கண்டு பிடிக்க பட வில்லை என்றாலும் முடிந்த அளவு அறிவியல் கொண்டு பதில் சொல்ல முயன்று பார்க்கிறேன்.


அறிவியலில் பல கோட்பாடுகள் உண்டு அதே போல பல விதிகள் உண்டு. இதில் இந்த கோட்பாடுகள் என்பது காலத்தால் மாற கூடியது ... ஏன் பல நேரம் இது வரை சொல்லி வந்த கோட்பாடுகள் முற்றிலும் பொய் என்றும் நிரூபிக்க கூடியது. (உதாரணமாக சூரியன் தான் பூமியை சுற்றுகிறது என்பது ஒரு காலத்தில் அறிவியல் கோட்பாடு ஆனால் அதன் பின் அது முற்றிலும் பொய் பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்று மாறியது )


ஆனால் விதிகள் அப்படி அல்ல நாம் அறிவியல் விதிகள் என்று சொல்வது எல்லாமே இயற்கையின் விதிகள் தான் அவைகள் ஒரு போதும் மாறாது.

உதாரணமாக ஈர்ப்பு என்பது ஒரு விதி. Thermodynamic ஒரு விதி . Thermodynamic இல் entropy படி பிரபஞ்ச ஒழுங்கு இருக்க இருக்க சிதைந்து கொண்டே செல்கிறது என்று சொல்கிறது என்றால் அந்த விதி பல கோடி ஆண்டுகள் தாண்டியும் மாறாது.

சரி விஷயத்துக்கு வருவோம்.


இன்று காலை நீங்கள் 10 புஸ் அப் செய்து இருந்தால் அதற்க்கு உங்கள் உடல் செலவிட்ட அந்த ஆற்றல் இருக்கிறதே அது பல கோடி கிலோமீட்டர் தாண்டி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சூரியனில் உண்டான ஆற்றல் என்பது தெரியுமா? அந்த ஆற்றல் அங்கே இங்கே என கடந்து கடைசியாக நேற்று இரவு நீங்கள் சாப்பிட்ட இட்லி மூலமாக உங்கள் உடலை அடைந்து இருந்தது.

உங்களுக்குள் நீங்கள் கவனித்து பார்த்தால் உங்கள் உடலில் இரு வகை ஆற்றல்கள் இருப்பதை கவனிக்கலாம் ஒன்று மேலே நாம் பார்த்த உடலை இயக்கும் ஆற்றல். இன்னொன்று ஒரு வேலை ஆன்மாவை நீங்கள்  நம்புவதாக இருந்தால்.. அதை உங்களை இயக்கும் ஒரு உள் ஆற்றலாக நாம் கற்பனை செய்யலாம்.

(அறிவியல் நிரூபணம் இல்லாததால் இப்போதைக்கு ஒரு கற்பனைக்கு என்று வைத்து கொள்ளுங்கள் )


தெர்மோடைனமிக்ஸ் விதி ஆற்றலைப் பற்றி என்ன சொல்கிறது என்றால் 'ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது 'அது நாம் மேலே பார்த்ததுபோல சூரியனிலிருந்து இட்லிக்கு என்பதை போல வேறு வேறு வடிவத்தில் மாறிக்கொண்டே இருக்கும்.

இப்போ ஆன்மா ஒரு ஆற்றல் என கொண்டால் ஆற்றல் பற்றிய அறிவியல் விதி அதற்கும் நிச்சயம் பொருந்த வேண்டும்.


இப்போது மிக வித்தியாசமான ஒரு ஒப்பீடை சொல்கிறேன் கேளுங்கள்


கீதையில் க்ருஷ்ணன் ஆன்மா பற்றி சொன்னது.

"ஆன்மாவை ஆக்கவும் அழிக்கவும் முடியாது அது சட்டையை மாற்றுவதை போல வேறு வேறு உடலை மாற்றி கொண்டே இருக்கிறது "


அட ! அப்படியே நம்ம தெர்மோடைனமிக்ஸ் விதி மாதிரியே இருக்கு இல்ல ??


💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥



"தேடல் கேள்விகள்"


(கேள்வி 4 )


〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

   🎯 கேள்வி : வணக்கம் நண்பரே எனக்கு ஒரு சந்தேகம் ph அளவுகளில் ஏன் எல்லா அமிலமும் காரமும் 14 என்கிற எல்லைக்குள் அமைந்துவிடுகிறது ? 14 குள் வரும்படியும் அதைத் தாண்டி செல்ல முடியாத பற்றியும் அதை கணக்கிட்டது எப்படி ? இனி அந்த அளவிற்கு எந்த அமிலமும் எப்போதும் தாண்டி இருக்க முடியாதா ?

-Madhu suthan -


〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰


   ✍️பதில் :  இதற்க்கு பதில் சொல்லும் முன் PH என்றால் என்ன என்பதை பற்றி கொஞ்சம் விளக்கமாக பார்ப்பது முக்கியம்.


நமக்கு தெரியும் PH  என்பது ஒரு கலவை அமில தன்மை கொண்டதா அல்லது கார தன்மை கொண்டதா என்பதை சொல்லும் ஒரு லாகரதமிக் அளவீடு என்று.

அதாவது PH அளவு 7 என்றால் அது அமிலமும் அல்ல காரமும் அல்ல நடுநிலையானது. 7 க்கு எவ்வளவு எவ்வளவு குறைந்து கொண்டே வருகிறதோ அவ்ளோ அமில தன்மையும் , PH அளவு 7 ஐ தாண்டி 14 வரையில்  எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு கார தன்மை மிக்கது என்பது நமக்கு தெரியும்.

நமது நாக்கில் உள்ள எச்சில் .. வயிற்றில் உள்ள அமிலம்.. நமது ரத்தம்.. தோல்... இவற்றில் எல்லாம் கூட PH இன் அளவு முக்கிய துவம் வகிகிறது.


அந்த PH என்பது என்ன விஷயம் அதன் தாத்பர்யம் என்ன என்ற கதையை இப்போது பார்க்கலாம். Potential hydrogen அதாவது PH... இந்த கதையில் ஹீரோ பெயர் "ஹைட்ரஜன் அயன் " ஆம் இவரை மைய படுத்தி தான் PH கதை உருவாகிறது. ஹீரோவுக்கு பட்ட பெயர்கள் இருக்க வேண்டும் அல்லவா இவரை கெமிஸ்டரியில் H + என்று குறிப்பார்கள் யார் இந்த ஹைட்ரஜன் அயன் ?


நீர் என்பது H2 0  என்பது நாம் அறிவோம்.  (2 ஹைட்ரஜன் அணுவும்  1 ஆக்சிஜனும் ) நீரில் சில மூலக்கூறுகள் தங்களிடம் உள்ள ஹைட்ரஜனை இழக்கின்றன. அப்படி இழந்து நிற்கும்  அவைகள் பெயர் "hydroxide ions" (அதாவது OH−) .

அந்த பிரிந்து போனது அல்லவா ஹைட்ரஜன் அணு.. அவர் தான் நமது ஹீரோ "hydrogen ion" (ion என்றால் atom தான். சார்ஜ் கொண்ட atom க்கு  ion என்று பெயர். அந்த சார்ஜ் எப்படி கிடைக்கும் னு கேட்டீங்கனா ... எலக்ட்ரானை பெறுவதன் மூலமாக அல்லது தன்னிடமுள்ள எலக்ட்ரானை இழப்பதன்  மூலமாக .....)


சரி அந்த பிரிந்து போன ஹீரோ என்ன பண்றாருனா.. நீர் மூல கூறுகளுடன் இனைந்து hydronium ions ஐ உண்டு பண்ணுகிறார் (H3O+). ஹைட்ரோனியம் அயன் ஐ ஹைட்ரஜன் அயன் னே குறிப்பிடலாம் தப்பு இல்லை அந்த அளவு ஹீரோ செல்வாக்கு அங்கே .

சரி இப்போ விஷயம் என்னன்னா... இந்த hydronium ions உம்... முன்பு பார்த்த hydroxide ion உம் ஒரே அளவில் இருந்தால்... அந்த நீர் அமிலமும் அல்ல காரமும் அல்ல ஒரு சுத்த நீர் அப்படி தான் இருக்கும் . இந்த நிலையில் இதன் PH அளவு நமக்கு தெரியும் 7 .


இப்போ அந்த நீரில் நீங்க எதையோ ஒன்றை கலக்கறீங்க (இப்போதைக்கு அந்த பொருள் அமிலமா அல்லது காரமா என்று நமக்கு தெரியாது )  என்ன ஆகும் என்றால். Hydroxide ion மற்றும் hydrogen ion இரண்டுக்கும் இடையில் இருந்த சம நிலை மாறி போகும்.

நீங்கள் கலந்த பொருள் அமிலமாக இருந்தால் ஹைட்ரஜன் அயனின் எண்ணிக்கை ஹைட்ராக்ஸைடு அயனை விட பல மடங்கு அதிகமாகி போகும்.  பல கோடி மடங்கு னு சொல்லலாம்.


அதே போல நீங்கள் கலந்த பொருள் ஒரு கார தன்மை (base) கொண்டது என்றால் அது ஹைட்ரஜன் அயன் களை உறிஞ்சி இழுத்து கொள்ளும் அதனால் ஹைட்ராக்ஸைடு எண்ணிக்கை பல பல மடங்கு உயர்ந்து விடும்..


எனவே எந்த கலவையில் ஹைட்ரஜன் அயன் அதிகமாக உள்ளதோ அது அமிலம் (acidic ). எந்த கலவையில் ஹைட்ரஜன் அயன் குறைவாக உள்ளதோ அது காரம்.

இதை ஏன் PH logarithmic scale கொண்டு குறிகிறார்கள் என்றால். அப்படி குறிக்க வில்லை என்றால் நாம் குறிக்கும் பக்கங்கள் ஜீரோ போட்டே காலி ஆகிவிடும். ஆம் ஒரு நல்ல கார தன்மை கொண்ட கலவையை விட நல்ல அமில தன்மை கொண்ட கலவையில் ஹைட்ரஜன் அயன்

100,000,000,000,000 மடங்கு அதிகம் இருக்கும்.

அதே போல அடுத்த முனையில் கார தன்மை கொண்ட கலவையில் 100,000,000,000,000 மடங்கு ஹைட்ராக்ஸைடு அயன் இருக்கும். இந்த சைபர்கள் போடும் வேலையை மிச்சம் செய்ய தான். PH log  (சொல்ல போனால் இது ஹைட்ரஜன் அயனின் ஒரு நெகட்டிவ் log . ஹைட்ரஜன் அயன் இன் இருப்பை சொல்வது போல இல்லாமையையும் சொல்கிறது அல்லவா.)

இதன் ஒரு அளவு... அதாவது ஒரு பாயிண்ட் என்பது முந்தைய பாயின்ட்டை விட 10 மடங்கு அளவு ஆகும்.


அதாவது உதாரணம் சொல்கிறேன் பாருங்கள்

Ph value 0 இருக்கும் ஒரு கலவையில்

 H +  இன் அளவு 10 000 000 ஆகும்.


PH அளவு 1 என்றால் H + இன் அளவு (H+ Concentration ) 1 000 000 ஆகும்..


இப்படியே தசம பாகமாக குறைந்து வரும்.


Ph 2 = H+ 100000....Ph 3 = H+ 10000

PH 4 = H + 1000..... PH 5 = H+ 100

PH 6 = H+ 10 அப்புறம் PH அளவு 7 என்றால் தூய நீரை ஒப்பிடும் போது H+ இன் அளவு 1 .

இதன் பிறகு இது மைனஸில் செல்ல தொடங்கும். அதாவது PH லெவல் 8 என்றால் H + அளவு 0.1 .. இது படி படியாக முன்பு போலவே தசம அடுக்காக அதிகரித்து செல்லும்.


சரி நீங்க கேட்ட கேள்விக்கு பதில் இப்ப சொல்றேன்..

அதாவது 14 க்கு மேல் PH லெவல் போகாதா.. 0 கு குறைவாக அமில அளவு போகாதா... விடை : தாராளமாக போகும். 14 என்பது நமது சாதாரண பயன் பாட்டுகாக தான் அதை தாண்டி போக கூடாது என்ற எந்த கட்டாயமும் இல்லை. PH லெவல் ஜீரோ வை அடையும் போது ஹைட்ரஜன் அயணி one molar அளவு இருக்கும் என்பதால் தான் அதை ஒரு அளவாக எடுத்து கொண்டோம்.


இந்த கடைசி பாரா மட்டும் தான் உங்கள் கேள்விக்கு நேரடியான பதில் என்றாலும் உங்கள் கேள்வியை சாக்கு வைத்து ph கொஞ்சம் விளக்கலாம் என்று தான் விரிவாக சொன்னேன்.


சரி கடைசியாக மோலார் அளவு னு சொன்னேனே அது என்ன.. எதை வைத்து அந்த அளவை நிர்ணயித்தார்கள் என்பது அடுத்து உள்ள கேள்வி.. அந்த கேள்வியை யாரும் கேட்கும் பட்சத்தில் தனியாக விரிவாக அதற்க்கு பதில் சொல்கிறேன் .


💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥



"தேடல் கேள்விகள் "


(கேள்வி 5)

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰️

 🎯கேள்வி : சைக்கோகளுக்கு கொலை செய்யும் போது என்ன விதமான உணர்வு இருக்கும் அது அவர்களை எப்படி கொலை செய்ய தூண்டும்.

-Ramamoorthy-

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

   ✍️ பதில் :ரோம் நகரில் நீரோ என்ற மன்னன் கேள்வி பட்டு இருப்போம் அதாங்க ரோம் பற்றி எரியும் போது பிடில் வாசித்தான் னு கேள்வி பட்டு இருப்போமே அவன் தான்.

அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுக்கு ஒரு பழக்கம் இருந்தது..

தினம் அரண்மனை சேவகர்கள் அவனுக்கு விளையாட முயல் குட்டி ...நாய் குட்டி அல்லது வேறு சில சிறு பிராணிகளை கொண்டு வந்து தருவார்கள். அவன் அவற்றைக் கொண்டு எப்படி விளையாடுவான் என்பது தான் கொடுமை.

அவன் அந்த விலங்குகளின் கால்களை துண்டிப்பான் அல்லது கண்ணை குத்தி எடுப்பான் அணு அணுவாக அவைகளை கொலை செய்யும் போது அவனுக்கு அது திருப்தியை கொடுத்தது.


உடனே அவசர பட்டு முகம் சுளித்து விடாதீர்கள் இந்த சைக்கோ தனம் நம் அணைவருக்குள்ளும் இருக்கிறது என்பது தான் உண்மை.

சின்ன குழந்தைகள் தும்பிகள் மற்றும் பட்டாம் பூச்சிகளின் ரக்கையை பிய்த்து போட்டு வேடிக்கை பார்ப்பதை பார்த்து இருப்பீர்கள்.. அல்லது காரணமில்லாமல் பக்கத்தில் ஊர்ந்து வரும் எறும்பை நசுக்கி கொல்லுவதை பார்க்கலாம்.. இதை தான் நீரோ கொஞ்சம் பெரிய விலங்குகளை வைத்து செய்தான் (அப்புறம் பெரியவனானதும் விலங்குகளுக்கு பதில் மனிதனை பயன் படுத்தினான் )


சரி அப்போ அனைவருமே சைக்கோதானா. ??


பொதுவாக என்னதான் நாகரீகம் வளர்ந்து இருந்தாலும் மனிதன் ஒரு விலங்கு என்பது மறுக்க முடியாத உண்மை அதுவும் பல ஆயிரம் வருடம் குகையில் காட்டில் வாழ்ந்த விலங்கு.

24 மணி நேரமும் ஆபத்தில் வாழ்ந்த ஒரு உயிரினம். பொதுவாக பிற விலங்குகளை எதிரியாக பார்க்கும் மனோபாவம் தற்காப்பினால இயல்பாக இருந்த ஒரு விலங்கு.


நீங்கள்  பொதுவாக நாயை கவனித்திருக்கலாம். புதிதாக இரண்டு நாய்கள் சந்தித்துக்கொண்டால் முதலில் அவைகளுக்கு இடையில் இருப்பது வெறுப்பு உணர்வு தான். அவைகள் முதலில் சண்டைக்கு தான் முயல்கின்றன.

உளவியல் ரீதியாக மனிதனும் இதே மாதிரியான குணத்தை தான் கொண்டிருக்கிறான் என்று உளவியல் சொல்கிறது. அதாவது புதிதாக ஒரு மனிதனைப் பார்க்கும் பொழுது முதலில் உள்ளுக்குள் "யார் பெரியவன்" என்கின்ற ஒரு உணர்வுதான் தோன்றுவதாக சொல்கிறார்கள். அவன் நட்பு பாராட்ட கொஞ்சம் நேரம் பிடிக்கிறது. குகை மனிதன் காலத்தில் அவனது தற்காப்புக்கு இந்த எதிர்வினை தேவை பட்டு இருக்கலாம் ஆனால் அறிவு வளர்ச்சி பெற்ற இன்று அது அவசியம் அற்றது.


சைக்கோ என்றாலே நமக்கு நினைவில் வருவது திரைப்படங்களில் கொடூரமாக கொலை செய்யும் சைக்கோக்கள் தான்.

ஆனால் சைக்கோகள் பல விதம் என்கிறது ஆய்வு.

உதாரணமாக தேவை இல்லாமல் டார்ச்சர் கொடுக்கும் மேலதிகாரியை நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் ஜாலியாக லீவ் போட போகிறீர்கள் என்று தெரிந்தாலோ... அல்லது மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று தெரிந்தாலோ.. கூடுதலாக கொஞ்சம் வேலை பளுவை கொடுபார்.


"அழகி" படத்தில் ஒரு வாத்தியார் அந்த "பெண் ரொம்ப அழகா இருக்குனு வேணும்னே அவளை டார்ச்சர் பண்ணுவார் " னு சொல்லுவான் கதா  நாயகன். அவள் அழகாக இருந்தால் வாத்தியாருக்கு என்ன என்று நாம் நினைக்கலாம்.

ஆனால் நிஜத்தில் இப்படி அழகாக இருப்பவர்கள் மேல் தேவையற்ற குற்ற உணர்வு கொண்டு டார்ச்சர் செய்ய விரும்பும் ஆட்கள் நீங்கள் நேரில் பார்த்து இருக்கலாம்.


இப்படி நிறைய வகை சைக்கோக்கள் பிரிவு இருக்கிறது.


இப்பொது கொடூர கொலைகள் செய்யும் சைக்கோ பற்றி பார்ப்போம்..

விஸ்கான்சிஸ் பல்கலை கழகம் சைக்கோவின் மூளை பற்றி ஒரு ஆய்வு அறிக்கை கொடுத்து இருக்கிறது அதன் படி சைக்கோகள் மூளையில் amygdala மற்றும் ventromidial prefrental cortex பகுதிகளுக்கு இடையிலான தொடர்பு கொஞ்சம் குறைவாக இருப்பதை பார்த்தார்கள்.


இதனால் என்ன ஆகும் என்றால் மனிதனுக்கு உள்ள எதிர்மறை உணர்வு அதாவது சோகம் ,கவலை வருத்தம் போன்றவை ஒழுங்காக ஏற்படுவது இல்லை.

ஒரு மனிதன் நல்லவனாக இருப்பதற்கு இந்த எதிர்மறை சிந்தனைகள் அத்தியாவசியம் என்கிறது அறிவியல். காரணம்.. ஒரு மனிதனை நாம் துன்புறுத்தக் கூடாது என்று நாம் ஏன் நினைக்கிறோம் என்றால் அந்தக் கட்டத்தில் துன்பப்படும் அந்த மனிதனின் இடத்தில் தம்மை வைத்து சிந்திக்கறது மனித மூளை. அதாவது இதை செய்தால் அவன் எப்படி துன்பப்படுவான் என்பதை அது அவன் இடத்தில் தன்னை வைத்து பார்த்து புரிந்து கொள்கிறது . விலங்குகளுக்கு இந்த உணர்வு இருப்பதில்லை.

(இதை வேறு விதமாக சொல்வதானால் யார் மனித தனம் மிக்கவர்கள் என்றால் பிறர் இடத்தில் தன்னை வைத்து பார்த்து சிந்திக்க முடிபவர்களே என்று சொல்லலாம்.)


நாம் மேலே பார்த்த படி மூளையின் amygdala மற்றும் ventromidial prefrental cortex பகுதிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு குறைவாக இருப்பதால் ... அவர்கள் பிற மனிதனின் துன்பத்தை உணர்வது இல்லை.

எனவே சைக்கோ தனம் என்பதை வரையறுக்க வேண்டும் என்றால்...Empathy என்று சொல்ல கூடிய பிறர் இடத்தில் தம்மை வைத்து சிந்திக்க முடியாத தன்மை தான் சைக்கோ தனத்தின் ஆரம்பம் என்று சொல்லலாம்..


சைக்கோ கொலையாளிகளுக்கு உடலியல் மற்றும் மனோவியல் இரண்டு காரணங்களும் உண்டு சிலருக்கு இரண்டுமே உண்டு.


1966 இல் Charles Whitman, (இவனை பற்றி முன்பே ஒரு தனி கட்டுரை போட்டு இருந்தேன் உங்களுக்கு நினைவு இருக்கலாம்.) அவன் டெக்சாஸ் யூனிவர்சிட்டி டவர் இல் இருந்து பலரை சுட்டு கொன்றான் அவனை சுட்டு வீழ்த்தி பிடித்த போலீஸ் அவன் வீட்டுக்கு சென்றபோது அவன் மனைவி மற்றும் தாயை கொலை செய்துவிட்டு தான் இங்கே வந்து அனைவரையும் சுட்டதாக தெரிந்தது.

அதன் டைரியை ஆராய்ந்த போலீஸ் ஒரு ஆச்சரியமான குறிப்பை பார்த்தது.

"என் மூளையில் ஏதோ குடைந்து கொண்டே இருக்கு நான் இறந்த பின் போஸ்ட் மாடர்ம் செய்தால் மூளையில் ஏதாவது பொருள் அடைத்து கொண்டு இருக்கிறதா என்று பார்க்கவும் " னு எழுதி இருந்தான் .

அவனை போஸ்டமாடம் செய்த டாக்டர்கள் அவன் மூளையில் ஒரு பெரிய சைஸ் கட்டி இருந்ததை பார்த்தார்கள். அது உணர்ச்சியை கட்டுப்படுத்தும் நரம்பு பகுதியை அழுத்தி கொண்டு இருந்ததாம்.


இப்படி மூளையில் உடலியல் பிரச்சினை மற்றும் DNA வில் கூட சைக்கோ தனம் இருக்கிறது என்கிறார்கள்.

இது தவிர மனோவியல் காரணங்கள் முக்கிய பங்கு வகிகிறது. பெரும்பாலும் சிறுவயதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சைக்கோவானவர்கள்  அதிகம். குழந்தைப்பருவம் ஒரு சைக்கோவின் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


பிறரை துன்புறுத்தும் போது நமக்கு துன்பம் உண்டாவது இல்லை என்பது போய் மாறாக அவர்களுக்கு ஒரு இனம் புரியாத இன்பம் ஒரு குறுகுறுப்பு உண்டாகிறது.

அது அவர்களை காரணம் இல்லாமல் கொலை செய்ய தூண்டுகிறது.

(கொலை செய்யும் போது கிடைக்கும் மகிழ்ச்சி தான் அங்கே காரணம்.)


ஆனால் மேற் சொன்ன ஆய்வுகள் எல்லாமே மேற்கத்திய ஆய்வுகள் தான்.மனிதனை உன்னத மனிதன் அல்லது சைக்கோ மனிதன் ஆக்கும் காரனின்கள் எல்லாமே அவன் கைகளில் இருப்பதாகவே கிழக்கத்திய விஞ்ஞானம்  நம்புகிறது.  தனது உடலியல் அல்லது மனோவியல் எப்படி பட்டதாக இருந்தாலும்... தன்னை நினைத்த மாதிரியாக தான் உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதுதான்... கிழக்கத்திய அறிவு நமக்கு சொல்லும் பாடம்.


இன்றும் உலக அளவில் சைக்கோ தனம்  ... மனபிறழ்வுகள்.. வித வித மன நோய்கள் மலிந்து கிடப்பது மேற்கத்திய நாடுகளில்தான்.

உலக அளவில் குற்றங்கள் அதிகம் நடப்பது மேற்கத்திய நாடுகளில் தான்.

கிழக்கத்திய நாடுகள் கடைபிடிக்கும் 'ஏதோ ஒன்று ' மனிதர்களை மிக அமைதியாக வைத்திருக்கிறது.

ஆனால் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது என்பதுதான் வருத்தமான உண்மை.  அதற்கு காரணம் நாம் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய பாணிக்கு மாறி வருவதுதான்.


💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥



தேடல் கேள்விகள்  "

(கேள்வி : 6 )


〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

   🎯கேள்வி : அதென்ன ட்ரிபில் பாயிண்ட் நீர் ஒரு குறிப்பிட்ட நிலையில் திட திரவ வாயு னு மூன்று நிலையையும் அடையும் இந்த ட்ரிபில் பாயிண்ட் ல னு படிச்சேன் அது எப்படி ஆச்ரயமா இருக்கு அது பற்றி விளக்கம் சொல்ல முடியுமா உங்க ஸ்டைல்ல ... இது நாம் சாதாரணமா பார்க்க முடியாதா.

-Selvimani smpvaishnava -


〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰


  ✍️பதில் : முதலில் இந்த triple point என்பது வெறும் நீருடன் பொருத்தி பார்க்காதீர்கள் அது திட திரவ வாயு வாக மாறும் கிட்ட தட்ட அனைத்து பொருளுக்கும் இது பொருந்தும்.

(ஹீலியத்திற்கு ட்ரிபில் பாயிண்ட் இல்லை. )


ஜேம்ஸ் தாம்சன் என்பவர் முதல் முதலில் 1873 இல் இந்த வார்த்தையை பயன் படுத்தினார். அதாவது குறிப்பிட்ட வெப்ப நிலையில் குறிப்பிட்ட அழுத்தத்தில் ஒரு substance

திட திரவ வாயு எனும் மூன்று நிலையிலும் இருக்கும் (.உதாரணம் நீரின் ட்ரிபில் பாயிண்ட் 0.01° Celsius at 4.56 mm Hg.)


சரி என்ன இந்த ட்ரிபில் பாயிண்ட் என்று பார்க்கலாம்.


யாராவது உங்களிடம் ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு மாற்ற சொன்னால் (உதாரணமாக பனி கட்டியை திரவமாக மாற்ற.. அல்லது நீரை பணியாக மாற்ற அல்லது ஆவியை திரவமாக மாற்ற இப்படி... ) நீங்கள் என்ன செய்வீர்கள் ??

விடை ..எளிமையானது வெப்ப படுத்துவீர்கள் அல்லது குளிர்விப்பீர்கள். ஆம் சரி தான் ஆனால் இனொன்றும் இருக்கிறது பொருளின் நிலையை பாதிக்கும் காரணி. அது தான் அழுத்தம்.


ஒரு பொருளின் அழுத்தத்தை மாற்றுவதன் மூலம் நீங்கள் பொருளின் நிலையில் மாறுதலை பண்ண முடியும்.

மேலும் இது வெப்பதுடன் தொடர்பு உடையதாகவும் இருக்கிறது . உதாரணமாக ஒரு மூடிய சேம்பரில் நீங்கள் அழுத்தத்தை குறைத்தால் அங்கே வெப்பமும் சேர்ந்தே குறையும்.

இப்படி வெப்பம் மற்றும் அழுத்தம் இவற்றை இரண்டையும் ஒரு substance இல் சரி விகித கலவையில் கையாண்டு கொண்டு வரும் போது ட்ரிபில் பாயிண்ட் கிடைக்கிறது.


இந்த ட்ரிபில் பாயிண்ட் என்பதை புரிந்து கொள்ளும் முன் critical point என்பதை புரிந்து கொள்வது அவசியம்..

அதென்ன கிரிட்டிகல் பாயிண்ட் ??


திட திரவ வாயு  என்பதில் இப்போதைக்கு  திரவதிலிருந்து  வாயுவிற்கு என்ற பகுதியை மட்டும் கவனியுங்கள்.

ஒரு திரவம் இருக்கிறது நீர் என்றே வைத்து கொள்ளுங்கள்... அதை ஒரு குறிப்பிட்ட டிகிரி வெப்ப படுத்தும் போது அது ஆவியாகிறது. அதாவது 100 டிகிரியில் நீர் தனது ஒரு phase இல் இருந்து அடுத்த phase க்கு செல்கிறது. (ஒரு state யிலிருந்து அடுத்த state க்கு என்று சொல்லாம். ஆனால் phase என்பது பிஸிக்ஸ் இல் இன்னும் துல்லியமான வார்த்தை காரணம் ஒரு பொருள் ஒரு ஸ்டேட் இல் வெவேறு pahse இல் இருக்கமுடியும்.)


100 டிகிரி யில் நீர் ஆவியாகியது என்றாலும் அங்கே அழுத்தம் முக்கிய பங்கை வகிகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

உதாரணமாக நீங்கள் மலை பிரதேசத்தில் சென்று கொதிக்க வைத்தால் விரைவில் ஆவியாகி விடும் அதே விண்வெளியில் சென்றால் உங்கள் உடல் சூடே போதும் நீரை ஆவியாக்க.


சரி இப்படி அழுத்தம் மற்றும் வெப்பத்தை கையாண்டு ஒரு பொருளை அடுத்த நிலைக்கு மாற்றுகிறோம் அல்லவா... அதில் ஒரு குறிப்பிட்ட அழுத்த..வெப்ப... பாயிண்ட் வரை அந்த பொருள் திரவமாக இருந்து குறிப்பிட்ட பாயிண்டுக்கு மேல் தாண்டும் போது ஆவியாக மாறுகிறது அல்லவா... அந்த இரண்டும் சேர்ந்த பாயிண்ட் (அதாவது அதற்க்கு கீழ் இருந்தால் அது திரவமாகி போகும்  அதற்க்கு மேல் என்றால் ஆவியாகி விடும் என்ற நிலை ) அந்த சரியான பாயிண்ட் தான் "க்ரிடிகல் பாயிண்ட்" இந்த பாயின்டில் அந்த பொருள் ஆவியும் இல்லை திரவமும் இல்லை.


மேல் சொன்ன க்ரிடிகல் பாயிண்ட் என்பது வெப்பத்தை நிலையாகவும் அழுத்தத்தை அதிகரிக்கும் போதும் கிடைக்கும் ஒரு புள்ளி.


அந்த க்ரிடிகல் பாயின்ட்டை தாண்டி நீங்கள் அழுத்தம் மற்றும் வெப்பத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் அதிகமாக்கி கொண்டே சென்றால் என்ன ஆகும் தெரியுமா ??

அந்த திரவம் "super criticale flude "ஆக மாறிவிடும் இந்த நிலையில் இது வாயு போல பரவி ஓடும் தன்மையும் அதே சமயம் திரவம் போல பொருட்களை கரைக்கும் தன்மையும் ஒருங்கே கொண்டு இருக்கும். அதை கண்ணால் பார்க்க முடியும்.


க்ரிடிகல் பாயின்ட்டை இன்னோரு வகையில் புரிந்து கொள்ளுங்கள். ஒரு பொருளை அழுத்தம் அதிகரிக்கும் போது அதன் அடர்த்தி அதிகரிக்கிறது .. அதே போல வெப்பம் அதிகரித்தால் அடர்த்தி குறைகிறது. இந்த கிரிட்டிகல் பாயின்டில் திரவத்தின் அடர்த்தியும் ஆவியின் அடர்த்தியும் ஒன்றாக இருக்கிறது.

இப்போது திரவத்தை திரவமாக வைத்திருக்கும் அதிக பட்ச வெப்ப நிலை எதுவோ அது தான் critical temperature என்று சொல்லலாம். அந்த நிலையில் அதை திரவமாக மாற்ற தேவை படும் அழுத்தம் தான் critical pressure என்று சொல்லலாம். இவை இரண்டும் இணைந்த புள்ளி தான் critical point என்று சொல்லலாம்.

(நீரின் க்ரிடிகல் பாயிண்ட் கிட்ட தட்ட 374° C யில் கிடைக்கிறது. )


சரி இப்போ ட்ரிபில் பாயிண்டுக்கு வருவோம். மேலே சொன்னது போல அழுத்தம் மற்றும் வெப்பத்தை அதிகரிக்கும் ஒரு கிராப் சார்ட் வரைவதாக கொண்டால். அதில் மேலே பார்த்த திரவ - வாயு பகுதி யை அடையும் ஒரு கிராப் கோடு கிடைப்பதை போல திட - திரவ பகுதி காண கோடு ஒன்று கிடைக்கிறது. அந்த கோடுகள் இணையும் புள்ளி தான் ட்ரிபில் பாயிண்ட். இங்கே திட திரவ வாயு மூன்றும் நிலையும் காண படும் மேலும் அவைகள்  equilibrium நிலையில் இருக்கும். அதாவது சமன் செய்ய பட்ட வெப்ப-அழுத்த  நிலையில். இங்கே மூன்று நிலையும் ஒன்றாக கலந்து இருப்பதால் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எளிதாக அழுத்தம் மற்றும் வெப்பத்தில் மாறுதலை பண்ணி அந்த பொருளை நிலை மாற்றம் பண்ணி விட முடியும். உதாரணமாக பனி கட்டியை உடனே வாயு நிலைக்கு தள்ள முடியும்.


எந்த பொருளாவது அதன் triple point அழுத்தத்தை விட குறைவாக வெப்ப படுத்த பட்டால் அந்த அந்த திட பொருள் உடனே ஆவி ஆகி விடும் இதற்க்கு பெயர் sublimation.

அதுவே அந்த பாயிண்டுக்கு மேல் வெப்ப படுத்த பட்டால் அந்த திடம் திரவமாக மாறும். அதே சமயம் திரவம் வாயு நிலைக்கும் மாறும்.


இப்படி ஒரு பாயிண்ட் தான் ட்ரிபில் பாயிண்ட்.

இதை பார்க்க முடியுமா என்று கேட்டு இருக்கிறீர்கள் ஆம் நிச்யம் பார்க்க முடியும்.


💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥



"தேடல் கேள்விகள்"

(கேள்வி 7)

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

  🎯 கேள்வி : ரத்தத்தில் பல வகை சொல்கிறார்களே.. அவற்றை எப்படி இது இந்த குரூப் என வகை படுத்துகிறார்கள்.?


- செந்தில் -

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰


  ✍️பதில் : முதலில் ஒரு விஷயம் சொல்லி விடுகிறேன்.. ரத்தத்தில் பார்ப்பதற்கு ஏதோ நிறைய வகை இருப்பது போல தோன்றினாலும்.. உண்மையில் அப்படி இல்லை. ரத்தம் மொத்தமே 4 வகை தான்.

1.A வகை

2. B வகை

3. AB வகை மற்றும்

4. O வகை

இவற்றை தான் ABO பிரிவுகள் என்கிறோம்.


இந்த நான்கிலும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் உண்டு என்பதால்.. மொத்தம் 8 வகையாக பிரித்து வைத்து இருக்கின்றோம். அதாவது..

(A + , A -, B+, B -, AB+ ,AB - ,O +,O - )


சரி இப்போ இவற்றை எந்த அடிப்படையில் பிரிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.


ரத்தத்தில் கலந்துள்ள ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து தான் இந்த 'வகை பிரிப்பு ' நடக்கிறது. அந்த பொருளின் பெயர் antigens (ஆன்டிஜென் னா வேற ஒன்னும் இல்ல  சர்க்கரை மற்றும் புரதத்தின் ஒரு வகை ) இந்த ஆன்டிஜென் எங்கே இருக்கும் என்றால் ரத்த சிகப்பணுக்களில் இருக்கும்... அப்புறம் antibodies களில் இருக்கும் (இந்த ஆண்ட்டிபாடியென்பது ஒரு வகை புரதம் இது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இருக்கும் ) 'சரி பிளாஸ்மா னா என்ன ?என்று  கேட்பீர்களேயானால்.......


ஒரு ஆரஞ்சு ஜூஸ் இல் என்ன இருக்கும் ? சிம்பிள் ஆரஞ்சு இருக்கும் .. அப்புறம் வேறு என்ன இருக்கும் ?ஜூஸில் திரவமாக தண்ணீர் இருக்கும் அல்லவா.

அதே போல ரத்தத்தில் திரவமாக பிளாஸ்மா இருக்கும்.


சரி இப்போ ஒரு விஷயம் பாருங்கள்.. நமது உடலில் உள்ள ரத்தம் செல்களால் ஆனது என்று நாம் அறிவோம் அதே போல நமது உடலில் பல கோடி கணக்கான நுன்னுயிர்கள் வாழ்கிறது என்று நமக்கு தெரியும் 

. நம்ம உடல் இந்த செல்களில் எது நம்ம செல் எது வேறு உயிரினதின் செல் என்று பிரித்து பார்ப்பதில் சிக்கல் உண்டாகும் வாய்ப்பு உள்ளது அல்லவா. எனவே நமது உடல் சாராத எந்த விஷயமும் நமது உடல் செல்களுடன் கலந்து விடாமல் இருக்க நமது உடல் இயற்கையாக ஒரு ஏற்பாட்டை செய்து வைத்து இருக்கிறது அது தான் மேலே நாம் பார்த்த 'antibodies ' இந்த ஆண்ட்டி பாடிஸ் நமது ரத்தத்தில் நமது உடல் சாராத பொருள் எது வந்தாலும் அதை அடையாள படுத்தி தனிமை படுத்தி விடும். (இந்த ஆன்டிபாடியை தூண்டுவதே ஆண்டிஜென் தான். )


அதாவது இரு நாட்டு வீரர்கள் போர் புரியும் போது யார் நம்ம ஆள் யார் எதிரி என்ற குழப்பம் வராமல் இருக்க யூனிபார்ம் மற்றும் கொடி பயன் படுத்துவது போல.

இதில் என்ன பிரச்னை னா இந்த ஆன்டிபாடி ரொம்ப கண்டிப்பான ஆளு எனவே மனித ரத்தமாகவே இருந்தாலும் நம்ம வகை இல்லைனா இது அவற்றை எதிரியாக கருதி அழித்து வெளியேற்ற வைக்கும்.

அதாவது ஒரு வான் படை வீரர் நானும் உங்க நாடு தான் உங்க முகாம் இல் தங்கி கொள்கிறேன் என்று  தரை படை வீரர்கள் இடம் சொன்னால் அவர்கள் ஒத்து கொள்ள முடியாது இல்லையா அப்படி .


சரி இப்போ வகை படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம்.


நமது ரத்தத்தில் உள்ள சிகப்பனுகளின்  பரப்பில் இரண்டு வகை ஆண்டிஜென்கள் காணப்படுகின்றன. ஒன்று A வகை இனொன்று B வகை.

A வகை ஆன்டிஜென் இருந்தால் நாம் A வகை ரத்தம் கொண்டவர்கள் .

B வகை ஆன்டிஜென் இருந்தால் B வகை ரத்தம் கொண்டவர்கள். A வும் B யும் சேர்ந்தே இருந்தால் AB வகை ரத்தம் கொண்டவர்கள்.

 A வும் இல்லை B யும் இல்லை என்றால் நாம் O வகை ரத்தம் கொண்டவர்கள்.


இதில் A ஆண்டிஜென் இருக்கும் உடலில் B யை எதிர்க்கும் ஆன்டிபாடி இருக்கும். (Anti B ) அதாவது இந்த உடலில் B ஆன்டிஜென்னை நுழைந்தால் அந்த ஆன்டிபாடி இதை எதிரி என அடையாளம் கண்டு முத்திரை குத்தி தனிமை படுத்துகிறது. உடலின் மற்ற நோய் எதிர்ப்பு சக்திகள் இவற்றை எதிரியாக நினைத்து அழித்து கழிவாக வெளியேற்றி விடும்.


அதே போல B ஆன்டிஜென் இருக்கும் ரத்தத்தில் A வை எதிர்க்கும் ஆண்ட்டி பாடி இருக்கும். (Anti A )

அப்புறம் AB வகையில் எந்த ஆண்டி பாடியும் இருக்காது. அதாவது... எதையும் எதிர்க்கும் ஆன்டிபாடி அங்கே உண்டாகாது.

O வகை இருபவர்கள் ரத்தத்தில் A வை எதிர்க்கும் ஆன்டிபாடி மற்றும் B யை எதிர்க்கும் ஆன்டிபாடி இரண்டுமே இருக்கும்.


சரி இப்போ இதில் பாசிட்டிவ் நெகட்டிவ் னு ரெண்டு சொல்றாங்களே அது என்ன ?


இங்கே தான் வருகிறது RH சிஸ்டம்.. அதாவது Rhesus system. (முதல் முதலில் rhesus வகை குரங்கில் கண்டு பிடிக்க பட்டதால் இந்த பெயர் )

இது நமது ரத்த சிகப்பு அணுக்களின் பரப்பில் இருக்கும் இன்னோரு வகை ஆண்டிஜென்கள் .. இந்த RH ரத்தத்தில் இருந்தால் அது பாசிட்டிவ்.. இல்லை என்றால் நெகட்டிவ். அவ்ளோ தான்.

அதாவது ஒரு AB வகை ஆள் இருக்கிறார் என்று வைத்து கொள்ளுங்கள் அவர் ரத்தத்தில் இந்த RH ஆண்டிஜென் இருந்தால் அவர் AB + RH இல்லை என்றால் AB - அவ்வளவு தான்.


இந்த RH ஆன்டிஜென்னுக்கும் முன்பு நாம் பார்த்த ABO ஆன்டிஜென்னுக்கும் ஒரு முக்கியமான வித்யாசம் என்ன வென்றால்... RH நெகட்டிவ் இருக்கும் ரத்தம் RH யை எதிர்க்கும் ஆன்டிபாடியை கொண்டு இருப்பது இல்லை. ஆனால் ABO வகையில் குறிப்பிட்ட ஆன்டிஜென் இல்லை என்றால் அங்கே அந்த குறிப்பிட்ட ஆன்டிஜென்னை எதிர்க்கும் ஆண்ட்டி பாடி உள்ளது என்று அர்த்தம்.


சரி எந்த வகை என்பதை ஆய்வகத்தில் எப்படி சோதனை செய்து கண்டு பிடிக்கிறார்கள்.. ?

அதற்க்கு இரண்டு வழிமுறைகள் உண்டு ஒன்று forwed method.. இனொன்று reverse method .. இரண்டுமே மிக எளிமையான சோதனை தான்.


1. Forwed method :


ஆய்வாளர் தன்னிடம் இரண்டு கலவைகளை வைத்திருப்பார் ஒன்று anti A அதாவது A வகை ஆன்டிஜென்னை எதிர்க்கும்

ஆன்டிபாடி. இனொன்று anti B .


ரத்தத்தில் இரண்டு கலவையையும் கொஞ்சம் கொஞ்சம் கலந்து பார்ப்பார்  ஆன்ட்டி ஏ கலவைக்கு வினைபுரிந்து ரத்தம் கொத்துக்கொத்தாக மாறத் தொடங்கினால் அங்கே B வகை ரத்தம் இருக்கிறது என்று பொருள்.

ஆண்ட்டி B க்கு வினை புரிந்தால் A வகை ரத்தம் இருக்கிறது என்று பொருள்.

இரண்டு கலவை களுக்குமே வினை புரிந்தால் AB வகை இருக்கிறது என்று பொருள்.

இரண்டு கலவை களுக்குமே வினை புரியவில்லை என்றால் O வகை ரத்தம் என்று பொருள்.


2. Reverse methode :


ரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிகப்பு அணுக்கள் நீக்க பட்ட வெறும் பிளாஸ்மா வை எடுத்து கொள்வார்கள். இதை முன்பே வகை அறிந்த A வகை ரத்தம் மற்றும் B வகை ரத்தத்துடன் தனி தனியாக கொஞ்சம் கலந்து பார்ப்பார்கள்.. எதில் வினை புரிகிறது என்பதை வைத்து கண்டு பிடித்து விடுவார்கள்.


சரி அடுத்த கேள்வி .. அந்த பாசிட்டிவ் நெகட்டிவ் எப்படி கண்டு பிடிப்பார்கள் ?

அதாவது RH இருக்கா இல்லையா என்று ?

இதற்க்கு ஆய்வாளர்கள் RH ஆன்டிபாடி கலவை வைத்து இருப்பார்கள். இதை கலந்து பார்ப்பார்கள். வினை புரிந்தால் பாசிட்டிவ் வினை ஏதும் நடக்க வில்லை என்றால் நெகட்டிவ்.


சரி ரத்தத்தில் உள்ள கொடுக்கல் வாங்கல் தகவல் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்


Universal red cell donors:


O negative ரத்த வகை காரர்கள் ரத்தத்தில் A, B மற்றும் Rh என்று எந்த antigens களும் இருப்பது இல்லை எனவே இவர்கள் எந்த வகை ரத்தம் கொண்டவர்களுக்கும் ரத்தத்தை கொடுக்கலாம் எனவே இவர்கள் யுனிவர்சல் ரெட் செல் டொனர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்.


Universal recipients:


AB வகை ரத்தம் கொண்டவர்கள் A மற்றும் B antigens களை பெற்று இருப்பதால்  அவர்கள் எந்த வகை இரத்தம் இடம் இருந்தும் ரத்தத்தைப் பெற முடியும் எனவே இவர்களை யூனிவர்சல் ரெசிப்ட்டன்ஸ்  என்று அழைக்கிறார்கள் .

மேலும் இந்த AB வகைகளில் எந்த ஆன்டிபாடியும் இல்லாமல் இருப்பதால் இவர்கள் பிளாஸ்மாவை யாருக்கும் கொடுக்க முடியும் எனவே இவர்களை

Universel plasma donar என்று அழைக்கிறார்கள்.


முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்று என்னவென்றால் நெகட்டிவ் வகை இருப்பவர்கள் இன்னொரு பாசிட்டிவ் வகை யில் இருந்து ரத்தத்தைப் பெற முடியாது காரணம் நெகட்டிவ் என்றால் RH இல்லாமை என்று பார்த்தோம் இந்த ரத்தத்தில் RH ஆண்டிஜென்னை புகுத்தும் போது அது இதனை எதிரியாக கருதி எதிர்ப்பு உண்டாக்குகிறது. (ஆண்ட்டி RH )

அதுவே பாசிட்டிவ் காரர்கள் பாசிட்டிவ் இடமும் வாங்கலாம் நெகட்டிவ் இடமும் வாங்கலாம்.


எப்பவுமே பாசிடிவா இருக்கிறது நல்லது தானே....


💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥



"தேடல் கேள்விகள் "

(கேள்வி 8 )


〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

    🎯  கேள்வி : Space இல் இந்த நட்சத்திரம் இத்தனை ஒளி ஆண்டுகள் தூரம் இருக்கிறது என்கிறார்களே. Space இல் தூரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள்.

- sheihana paua . Kadayanallur -

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

   ✍️ பதில் : விண்வெளியின் முடிவற்ற கால வெளியில் கொட்டி கிடக்கும் நட்சத்திரங்களின் தூரங்கள் நமது கற்பனையின் எல்லை தாண்டிய அளவு இடைவெளி கொண்டவை என்றாலும் மனிதன் அவைகள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை பூமியில் உட்கார்ந்த இடத்தில் சொல்ல முடிவதற்கு காரணமாய் இருப்பது 'ஒளி '.


பிரபஞ்ச முழுவதிலிருந்தும் நமது பூமிக்கு வந்து சேரும் ஒளியை ஆராய்வதன் மூலம் அந்த ஒளியின் மூலங்களாகிய  நட்சத்திரங்கள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதை சொல்லிவிட முடியும். எப்படி ??


பொதுவாக விண்வெளியில் தூரத்தை கணக்கிடுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழி முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.


முதலில் அருகில் இருக்கும் கோள்கள் மற்றும் நிலா மாதிரி  துணை  கோள்களின் தூரத்தை அளக்க உதவும் முறையை பார்போம் அந்த முறையின் பெயர்" radar mathod "


☯️ இது வேறொன்றுமில்லை கப்பலில் இருப்பவர்கள் மீயொலி யை பயன்படுத்தி கடலின் ஆழத்தை அறிய பயன்படும் அதே டெக்னிக்தான். என்ன ஒன்று இங்கே ஒலி க்கு பதிலாக ஒளியை பயன்படுத்துவார்கள். (ஒளி என்றால் ஒளியாகவே கற்பனை பண்ண கூடாது அதன் அண்ணன் தம்பிகளான மின்காந்த அலைகள், மைக்ரோ அலைகள், ரேடியோ அலைகள் ஏதுவாக வேணும் என்றாலும் இருக்கலாம் )


அருகாமை கோள்களுக்கு சுற்றுப்பயணம்  போகும்போது நாம் அனுப்பும் வானூர்தி களுக்கு சிக்னல் அனுப்பி அந்த சிக்னல் அங்கே இருந்து மீண்டும் எதிரொலிக்க பட்டு பூமியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரத்தை கணக்கிட்டு அதன்மூலம் அந்த கோள் இருக்கும் தொலைவை அறிந்து விட முடியும் காரணம் அந்த சிக்னல் பயணிக்கும் வேகம் என்ன என்பது நமக்குத் தெரியும். எனவே  d=  v(t/2)போட்டால் தூரம் தெரிந்து விடும். (d = distances v = velocity t = time )

இதில் நிலாவில் எல்லாம் எதிரொளிக்க கண்ணாடியே வைத்து இருக்கிறோம்.(laser

reflectors ) பூமியில் இருந்து அனுப்ப பட்ட லேசர் அந்த reflectors இல் பட்டு மீண்டும் பூமிக்கு வந்து சேரும் நேரத்தை வைத்து இந்த வினாடி நிலா எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று சொல்லி விட முடியும்.

(ஒரு போதும் நிலா நிலையான தொலைவில் இருப்பது இல்லை. நிலா மட்டும் இல்லை பிரபஞ்சத்தில் எதுவும் தான்.)


மேற்கண்ட முறைகள் எல்லாம் குறைவான தூரம் கொண்ட விண்வெளி பொருட்களுக்கு தான் செல்லுபடியாகும். நம்மால் ஒளியை கொடுத்து வாங்க முடியாத தூரம் கொண்ட நட்சத்திரங்களின் தூரம் அறிய இந்த வழி முறை செல்லுபடியாகாது . அங்கே நமக்கு உதவது தான் " parallax mathod " அல்லது "triangulation methode "


☯️ இந்த பேரலாக்ஸ் என்பது என்ன ?


உங்கள் கண் முன்னால் கையை நீட்டி பிடியுங்கள் அதில் கட்டை விரலை நீட்டி அதை ஒற்றை கண்ணால் பாருங்கள். இப்போ இந்த கண்ணை மூடிக்கொண்டு அடுத்த கண்ணால் பாருங்கள் ஒரு கோண விலகல் தெரியும் அல்லவா. இதான்  parallax. இதை வைத்து எப்படி தூரத்தை அறிய முடியும் ? 

அந்த கட்டை விரலை அப்படியே  கண்ணுக்கு அருகே வைத்து இதே சோதனையை செய்யுங்கள் இப்பொழுது ஒரு விஷயம் நமக்கு தெரியும் முன்பு கையை தூரத்தில் வைத்தபோது கோண விலகல் குறைவாகவும். கண்ணுக்கு அருகே இருக்கும் பொழுது கோண விலகல் அதிகமாகவும் இருப்பதை பார்க்க முடியும் அல்லவா.  இந்த தூரத்தை பொறுத்து கோண விலகல் மாறும் தன்மை தான் தூரத்தை அளக்க உதவுகிறது.


தூரத்தில் ஒரு நட்சத்திரத்தை பார்க்கிறோம்.

பிறகு வெகு தூரத்திற்கு சென்று அதே நட்சத்திரத்தை பார்க்கிறோம் இப்பொழுது ஒரு கோண விலகல் ஏற்படும் அல்லவா. நட்சத்திரங்கள் பொதுவாக மிக மிக தொலைவில் இருப்பவை எனவே பூமியில் ஒரு இடத்தில் நின்றுகொண்டு நட்சத்திரத்தை பார்த்துவிட்டு பூமியின் அடுத்த முனையில் சென்று பார்த்தால் கூட நீங்கள் குறித்துக் கொள்ளும்படி கோண விலகல் எதுவும் ஏற்படாது.

எனவே என்ன செய்ய வேண்டும் என்றால் ஒரு நட்சத்திரத்தை குறித்து கொண்டு பின் 6 மாதம் கழித்து அதே நட்சத்திரத்தை குறித்து கொள்ள வேண்டும். இதனால் என்ன நடக்கும் ?


நமக்கு தெரியும் பூமி சூரியனை சுற்றி வருகிறது என. எனவே 6 மாத கால இடைவெளியில் நாம் குறித்து கொண்டபோது பூமி தனது சுற்றுவட்ட பாதையில் ஒரு அரைவட்டம் அடித்து நீண்ட தூரம் கடந்து இருக்கும். இப்போது நட்சத்திரத்தை பார்க்கும் போது அது கோண விலகலை ஏற்படுத்தும் . இப்போது ஏற்படும் கோண விலகலை ட்ரிக்னோமேட்ரி முறை படி கணக்கிட்டால் நட்சத்திரத்தின் தூரத்தை சொல்லி விடலாம்.

இதற்கு முதலில் அடிப்படை விதியாக சூரியனின் தூரத்தை ( 1 astronomical unit (AU), அதாவது சூரியனின் சராசரி தூரம் 150 million kilometers )எடுத்து கொள்கிறார்கள். பிறகு arcseconds, இல் மெல்லிய கோணத்தையும் எடுத்து கொள்கிறார்கள். (இரவு வானில் கிடைத்த மெல்லிய கோண விலகல் ) இவை இரண்டையும் அடிபடையாக வைத்தே வேறு நட்சத்திரங்களில் கிடைக்கும் கோணத்தை வைத்து தூரத்தை கணக்கிடுகிறார்கள்.


ஒரு AU வை  ஒரு arcsecond, ஆல் வகுத்தால் ..கிட்ட தட்ட 30.9 trillion kilometers வரும் அதாவது ஒரு parsec என்பது =3.26 ஒளி ஆண்டுகள் ஆகும்.

இந்த தூர அளவு தான் parallax second (parsec) என்று அழைக்க படுகிறது உதாரணமாக பூமிக்கு மிக நெருக்கமான நட்சத்திரம்  Proxima Centauri இதன்  கோண அளவு parallax 0.7685 ஆகும் எனவே 1 / 0.7685 parsecs = 1.301 parsecs (4.24 ஒளியாண்டு தொலைவு )


முதல் முதலில் கி.மு 189 இல் கிரேக்க வானியலாளர்  Hipparchus, என்பர் தான் இந்த முறையை பயன்படுத்தி இரு வேறு இடங்களில் இருந்து சூரிய கிரகணத்தை காண்பது மூலம் நிலாவின் தூரத்தை கணக்கிட முடியும் என்று சொன்னார். பிறகு Cassini  என்பவர் 1672 இல் இந்த முறையை பயன் படுத்தி செவ்வாயின் தூரத்தை அளந்து காட்டினார்.


இந்த வழிமுறையை பயன்படுத்தி கிட்டத்தட்ட 300 ஒளி ஆண்டுகள் வரை (100 parsec ..) இருக்கும் நட்சத்திரத்தின் தூரத்தை சொல்லிவிட முடியும். நமது பால் வெளி திரள் காலக்சியே 30000 parsec குறுகளவு கொண்டது எனவே அடுத்த காலக்சியில் உள்ள நட்சத்திரங்களின் தொலைவை எல்லாம் அளக்க இது உதவாது. அதற்கு மேல் தொலைவு உள்ள நட்சத்திரங்கள் நாம் எந்த 6 மாத இடைவெளியில் பார்த்தாலும் எந்த கோண மாற்றமும் ஏற்படுத்தாத அளவு மிக மிக தொலைவில் இருப்பவை.அங்கே நமக்கு உதவிக்கு வருவது தான் " Cepheids method".


☯️ "Cepheids "இது ஒரு சுவாரஸ்யமான சமாச்சாரம்.

 1912, ஆம் ஆண்டு Henrietta Swan Leavitt என்பவர் ஒரு  25 குறிப்பிட்ட வகை விசேஷ நட்சத்திரங்களை ஆராய்ந்து அவைகளை Cepheid stars என்று அழைத்தார். அவைகளில் என்ன விசேஷம் என்றால் ..அவைகள் பிரகாசமாகவும் பின் ஒளி மங்கியும் பின் மீண்டும் சில நாளில் பிரகாசமாகவும் பின் மீண்டும் மங்கியும் ஒரு விட்டு விட்டு அனைந்து எரியும் விளக்கை போல தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டு இருப்பதை கண்டார்.  அவைகளை ஆராய்ந்ததில் அவர் கண்ட முக்கிய இரண்டு விஷயங்கள்

1. அவைகள் அனைத்து நேரத்திலும் ஒரே மாதிரியான கால ஒழுங்கில் ஒழுங்கு மாறாமல் விட்டு விட்டு எரிந்து கொண்டு இருந்தன.

2. அவைகளின் எரிந்து அணையும் கால இடைவெளி அவைகளின் உருவத்திற்கு ஏற்ப மாறுபட்டன. அதிக பிரகாசமான நட்சத்திரங்கள் பிரகாசத்திற்கும் மங்களுக்கும் அதிக  இடைவெளி எடுத்து கொண்டன.


இதன் பிறகு இதே போன்ற நட்சத்திரங்களை பக்கத்து காலக்சியிலும் கண்டுபிடித்தார்கள். இந்த கண்டு பிடிப்பு எப்படி தூரத்தை அளக்க உதவியது என்றால்.... நமக்கு அருகே உள்ள இந்த வகை நட்சத்திரங்களில் ஒளி மங்க எடுத்து கொள்ளும் நேரத்தை குறித்து கொண்டு தொலை தூர நட்சத்திரங்களின் ஒளி மங்கும் காலத்துடன் ஒப்பிட்டார்கள். இதே கால இடைவெளியுடன் ஒத்து போகும்  நட்சத்திரங்கள் இதே அளவு பிரகாசம் கொண்டவையாக இருக்க வேண்டும்.  ஆனால அவைகள் கொஞ்சம் மங்கலாக தான் நமக்கு தெரியும். காரணம் அவைகள் இருக்கும் தூரம்.

அவைகள் இருக்க வேண்டிய பிரகாசம் (real

brightness ) ஐ நமக்கு கிடைத்த பிரகாசத்துடன் ( apparent brightness ) உடன் ஒப்பிடுவதன் மூலம் அவைகள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதை சொல்ல முடிந்தது. ஒளியின் பிராகாச அளவு ஒப்பிடுவது எப்படி என்பதை அடுத்து வரும் வழி முறையில் சொல்கிறேன்( "standred candle " என்று ஒரு விஷயம் இருக்கிறது.)

இந்த cepheids stars method வைத்து நாம் 13 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவு வரை உள்ள நட்சத்திரங்களின் தொலைவு வரை அளக்கலாம் அதற்கு மேல் உள்ள தொலைவை அளக்க இந்த வழி முறை உதவாது. அங்கே நமக்கு உதவுவது தான்

"Supernovae method."


☯️ அடுத்த வழிமுறை பற்றி கூறும் முன் இந்த "standerd candle " என்றால் என்ன என்பதை பார்க்கலாம்.

நீங்கள் ஒரு அறையின் நடுவில் நின்று கொண்டிருக்கிறீர்கள் அந்த அறையின் நடுவில் ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது அந்த காட்சியை நீங்கள் படம் பிடிக்கிறீர்கள். பிறகு கொஞ்சம் விலகிச் சென்று அந்த அறையை படம் பிடிக்கிறீர்கள். பிறகு இன்னும் கொஞ்சம் விலகி இன்னுமொரு படம். இப்படி மொத்தம் ஐந்து படம் எடுத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதில் முதல் படத்தைவிட இரண்டாம் படம் சற்றே ஒளி குறைந்து மங்கலாக காணப்படும் அல்லவா. அப்படியே 2 ஆம் படத்தை விட 3 ஆம் படமும்.

ஒவ்வொரு படத்திற்கும் இடையில் ஒளி  வேறுபாடு மட்டும் இல்லாமல் அவைகள் ஒவொண்ணும் மெழுகு வர்த்தியில் இருந்து இருக்கும் தொலைவையும் நமக்கு காட்டுகிறது அல்லவா.

 அதாவது படம் 2 இன் அளவு மங்கலாக ஒளி இருந்தால் இத்தனை மீட்டர் என்று அளந்து கொண்டால் படம் 2 யிலிருந்து படம் 3 எந்த அளவு விகிதத்தில் ஒளி குறைவாக இருக்கிறது என்பதை அளக்க முடியும் என்றால் அதை வைத்து மெழுகு வர்த்தி இருக்கும் தூரம் சொல்ல முடியும் அல்லவா. அதாவது ஒளி மங்கும் விகிதம் தூரத்திற்கு நேர்தகவு இல்  இருக்கும் அல்லவா.

இதே போல தூர நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளியை பதிவு செய்தால் அதில் நிற மாலைகள் கிடைக்கும்.நிறங்களின் அந்த வரிசை நாம் மேலே எடுத்த 5 புகை படத்திற்கு ஒப்பானது. நிற மாலையில் நிறங்களின் மாற்றம் அந்த நட்சத்திரங்களின் தூரத்திற்கு ஏற்றார்போல மாறுபடும். எனவே ஒரு நட்சத்திரம் வெளியிடும் நிறமாலையை கவனிப்பதன் மூலம் அதை இருக்கும் தொலைவை நம்மால் சொல்லிவிட முடியும்.


சரி அந்த supernovae method என்ன என்பதை பார்போம்.


☯️ வெளியில் 1 பில்லியன் ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கும் நட்சத்திரத்தின் தூரத்தை அளக்க முன்பு பார்த்த parallax முறையோ அல்லது Cepheid முறையோ வேலைக்கு ஆகாது. சொல்லப்போனால் அவ்வளவு தூரத்தில் இருக்கும் தனி ஒரு நட்சத்திரத்தை நமது தொலைநோக்கி கொண்டு நாம் பார்க்க கூட  முடியாது. அந்த தூரத்தில் நமது தொலை நோக்கி கண்ணுக்கு தெரிவது எல்லாம் சூப்பர் நோவாகள் மட்டும் தான்.

(ஒரு கொசுறு தகவல் சொல்லி ஆக வேண்டும் பலரும் தொலைநோக்கி என்றால் அதை கண்ணை கொண்டு வைத்து பார்ப்பது என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிக தூரத்திலிருக்கும் நட்சத்திரங்களின் ஒளியைப் பார்க்கும் தொலைநோக்கிகள் நாம் கண்ணை வைத்துகொண்டு பார்ப்பது அல்ல.  அவைகள் ஒளியை வாங்கி அந்த ஒளியை பதிவு செய்யும் தொலைநோக்கிகள் ஆகும். நாம் அந்த பதிவு செய்யப்பட்ட ஒளியை தான் பார்க்க முடியும் )


சரி சூப்பர் நோவாக்கு வருவோம். ஒரு சூப்பர் நோவா என்பது நமக்கு தெரியும் பெரிய பெரிய நட்சத்திரங்கள் தனது இறுதிக்காலத்தில் வெடித்து சிதறும் காட்சிதான் அது. ( அந்த வான வெடி நிகழ்வே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நடக்கும் என்பது வேறு விஷயம் ) அந்த நேரத்தில் நட்சத்திரம் தனது வாழ்நாள் முழுவதும் வெளியிட்ட ஆற்றலை ஒரே நேரத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் அவ்வளவு ஆற்றல் அவ்வளவு பிரகாசம். அந்த ஒளியை நாம் பூமியிலிருந்து தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும். மேலும் ஏற்கனவே தூரம் தெரிந்த சூப்பர் நோவாவின் பிரகாசம் மற்றும் தூரத்தின் அளவீடு நம்மிடம் வைத்து இருப்போம் (நமது standerd candle ) அதை இந்த சூப்பர் நோவாவில் கிடைத்த ஒளி தகவலை வைத்து ஒப்பிட்டு இது இருக்கும் தூரத்தை அளக்க முடியும். இந்த வழி முறைகள் 100 கோடி ஒளி ஆண்டுகள் வரை அளக்க உதவும்.


இப்போது இதையும் தாண்டி அதாவது 100 கோடி ஒளியாண்டுகளையும் தாண்டி இருக்கும் தூரத்தை எப்படி அளப்பது என்று பார்க்கலாம் இதற்கு உதவுவது தான் "Redshift and Hubble's Law"


☯️ 1929, Edwin Hubble என்பவர் இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது என்கிற கருத்தை சொன்னார். எவ்வளவு வேகத்தில் விரிவடைகிறது என்கிற கணக்கையும் கொடுத்தார். அந்த கணக்கு மிகத் துல்லியமானது அல்ல என்றாலும் அந்த கணக்கு உதவக்கூடியது அவர் சொன்னது வினாடிக்கு 65 kilometers ஒவொரு  megaparsec கும் விரிவடைகிறது என்றார். (Parsec என்பதை முன்னவே பார்த்தோம் கிட்ட தட்ட 3 ஒளி ஆண்டுகள் என்று. megaparsec என்பது 1 Mpc = 3 x 106ஒளி ஆண்டுகள்).


எனவே நம்மை விட்டு விலகி செல்லும் காலக்சி இருக்கும் தொலைவை அறிய அதன் திசை வேகம் இருந்தால் போதும் .அந்த திசை வேகம் நமக்கு கிடைத்த ஒளியின் டாப்ளர் விளைவு மூலம் (தூரம் செல்ல செல்ல ஒளி குறைவது ) அறியலாம்.நமக்கு தொடர்ச்சியாக கிடைக்கும் நிறமாலைகள் அவைகள் விலகி செல்லும் வேகத்தை நமக்கு சொல்லி விடும்.

இந்த திசை வேகத்தை மேலே பார்த்த hubble சமன்பாடில் போட்டால் அந்த காலக்சியின் தொலைவை கண்டு பிடித்து விடலாம். ஹபுள் போட்ட கணக்கு சரியா என்று நமக்கு தெரியாது அதை சரி பார்க்க வேறு வழி இல்லை. அது தவறாக இருக்கும் பட்சத்தில் இந்த வழிமுறை படி நாம் கணித்து சொன்ன கேலக்ஸி யின் தூரங்கள் அனைத்தும் தவறானவையே. எனினும் இன்றும் அது சரியாக இருக்கும் என்றே நம்ப படுகிறது.


இங்கே ஒரு விஷயம் கவனித்தோம் என்றால் இந்த விரிவடைதல் பிரபஞ்சத்தின் மொத்த "மாஸ் " ஐ பொறுத்தது . எனவே இந்த விரிவடைத்தல் கணக்கு பிரபஞ்சத்தின் total amount of matter ஐ விளக்க முடிய கூடியது மேலும் டார்க் மேட்டரை பற்றிய தகவலையும் கூட தர கூடியது.இது ஐன்ஸ்டைன் கருத்து.


💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

"தேடல் கேள்விகள் "

கேள்வி 9

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

🎯 கேள்வி :" bose-Einstein condensate " என்பது என்ன ?

-அருண் சென்னை -

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

✍️ பதில் : "பொருட்களின் மூன்று நிலைகள் யாவை "என்று கேட்டால்  நாம் எளிமையாக 'திட,திரவ,வாயு ' என்று பதில் சொல்லி விடலாம். திடப் பொருளை வெப்பப்படுத்தினால்  அது உருகி திரவமாக மாறும். திரவத்தை தொடர்ந்து வெப்ப படுத்தினால் அது வாயுவாக மாறும் என்று நமக்கு தெரியும். ஆனால் அந்த வாயுவை விடாமல் இன்னும் இன்னும் வெப்ப படுத்தினால் என்ன ஆகும் ? 

நாம் காணும் 3 நிலைகளை தாண்டி இயற்கையில் இன்னோரு நிலையில் பொருட்கள் உண்டு அதன் பெயர் 'பிளாஸ்மா ' (நாம் தினம் தினம் பிளாஸ்மாவை கண்ணால் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் அது தான் நமது சூரியன் )

வாயுக்கள் 6000 டிகிரி..7000 டிகிரி என உயர் வெப்ப நிலையில் வெப்ப படுத்த படும் போது அந்த வாயுக்களின் அணுக்களில் இருக்கும் எலக்ட்ரான்கள் அணுவை விட்டு தெறித்து ஓடுகின்றன. பொதுவாகவே ஒரு எலக்ட்ரானுக்கு ஆற்றலை கொடுத்தால் அது ஆற்றலைப் பெற்று கொண்டு தான் சுற்றிக் கொண்டிருக்கும் சுற்றுவட்ட பாதையை விட்டு அதற்கு அடுத்ததாக இருக்கும் உயர்நிலை சுற்றுவட்டப் பாதையில் சென்று சுற்றத் தொடங்கும் விடாமல் இன்னும்  அதற்கு ஆற்றல் வழங்க பட்டால் இன்னும் அது அடுத்த சுற்று வட்டப்பாதைக்கு தாவும் இன்னும் விடாமல் ஆற்றல் கொடுக்க பட்டால் அது அந்த அனுவின் நியூக்ளியசின் ஈர்ப்பு கட்டுப்பாட்டில் இருந்து நழுவி அந்த அணுவை விட்டே வெளியே ஓடி விடும். (பொருட்களை வெப்ப படுத்துவது என்பது அந்த பொருளின் உள்ள எலக்ட்ரானுக்கு ஆற்றலை வழங்குவதுதான்) இப்பொழுது அந்த அணு எலக்ட்ரானை இழந்த நிலையில் இருக்கும் என்பதால் நேர் மின்னூட்டம் பெற்றவையாக இருக்கும் அதாவது" ionized gas " இது இயற்கையில் நட்சத்திரங்களில் மட்டுமில்லை நாம் காணும் மின்னலின் போது கூட உருவாகிறது. எனவே இயற்கையில் நாம் காணும் பொருட்களின் நிலை திட திரவ வாயு தவிர நான்காவதாக பிளாஸ்மா என்கிற ஒரு நிலையும் உண்டு.


ஆனால் இப்போ நான் சொல்ல போவது இயற்கையே உண்டாக்காத பொருட்களின் 5 ஆவது நிலை

ஆம் மனிதனால் கண்டு பிடிக்க பட்டு உண்டாக்க பட்ட பொருட்களின் மிக விசித்திரமான ஐந்தாவது நிலை அதன் பெயர்தான் 'bose-einstein condensate ' 

எப்படி பொருட்களை மேலும் மேலும் வெப்பம் ஆக்கினால் அது வாயு நிலையிலிருந்து பிளாஸ்மா நிலைக்கு செல்கிறதோ அதேபோல பொருட்களை மேலும் மேலும் குளிர செய்தால் அது அடையும் நிலை தான் bose-einstein condensate.


1924 ஆம் ஆண்டு அது.. 

இந்தியாவை சார்ந்த கணிதவியலாளர் மற்றும் இயற்பியலாளரான   சத்யேந்திரநாத் போஸ் என்பவர் Planck’s law பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தார். ஆனால் அவரது கட்டுரை பதிப்புக்கு ஏற்று கொள்ள பட வில்லை. தனது கட்டுரையின் மதிப்பில் நம்பிக்கை கொண்டிருந்த போஸ் அதை அப்போது (இப்போதும் கூட ! )  உலகத்தின் தலை சிறந்த விஞ்ஞானியாக கருத பட்ட ஐன்ஸ்டைனுக்கு நேராக அனுப்பி வைத்தார். அதை படித்து பார்த்த ஐன்ஸ்டைன் வியந்து பாராட்டி அதை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்து அந்த நாட்டின் science journal ஒன்றில் வெளியிட்டார். அது போஸ் க்கு மிக பெரிய அங்கீகாரத்தை தேடி கொடுத்தது. நிர்வாகம் அவருக்கு 2 ஆண்டுகால விடுமுறை கொடுத்து யூரோப்பில்  X-ray மற்றும் crystallography laboratories,ல் ஆய்வுகள் செய்யவும் அனுப்பி வைத்தது. அங்கே அவருக்கு மிக பிடித்த ஐன்ஸ்டைன் மற்றும் மேரி கியூரி உடன் பணி புரியும் அரிய வாய்ப்பும் கிடைத்தது.

(பிற்பாடு 1926 dhaka university யில் புரொபேசர் ஆவதற்கு போஸ் அவர்கள் விண்ணப்பம் போட்ட போது அவர் டாக்டரேட் பண்ணாததை காரணம் காட்டி நிர்வாகம் மறுத்தது அப்போது ஐன்ஸ்டைன் நேரடியாக தலையிட்டு சிபாரிசு செய்து போஸ் அவர்களை "head of the department " ஆக்கியது வேறு கதை.) சரி நம்ம கதைக்கு வருவோம்...


போஸ் ஐன்ஸ்டைனுக்கு அனுப்பிய அந்த  கட்டுரையில் இருந்த குவான்டம் அறிவியல் உண்மைகளில் மேலும் கொஞ்சம் ஆய்வு செய்த  ஐன்ஸ்டைன் பொருளின் ஒரு புதிய நிலை இது வரை நாம் பார்க்காத நிலை...பொருளின் 5 ஆவது நிலையை பற்றி குறிப்பிட்டார் .ஆம் போஸ் இன் ஆய்வு கட்டுரை சரியே இப்படி ஒரு சாத்தியம் இருக்கிறது. அணுக்களின் இயக்கத்தை மிக விசித்திரமாக மாற்றும் ஒரு சாத்தியம்.இது வரை இயற்கையில் இல்லாத ஒரு நிலையை உண்டு பண்ணும் சாத்தியம். என்று அறிவித்தார் அது தான்" bose-Einstein condensate".


இந்த B.E.C நிலை என்பது என்ன விஷயம் என்று கொஞ்சம் பார்க்கலாம்...

ஒரு அணுவை வெப்ப படுத்துவது என்பது அதற்கு ஆற்றலை கொடுப்பது என்று பார்த்தோம் எனவே ஒரு அணுவை குளிர்விப்பது என்பது ஆற்றலை அதனிடம் இருந்து உருஞ்சுவது. அப்படி ஆற்றல் உறிஞ்ச பட்ட அணுக்கள் எப்படி பட்டவையாக மாறுகின்றன என்பது தான் ஆச்சர்யம். 

அதாவது obsolute zero வுக்கு நெருக்கமான குளிருக்கு அணுவை அழைத்து செல்ல வேண்டும். இந்த Obsolute zero என்பது மைனஸ் 273.15 டிகிரி செல்சியஸ்.பிரபஞ்சத்தில் எங்கேயும் Obsolute zero என்கிற நிலை இல்லை. காரணம் அப்படி ஒரு நிலை இருக்கும் பட்சத்தில் அங்கே அனுயென்று ஒன்று இருக்காது. காரணம் அணுவுக்குள் இருக்கும் ஆற்றல் முற்றிலும் நீக்க பட்டு அனுவின் இயக்கம் முற்றிலும் நின்று போகும். எனவே அந்த obsolute zero வை நாம் எங்கும் காணவும் முடியாது அடையவும் முடியாது. ஆனால் நாம் Obsolute zero வுக்கு மிக மிக மிக நெருக்கமான அளவு போகலாம். Obsolute zero என்பது zero kelvin.

நாம் 0.0001K வரை நெருங்கி இருக்கிறோம்.


1924 இல் ஐன்ஸ்டைன் இதை சொன்ன போது அது வெறும் கோட்பாடு தான் அது வேலை செய்யுமா இல்லையா என யாருக்கும் தெரியாது. யாரும் அதை ஆய்வு செய்து பார்த்திருக்க வில்லை.

பல வருடங்களுக்கு பின் 1995 இல் கொலராடோ யூனிவர்சிட்டியை சார்ந்த இரு ஆய்வாளர்கள்  Eric Cornell மற்றும் Carl Wieman ரூபிடியம் அணுவை 170 நேனோ கெல்வினுக்கு குளிர செய்து பார்த்த போது பொருள் "bose-Einstein condensate". நிலையை அடைந்ததை நிரூபிக்க முடிந்தது. அதன் பின் மேலும் ஒருவரும் (wolfgang caterly )  இதை செய்து காட்டினார்.(இம்முறை சோடியம் அணுவை வைத்து )  அந்த மூவருக்கும் 2001 இல் நோபல் பரிசு கிடைத்தது..


சரி அதி குளிரில் அணுவில் நடக்கும் விசித்திரம் என்ன என்பதை பார்க்கலாம்...


எந்த ஒரு போஸான் அணுவையும் (போஸான் என்பது என்ன ? எந்த அணுவில் நியூட்ரான் புரோட்டான் எலக்ட்ரான் கூட்டு தொகை இரட்டை படையில் வருகிறதோ அது போசான் ஒற்றை படையாக வந்தால் fermions) போஸான் வகை அணுவை எடுத்து கொண்டு மேலே சொன்ன படி  அதி குளிருக்கு கொண்டு சென்றால் ( அப்படி கொண்டு செல்லும் போது இவைகளை அடைத்து இருக்கும் பாத்திரத்தில் இவைகளின் அடர்த்தி குறைவாக இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும். இல்லையேல் இவைகள் குளிரில் திரவமாக மாறி விடும். வாயு திரவமாக மாற 3 அணுக்கள் ஒன்றிணைய வேண்டும். அப்படி 3 ஒன்றாக இணையாத அளவு அடர்த்தியை குறைத்து வைத்து இருந்தால் திரவமாக மாறாது. ) இப்போது படி படியாக வெப்பம் குறையும் போது இந்த அணுக்களில் உள்ள அலை தன்மை அதிகரிப்பதை கண்டார்கள். 


De broglie hypothesis என்ன சொல்கிறது என்றால்,ஒரு துகளின் உந்தம் வேகமாக இருந்தால் அலை நீளம் குறைவாக இருக்கும் உந்தம் குறைவாக இருந்தால் அலை நீளம் பெரிதாக இருக்கும். இதன் படி அதி குளிரை நெருங்க நெருங்க இப்போ அனுவின் அலை நீளம் மிக பெரிதாக மாறுகிறது பின் அவைகள் ஒன்றோடு ஒன்று கலந்து விடுகின்றன. அதன் பின் நடப்பது தான் விசித்திரம். இது இப்போது  பல அணுக்களின் தொகுதி என்ற நிலையை கடந்து மொத்தமாக ஒரே அனு போன்ற ஒரு நிலையை அடைகின்றன. அதாவது super atom எனும் நிலை. எந்திரன் படத்தில் பல ரோபோக்கள் ஒன்று சேர்ந்து ஒரே மெகா ரோபோவாக மாறி நிற்பதை போன்ற ஒரு நிகழ்வு இது.


ஒரு பள்ளி மைதானத்தில் தான் தோன்றி தனமாக விளையாடி கொண்டு இருக்கும் மாணவர்கள் ஒவொருவருமே தனி தனி குணம் கொண்டவர்கள் அவர்கள் இயக்கம் தனி தனி தன்மை வாய்ந்ததாக தான் இருக்கும் அல்லவா ?அப்படி தான் சாதாரணமாக அணுக்களின் இயக்கம் இருக்கும் ஆனால் ஒரு பேச்சுக்கு அந்த மைதானத்தில் உள்ள மொத்த மாணவர்களும் ஒரே மாதிரி கை வீசி ஒரே மாதிரி கால் வீசி ஒரே சீராக நடந்தால் எப்படி இருக்கும் ஒரே சமயத்தில் உடர்கார்ந்து ஒரே சமயத்தில் எழுந்து நீங்கள் கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் ஒரே குரலில் பதில் சொன்னால் எப்படி இருக்கும் அப்படி ஒரு நிலை தான் அணுக்களின் " bose-Einstein condensate". நிலை. அதாவது super atom state .


பிறகு வந்தவர்கள் 2000 அணுக்களை இணைத்து சூப்பர் ஆட்டம் ஆக்கி ஆராய்ந்து பார்த்தார்கள். குவாண்டம் நிலையை ஆராய இது ஒரு சிறப்பான வழி என கண்டார்கள். 


குவாண்டம் உலகை ஆராய புது வழியைக் கண்டுபிடிக்க மூளையாக இருந்த இந்தியர் சத்யேந்திர நாத் போஸ் ஐ நினைவு கூர்ந்து கட்டுரையை முடிக்கிறேன்.


குறிப்பு : போசானிக் அணுக்களை பயன் படுத்தி போஸ் ஐன்ஸ்டைன் காண்டன்சேட் பண்ணது போல  fermion வகை அணுவை அதி குளிருக்கு ஆட்படுத்தி fermionic condensate அல்லது  Fermi-Dirac condensate என்ற நிலையும் உண்டு பண்ணி இருக்கிறாராகள். (பொருட்களின் 6 ஆவது நிலை )அது பற்றி வேறு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.


💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥


தேடல் கேள்விகள் "

கேள்வி 10

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

🎯 கேள்வி : 


"வணக்கம்....

பரிமாணங்களை பற்றி தங்களது கருத்து என்ன.... ஏழு பரிமாணங்கள் உள்ளது என்று படித்து இருக்கிறேன்....


-K.குமார் பவானி -

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️


✍️ பதில் : 


என்னது  7 ஆ.. அப்போ மீதி ?

 நமக்கு தெரியும் நாம் முப்பரிமாண உலகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பது. (இல்லை இல்லை நாம் வாழ்வது 4 பரிமாண உலகத்தில் ..நம்மால் காலத்தில் பயணிக்க முடியும் என்பது பெருந்தலை ஐன்ஸ்டைன் கருத்து )

ஆனால் ஐன்ஸ்டைனையே ஓரம் கட்டி விட்டு குவாண்டம் பிசிக்ஸ் சொல்வது என்ன வென்றால் மொத்தம் ஒன்று இரண்டு அல்ல 10 பரிமாணங்கள் உள்ளன . அதில் M தியரி படி இன்னும் ஒரு பரிமாணம் சேர்த்து மொத்தம் 11 பரிமாணங்கள் உள்ளன என்கிறது அறிவியல்.(bosonic string theory னு ஒன்னு... அதன் படி மொத்தம் 26 பரிமாணங்கள் உள்ளன. தலை சுத்ததுதா.. ஆனால் விஞ்ஞானிகள் இப்போது அதை மறுத்து ..அப்படி ரொம்ப அதிக படியான பரிமாணம் என்பது பிரபஞ்சத்தை நிலை இல்லாததாக்கி மீண்டும் 11 பரிமாணத்தில் தான் கொண்டு வந்து சேர்க்கும் என்று கருதுவதால் இப்போதைக்கு 11 பரிமாணங்கள் என்பதில் நிறுத்தி கொள்வோம்.) 


சரி 11 பரிமாணங்கள் என்பது என்ன அதில் விஷயங்கள் எப்படி இருக்கும்? என்ன இருக்கும் ?யார் இருப்பார்கள் அதன் தன்மைகள் என்ன ? 

ஒவ்வொன்றாக பார்க்கலாம் . 


அதற்கு முன் சில முன்னுரை தகவல்கள் தெரிந்து கொள்வது முக்கியம்.

அதில் முக்கியமான ஒன்று நாம் நினைப்பது போல univerce நாம் வாழும்.. நாம் காணும் .. இதோ இந்த ஒரு பிரபஞ்சம் மட்டுமே அல்ல இதே போல நாம் வாழாத நாம் காணாத பல பிரபஞ்சங்கள் உண்டு. ஆமாம் எங்கே உண்டு அதெல்லாம் ? இதோ இங்கேயே தான் .நாம் காணும் இதே பிரபஞ்சத்தை ஒட்டி நாம் அளக்க முடியாத ஒரு மெல்லிய அடுக்கில் இங்கேயே அது ஒட்டி இருக்கிறது. 

ஒரு bread பாக்கெட்டில் அருகருகே ஒட்டி இருக்கும் bread கள் போல.  

ஏன் இப்படி ஒரு சிந்தனை நமக்கு வந்தது ? சொல்கிறேன் .


நமக்கு பிக் பாங் தியரி பற்றி தெரியும் அதாவது ஒரு நினைத்து பார்க்க முடியாத ஒரு புள்ளி அளவில் இருந்து தான் இன்றைக்கு நாம் காணும் இந்த பிரமாண்ட பிரபஞ்சம் விரிவடைந்தது. அதும் நினைத்து பார்க்க முடியாத அளவு குறைந்த கால வெளியில் .


சரி பிக் பாங் ஐ நாம் நம்ப காரனம் என்ன ? பெரிய முக்கியமான காரனம் நாம் அறிந்த வரை ஆராய்ந்த வரை இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு வினாடியும் அளவில் ஊதி கொண்டே செல்கிறது அதுவும் சீரான வேகத்தில் அல்ல ஒவ்வொரு வினாடியும் வேகத்தை கூட்டி கொண்டே (acceleration ) செல்கிறது. இதை உல்டாவாக கற்பனை செய்து பார்த்தால் (பிரபஞ்சத்தை வீடியோ எடுத்து அதை ரிவர்ஸ் ல போட்டு பார்த்தால் ) எல்லாம் சுருங்கி சுருங்கி இந்த பிரமாண்டம் ஒரு கட்டத்தில் ஒரு புள்ளியில் (singularity ) யில் வந்து முடியும் அல்லவா.. அதான் பிங் பாங்.


சரி இப்போ பிக் பாங் ஐ நம்ப காரணம் உள்ளது போல பிக் பாங் ஒன்னும் ஆரம்பம் இல்லை னு விஞ்ஞானிகள் சந்தேக படவும் காரணம் உண்டு அதில் முக்கியமான ஒரு காரணம் " பிக் பாங் ஏன் ஏற்பட்டது "என்கிற காரணம் .இப்போ இந்த கன்னோடத்தில் பார்க்கும் போது இந்த பிக் பாங் ஆரம்பம் அல்ல அது ஒரு பெரிய வேற ஏதோ ஒரு பிரம்மாண்டத்தின் சிறு பகுதி. அந்த இன்னொரு பிரம்மாண்டத்தின் நிலை இல்லாத ஆற்றல் காரணமாக தான் இப்படி வெடித்து நாம் காணும் இந்த பிரபஞ்ச துண்டாக உருவாகி இருக்கிறது . எனவே பிக் பேங்க் என்பது ஒருமுறை மட்டுமே உண்டான ஒரு விஷயம் அல்ல அது பலமுறை நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் அதில் ஒரு புள்ளியில் உண்டான ஒரு பிரபஞ்சத்தை மட்டும் தான் நாம் காண்கிறோம் ஆனால் இருப்பது என்னவோ பலவகையான பிரபஞ்சங்கள்.  அவைகள் எல்லாம் ஒளியை விட வேகத்தில் நம்மை விட்டு பிரிந்து இருப்பதால் அவற்றை நாம் ஒருபோதும் தொடர்பு கொள்ள இயலாது. சரி இதை மனதில் வைத்து கொண்டு இப்போது நீங்க கேட்ட கேள்வியான பரிமாணங்களுக்கு சென்று விடலாம் வாருங்கள்...


        ⚫ ⚪    ⚫ ⚪   ⚫ ⚪      


🔴பரிமாணம் 0 : இப்போது வானத்திலிருந்து இறங்கி வந்து இப்பொழுது உங்கள் வீட்டு அறையில் உங்கள் மேஜையில் உட்கார்ந்து கொண்டு ஒரு வெள்ளை தாளை எடுத்துக் கொண்டு அதில் ஒரே ஒரு புள்ளியை வையுங்கள். இதற்கு நீளம் அகலம் உயரம் ஏதும் இல்லை இதனால் ஒரு இடத்தில் இருந்து இன்னோரு இடத்திற்கு செல்ல முடியாது. இது ஒரு புள்ளி அவ்வளவு தான் .எனவே இது சுழிய பரிமாணம்


🔴பரிமாணம் 1 : நீங்கள் வைத்த புள்ளிக்கு துணையாக அருகில் இன்னோரு புள்ளி வையுங்கள் அதை ஒரு கோட்டால் இணையுங்கள் ..இப்போது இந்த புள்ளியில் இருந்து அந்த புள்ளிக்கு ஒரு கோடு மட்டும் நகர்ந்து உள்ளது இதான் ஒற்றை பரிமாணம். இதற்கு நீளம் உண்டு அகலம் மற்றும் உயரம் இல்லை இவற்றால் நீளத்தில் நகர முடியும் ஆனால் அகலத்தில் அல்ல உயரத்தில் அல்ல. ஒரு கோடு என்பது தான் ஒற்றை பரிமாணம்.


🔴 பரிமாணம் 2 : அந்த வெள்ளை தாளில் உள்ள புள்ளி மற்றும் கோடுகளை மறந்து விட்டு அந்த வெள்ளை தாளை உற்று பாருங்கள்

அந்த தாளுக்கு நீளம் உண்டு அகலம் உண்டு ஆனால் உயரம் இல்லை அல்லவா இது தான் இரண்டு பரிமாணம். 

சரி 3 ஆவது பரிமாணம் போவதற்கிற்கு முன் அந்த வெள்ளை தாளில் ஒரு வீடும் அதற்குள் x என்கிற ஒரு மனிதனையும் வரைந்து கொள்ளுங்கள் (எதற்கென்று என்று அடுத்த டைமன்ஷன் ல சொல்றேன் )


🔴பரிமாணம் 3 : நாம் நம்மை சுற்றி காணும் பொருட்கள் யாவும் முப்பரிமாண பொருட்களே.. உங்களை சுற்றி உள்ள நீள அகல உயரம் கொண்ட அனைத்து பொருட்களும்..நீங்கள் காணும் பந்து மேஜை கார் பஸ் மனிதர்கள் நாற்காலி எல்லாமே முப்பரிமானம் கொண்டது. 

ஒரு நேர் கோட்டால் ஒரே திசையில் நகர முடியும் ஒரு இரு பரிமாண பொருளால் நீளம் மற்றும் அகலத்தில் நகர முடியும் ஒரு முப்பரிமாண பொருளால் உயரம் அல்லது ஆழத்தில் நகர முடியும். 

சரி இப்போ ஒரு கேள்வி உயர் பரிமாண பொருள் அதற்கு குறைவான பரிமாணத்தில் நுழைந்தால் என்ன ஆகும் அவைகள் அதை எப்படி கானும் ? வாங்க ஒரு உதாரணம் பார்க்கலாம்.


வெள்ளை தாளில் மிஸ்டர் x அவர் வீட்டில் (வரைய பட்டு ) உட்காந்து இருக்கார் அல்லவா.. அவரது தாள் உலகம் ஒரு 2 d உலகம் ..அவரே ஒரு 2 d மனிதர்.. இப்போ அவரது வீட்டுக்கு நாம் முப்பரிமானம் கொண்ட ஒரு கோலி குண்டை கொண்டு செல்வோம் அவர் அதை எப்படி காண்பார் என்று பார்ப்போம்.

ஒரு கோலிகுண்டை எடுத்து கொண்டு அதை வெள்ளை தாளில் ஒரு பக்கம் நுழைத்து அடுத்த பக்கம் எடுப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். 


மிஸ்டர் x வீட்டை கடந்து செல்லும் கோலிகுண்டை அவர் எப்படி காண்பார் ? முதல் விஷயம் கோலி பேப்பரை தொடும் வரை அவர் கண்ணுக்கு கோலியே தெரியாது தொட்ட ஆரம்பத்தில் ஒரு புள்ளியாக அதை காண்பார் .கோலி பேப்பரை சரி பாதியாக ஊடுருவி இருக்கும் போது கோலியின் விட்ட பகுதியை அவர் இப்போது ஒரு பெரிய வட்டமாக 2d யில் காண்பார்.கோலி அடுத்த பக்கம் வெளியேறி செல்ல செல்ல வட்டம் சுருங்கி கொண்டு போவதாக காண்பார்.அதாவது மொத்த நிகழ்வை அவர் ஒரு புள்ளி அப்புறம் அதில் இருந்து ஒரு வட்டம் உண்டாகிறது.. அந்த வட்டம் பெரிதாகி கொண்டே செல்கிறது ஒரு கட்டத்தில் மீண்டும் சுருங்க தொடங்கி சூனியத்தில் காணாமல் போகிறது இப்படி தான் காண்பார்.


சரி நாம் வாழும் இந்த முப்பரிமாண உலகத்தில் ஒரு 4 பரிமாண பொருள் உள்ளே நுழைந்தால் நாம் அதை எப்படி காண்போம் ?


நமக்கும் கிட்ட தட்ட அதே கதை தான்.

சூனியத்தில் இருந்து திடீரென ஒரு பொருள் உண்டாவதை காண்போம்.

(அந்த 4 பரிமாண பொருள் பெயர்  Tesseract மார்வல் fans க்கு ரொம்ப பரிச்சயமான பெயர் ) அது வினாடிக்கு வினாடி நிலை இல்லாமல் மாறி கொண்டே இருப்பதை காண்போம். வித விதமாக அது உரு மாறி கொண்டே போய் திடீரென சூனியதில் காணாமல் போவதாக காண்போம்.


🔴பரிமாணம் 4 : இது ஐன்ஸ்டைன் சொன்ன கால பரிமாணம். இந்த பரிமாணத்தை ஒருவன் எட்டும் போது அவனால் காலத்தில் பயணம் செய்ய முடியும் அவனால் அவனது கடந்த காலத்தை சென்று பார்க்க முடியும்.  அது மட்டும் அல்ல அதில் தேவையான மாறுதலை பண்ண முடியும்.

உதாரணமாக : 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள்....

உங்களுக்கு ஒரு அரசு உத்தியோகம் கிடைத்தது ஆனால் அதில் ஒரு பிரச்சனை நீங்கள் 5 லட்சம் லஞ்சம் கட்டினால் தான் அந்த வேலை கிடைக்கும் என்கிற சூழ்நிலை . நீங்கள் அப்படி ஒரு வேலை எனக்கு தேவையே இல்லை என்று உதறிவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை க்கு சேர்ந்தீர்கள். ஆனால் இப்போது நீங்கள் அதை நினைத்து வருந்தாத நாள் இல்லை.பேசாம 5 லட்சம் கொடுத்து சேர்ந்து இருக்கலாம் ராஜா வா இருந்து இருக்கலாம் என்பது உங்களது இன்றைய நிலை பாடு என்று வைத்து கொள்ளுங்கள். நீங்கள் 4 ஆவது பரிமாணத்தில் பயணிக்க முடிந்தால் மீண்டும் அந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய தேதி சென்று இப்போது லஞ்சம் கொடுத்து அரசு அதிகாரியாக ஆகி விட முடியும்.


நீங்கள் 4 ஆவது பரிமாணத்தில் பயணிக்க முடியும் எனில் ஒரு பிரச்னை தான் உள்ளது. இப்போது உங்களுக்கு புதிய கால ரேகை உண்டாகி விடும் இப்போது நீங்கள் அரசு அதிகாரியாக வாழ்வது இப்போதைய இந்த உலகத்தில் அல்ல வேற ஒரு பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு பிரபஞ்சத்தில் இருக்க முடியாது..


🔴பரிமாணம் 5  : 5 ஆம் பரிமாணத்தில் வசிக்கும் மனிதன் சில சக்திகளை கொண்டிருக்கிறான் அவனால் காலத்தில் பயணிக்க மட்டும் அல்ல காலத்தை கட்டு படுத்தவும் முடியும் .மேலும் ஒரே நேரத்தில் இரு வேறு வகையான வாழ்க்கையை வாழ முடியும். அவனுக்கு நான்காம் பரிமாணத்தில் உள்ளவனுக்கான அனைத்து சக்தியும் இருக்கும் கூடவே அதைவிட தனிப்பட்ட சில சக்திகளையும் கொண்டிருப்பான்.

அவனால் 10 ஆண்டுகள் முன் சென்று அரசு வேலையை வாங்கவும் முடியும் அதே நேரத்தில் இன்னோரு டைம் லைனில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கவும் முடியும். ஆனால் அவன் இரு வேறு வாழ்க்கை வாழ்வது ஒரே பிரபஞ்சத்தில் அல்ல அது இணை பிரபஞ்சம் (parralal univerce ) இந்த பரிமாணத்தில் இணைப் பிரபஞ்ச கான்செப்ட் தொடங்குகிறது. ஆனால் இந்த பரிமாணத்திற்கு என்று ஒரு சின்ன எல்லை இருக்கிறது அது என்னவென்றால் அவனால் தனது இரு வேறு உலகத்தில் தொடர்பு கொள்ள முடியாது அவன் கடைசி வரை தனித்து மட்டுமே பயணிக்க முடியும் தனது இன்னொரு பரிமாணத்தை அவன் ஒருபோதும் சந்திக்க முடியாது.


🔴பரிமாணம்  6 : ஆறாவது பரிமாணத்தில் உள்ளவனுக்கு ஐந்தாவது பரிமாணத்தில் உள்ளவனுக்கான அனைத்து சக்தியும் இருக்கும் கூடவே அவனுக்கு இல்லாத பல உயர்தர சக்தியும் இருக்கும். அவனால் காலத்தில் முன் பின் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் பயணிக்கவும் முடியும் அந்த காலத்தை மாற்றவும் முடியும்.

 இரு வேறு கால ரேகையில் ஒரே நேரத்தில் வாழவும் முடியும் அது மட்டுமில்லாமல் தனது இன்னொரு பரிமாணத்தை நேரில் சந்திக்கவும் முடியும்.  (ஒரு லைனில் இருந்து 5 ஆண்டுகள் முன் மட்டும் பயணித்து தனது திருமணத்தை மாற்றி இன்னோரு கிளை ரேகையில் இன்னோரு  வாழ்க்கை கூட தொடர முடியும். )  இவனால் எந்த உலகத்தில் இருந்து எந்த உலகத்திற்கும் இவனால் எளிதாக கடந்து பயணித்து செல்ல முடியும். 

ஆனால் இவனை பொறுத்த வரையும் கூட அனைத்து விதமான பரிமாணம் மற்றும் காலத்திற்கும் ஆரம்ப புள்ளி ஒன்று தான்.அது தான் பிக் பேங். 


🔴பரிமாணம் 7 :  இந்த பரிமாணத்தில் வாழக்கூடியவனுக்கு மேலே பார்த்த அனைத்து விதமான சக்தி மற்றும் அதனுடன் சேர்ந்து மிக அதிகப்படியான சக்தியும் இருக்கும் அதன்படி இவன் இணை பிரபஞ்சம் மட்டுமல்ல முடிவிலியான எண்ணிக்கை கொண்ட பிரபஞ்சத்தில் இவனால் முடிவிலியான கணக்கற்ற வாழ்க்கையை ஒரே நேரத்தில் வாழ முடியும். தனது கணக்கற்ற பரிமாணங்களை சந்திக்க முடியும் முடிவிலியான உலகங்களுக்கு பயணிக்க முடியும். மேலும் இன்னோரு சிறப்பு இவனை பொறுத்தவரை big bang மட்டுமே ஆரம்பம் அல்ல மிக பெரிய ஒரு செயல் திட்டத்தில் ஒரு சிறு துளி தான் அந்த பிக் பேங்கும் இந்த நமது கண்ணுறு பிரபஞ்சமும். என்பதை அவன் காண்பான்.


🔴பரிமாணம் 8 :  இந்த பரிமாணத்தில் இருப்பவர்களுக்கு எந்த விதமான உருவமும் வடிவமும் இருக்காது ஆனால் அவர்கள் இருப்பார்கள். உதாரணமாக நாம் விர்ச்சுவல் உலகில் உள்ள மனிதர்களை அல்லது ஒரு வீடியோ வடிவில் உள்ள காட்சிகளை நாம் தகுந்த கருவி கொண்டு காண முடியும் .ஆனால் அவைகள் இருப்பது மின் காந்த வடிவ உலகத்தில். நம்மை சுற்றி உள்ள வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பை கற்பனை செய்து பாருங்கள் உங்கள் அறைக்குள் எத்தனை விதமான மின்காந்த வடிவங்கள் இப்பொழுது நடமாடிக் கொண்டிருக்கின்றன ஆனால் எதையாவது நம் தொட முடியுமா ? அல்லது அவர்களுடன் பேச முடியுமா ? முடியாது அல்லவா அதே போல் தான் எட்டாவது பரிமாணத்தில் வசிக்கும் மனிதர்களை (மனிதர்கள் னு சொல்லலாமா மொதல்ல ? ) நாம் வடிவமாக பார்க்கவோ தொடவோ இயலாது.  ஆனால் அவர்கள் வடிவமற்று நீக்க மற நிறைந்து உங்களை எளிதாக கண்காணிக்க முடியும். மேலும் தேவைப்படும்போது தனது வடிவங்களை அவர்கள் மாற்றிக் கொள்ள முடியும். 


🔴பரிமாணம் 9  : ஒன்பதாவது பரிமாணத்தில் உள்ளவன் அளவற்ற சக்திகளை கொண்டவன். அவனால் முடிவிலியாக இருக்கும் பிரபஞ்சத்தில் கணக்கற்ற வாழ்க்கையை எந்த வடிவமும் இல்லாமல் வாழ முடியும் மேலும் இந்த முடிவிலியான பிரபஞ்சத்தில் மொத்த கால ரேகையில் எந்த இடத்திலும் இவனால் பயணிக்க முடியும் எந்த ஒரு ஆரம்ப புள்ளிக்கோ இறுதி புள்ளிக்கோ இவனால் செல்ல முடியும். கால வெளி தடை இல்லாமல் எந்த ஒரு பிரபஞ்சத்திலும் உள்ள எந்த எந்த ஒரு காலகட்டத்திலும் உள்ள யாரையும் இவனால் சென்று சந்தித்துக் கொள்ள முடியும். காலத்தில் மாற்றத்தை செய்ய முடியும்.


🔴பரிமாணம் 10 : இங்கே இப்போது இந்த கட்டத்தில் .. 'முடியாதது ' என்கிற வார்த்தை இல்லை இங்கே அனைத்தும் முடிக்கும் வல்லமை கொண்டவன் வசிக்கிறான் . அவனால் மொத்தமாக பிரபஞ்சத்தின் அனைத்து விதிகளையும் கட்டுப்படுத்த முடியும். பிரபஞ்சத்தில் எதை வேண்டுமானாலும் அவனால் மாற்றி அமைக்க முடியும்.மேலும் அவன் கொண்ட சக்திக்கு எல்லை என்று ஏதும் இல்லை. இப்பொழுது அவனை என்னவென்று அழைக்கலாம் சொல்லுங்கள் ? ஆம் சரி...

"கடவுள் " 

நாம் சொல்லும் கடவுள் என்பவன் இருப்பானேயானால் அவன் வசிப்பது பத்தாவது பரிமாணத்தில் தான்.


🔴பரிமாணம் 11 :


கடவுளையும் தாண்டி இங்கே யார் இருக்கிறார்கள் என்பதை காண ஆவலாக வந்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது கொஞ்சம் ஓய்வு எடுங்கள் 

இந்தாருங்கள் இந்த ஒரு கொத்து திராட்சை பழத்தை சாப்பிடுங்கள்


ஒரு நிமிஷம்... அதில் ஒரே ஒரு திராட்சையை மட்டும் பிய்த்து எடுங்கள் இப்போது அந்த ஒரு பழத்தை பல பல கோடி துண்டுகளாக சிதைத்து ஒரு அணுவை அடையுங்கள் ...இதோ பாருங்கள் இப்போது திராட்சை இல்லை மாறாக ஒரு உட்கருவை எலக்ட்ரான் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. சரி அதில் நடுவே உள்ள உட்கருவில் புரோட்டான் மற்றும் நியூட்ரான் இருக்கிறது பாருங்கள் அதில் புரோட்டானை மட்டும் எடுத்துக் கொண்டு அதை இன்னும் சிதைத்து சிதைத்து சின்னதாக்குகள் இப்பொழுது நாம் காண்பது குவார்க்குகள் மட்டுமே. ஒரு அணுவின் அனைத்து துகள்களும் குவார்க்குகளால் ஆனது தான். ஆனால் இந்த பாழாப்போன ஸ்ட்ரிங் தியரி அத்தோடு நிற்பதில்லை அந்த குவார்க்கையும் பிரித்து பிரித்து கடைசியில் எஞ்சி நிற்பது என்ன என்று பார்க்கிறது. இறுதியில் எஞ்சி நிற்பது string என்கிற ஒரு அதிரும் இழை தான். 


அது எதனால் ஆனது எங்கிருந்து வந்தது என்கிற கேள்விக்கு இப்பொழுது விஞ்ஞானிகளிடம் விடை இல்லை. அது அதிர்வால் மட்டுமே ஆனது. அதிர்வாகவே உள்ளது. அதன் வடிவமோ நாம் கற்பனையும் பண்ண முடியாத அளவுக்கு மிக மிக சிறியது எந்த அளவு சரியது என்றால் ஒரு அணுவை எடுத்துக்கொண்டு இந்த சூரிய குடும்பம் அளவிற்கு பெரிதாக மாற்றினால் அந்த ஸ்ட்ரிங் என்பது ஒரு சிறிய கார் அளவிற்கு காணக் கிடைக்கும் . எனில் அதன் உருவத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்.  அந்த string ஒரு ஒற்றை பரிமாண பொருள். நீங்கள் கையில் ஒரு கிட்டாரை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் ஒருவிதமாக கம்பியை மீட்டினால் ஒரு விதமான ராகம் வரும் இன்னொரு விதமாக மீட்டினால் இன்னொரு விதமான ராகம் வரும் உங்கள் கிட்டாரின் கம்பிகள் ராகத்தை உண்டாக்குகிறது அந்த ஸ்ட்ரிங்கின் அதிர்வு நாம் காணும் இந்த மொத்த பிரபஞ்சத்தையுமே உருவாக்குகிறது .ஒரு ஸ்ட்ரிங் ஒரு விதமாக அதிர்வுற்றால் அது நியூட்ரான் இன்னொரு விதமாக அதிர்ந்தால் அது உருவாக்குவது எலக்ட்ரான் இன்னொரு விதமாக அதிர்ந்தால் அது நியூட்ரினோ இப்படி நாம் கானும் இந்த மொத்த பிரபஞ்சமும் ஆரம்பம் அந்த ஒற்றை பரிமாணம் கொண்ட ஸ்ட்ரிங் தான் (ஆம் நாம் காணும் பிரபஞ்சத்தின் ஆரம்ப அதிர்வுகளை கொடுப்பது ஒரு ஒற்றை பரிமாண சங்கதி தான் )


String theory மொத்தம் 10 பரிமாணங்களை மட்டுமே கொண்டது ஆனால் இந்த 11 ஆவது பரிமாணத்தைக் கொண்டு வருவது M. தியரி என்கிற ஒரு கான்செப்ட்.

இப்போது இங்கே  ஒற்றை பரிமாணம் கொண்ட string அல்ல மாறாக அதிர்வது பல பரிமாணம் கொண்ட "branes " 

String theory 5 பிரிவுகளை கொண்டது அவை அனைத்தையும் ஒன்றடக்கி.. M theory 11 ஆவது பரிமாணத்தை சிபாரிசு செய்கிறது. 

ஸ்ட்ரிங் தியரி கணிதத்தில் திணறும் இடத்தை சரி செய்து தீர்வு அளிக்க M தியரி 11 ஆவது பரிமாண கான்செப்டை கொண்டு வருகிறது. ஆனாலும் அதுவும் கூட ஒரு கட்டத்தில் திணறி தான் நிற்கிறது.


⚫ ⚪    ⚫ ⚪   ⚫ ⚪     


உயர் பரிமாண கோட்பாடுகள் கேட்க கற்பனை கதைகள் போல இருந்தாலும் அவற்றை முழுதாக கற்பனை என்று ஒதுக்கி விட முடியாது. இன்று பிராக்டிகலாக முழுதாக நிரூபிக்க படாதவை அவைகள் என்றாலும் theory வடிவில் அவற்றுக்கு பல ஆதாரங்கள் ஆய்வாளர்கள் கண்டு பிடித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

மேலும்  மியுவான் போன்ற குறைந்த ஆயுள் கொண்ட துகளை ஹைட்ரான் கொலைடரில் முடக்கி.. அவற்றின் ஆயுள் காலம் அதிகாரத்தை கண்டு ஐன்ஸ்டைனின் time dilation கான்செப்ட் ஐ பிராக்டிகலாகவும் நிரூபித்து இருக்கிறார்கள். ஒரு சிறிய துகளை டெலிபோர்ட் செய்து கால வெளியை கடப்பதை சாத்தியம் ஆக்கி இருக்கிறது சீனா. இன்று சிறிய அணுத்துகள் அளவில் நிருபனம் ஆகி கொண்டு இருக்கும் உண்மைகள் நாளை நாம் காணும் 3 D உலகத்தில் நிரூபிக்க படலாம்.


மனிதன் 3 பரிமாணத்தை கடந்து தனது அடுத்த பரிமாணமான 4 ஆவது பரிமாணத்தை அடைந்து... ஐன்ஸ்டைன் சொன்ன 'காலத்தில் பயணிப்பதற்கே இன்னும் ஒரு 500 ..அல்லது 1000 ஆண்டுகளாவது தேவை படும் என்பது என் கருத்து.

11 பரிமாணங்களும் தன்னை எப்போது எங்கே மனித குலத்துக்கு ஆதார பூர்வமாக வெளிப்படுத்தும் என்பதை மனிதர்கள் காலத்தில் காத்து இருந்து தான் காண வேண்டும்.



நன்றி.



✴️      ✳️      ✴️



கேள்வி பதில் தொகுப்பை ரசித்து படித்த அனைவருக்கும் நன்றி.


அடுத்த கட்டுரை தொகுப்பில் சந்திக்கிறேன்..


உங்கள் அன்பு நண்பன் 

அறிவியல் காதலன் ரா.பிரபு


கட்டுரை குறித்த உங்கள் கருத்துகளுக்கு வாட்ஸ் அப் எண் 

9841069466.


நன்றி 


🌏 🌏

















Comments

  1. hi bro....im your fan ....pls post contents regularly...thank u for giving valuable info

    ReplyDelete
  2. Bro, please try to open youtube channel and make the video. I have been reading your blog for last five years. You are more deserved person to open youtube and get million viewers. My humble request. Thank you!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"