"அன்புடன் அறிவியல் "





"அன்புடன் அறிவியல் "

அறிவியல் காதலன் - ரா. பிரபு

நண்பர்களுக்கு வணக்கம் !

பல வகை தலைப்புகளில் அவ்வபோது பல கட்டுரைகள் நான் எழுதி இருந்தாலும் அறிவியல் கட்டுரைகள் தான் எப்போதும் எனது அபிமானம் எனது அடையாளம் என்று நினைக்கிறேன்.
அப்படி அவ்வபோது பல இடங்களில்  நான் எழுதிய அறிவியல் கட்டுரைகளில் நெடுங்கட்டுரைகள் தவிர்த்து விட்டு சிறு கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த "அன்புடன் அறிவியல்" .(இது 2016 முதல் 2017 வரை எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுப்பு )படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் நன்றி.

1. "சூரியன் எனும் சூரன்"

நமது சூரிய குடும்பத்தின் 'தலை'யான சூரியன் எனும் சூரனை பற்றியும் அது வேலை செய்யும் விதம் பற்றியும் சில தகவல்களை தான் நாம் இன்று பார்க்க போகிறோம்.

முதலில் இந்த பூமியின் மொத்த ஆற்றல்காண ஆற்றல் மூலம் சூரியன் தான் என்று நாம் கேள்வி பட்டு இருந்தாலும் அது எப்படி என்பதை இன்னும் பல பேர் முழுதாக புரிந்து கொள்வதில்லை.
அதாவது நாம் அன்றாடம் பல செயல்கள் செய்கிறோம் படிக்கிறோம் எழுதுகிறோம் ஒடுகிறோம்.. பேசுகிறோம் பாடுகிறோம் இது எல்லாவற்றிற்கும் ஆற்றல் தேவை படுகிறது அல்லவா... அந்த ஆற்றலை நமக்கு கொடுத்ததே சூரியன் தான்.

அதாவது சூரியனில் இருந்து நேரடியாக ஆற்றல் தாவரங்களுக்கு கடத்த படுகிறது (சூரியனில் இருந்து நேரடியாக ஆற்றலை உள்வாங்க உலகில் இரண்டு உயிரினங்களால் தான் முடியும் ஒன்று தாவரம். இனொன்று கற்பனை கதாபாத்திரமான சூப்பர் மேன்)
அந்த ஆற்றல் தாவரத்தை உண்ணும் மனிதனுக்கு அல்லது அதை உண்ணும் விலங்குக்கு கடத்த படுகிறது. இந்த உலகம் மனிதனின் சிந்தனையில் உண்டானது என்றால் அந்த சிந்தனையை சிந்திக்க மனிதனுக்கு ஆற்றலை கொடுத்ததே சூரியன் தான்.

அடுத்ததாக நீங்கள் ரோட்டில் பார்க்கும் வாகனங்கள் அனைத்தும் இயங்க ஆற்றல் தேவை அல்லவா அந்த ஆற்றல் அதுக்கு எப்படி கிடைக்கிறது . பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருளில் இருந்து. அந்த எரி பொருளுக்கு அந்த ஆற்றல் எப்படி வந்தது.?
 லட்ச கணக்கான ஆண்டுகளுக்கு முன் சூரிய ஆற்றலை உள்வாங்கி தேக்கி வைய்த்த மரம் செடி கொடிகள் பூமியில் புதைந்து அதீத வெப்பம் மற்றும் அழுத்தத்தில் உருவானதே பெட்ரோல் டீசல் போன்றவை. இவர்களுக்கான கச்சா எண்ணையில் ஒளிந்திருக்கும் சூரிய ஆற்றலால் தான் எல்லா வாகனங்களும் ஓடு கின்றன.

இந்த பூமியில் உயிரினங்கள் வாழ்வது தாவரங்களால் உற்பத்தி செய்பட்ட ஆக்சிஜனால் தான். அந்த ஆக்சிஜனை தாவரங்கள் சூரிய ஒளியை கொண்டே உற்பத்தி செய்கின்றன.
எனவே அவன் இல்லையேல் காற்று இல்லை ..செடி கொடி இல்லை...உலகில் எந்த ஆற்றலும் இல்லை எந்த உயிரினங்களும் இல்லை. உலகில் பல வகை ஆன்மீக சமூகங்களில் சூரியனை வணங்குவது ஏன் என்று இப்போது புரிகிறதா?

நீங்கள் சூரியனை பூமி யுடன் ஒப்பிடுவதாய் இருந்தால் பூமியை விட பல்லாயிரம் கணக்கான மடங்கு பெரியவன் சூரியன். ஒரு சூரியனில் மொத்தம் 13 லட்சம் பூமிகளை அடக்க முடியும் என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். இதன் எடை பூமியை போல 333000 மடங்கு பெரியது. இதன் விட்டம் 1391000 கிமி. மேலும் இதன் சுற்றளவு 4,366,813  கிமி.

Mass (நிறை) என்று வரும் போது நிஜமாவே மாஸ் காட்டுவது சூரியன் தான் காரணம் மொத்த சூரிய குடும்பத்தின் மொத்த மாஸில் 99.8 % சூரியனின் உடையது. மீதமுள்ள 0.2 % நிறை தான் சூரிய குடும்பதின் மொத்த கிரகங்களின் நிறை.(தலைவன் என்பவன் தனது கூட்டத்தின் அதிக பட்ச சுமையை தான் தான் சுமக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறானா சூரியன்.)

சூரியனின் மொத்த ஆயுட்காலம் 1000 கோடி ஆண்டுகள் அதில் 500 கோடி ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது ஒரு நடுத்தர வயது ஆளாக இருக்கிறான் சூரியன். நமது பால் வெளியில் மிதக்கும் பல கோடி நட்சத்திரங்களில் ஓன்றான சூரியனை அதன் வெப்பம் மற்றும் அளை நீளத்தை பொருத்து அதை G2 வகை என அடையாள படுத்தி இருக்கிறார்கள்.

என்ன தான் பெரிய சைஸ் என்றாலும் தொடர்ந்து எரிவதால் இது சில ஆயிரம் ஆண்டுகளில் எரிந்து போய் இருக்க வேண்டுமே... எப்படி 1000 கோடி ஆண்டுகள் சூரியானால் தொடர்ந்து எரிய முடியும். இங்கே தான் பொருளை ஆற்றலாக மாற்றும் ஐன்ஸ்டைன் சமன் பாடு E=mc 2 ஐ நினைவு கூற வேண்டும்.

ஒரு கிலோ நிலக்கரியை கொண்டு சில மணிநேரம் எரிக்கலாம் என்றால்.. அந்த ஒரு கிலோ நில கரியை முழுதாக ஆற்றலாக மாற்ற முடிந்தால் அதை வைத்து ஊருக்கே சப்ளை கொடுக்கலாம்... அதுவும் பல ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக. இதுதான் பொருள் ஆற்றல் விதி இதை விளக்க தான் அந்த சமன்பாடு. (ஹிரோஷிமா அணுகுண்டில் பயன்படுத்த பட்டது சில அவுன்ஸ் யுரேனியம் தான் . அதை வைத்து தான் அவ்வளவு பெரிய பேராற்ற எடுத்தார்கள் என்பதை அறிக)

ஆனால் இது ஒரு மிக மிக மெதுவாக ஆமை கூட அல்ல அடிபட்ட ஆமை வேகத்தில் நடக்கும் ஒரு ஸ்லோ ப்ராஸஸ். அதாவது முன்பு சொன்ன ஒரு கிலோ நில கரியை கொண்டு இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரு கிளாஸ் தண்ணீரை சுட வைக்க சொன்னால் அதற்கு குறைந்தது 100 ஆண்டுகளலாவது ஆகும். அதனால் தான் இவ்வளவு பொறுமையாக சூரியனில் இது நடக்கிறது.

சூரியனில் ஆற்றல் அணுக்கரு இணைவு எனும் செயல் மூலம் உண்டாகிறது. சூரியன் ஒரு மிக பெரிய ஹைட்ரஜன் பாம்முக்கு சமம். இரண்டிலும் ஒரே வழிமுறை தான் நடக்கிறது. சூரியன் ஒரு மகா மெகா ராட்சத  நியூக்லியர் ரியாக்டர்.
 வாருங்கள் அந்த ரியாக்டருக்குள் என்ன நடக்கிறது அது எப்படி வேலை செய்கிறது என்று கொஞ்சம் எட்டி பார்க்கலாம்.(எதற்கும் கொஞ்சம் உஷாராக எட்டி பாருங்கள் தன்னை நேருக்கு நேர் உற்று பார்ப்பவர்களின் விழிதிரை செல்களை கொன்று அவர்களை நிரந்தர குருடாக மாற்றும் ஆற்றல் பெற்றவன் அல்லவா அவன்)

சூரியனில் எட்டி பார்த்தால் அந்த மொத்த பந்து அதன் மைய்ய பகுதி வரை மூன்று அடுக்குகளாக பிரிக்கலாம். சூரியன் வேலை செய்யும் விதத்தை புரிந்து கொள்ளும் முன் அதில் உள்ள அடுக்குகளை பற்றி தெரிந்து கொள்வது இன்றியமையாதது.

ஒரு உதாரணத்திற்கு ஒரு சப்போட்டா பழத்தை எடுத்தது கொள்ளுங்கள். அதன் மைய்ய பகுதியில் கொட்டை ...
பிறகு அதற்கு மேல் உள்ள சதை பகுதி ...
பிறகு மேலே போர்த்த பட்டுள்ள தோல் பகுதி என 3 அடுக்கை காணலாம் அல்லவா .
கிட்ட தட்ட அதே போல சூரியனின் மையத்தில் உள்ளது கோர் பகுதி (அந்த கொட்டை பகுதி போல) அதற்கு மேலே உள்ள பகுதி  ரேடியேட்டிவ் ஜோண். (Radiative zone) (சப்போட்டா சதை பகுதி ) .பிறகு கடைசி மேல் அடுக்கில் உள்ளது கன்வக்டிவ் ஜோன்.( Convective zone)(தோல் பகுதி).இதில் கோர் பகுதி சூரியனின் ஆரத்தில் 25 சதம் ஆகும் அடுத்ததாக சொன்ன R. A ஜோன் 45 சத பகுதியையும் கடைசியாக உள்ள கன்வக்ட்டிவ் ஜோன் 30 சத ஆரத்தையும் கொண்டது.

இந்த கோர்... அப்புறம் ரேடியோ ஆக்டிவ் ஜோன் ..மற்றும் கன்வக்ட்டிவ் ஜோன் தவிர சூரியனின் வலிமண்டலத்தை எடுத்து கொண்டால்
அதுவும் மூன்று அடுக்கு உண்டு.

சூரியனை சுற்றி உள்ள முதல் அடுக்கு
போடோஸ்பியர்.
அதற்கு அடுத்த லேயரின் பெயர் குரோமோஸ்பியர்.
கடைசி அடுக்கில் உள்ளது பெயர் கொரோனா.
இந்த கோரோனா வில் வெப்ப நிலை ஆச்சர்யமாக சூரியனை விட பல மடங்கு அதிகம்.
இப்போது சூரியனில் ஆற்றல் உற்பத்தி எப்படி நடக்கிறது என்பதை பார்கலாம்.

சூரியனில் ஆற்றல் உற்பத்தி என்பது கற்பனை செய்யவே பிரமிப்பாக இருக்கும் அளவு சக்தி வாய்ந்தது. அதாவது ஒரு லட்சம் கோடி மெகா டன் அணுகுண்டுகளை ஒரு சேர வெடிக்கும் அளவு ஆற்றல் சூரியனில் இருந்து ஒவ்வொரு வினாடிக்கும் வெளி பட்டு கொண்டிருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். அதன் மைய்ய பகுதி (core) 1.5 கோடி டிகிரி செல்ஸியஸும் அடுத்த அதுக்கான ரெடியேட்டிவ் இல் 70 லட்சம் டிகிரி செலிசியஸ் உம். மேலடுக்கான கன்வக்ட்டிவ் இல் 20 லட்சம் டிகிரி செல்ஸியஸும் இருக்கிறது.
அப்படியே அதன் மேற்பரப்பில் இருக்கும் போடோஸ்பியரில் 6000 டிகிரி செல்சியஸ் இருக்கிறது. அப்புறம் ஆச்சர்யமாக அதற்கும் மேல் உள்ள வளிமண்டலம் கொரோனா வில் 30 லட்சம் டிகிரிக்கு மீண்டும் அதிகரிக்கிறது.

சூரியன் முழுக்க முழுக்க ஹைட்ரஜன் எரிபொருளை முதன்மையாக கொண்டு இயங்கும் ஒரு ரியாக்டர். 9 கோள் களையும் இழுத்து பிடித்து சுற்றி கொண்டிருக்கும் அதன் சக்திவாய்ந்த ஈர்ப்பு விசை அதன் மைய்ய பகுதியான கோர் இல் இருந்து உண்டாகிறது. அந்த கட்டுகடங்கா ஈர்ப்பு விசையால் மையத்தை நோக்கி அது அனைத்தையும் ஈர்த்த வண்ணம் இருக்க அதன் எரி பொருளான ஹைட்ரஜன் அணுவில் ஈர்ப்பு காரணமாக ஒன்றை ஒன்று அணுக்கள் இணைவு நடக்க காரணமாக உள்ளது.

 சூரியன் எதனால் ஆனது என்று பார்த்தால். இன்றைய நிலவர படி சூரியனில் 70 சதம் ஹைட்ரஜன் , 28 சதம் ஹீலியம் உள்ளது மேலும் 1.5 சதம்  கார்பன் ,நைட்ரஜன், ஆக்சிஜன் உள்ளது அப்புறம் 0.5 சதம் நியான் ,இரும்பு,
 மெக்னிசியம்,மற்றும் ஸல்பர் தொடங்கி இதர கனமான தனிமங்கள் உள்ளது.
சூரியனின் அதீத ஈர்ப்பு விசையால் ஹைட்ரஜனின் மற்றும் ஹீலியத்தின் அணுக்கள் ஒன்ரோடு ஒன்று இணையும் அந்த நிகழ்வு கீழ் வரும் சில படிகளாக ...வரிசையாக நடக்கிறது.
(அடுத்த பாரா கொஞ்சம் கெமிஸ்ட்ரி பாட புத்தகத்தை படித்ததை போல கொஞ்சம் 'ரா' வாக இருக்க போகிறது அனுசரித்து படிங்க)

முதல் நிலை :

ஹைட்ரஜன் அணுவில் ஒரு புரோட்டானை ஒரு எலக்ட்ரான் சுற்றி வரும் என்று நமக்கு தெரியும் அல்லவா... அப்படி இரண்டு ஹைட்ரஜனின் புரோடான்கள் ஒன்று சேர்ந்து முதல் நிலையில் ஒரு டியுடேரியம் (deuterium) அணு உண்டாகிறது .
(டியுடேரியம் அணு என்றால் என்ன?  Heavy hydrogen என்று அழைக்க படும் இது ஒரு ஹைட்ரஜன் ஐசோடோப் அதாவது  ஒரு புரோட்டானும்  மையத்தில் ஒரு நியுட்ரானும் கொண்ட ஹைட்ரஜன் அணு தான் அது. சாதா ஹைட்ரஜன் அணுவின் மையத்தில் நியூட்ரான் இருப்பது இல்லை. நமது கடல் தண்ணீரில் 6420 ஹைட்ரஜன் அணுவிற்கு ஒரு deuterium உள்ளது. ).

அடுத்ததாக இந்த முதல் நிலை யில் பாசிட்ரானை (positron)உண்டு பண்ணுகிறது.
இந்த பாசிட்ரான் என்பது என்ன?
இதை ஒரு எதிர் எலக்ட்ரான் என்று சொல்லலாம். எலெக்ட்ரானின் அதே எடை கொண்ட  எலக்ட்ரான் போலவே உள்ள ஆனால் அதே சமயம் பாசிட்டிவ் சார்ஜ் இல் உள்ள ஒரு துகள் தான் இந்த பாசிட்ரான். மேலும் இது ஒரு பக்கா ஆண்ட்டி மேட்டர் துகள் . அதாவது தனக்கு நிகரான எலெக்ட்ரானை இது நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் இரண்டும் ஒன்றோடு ஒன்று அடித்து மாய்ந்து கடைசியில் தடயம் தெரியாமல் முழுக்க முழுக்க ஆற்றலாக மாறி போகும் தன்மை கொண்டவை.

இந்த முதல் நிலை யில் இது தவிர கூடுதலாக ஒரு துகள் வெளி வருகிறது. அது நமது தமிழ் நாட்டில் போராட்டத்தில் மிக பரிச்சியமான பெயர் ...நியூட்ரினோ.

இரண்டாவது நிலை :

இரண்டாவது நிலையில் ஒரு ப்ரோட்டான் மேலே சொன்ன அந்த ஒரு டியுடேரியம் அணுவுடன் இனைந்து ஹீலியம் 3 என்ற அணுவை உண்டு பண்ணுகிறது (இதில் இரண்டு புரோட்டான் ஒரு நியூட்ரான் இருக்கும்.)
இதில் கூடுதலாக காமா கதிர்கள் வெளிவருகின்றன.

மூன்றாவது நிலை :

இதில் இரண்டு ஹீலியம் 3 அணுக்கள்  ஒன்று சேர்ந்து ஹீலியம் 4 அணுக்களை உண்டு பண்ணுகிறது. (ஹீலியம் 4 என்பது 2 புரோட்டான்.. 2 நியூட்ரான்களை கொண்டது.) மேலும் இரண்டு 2 புரோடங்களை வெளியிடுகிறது.

மேலே சொன்ன மூன்று நிலைகள் மூன்று நிகழ்வுகள் சூரியனின் 85 சத ஆற்றலை உண்டு பண்ணுகிறது. மீதி 15 சத ஆற்றலை பின் வரும் 3 நிலைகள் மூலமாக உற்பத்தி செய்கிறது. வாங்க இன்னுமொரு 3 நிலையை பார்ப்போம்.

நிலை ஒன்று :

ஒரு ஹீலியம் 3 அணுவும் ஒரு ஹீலியம் 4 அணுவும் இனைந்து பெரிலியம் 7 என்பது  உண்டாகிறது. (இவை 4 ப்ரோட்டான் 3 நியூட்ரான் கொண்டது)
மேலும் இதில்  கூடுதலாக காமா கதிர்கள் வெளிவருகின்றன.

நிலை இரண்டு :

 ஒரு பெரிலியம் 7 அணுவானது  ஒரு எலெக்டரா அணுவை பிடித்து வைத்து கொண்டு
லித்தியம் 7 என்ற அணுவாக மாறுகிறது (இது 3 ப்ரோடானை யும் 4 நியூட்ரானையும் கொண்டது.
மேலும் இதில் கூடுதலாக நியூட்ரினோ வெளிவருகிறது.

நிலை மூன்று :

லித்தியம் 7 ஆனது ஒரு புரோட்டான் உடன் இனைந்து இரண்டு ஹீலியம் 4 அணுவை உண்டு பண்ணுகிறது.

இங்கு தான் ஒன்றை கவனிக்க வேண்டும். கதை ஆரம்பிக்கும் போது இரண்டு ஹைட்ரஜன் அணுவில் தானே தொடங்கினோம். அப்போ முடிவில் நமக்கு கிடைக்கும் ஹீலியம் 4 ...எப்படி பார்த்தாலும் ஆரம்பத்தில் நாம் எடுத்து கொண்ட எடைக்கு சமமாக தானே இருக்க வேண்டும் ஆனால் அப்படி இல்லாமல் 7 சத எடை இழப்பு நடக்கிறது . எங்கடா போச்சி அந்த 7 சதம் என்றால் அது ஐன்ஸ்டைன் பார்முலா படி முழுக்க முழுக்க ஆற்றலாக மாறி விட்டது. அந்த ஆற்றல் தான் சூரியனில் இருந்து நமக்கு பல வடிவங்களில் கிடைக்கிறது. கண்ணால் பார்க்க கூடிய ஒளியாக.... x rey வாக ,அல்ட்ரா வைலட்டாக, இன்பிரா ரெடாக, மைகிரோ வேவ் ஆக,ரேடியோ வேவ் ஆக, காமா வேவ் ஆக இப்படி பல ரூபங்களில்..

ஒளி போட்டான் எனும் பொட்டளங்களாக பூமியை அடைய 8 நிமிடம் எடுத்தது கொள்கிறது ஆனால் அவைகள் சூரியனின் கருவில் (core) உருவாகி நகர்ந்து அதன் மேல் பாகத்தை அடைய 40000 ஆண்டுகள் எடுத்தது கொள்கிறது என்பது ஆச்சர்யமதான். அதன் உருவாக்கம் அவ்வளவு ஸ்லோ ப்ராஸஸ்...

மேலும் இது தவிர charged particals சிலதை சூரியன் தொடர்ந்து உமிழ்ந்து கொண்டே இருக்கிறது உதாரணம் நியூட்ரினோ, மற்றும்  புரோட்டாண்கள்.

சூரியனின் மேற்பரப்பு நெருப்பு வில்லைகளை உண்டு பண்ணி கொண்டே இருக்கும் ஒவொன்றும் கிட்ட தட்ட பூமி அளவு பெரியது சில நேரம் அவைகள் பூமியை நோக்கி அதை பீச்சுவதுண்டு.
2003 இல் ஒரு சக்திவாய்ந்த சூரிய புயல் ஒன்று பூமியை அடைந்து அணைத்து தொலை தொடர்புகளையும் தர்காலிகமாக துண்டித்து பதம் பார்த்தது.

சூரியன் பூமியை போல் இல்லாமல் ஒரு கச்சிதமான வடிவம் கொண்ட ஒரு மிக துல்லியமான உருண்டை வடிவம் கொண்டது. இதன் மேல் பகுதியில் பள்ளமான இருண்ட ..குளிர்ந்த பகுதியும் காண படுவதுண்டு அதற்க்கு பெயர் (sun spot ) சூரிய புள்ளிகள். இவைகள் பெரும்பாலும் தீவிரமான காந்த புலத்தை கொண்டவை (பூமியை விட 5000 மடங்குஅதிகம்) இவை ஒரு ஸ்பாட் இல் நுழைந்து அடுத்த ஸ்பாட்டில் வெளிவரும். பொதுவாக இந்த காந்த புலம் சூரியனுக்குள் சுழலும் வாயுகளால் உண்டாகிறது. இந்த சன் ஸ்பாட் கள் 11 ஆண்டுகள் ஒரு முறை இடைவெளியில் காண கிடைக்கிறது.

மேலே சொன்ன 6 நிலைகளில் என்ன நடக்கிறது என்பதை எளிமையாக சொல்லவேண்டும் என்றால் லேசான தனிமங்கள் ஒன்று சேர்ந்து கனமான தனிமங்களாக உருவாகி கொண்டிருக்கின்றன .அந்த நிகழ்வில் தொடர்ச்சியாக ஆற்றலை வெளியிட்டு கொண்டிருக்கும் முயற்சியில் ஒருபக்கம் எரிபொருள் அழிந்து கொண்டே வர சூரியனுக்கு உள்ளே மேலும் மேலும் கனமான தனிமங்கள் உண்டாகி கொண்டே போகிறது. சூரிய அழிவுக்கு பின்னாளில் காரணமாக இருக்க போவது இந்த கனம் கூடிய விஷயங்கள் தான்.

என்ன தான் சூரியன் பெரிய சூரனாக இருந்தாலும் அது நம்மை பொறுத்த வரை மட்டும் தான். இந்த பறந்து விரிந்த பால் வெளி திரளில் அந்த பிரமாண்ட பிரபஞ்சத்தில் இது ஒரு தூசு... இதை விட அளவிலும் சக்தியிலும் 10000 மடங்கு பெரிதான நட்சத்திரங்கள் நமது பால் வெளியில் உண்டு.

ஒளியே ஒரு முறை குறுக்கே கடந்து போக ஒரு லட்சம் ஆண்டுகள் எடுத்து கொள்ளும் இந்த பிரமாண்ட பால் வெளி திரளில் ஒரு ஓரமாக தனது குடும்பத்துடன் சுற்றி வருகிறான் சூரியன். அவன் பால் வெளியை ஒரு முறை சுற்றி வரவே 22 கோடி ஆண்டுகள் எடுத்தது கொள்கிறான் (ஆண்டு பயணம்!!).தனது வாழ்நாளில் இதுவரை 20 சுற்றுகள் தான் வந்திருக்கிறான். இதே இடத்தில தனது போன சுற்றின் போது நம்ம பூமியில் டைனோசர்கள் நடமாடி கொண்டிருந்தன.

சூரியனின் அழிவு:

சாதாரணமாக சூரியனின் அளவும் வெப்பமும் அதன் ஆரம்ப நாளில் இருந்தே படி படியாக அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
எல்லா நட்சத்திரமும் ஒரே மாதிரியான முறையில் தான் அழிகின்றன. நமது சூரியன் அதற்கு விதி விலக்கல்ல..
ஒரு காலத்தில் தனது எரிபொருள் தீர்ந்து போய் இதன் மேல் பகுதி உப்ப தொடங்கும் அந்த நிலையில் இதன் பெயர் ரெட் (red giant )சிகப்பு அரக்கன். அது எவ்வளவு பெரிதாக உப்பும் என்றால் சனி கிரகம் வரை அது அடைத்து கொள்ளுமாம்  இதன் ஆரம்... இப்போ இருப்பதை விட 100 மடங்கு பெரிதாக இருக்கும் என்கிறார்கள்.

அதன் பின் அதன் எரி பொருட்கள் தீர்ந்து போய்.. வெளி பகுதி வெடித்து சிதறி உள் பகுதி இறுகி வெள்ளை குள்ளன் (white, dwarf,) நிலையை அடையும் பிறகு மேலும் குளிர்ந்து கிட்டத்தட்ட கண்ணுக்கே தெரியாத கருப்பு குள்ளன் (black dwarf) நிலையை அடையும்.

பொதுவாக பெரிய அளவு நட்சத்திரங்கள் அழியும் போது ஈர்ப்பு விசையால் தனக்குள் தானே இருக தொடங்கி.. ஒரு கட்டத்தில் நிறையும் ஈர்ப்பும் முடிவிலியாக மாறி ப்ளாக் ஹோல் ஆக மாறுகிறது.
அளவில் கொஞ்சம் சின்னதாக இருக்கும்  நட்சத்திரங்கள் பிளாக் ஹோளாக மாறாது அவை நியூட்ரான் குண்டுகளாக நின்று விடும். நியூட்ரான் குண்டு என்பது அதீத நிறை கொண்ட ஒரு இறந்த நட்சத்திரம். அதில் ஒரு குண்டூசி முனை அளவு மண்ணை ஒட்டி எடுத்தால் அதன் எடை கிட்ட தட்ட எவரெஸ்ட் சிகரம் அளவு இருக்கும் . அவ்வளவு அடர்த்தியை கொண்டது நியூட்ரான் குண்டு.

நமது சூரியன் பிளாக் ஹோளாக மாற இப்போது இருப்பதை விட 10 மடங்கு இன்னும் பெரிதாக இருந்திருக்க வேண்டும் இல்லையேல் இதன் ஈர்ப்பு விசை பிளாக் ஹோளாக மாறுவதற்கு போதுமானது அல்ல.

பிரபஞ்சத்தில் சூரியன் ஒரு தூசாக இருக்கலாம் ஆனால் நம்ம சூரிய குடும்பத்திற்கு அவன் தான் ஆற்றல் மூலம் ..ஆதிமூலம் .. எல்லாம். அதாவது அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இயக்கி கொண்டிருக்கும் சூரன்.


அன்பு நண்பன்
ரா.பிரபு







பின்னிணைப்பு:

SUN FACTS
Average distance from Earth: 93 million miles (150 million kilometers)

Radius: 418,000 miles (696,000 kilometers)

Mass: 1.99 x 1030 kilograms (330,000 Earth masses)

Makeup (by mass): 74 percent hydrogen, 25 percent helium, 1 percent other elements


Average temperature: 5,800 degrees Kelvin (surface), 15.5 million degrees Kelvin (core)

Average density: 1.41 grams per cm3
Volume: 1.4 x 1027 cubic meters
Rotational period: 25 days (center) to 35 days (poles)
Distance from center of Milky Way: 25,000 light years
Orbital speed/period: 138 miles per second/200 million years



☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸


2. "வெள்ளி எனும் மரண கிரகம்"

நாம் வெறும் கண்ணால் எளிமையாக பார்க்க முடிய கூடிய கிரகமான வெள்ளியின் அழகில் மயங்காதவர் யாரும் இல்லை.
காரணம் இரவு வானில் நிலவிற்கு அடுத்த படியாக அதிக ஒளி பொருந்திய ஒன்று என்றால் அது வெள்ளி தான். மேலும் அதன் மின்னும் தன்மையும் நட்சத்திரங்களில் இருந்து மாறு பட்டு மிக அதிக மின்னும் தன்மைகொண்டு அழகாக இருக்கும்.

ஆங்கிலத்தில் Venus  என்று அழைக்க படும் அந்த பெயர்  ரோம் நாட்டில் காதல் மற்றும் அழகிற்கு உகந்த தேவதை கடவுளின் பெயர். காலம்காலமாக வெள்ளி அழகிற்கு இலக்கணமாக உதாரணமாகவே கதைகளிலும் நிஜத்தில் ஒப்பிடுகளிலும் சொல்ல பட்டு வந்தது.

20 ஆம் நூற்றாண்டில் பல கற்பனை எழுத்தாளர்கள் அந்த கிரகம் எப்படி இருக்கும் என தனது கதைகளில் வர்ணித்து எழுதி இருந்தார்கள் . அந்த வர்ணனையில் வெள்ளி கிரகம் தெய்வ கடாட்சகம் பொருந்திய அழகிய மலைகள் சோலைகள் அருவிகள் பூத்து குலுங்கும் இயற்கை அழகும் பூமியை காட்டிலும் அதிக பசுமை கொண்டதுமாக இருந்தன.

ஆனால் இதெல்லாம் எது வரை என்றால் வானியல் அறிவியல் வளர்ச்சி அடைந்து விண்வெளி ஓடங்களை கொண்டு ஆய்வாளர்கள் வெள்ளியை கொஞ்சம் அருகில் சென்று ஆராயும் வரைதான்.

காரணம் அதீத எதிர்பார்போடு வெள்ளியை ஆராய தொடங்கிய விஞ்ஞாணிகள் அதன் நரக தனமான கொடூர முகத்தை பார்த்து வாயடைத்து போனார்கள்.
வழியில் தூரத்தில் ஒரு அழகிய பெண்ணை பார்த்து விட்டு அருகில் சென்று அவள் முகத்தை பார்க்கும் போது அது ரத்த காட்டேரி போல கொடூர முகமாக இருந்தால் ஒரு மனிதன் எப்படி பேந்த பேந்த முழிப்பாண் அந்த நிலை யில் தான் இருந்தார்கள் அந்த ஆய்வாளர்கள்.

பொதுவாக வெள்ளியை பூமியின் இரட்டை என்று சொல்லுவார்கள் அதற்க்கு காரணம் வெள்ளி ,உருவதில் அளவில் ,அடர்த்தியில் ,கிட்ட தட்ட பூமியை போல இருப்பது தான்.
அதனால் அதில் சூழல்கள் பூமி போல இருக்கலாம் என்று கற்பனை செய்தது தவறு இல்லை தான். ஆனால் வெள்ளி் ஒரு தீய இரட்டை. (எம் .ஜி. ஆர் இரட்டை வேடங்களில் ஒருவர் நல்லவர் இன்னொருவர் கெட்டவர் என்பதை போல)

1962  நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளியை 34760 கிமி தொலைவு வரை சென்று ஆராய்ந்தது. (விண்கலத்தில் நகர்ந்த படி கவனிக்க பட்ட முதல் கிரகம் என்ற சம்பவம் கூட இது தான் )

வெள்ளியின் அந்த விசேஷ ஒளிர்தலுக்கு காரணம் வெள்ளியின் மிக அடர்த்தியான மேகங்களும் அதன் பிரதிபலிக்கும் தன்மையும் தான் என்பதை முதலில் கண்டார்கள் . ஆம் வெள்ளி மிக மிக அடர்த்தியான மேகங்களால் எப்போதும் சூழ பட்டிருக்கும். ஆனால் என்ன ஒன்னு அந்த மேகங்கள் தண்ணீருக்கு பதில் கடுமையான சல்பியூரிக் அமிலங்களை சுமந்து இருக்கும்.

பிறகு வெள்ளி மேகங்களில் தொடர்ந்து மின்னல்களும் ஏற்பட்ட வண்ணம் இருப்பதையும் கவனித்தார்கள்.
வெள்ளியின் வளிமண்டலத்தில் மேல் பகுதி எபோதும் பயங்கர வேகத்தில் சுழற்சியிலேயே  இருக்கும். அந்த கோள் சுற்றும் வேகத்தை விடவும் இது அதிக வேகம்.
அது 360 கிமி வேகத்தில் சுழலும் புயலால் உண்டாக்க படுபவை. நாம்  பூமியில் ஓய்வாக மேகங்கள் நகர்வதை வேடிக்கை பார்க்கிறோம் அல்லவா.. அப்படி வெள்ளியில் அண்ணாந்து பார்த்தால் வானம் பார்ஸ்ட் பார்வட் இல் போடப்பட்டதை போல மேகங்கள் தருமாறு வேகதில் ஓடி கொண்டு இருப்பதை பார்க்கலாம்.

 பூமியில் மழையில் நனைவதை போல அங்கே ஆசை பட்டு நனைந்தால் உடல் முழுக்க கடுமையான தீ காயங்களுடன் G. H இல் போய் சேர வேண்டியதுதான். காரணம் அங்கே பொழிவது சல்புரிக் அமில மழை.
ஆனால் பயப்பட தேவை இல்லை அங்கே மழை பொழிந்தாலும்  நீங்கள் அங்கே மழையில் நனைய போவதில்லை .
காரணம்  வெள்ளியின் மழை அதன் தரை பகுதியை தோடுவதே இல்லை அதற்கு முன்பே ஆவியாகி மீண்டும் மேகம் ஆகிவிடுகிறது. அதற்கு காரணம் வெள்ளியின் அடுத்த மரண தன்மையான அதன் வெப்பம்.

சூரிய குடும்பத்திலேயே அதிக வெப்பம் கொண்ட கிரகம் என்றால் அது நியாய படி புதன் ஆக தான் இருக்க வேண்டும். காரணம் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் அது தான். ஆனால் வெள்ளியை சூழ்ந்துள்ள அடர்த்தியான மேகமும் அதன் மிக அடர்த்தியான வளிமண்டலமும் உள்ளே வரும் சூரிய ஒளியையையும் அதன் வெப்பத்தையும் வெளியே அனுப்பாமல் கைது பண்ணி வைப்பதால் அதன் கிரீன் ஹவுஸ் விளைவினால் (பூமியின் கிரீன் ஹவுஸ் விளைவு போல தான்) அதன் வெப்பம் அதிகரித்து அதிகரித்து 465 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை கொண்டுள்ளது. இந்த வெப்பம் ஈயத்தை உருக்கும் அளவு கடுமையானது.

இந்த புயல் வேக சூழல் மேகம் ..அமில மழை ... அதீத வெப்பம் இதையெல்லாம் சமாளித்து நீங்கள் வெள்ளியில் நிற்பதாக வைத்து கொண்டால் என்னாகும் தெரியுமா?
சப்பாத்தி மாவு பிசைய பட்டு பிறகு அதை தட்டையாக வைத்து உருட்டி விட்டதை போல தரையோடு தரையாக அங்கே தட்டையாக அழுத்தி நிரப்ப பட்டு விடுவோம். காரணம் அங்கே உள்ள வளிமண்டல அழுத்தம் அப்படி .. அங்கே நாம் உணரும் காற்றில் அழுத்தம் பூமியை போல 90 மடங்கு அதிகம் எனவே சில டன் எடையை நம் உடல் உடனே உணரும்.

என்னது காற்றா? என அவசர பட்டு ஆசையாக கேட்டு விட கூடாது. அங்கே உள்ள காற்று என்ன வென்றால்..
 96.5 சதம் கார்பன் டை ஆக்ஸைடு.. 3.5 சதம் நைட்ரஜன், அதனுடன் சிறிதளவு சல்பர் டை ஆக்ஸைடு,  ஆர்கான் கொஞ்சம் தண்ணீர்  . (ஆம் தண்ணீர் உண்டு ஆனால் அது தண்ணீராக இல்லை...சல்பர் உடன் இனைந்து சால்பியூரிக் அமிலங்களாக இருக்கிறது.) கார்பன் மோனாக்சைடு , ஹீலியம் ,நியான். இது எல்லாம் கலந்தது தான் வெள்ளியின் வளிமண்டலம். அதாவது ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் முழுக்க முழுக்க விஷம் .

சரி வெள்ளியின் தரை பரப்பு பார்க்க எப்படி இருக்கும் ? நிலா போல கரடு முரடான மேற்பரபாகவா ?  ச்சே ச்சே  இல்லை. நிறைய அழகிய சமதல பரப்பை கொண்டது தான் வெள்ளி . ஆனால் அவசர படாதீர்கள் அதை கிட்டே சென்று பார்த்தால் தான் தெரியும் அது சாதாரண தரை அல்ல அவ்வளவும் எரிமலை குழம்பு லாவா.

வெள்ளியில் பல்லாயிர கணக்கான எரிமைலைகள் தொடர்ச்சியாக லாவா எரிமலை குழம்பை கக்கி கொண்டே இருக்கின்றன. அதனால் வெள்ளியில் 80 சத பரப்பு லாவா சமவெளியால் ஆனது. மேலும் அது அரித்து கொண்டும் எரித்து கொண்டும் சென்ற பாதைகள் காரணமாக ஆயிர கணக்கான கி.மி நீளத்துக்கு அங்கே பிரமாண்ட கால்வாய்கள் இருக்கின்றன. அந்த எரிமைலைகள் தொடர்ச்சியாக சல்பரை வளிமண்டலத்தில் கக்கி கொண்டே இருக்கின்றன. அந்த சல்பர் அங்கே உள்ள கொஞ்ச நஞ்ச நீருடன் இணைந்து சல்பியூரிக் அமிலமாக மாறி மேகமாகிறது .

வெள்ளி தன்னை தானே சுற்றும் வேகத்தை விட சூரியனை சுற்றும் வேகம் அதிகம். அதாவது அங்கே ஒரு நாள் என்பது ஒரு வருடத்தை விட பெரியது.
அதாவது ஒரு முறை சூரிய உதயத்தை நீங்கள் மேற்கே பார்த்தீர்கள் என்றால் அடுத்த சூரிய உதயத்தை நீங்கள் 117 நாள் (பூமி கணக்கு படி) கழித்து தான் பார்க்க முடியும்.

ஒரு நிமிடம் .....என்னது சூரிய உதயம்..மேற்கே வா? என்று நீங்கள் கேட்டால் ... அது தான் வெள்ளியின் அடுத்த விசித்திரம். இது மற்ற கோள் களை போல இடப்பக்கமாக சுழலாமல் மதிக்காத பையனாக இது மட்டும் வல பக்கமாக  சுழல்கிறது .எனவே அங்கே சூரியன் மேற்கே உதித்து கிழக்கே தான் மறைவான்.

அங்கே பூமி போல காந்த புலம் எல்லாம் இல்லை.(இருக்கு ஆனா பூமியை விட 0.000015  அளவு குறைவாக) எனவே சூரியனின் நேரடி புறஊதா கதிர் பாதிப்பு அங்கே இருந்து கொண்டே இருக்கும்.
வெள்ளி ரொம்ப மோசமான பய்யன் என்பதால் அதற்கு கேர்ள் பிரண்ட் ஏதும் இல்லை. அதாவது வெள்ளிக்கு துணை கோள் கள் ...நிலாகள் ஏதும் இல்லை.
வெள்ளியின் வெளி பரப்பு ஒரு சொட்டு கூட ஈரப்பதம் அற்றது.

வெள்ளியை ஆராய அமேரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா நாடுகள் கிட்ட தட்ட 20 கும் மேற்பட்ட வின் ஓடங்களை அனுப்பி உள்ளது.
முன்பு குறிப்பிட்ட நாசாவின் மரைன் 2 வை தொடர்ந்து சோவியத் யூனியன் அனுப்பிய venera 7 விண்கலம் தான் வெள்ளியில் தரை இறங்கிய முதல் (மேலும் வேற்று கிரகத்தில் தரை இறங்கிய முதல்) விண்வெளி ஓடம் ஆகும்.
அதற்கு பின்னால் சென்ற venara 9 தான் முதல் முதலில் வெள்ளியின் தளங்களை புகை படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்த முதல் விண்கலம்.
ஆனால் அது தனது பணியை சில மணி நேரத்துக்கு தான் செய்ய முடிந்தது. ஏன் என்றால் அதற்குள் வெள்ளியின் உருக்கும் வெப்பமும் நொறுக்கும் வளிமண்டல அழுத்தமும் அந்த விண்கலத்தை சிதைத்து சின்னாபின்னம் ஆக்கிவிட்டது.

வெள்ளியின் சுற்று வட்ட பாதையில் முதலில் சுற்றி வந்த நாசாவின் magellan  ,ரேடார் ஐ பயன்படுத்தி வெள்ளியின் 98 சத துல்லிய வரைபடத்தை முதல் முதலில் வரைந்து தந்தது. அதாவது 300 அடி குருக்களவு வரை துல்லியமாக.
ஐரோபிய விண்கலம் venus express வெள்ளியின் சுற்று பாதையில் 8 ஆண்டுகள் தங்கி இருந்தது.. அதன் மேகங்களில் மின்னல் வெட்டுவதை கண்டு சொன்னது இது தான்.
ஆகஸ்ட் 2014 இல் அந்த செயற்கை கோள் அந்த கிரகத்தின் வளிமண்டல மேல் அடுக்கில் நுழைந்தது . அங்கே பல மாதம் தங்கி இருந்து அதன் எரிபொருள் தீரும் வரை தகவல் அனுப்பிய வண்ணம் இருந்தது.

அதனை தொடர்ந்து 2010 வில் ஜப்பானின் akatsuki ஆராய கிளம்பி என்ஜின் புழுதில் தோல்வியை தழுவியது ஆனால் 2015 இல் ஜப்பான் மீண்டும் முயன்று வெற்றி கண்டது.

பூமியால் தனது இரட்டையை ஆறாயும் பணி இன்னுமும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

வெள்ளி என்னதான் பார்ப்பதற்கு வசீகரமாக இருந்தாலும் நிஜத்தில்
 "தம்பி ...ஆள் அழகை பார்த்து யாரையும் எடை போடாதே "
 என்று நமக்கு பாடம் நடத்தி கொண்டிருக்கும் ஒரு நரக தனமான மரண கிரகம்.


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸


3. " பிளாக் ஹோல் வார்ம் ஹோல் "


அறிவியலில்....அதாவது வான் அறிவியலில் ஆர்வம் உடையவர்கள்,எப்போதும் பார்த்து வியக்கும் ஒரு பொருள் இந்த பிளாக் ஹோல் .
இவைகள் மொத்த பிரபஞ்சத்தில் சக்தி வாய்ந்தவைகளில் ஒன்று...

இது என்ன பொருள் ..இது எப்படி இருக்கும் என விளக்க தொடங்கினால் முதலில் வரும் குழப்பமே...இதை என்ன வென்று அடையாள படுத்துவது என்று தான்... இதை பொருள் என்று சொல்லலாம் ஆனால் எக்கச்சக்க சக்தி ரூபம்... இதை சக்தி என்று சொல்லலாம் ஆனால் இதில் எக்க சக்க நிறை உண்டே.. சரி பார்க்க எப்படி இருக்கும் என்று சொல்லலாம் என்றால் இதை நாம் பார்க்க முடியாது. (பிளாக்ஹோல் என்ற பெயரை வைத்து இதன் நிறம் கருப்பு என முடிவிற்கு வர கூடாது)

அதிசய விரும்பிகள் , மாயா ஜால விரும்பிகள் அறிவியலை உற்று பார்ப்பது இல்லை என்பது என் கருத்து இந்த பிரபஞ்சத்தை உற்று நோக்கினால் அவர்கள் மாயாஜாலம் எல்லாம் இதற்கு முன் ஒன்றுமே இல்லை அப்படி பல அதிசய பொருளில் ஒன்று பிளாக் ஹோல்.

.இதை பற்றி சொல்லும் முன் உங்களுக்கு ஒரு கேள்வி..உங்கள் பின் தலையை உங்கள் கண்காளாலேயே பார்க்க முடியுமா(பார்பர் ஷாப் கிளம்புபவர்களுக்கு ஒரு கண்டிஷன் கண்ணாடி ..அல்லது போட்டோ எடுத்தல் இப்படி ஏதும் செய்யாமல் நேரடியாக நம் கண்ணை கொண்டு பார்க்க வேண்டும்)

பிளாக் ஹோல் ...அது என்ன எங்க இருக்கு ?

அது விண்வெளியில் இந்த பிரபஞ்சத்தில் பல கோடி எண்ணிக்கையில் இருக்கிறது..அது எப்படி பட்டது?

அதை விளக்குவது கடினம் என்றாலும் அதன் சக்தி எப்படி பட்டது என்பதை சொல்கிறேன்..

உங்களிடம் நான் ஒரு எலுமிச்ச பழத்தை காட்டுகிறேன் என வைத்து கொள்ளுங்கள் இது சாதாரண ஏலுமிச்சை அல்ல மாஜிக் எலுமிச்சை என்கிறேன்.
உங்கள் மொபைல் இப்படி கொடுங்கள் என்று சொல்லிவிட்டு கிட்ட கொண்டு போய் மொபைலை தொடுகிறேன்... அவ்வளவுதான் மொபைல் அப்படியே ரப்பர் போல உறிஞ்சி உள்ளிழுக்க பட்டு எலுமிச்சைக்குள் சென்று மறைந்து விடுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்....என்னடா இது என்று நீங்கள் திகைத்து பார்க்க பக்கத்தில் நின்ற ஆட்டோ அல்லது காரை இதால் தோடுகிறேன் அந்த முழு ஆட்டோவும் கரைந்து எலுமிச்சைக்குள் அடக்கமாகிறது நீங்கள் மேலும் திகைக்கும் முன் ஒரு பெரிய  கட்டிடத்தை இதை வைத்து உரிஞ்சிவிட்டேன் என்றால் மாயாஜாலம் எப்படி இருக்கும் ?

உண்மையில் பிளாக்  ஹோல் இந்த சக்திகளை கொண்டது.

இந்த பூமியின் ஈர்க்கும் சக்தியை நீங்கள் அறிவீர்கள் இதை விட ...என்ன..ஒரு பல சில கோடி கோடி மடங்கு ஈர்ப்பு விசை கொண்டது பிளாக் ஹோல் ...ஓரு சிறிய ப்ளாக் ஹோல் மிக பெரிய சூரியனை இழுத்து விழுங்கி ஏப்பம் விட கூடியது...

இது உண்மையில் கருப்பு அல்ல.
இது தனக்குள் வரும் எதையும் தப்ப விடுவது இல்லை ஒளிய கூட ...எனவே இதில் நடக்கும் நிகழ்வுகளை நம்மால் காண முடிவது இல்லை ...
இது தான் பிரபஞ்சத்தின் உண்மையான  ஒரு 'இன்விசிபில்'  பொருள்..

பிளாக் ஹோல் எனப்படும் இந்த கரும் துளை எப்படி உண்டாகிறது?
நம் சூரியனை விட அளவில் பெரிய நட்சத்திரங்கள் அழியும் போது கடைசியாக அது ப்ளாக் ஹோளாக மாறிநிற்கிறது அதன் பின் பல நட்சத்திரத்தை குடிக்கும் ராட்சத வலிமை கொண்டு திரிகிறது ...
நட்சத்திரம் அழியும் போது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்..

இது ஏதோ மெழுகுவத்தி ஊதி அனைப்பதை போல டப் என நடக்கும் விஷயம் அல்ல இது ஒரு நீண்ட நெடிய பிராசஸ்.... ஒரு' நட்சத்திர அழிதல்' நடந்து முடிய பல லட்சம் ஆண்டுகள் எடுத்து கொள்கிறது..
அழிய போகும் கட்டத்தில் அந்த நட்சத்திரம் மிக பெரிதாக வீங்குகிறது..தனது வழக்கமான அளவை விட மிக பெரிதாக...
உதாரணத்திற்கு நமது சூரியன் அந்த நிலையில் வீங்கினால் கிட்டத்தட்ட அது சனி கிரகம் வரை அடைத்து கொள்ளும்...
இந்த நிலையில் இதன் பெயர் (red giant) சிகப்பு அரக்கன்..

வெளி பகுதி இப்படி வீங்கி கொண்டு இருக்க இதன் மைய்ய பகுதி ஈர்ப்பு விசையில் தனக்குள் தானே சுருங்க தொடங்குகிறது... அதிபயங்கர விசையில் .
இதன் சென்டர் கோர் மேலும் மேலும் அடர்த்தி அதிகமாகி அதன் அணுக்கள் நெருக்கி அடித்து கொண்டு ...கிட்டத்தட்ட பலா பழத்தை அமுக்கி ஒரு கடுகு அளவு சுருங்கிய நிலை...
இப்போது இந்த மைய்ய பகுதியின் பெயர் (white dwarf )வெள்ளை குள்ளன்..

ஒரு கட்டத்தில் மேல் பகுதி பலூன் போல வீங்கி கொண்டே போக மைய்ய பகுதி சுருங்கி கொண்டே போக நட்சத்திரம் வெடித்து சிதறுகிறது... இந்த நிகழ்வின் பெயர் சூப்பர் நோவா.. இந்த நிலையில் இது வெளிப்படுத்தும் வெளிச்சம் இருக்கிறதே... அதன் வாழ்நாளில் அது வெளி படுத்திய மொத்த வெளிச்சத்தை விடவும் அதிகம்.

அந்த சுருங்கி கொண்டே சென்ற மைய பகுதியின் நிறை மற்றும் ஈர்ப்பு சக்தி அதிகரித்து கொண்டே சென்று முடிவில் பிளாக் ஹோல் உற்பத்தி ஆகிறது.
இப்போது இதில் இருக்கும் நிறை மற்றும் ஈர்ப்பு சக்தி முடிவிலியாகிறது..
இனி இதை நெருங்கும் எதையும் இது உறிஞ்சி நொறுக்கி இழுத்து கொள்ளும் ..
அது ஒளியாக இருந்தாலும் கூட..

பூமியிலிருந்து ராக்கெட் அல்லது வேற ஏதுவாக இருந்தாலும் விண்ணை நோக்கி புவியின் ஈர்ப்பு விசையை மீறி செல்ல வேண்டும் என்றால் அது வினாடிக்கு 11.2 கி. மி வேகத்தில் சென்றாக வேண்டும் .அதனை தான் நாம் escape velocity என்று அழைக்கிறோம் அதற்கு குறைவான வேகம் இருந்தால் பூமி மீண்டும் இழுத்து கொள்ளும்.
இப்படி சூரியனின் எஸ்கேப் வேளாசிட்டி யானது 600 கி. மி /வினாடி ..

ஆனால் அந்த கரும் துளை அல்லது கரும் பாழ் என்ற பிளாக் ஹோலில் உள்ளே நுழையும் ஓளி தனது 3 லட்சம் கிலோமீட்டர் வினாடிக்கு என்ற சூப்பர் வேகத்தை வைத்து கூட தப்பி வெளியே வர முடியாது என்றால் அதன் ஈர்க்கும் சக்தியை எஸ்கேப் வேலாசிட்டியை பார்த்து கொள்ளுங்கள்..

பிளாக் ஹோலின் அபரிமிதமான ஈர்ப்பு விசை சுத்தி இருக்கும் பொருள் வெளி மற்றும் காலத்தையும் ஈர்த்து நிறுத்த கூடியது...
இதன் நெருக்கத்தில் நின்று பார்த்தால் மொத்த பிரபஞ்சமும் பாஸ்ட் பார்வட் போட்டார் போல அதி வேகத்தில் மாறுவது பார்க்கலாம் ஆனால் நமக்கு காலம் மிக குறைந்த வேகத்தில் நகரும் அல்லது நகரவே நகராது.
இதன் அருகில் சும்மா சென்று விட்டு வந்தால் போதும் உங்கள் காலம் அநியாயத்திற்கு மாறி விடும்.
அங்கே ஒரு வருடம் இருந்து விட்டு வந்து பார்த்தால் பூமியில் பல பல வருடங்கள் கடந்து விட்டு இருக்கும். நீங்கள் எதிர் காலத்தில் வந்து இறங்குவீர்கள்.

ஒரு வேலை நாம் இப்படி பட்ட மகா ஈர்ப்புவிசைக்குள் நுழைந்தால் என்னாகும்?
பல அறிஞர்கள் பல வகையாக சொல்கிறார்கள் . ஒன்று கூட ரசிக்கும் விதமாக இல்லை அவர்கள் வர்ணனைக்கு நரக லோக தண்டனைகள் எவ்வளவோ தேவலாம் .
ஒன்று நாம் கிட்ட தட்ட பல மைல் தூரத்திற்கு ரப்பர் போல இழுக்க படுவோம் நமது தலையை விட நமது பாதம் அதிக ஈர்ப்பை உணரும். நெருங்க நெருங்க அழுத்தம் கூடி கொண்டே போகும் நமது உடலில் ஒரு இடத்தில ஏற்படும் அழுத்ததிற்கும் உடலில் ஒரு செ. மி  தள்ளி ஏற்படும் அழுத்திற்கும் வித்யாசம் பல டன் கூடி இருக்கும். நமது அணுக்கள் சிதைந்து மேலும் சிதைந்து நுணுக்கி நுணுக்கி பொருள் நிலையிலிருந்து சக்தி நிலைக்கே மாறி விடுவோம்..

இதில் காலமும் வெளியும் வளைக்க பட்டிருக்கும் என்பதால் நமது பின் தலையை நாமே காணுவோம் அந்த ஒளியை வளைத்து நமக்கே அது காட்டும்.

இதில் இரண்டாவதாக சொல்ல படும் கோட்பாடு தான் சுவாரஷ்யமானது..
அதாவது அதில் நுழையும் நாம் இறக்க மாட்டோம் உண்மை யில் அதில் நுழையும் எந்த பொருளும் அழிவது இல்லை மாறாக சக்தி நிலையாக மாறி வேற ஒரு பரிமானத்திற்கு சென்று விடுகின்றன..
பிளாக் ஹோலில் நுழைபவை எல்லாம் வேறு எங்கோ ஒரு வானத்தில் வேற பரிணமானத்தில் எட்டி பார்க்கின்றன.(இணை பிரபஞ்சம் கட்டுரையில் நான் சொன்னதை போன்ற பிரபஞ்சம்).
ப்ளாக் ஹோல் வேறு உலகத்திற்கான கதவு..இதுவும் ஒரு தியரி தான்.

ஓளி கூட தப்பிக்காது என்று நாம் சொன்னாலும் ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் அதை மறுக்கிறார் அதிலிருந்து கதிர் வீச்சு தப்பி வெளியேறுகிறது என்றார்
அதற்கு holkins radiation என்றே பெயர் வைத்து விட்டார்கள்.

இரண்டு பிளாக் ஹோல் நெருங்கி வந்தால் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பெரிய பிளாக் ஹோல் ஆகிறது மேலும் பலது ஒன்று சேர்ந்தால் அது சூப்பர் மாசிவ் பிளாக் ஹோல் ஆகிறது ..

நமது பால்வெளிதிரள்... galaxy யின் மைய்ய பகுதில் இருப்பது இப்படி ஒரு super massive black hole தான்.

அதன் ஈர்ப்பு விசை தான் மொத்த galaxy யையே ஈர்த்து பிடித்து வைத்துள்ளது..
எது எப்படியா இன்று வரை black hole இருப்பதை நாம் உணறுவதே அது மற்ற பொருட்களின் மேல் ஏற்படுத்தும் விளைவை வைத்து தான் மற்ற படி அதை பார்க்கவோ அல்லது விரிவாக ஆராயவோ இன்னும் நமக்கு சாத்திய படவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை        

         ✴         ✴         ✴            ✴

இந்த பிளாக் ஹோல் போன்ற இன்னுமொரு அதிசய பொருள் தான் வார்ம் ஹோல் அதை பற்றி இப்போது பார்க்கலாம்.

☯ "வார்ம் ஹோல்  பிராபஞ்சத்தின் ஷார்ட்_கட்"

பிளாக் ஹோல் ஒரு அதிசய மாயா ஜாலம் என்றால் இன்று நான் சொல்லவிருக்கும் worm hole மஹா அதிசய மாயாஜாலம்..

இந்த worm hole அதாவது தமிழில் புழு துளை என்று சொன்னால் என்னையா பேரு இது என்று நினைப்பீர்கள் ஆனால் பின்னால் இதன் பெயர் காரணத்தை விவரிக்கும் போது ஏற்று கொள்வீர்கள்.

இந்த வார்ம் ஹோல் பிரபஞ்சத்தின் ஷார்ட் கட் என்று சொல்லலாம். ஓளி வேகத்தில் பாய்ந்தும் பல ஆயிரம் ஆண்டுகள் கடக்கும் காலத்தையும் வெளியையும் இதை பயன்படுத்தி வினாடிக்கும் குறைவான நேரத்தில் கடக்கலாம்.
இந்த worm hole ஐ புரிந்து கொள்ள எனது 'சார்பியல் எனும் சமுத்திரத்தில் '3 வது பாகத்தில் நான் சொன்ன அதே எடுத்துகாட்டை மீண்டும் பயன்படுத்து கிறேன்.

அதாவது நீங்கள் மயிலாப்பூரில் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கிறது அந்த புள்ளியில் நீங்கள் தலையை விட்டால் மாயாஜால படத்தில் வருவதை போல நாகர்கோவிலில் எட்டி பார்ப்பீர்கள் அந்த புள்ளிக்கு பெயர் தான் worm hole .
இயற்கையில் இது மயிலாப்பூரில் இல்லை ஆனால் பிரபஞ்சத்தில் நிறைய இடத்தில உள்ளது .இதை வைத்து பல ஒளி ஆண்டு தொலைவை ஒரே வீநாடிக்கும் குறைவான நேரத்தில்  கடக்கமுடியும்.
அப்படி வெளியை கடந்தால் இன்னொன்றையும் தானாகவே நாம் கடக்க வேண்டிவரும் அதுதான் காலம்..

உதாரணமாக நமக்கு மிக அருகில் இருக்கும் அடுத்த காலக்சி  பெயர் ஆன்றோமீடா இதை நாம் சென்றயடைய 25 ஒளி ஆண்டுகள் ஆகும் . ஆனால் இவ்வளவு பெரிய தூரம் மற்றும் வெளியை worm hole பயன்படுத்தி ஒரே வினாடியில் சென்று வரலாம்.

இது எப்படி வேலை செய்கிறது இந்த கோட்பாட்டின் அடிப்படை என்ன என்பதை புரிந்து கொள்ள நாம் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டை புரிந்தது கொள்ள வேண்டும்..(விரிவாக தெரிந்து கொள்ள சார்பியல் பற்றிய நான் எழுதிய 5 பாக கட்டுரையை படித்து பாருங்கள்)

ஐன்ஸ்டைன் கூற்றுப்படி வெளியை சுருட்ட.. வளைக்க ..விரிக்க முடியும்..அப்படி சுருட்டி ஒண்ணா பின் போட்ட புள்ளி தான் வார்ம் ஹோல்.. புரியலயா? சரி விடுங்கள்.

 ஒரு வெள்ளை தாளை எடுத்து கொள்ளுங்கள்... இப்போது இது பேப்பர் அல்ல இதான் வானம் அல்லது வெளி என்று நினைத்து கொள்ளுங்கள் இதில் இடது பக்கத்தில் தொடக்கத்தில் ஒரு புள்ளியை வையுங்கள் இதுதான் நாம் இருக்கும் பால் வெளி திரள் நமது galaxy... இப்போது வலது பக்க கடைசில ஒரு புள்ளி வையுங்கள் .இதுதான் ஆந்திரா... சாரி ஆண்ட்ரோமிடா.. நமது பக்கத்துக்கு galaxy.. இப்போது இந்த ரெண்டு பள்ளியையும் பென்சிலை கொண்டு இணையுங்கள்... இந்த கோடுதான் 25 ஒளி ஆண்டுகள் .அதாவது இந்த புள்ளியிலிருந்து அந்த புள்ளியை அடைய நீங்கள் இந்த கோடு வழியாக தான் சென்றாக வேண்டும் (அவ்வளவு காலம் மற்றும் தூரம்)

இப்போது அந்த பேப்பரை அப்படியே சுருட்டி அந்த ரெண்டு புள்ளியை இணையுங்கள் ... சந்திக்கும் இடத்தில ஒரு குண்டு ஊசியை குத்துங்கள் ...அந்த புள்ளிதான் வார்ம் ஹோல்..

இப்போது இரு புள்ளிகளுக்கிடையான கால மற்றும் வெளி இடைவேளை எவ்வளவு... அது கிட்ட தட்ட zero .. இந்த புள்ளி முடியும் அதே புள்ளியில் அந்த புள்ளி தொடங்குகிறது. .
இரு வானங்களை இணைக்கும் இந்த சுரங்கம் மாதிரியான அமைப்பை கொண்டு நாம் விண்வெளியில் கற்பனை பண்ண முடியாத தூரம் பயணம் பண்ணலாம் .

இரண்டு ப்ரபஞ்சகளுக்கு இடையிலான கதவு தான் இந்த worm hole இதை பயன் படுத்தி சென்று விட்ட உங்களை பிடிக்க பூமியிலிருந்து அதிவேக ராக்கெட் எடுத்து கொண்டு கிளம்பும் உங்கள் நண்பர் உங்களை பிடிக்க பல லட்சம்...கோடி ஆண்டுகள் ஆகும்.(Thore படத்தில் இந்த worm hole ஐ பயன்படுத்தி தான் நமது பூமிக்கு வந்து சேருவார்.. சுத்தி மன்னன் தார்..)

ஒரு ஆபிளில் மேல் தட்டையான இரண்டு புழுக்கள் அமர்ந்திருந்தன..
அவைகளின் பார்வையில் ஆப்பிள் ஒரு தட்டை பரப்பு 2d வடிவம் என நம்பி கொண்டிருந்தன... (நாம் நீண்ட காலமாக பூமியை நம்பிக்கொண்டிருந்தை போல) அதில் ஒரு புழு ஆப்பிலின் அடுத்த முனையை தேடி புறப்பட்டது..
அது நகர்ந்து செல்ல செல்ல ஆப்பிள் வளைவில் மறைவதை புழு நம்பர் ஒன் கவனித்தது(கடலில் செல்லும் கப்பல் கடற்கரையிலிருந்து கவனிக்கும் போது பூமி வளைவு காரணமாக குறிப்பிட்ட தூரம் சென்ற பின் வளைந்து மறைவதை போல)... அடடா இவ்ளோ நாளா நாம நம்பி வந்தது மாதிரி ஆப்பிள் ஒரு 2d அமைப்பு அல்ல அது வளைந்து உருண்டையாக 3d வடிவத்தில் உள்ளது என்பதை அது கண்டு கொண்டது ...எனவே அந்த ஆப்பிளை அப்படியே துளையிட்டு அடுத்த முனைக்கு தனது நண்பணை விட வேகமாக சென்றடைந்து லேட்டா வந்த நண்ப புழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது...

Worm hole கு என்னடா பேர் வைக்கலாம் என்று விண்ஞாணிகள் குழம்பி கொண்டிருந்த போது இந்த எடுத்து காட்டை சொல்லி விட்டு ஜான் அர்ச்சிபால்ட் வீலர் என்பவர் அந்த துளைக்கு புழு துளை( worm hole) என பெயரிட்டார்.

வாரம் ஹோல் எங்கே இருக்கு அதை கண்டு பிடித்து விட்டார்களா என்றால் அது இருக்கு ஆனா இன்னும் பயன்படுத்தும் விதமா இல்ல மற்றும் கண்ணுக்கே தெரியாத மிக சின்ன வடிவில் இருக்கு .... அது கணிக்கவே முடியாத மிக குறுகிய காலத்தில் உண்டாகி மறைகிறது ...இப்படி பல கதைகளை சொல்கிறார்கள்...
எது எப்படியோ எதிர்காலத்தில் நாம் ஸ்பேஸ் டிராவல் பண்ண வேண்டும் என்றால் இந்த நேஷனல் ஹைவேசை பயன்படுத்தினால் தான் முடியும்..


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸


4 ."ஆக்சிஜன் இல்லாமல் ஐந்து நொடிகள்"

(அறிவியல்.காதலன்)

(ரா.பிரபு)

உங்களிடம் ஒரு சுவாரஷ்யமான கேள்வி கேட்க போகிறேன்.
அதாவது  பிராணவாயு ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?

'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை 'னு கேக்கறீங்களா...  காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன் இப்ப விடை சொல்லுங்க பாஸ்...

"இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் "
என்கிறீர்களா...?
 சரி...நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்?

'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை என்ன ...எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை ' என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்..
இனி சொல்ல போகும் அனைத்தும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

கருப்பு வானம் :

வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம் ஒளி சிதறல் அதாவது ஒளி வளிமண்டல ஆக்சிஜன் மூல கூறு மற்றும் தூசு களில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொளிப்பது..
இப்போது ஆக்சிஜனை நீங்கள் நீக்கி விட்டதால் வானம் கருகும் னு இருட்டா கருப்பா ஆயிடும்..  மேலும் இப்போது பார்ப்பதை போல அணைத்து இடத்திலும் வெளிச்சமாக இல்லாமல் யாரோ LED பல்ப் போட்டாபோல  வெளிச்சம் ,குவிக்க பட்ட நிலை யில் கிடைக்கும்.(சும்மாவே பத்தரை மணிக்கு எந்திரிப்பவங்க இன்னும் விடியலை போல னு திரும்ப தூங்க போக வேண்டியது தான்)

இடியும் கட்டிடங்கள் :

நீங்கள் கண்ணால் பார்க்க கூடிய கான்க்ரீட் ஆல் ஆன எந்த கட்டிடமும் ... அது வீடோ பாலமோ... எல்லாமே மன்னால் பண்ணி வைத்தது போல பொல பொல வேண உதிர்ந்து போகும். காரணம் கான்க்ரீட் கலவையில் முக்கிய பிணைப்பு ஆக்சிஜன் தான்.(சும்மாவே நமூர்ல அரசியல் வாதிங்க கட்டற கட்டிடம் பாலம் எல்லாம் அப்பப்போ ஆக்சிஜன் இல்லாத மாதிரி விழுந்து கொண்டு தான் இருக்கிறது)

ஆவியாகும் கடல் :

தண்ணீர் என்பது  ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த கலவை னு நமக்கு தெரியும் .. எனவே அதில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நீக்கி விட்டால் மீதி இருப்பது ஹைட்ரஜன் ....அதாவது வாயு.
அதுவும் அது எப்படி பட்ட வாயு..? பறக்கும் பலூன் ஏன் பறக்குது? ஆம் அதே தான் அதுக்குள்ள இருப்பது மிகவும் லேசான தனிமம் ஆகிய ஹட்ரோஜன் . எனவே மொத்த கடலும் ..ஏரி ..குளம் எல்லா நீர் நிலையும் ஆவி யாகி வானதுக்கு போய்டும் . (மேட்டர் தெரியாம மெரினா போனவன் கடல காணாம கம்ப்லைன்ட் கொடுக்க வேண்டியது இருக்கும்)

நிற்கமுடியா நிலம் :

பூமியின் மேலடுக்கின் கட்டுமானத்தில்  ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிப்பதால் அது முழுவதும் கட்டி பட்டு நிற்கும் தன்மை போய்.. புதை மணலில் நிற்பதை போல உள் வாங்கி கொள்ளும். நிற்க நிலம் கிடைக்காது.. (நிக்க நேரம் இல்லனா சமாளிக்கலாம் நிற்க நிலமே இல்லனா என்ன பண்றது?)

சுடும் சூரியன்:

குறிப்பா சூரியன் சுட்டெரிக்கும்.
இதெனப்பா ஆச்சர்யம் அது தினம் சுட்டுகிட்டு தானே இருக்கு என்று நினைக்காதீர்கள் நான் சொல்வது அடுப்பில் வடை சுடுவதை போல.....
சூரியனில் உள்ள புறஊதா வை ஓசோன் (o 3 ) தான் வடி கட்டி அனுப்புகிறது அதில் உள்ள ஆக்சிஜன் நீக்க பட்டால் அதன் பின் சூரிய ஒளியில் நிற்கும் யாவரும்  தந்தூரி சிக்கன் தான்.

உள் காது கோவிந்தா :

நம்ம காது குள்ள ஒரு நிலை நிறுத்தும் அமைப்பு ஒன்னு இருக்கு அதன் வேலை நம்மை சுற்றி அழுத்த மாறுபாடு ஏற்பட்டால் அதனால் நாம் பாதிக்க படாமல் இருக்க நம்மை சமன் நிலையில் வைபதர்காக அழுத்த மாறுபாட்டை பராமரிப்பது. ஆனால் ஆக்சிஜன் நீக்க பட்டதால் வளிமண்டல காற்று அளவு 21 சதம் திடீரென குறைந்து போய்.. அழுத்தம் கணிச மான அளவில் குறைந்து விடுவதால் மிக பெரிய அழுத்த மாறுபாட்டை சமாளிக்க முடியாமல் அனைவரின் உள் காதுகளும் வெடித்து சிதறும் ...ஹலோ நான் சொல்றது கேக்குதா....ஹலோ.... ஹலோ....??

இயங்காத இன்ஜின்கள்:

ஆட்டோ தொடங்கி ஆட்டோமேட்டிக் விமானம் வரை.. ரோடு ரோலர் இன்ஜின் முதல் ராக்கெட் இன்ஜின் வரை எந்த எரிபொருளில் இயங்கும் இன்ஜினானாலும் அதில் எரிக்க படுவது ஆக்சிஜன் தான் என்பதால் நாம் திட்டமிட்ட அந்த ஐந்து வினாடிகளில் பறக்கும் விமானம் .. ஓடும் கார் பைக் எதுவானாலும் அங்கங்கே  இயங்காமல் நிற்கும் . (தலைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று கொள்வது தலைக்கு நல்லது)

ஒட்டிக்கொள்ளும் உலோகங்கள் :

குளிர் வெல்டிங் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் இரண்டு உலோகங்களுக்கு இடையில் உள்ள காற்றை நீக்கி வெற்றிடம் உண்டு பண்ணுவார்கள் அப்படி செய்தால் அந்த உலோகம் வெல்ட் பண்னாமலேயே வெல்ட பண்ணது போல ஒன்றோடு ஒன்னு ஒட்டி கொள்ளும்.
சாதாரணமாக உலோகங்கள் அப்படி ஒட்டி கொள்ளாமல் இருக்க காரணம் அவைகளின் மேலே ஆக்சிடைசின் பூச்சு  இயற்கையாகவே ஒரு மேல் அடுக்கு போல பரவி இருப்பது தான் .அதில் மேல் சொன்ன ஆக்சிஜன் நீக்கம் நடந்தால் உலோகங்கள் தானாகவே ஒன்றோடு ஒன்று வெல்ட் பண்ணிக்கொள்ளும்.

இப்ப சொல்லுங்க...
பூமியில் ஐந்து நொடி.... ஐந்தே ஐந்து நொடி பிராணவாயு இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா..?
நிச்சயமாக முடியாது அல்லவா...
இதையெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால்.....
அப்படி பட்ட பிராணவாயுவை 100 தொழிற்சாலை உற்பத்தி பண்ண முடியாத ஆக்சிஜனை ஒரு மரம் உற்பத்தி பண்ண முடியும் ..

எனவே

"மரம் வளர்ப்போம் ஆக்சிஜன் பெருக்குவோம் "

என்ற நல்ல கருத்தோடு கட்டுரையை முடிக்கிறேன்.


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸


5. " GPS ஒரு அற்புத கருவி"


உங்களுக்கு புவியிடம்காட்டி தெரியுமா? தெரியாதா? சரி உலக இடநிலை உணர்வி...? அதும் தெரியாதா..அட நம்ம GPS தாங்க... தமிழ்ல சொன்னேன்..
இன்றைக்கு கிட்டத்தட்ட எல்லா மொபைல்களிலும் உள்ள இந்த GPS பற்றி கொஞ்சம் பாப்போம்..

முதல் முதலில் இந்த GPS பயன் படுத்த பட்டது மக்கள் பயன்பாட்டுக்கு அல்ல இது ராணுவ தேவைக்காக . 1978 இல் லான்ச் செய்ய பட்டு ராணுவத்தால் சிறப்பாக பயன் படுத்த பட்டு பிறகு 1980 களில் மக்கள் பயன்பாட்டுக்காக அளிக்க பட்டது..

Global positioning  system என்பதன் சுருக்கம் தான் இந்த GPS . இதை கொண்டு உலகில் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் உங்கள் இருப்பிடம் மற்றும் உங்கள் நேரத்தை கச்சிதமாக கண்டுகொள்ள முடியும்.
இது மொபைலில் குடி புகுந்த பின் இதால்  உங்களுக்கு விளையும் நன்மைகள் பல பல.
 GPS கொண்டு இயங்கும் அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் உங்கள் இருப்பிடம் குறிப்பிடுபவை.
சாதாரணமான app களில் GPS இணைந்தால் இதன் பலன் வெறுவிதமானவை மேலும் துள்ளியமானவை.
உதாரணமாக map இல் வரைபடங்கள் மட்டும் பார்த்து கொண்டிருந்த நமக்கு அதில் GPS இணைந்தபின் நீங்கள் வரை படத்தில் இருக்கும் இடம் மற்றும் நீங்கள் செல்ல வேண்டிய இடம் வழிகாட்டி ரூட் உடன் உங்களுக்கு கிடைக்க GPS தான் உதவுகிறது. .
வானிலை app இருக்கிறது அதில் நீங்கள் இருக்கும் இடத்திற்கான வானிலை அல்லது வெப்பநிலை எப்படி தெரிகிறது ?காரணம் GPS.
 just dial மாதிரியான enquiry சைட்டு கு போகிறீர்கள்... உங்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனை சினிமா ஹால் ஷாப்பிங் மால் அல்லது ATM அல்லது restaurant இப்படி எதையும் துல்லியமாக காட்ட உதவுவது GPS .
ஸ்பீடோ மீட்டர் app ஏதாவது திறந்து வைத்து ஓடும் பஸ் அல்லது ரயிலில் நீங்கள் பார்த்தால் அது செல்லும் வேகத்தை பார்க்க முடியும்.. GPS ஐ பயன்படுத்தும் app கள் நூற்று கணக்கில் உள்ளன. ola போன்ற ஆட்டோ சர்வீஸ் ஆகட்டும் அல்லது ..navigation app களாகட்டும் GPS இன் பயன்பாடு இன்றியமையாதது .
என்ன..... GPS உங்கள் மொபைல் பேட்டரி யை கொஞ்சம் அதிகம் சாப்பிடுபவை அது ஒன்னு தான் பிரச்னை.

இந்த அதிசய app எப்படி வேலை செய்கிறது என்று பாப்போம்.. (பின்ன அத சொல்லாம விட்டுடுவோமா என்ன)
இது இயங்க உங்கள் மொபைல் சிக்னல் தேவை இல்லை இது வானத்தில் உள்ள செயற்கை கோளுடன் நேரடி தொடர்பு கொண்டது..
இதற்காக 24 செயற்கை கோள்கள் 24 மணிநேரமும் செயல் படுத்த படுத்த படுகிறது. எல்லாமே இன்னமும் அமெரிக்க ராணுவத்தால் நிர்வகிக்க படுபவை தான்..
இந்த செயற்கை கோள்கள் ஒரு நாளைக்கு 2 முறை பூமியை சுற்றிவருகின்றன. இதிலிருந்து 24 மணிநேரமும் சிக்னல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் .GPS ரிசிவர்கள் இந்த சிக்னலை பெற்று கொள்கின்றன 3 அல்லது அதற்கு மேற்பட்ட செயற்கை கோள்கலிருந்து சிக்னல் பெற்று கொண்டால் latitude மற்றும் landitude மூலம் உங்கள் இருப்பிடத்தை இவை தெரிந்து கொள்கின்றன.

சிக்னல் அனுப்ப பட்ட நேரம் மற்றும் பெற்று கொண்ட நேரத்தை ஒப்பிட்டு ரிசீவருக்கும் செயற்கை கோளுக்கும் உள்ள தூரத்தையும் கணக்கிட முடியும்.
இதை பயன்படுத்த நீங்கள் வீட்டுக்கு உள்ளே இல்லாமல் நன்கு வானத்தை பார்த்தபடி வெளியில் இருந்தால் நன்கு வேலை செய்யும்.

Cowboy எனும் மாடு மேய்ப்பவர்களின் முரட்டு பயன்பாடுகாக கண்டுபிடிக்க பட்ட ஜீன்ஸ் பேண்ட் இன்று நமது பேஷன் பேண்டாக மாறியதை போல(அடடே தகவலுக்குள் தகவல் சொல்லியாச்சா) ராணுவ பயன்பாட்டுக்காக கண்டுபிடிக்க பட்ட கருவி நமக்கு அன்றாட பயன்பாட்டுக்கு பயன் படுவது மகிழ்ச்சிதானே.


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

6. "MRI என்ன ஏது எப்படி"


Mri இன் அறிவியல் என்ன..??

ஆ ..னா , ஊ..னா  டாக்டர்ஸ் ஒரு MRI scan எடுத்திடுங்க என்கிறார்களே... அந்த MRI ஸ்கேன் எப்படி வேலை செய்கிறது அதற்கு பின்னால் உள்ள அறிவியல் என்ன ...? வாருங்கள் இன்று MRI ஐ ஸ்கேனை ..ஸ்கேன்  செய்வோம்.....

"Magnetic resonance imaging "என்கிற M RI ஐ உருவாக்கியவர் டாக்டர் ரேமண்ட் டாமண்டியன் என்பவர். 1977 இல் சில மாணவர்களின் துணை கொண்டு இதை உருவாக்கினார்.
இது மிக வலிமையான காந்த புலத்தை கொண்டு இயங்கும் ஒரு கருவி என்பதால் முதலில் இதில் தன்னை பரிசோதனை செய்வித்து கொள்ள அனைவரும் பயந்தனர். பின்னே.... காமா கதிர்வீச்சால் பச்சை மனிதனாக மாறி போன ஹல்க் கதையா ஏதாவது ஏடாகூடமா ஆயிடிச்சினா!! ..
எனவே இது ஒரு ஆபதில்லாத மெஷின் என்பதை காட்ட இதில் முதலில் தன்னையே பரிசோதனை செய்து காட்டினார் டமாண்டியன்...

இன்று உலகளவில் மிக பெரிய அளவில் பயன் படுத்தபட்டு வருகிறது. எக்ஸ் ரே வில் எலும்பில் உள்ள பாதிப்புகளை கண்டறிவதை போல இதில் தசையில் உள்ள பிரச்சனைகளை கண்டறியலாம்... உங்களுக்கு மூலையில் கட்டியா இதில் தெரிந்து விடும் .. உங்களுக்கு புற்றுநோயா.. இதில் தெரிந்து விடும்.. உங்களுக்கு வலிப்பு உள்ளதா இதில் கண்டறியலாம்.. (உங்களுக்குனா உங்களுக்கு இல்லைங்க...)

 மற்ற ஸ்கேனிங் கருவியை காட்டிலும் இது சிறந்த ஸ்கேனிங் கருவியாக கருத பட காரணம் பாதிக்க பட்ட பகுதியை இதில் தெளிவாக 2D மற்றும் 3D படமாக பார்க்க முடியும்.. மூளை நரம்புகளின் செயல் பாடுகள் நரம்புகளில் ரத்தம் பாய்வது எல்லாம் கூட தெளிவாக பார்க்கலாம்.
இதில் உள்ள சுரங்கம் மாதிரி அமைப்பில் ஒரு ஸ்ட்ரெச்சர் மாதிரி அமைப்பில் உங்களை படுக்க வைத்து கருவிக்கு உள்ளே அனுப்புவார்கள்..
இந்த அமைப்பை' போர்' என்று அழைகிறார்கள் .உடலை அசைக்காமல் வைக்கவும் என எச்சரித்து அனுப்புவார்கள் . மீறி அசைத்தால் மீண்டும் பரிசோதிக்க அனுப்புவார்கள். காந்த புலனும் மேலும் அதற்கு ஒரு எதிர் காந்த புலனும் என்கிற இரண்டு விஷயம் இதற்குள் இருப்பதால்.. மெஷின் சும்மா ரோடு போடும் மெஷினுக்குள் உங்களை விட்டதை போல ஒரே லொட லொடா சப்ததத்தோடு ஏகத்துக்கு கூச்சலி்டும்.

இது அதீத சக்தி வாய்ந்த காந்த புலத்தில் இயங்குகிறது என்று சொன்னேன் எனவே இதில் ஜாலி ரெய்ட் செய்ய உங்களுக்கு கண்டிஷன் உண்டு.. நீங்கள் வைத்திருக்கும் வாட்ச்...பேணா..கிரெடிட் கார்ட்... போன அட்சய திருதியைக்கு நீங்கள் வாங்கின தங்கம்.. இப்படி எல்லாவற்றையும் உருவி கொண்டு தான் இதில் அனுப்புவார்கள்..
மீறி ஏதாவது ஜெம் கிளிப் ..குண்டூசி போன்ற பொருட்களை நீங்கள் கொண்டு சென்றால் அது உங்களுக்கு  மிகுந்த ஆபத்தை விளைவிக்க கூடும்.. குறிப்பாக ஜெம் கிளிப் போன்ற சிறிய பொருட்கள் அதீத காந்த விசையால் கவர பட்டு உங்கள் உடல் தசைகளில் எங்கே துளைக்குமா தெரியாது..
சரி இனி இது எப்படி வேலை செய்கிறது இதில் உள்ள அறிவியல் என்ன என்பதை பார்ப்போம்...

முதலில் அந்த கருவியை குறுக்கே வெட்டி உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்போம்..

இதில் நான் சொன்ன அந்த bore என்கிற tube அமைப்பிற்குல் அதீத சக்தி வாய்ந்த காந்த புலத்தை உற்பத்தி செய்ய சூப்பர்கண்டக்டிவ் மேக்னட் வைக்க பட்டுள்ளது..
இது எக்கச்சக்க காயில்கள் வயர்கள் கொண்டு வடிவமைக்க பட்டிருக்கும்.. காயில் களில் மின்சாரத்தை செலுத்துவதன் மூலம் காந்ததை உற்பத்தி செய்யலாம் என்று 9.8.16 தேடல் பெஞ்சில் "மின்காந்தம் என்ன ஏது எப்படி " என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது நினைவு இருக்கலாம்..
இந்த சூப்பர் கண்டக்டிவ் மேக்னட் 0.5 டெஸ்லா முதல் 2 டெஸ்லா வரை காந்த புலத்தை உற்பத்தி செய்ய முடியும் ( டெஸ்லா என்பது காந்த புல செறிவை அளக்கும் அலகு)
இது தவிர சிறிய அளவு காந்த புலத்தை உண்டு பண்ணும் resistant magnet மற்றும் gradient magnet  கள் இருக்கும். கட்டமைப்பில் பார்ப்பதற்கு சூப்பர் கண்டக்ட்டிவ் மேக்னட் போல தான் இருக்கும் அனால் சூ.க மேக்னட்டின் காயில்கள் திரவ ஹீலியத்தில் வைக்க பட்டிருக்கும். இதற்கு அப்படி அல்ல..

Permanent magnet ஒரு நிலையான காந்த புலத்தை உண்டு பண்ணினால் இந்த கொசுறு காந்தங்கள் மாறுபடும் காந்த புலத்தை உண்டு பண்ணும்.
அடுத்ததாக உள்ளே இருக்கும் ஒரு முக்கிய பாகம்.. ரேடியோ அலைகளை உண்டுபண்ண கூடிய ஒரு காயில் அமைப்பு..
அடுத்ததாக சக்திவாய்ந்த கம்பியூட்டர் இணைக்க பட்ட ஸ்கேனர் அமைப்பு ஒன்று உள்ளது.
இனி இது எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்..

நமது உடல் தண்ணீர் மற்றும் கொழுப்புகளால் ஆனது என்று நமக்கு தெரியும்.. அதே போல தண்ணீர் என்பது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் கலவை என்பதும் நமக்கு தெரியும் .அந்த ஹைட்ரஜன் அணு தான் இந்த ஸ்கேனரில் ஸ்கேன் செய்ய முக்கிய பங்கு வகிக்கும் ஒரு சமாச்சாரம்.
சாதாரணமாக காந்தம் மற்ற சில பொருட்களை கவர காரணம் காந்த புலத்தில் பொருட்கள் வரும் போது அதில் தாறு மாறாக சுற்றி கொண்டிருக்கும் அணுக்கள் ஸ்கூல் பிள்ளைகள் ப்ரேயரில் நின்றதை போல வரிசையாக அடென்ஷனில் நிற்பது தான்.
அதே போல ஸ்கேன் செய்ய பட வேண்டிய பேஷண்ட் MRI கருவியின் வலிமையான காந்த புலத்தில் கொண்டு வரும் போது அவர் உடலில் உள்ள ஹைட்ரஜன் அணு ஒரே சீராக வடக்கு மற்றும் தெற்காக பிரிந்து நிற்கும். அதில் சில பிரச்சினையான செல்களின் புரோட்டான்கள் மட்டும் பொருந்தாமல் இருக்கும் இப்போது அதில் ரேடியோ அதிர்வலைகளை பாய்ச்சும் போது அந்த பொருந்தாத புராட்டான்கள் மட்டும் வேறு திசையில் சுழல தொடங்கும்..
 ரேடியோ அலைகள் அவற்றை குறிப்பிட்ட பிரிக்வன்சியில் குறிப்பிட்ட திசையில் சுழல செய்யும்.. இந்த frequency ஐ  larmour frequency என்கிறார்கள்..
இப்போது நான் முன்னே சொன்ன அந்த gradient magnet தனது மாறுபடும் காந்த புலத்தை கொண்டு மெயின் காந்ததை வெட்டும் போது மிக சரியாக எந்த பகுதியை படம் பிடிக்க வேண்டும் என்பதை எடுத்து காட்டு கிறது... இந்த பகுதியை slice என்று அழைகிறார்கள்.

ரேடியோ சிக்னல் நிறுத்த பட்டவுடன் அதனால் சக்தியூட்ட பட்டு சுழன்ற புராடான்ஸ் தனது இயல்பு நிலைக்கு திரும்புகிறது அப்படி திரும்பும் போது அது ஒரு ஆற்றலை வெளியிடுகிறது அதை ஸ்கேனர் பகுதி உள்வாங்கிகாள்கிறது பிறகு இதை கம்பியூட்டருக்கு அளிக்கிறது..கம்பியூட்டர் இந்த சிக்னல்களை fourier transform என்கிற ஒரு கணித சமண்பாடாக பெறுகிறது.. இந்த சமன்பாட்டை இது 2D அல்லது3D வடிவ படமாக மாற்றுகிறது. நமக்கு பார்க்க சிக்னல் சரியில்லாத பழைய டிவி யில் ப்ளாக் அண்ட் வைட் படம் பார்த்த கதையா தெரிந்தாலும் மருத்துவர்களுக்கு இது மனிதனை அறுக்காமலே அவனுக்குள் உள்ள தசை மற்றும் அவனது உள் உறுப்பில் உள்ள குளருபடிகளை தெள்ள தெளிவாக காட்டி விடுகிறது..


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

7."  அடுப்படி அறிவியல்"


மைக்ரோவேவ் ஓவன் பார்த்திருப்பீர்கள் அது எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
சாதாரண மின் வெப்ப கருவிக்கும் இதற்கும் மிக பெரிய வேறுபாடு உள்ளது .மற்ற எல்லா வகை அடுப்புகளும் பொருட்களை மேலேயிருந்து உள்நோக்கி தானே சூடு படுத்தும் ஆனால் இது பொருட்களை உள்ளேயிருந்து வெளி நோக்கி சூடு பண்ணும் ஆச்சர்யமாக இருக்கிறது அலல்லவா.

காரணம் இதன் வேலை செய்யும் விதத்தில் பக்கா அறிவியல் இருக்கிறது.

இது சூரியன் நம்மை சுடுவது எதை கொண்டோ அதே போல தான் பொருளை சூடாக்குகிறது அதாவது கதிர் வீச்சை கொண்டு.
 நம் வீட்டில் உள்ள ரேடியோ டிவி போல மைக்ரோவேவும் எலெக்ட்ரோமாக்னடிக்கில் வேலை செய்யும் ஒரு கருவியாகும்.

மற்ற மின் அடுப்பை போல் இதில் பொருளை சூடாக்க heating element போன்ற எந்த பகுதியும் இல்லை.
அதற்கு பதில் மைக்ரோ வேவ் ஐ உற்பத்தி செயும் ஒரு சாதனம் உள்ளது அதற்கு meganetran என்று பெயர் அதில் உற்பத்தி செய்ய படும் ரேடியோ அலைகள் இடையில் ஒரு தட்டில் வைக்க பட்டுள்ள உணவு பொருளில் பீச்சி அடிக்க படுகிறது மேலும் அவனின் கண்ணாடி போன்ற பரப்பு மீண்டும் மீண்டும் அலைகளை எதிரொலிக்கிறது
சாதாரணமாக எலெக்ட்ரோமேக்னடிக் பல பொருட்களின் அணுக்கள் வாயிலாக ஊடுருவ கூடியது..எனவே வைக்க பட்ட உணவின் உள்ளே ஊடுருவி அதன் மூலகூரை அதிர்வடைய செய்து அதை சூடாக்குகிறது.

ஒரு எச்சரிக்கை
சாதாரணமாக மைக்ரோவேவ்கள் உயிருள்ள தசைகளை தாக்கி அழிக்க கூடியது எனவே மைக்ரோவேவ் அவன் பக்கா பாதுகாப்பாக மூட பட்டிருக்கும் அதில் அஜாக்ரதையாக இருப்பது ஆபத்தானது.

சாதாரமாக நாம் பயன்படுத்தும் மைக்ரோவேவ்வனிலும் மகத்தான அறிவியல் உள்ளது தான் அல்லவா.?

சரி மைக்ரோ வேவ் ஓவன் பத்தி தெரிஞ்சாச்சு .. இந்த இண்டெக்ஷன் ஸ்டவ் பார்த்திருப்பீர்கள் அது மட்டும் என்னவாம் அது வேலை செய்யும் விதத்திலும் பக்கா அறிவியல் உள்ளது தெரியுமா?அதிலும் சூடாக்க heating element ஏதும் இல்லை.

தெருவோரத்தில் நாம் காணும் ட்ரான்ஸ்பார்மரும் induction stove உம் ஒரே தத்துவத்தில் தான் வேலை செய்கிறது தெரியுமா?

ட்ரான்ஸபார்மரில் ப்ரைமரி காயில் செகண்டரி காயில் ரெண்டு இருக்கும் அதில் ப்ரைமரியில் alternative current கொடுக்க படும் போது அது ஒரு மாறுபடும் electro magnetic flux ஐ உற்பத்தி செய்யும் அது செகண்டரி காயிலில் மோதி அங்கே கரண்ட் உற்பத்தி ஆகும் (கூடவே ட்ரான்ஸ்பார்மர்
ரொம்ப சூடும் ஆகும். )

இந்த induction stove இலும் ப்ரைமரி காயிலில் மாறுபடும் magnetic flux உற்பத்தி ஆகும் ..ஆனால் அது வெட்டுவது செகண்டரி காயிலில் அல்ல நாம் வைக்கும் பாத்திரத்தில்..எனவே பாத்திரத்தில் உணர முடியாத அளவு குறைந்தளவு மின்சாரமும் அதிக அளவு வெப்பமும் உண்டாகும்..

உற்று கவனித்தால் அடுபடியிலும் பல அற்புத அறிவியல் பொதிந்து கிடக்கிறது அல்லவா...


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

8. "அணு கரு பிளவு....
     அணு கரு இணைவு....."
           

அணு என்பது தான் ஒரு பொருளில் உள்ள மிக சிறிய அலகு அதை அதற்கு மேல் பிரிக்க முடியாது என்று ஒரு காலத்தில் நம்பி வந்துள்ளோம்.
ஆனால் பிற்காலத்தில் அதை பல பேர் பிரித்து மேய்ந்து விட்டார்கள். உள்ளே உள்ள சப் அட்டமிக் பார்டிகள்ஸ்களை எல்லாம் எப்போதோ நலம் விசாரித்து விட்டார்கள். தற்போதய அறிஞ்ஞர்கள் நூற்றினோ போன்ற சில துகள்களை எடுத்து வைத்து கொண்டு ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் (நூற்றினோ பற்றி விரிவாக அறிய எனது "நியூட்றினோ ஒரு அடங்காத துகள்" கட்டுரையை படித்து பாருங்கள்.

அனால் அணுவை பிளந்து பார்க்கும் போது அணுவை பிளந்தாலும் சரி இணைத்தாலும் சரி கனகிலடங்காத சக்தி வெளி படுவதை பார்த்தார்கள்..

அதை ஒவொன்றாக பாப்போம்.

முதலில் அணு கரு இணைவு..
இதை பற்றி சொல்லும் முன் ஒரு விஷயத்தை நான் சொல்லியாக வேண்டும் அதாவது ஒரு பொருளை நாம் எரிபொருளாக பயன்படுத்தி அதில் சக்தியை எடுப்பதை போல அதை முழுவதமாக அப்டியே மிச்சம் வைக்காமல் ஆற்றலாக மாற்ற முடிந்தால் அது நம்மை வியக்க வைக்கும் அளவு ஆற்றலை கொடுக்கும் . (உதாரணமாக ஒரு லிட்டர் பெட்ரோலை போட்டால் போதும் உங்கள் பைக்கை நீங்கள் வாழ்நாள் முழுதும் ஓட்டலாம் அப்போதும் டேங்க்கில் நிறைய மிச்சம் இருக்கும் என்றால் எப்படி இருக்கும்) இதை பற்றி விரிவாக எனது E=MC 2  கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.. படிக்காதவர்கள் படித்து பாருங்கள்.
இப்படி ஆற்றல் மாற்றம் நடக்கும் இயற்கையின் மிக பெரிய எடுத்துக்காட்டு நமது சூரியன். அந்த சூரியனில் நடப்பது என்ன வென்றால் அணு கரு இணைவு தத்துவம் தான்.

அணு கரு இணைவு எங்கே நடந்தாலும் அதில் வெப்பம் மிகுதியாக இருக்கும்.
அணுக்கரு இணைவில் நடப்பது என்ன? இரண்டு அணுக்கள் ஒன்றிணைந்தது வேறு அணுக்கள் உருவாகும் .
இப்படி அணுவை ஒன்றிணைப்பதற்கு ஏதாவது லேசான அணுவை தான் ஒன்றிணைப்பார்கள். நமக்கு தெரிந்து இருப்பதிலேயே மிக லேசான அணு ஹைட்ரஜனுடையது. (ஒரே ஒரு புராட்டனை ஒரே ஒரு எலக்ட்ரான் சுற்றிவந்தால் அது ஹைட்ரஜன் அணு)

இதை ஒன்றிணைக்கும் போது இரண்டு புரோட்டானை இரண்டு எலக்ட்ரான் சுற்றிவரும் அணுவாகிய ஹீலியமாக இது மாறுகிறது.. அப்படி மாறும் போது ஆரம்ப நிலையில் இருந்த ஹைட்ரஜனின் இரண்டு அணுக்களின் எடை தானே இந்த ஹீலியத்தின் எடையாக இருக்க வேண்டும் ஆனால் அப்படி இல்லாமல் எடை சற்று குறைந்து காண படுகிறது... அந்த குறைந்த எடை எங்கே போச்சு என தேடி பார்த்தால் அது முழு ஆற்றலாக மாறி வெளியேறி இருப்பதை பார்க்கலாம்.

மனிதர்கள் உருவாகும் ஹைட்ரஜன் குண்டு இந்த தத்துவத்தில் தான் வேலை செய்கிறது... இதில் வெளிப்படும் ஆற்றல் அணுக்கரு பிளவில் வருவதை போல கதிர்வீச்சு அல்ல இது சுத்தமான வெப்ப ஆற்றல். இந்த தத்துவத்தில் ஒரு கிலோ நிலக்கரி யை வைத்து ஆற்றல் எடுத்தால் பல நூறு ஆண்டுகளுக்கு அதை கொண்டு அடுப்பு எரிக்கலாம்... அனால் அதில் ஒரு பிரச்னை உள்ளது ஒரு கிளாஸ் தண்ணீரை சுட வைக்க குறைந்தது 70 முதல் 100 ஆண்டுகள் ஆகும்.. அவ்ளோ slow prosses

அடுத்து அணுக்கரு பிளவை  பற்றி பாப்போம்..

அணுக்கரு இணைவில் ஹைட்ரஜன் குண்டு உண்டாகுகிறார்கள் என பார்த்தோம் அதே போல அணுக்கரு பிளவில் அணுகுண்டு உற்பத்தி செய்கிறார்கள்..இதன் தத்துவத்தை கண்டு பிடித்தவர்கள் ஆட்டஹான் ஸ்ட்ராஷ்மான்.
அணுவை எப்படி பிளக்கிறார்கள்?
ஒரு எடுத்து காட்டுக்கு நிலக்கரி பெட்ரோல் எல்லாம் சொன்னேனே தவிர ஆற்றலை எடுக்க நாம் எல்லா தனிமத்தையும் பயன் படுத்த முடியாது..அணுகரு இணைவில் லேசான தனிமம் பயன்படுவதை பார்த்தோம் ஆனால் இதற்கு நமக்கு யுரேனியம் போன்ற தன்னிச்சையாக கதிர்வீச்சு ஆற்றலை வெளி படுத்தும் ஒரு கணமான தனிமம் தேவை U 235 என்று குறிப்பிடப்படும் யுரேனியம் மிகவும் கனமான ஒரு தனிமம் அதன் அணுவை சுத்தியை வைத்து எல்லாம் பிளக்க முடியாது ...எனவே நியூற்றானை கொண்டு பிளபார்கள் .
அப்போது அந்த அணு பேரியம் மற்றும் க்ரிப்டானாக மாறும் அப்போது அளப்பரிய ஆற்றலை வெளி படுத்தும் .

அணு இணைவில் வெப்ப ஆற்றல் வெளிப்படுவதை பார்த்தோம் ஆனால் இதன் ஆற்றல் கதிர்வீச்சு ஆற்றல்.. இதன் அழிவு சக்தி மிகவும் அபாரமானது . ஹைட்ரஜன் குண்டு வெடித்தால் அது அப்போதைக்கு வெப்பத்தால் ஏற்படுத்தும் அழிவு மட்டும் தான் அதன் பாதிப்பு.. ஆனால் அணு பிளவில் அதாவது அணுகுண்டில் உள்ள ஆற்றல் வெடித்த பல வருடம் கழித்த பின்பும் தனது பாதிப்பை ஏற்படுத்தும் .. இதன் கதிர்வீச்சு நீர் நிலம் காற்று அனைத்திலும் பரவி கலக்கும் இது உயிரி செல்லில் மரபணு மாறுதலை ஏற்படுத்த கூடியது. இதில் கட்டுப்பாடான செயலை அணு உலையில் பயன் படுத்துவார்கள். மற்றும் கட்டுப்பாடற்ற செயின் ரியாக்சனை அணுகுண்டில் பயன்படுத்துவார்கள்.

அணுக்கரு இணைவு பயங்கர வெப்ப நிலையில் நிகழ்வது... ஆனால் அணுக்கரு பிளவை அறை வெப்பநிலையில் கூட உருவாக்கலாம்.
இந்த அணுக்கரு பிளவு மற்றும் இணைவு இந்த தொழில் நுட்பத்தில் உள்ள சக்தி ... மொத்த மனித குலத்தையே அழிக்கும் அளவு சக்தி வாய்ந்தது .


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

9. " Parallel univerce: இணை பிரபஞ்சம்"


நீங்கள் கண்ணால் காண கூடிய ..உணரக்கூடிய ,இந்த உலகம் அது நீங்கள் உணர்ந்த அளவு நீங்கள் புரிந்து கொண்ட படிதான் உண்மையில் இருக்கிறதா..எனது ஐன்ஸ்டைன் கட்டுரையின் முதல் பாகத்தில் சொன்னதை போல நம்மால் உணர கூடிய அளவில் மட்டும் தான் இந்த உலகை நாம் புரிந்து கொள்கிறோம் ஆனால் உண்மை என்பது எப்படி இருக்கும் என யாராலும் சரியாக சொல்ல முடியாது...

உதாரணமாக ஒரு வெற்று அறையில் நீங்கள் எதையும் காண முடியாது ஆனால் உங்களை சுற்றி இந்த கணத்தில் உள்ளது அது நீங்கள் பார்க்கும் வண்ணம் தான் உண்மையில் உள்ளதா...ஒரு பேச்சுக்கு உங்களுக்கு ரேடியோ ..டிவி மற்றும் செல்போன்களுக்கு உள்ளதை போன்ற எலெக்ட்ரோ மேக்னடிகை உள்வாங்கும் சென்சார் இருந்தால்.....மேலும் அவற்றை மீண்டும் ஒளி ஒலி யாக மாற்றும் தொழிநுட்பம் உங்கள் உடலிலேயே இருந்தால் நீங்கள் காலி அறையாக பார்ப்பது இப்போது பல வித ஒளி பரப்புகள் தொலைபேசி பேச்சுக்கள் லட்சக்கணக்கான விஷயங்கள் நிறைந்த ஒரு டிராபிக் ஆக  பார்ப்பீர்கள்.

அப்படி நம்மால் காண முடியாத உணர முடியாத பல பரிமாணங்கள் ..(உதாரணமாக மீஒலி... காஸ்மா கதிர் ..nutrino துகள் ..) இப்படி பல விஷயங்களை கொண்டது தான் நமது பிரபஞ்சம் இப்படி நம் கூடவே நம்மால் உணர முடியாத படி ஒரு மொத்த பிரபஞ்சமே இருக்கிறது...அதில் இங்கே நாம் பார்க்கும் மொத்த பொருளும் ...நீங்கள் நான் நீங்கள் வளர்க்கும் நாய்...எல்லாவற்றிற்கும் ஒரு காப்பி இருக்கிறது என்ற ஒரு கான்செப்ட் தான் அந்த இணை பிரபஞ்சம்.

நம்மால் காண முடியாத பல சக்திகளை நாம் உணரவாவது முடிகிறது.எலெக்ட்ரா மேக்னட் அலை இருப்பதை யாரும் சந்தேகிப்பதில்லை காரணம் நம் செல் போனே அதற்கு ஆதாரம்.அதேபோல் எலக்ட்ரான் இருப்பதை ஈர்ப்பு அலைகள் இருப்பதை நியூற்றினோ போன்ற சில நுண்ணிய துகள் இருப்பதை ஆராய்ச்சிமூலமாக நாம் கண்டு கொள்கிறோம்.அனால் நம்மால் ஆராய்ச்சியில் கூடகண்டுகாள்ளமுடியாத இது வரை நம்மால் எந்த வகையிலும் உணர முடியாத இன்னும் எத்தனை சங்கதிகளை இந்த பிரபஞ்சம் கொண்டிருக்கிறேதோ யாருக்கு தெரியும் அதில் நமது ஒவ்வொரு பிரதியும் இருக்கும் (என்ன கொஞ்சம் வேற ரூபத்தில்)என்ற  கோட்பாடு நம்பும் படியாகவா இருக்கு என நீங்க கேட்கலாம் ஆனால் இதை அறிவியலாரகள் இருக்குமோ என சந்தேகிக்க காரணம் இல்லாமல் இல்லை.

இந்த இணை பிரபஞ்சம் எப்போ எப்படி தோன்றி இருக்குமாம் தெரியுமா?
நமது பூமி உருவாகி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன..சூரியன் உருவாகி 500 கோடி ஆண்டுகள்.
மற்றும் இந்த மொத்த பிரபஞ்சமே 1200 கோடி ஆண்டுக்கு முன் நடந்த பிக் பாங் எனும் பெரும் வெடிப்பின் போது உருவானது தான்.அந்த நேரம் தொடங்கி இந்த பிரபஞ்சம் பல மாறுதலுக்கு உள்ளாகி இப்போது நாம் கண்ணால் காணும் இந்த வடிவை அடைந்திருக்கிறது.அது உருவான அதே கணத்தில் தான் இந்த இணை பிரபஞ்சம் உருவாகி இருக்க வேண்டும் மேலும் இங்கே நடந்த ஒவ்வொரு மாற்றத்திற்கும் அந்த பிரபஞ்சத்தில் அதற்கு நிகரான எதிர் மாற்றம் நடந்து நடந்து அந்த பிரபஞ்சம் வளர்ந்திருக்க வேண்டும்.

இப்படி ஒரு எண்ணம் எப்படி வந்தது?
உங்களை ஒரு மணல் பாங்கான இடத்தில அழைத்து சென்று உங்களுக்கு ஒரு வேலை கொடுக்க படுகிறது என வைத்து கொள்ளுங்கள் அதாவது 3அடி உயரமும் குறிப்பிட்ட சுற்றளவு கொண்ட ஒரு சின்ன மணல் மலையை நீங்கள் உருவாக்க வேண்டும் அதான் உங்களுக்கு இடப்பட்ட வேலை.உங்கள் கையில் மண்வெட்டி குடுத்தாயிற்று..இப்போது நீங்கள் மணலை தோண்டி எடுத்து அதை கொண்டு சுலபமாக அந்த வேலையை செய்து
 விடுவீர்கள்.ஆனால் இங்கு நீங்கள் உற்று கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது வெறும் மலையை தான் நீங்கள் செய்ய திட்டமிட்டீர்கள் ஆனால் நீங்கள் தோண்டிய அந்த பள்ளம்? அது நீங்கள் குன்று செய்ய எடுத்து கொண்ட அதே முயற்சியில் உருவானது தான் மேலும் உங்கள் குன்று என்ன உயரம் உள்ளதோ அதே ஆழம் தான் அந்த குழி அதாவது உங்கள் குன்றின் எதிர்மறை காப்பி தான் அந்த பள்ளம் .அந்த குன்று தான் இந்த பிரபஞ்சம் என்றால் அந்த குழி தான் அவ்ர்கள் சொல்லும் இணை பிரபஞ்சம் .

இப்படி குழியை தோண்டுவது மட்டும் அல்ல இந்த பிரபஞ்சத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் தனக்கே உரிய வேறு விதமான எதிர் பாதிப்பை உண்டாக்கி கொண்டுதான் இருக்கிறது.அது போல 1200 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த பிரபஞ்சம் உண்டான கணம் தொடங்கி இதில் நடந்த ஒவ்வொரு முக்கிய நிகழ்வும்...அது எரிகள் விழுந்து ஒருமுறை உலகம் அழிந்தாததாகட்டும் அல்லது பூகம்பம் வந்தாதாகட்டும் அல்லது பெரிய நட்சத்திர மண்டல ஆக்கம் அல்லது அழிவு ஆகட்டும் தனது பாதிப்பை அந்த இணை பிரபஞ்சத்தில் உண்டு பண்ணிக்கொண்டு தான் இருக்கும் .

அது போலவே நீங்களும் நானும் இந்த பிரபஞ்சத்தில் மிக சிறியவர்கள் என்றாலும் நமது பாதிப்பை அதில் உண்டாகி கொண்டு தான் இருக்கிறோம் .இந்த கனத்தில் அந்த பிரபஞ்சத்திக் ஒரு ரா.பிரபு இணை பிரபஞ்ச கட்டுரையை வேறு பரிமானத்தில் எழுதி கொண்டிருக்கிறான் என்பது கொஞ்சம் நம்ப கடினமானதாக தான் இருக்கிறது என்றாலும் பல அறிவியல் அறிஞர்கள் அதை நம்புகிறார்கள் .
அதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் அந்த பிரபஞ்சத்தில் வெறும் சக்தி ரூபத்தில் வாழும் அந்த மனிதர்கள்(மனிதன் னு சொல்லவா என்னனு சொல்ல) நம்மை போலவே இந்நேரம் இப்படி வேற ஒரு பிரபஞ்சம் உள்ளதை உணர்ந்து கொண்டார்கள் அவர்கள் நம்மை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள் அதற்கு ஆதாரம் இதொ பாருங்கள் என அவர்கள் காட்டுவது ...காஸ்மிக் கதிர்கள் காமா கதிர்கள் போல ஒருவித கதிர்களை ...என்ன அந்த கதிர்கள் நமது பிரபஞ்சத்தில் எதனாலும் உற்பத்தி செய்யப்படாத ...எங்கேயிருந்து வந்தது என்றே தெரியாத மர்ம கதிர்கள். (பூமியில் ஒரு உலோகம் கிடைத்து....அது இந்த பூமியை சார்ந்தது அல்ல என தெரிந்தால் நாம் என்ன நினைப்போம்)
மேலும் அந்த பிரபஞ்ச உருவாக்கம் நம்முடையதை விட கொஞ்சமே கொஞ்சம் பின்தங்கி இருக்க வாய்பிருப்பதால் இங்கு நடக்கும் சம்பவங்கள் அங்கு வேற வித மாக நடக்கவும் வாய்ப்புள்ளது(உதாரணமாக இங்கு விண்கல் மோதி டைனோசர் இனம் அழிந்து விட்டது அனால் அங்கு அந்த கல் கொஞ்சம் மிஸ் ஆனதால் அங்கு இன்னும் டைனோசர் வாழலாம்)என்கிறார்கள்.

எது எப்படியா இன்று வரை இறுதியாக நிரூபிக்க படவில்லை என்றாலும் இணை பிரபஞ்சம் என்கிற அந்த கான்செப்ட் மிக சுவாரிஷ்யமானது


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

10. "ஏலியனை தேடும் துகள்...."


மனிதகுலம் விஞ்ஞான வளர்ச்சி அடைந்தது முதல் ஏலியன் எனும் பக்கத்துக்கு வீட்டு காரனை தேடும் படலம் நடந்து கொண்டு தான் இருக்கிறது...
நம்மை அவ்வபோது வேவு பார்கிறானோ என்ற ஐயம் எப்போதும் நமக்கு இருந்து வந்துள்ள ஒன்று தான்.
ஆனால்
அவன் இருப்பிடத்திற்கு சென்று அவனை வேவு பார்த்தால் என்ன என்ற எண்ணம் நமக்கு தோன்றும் பட்சத்தில் நமக்கு தலையாய தடையாய் இருக்கும் விஷயம் அந்த பக்கத்துக்கு வீட்டு காரன் இருக்கும் தூரம்..

பல்லாயிரம் கோடி நட்சத்திரத்தில் நமக்கு மிக பக்கத்தில் இருப்பது ஆல்பா செண்டாரி என்ற நட்சத்திரம்.. (உண்மையில் இது மூன்று நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சுற்றும் ஒரு தொகுதி)
ஒளி வேகத்தில் சென்றால் ஒரு 4.3 வருடத்தில் அடையலாம்.
அதை நம்மிடையே உள்ள அதிவேக  விண்கலத்தை கொண்டு முயற்சித்தால்..என்ன ஒரு 30,000 ஆண்டுகள் பிடிக்கும் அவ்வளவு தான்.

இன்று நான் உங்களிடம் பகிர வந்தது
இந்த நீண்ட நெடிய கால கெடுவை தகற்பதற்கான ஒரு வழிமுறையை இப்போது கண்டு பிடித்து இருக்கிறார்கள் என்பதை சொல்ல தான்.
இந்த ப்ராஜெக்டை செய்ய போகும் நபர் யார்?
வேறு யாராக இருந்து விட முடியும்.. இந்த நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞாணி ஸ்டீபன் ஹாகிங்ஸை தவிர.....

இதற்கு அவருக்கு உதவ போவது ரஷ்ய பில்லினியர் யூரி மில்லர் அவர்கள்.
இதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர்
Brake throughout star shot.
இதன் பட்ஜெட் 100 மில்லியன் டாலர்

பிளான் இது தான்......
இம்முறை பெரிய பெரிய விண்கலத்தை எல்லாம் அனுப்ப போவதில்லை.
அந்த விண்கலத்தை விண்கலம் என்று சொன்னால் நீங்கள் கொஞ்சம் சந்தேகமாக பார்ப்பீர்கள். காரணம் அதன் எடை அதிகபட்சமாக ஒரு கிராம்.
அந்த ஸ்பேஸ் ஷிப்பை நீங்கள் உங்கள் இரு விரலுக்கு இடையில் மறைத்து வைத்து விடலாம்.
பார்க்க நம்ம வீட்டு போன் மற்றும் ரேடியோவில் உள்ளே இருக்கும் pcb board போல தான் இருக்கும்.
இந்த சின்ன நானோ கிராப்ட்டில் எப்படி என்ஜின் வைப்பது எரிபொருள் நிரப்புவது?
கவலை வேண்டாம் இது தானாக பறந்து செல்ல கூடியது அல்ல.
கிட்ட தட்ட 100 ஜிகா வாட் ஆற்றல் கொண்ட லேசர் கதிர்கள் தான் இதை தூக்கி செல்ல போகிறது.
இப்படி ஒன்று இரண்டு அல்ல 100 கணக்கில் 1000 கணக்கில் அனுப்பப்பட உள்ளது.

இந்த லேசரினால் அந்த துகளை ஒளியின் வேகத்தில் 20 சதம் வேகம் என்ற அளவில் கொண்டு செல்ல முடியும்.
இந்த விண்கலம் எங்கே போய் தன் ஆராய்ச்சியை செய்ய  போகிறது என்றால் நான் முன்பு குறிப்பிட்ட ஆல்பா சென்டரியில் தான்.

இந்த வேகத்தில் இது 20 ஆண்டுகளில் அங்கு சென்று அடையும்.
அங்கிருந்து தகவல் வந்து சேர ஒரு 20 ஆண்டு எப்படி பார்த்தாலும் ஒரு தலைமுறைக்குள் இதை சாதித்து விடலாம்.
சைஸை வைத்து அதை ஏதோ சிறு துகள் என்று எண்ணி விட வேண்டாம்.
அது அங்கே சென்றதும் போட்டோ மற்றும் டேட்டாகளை பூமிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந்தது.
இதை அங்கே கொண்டு செல்வதில் ஒரே ஒரு மகா பிரச்னை உள்ளது.
அதன் பெயர் "ஸ்பேஸ் ரேடியேஷன்."

நாம் அனுப்பும் பெரிய பெரிய விண்கலங்கள் எல்லாம் கூட இதற்கு தப்புவதில்லை. அதனால் அதில் ரெடியேஷன் தாங்கும் shield அமைப்பு வைக்க பட்டு இருக்கும்.
நம்ம தக்குண்டு ஸ்பேஸ் ஷிப்பில் அதற்கெல்லாம் இடம் இல்லை என்பதால் இது கதிர்வீச்சால் பாதிக்க படாமல் இருக்க ஒரு வைழிமுறையை கண்டு பிடித்தார்கள்..
அதாவது இதில் வைக்க படும் எலெக்ட்ரானிக்ஸ் சமாச்சாரம் பாதிப்புக்கு உள்ளாக உள்ளாக அது தன்னை தானே சரி செய்து கொள்ளும் (self healing ) டெக்நாலஜியில் வடிவமைக்க பட்டுள்ளது.
(நம்ம volvarin ஸ்டைலில்)

இதற்கான லாஞ்சிங் தேதிகள் இன்னும் அறிவிக்க பட வில்லை என்றாலும் 2017 இல் ஒரு புது வித முயற்சியை மேற்கொண்டு,
எப்போவேணும் என்றாலும் ஏலியன் எனும் பக்கத்து விட்டு காரனை தேடி பயணம் செல்லலாம் அந்த சிறு துகள்.


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

  11.   "கார்பன் புதையல்..."

நீங்கள் எந்த மூலகூறால் உண்டாக்க பட்டிருக்கிறீர்களோ...அதே மூலக்கூறுகளால் தான் வைரங்கள் செய்யப்பற்றிருக்கின்றன என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா...
தயிருக்கும் மோருக்கும் ஒரே மூலம் பால் தான் என்பதை போல தான் உங்களுக்கும் வைரத்திற்கும் ஒரே மூலம் கார்பன்....

ரத்தின கற்களிலேயே வைரம் மட்டும் இவ்ளோ கெத்து பார்டியாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது.....
நீங்கள் வாழ்வில் கஷ்டப்பட்டு கடின உழைப்பால் முன்னேறிய சில பேரை பார்த்திருக்கலாம் அவர்கள் வாழ்வில் எந்த சோதனையையும் மிக அலச்சியமாக எதிர் கொள்ளுவாரகள்...எந்த பிரச்னையும் அவர் மேல் ஒரு சின்ன கீரலை கூட ஏற்படுத்த முடியாது....அதற்கு காரணம் அவர் கடந்து வந்து கடின பாதை...

அதை போல தான் வைரதின் மேல் அவ்ளோ சீக்கிரம் கீறல் ஏற்படுத்த முடியாததற்கு காரணம் அது உருவான விதம்...
ஆச்சார்ய படும் அளவு வாழ்க்கை வரலாரை கொண்டது ஒவ்வொரு வைரமும்..
மனிதனால் இந்த பூமியில் குடையப்பட்ட மிக பெரியஆழம் எவ்வளவு தெரியுமா வெறும் 12 கிலோ மீட்டர் (பூமியை தோண்டி மறுபுறம் வெளியேற வேண்டும் என்றால் நாம் மொத்தம் 22000 கிலோ மீட்டர் தோண்ட வேண்டும்) இயற்கையான மிக பெரிய பள்ளம் ...மரியானா ட்ரென்ச் வெறும் 11 கிலோமீட்டர்...ஆனால் ஒரு வைரம் உண்டாவது கொஞ்ச நஞ்ச ஆழத்தில் அல்ல கிட்ட தட்ட 150 ..200 கிலோமீட்டர் பூமியின் ஆழத்தில் அகல பாதாளத்தில் .1500 டிகிரி நரக வெப்பத்தில் ..மேலும் 50000 கிலோ கிராம் சதுர சென்டிமீட்டர் என்கிற பயங்கர அழுத்தத்தில்.

சரி  இவ்வளவு ஆழத்தில் ...இவ்வளவு வெப்பத்தில் இவ்வளவு அழுத்தத்தில் கொண்டுபோய் நிலகரியை மரதுண்டுகளை போட்டுவிட்டால் வைரமாகிவிடுமா....?
இல்லை ...இந்த சூழ்நிலையில் அது உருவாக எடுத்து கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா ?நாம் கண்டறிந்த மிக குறைந்த வயதுடைய வைரம் 3 கோடி ஆண்டு முன் உருவானது .நம்மை மலைக்க வைக்கும் வைரம் உருவாக எடுத்து கொள்ளும் காலம் சாதாரணமாய் 150 கோடி 200 கோடி ஆண்டுகள்....
இவ்வளவு கடுமையான சோதனயை தாண்டித்தான் வைரம் உருவாகிறது.

ஒரு கேள்வி எழுந்திருக்கலாம்...மனிதன் தோண்டிய மிக ஆழமான ஓட்டையே 12 கிலோ மீட்டர் தான் என்றால் 150 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள வைரம் அவனுக்கு கிடைத்தது எப்படி?

உண்மையில் வைரத்தை அதன் உருவான ஆழத்தில் சென்று எடுத்து வர உலகத்தில் எந்த கருவியாலும் முடியாது...
அது நம் கைக்கு கிடைக்க காரணம் லாவா என்கிற எரிமலை குழம்பு...
அது உள்ளே இருப்பு கொள்ளாமல் ஸ்கூல் முடிஞ்ச மாணவனை போல பீறிட்டு கொண்டு புமியின் மேற்பரப்புக்கு (நாம் தோண்டி எடுக்க கூடிய ஆழத்திற்கு) ஓடி வரும் போது கூடவே சேர்ந்து வைரத்தையும் நமக்காக (?) கொண்டுவருகிறது..

வைரம் இவ்வளவு கடினமான மகா உறுதியாக இருக்க காரணம் ஒரு பானை சைஸ் லட்டு எடுத்து அதை அமுக்கி அமுக்கி ஒரு கார்க் பால் அளவுக்கு பிடித்தால் எப்படி இருக்கும் அப்படி பெரிய பொருள் அழுத்தத்தில் சுருங்கி உருவாக்க பட்டது தான் அதன் உறுதி தன்மைக்கு காரனம்..மனிதன் கண்டு பிடித்ததிலேயே மிகவும் கடினமான பொருள் தான் வைரம்..தூரத்தை மீட்டர் எடையை கிலோகிராம் ..ஆற்றலை ஜுவ்ள் கொண்டு அலப்பதை போல பொருளின் கடினதன்மையை குறிப்பது தான் மோல் என் வைரத்தின் மோல் என்னானது 10.
அமெரிக்காவில் முதலில் வைரத்தை விளம்பர படுத்திய போது அதன் அழியா தன்மை தான் மக்களை கவர்ந்தது..
Diamonds are for ever என்ற விளம்பர வாசகம் எவ்ளோ பேமஸ் என்றால் பின்னாளில் அந்த பெயரில்.   ஜேம்ஸ்பாண்ட படம் கூட வெளியாகியது....

வைரத்தில் நீலம் மஞ்சள் பச்சை வெள்ளை ஏன் கருப்பு கூட உண்டு .வைரத்தை நிறம் உண்டாவது வைரம் உண்டாகும் போது கூட மாட இருந்தது என்ன வாயு என்பதை பொறுத்தது....கற்களில் வைரம் ஒரு அடங்கா ஜென்மம் ஆங்கிலத்தில் இதை adamantad lastar என்று அழைக்க காரணம் இது தனக்குள் வரும் ஒளியை கண்ணாடி போல் ஊடுருவ விடுவது இல்லை ...85 சதம் ஒளியை தனக்குள்ளவே பிரதி பலித்து பிரதிபலித்து....வெளியேவே அனுப்பி விடுகிறது....நாம் காணும் அந்த ஜோலி ஜுலிப்புக்கு காரணம் இது தான்...
தங்கத்தில் தரத்தை பயன் படுத்த காரட் என்ற சொல் உபயோகிக்க படுவதை போல் வைரத்தில் காரட் என்ற சொல் தரத்தை குறிப்பது அல்ல அது எடையை குறிப்பது....
ஒரு காரட் என்றால் 20 மில்லிகிராம்...
இதை நூறாக பிரித்து ஒரு சென்ட் என்பார்கள்....

வைரம் எவ்வளவு மதிப்பு மிக்கது தெரியுமா...ஒரு 20 மில்லி வெறும் 20 மில்லி வைரத்தை வெட்டியெடுக்க நாம் 350 டன் அதாவது கிட்டத்தட்ட 35/40 லாரி மண்ணை தோண்ட வேண்டும் என்றால் வைரத்தின் கெத்து என்ன என்பதை பார்த்து கொள்ளுங்கள்..
கடைசியாக....

இந்த வைரம் நிஜமா அல்லது போலியா என்பதை நீங்களே கண்டு கொள்ள சில எளிய பரிசோதனையை தருகிறேன்..
1) கீறல் சோதனை....அப்படினா ஒன்னும் இல்ல கையில் உள்ள வைரத்தை வைத்து கண்ணாடியில் அழுத்தி ஒரு கொடு போடுங்க தெரிஞ்சிடும்
2)ஒரு நியூஸ் பேப்பர் மேலே வைரத்தை வைங்க இப்ப பூத கண்ணாடியை வைத்து வைரத்தை தாண்டி உங்களால் எழுத்துக்களை படிக்க முடிந்தால்....அந்த வைரத்தை தூக்கி எறிந்து விடலாம் ...உண்மையான வைரம் ஒளியை கடத்தாமால் 85 சதத்தை திருப்பி அனுப்பிவிடும் என்று சொன்னேன்...
3) குளிரில் கண்ணாடி முன் நின்று ஹா ஹா என ஊதுவோமே அப்படி ஊதவேண்டும்...உங்கள் மூச்சு உண்டுபண்ணும் மேக மூட்டம் 3 அல்லது 4 வினாடிக்கு மேல் நீடித்தால் அது போலி....சுத்த வைரம் தன்னை உடனே சுத்தம் செய்து கொள்ளும்...


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

12. "கோல்டன் ரேஷியோ"

உங்களுக்கு golden ratio என்பதை பற்றி தெரியுமா?
Fibonacci number...??
இவை நம்மை சுற்றி இயற்கையில் ..இயற்கையாகவே அமைந்து உள்ள ஒரு அதிசய கணிதம்..
இவைகள் என்னவென்பதை பற்றி இன்று பார்ப்போம்..

உங்களுக்கு "pi "என்பதை பற்றி தெரிந்திருக்கும்..அதாவது.. அந்த 3.14....
ஆனால் "phi" பற்றி தெரியுமா?
இது கிரேக்க எழுத்துக்களில் 21 வது எழுத்து. கணிதத்தில் இதுதான் " கோல்டன் ரேஷியோ" காண சிம்பல்.

ஒரு பெரிய கோட்டை இரண்டாக பிரிக்கிறீர்கள்.. சரிபாதியாக அல்ல ஒன்னு பெரிது ஒன்னு சின்னதாக... இப்போது அந்த பெரிய கோட்டை சின்ன கோட்டை கொண்டு வகுத்தால் வரும் என் இருக்கிறதே.. அது அந்த கோட்டின் மொத்த நீளத்தை பெரிய கோடை கொண்டு வகுத்தால் வரும் எண்ணுக்கு சமமாக இருப்பதை ...அந்த விகிதாசாரதைதான் Golden ratio  என்கிறார்கள்.
கோல்டன் ரேஸ்யோவை  குறிக்க phi யை பயன் படுத்த காரணம்.. முன்பு சொன்ன அந்த விகிதாச்சாரம் phi இன் மதிப்பாகிய 1.6 க்கு நெருக்கமாக இருப்பது தான்.

இந்த phi ஆர்வலர்கள் ஆய்வாளர்கள்
அந்த காலத்தில் கட்டபட்ட.. மர்மம் நிறைந்த கட்டிடமான  பிரமிட்.. இந்த கோல்டன் ரேஷியோ படி கட்ட பட்டுள்ளதை கவனித்தார்கள்.  க்ரேட் பிரமிடு கிசா இருக்கிறதே அதன் ஓவொரு பக்கத்திலும் அதன் நீளம் 786 அடி. மேலும் அதன் உயரம் 481 அடி.. அதாவது  இவை இரண்டுக்கும் உள்ள விகிதம் 1.57  .அதாவது phi யின் மதிப்புக்கு மிக நெருக்கமாய்.
இப்படி பிரமிடுகளில் மட்டும் அல்லாமல் பழைய கட்டிடங்கள் பல வற்றில் இந்த கோல்டன் ரேஸ்யோ பயன்படுத்த பட்டிருப்பதை கவனிதார்கள்.

பிபோனாச்சி நம்பர் என்பதை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள்.

1200 களில் லியனார்டோ பிபோனச்சி
என்ற கனிதவியலாளரால் இது கண்டுபிடிக்க பட்டது.
அதாவது 0,1,1,2,3,5,8,13,21,34, இப்படி எழுதுவது தான் பிபோநாச்சி நம்பர்.. இதில் உள்ள சிறப்பு என்ன என்று கவனித்தால் எந்த ஒரு நம்பரும் அதற்கு முந்தய இரு நம்பர்களின் கூட்டு தொகையாக இருக்கும்.
 இந்த எண்களின் மாறும் விகிதம் தான் கோல்டன் ரேஷியோ.... இது phi மதிப்பிற்கு நெருக்கமாக உள்ளது.. அதிலும் எண்கள் பெரிதாக பெரிதாக phi மதிப்பாகிய 1.618 ஐ அதிகம் நெருங்குகிறது.

உதாரணமாக 3 கும்5 கும் இடையிலான விகிதம் 1.666 ஆனால் 13 க்கும் 21 க்கும் இடையிலான விகிதம் 1.625... இன்னும் பெரிய என்னானால்... 144 கும் 233 கும் பார்த்தால் 1.618 இப்படி....

லியர்னடோ டாவின்ஸி தான் வரைந்த ஓவியங்களில் இந்த கோல்டன் ரேஷியோ சமாச்சாரத்தை பயன்படுத்தி இருக்கிறார்.
அவரது லாஸ்ட் சப்பர் ஓவியத்தில் இயேசு தனது சீடர்களுடன் உணவு உண்ணும் காட்சியில் உள்ள மேஜை மற்றும் சில பொருட்களில் இந்த விகிதாச்சாரத்தை பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது. அவரது மோனோலிசா ஓவியம் கூட இதை பயன் படுத்தி வரைய பட்டது தான்.

இதை மனிதன் பயன்படுத்தி இருக்கிறான் என்பதை இவ்வளவு நேரம் நான் சொன்னது இல்லை ஆச்சர்யம்..
இனி சொல்ல போவது தான் ஆச்சர்யம்..

 இயற்கை தனது படைப்பில் இதை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
ஒரு சூரிய காந்தி பூவில் மையத்தில் சுருள் சுருளாக  இருக்கிறதே அந்த டிசைன் அதை உற்று கவனித்தால் கோல்டன் ரேஷ்யோ படி அமைந்துள்ளதை கவனிக்கலாம் .. ஒரு மரத்தில் கிளைகள் அதில் இலைகள் எப்படி எந்த எண்ணிக்கையில் படி படியாக வளர்கிறது என்று பார்த்தால் இந்த விகிதம் தான்.
தாவரத்தில் மட்டும் அல்ல ஒரு நத்தையின் ஓடு இந்த விகித அடிப்படையில் தான் சுருளாக இருக்கிறது.. விலங்குகளின் உடலமைப்பை கவனித்தால் இந்த விகிதம் இருக்கிறது.
அவ்வளவு ஏன் மனிதனின் கைகள் மற்றும் விரல்கள் இந்த விகிதத்தில் தான் அமைந்துள்ளது என்றால் பார்த்து கொள்ளலாம்.

இப்போது இனொன்று சொல்கிறேன் இயற்கை உயிரினங்களில் மட்டும் இல்லை .. பல இயற்கை ஆற்றல்களில் ...படைப்புகளில் இதை வெளிப்படுத்துகிறது.. என்பது இன்னும் ஆச்சரியமானது.
சூறாவளி ஏற்படும் போது அதன் சுழல் கவனித்தால் இந்த விகிதத்தை பார்க்கலாம்..
கடல் அலையை கவனித்தால் இந்த கோல்டன் ரேஷியோ சமாச்சாரத்தை பார்க்கலாம்.
 இன்னும் எங்கெங்கே இயற்கை இதை பயன் படுத்துகிறது என்பதை ஆராய மனிதன் சிரிதினும் சிறிதான DNA சுருளை ஆராய்ந்து பார்க்க அந்த சுருளே இந்த விகிதத்தில் தான்  அமைந்துள்ளது என்பதை பார்த்து அதிசையித்தான்.. பிறகு பெரிதினும் பெரிதான கேலக்சிகளை அதன் சுருள் அமைப்பை ஆராய்ந்த மனிதன் இந்த பிரபஞ்சமே அந்த கோல்டன் ரேஷியோ வை பயன்படுத்தி அமைந்துள்ளதை கண்டு மேலும் அதிசயித்து போனான்..

இந்த பிரபஞ்சம் அறிவியலால் ஆனது என்று எப்போதும் சொல்லி வந்துள்ளோம்..ஆனால் அது நாணயத்தின் ஒரு பக்கம் தான் அதன் அடுத்த பக்கத்தில் பிரபஞ்சம் முழுக்க.. முழுக்க கனிததால் ஆனது என்ற அதிசயத்தை வியந்து நோக்கி இன்றைய கட்டுரையை நிறைவு செய்கிறேன்.


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

13. "சுற்றுவட்டத்தில் ஒரு செயற்கைகோள்."


. செயற்கை கோள் எப்படி orbit இல் நிலை நிறுத்துகிறார்கள் என்பதை இன்று எளிமையான முறையில் பார்க்கலாம்.

அதாவது ராக்கெட் மேலே அனுப்பும் நடைமுறை பற்றியோ ....அது அடுக்கடுக்காக கழண்டு கொண்டு கடைசியாக செயற்கைக்கோளை விண்வெளியில் தள்ளி விடும் செயல்பாடு பற்றியோ ...நான் சொல்ல போவது இல்லை..
அதை எப்படி சுற்று வட்ட பாதை orbit இல் நிலை நிறுத்துகிறார்கள்... அது தொடர்ந்து பூமியை சுற்றுவது எப்படி என்பதை பற்றி தான் நான் சொல்ல போகிறேன்.

செயற்கைகோள் பூமியை சுற்றிவருவதை புரிந்து கொள்ளும் முன் நிலா ஏன் எதற்கு எப்படி பூமியை சுற்றிவருகிறது என்பதை பார்ப்போம் காரணம் நிலவும் செயற்கை கோளும் ஒரே அறிவியல் காரணத்தால் தான் பூமியை சுற்றி வருகின்றன.

தன் தலை மேல் விழுந்த ஆப்பிளை பார்த்து பூமி ஈர்ப்புவிசையால் இது கீழே விழுந்துள்ளது என்று சொன்ன நியூட்டன், நிலவை பார்த்து ஒரு கேள்வி கேட்டார் .. "அப்போ ஈர்ப்பு விசையால் நிலாவும் என் தலையில் விழுமா? "

அதற்கு அவர் கொடுத்த விடை... ஏற்கனவே நிலா பூமியை நோக்கி தொடர்ச்சியாக விழுந்து கொண்டுதான் உள்ளது..
அனால் அது நேர் கோட்டில் ஓட பார்க்க அதை பூமி தன்னை நோக்கி இழுத்து பிடிக்க அதனால் நிலா சுற்றுவட்டத்தில் சுழல்வதால் மேலும் சுழலும் வேகம் அதிகமாக இருப்பதால் பூமியில் மோதாமல் ஒவ்வொரு முறையும் தவிர்த்து கொண்டே போகிறது என்றார். (அவர் சொன்னதை புரியும் படி விளக்குகிறேன் பொறுங்கள்).

நியூட்டன் இதை ஈர்ப்புவிசைக்கொண்டு விளக்கி இருந்தார் ஆனால் அதற்கு பின் வந்த ஐன்ஸ்டைன் ஈர்ப்புவிசைக்கு வேறு புது அர்த்தத்தை கற்பித்தார் அதாவது பொருளின் நிறையை பொறுத்து அதைசுற்றி உள்ள வெளி வளைந்திருக்கிறது . அந்த வளைவிற்குள் வரும் கோள்கள் அந்த வளைவில் தான் ...வளைவால் தான் சுற்றுகின்றன என்றார்.

 அதாவது ஒரு பெட்ஷீட்டை 4 பேர் நாலு முனையில் விரித்து பிடித்து கொள்ளுங்கள்.. இதுதான் வானம் அல்லது வெளி..இப்போது அதற்கு நடுவே ஒரு இரும்பு குண்டை வைத்தால் என்னாகும் இரும்பு குண்டின் நிறையால் பெட்ஷீட் கீழ் நோக்கி வளையும் அல்லவா.. அப்படிதான் வானம் வலைந்துள்ளது.. இப்போது அந்த வளைந்த பெட்ஷீட்டில் குண்டை நோக்கி ஒரு எலுமிச்சையை உருட்டி விட்டால் அது அந்த குண்டை நோக்கி வட்ட பாதையில் வளைந்து வளைந்து சுற்றி வருகிறதல்லவா அப்படிதான் நிலாவும் பூமியை சுற்றிவருகிறது.
 ஆனால் எலுமிச்சை கொஞ்ச நேரம் கழித்து குண்டில் சென்று விழுந்து விடுமே.. ஆனால் நிலா ஏன் விழுவது இல்லை? இப்போது அதே எலுமிசையை எடுத்து கொள்ளுங்கள்..சுற்றி சுற்றி அது மையத்தை நெருங்கிகொன்டிருக்கும் போது இப்போது ஏதாவது செய்து எழுமிச்சையின் வேகத்தை அதிக படுத்துவதாக வைத்து கொள்ளுங்கள் என்ன நடக்கும் ?
எலுமிச்சை ஒரு குறிப்பிட்ட வட்ட பாதையில் தொடர்ந்து சுற்றி சுற்றி வரும். மையத்தில் சென்று விழாது.. காரணம் எழுமிச்சையின் வேகம் அதிகமாக இருப்பதால் அது நேர் கோட்டில் ஓட பார்க்கிறது ஆனால் குண்டு அதை தன்னை நோக்கி ஈர்க்கிறது .
மிக சரியாக இதே போல தான் நிலாவும் பூமியை சுற்றி சுற்றி வருகிறது...

இப்போது செயற்கைகோளுக்கு வருவோம் ... அதை விண்வெளியில் பூமியின் ஈர்ப்புவிசைக்குட்பட்ட ஒரு இடத்தில பக்க வாட்டில் நேர் கோட்டில் செல்லும்மாறு ஒரு ஆரம்ப விசையை கொடுத்து விட்டால் போதும்... அது நேர்கோட்டில் ஓட பார்க்க அதை பூமி இழுத்து பிடிக்க ...மேலே சொன்ன எலுமிச்சை கதையை போல  சாட்லைட் நம்மை சுற்றி சுற்றி வரும்.

இப்போ ஒரு கேள்வி எழலாம்.. ஆரம்ப விசை கொடுத்தோம் சரி... தொடர்ந்து எப்படி சுற்றுகிறது?
இப்போது தான் நியூட்டனின் முதல் விதி உதவிக்கு வருகிறது.. அதாவது" ஒரு இயங்கும் பொருளோ அல்லது அமைதிநிலையில் உள்ள பொருளோ புற விசை ஒன்று செயல்படாத வரை அது தன் நிலையை மாற்றி கொள்ளாது..'' எனவே ஆரம்ப விசை கொடுத்தால் கொடுத்தது தான்.
நிலவுக்கு வேகமாக சுற்ற விசை முதல் முதலில் பூமியில் இருந்து வெடித்து சிதறிய போது கிடைத்தது தான்.. நியூட்டன் விதி படி அது மாறாமல் விசை தொடர்கிறது..
அதீத ஈர்ப்புவிசை கொண்ட அல்லது அதீத நிறைகொண்ட பொருள் ஏதும் குறுக்கிடும் வரை இந்த விசை தொடரும் என்ற விளக்கத்தோடு இன்றைய கட்டுரையை நிறைவு செய்கிறேன்.


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

14. "செர்னோபில் பயங்கரம்"

(உலகின் மிக கொடூரமான விபத்து)

''அறிவியல் ''-
இது சரியாக கையாண்டால் அள்ளி தரும் அரசன் .
 தவறாக கையாண்டால் அழித்தொழிக்கும் அரக்கன்.
அறிவியல் ஒரு சக்தி இது நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல .இதை நல்லது கெட்டதாக நிர்ணயிப்பது இதை கையாளுபவன் கையில் உள்ளது.
அப்படி மிக தவறாக அஜாக்ரதையாக கையாண்டு மிக பெரிய அடியை மனிதன் வாங்கி கட்டி கொண்ட ஒரு சம்பவம் தான் செர்னோபில் அணு உலை விபத்து.

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று ரஷ்யாவின் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது. உலகை திடுக்கிட செய்த மாபெரும் அழிவை ஏற்படுத்திய அந்த  விபத்து ...ரஷ்ய கம்யூனிச ஆட்சியையே வீழ்த்திய ஒன்று.
விபத்தின் கோர தாண்டவத்தை நேரில் கண்டவர்களை கதி கலங்க செய்த கொடூர விபத்து அது.
உலக அளவில் அணுவெளியீட்டு நிகழ்வில் 7 வது நிலையை அடைந்த ஒரே விபத்து அது.
உலக வரலாற்றில் இது வரை ஏற்பட்டுள்ள மாபெரும் விபத்துகளை டாப் டென் பட்டியட்டிலிட்டால்... செர்னோபில் க்கு அதில் முக்கிய இடம் உள்ளது.
இன்று வரை தனது பாதிப்புகளை தொடர்ந்து கொண்டிருக்கும் சக்திவாய்ந்த விபத்து அது.

அணு கதிர் வீச்சின் கோர தாண்டவத்தை மக்களுக்கு ரத்தமும் சதையுமாக காட்டிய அந்த விபத்து ஏற்பட்டது முழுக்க முழுக்க மனித அஜாக்ரதையால் தான்.(குளிர்விக்கும் சாதனம் சரியாக வேலை செய்ய வில்லை என்று கொஞ்ச நாள் சப்பை கட்டு கட்டியது அரசு)
 'நியக்ளியர் ரியாக்டர் ' எனும் பெரும் பூதத்தின்  சக்தியை குறைத்து மதிப்பிட்டு விட்டது தான் அங்கே நடந்த முதன்மையான தவறு.
அன்று இரவு அங்கே நடந்தது என்ன ?ஏன் அந்த அணு உலை வெடித்தது?
வெடித்த பின் அதன் விளைவு என்னவாக இருந்தது?
வாருங்கள் அன்றைக்கு இரவை கொஞ்சம் நெருக்கமாக சென்று பார்க்கலாம்.

செர்னோபில் இன் அணுஉலைகள் இருந்த இடம் அது.
மொத்தம் 4 அணுஉலைகள் இருந்தன ஒவொன்றும் 1000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்டவை . அதில் அந்த குறியிட்ட 4 ஆவது அணுஉலை மிக சமீபமாக அமைக்க பட்டு இருந்தது. அணு உலையில் பணியாற்றி கொண்டிருந்த பணியாளர்களுக்கு அந்த நிமிடம் வரை எப்பவும் போல அது ஒரு சாதாரண இரவு ஷிபிட்.

உலையில் இருந்து கொஞ்சம் தள்ளி அமைந்திருந்த கண்ட்ரோல் ரூம் இல் அந்த மூவர் இப்போதைக்கு குறிப்பிட தகுந்தவர்கள். அதில் முதலாமவர் வயதான ஷிபிட் ஃபோர்மேன் அவர்தான் அங்கு தலைமை . அடுத்தவர்
சீனியர் கண்ட்ரோல் இன்ஜினீர் . ரியாக்டர் ஏற்படுத்தும் அபரிமிதமான சக்தியை கட்டுப்படுத்தும் வல்லுநர். மூன்றாமவர் டெபுடி சீப் இன்ஜினீர்.
மூவருமே இன்னும் சில நிமிடத்தில் ஒரு வரலாற்று பிழையை செய்ய போகிறார்கள்.

கொஞ்சம் அதிருப்தியில் இருந்த டெபுடி இன்ஜினீரை பார்த்தார்  கண்ட்ரோல் இன்ஜினீர் ,

"என்ன செய்வது ..சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறாரே" என்றார் கடுப்புடன்.

"இன்னோரு முறை சொல்லி பார்கலாம் எதற்கும்"

அவர்கள் பேசி கொண்டு மேலும் ஒரு முறை போர்மேன் ஐ நெருங்கி மீண்டும் அதை சொன்னார்கள்

"சார் மன்னிக்கணும் குறைந்தது 600 மெகா வாட் சக்தியாவது இருக்கணும் நாம பரிசோதனை பன்றதுக்கு ஆனா இப்போ வெறும் 200 மெகா வாட் பவர்ல இருக்கும் போது செக்கிங் .என்பது சரியான முறை அல்லவே"

அவர்கள் அன்றிரவு செய்து கொண்டிருந்தது என்ன தெரியுமா? பரிசோதனை(safety test ).அதாவது அவசர காலத்தில் பவர் இழப்பின்  போது டீசல் ஜெனரேட்டர்கள் ஆன் ஆகி கூலிங் பம்புகளை  இயக்கும் வரை டர்பைன் ஜெனரேட்டர் அந்த கூலிங் பம்புகளை இயக்கும் அளவு சக்தி கொண்டவையா என்பதை தான் அவர்கள் பரிசோதனை செய்து பார்த்து கொண்டிருந்தார்கள்.
இந்த சோதனைக்கு ரியாக்டர் தனது பவர் இல் 25 சதமாவது இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆய்வின் போது தனது திறனில் 1 சததிற்கும் கீழே அது சென்று இருந்தது.

அந்த தலைமை அதிகாரி நிமிர்ந்து பார்த்து சொன்னார்.

"பாரா மீட்டர்கள் பற்றி எனக்கு சொல்லி தாராதீர்கள் தலைமை அதிகாரியாக பாரா மீட்டர் என்ன என்பதையே நான் மாற்ற நிர்ணயிக்க முடியும்"

அதன் பிறகு அவர்கள் தொடர்ந்து அந்த உலையை சூடேற்றி வேடிக்கை பார்த்தார்கள் . உள்ளே குளிர்விக்கும் தண்ணீர் சப்ளை குறைந்தது பற்றியும் கவலை கொள்ள வில்லை. தண்ணீரை கொதிக்க வைத்து ஆவியாக்க வெப்பத்தை உண்டு பண்ணும் அந்த ரியாக்டர் தனக்குள் அளப்பரிய வெப்பதையும் அழுத்தத்தையும் சேர்த்து கொண்டே வந்தது.

பூதத்தை அடக்கி பார்க்க ஆசை பட்டவர்கள் மந்திர கோலையும் தூர எறிந்தது அவர்கள் செய்த மிக பெரிய தவறு. இங்கே மந்திர கோல் என்று நான் சொன்னது கண்ட்ரோல் ராடுகளை. இவைகள் தான் அணு உலையின் ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் ரெண்டுமே. அந்த கண்ட்ரோல் ராடு களையும் அவர்கள் உள்ளே செலுத்தாமல் வெளியே எடுத்தது விட்டார்கள்.
கண்ட்ரோல் ராட் என்றால் என்ன ? ரியாக்டரின் தத்துவம் என்ன ? டர்பைன் ஜெனரேட்டர்??

பொறுங்கள்...
இப்போது மணி 1.18 am அணுஉலை வெடிக்க இன்னும் 5 நிமிடம் உள்ளது. வாருங்கள் அதற்குள் ஒரு பொதுவான  அணுஉலை என்றால் என்ன அதன் இயங்கு தத்துவம் என்ன என்பதை சுருக்கமாக பார்த்து விட்டு மீண்டும் செர்னோபில் வந்து விடலாம்.

ஒரு பவர் பிளான்ட் இல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அமைப்பின் பெயர் தான் ஜெனரேட்டர்.
மின் உற்பத்தி நடக்க ஜெனரேட்டர் சுழல வேண்டும்.
அந்த ஜெனரேட்டரை சுழற்ற தான் அதனுடன் டர்பைன் என்ற அமைப்பு இணைக்க பட்டு இருக்கும்.
அந்த டர்பைன் எப்படி சுற்றும்?
அதில் வேகமாக நீராவியை பீச்சி அடித்தால்  அந்த விசையில் தாக்க பட்டு அது சுற்றும்.
அந்த நீராவி எப்படி உற்பத்தி ஆகும் ?
 நீரை சூடாக்கினால் ஆகும் . அந்த நீரை சூடாக்க தான் அந்த நியூக்ளியர் ரியாக்டர் .
அதாவது ரியாக்டரில் உண்டாகும் வெப்பத்தால் நீராவி உண்டாகும் அந்த நீராவியை டர்பைனில் பீய்ச்சி டர்பைனை வேகமாக சுழற்றினால் அதனுடன் இணைக்க பட்ட ஜெனரேட்டர் சுழன்று மின் உற்பத்தி நடக்கும்.

ஒரு ரியாக்டர் ,ஒரு எக்ஸ்சேஞ்ர் ஒரு டர்பைன் , ஒரு ஜெனரேட்டர் கொண்ட மொத்த அமைப்பு தான் ஒரு பவர் பிளாண்ட்.

இதில் அந்த நியூக்ளியர் ரியாக்டர் எப்படி அவ்வளவு வெப்பத்தை தருகிறது? அணு கரு பிளவு மூலமாக .
அணு கரு பிளவென்றால் என்ன ? அது எப்படி நடக்கிறது ?
சொல்கிறேன்..

ஒரு கனமான தனிமமாகிய யுரேனியம் 235 ஐ எடுத்து கொண்டு அதை நியூட்ரான் கொண்டு தாக்கினால் அது யுரேனியம் 236 ஆக மாறுகிறது. இந்த U236 இது ஒரு நிலைத்தன்மை அற்ற யூரேனியத்தின் ஐசோடோப். எனவே நீண்ட நேரம் நிலைத்து இருக்காமல் பேரியம் மற்றும் க்ரிப்ட்டான் அணுவாக மாறுகிறது .அப்படி மாறும் போது எக்க சக்க ஆற்றலை வெளியிடுகிறது. கூடவே 3 பிரீ நியூட்ரான்களையும் வெளியிடுகிறது.

அந்த மூன்று நியுட்ரான்ங்கள் மேலும் வேறு U 235 அணுவுடன் மோதி முன்பு போலவே நிறைய ஆற்றலும் 3 ஃபிரி நியுட்ரானையும் உண்டு பண்ணுகிறது.
அந்த நியூட்ரான்ங்கள் மீண்டும்.............
மேலே இரண்டு வரிகள் டிட்டோ .

இப்படி தொடர்ந்து நடக்கும் நிகழ்விற்கு பெயர்தான் செயின் ரியாகஷன். இதை கண்ட்ரோல் பண்ண தான் கண்ட்ரோல் ராடு. இது கேடியம் மற்றும் போரான் பொருட்களால் செய்ய பட்டு இருக்கும் .இது ரியாக்டரில் உள்செலுத்த படும் போது நியுட்ரானை உறிஞ்சி செயின் ரியாக்சனை கட்டுக்குள் கொண்டு வரும்..
இப்படி ரியாக்டரில் உண்டான வெப்பம் எக்ஸ்சேஞ்சரில் நீருக்கு கடத்த பட்டு டர்பைன் ஜெனரேட்டர் சுழற்ற பட்டு மின் உற்பத்தி நடக்கிறது.

போதும்...

5 நிமிடம் முடிந்து விட்டது இப்போ மீண்டும் செர்னோபில்......

செர்னோபிலில்.... பரிசோதனையில்.....
டர்பைன் ஜெனரேட்டர் திறனை பரிசோதிக்கும் நேரத்தில் ரியாக்டரின் செயல்பாட்டில் குறுக்கீடு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு கருவிகளை வேண்டும் என்றே அணைத்து வைத்திருந்தார்கள். சோதனை தொடங்கிய போது 25 சதம் திறன் இருக்க வேண்டிய ரியாக்டர் மிக குறைந்த திறன் உடன் இருந்தது .சோதனை தொடங்கிய 30 செகண்டில் எதிர் பாராமல் ஏற்பட்ட பவர் சர்ஜ் ஒன்றால் ரியாக்டரின் செயின் ரியாக்சனை கட்டுப்படுத்தும் கருவிகள் செயலிழந்தன.

அங்கே சோதனையே.. அவசர காலத்தில் ஓடி கூலிங் பம்புகளை இயக்கும் தானியங்கி ஜெனரேட்டர் 30 வினாடியில் இயங்கி பின் 40..45 வினாடிகளில் முழு வேகம் பிடித்து பம்புகளை இயக்குகிறதே அந்த இடைப்பட்ட நேர இடைவெளியை டர்பைனின் ஜெனரேட்டர்கள் (பவர் இல்லாத போது ஏற்கனவே செயல் பட்ட பழைய விசையை கொண்டு) நிரப்ப முடியுமா என்று தான். ஏற்கனவே இந்த சோதனையை 2 முறை செய்து அவர்கள் தோல்வியை தழுவி இருந்தார்கள். இம்முறை அணுஉலையை புதிய முறையில் மேம்படுத்தி இருந்தார்கள் என்பதால் மீண்டும் இதை சோதித்தார்கள்.

ஆனால்...

இம்முறை நடந்தது தான் கடந்ததை விட மிக மோசம். ரியாக்டர் சுத்தமாக கட்டுப்பாடு இழந்து தனது செயின் ரியாக்சனை தொடர்ந்து கொண்டே இருந்தது. விளைவாக அதன் core வெப்பமயமாகி அதன் எரி பொருளை தாங்கி நிற்கும் குழாய்களை சப்தமாக வெடித்தது. உள்ளே இருந்த எரி பொருட்கள் தன்னீருடன் இனைந்து வெப்பத்தால் பெரும் நீராவியாக மாறியது.

அதிகாலை 1.23 ..

அனுஉலை தனது அதீத வெப்பம் மற்றும் அழுத்ததை தாங்க முடியாமல்
முதல் வெடிப்பை நிகழ்த்தியது. சில வினாடிகள் கழித்து இன்னும் பிரம்மாண்டமாய் இரண்டாவது வெடிப்பும் நடந்தது. அணு உலையின் 1000 டன் மேற் கூரை பெயர்த்து கொண்டு போனது. 2000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் பாதிக்க பட்டு ரியாக்டரை போர்த்தி இருந்த க்ராபைட் லேயர் தீ பற்றி எரிய தொடங்கியது.(அந்த தீ பின்னால் 9 நாட்கள் தொடர்ந்து எரிந்தது )

மந்திர பிடிக்குள் சிக்கி இருந்த பிசாசு தப்பி போவதை போல இவ்வளவு நாளாக கடும் பாதுகாப்பில் வைக்க பட்டு இருந்த 20 வகையான கதிரியக்க பொருட்கள் காற்றில் சுதந்திரமாக கரைந்து சென்று பரவியது. சுற்று வட்டாரத்தில் காற்றில் மண்ணில் நீரில் ஆசை தீர கலந்தது.

கண்ட்ரோல் ரூமில் இருந்தவர்கள் உலை பகுதிக்கு ஓடி வந்து பார்த்த போது அங்கே அந்த பயங்கரத்தை பார்த்தார்கள் .தன்னுடன் பணியாற்றிய பணியாளர்கள் இப்போது தனக்கே அடையாளம் தெரியாமல் குரலை வைத்து தான்  அடையாளம் காணும் அளவு முகங்கள் வெப்பத்தில் வெந்து கருகி போய் துடித்து கொண்டு  இருந்தார்கள். அணு உலையின் கூரை பிய்தெரிய  பட்டு இரவு வானின் நட்சத்திரங்கள் தெரிந்தது.

விபத்து நடந்த போது ஏற்பட்ட வெடிப்பில் 30 பேர் இறந்தார்கள் . ஆனா இது எல்லாம் சுனாமி க்கு முன் கடல் உள்வாங்கும் போது சில சில்லறை மீன்கள் சாவதற்கு சமம் .
நிஜ மான சுனாமி பாதிப்பு அது கரையில் வந்து அடிக்கும் போது தான் அது போல ..கதிர்வீச்சின் பாதிப்பு அது பரவும் போது தான் .
அதன் விபரீத விளைவுகள் தெரிய வருவது அப்போது தான்.

விபத்து நடந்த சில மணி நேரத்தில் இதை சாதாரண தீ விபத்து போல நினைத்து தீ அணைப்பு படை ஒன்று ஹெலிகாப்டரில் வந்து நீரை பீச்சியது.
அப்போது....
நீர் அனைபதற்கு பதிலாக ரியாக்ட் ஆகி நிலைமை இன்னும் மோசமானதை கண்டு தீ அணைப்பு படை மிரண்டது. இது சாதாரண தீ விபத்து அல்ல என்பதை புரிந்து கொண்டது.

 ஆனால் புரிந்து கொண்ட  போது காலம் கடந்து விட்டிருந்தது. அணைக்க வந்த அந்த முதல் குழு அங்கேயே இறக்க நேரிட்டது.
 அவர்கள் ஊற்றிய தண்ணீரில் கதிரியக்கம் கலந்து அங்கிருந்த டினிப்பர் நதிகளில் கலந்து சோவியத் நாடுகளை தாண்டி ஐரோப்பாவில் உள்ள சுவீடன் வரை பரவி இன்னும் நிலைமையை மோசமாக்கியது.

முதலில் நடந்தது பெரிய விபத்து அல்ல அது ஒரு சாதாரண விபத்து தான் என்பதை போல அரசாங்கம் நடந்து கொண்டது ஆனால் ஏப்ரல் 27-ல் அதாவது விபத்து நடந்த அடுத்த நாள் பிரிப்யாட் நகரில் வசித்த 50,000-க்கும் மேற்பட்ட மக்களை அரசு அப்புற படுத்தியது. எனினும், விபத்துபற்றி முழுமையாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வில்லை. அதற்குள் அவர்கள் உடலில் கதிரியக்கம் போதிய அளவு தாக்கி இருந்தது.

ஏப்ரல் 28 அன்று சுவீடனை சார்ந்த கண்காணிப்பு அமைப்புகள் இதை கவனித்து விட்டு கேள்விகள் எழுப்பின .
இதற்கு மேலும் முழு பூசனியை மறைக்க முடியாது என்பதை உணர்ந்த அரசு விபத்து நடந்ததை ஒத்து கொண்டது.

இனி பாதிப்படைந்த பகுதிகளில் உள்ள மக்களை வெளியேறுவதை தவிர செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்த அரசு விபத்து நடந்த 36 மணி நேரத்தில் இந்த வெளியேற்றலை தொடங்கியது . விபத்து பகுதியில் இருந்து 30 கி.மி சுற்று வட்டாரத்தில் ஒரு மாதம் கழித்து மொத்தம் 1 லட்சத்தி 16 ஆயிரம் பேரை வெளியேற்றி இருந்தது அரசு. பின்னாளில் இந்த விபத்தால் மொத்தமாக இடப்பெயர்ச்சி செய்ய பட்ட மக்களின் எண்ணிக்கை 135000 பேர் என்று கணக்கெடுப்பு தெரிவித்தது.

இடிந்த உலையை உடனே சமாதி கட்டி மூடினார்கள் அதோடு நில்லாமல் அதை சுற்றி கான்கரீட் வளைவு குடோன் ஒன்று (உள்ளே அமெரிக்க சுதந்திர தேவி சிலை வைக்கும் அளவு பெரிய குடோன் போன்ற அமைப்பு) வைத்து மூடினார்கள் . அரசாங்க சொத்தில் மிக பெரிய பங்கு இந்த விபத்தை சரி செய்யவே செலவாகி போனது. சொல்ல போனால் விபத்திற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் உலகத்தாரால் பாராட்ட பட்டது.
இருந்தும் நியூக்ளியர் பூதத்தின் பிடியில் மக்கள் சிக்குவதை யாராலும் தடுக்க முடிய வில்லை.
அதன் விளைவுகள் வெளிப்பட்ட போது கதிர்வீச்சு ருத்ர தாண்டவம் ஆடி இருப்பது தெரிந்தது.

விபத்து நடந்த அடுத்த சில தினங்களில் அயிராகணகாண மக்கள் இறந்து போனார்கள்.
கதிரியக்க நேரடி பாதிப்புக்கு ஆளானவர்கள் தோல் கழட்டி கொண்டு வந்தது .தலை முடி கையோடு வந்தது .ரத்தமும் சீழும் ஆக பேதி போனார்கள் .கடுமையான சிதர்வதை அனுபவித்து இறந்தார்கள்.

இரத்தக்குழாய் வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், கண்புரை, இரத்தத்தில் இயல்புக்கு மாறான நிலைகள், தோல்புற்று நோய், சீழ்பிடித்து ரணமாதல், கதிர்வீச்சு நோய் முதலிய நோய்கள் உருவாகின. காற்று, நீர் ஆகியவற்றில் கதிரியக்க மாசு படிந்து தாவரங்களையும், விலங்குகளையும் பாதித்தது.

பொதுவாகவே அணுஉலைகளை பாதுகாப்பு காரணமாக 25 ஆண்டுகளுக்கு தான் பயன்படுத்துவார்கள் அதன் பின் அதன் ரியாக்டர்களை கொண்டு போய் பூமியில் ஆழமாக குழி தோண்டி கான்க்ரீட் சமாதி கட்டி புதைத்து விடுவார்கள். அப்படி புதைக்க பட்ட உலையை 5000 வருடம் கழித்து திறந்தால் கூட அதே கதிர் வீச்சு பாதிப்பை கொண்டு அழிக்க தயாராக இருக்கும். நியூக்ளியர் பவர் என்பது நிஜமாகவே ஒரு பூதம் தான் அதற்க்கு ஒரு முறை உயிர் கொடுத்துவிட்டால் பிறகு அதை அழிக்க முடியாது கடைசி வரை சிறையில் போட்டு பூதம் வெளியேறாமல் காக்க வேண்டியது தான்.

மனிதன் என்றால் அவனுக்கு ரெண்டு கை ரெண்டு கால் இந்த இடத்தில் கண் இந்த இடத்தில் பல் என்று இருக்கும் மனிதனின் கட்டமைப்பு திட்டத்தையே கதிரியக்கம் செல்களில் ஊடுருவி மாற்ற கூடியது.
விளைவாக அதன் பின் பிறந்த பல குழந்தைகள் இது வரை மனித வரலாற்றில் பார்திராத புதிய வடிவமைபோடு ஏதோ ஏலியன் போல பிறந்தார்கள். அவர்களை நேரில் பார்த்தவர்கள் நெஞ்சில் அணு சக்தியை பற்றிய நீங்காத கிலியை ஏற்படுத்தியது. (உதாரணத்திற்கு சில படங்களை இணைத்து இருக்கிறேன் பாருங்கள்)

 அப்பகுதிகளில் வசித்தவர் களுக்குப் பிறக்கும் குழந்தைகள் விவரிக்க இயலாத பாதிப்புகளுடன் பிறக் கிறார்கள். உடனடி மரணம், புற்றுநோய் பாதிப்புகள் என்று லட்சக் கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணு குண்டுகளைவிட அதிக அளவில் அணுக் கதிர்வீச்சு இவ் விபத்தின் மூலம் வெளியேறியுள்ளது.

அடுத்த வரும் 70 ஆண்டுகளில் கேன்சார் ரேட்டிங் 28 % உயர இந்த விபத்து காரணமாக இருக்க போகிறது என்று நிபுணர்கள் கணித்தார்கள்.

(UNSCEAR ) அதாவது United Nations Scientific Committee on the Effects of Atomic Radiation  என்ற அமைப்பு இறுதியாக மொத்தமாக இந்த விபத்தின் கத்திரியக்கத்தால் பாதிக்க பட்டவர்கள் எத்தனை பேர் என்று பதிவு செய்தது . அது கொடுத்த கணக்கு எவ்வளவு தெரியுமா?
மொத்தம் 6 லட்சம் பேர்.

 இப்படி பெலாரஸ், ரஷ்யா, உக்ரைனில் காற்றின் மூலம் பரவிய அணுக்கதிர்கள் பிரான்ஸ் மற்றும் இத்தாலி வரை பரவின.
அதுமட்டும் அல்ல விபத்து நடந்து இதனை ஆண்டுகள் ஆகியும் இன்றும் பிப்ரியாட் மற்றும் செர்னோபில் நகரங்கள் மனிதர்கள் வாழத் தகுதியற்றவையாக இருக்கின்றன.
அதன் பாதிப்பு இன்னும் 20000 வருடத்திற்கு நீடிக்கும் என கிலியேற்றுகிறார்கள்.

கடைசியாக,

ஒரு அறிவியல் காதலனாக ..இந்த கட்டுரையின் ஆரம்ப வரிகளை மீண்டும் நான் நினைவு படுத்த விரும்புகிறேன்.

'அறிவியல்... '
இது சரியாக கையாண்டால் அள்ளி தரும் அரசன் .
 தவறாக கையாண்டால் அழித்தொழிக்கும் அரக்கன்.

அறிவியல் ஒரு சக்தி இது நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல .இதை நல்லது கெட்டதாக நிர்ணயிப்பது இதை கையாளுபவன் கையில் உள்ளது.


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

15. "டைம் கிரிஸ்டல் என்பது என்ன"


டைம் கிரிஸ்டல் ஒரு அற்புத பொருள்.
விஞ்ஞான வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் நொடிக்கு நொடி புதிய புதிய வளர்ச்சிகளை கண்டுபிடிப்புகளை கொண்டது தான் என்றாலும் நம்ம விஞ்ஞானிகள் திடீர் என எப்பவாவது புத்தம் புதிய கண்டு பிடிப்பை கண்டுபிடிப்பார்கள்.

அது இது வரை இல்லாத "பிராண்ட் நியூ" கண்டுபிடிப்பாக இருக்கும்.
சம்பிரதாயமான கதைகளை தாங்கி வரும் வழக்கமான திரைப்படங்களுக்கு இடையே திடீரென வித்யாசமான கதை அம்சம் கொண்ட படம் வருவது போல.

அப்படி விஞ்ஞாணிகள் கண்டு பிடித்த ஒரு 'பிராண்ட் நியூ 'கண்டுபிடிப்பு தான் டைம் கிரிஸ்டல்.

இது ஒரு வகையில் நம்ம சாதா கிரிஸ்டல் போல தான் என்றாலும் பல வகையில் இது வித்தியாசமானது... மகா வித்தியாசமானது.
குறிப்பாக இது ஒரு நான்காம் பரிமாண பொருள் அதாவது காலத்தில் மாறும் தன்மை கொண்டது என்றால் இதன் விசேஷம் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

நாம் இதுவரை பார்த்துவந்த உலோக அலோக மின் கடத்தும்...மின் கடத்தா ..எல்லா பொருளும்  "equilibrium" என்று சொல்ல கூடிய நிலைத்தன்மை யை கொண்டவைகள் தான் .
நாம் கண்டுபிடித்துள்ள முதல் "non_equilibrium "பொருள் இந்த time crystal தான்.

கிரவுண்ட் ஸ்டேட்ஸில் இயங்கி கூடிய பொருளும் இந்த டைம் கிரிஸ்டல் தான் 'கிரவுண்ட் ஸ்டேட்டஸ்' பற்றி பத்து வரிகள் தள்ளி சொல்கிறேன்.

பொதுவாகவே க்ரிஸ்டலின் அணுக்கள் அதன் கட்டமைப்புகள் உற்று பார்த்தால் அவை ராணுவ கட்டுபாட்டுடன் அவ்வளவு ஒழுங்காக அடுக்க பட்டிருப்பதை பார்க்கலாம் .
(காந்ததால் தூண்ட படும் போது இரும்பில் இப்படி ஒரு ராணுவ ஒழுங்கு தான் நடக்கும்)
இந்த கிரிஸ்டல் ...அல்லது படிகம்... அல்லது பளிங்குகள் ..சாதாரணமாகவே அதன் அணு கட்டமைப்பில் மாறிக்கொண்டே இருக்கும் தன்மை வாய்ந்தவை ஒரு வட்டம் பூர்த்தி செய்வதை போல தனது வழக்கமான அணு கட்டமைப்பிற்கு (atom structure ) திரும்ப வருபவை.

 ஆனால் அவை வெளி(space) இல் மட்டும் தான் அப்படி நகர முடியும் .இந்த டைம் கிரிஸ்டல்களால் வெளியுடன் சேர்ந்து காலத்திலும் நகர முடியும் என்பது தான் விசேஷம்.

இன்னோரு விஷேமும் உண்டு . எந்த பொருளும் தனது கிரவுண்ட் ஸ்டேட்ஸ் இல் இருக்கும் போது (இதை ஜீரோ பாயிண்ட் என்பர்) இயக்கம் கொள்ள முடியாதவை.
ஆ..மாம்....கிரவுண்ட் ஸ்டேட்டஸ் என்றால் என்ன?

அணுக்களில் கிரவுண்ட் ஸ்டேட்டஸ் என்பது அணு தனது மிக குறைந்த பட்ச ஆற்றல் நிலையில் உள்ள ஒரு நிலை (அதாவது அந்த நிலையில் அதற்கு மேல் அந்த அனுவின் ஓரிரு எலெக்ட்ரானை ஆர்பிட் மாற்றி கடத்துவதன் மூலம் அதன் எனர்ஜி யை அதற்கு மேல் குறைக்க முடியாத ஒரு கடைசி நிலை)
இந்த நிலையில் அந்த அணுவிற்கு தன்னிச்சையான இயக்கம் என்பது சாத்தியம் இல்லை .

இது எப்படி என்றால்....
நீங்கள் ஒரு நாள் பூரா உழைத்து களைத்து வந்த பின் உடல் முழு சோர்வடைந்து இருக்கும் போது உங்களை மீண்டும் எழுப்பி 'அந்த க்ரவுண்டை ஒரு ரெண்டு ரவுண்ட் அடிச்சிட்டு வாப்பா ' என்று சொல்வதற்கு சமம்.

இந்த நிலையில் அணுக்களும் அப்படிதான் இயங்க தேவையான ஆற்றல் போதாமல் இயக்கம் அற்று கிடக்கும்.
ஆனால் இந்த டைம் கிரிஸ்டல் இன் அடுத்த விசேஷம் இது "கிரவுண்ட் ஸ்டேட்ஸ்" இலும் தொடர் மாறுதலுக்கு உட்படும் அதுவும் முன்பு சொன்னது போல காலம் மற்றும் வெளி இரண்டிலும்.
இது இயங்க வெளி ஆற்றல் ஏதும் தேவை இல்லை என்பது தான் கூடுதல் விசேஷம்.

இப்படி க்ரவுண்ட் ஸ்டேட்டஸ் இல் இயங்க கூடிய ..வெளியில் மாற கூடிய காலத்தில் மாற கூடிய ...நான்காவது பரிமாணம் கொண்ட (அவெஞ்சரில் வரும் தெசரெக்டர் போல)ஒரு பொருளை முதல் முதலில் கண்டுபிடித்திருப்பதால் தான் இதை 'பிராண்ட் நியூ 'கண்டுபிடிப்பு என சொல்கிறார்கள்.

முதல் முதலில் இப்படி ஒன்றை உருவாக்க முடியும் என்பதை 2012 இல் அறிவித்தவர் பிராங்வில்க்ஜெக் (Frank Wilczek)
இவருக்கு தான் முதல் முதலில் இப்படி ஒன்றை தயாரிக்க முடியும் என்ற யோசனை வந்தது . இவர் ஒரு நோபல் பரிசு பெற்ற ' தியாரிட்டிக்கல் பிஸிஸிஸ்ட் '
இவருக்கு இந்த யோசனை எப்படி வந்தது?

அதாவது நீண்ட நாளாகவே பவுதிக  ஆய்வாளர்கள் ஒரு விஷயத்தை ஆச்சர்யத்தோடு கவனித்து வந்தார்கள். அதாவது கிரவுண்ட் ஸ்டேடசில் கூட  இந்த காந்தம் மற்றும் கிரிஸ்டல் "time-translation symmetry"  என்ற ஒரு பவுதிக விதியை மீறுவதை கவனித்து வந்தார்கள். விதியை மீறி அவை "asymmetrical status " இல் இருப்பதை கவனித்தார்கள்.

அது என்ன "symmetry "சமாச்சாரம் என்றால் ஒரு காந்தம் ஒரு முனை வடக்கு அடுத்த முனை தெற்காக இருக்கிறதே அதில் எந்த முனை வடக்காக எது தெற்காக இருக்க வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்கிறது. (பாதியாக உடைக்க பட்டால் இந்த பாதி உடனே அடுத்த திசையாகி விடுகிறதே) இவை பார்க்க ஒரே போல தெரிந்தாலும் இவை இரண்டும் ஒரே மாதிரி முனை அல்ல என்று நமக்கு நன்றாகவே தெரியும். இது தான் asymmetry.....
அதே போல கிரிஸ்டல் படிகங்களில் அணு கட்டமைப்பு வட்ட பாதையில் மாறி கொண்டிருப்பது அதை ஒரு கோணத்தில் பார்த்தால் அவை ஒன்று போலவே தோன்றினாலும் அவை ஒன்றாக இருப்பதில்லை..
மேலும் எங்கிருந்து பார்க்கிறோம் என்பதை பொறுத்து மாற கூடியது இதுவும் தான் "asymmetrical " நிலை என படுகிறது.

'இப்படி இது க்ரவுண்ட் ஸ்டேட்ஸ் அடையும் வரை இது சில உள்வேலையில் ஈடுப்பட்டவண்ணம் உள்ளதே ..அப்போ இதை க்ரவுண்ட் ஸ்டேட்டஸ் இல் வெளி மற்றும் காலத்தில்  மாறும் படி வடிவமைக்க முடியும் 'என கூறினார் பிராங்க்...
மேலும்
அப்படி செய்ய இவைகளை அதிக அளவு குறை வெப்பநிலை யில் வைத்து செய்ய வேண்டும் என்றும் சிபாரிசு செய்தார்.(குறை வெப்ப நிலையில் கிரிஸ்டல் கட்டமைபுகள் தானாகவே சிறப்பாக தன்னை ஒழுங்கமைத்து கொள்ளுகின்றன.)

ஆசாமி ஐடியா கொடுத்து விட்டாரே தவிர இதில் நடைமுறை சவால் ..சிக்கல் ..நிறைய இருந்தது .. அணுக்களை குவாண்டம் நிலை யில் வைத்து ஆராய்வதில் உள்ள நடைமுறை சிக்கல் தான் அவை. குவாண்டம் அணுக்கள் ஒழுங்கா ஒரு இடத்தில உட்காராத சுட்டி பையனை போன்றவை.
அவைகள் ஸ்பெஸ் இல் ஒரு இடத்தில நிலையாக நிற்காதவைகள். மேலும் காலத்தை பொருத்தும் கட்டுப்படாது.

ஆனால் சில வருடங்கள் கழித்து சவாலே சமாளி என்று களத்தில் ஒரு குழு இறங்கியது.
அந்த குழு இது வரை சாத்தியம் இல்லாத ஒன்றை சாதியமாக்க களம் புகுந்தது .

அதன் தலைவர் பெயர் yao.

அந்த யாவோ வும் அவர் குழுவும் இந்த கிரிஸ்டலை வடிவமைக்க பக்கா ப்ளூ பிரிண்ட் தயாரித்தார்கள்.
அது தயாரான பின் எதிர் கொள்ள போகும் சாத்திய கூறுகளையும் அளந்து தயாராக வைத்து கொண்டார்கள்.

ப்ளூ பிரிண்ட் பக்காவாக தயாரான பின் யாவோ ஒரு காரியத்தை செய்தார்.
தனது குழுவை அழைத்து அதை இரண்டாக பிரிதார்.
அதில் ஒன்று மேரிலாண்ட் பல்கலைக்கழகம் இனொன்று ஹார்வர்ட் பல்கலை கழகம் .இரண்டு குழுக்களிடமும் ஒரே ப்ளூ பிரண்டை கொடுத்து விட்டு சொன்னார்...

" தம்பிகளா பிளான் இது தான் ...இதை வைத்து ரெண்டு குழுவும் தனி தனியா வீடு கட்டி கொண்டு வாங்க பாக்கலாம் "

என்று அனுப்பி வைத்தார்.
அவரது திறமையான இரண்டு குழுவும் அவரை ஏமாற்ற வில்லை இரண்டுமே தங்கள் பாணியில் 2016 இல் அந்த பொருளை வெற்றிகரமாக கண்டு பிடித்து கொடுத்தார்கள்.
(ஒரே புளு பிரிண்ட் என்பதால் கிட்ட தட்ட இரண்டும் ஒரே மாதிரிதான் இருந்தது.)
இரண்டு குழுவும் தனது பணியை 'பீர் ரிவில்ட் ஜெர்னல் 'இல் பதிவிட்டார்கள்.
அந்த இரண்டு பதிவிலும் யாவோ' கோ ஆர்தர்' ஆக இருந்தார்.

இதில் ஹார்வேர்ட் பல்கலை கழக குழு வைரத்தில் உயர் அழுத்த நைட்ரஜன் கொண்டு இதை தயாரித்து காட்டினார்கள்.

மெரிலாண்ட் குழுவினர் இதை எட்டர்பியம் அணுவை கொண்டு செய்து காட்டினார்கள்.
அதாவது வரிசையாக எடர்பியம் அணுவை சங்கிலி அமைப்பாக இருக்கும் படி ஒரு குவாண்டம் ஆய்வு அமைப்பு செய்தார்கள் இதில் அயணிகள் தனிஷ்டத்துக்கு சுழன்று கொண்டு இருக்கும் இவைகள் ஒன்றோடு ஒன்று பக்கத்து அயணியை பாதிக்கும் வண்ணம் வைக்க பட்டு இருக்கும்.

இவைகளை இரண்டு லேசர் கதிர்களால் மாற்றி மாற்றி சுட்டாடர்கள். அதில் ஒன்று காந்த புலத்தை ஏற்படுத்துவதற்கு இனொன்று சுழலும் அயான் ஐ நழுவ வைக்க..
இப்படி தொடர்ந்து மாறி மாறி செய்யும் போது ஒரு அயன் அடுத்த அயானை உசுப்பேற்றி அதிர வைத்து  அவைகள் இவர்களின் டைம் டிவைஸ் களின் வரையறை மீறி வேறு காலத்தில் சென்று அதிர்வடைவதை கண்டார்கள்.

அதாவது இதை ஒரு அதிரும் ஜெல்லி போல கற்பனை செய்து கொள்ளலாம் என்கிறார்கள்.
 நீங்கள் சுண்டினால் ஜெல்லி அதிர்வதை போல தான் இவை சாமான்யமாக நடக்கும் ஆனால் இந்த டைம் க்ரிஸ்டலின் நீங்கள் சுண்டிய பின் வேறு காலத்தில் அது அதிரும்.

இந்த கிரிஸ்டல் டைம் சிமிட்ரிகளை உடைக்கும் ஒரு "நான்-ஈகுலிபுரியம் " பொருள் என்பதால் இது ஒரு இன்றியமையாத கண்டுபிடிப்பு ஆகும்.
இது ஒரு "perpetual motion machine" ஆ என்று கூட பல பேர் ஆர்வமானார்கள் ஆனால் இது ஒரு "perpetual machine" அல்ல ..
(Perpetual motiol machine  என்பது வெளியில் இருந்து எந்த எனர்ஜியும் தரபடாமல் தனக்குதானே தொடர்ந்து இயங்கும் ஒரு இயந்திரம்.....இதை பல ஆண்டுகளாக அணைத்து விஞ்ஞானிகளும் இன்னும் முயலுகிறார்கள் ஆனால் இன்னும் அவர்களுக்கு மிஞ்சியது தோல்வி தான் )
இதில் எனர்ஜி உண்டாவதில்லை என்பதால் இதை அந்த கருவியாக கருத முடியாது.

சரி இதனால் என்ன பயன்?
நான்காவது பரிமாணத்தில் இயங்கும் ஒரு பொருளை இப்போதான் கண்டுபிடித்திருக்கிறோம் என்பதால் இதன் பயன் பாடுகள் எதில் எல்லாம் ..எப்படி எல்லாம் இருக்கும் என்பது போக போக தான் தெரியும் என்றாலும் இப்போதைக்கு நம் கண்ணுக்கு தெரிவது குவாண்டம் கம்பியுடரின் ஒரு பெரிய பிரச்சனையை இதை வைத்து தீர்க்க முடியும்.

சாதாரண கம்பியுடரை போல பைனரியில் இயங்காமல் குவாண்டம் பிட் இல் இயங்கும் கம்பியூட்டர் தான் குவாண்டம் கம்பியூட்டர்..
நிலை தன்மை இல்லாத குவாண்டம் துகளில் உள்ள ஒரு பிரச்னைதான் குவாண்டம் மெமரி பிரச்னை..
அதை இதை கொண்டு தீர்க்க முடியும்..

எதிர்கால கருவிகள் குவாண்டம் ஆதிக்கம் மிக்க வை என்பதால்..
டைம் கிரிஸ்டல் எதிர்கால முக்கியத்துவம் வாய்ந்தவையாகிறது...

இந்த -'காலத்தில் மாறும் கிரிஸ்டலானது  '.. அறிவியலின் வரலாற்று காலத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறது என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

16.   "தொடு திரை  தொழில்நுட்பம்"

இந்த கணத்தில் இந்த கட்டுரையை படித்து கொண்டிருபவர்களில் 99 சதம் பேர் டச் ஸ்க்ரீன் எனபடும் தொடுதிரை தொழில் நுட்பத்தை பயன்படுத்துபவராக தான் இருப்பார்கள்.
அந்த தொழில் நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்பதை சுருக்கமாக இன்று பார்க்கலாம்.

இந்த டச் ஸ்க்ரீன் ஒரு நவீன தொழில் நுட்பம் என நீங்கள் நம்பினாலும் அது 1960 இலேயே E. A ஜான்சன் என்பவரால் கண்டுபிடிக்க பட்டு விட்டது .
இன்னொரு ஆச்சர்யம் முதலில் கண்டுபிடிக்க பட்டதே capasitive டைப் டச் ஸ்க்ரீன் தான் .இதை ஏன் ஆச்சர்யம் என்கிறேன் என்றால் இதற்கு பின்னால் கண்டுபிடிக்க பட்ட resistive டைப்பை விட இன்று நாம் அட்வான்ஸ் ஆக நினைப்பது கேபாஸிடன்ஸ் டைப்பை தான்.(தீ பெட்டிக்கு முன்னாடியே லைட்டர் கண்டுபிடிக்க பட்டுவிட்டதை போல)

பிற்காலத்தில் 1971 இல் டாக்டர் சாம் என்பவரால் இது வளர்ச்சி அடைந்தது ஒரு மைல் கல்லாக அமைந்தது. அப்போது இது ஒரு டச் சென்சார் என்ற அளவில் தான் இருந்தது அப்போது அதன் பெயர் ஈலோக்ராப்..
பிறகு 1974 ஈலாக்ராபிக் என்ற கம்பெனி உடன் இனைந்து முதல் முதலில் ஒரு ஒழுங்கான ஒளி ஊடுருவ கூடிய பரப்பை கொண்ட டச் ஸ்க்ரீனை உண்டாக்கினார்.
1977 இல் அந்த கம்பனி அதை மேலும் வளர்த்து இன்று வரை பயன்பாட்டில் உள்ள ரெசிஸ்டிவ் டச் கான உரிமம் பெற்று கொண்டது.
சரி இனி அது வேலை செய்யும் விதம் பற்றி பாப்போம் ..

இதில் முன்பே சொன்னது போல இரண்டு வகை உண்டு... ஒன்று ரெசிஸ்டிவ் இன்னொன்று கெபாசிடிவ்..
இதில் ரெசிஸ்டிவ் என்பதில் கவனித்து பார்த்தால் இரண்டு அடுக்கு தாள் ஒன்றை ஒன்று தொடாத வண்ணம் அமைக்கப்பட்டிருப்பது தெரியும்.
இதில் மேல் அடுக்கு வளையும் தன்மை கொண்ட பாலிதீன் பொருளாலும் கீழ் பகுதி கண்ணடியாலும் செய்ய பட்டிருக்கும் இரண்டுமே இண்டியம் டின் ஆக்சைட் பூச்சு பூச பட்டிருக்கும் இந்த பூச்சு மின்சாரத்தை கடத்த கூடியது..
இப்போது நாம் மேல் அடுக்கில் அழுத்தம் கொடுத்து தொடும் போது தொட பட்ட புள்ளியில் மின் சுற்று பூர்த்தி அடைகிறது எனவே அந்த தகவல் தலைமை பிராசசருக்கு கடத்த பட்டு அது தொட பட்ட இடம் உணர்ந்து அதற்கான வேலை நடக்கிறது.

பத்துக்கு பத்து வரிசையில் 100 மாணவர்களை உட்கார வைத்து விட்டு குறிப்பிட்ட மாணவன் பெயர் சொன்னால் அவன் கையை உயர்த்துவதை வைத்து அவன் இருப்பிடத்தை தெரிந்து கொள்வதை போல என்று வைத்து கொள்ளுங்கள்.

இந்த வகையில் இரண்டு நன்மைகள்..
1) விலை குறைவு..
2)நீங்கள் விரல் தான் என்று இல்லை எதை கொண்டு தொட்டாலும் வேலை செய்யும் ..
இதில் தீமைகள் இரண்டு...
1) கெபாஸிடன்ஸ் வகை அளவு இதன் வாழ் நாள் இருப்பதில்லை
2) கெப்பாசிடன்ஸ் அளவு இது துல்லியம் அல்ல..

அடுத்து capacitance type touch ஐ பாப்போம்.

இதில் திரையில் எப்போதும் மிக சிறிய அளவில் மின்சாரம் பாய்ந்தது கொண்டு இருக்கும் நாம் தொடும் பொது தொட்ட இடத்தில மின்வீழ்ச்சி உண்டாகி தொட்ட இடம் கவனிக்க படுகிறது.

அந்த 10 கு 10 மாணவர் வரிசையில் இப்போது எல்லோருமே கையை தூக்கி கொண்டே இருக்க நீங்கள் அழைக்கும் மாணவன் மட்டும் கையை தாழ்த்துவது மூலம் அவன் இருப்பிடம் கவனிக்க படுவதாக நினைத்து கொள்ளுங்கள்...

இதன் நன்மை .. இது துள்ளியமானது.
தீமை.. மின்சாரத்தை கடத்தவல்ல விரல் அல்லது அது போன்ற பொருட்களால் மட்டும் தான் வேலை செய்யும்.

 உண்மையில் டச் டெக்நாலஜி வெறும் இரண்டு வகை மட்டும் அல்ல..
Infrared touch technology
Surface acoustic wave technology
Optical touch technology..
இப்படி பல வகை படும் மேலும் மேலே நான் சொன்ன ரெசிஸ்டிவ் மற்றும் கேபாஸிடிவ் இரண்டுமே பாசிடிவ் மற்றும் நெகடிவ் என்ற இரண்டு உள் பிரிவுகள் கொண்டது.. என்றாலும்
நாம் அன்றாடம் தொட்டு தடவும் தொழில் நுட்பத்தை சுருக்கமாக விளக்கி இருக்கிறேன்

ஒரு கொசுறு செய்தி நம்ம ஊரில் அந்த காலத்தில் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவும் அந்த செயல் இருக்கிறதே அது மூலையில் சில நரம்புகளை தூண்டி நன்றாக சிந்திக்க உதவுமாம் ..
இப்போது சமீபத்திய ஆய்வில் நிபுணர்கள் இந்த தலை முறை பிள்ளைகள் விரலை உரசி கொண்டு இருப்பதால் மூளை அதிகம் சிந்திக்க முடிவதாக கண்டு பிடித்து உள்ளனர்.
இனி அம்மா 'என்னடா எப்ப பார்த்தாலும் செல்லும் கையுமா இருக்க' என திட்டினால் ... "போம்மா நான் மூளையை வளர்த்துகிட்டு இருக்கன் "என சொல்லலாம்.


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

17. "நிகோலா டெஸ்லா
ஒரு மறைக்க பட்ட மகா வி்ஞ்ஞானி"


உஷார் இம்முறை நான் எழுதி இருப்பது ஒரு controversial அதாவது சர்ச்சை குரிய கட்டுரை இது உங்கள் நம்பிக்கைகளை கொஞ்சம் மாற்றி அமைக்கலாம் ஜாக்கிரதை..

ஐன்ஸ்டைன் மேல் எனக்கு மிகுந்த ஈடுபாடும் மரியாதையும் உண்டு என் faverat விஞ்ஞாணி அவர் ... இதை நான் பல கட்டுரைகளில் ஆங்காங்கே(என்னையே மீறி) வெளிப்படுத்தி இருப்பேன்.
அதே போல எனக்கு அவ்வளவாக பிடிக்காத விஞ்ஞாணிகளும் உண்டு அதில் குறிப்பிட்ட ஒருவர் பெயரை சொன்னால் நீங்கள் அதிர போவது உறுதி .. அவர்தான் பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன்.
உலகதுக்கே ஒளி கொடுத்த உத்தமரை நான் குறை கூறுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை..

முதலில் அவரை ஒரு விஞ்ஞானியாக ஏற்பதில் எனக்கு தயக்கம் உள்ளது காரணம் நம்மை சுற்றி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அறிவியலை புரிந்து கொண்டவர் அதை உள்வாங்கி கொண்டு புதிதாக ஒரு பொருளை கண்டு பிடிப்பவனை நாம் விஞ்ஞானி எனலாம் ஆனால் ஏற்கனவே உள்ள ஒரு கண்டுபிடிப்பு அல்லது தொழில் நுட்பத்தை மேம்படுத்தி அன்றாட வாழ்க்கைக்கு உதவுபவையாக மாற்றி கொடுப்பவரை நாம் என்ஜினீயர் என்று வேனால் செல்லலாம்.அந்த வகையில் எடிசன் ஒரு என்ஜினீயர் ஆனால் விஞானி அல்ல.

மின்சாரத்தை பயன் படுத்தி எரியும் தெருவிளக்கை எடிசனுக்கு முன்னாடியே பல பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை சொன்னால் நீங்கள் ஆச்சர்ய படுவீர்கள். பலப் ஐடியா மட்டும் அவருக்கு முன்னாடியே 22 போர்களால் தரப்பட்டது என்றால் உங்கள் ஆச்சர்யம் இன்னும் கூடும்.
 ஆனால் அதில் இருந்தது ஒரே ஒரு பிரச்சனைதான் அது இப்போதைய பல்புகளை போல தொடர்ச்சியாக ஏறிய முடியாதவை.. மெழுகுவர்த்தி அல்லது அகல் விளக்கு போல கொஞ்ச நேரம் எரிஞ்சி விட்டு பிறகு "எரிந்து" போக கூடியவை. அப்படி எரியாமல் தொடர்ந்து வெப்பத்தை தாங்கும் ஒரு பொருளை மிகுந்த தேடலுக்கு பின் கண்டுகொண்டது தான் எடிசன் செய்த விஷயம் ..இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் முயற்சியை பாராட்டி அவரை சிறந்த விஞ்ஞானியாக கொண்டாடலாம் தான் தப்பில்லை . அனால் அவர் ஒரு திருடன் என்பது தான் நமக்கு அவர் மேல் உள்ள மரியாதையை குறைக்கும் விஷயம் .

என்னது திருடனா என அதிர்ச்சி அடையாதீர்கள் பிறர் உடமையை திருடுபவன் மட்டும் திருடன் அல்ல பிறர்
உழைப்பை ,பிறர் படைப்பை, பிறர் திறமையை,பிறர் கண்டுபிடிப்பை ,பிறர் ஐடியாவை திருடுபவனை நீங்கள் திருடன் என ஒத்து கொண்டால் மேலே சொன்ன அணைத்து திருட்டையும் ஒருங்கே செய்தவர் தான் எடிசன்.(இன்றைக்கும் நம்மிடையே கட்டுரை முதல் கதை வரை...சிந்தனை முதல் செயல்பாடுகள் வரை திருடுபவர்கள் இருக்கிறார்கள்)

எடிசனிடம் தனது  திறமையை, கண்டுபிடிப்பை ...  அறிவை ..பறிகொடுத்த பரிதாப மனிதர் யார் தெரியுமா அவர் தான் உலகத்தால் மறைக்க பட்ட விஞ்ஞாணி நிகோலஸ் டெஸ்லா...


ஆமாம் யார் இந்த டெஸ்லா?

டெஸ்லா ஒரு சேர்பிய நாட்டு விஞ்ஞாணி 1856 இல் பிறந்தவர் எடிசனின் சக காலத்து விஞ்ஞானி பிற்காலத்தில் அமெரிக்கா சென்று குடியேறிய பின் 1884 முதல் எடிசனுக்காக அவருடன் வேலை செய்துவந்தார். டெஸ்லா ஒரு எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர் ,மெக்கானிக்கல் இன்ஜினியர் ,இயற்பியலார் ,மற்றும் futurist எனப்படும் எதிர்கால அறிவியல் சாதியத்தை சிந்திக்க கூடியவர்..
பல இடங்களில் ஆலோசகராக பணியாற்ற கூடியவர். குறுகிய காலத்திற்கு ஜார்ஜ் வாஷிங்டன்ஹவுஸ் உடன் ஆலோசகராக வாடகைக்கு அமர்த்த பட்டார் அவர் பெயரில் உள்ள ac இண்டக்ஷன் மோட்டார் , மற்றும் ட்ரான்ஸபார்மர் இன் பேடன்ட் உரிமத்திற்கான லைசன்ஸ் வழங்கியது இவர் தான்..
இவர் பெயரில் மொத்தம் 700 கு மேல் பேடன்ட் உரிமம் இருக்கிறது என்றாலும் AC கரண்ட் என்று இன்றளவும் நாம் பயன்படுத்திவரும் சாதாரண அல்டெர்னேட்டிவ் கரெண்ட் இவருடைய கண்டுபிடிப்புதான் என்பது குறிப்பிட தக்கது.

 எடிசன் உடன் இவர் பணியாற்றிய போது இவர் AC கரண்ட் இல் தனது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை செய்து கொண்டிருக்க எடிசன் DC கரண்ட் எனப்படும் டைரக்ட் கரண்டில் (நமது பாட்டரிகளில் இருபது dc கரண்ட் தான்) கவனம் செலுத்தி கொண்டிருந்தார்.
அப்போது இவரது AC கரண்ட் ஐ மிகுந்த தீமை உள்ளதாக காட்ட எடிசன் செய்த செயல்கள் மிக கீழ்தனமானவை..
திடீரென பக்கத்துக்கு அக்கத்து வீட்டு நாய் பூனை போன்றவைகள் காணாமல் போயின.. அவற்றை கடத்தி கொண்டு வந்து கொடுக்க பள்ளி சிறுவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது ... அந்த கடத்தலை செய்வித்தவர் எடிசன்..
மக்கள் முன்னிலையில் சிறு விலங்குகளின் மேல் AC மின்சாரத்தை பாய்ச்சுவார் எடிசன் அவைகள் துடிப்பதை காட்டி "ஆகையால் மக்களே டெஸ்லா கண்டுபிடித்து கொண்டிருக்கும் இது மிக ஆபத்தானது" என்று ஸ்பீச் கொடுப்பார்.

டெஸ்லா தனது கண்டுபிடிப்பு நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல அது ஒரு அற்புத பயனளிக்கும் சக்தி சரியாக பயன்படுத்தினால் மொத்த மனித இனதுக்கே அது பயன்படும் என் மக்களுக்கு எடுத்து சொல்ல படாத பாடு பட வேண்டியதாயிற்று...
கடுப்பான டெஸ்லா ஒரு முறை மக்களை ஒன்று திரட்டி 1 லட்சம் வோல்ட் மின்சாரத்தை பரப்பி கொண்டிருக்கும் கருவியை காட்டினார் மக்கள் அதில் சக்தி வாய்ந்த மின்சாரம் இருப்பதை கண்கூடாக பார்த்தனர்.. அப்போது மக்கள் முன்னிலையில் அந்த கருவியை மிகுந்த லாவகத்தோடு தானே பயன்படுத்தி காட்டினார். மின்சாரம் நமது எதிரி அல்ல அது அற்புத சக்தி கொண்ட நண்பன் என்பதை நேரடியாக மக்களுக்கு புரிய வைத்தார்..

எடிசனுடன் பணியாற்றிய காலங்களில் அவர் நெறைய பொருட்களை கண்டுபிடித்தார் . டெஸ்லாவுக்கு இயற்கையை ... தன்னை சுற்றி உள்ள அறிவியலை உற்று கவனிக்க தெரியும் அதை கவனித்து ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மைகளை வெளி கொண்டுவர தெரியும் ஆனால் அதை கொண்டு பேர்வாங்க தெரியாது.. அதற்கு தனது பெயரில் பேடன்ட் எடுத்து வைக்க தெரியாது ..அதை கொண்டு பணம் பண்ண தெரியாது.. அனால் இவை அனைத்தையும் ஒன்று விடாமல் செயதார் எடிசன்.. அதுவும் டெஸ்லாவின் கண்டு பிடிப்புகளை கொண்டு...
டெஸ்லா வின் கண்டுபிடிப்புகள் ஐடியாக்கள் திருடி பணம் பண்ணும் ஒரு பிஸ்னஸ்மேனாக தான் திகழ்ந்தார் எடிசன்.

தனது கண்டுபிடிப்புகள் வேற யார் பெயரிலோ இருப்பதை கண்டு மனம் நொந்து போனார் டெஸ்லா..
இவரது அறிவை பயன் படுத்தி கொண்டது எடிசன் மட்டுமே அல்ல உலகத்தில் நாம் காணும் பல கண்டுபிடிப்புகள் டெஸ்லாவால் முன் கூட்டியே கண்டுபிடிக்க பட்டு ஆனால் முறையாக வெளிஇடபடாமல் ,பேடன்ட் வாங்கபடாமல் விட பட்டவை.

உதாரணமாக ரேடியோ தொழில் நுட்பத்தை மாற்கொணி கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே டெஸ்லா கண்டு பிடித்து விட்டிருந்தார். அனால் தனது பெயரில் பதிவு செய்ய தவறி இருந்தார். பின்னாளில் மக்கள் அவரிடம் என்னப்பா உன் கண்டுபிடிப்பு அவர் பெயர்ல இருக்கே என கேட்டதற்கு "மாற்கொணி ஒரு நல்ல மனிதர் பாவம் அவர் பெயரிலேயே இருந்து விட்டு போகட்டும் இது மட்டும் அல்ல மொத்தம் எனது 17 கண்டு பிடிப்புகள் அவர் பெயரில் தான் உள்ளது" என்றார் கூலாக ...(இருவருமே இறந்த பின் 6 மாதம் கழித்து ரேடியோ காண பேடன்ட் மீண்டும் டெஸ்லா பெயரில் மாற்றி அமைக்க பட்டது குறிப்பிட தக்கது)

அதே போல இந்த ரேடார் கருவி இருக்கிறதே.1935 இல் வாட்சன் வாட் எனும் பிரிட்டிஷ் விஞ்ஞானியால் கண்டுபிடிக்க பட்டது அனால் 1917 இலேயே அந்த தொழில் நுட்பத்தை கண்டு பிடித்து விட்டிருந்தார் டெஸ்லா மேலும் அது ராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார் (1917 முதல் உலக போர் கால கட்டம் என்பதை கவனிக்க...) ஆனால் அந்த சமயத்தில் US நேவி யின் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் இன் பொறுப்பதிகாரி.. இது ஒன்னும் ராணுவத்துக்கு பெரிசா உதவாது என்று அதை புறக்கணித்தார்.. அந்த நல்ல உள்ளம் கொண்ட பொறுப்பதிகாரி வேறு யாரும் அல்ல எடிசன் தான்.

X rey வை கண்டு பிடித்தது ராண்டஜன் என நமக்கு தெரியும் ஆனால் அதை அதற்கு முன்பே டெஸ்லாவால் கண்டு பிடிக்க பட்டு எடிசனால் தவறாக பயன்படுத்த பட்டு தனது உதவியாளர் கை போவதற்கு காரணமாவும் அவர் சொந்த கண்ணுக்கே பாதிப்பு ஏற்பட்டு அதை கண்டு பயந்து அதை கை விட்ட கூத்து எல்லாம் நடந்தது..

நேர் மின் நிலையத்தில் எப்படி மின்சாரம் எடுக்கிறார்கள் என்பதை எனது "மின்சாரம் என்ன ஏது எப்படி" கட்டுரையில் சொல்லி இருந்தேன் அல்லவா நயாகரா பால்சில் அதை முதல் முதலில் செய்து காட்டியவர் டெஸ்லா தான்.

ராக்கெட் இல் பயன் படுத்த படும் cryojenik engine (கேஸை குறைந்த வெப்பநிலையில் நீர்ம நிலையில் வைத்து பயன் படுத்தும் இன்ஜின்)  இதை கண்டு பிடிப்பதற்கு கிட்ட தட்ட 50 ஆண்டுக்கு முன்பே அதை சோதனை செய்த்து பார்த்தவர் டெஸ்லா.
தனது உழைப்பு திருட பட்டிருப்பது தெரிந்தும் யாரையும் பெரிதாக வெறுகாதவர் டெஸ்லா.. ஒரு முறை இவர் மேடையில் பேசிக்கொண்டும் மக்களால் பாராட்ட பட்டு கொண்டும் இருப்பதை பார்த்து பொறுக்க முடியாமல் கூட்டத்திலிருந்து நழுவி வெளியேறினார் எடிசன் ... ஆனால் அவரை கண்டு கொண்ட டெஸ்லா அவரை மேடைக்கு அழைத்து அவரை புகழ்ந்து பேசி பாராட்டை பெற்று தந்த மாண்புக்கு சொந்த காரர் தான் டெஸ்லா..

பிற்காலத்தில் ஒரு மிக அற்புத கண்டு பிடிப்பை ஆராய்ந்தார் டெஸ்லா அதாவது கம்பி இல்லா தகவல் தொடர்பு போல கம்பி இல்லா மின்சாரம்... அதாவது இன்று நாம் மின்சார்த்தை கொண்டு செல்ல பயன்படுத்தும் இத்தனை கம்பிகள் ..கம்பங்கள்... சப் ஸ்டேஷன் கள் எதுவும் தேவை இல்லை ... நேரே distribution point இல் இதை பாய்ச்சினால் நேரே நம் இடத்தில அதை பெற்று கொள்ளலாம்..இந்த அற்புத கண்டுப்பிடிப்பு உலகத்தை மாற்ற கூடியது ஆனால் இது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று டெஸ்லா காலத்தில் அவரை அனைவரும் மிரட்ட தனது அற்புத கண்டு பிடிப்பை உலகத்திற்கு வெளியிடாமலேயே இறந்து போனார். அந்த தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்க இன்றளவும் விஞ்சாணிகள் முயன்று வருகிறார்கள் .

Facebook இல் தற்செயலாக எடிசன் மற்றும் டெஸ்லா போட்டோவை (எடிசன் என்றால்:லைக்.   டெஸ்லா என்றால்: கமெண்ட் போடவும் ) பார்த்து அதில் காமென்டில் வெளிநாட்டவர்கள் டெஸ்லாவை புகழ்ந்தும் எடிசனை பயங்கரமாக கலாய்த்தும் எழுதி இருப்பதை பார்த்து அதிர்ந்தேன் .. என்ன விஷயம் என்று பின்னணியை நெடில் உட்கார்ந்து ஆராய்ந்து பார்த்ததில் மேலும் அதிர்ந்தேன். அந்த அதிர்ச்சியை தான் மேலே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். யாருக்காவது மாற்று கருத்து இருந்தால் தகுந்த ஆதாரத்துடன் என்னை தொடர்பு கொள்ளுங்கள் தவறில்லை...
டெஸ்லா என்ற உன்னத மனிதரை உலகம் மறந்திருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தில் அவரை தலை தாழ்ந்து தனது வணக்கத்தை ..மரியாதையை செலுத்துவோம்...


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

18. "கொலம்பஸ் எனும் கொடூர கொலையாளி"


டெஸ்லா கட்டுரை ஒன்றில் எடிசன் பற்றிய மக்கள் அறியாத புது கோணத்தை ...அவரது இன்னொரு முகத்தை பற்றி கூறி இருந்தேன். இன்றைக்கும் எனது கட்டுரை அதை தான் செய்ய போகிறது.

இன்றைக்கு நான் வெளிச்சம் போட்டு காட்டஇருக்கும் முகத்திற்கு சொந்தக்காரர் அணைத்து மாணவர்களும் நன்கு அறிந்த ஒருவர் அவர்தான் அமெரிக்காவை கண்டு பிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ்..

நமது பாட புத்தகங்களில்  கோலம்பஸ் ஐ ஒரு நல்ல கண்டுபிடிப்பாளர் ரேஞ்சுக்கு புகழ்ந்து மரியாதையாக சொல்லப்பட்டிருக்கிறது.. ஆனால் உண்மையில் கொலம்பஸ் என்ற அந்த மனிதன் எப்படி பட்டவன் தெரியுமா?

அது 1492 கால கட்டம் ...
ஐரோப்பா கண்டம் உலகின் பல பகுதிகளில் காலணிகளை அமைத்து அவர்களது ரத்தத்தை உறிஞ்சி கொழுத்து கொண்டு இருந்த காலம் இன்னும் வேற எங்கெல்லாம் இளிச்சவாய் நாடு இருக்கு போய் அடிமை படுத்தலாம் என்ற அதிகார வெறி கொண்டு அலைந்து கொண்டு இருந்த போது.. இந்தியா அவர்கள் கண்ணை உறுத்தியது... ஐரோப்பாவிலிருந்து அப்படியே கிழக்கே நில பகுதி வழியாக சென்றால் இந்தியாவை சென்றடையலாம் என்று அவர்களுக்கு தெரியும் ஆனால் அதை எளிமையாக மேற்கு நோக்கி கடல் வழியே சென்றடைய முடிந்தால் நன்றாக இருக்கும் என சிந்தித்தார்கள் .. இத்தாலியை சேர்ந்த கொலம்பஸ் தான் இந்த ஐடியாவை கொடுத்தார்..

பிறகு ஏசுபாணிய பேரரசு இவர் கேட்ட பொருள் உதவிகளை செய்து இவரை கடல் பிரயானத்திற்கு அனுப்பியது... இந்தியாவின்  கடல் மார்க்க வழியை கண்டுபிடிப்பது தான் இவர் நோக்கம்.
அந்த நோக்கத்தின் நோக்கம் ....அடிமையாக்க ஒரு புது நாட்டை தேடுவது..

மேற்கு நோக்கி அப்படியே பிரயாணம் செய்து கொண்டு போய் 1492 இல் இந்தியாவை கண்டு பிடித்து விட்டேன் என்று கூவி கொண்டு அவர் கண்டு பிடித்தது அமெரிக்காவை...
அமெரிக்காவை கொலம்பஸ் கண்டு பிடிக்கும் முன்பே அதில் ஜப்பான் உள்ளிட்ட  பல நாடுகளில் இருந்து பழங்குடியினர் சென்று குடியேறி இருக்கும் நிலையில் கொலம்பஸ் தான் அமெரிக்காவை கண்டு பிடித்தது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்..? வெளி உலகுக்கு தெரியாமல் இப்படி ஒரு கண்டம் இருப்பதை உலகிற்கு விளம்பரம் செய்தார் கொலம்பஸ் அவவளவு தான்.

இன்னோரு கொடுமை என்ன வென்றால் தன் வாழ்நாள் முழுதும் தான் கண்டு பிடித்தது இந்தியாவை தான் என்று நம்பிகொண்டே இருந்து கடைசிவரை உண்மை தெரியாமல் இறந்து போனார். அவருக்கு பின் அமெரிக்கா வை சென்றடைந்த அமெரிகொ வேஸ்புகி தான் அட லூசு பசங்களா இது இந்தியா இல்ல டா என்று கண்டு சொன்னார் எனவே அந்த நாட்டிற்கு அவர் நினைவாக அமேரிக்கா என பெயர் இட்டனர்...

கொலம்பஸ் எதையும் உருப்படியாக கண்டு பிடித்த கண்டுபிடிப்பாளன் அல்ல என்பதை பார்த்தோம் இனி அவனது கொடூர முகம் எப்படி பட்டது என்பதை பார்ப்போம்..

அவர் முதல் முதலில் அமெரிக்காவில் ( அவரை பொறுத்த வரை இந்தியாவில்) காலடி எடுத்து வைத்த போது அங்கே குடி இருந்தவர்கள் அரவாக் எனும் பழங்குடிகள். இவரது கப்பல் தரைத்தட்டியதும் இவரது சரக்கு களை மீட்க ஆட்களை கப்பலில் இருந்து இறக்க அங்கிருந்த பழங்குடியினர் அன்பாக ஓடி வந்து உதவினார்கள் பாவம் அவர்களுக்கு தெரியாது வந்திருப்பது அந்த இனதுக்கே எமன் என்பது.
வந்திருப்பவனின் நோக்கம் புரிந்த போது காலம் கடந்து விட்டிருந்தது.. அந்த இடத்தில் தங்க  சுரங்கத்திற்கு வேலை செய்ய அங்கத்தி ஆட்களையே பயன்படுத்தினான் கொலம்பஸ் ..உழைப்பாளராக அல்ல அடிமையாக .

 ஒரு நாளைக்கு குறிப்பிட்ட தங்கத்தை எடுத்து தராத பழங்குடியினரை கையை வெட்டி தண்டனை கொடுத்தான் கொலம்பஸ்.. தனக்கு அடிப்பணியாத மக்களை வரிசையாக வைத்து காலை வெட்டினான் .. அவர்களது பெண்களை தனது ஆட்களுக்கு பரிசாக அளித்தான் கொலம்பஸ்..
நன்றாக வேலை செய்யும் தனது ஊழியர்களுக்கு  கொலம்பஸ் கொடுக்கும் பரிசு..அரவாக் இன பெண்கள்.

அவர்களது குழந்தைகளை எறியும் நெருப்பில் போட்டு பொசுக்கினான் ஆண்களை இழுத்து வந்து கூடாரத்தில் கட்டி போட்டான் பல ஆயிரகணக்கானவர்களை தனது அடிமையாக ஆக்கினான்.
திரும்பி ஊருக்கு போகும் போது நூற்று கணக்கான சிறுமிகளை அள்ளி சென்று ஐரோப்பாவில் விற்று காசாக்கினான்..
தனது மூன்றாவது பயணத்தில் இத்தாலி சென்ற இந்த கொலம்பஸ் வரும் போது வேட்டைநாய்களை கொண்டு வந்தான் .. எதற்கு தெரியுமா தன்னிடம் மாட்டி கொண்ட பல பெண்களை குற்றுயிர் குலைஉயிர் நிலையில் வைத்திருந்தான் கொலம்பஸ் அவர்கள் அனைவரையும் நாய்களுக்கு இறையாக்கினான்..

இந்த நாய் கேம் அவனுக்கு மிக பிடித்து போயிற்று... பிறகு தனக்கு மதிக்காத பழங்குடியினர் களை வெட்டி நாய்க்கு போட்டான். ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அரவாக் இன மக்கள் பல பேர் கும்பலாக கூட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்..
குறிப்பாக சிறுமிகள் மிக கேவலமாக சீரழிக்க பட்டார்கள்.
தனது டைரி குறிப்பில் ஒரு முறை இப்படி குறிப்பிட்டான் கொலம்பஸ் "வயது வந்த பெண்களின் எண்ணிக்கை குறைந்து போன காரணத்தால் எங்கள் ஆட்கள் 10 ..12 வயது சிறுமிகளை தேடி சென்றார்கள்)

இவ்வளவு செய்திருக்கிறார்களே அந்த அரவாக் இண மக்கள் எதிர்த்து போராட வில்லையா என நீங்கள் கேட்கலாம்.. அவர்கள் சண்டைபோட அவர்களிடம் ஆயுதமே இல்லை ..காரணம் அவர்கள் இனத்தில் சண்டை சச்சரவு ஏதும் இருந்திருக்க வில்லை... ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக அன்பாக அனைவரும் ஒரு குடும்பமாக வாழும் மிகவும் அப்பாவியான வெள்ளந்தி மனிதர்கள் அரவாக் இனத்தவர்கள்..

இது வரை நான் சொன்னது உங்களுக்கு கொலம்பஸ் மேல் கோபத்தை வெறுப்பை உண்டு பண்ணாமல் இருக்கலாம் ஆனால் இப்போது சொல்ல போவது உங்களை கொலம்பஸ் ஐ வெறுக்க வைக்கும் ..அதாவது சற்றே சிந்தித்து பாருங்கள்.. அந்த இனத்தை இந்தியர் என நினைத்து தான் இவ்வளவு கொடுமைகளை செய்துள்ளான் கொலம்பஸ் ஒரு வேலை உண்மையிலேயே அவன் உண்மையான இந்தியாவை வந்தடைந்து இருந்தால் அவன் வந்தடைந்த இந்திய இடம் எப்படி பட்ட கொடுமையை சந்திதிருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

19. "நியூட்டன் மற்றும் கெப்ளர் "


ஐன்ஸ்டைனை பற்றி கட்டுரை எழுதியபோது அதில் நியூட்டனின் கண்டுபிடிப்புகளை ஐன்ஸ்டைன் விஞ்சி விட்டார் என்கிற ரீதியில் கொஞ்சம் எழுதி இருப்பேன்.
அதற்காக நியூட்டனை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்.

நியூட்டன் என்றால் நமக்கு அவரது மூன்று விதியை தவிர வேற ஏதும் தெரிவது இல்லை(அதிலும் பல பேருக்கு மூன்றாம் விதிமட்டும் தான் நினைவில் இருக்கும்) ஆனால் அவர் பெருமைகள் இன்னும் நெறய உள்ளது.

இன்றைக்கு தேதிக்கும் புவியின் சுற்றுவட்ட பாதையில் ஒரு செயற்கைக்கோளை நிலை நிறுத்த நியூட்டனின் பார்முலாவைத்தான் பயன்படுத்துகிறார்களே தவிர ஐன்ஸ்டைனின் E=MC2 ஐ அல்ல.
நியூட்டன் தனது மகா கண்டுபிடிப்பை கண்டுபிடித்த போது அவருக்கு வயது வெறும் 23 தான் அவர் தலையில் ஒரு மாங்காய் விழுந்த பின் அவர் புவிஈர்ப்பு விசையை கண்டு கொண்டார் அல்லவா (சும்மா change கு சொன்னேன் அது ஆப்பிள் தான்) அதன் பின் அவர் என்ன செய்தார் தெரியுமா அண்ணாந்து வானத்தை பார்த்தார் நிலவை பார்த்து ஒரு கேள்வி கேட்டார் அந்த ஆப்பிள் என் தலையில் விழுகிறது என்றால் இந்த நிலவும் என் தலையில் விழுமா (அறிஞர்களின் கேள்விகளில் எப்போதாவது முட்டாள் தனம் தெரிந்தால் அதற்கு ஒரே அர்த்தம் தான் நாம் முட்டாளாக இருக்கிறோம்)

பிறகு அதற்கு விடையை அவரே கண்டு கொண்டார் அதாவது நிலா ஏற்கனவே பூமியை நோக்கி விழுந்து கொண்டு தான் உள்ளது.. அப்புறம் ஏன் அது தனது தலையில் விழ வில்லை என்றால் அது புவியை வட்ட பாதையில் சுற்றுகிறது இந்த நிலையில் அதன் வேகம் அதிகமாக இருப்பதால் பூமியை நெருங்காமல் தவிர்த்து கொண்டே போகிறது..

அதன் பின் நிலவின் நகர்வை ஆராய்வதில் மும்மரமாக இறங்கிவிட்டார் அந்நிலையில் அதை விளக்க போதிய கணித வசதி இல்லை எனவே தானே அதற்கான கனிதத்தை உண்டாக்கினார் அதன் பெயர் கால்குலஸ் ( அது ஏற்கனவே பயன்பாட்டில் இருந்தது தான் இவர் தான் அதை கொஞ்சம் மெருகேற்றி பயன்படுத்தியவர் என்று சொல்கிறார்கள்)

நியூட்டனின் மூன்று சமன்பாடுகள் இருக்கிறதே .. அது தொழிற்சாலையில் நகரும் இயந்திரம் முதற்கொண்டு வானில் நகரும் கோள்கள் வரை இயக்கத்தை விளக்க கூடியவை..

முப்படகதை கொண்டு ஒளி பிரிதல் ஏற்படுவதை வைத்து ஒளி யில் 7 வனங்கள் உள்ளதை அவர் கண்டு கொண்டார் 7 நிறங்கள் அடங்கிய சக்கரத்தை சுழற்றினால் அது வெள்ளையாக தெரிவதை நாம் பள்ளியில் செய்து இருப்போமே அதை முதலில் செய்தது நியூட்டன் தான் அந்த டிஸ்க் கு பெயரே நியூட்டன் டிஸ்க் தான்.

ஒரு முறை அவர் இருந்த ஊரில் ஒரு வால் நட்சத்திரம் தோன்றியது .. ஊர் மக்கள் அதை பற்றி புரியாமல் பேசி கொண்டார்கள்.. நியூட்டன் மட்டும் அதை ஒரு தொலை நோக்கி கொண்டு கண்காணித்த வண்ணம் இருந்தார் . பிரதிபலிப்பு வகையை சார்ந்த அந்த தொலை நோக்கி .... அவருடைய சொந்த கண்டுபிடிப்பு.

ஒருமுறை அவர் நண்பர் எட்மெண்ட் ஹெலி ..பெரும் செல்வந்தர் அவரை பார்க்க அவர் வீட்டுக்கு வந்திருந்தார். அந்த வால் நட்சத்திரம் தோன்றி இருந்த நேரம் அது.. நியுடனை பாத்து கேட்டார் ..
மாம்ஸ் அந்த வால் நட்சத்திரத்த பாரத்தியாடா ?
அதற்கு நியுடன் சொன்ன பதில்
"மச்சி... அத பாக்குறது மட்டும் இல்ல மச்சி டெய்லி அத கண்கானிக்கவும் செய்ரன் அதோட நகர்வை கணக்கிட்டு ஒரு கணக்கீடு வச்சி இருக்கன் உனக்கு மேட்டர் தெரியுமா அந்த வால் நட்சத்திரம் என் கணக்கீட்டை இம்மி பிசகாம follow பண்ணுது மச்சி..."
இதை கேட்டு அசந்து போன hally
"பங்கு... நீ கெத்து ..பங்கு.. சான்ஸே இல்ல செம டா நீ மட்டும் இத அப்படியே புக்கா  போட்டனு வையன் செம்மையா இருக்கும்" என உற்சாக படுத்த அதற்கு நியூட்டன் நம்ம கிட்ட அவ்ளோ வசத்திலாம் இல்ல மச்சி என மறுக்க .."நாம இப்படியா மச்சி பழகனோம்.. நான் தரண்டா மாப்ள உனக்கு காசு " என உற்சாக படுத்த அப்படி பிறந்ததுதான் ப்ரின்சியா என்கிற புத்தகம்..இதுவரை வெளிவந்த அறிவியல் புத்தகங்களில் மிக சிறப்பான புத்தகமாக அது கருத படுகிறது. அதன் பின் இன்னாள் வரை வந்த இயற்பியல் மற்றும் அண்டவெளி ஆறாசச்சிக்கு இது முக்கிய ஆரம்ப மேடையாக விளங்கியது.

அடுத்து கெப்ளர் பற்றி பார்ப்போம்.

"கெப்ளர் எனும் கெத்து பார்ட்டி"

நியுட்டன் கட்டுரயில் நான் அவர் நிலவின் இயக்கத்தை கவனித்து கணக்கு பன்னதை சொன்னது நினைவு இருக்கலாம்.
அவர் அதை கவனிக்கும் முன்பே கோள்களின் இயக்கத்தை பற்றிய விதிகளை எழுதியவர்தான் கெப்ளர்... நியூட்டன் சிந்தித்ததே இவர் சிந்தனையின் தொடர்ச்சி தான்.

ஒரு முறை நியூட்டன் பேசும் போது "நான் இந்த பிரபஞ்சத்தை பல வகைகளில் கவனித்து இருக்கிறேன் ஆனால் நான் பார்த்தது தனியான சிந்தனை அல்ல ஏற்கனவே சிந்தித்த பல மேதைகளின் தோளில் நின்று தான் நான் இந்த உலகத்தை பார்த்தேன்" என்றார். அப்படி அவர் நின்ற தோள்.. கெப்ளருடைய தோள்கள் தான்.

அப்படியே கொஞ்சம் கீழே இறங்கி கெப்ளர் யார் தோளில் நிற்கிறார் என கவனித்தால்... அவர் கோபர் நிக்கோலஸ் தோளில் நிற்பது தெரியும் .(சூரியனை மையமாக கொண்டு தான் மற்ற கோள்கள் சுற்றிவருகின்றன என முதன்முதலில் சென்னவர்தான் இந்த கோபர்..)

நியூட்டனின் மூன்று விதிகள் பற்றி நமக்கு தெரியும் அதே போல தான் கெப்ளரும் தனக்கென மூன்று விதிகளை வைத்துள்ளார்..நியூட்டனின் விதிகள் இயக்கத்தை விவரிப்பதை போல கெப்ளரின் விதிகள் மூன்றுமே வானத்தில் கோள்களின் நகர்வை பற்றி விவரிப்பவை.

அந்த மூன்று விதிகளை பற்றியும் பார்ப்போம்...

விதி ஒன்று :
கோள்கள் தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை நீள் வட்ட பாதையில் சுற்றிவருகின்றன..இந்த விதி எளிமையாக புரிகிறது (அது ஏன் அப்படி நீள் வட்ட பாதையில் அமைந்துள்ளது என அவரை கேட்டால்.. மன்னிக்கணும் தம்பி எனக்கே தெரில என்பார் காரணம் அதை ஈர்ப்பு விசை கொண்டு விளக்கம் அளித்தவர் அவருக்கு பின்னால் வந்த நியூட்டன்)

விதி இரண்டு :
 சூரியனிலிருந்து கோளுக்கு வரைய படும் நேரக்கோடானது ... சம நேரத்தில் சம தூரத்தை கடக்கும்..
இந்த விதி எளிமையாக புரியவில்லை..அப்படித்தானே..

என்ன சொல்ல வருகிறார் இந்த விதியில்?
அதை புரிந்து கொள்ள நீங்கள் ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது கோள்களின் பாதை நீள்வட்டம் என நமக்கு தெரியும். அப்படி நீள்வட்டத்தில் கோள்கள் தூரமாக கடந்து செல்லும் போது போது அவை தொலைவில் உள்ள போது வேகம் குறைவாகவும் நெருங்கி வரும் போது வேகம் அதிகமாகவும் இருக்கும் .

கெப்ளர் 2 ஆம் விதிப்படி கோள்களில் இருந்து சூரியனுக்கு ஒரு நேர்கோடு வரைந்து கொள்ளுங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உதாரணமாக 5 நிமிடத்திற்கு என வைத்து கொள்ளுங்கள். அந்த 5 நிமிடத்தில் அந்த நேர்கோடு கடக்கும் தொலைவு இருக்கிறதே... அதை நீங்கள் அந்த கிரகம் பயணித்து சூரியனுக்கு மிக அருகாமையில் வரும் போது அளந்தாலும் அதே சமமான தூரத்தை தான் கடக்கும்.
அதெப்படி நீள்வட்டம் நெருங்கி வரும் போது குறுகளாக தானே இருக்கும் என நீங்கள் கேட்டால் நெருங்கி வரும் போது வேகம் அதிகம் என பார்த்தோம் அல்லவா எனவே அதிக பரப்பை இம்முறை கடக்க முடியும்..ஆக மொத்தம் அந்த 5 நிமிஷதை எங்கே அளந்து பார்தாலும் அது கடந்த தூரம் சமமாக தான் இருக்கும் (விதி புரிந்ததா?)

இவர் அடுத்ததா சொன்ன மூன்றாவது விதி கொஞ்சம் சுவாரஷ்யமானது..

அதாவது இருமடி தெரியும் அல்லவா.. ஒரு என்னை அதே எண்ணால் பெருக்குவது... உதாரணம் 2 இன் இருமடி என்றால் 2 X 2 =4 .
அதே போல cube தெரியும் அல்லவா அதாவது ஒரு எண்ணை அதே எண்ணால் இருமுறை பெருக்குவது .. உதாரணம் 2 இன் க்யூப் என்றால்  2X2X2 = 8

இப்போ மூன்றாவது விதியில் அவர் சொன்ன விஷயம் என்னவென்றால்... சூரியனில் இருந்து எந்த ஒரு கோளின் தூரத்தையாவது எடுத்து கொண்டு அதன் கியூபை கணக்கிட்டால்... அது அந்த கோள் சூரியனை மொத்தமாக சுற்றிவரும் சுற்றுவட்ட பாதையின் தொலைவின் இருமடிக்கு சமமாக உள்ளது.. எந்த கோளை எடுத்து கொண்டாலும் இது ஆச்சர்யமாக பொருந்துகிறது..

இது எப்படி நடக்கிறது என்றும் அவரை கேட்காதீர்கள்.. ஏன் என்றால் இதை கண்டு பிடித்தபோது அவரே நம்மை போல தான் "அட இது எப்படி கரெக்டா அப்படி வருது " என ஆச்சர்ய பட்டுகொண்டுதான் இருந்தார்..

கலிலியோ ஒரு தொலைநோக்கியை கண்டு பிடித்தார் என கேள்விபட்டிருப்பீர்கள்... அதற்கு முன்னாடியே தொலைநோக்கியில் எப்படி ஒளி பிரதி பலிக்கிறது என ஆராய ஒரு மாதிரி தொலைநோக்கியை கண்டுபிடித்தார் கெப்ளர் .இதை அடிப்படையாக கொண்டு தான் கலிலியோ அந்த தொ. நோ. வை கண்டு பிடித்தார்.

இவருக்கு மரியாதை சேய்யும் விதமாக நாசாவின் பின்னாளில் பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்கும் தொலை நோக்கு கருவிக்கு கெப்ளர்விமானம் என பெயரிட்டார்கள்கள்... மேலும் அது கண்டு பிடிக்கும் கிரகங்கள் எல்லாத்துக்கும் கெப்ளர் பெயரை கொண்டே பெயர் சூட்டினார்கள் (உதாரணமாக கெப்ளர் 186 ..கெப்ளர் 442 இப்படி)

இவ்வளவு தூரம் வானத்தை உற்று பார்த்த கெப்ளர் அவர்கள் கண்பார்வை பாதிக்க பட்டவர் என்பது தான் ஆச்சர்யம்..(தொலை நோக்கியில் பாத்து பாத்து தான் இப்படி ஆயிடுச்சி என்கிறார்கள்)..
ஆனால் வானவியளில் கெப்ளர் சாதனை மகத்தானது ..குறிப்பிடத்தக்கது .
கெப்ளர் ஒரு கெத்து பார்ட்டி என்பதில் சந்தேகம் இல்லை.


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

20. "நியூட்ரினோ ஒரு அடங்காத துகள்"

"அடக்கினா அடங்கற ஆளா நீ" ...கபாலி பாட்டு யாருக்கு பெருந்துகிறதோ இல்லையோ நியூட்ரினோவுக்கு கண்டிப்பாக பொருந்தும்...
இது ஒரு மாய துகள் என்று அறிவியல் அறிஞர்களாலேயே அழைக்க படுகிற அளவிற்கு தனித்தன்மை வாய்ந்தது
இந்த நியூட்ரினோ .

ஐன்ஸ்டைன் எனும் அப்பாடக்கரையும் அவரது அசகாய சூர கோட்பாடுகளை சவால் விட்டு தோற்கடிக்க கூடிய சாத்திய கூறு கொண்ட ஒரே சக்தி இந்த நியூட்ரினோ மட்டும் தான் அது எப்படி என்பதை கால போக்கில் (கட்டுரை போக்கில்) விவரிக்கின்றேன் முதலில் இந்த ஐட்டம் என்ன ஏது என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த நியூட்ரினோ என்ற பெயரை அடிக்கடி நீங்கள் தமிழ்நாட்டில் கேள்விப்பட்டிருபீர்கள். நியூட்ரினோ ஆய்வு தேனீ மலை பகுதியில் செய்ய பட இருப்பதாகவும் அது நம் இயற்கை வளத்தை அழிக்கும் என்று ஒரு குழு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இருப்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் (என்ன தான் அறிவியல் காதலனாய் இருந்தாலும் இந்த விஷயத்தில் அந்த ஆய்வை கடுமையாக எதிர்பவர்களில் நானும் ஒருவன் அதற்கான நியாயமான காரணத்தை வேறு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்)
இப்போது நியூட்ரினோ...

இதை பற்றி விளக்க நான் கதையை வேறு இடத்தில தொடங்கி விவரிக்க வேண்டியிருக்கிறது.
அதாவது அணுவில் இருந்து..
அணுவில் புரோட்டான் எலக்ட்ரான் நியூட்ரான் தவிர இன்னும் நுணுக்கமாய் பார்த்தால் பல sub attamic துகள்கள் இருப்பது தெரியும் (அதன் பெயர்களெல்லாம் மியுவான் டவுவான் என செம காமெடியாக இருக்கும்)
1789 இல் ஆண்டான் வான் லவாய்ச்சியர் (கேள்வி பட்ட பெயராக இருக்கிறதா? உங்கள் படபுத்தகத்தில் படித்தது) தான் முதன் முதலில் அனு என்ற ஒன்று இருக்கும் போல இருக்கே பா என்று யூகித்து சொன்னவர்.
அதன் பிறகு அது பல பெயரால் உறுதி செய்யப்பட்டது...மேலும் அதன் பின் வந்தவர்கள் அதில் என்னவெல்லாம் அடங்கி உள்ளது என்று ஒவ்வொன்றாக கண்டு பிடிக்க தொடங்கினார்கள்..

 1897 இல் j.j தாம்சன் அணுவில் அடங்கி உள்ள எலக்ட்ரானையும் அதனை தொடர்ந்து ரூதர் போர்ட் புரோட்டான் மற்றும் நுற்றானையும் கண்டு பிடித்தார் அதன் பின் அனு உடைக்க முடியாதது என்ற கருத்தை உடைத்து விட்டு அதற்குள் இன்னும் என்ன இருக்கு என்று டார்ச் அடித்து பார்த்து..பல நுண் துகள்கள் இருப்பதை கண்டு பிடித்து விட்டார்கள்

அந்த நுண்துகளில் இரண்டு கோஸ்டி இருக்கிறது ...ஒன்று அடிப்படை துகள் என்று அழைக்க படுகிறது அவைகள் மேலும் சிறிய துகள்கள் எதனாலும் கட்டமைக்க படாதது...இன்னொன்று கூட்டு துகள் இது பல வகை கூட்டு துகள்கலால் ஆனது....இதை விவரிக்க தான் இரண்டு அறிவியல் பிரிவுகள் தேவை படுகிறது...ஒன்று partical physics (துகள் இயற்பியல்)..இனோன்று atom physics (அனு இயற்பியல்)

இதை போன்ற ஒரு Sub attamic partcals களின் லெப்டான் என்ற கொத்தில் உள்ள ஒரு சிறிய துகள் தான் நியூட்ரினோ....
இது ஒரு அதிசய மந்திர துகள்..
மனிதன் கண்டுபிடித்ததிலேயே மிகவும் லேசான ...எடை குறைந்த ஒன்று என்றால் (யாருப்பா அங்க பின்னால பஞ்சு னு சொன்னது)அது இந்த நியூட்ரினோ துகள் தான் .அறிவியலாளர்கள் கண்ணில் சிக்காமல் சுத்தி கொண்டிருந்த இதை கண்டுபிடித்ததே ஒரு தற்செயல் நிகழ்வில் தான்....

1903 ஆம் ஆண்டு வொல்ப் கேங் பாளி என்ற அறிஞர் பீட்டா துகளை ஆராய்ந்து கொண்டிருந்தார் ஒரு நியூட்ரானை புரோட்டான் மற்றும் எலக்ட்ரானாக பிரித்து கொண்டிருந்தார்...பக்கத்து வீட்டு சிறுவனிடம் 4 வாழை பழம் வாங்கி கொடுத்து இருந்தீர்கள் அவன் வீட்டில் சென்று கொடுக்கும் பொது 3 தான் கொடுத்தான் என்றால் வாழை பழம் எப்படி குறைந்தது என்று நீங்கள் சரியாக கண்டு பிடித்து விடுவீர்கள் அவன் தான் culprit என்று....

ஆனால் நம்ம வொல்ப் ..நியூட்ரானை எலக்ரானாகவும் புராட்டானாகவும் பிரிக்கும் முன் இருந்த ஆற்றல்  அதை பிரித்த பின் குறைந்து போய் இருந்ததை கவனித்தும் குற்றம் ...நடந்தது என்ன என்பதை கண்டு பிடிக்க முடியாமல் குழம்பினார் (ஆற்றல் அழிவின்மை விதி படி அப்படி அற்றல் அழிய முடியாது)  எங்க தான் போச்சு அந்த ஆற்றல் என்று மண்டையை சொரிந்து கொண்டு போய் விட்டார் ...அதன் பின் மூன்று ஆண்டுகள் கழித்து வந்த என்றிகொ பெர்மி என்பவர் அந்த ஆற்றல் ஒரு மாய துகளால் கடத்த பட்டிருக்கிறது என்றார் அந்த மாய துகள் தான் நியூட்ரினோ..

இதன் எடை ஒரு மில்லி கிராம் இல் கோடி கோடி கோடி கோடி(ஆம் 4 முறை தான்) மடங்கு சிறியது....இதன் எடையை இருக்கிறது என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் பெரிதாக வித்தியாசம் இருக்காது .அவ்வளவு சிறிய துகள் இவை.... இந்தளவு குறைந்த துகள் என்பதால் இதனால் சில மாயஜாலத்தை செய்ய முடியும்...

நீங்கள் பேய் படங்களில் வரும் ஆவிகள் அப்படியே சுவற்றை ஊடுருவி செல்லும் காட்சி பார்த்திருப்பீர்கள் ...உண்மையில் ஒளியால் கூட சுவற்றை ஊடுருவ முடியாது ஆனால் இந்த மாய துகள் ஒவ்வொரு வினாடியும் பல பில்லியன் கணக்கில் உங்கள் சுவற்றை அல்ல முழு பூமியையே இந்த அப்படியே இந்த பக்கத்திலிருந்து நுழைந்து அந்த பக்கம் வெளியேறி போயி கொண்டே இருக்கிறது...
ஒவ்வொரு வினாடியும் உங்கள் உடலை பல கோடி நியூட்ரினோ கடந்து சென்று கொண்டிருக்கிறது...

இந்த துகள்கள் சுத்தமாக மின்சுமை அற்றது என்பதால் எத்தனையோ துகளை கட்டுப்படுத்த உதவும் எலெக்ட்ரோ மாக்னடிக்கின் பாச்சா இதன் முன் பலிப்பது இல்லை..(தனது இந்த தன்மையால் தான் இதற்கு இந்த பெயரே..நியூட்ரான் என்றால் மின்சுமை அற்ற..).சரி இது எப்படி பட்ட துகள் என்பதை ஆராயலாம் என்றால் அதில் ஒரு சிக்கல் எந்த ஒரு துகளை பற்றிய கேரக்டர்களை நாம் தெரிந்து கொள்வது அது மற்றவற்றுடன் வினை படுவதை வைத்துதான்...ஆனால் நியூட்ரினோ எதனுடனும் வினைபுரிவது இல்லை...அது மதிக்காத போக்கிரி பையனை போல் ஒரு அடங்காத துகள் .அதை ஆராயவும் முடியாமல் விஞாணிகள் தினறினார்கள்..

அராய்ச்சியாளர்களுக்கு நியூட்ரினோ ஓரு அடங்காத துகளாகவே இருந்து வந்தது  என்றாலும் 1956 இல் ஒருவழியாக ப்ரெட்ரிக் ரெய்ஸ மற்றும் கெய்ல் கவன் இதை ஆதார பூர்வமாக கண்டு பிடித்து சொல்லி நாப்பது வருடங்களுக்கு பின் நோபல் பரிசை தட்டி சென்றார்கள்....

இப்போது இவர்கள் இதை கண்டு பிடித்தது எப்படி என்பதை விளக்க முயற்சிக்கிறேன்...
அதாவது நீரில் இவர்கள் பொருத்தி இருந்த ஒரு கருவி ..காமா கதிர் வந்து மோதினால் ஒளிர கூடியது....அந்த காமா ....பாசிடிரான்களால் உற்பத்தி செய்யப்பட கூடியது.... அந்த பாசீட்ரான..நீரின் புரோட்டானில் நியூட்ரினோ வந்து மோதினால் உண்டாக கூடியது ஆக மொத்தம் நியூட்ரினோ தண்ணீர் வழியே கடந்து சென்றால் இவர் கருவி ஒளிரும்...

இப்போது உலகம் எங்கும் நடத்த படும் நியூட்ரினோ ஆய்வுகளின் ஆய்வு கூடங்கள் மகா பிரமாண்டமானவை எல்லாமே பூமிக்கு அடியில் சுரங்கத்தில் செய்யப்பட கூடியவை....காரணம் தரை தளத்தில் உள்ள காஷ்மிக் கதிர்கள் நூற்றினா போன்ற விளைவை ஏற்படுத்த கூடியவை என்பதால் செய்ததது நியூட்ரினோ வா இல்லை காஸ்மிக் கதிரா என்று தெரியாமல் போய் விடும் .
இதற்காக இவர்களுக்கு உள்ளேயே ஒரு லாரி ஓடும் அளவு சுரங்கம் பூமி அடியில் தேவை
இதற்காகவே இவர்கள் உலகில் பல்வேறு காரணங்களுக்காக தோண்ட பட்ட ச சுரங்கங்களை பயன்படுத்தி கொள்கிறார்கள் k.g.f ..kolaar gold field இல் இவர்கள் பல வருடங்கள் இதை செய்தார்கள்.

அமாம் இவ்வளவு கஷ்ட பட்டு அந்த மர்ம துகளை மனிதன் எதற்கு ஆராய வேண்டும்..? காரணம் மனிதன் இது வரை பிரபஞ்சத்தை புரிந்து கொண்டிருக்கிறான் என்றால் அது அங்கேயிருந்து வரும் ஒளியை வைத்துதான்....அதே போல இந்த நியூட்ரினோ துகள் பல கேலக்சிகளை தாண்டி பயணம் செய்ய கூடியவை....பல அணுக்கரு வெடிப்பில் நட்சத்திர அழிவில் இருந்து பிறந்து வர கூடியவை....எனவே இந்த துகளை  நாம் புரிந்து கொண்டால் பல பிரபஞ்ச ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம்...

கடைசியாக ஒன்று...இதற்கு எடை உண்டா இல்லையா....என்பது தான் இப்போ பெரிய கேள்வி காரணம் இதற்கு கொஞ்சமே கொஞ்சமாயினும் எடை இருந்ததால் கூட இதால் ஓளி வேகத்தை மிஞ்ச முடியாது....அப்படி ஒருவேளை எடை இல்லை என்றால் இது ஒளி வேகத்தையே மிஞ்சிவிடும் அப்படி மிஞ்சினால் ஐன்ஸ்டைன் சொன்ன கோட்பாடுகள் கேள்விக்குரியவைகள் ஆகிவிடும்...

இதை ஆய்வு செய்ய புறப்பட்ட குழு ஒன்று2012 ஆம் ஆண்டு ஆய்வின் போது இந்த துகள்கள் ஒளி வேகத்தை மிஞ்சியதை கண்டு குதித்து எழுந்தனர் நாங்கள் புது கண்டு பிடிப்பை கண்டு பிடித்து விட்டோம் என உற்சாகமாய் கூவினார் ஆனால்...
மீண்டும் அதை பரிசோதனைக்கு  ஆளாக்கி பார்த்தவர்கள் அவர்கள் அளந்த கருவியின் துல்லிய குறைபாட்டால் வந்த விளைவு என்பதை கண்டனர் ...இன்று வரை மிக சரியாக நிரூபிக்க பட வில்லை என்றாலும் எந்த கணத்திலும் எந்த ஆய்விலும் தான் ஒளியை மிஞ்சும் கில்லாடி என்று நியூட்ரினோ எனும் அடங்காத துகள் தன்னை நிரூபிக்கலாம்.


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

21."பூமியின் மையத்தில் "

Center core of the earth அதாவது பூமியின் மைய்ய பகுதியில் என்ன இருக்கும் அது எப்படி இருக்கும் என என்றைக்காவது சிந்தித்தது உண்டா?

Journey to the center of the earth படத்தில் அங்கே travel செல்வதை போல காட்டி இருப்பார்கள் அனால் மனிதன் தோண்டிய அதிக பட்ச ஆழமான சுரங்கங்கள் சில கிலோமீட்டர் தான்.
ஆனால் பூமியின் மையத்தை சென்று பார்க்க கிட்டத்தட்ட 11000 கிலோமீட்டர் ஆழம் செல்ல வேண்டும் ..பூமியின் இந்த முனையில் தோண்டி அடுத்த முனையில் வெளிவர வேண்டும் என்றால் (இந்தியாவில் அப்படி தோண்டினால் நாம் எட்டி பார்ப்பது அமெரிக்காவில் இருக்கும் காரணம் உலக உருண்டையில் நமக்கு நேர் எதிரே இருப்பது அமேரிக்கா) அதற்கு நாம் 23000 கிலோமீட்டர் தோண்ட வேண்டும்.

இந்த முனை to அந்த முனைக்கு ஓட்டை போட்டு gravity இல் இயங்கும் ஒரு கற்பனை வண்டி செய்தால் அது எப்படி இயங்கும் என்பதை பற்றி  எனது 9.8 என்ற கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன்.

ஆனால் அது ஒரு கற்பனை தானே தவிர உன்மையில் மையத்தை உலகில் உள்ள எந்த கருவியை கொண்டும் நெருங்க முடியாது காரணம் அதன் வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ் (சூரியனின் மைய பகுதி எவ்வளவு தெரியுமா? 15 கோடி டிகிரி செல்சியஸ்)

பூமியின் மைய பகுதியில் இருப்பது முழுக்க முழுக்க இரும்பு அதுவும் எவ்வளவு தெரியுமா கிட்டத்தட்ட 1200 கிலோ மீட்டர்களுக்கு.. அதுவும் நடு பகுதி கெட்டியாகவும் அதைசுற்றி திரவநிலையிலும் இருப்பதாக சொல்கிறார்கள்.

பூமி பொதுவாகவே மேல் பகுதி நன்கு கடினமான ஒடுகளால் (நாம் பார்க்கும் தரை) ஆனது அதற்கு கீழ் கொஞ்சம் கொழகொழா.. ஈர களிமண் போன்ற பகுதி அப்புறம் இன்னும் உள்ளே செல்ல செல்ல திரவநிலை பாறை இப்படி தான் அமைந்துள்ளது.. பூமி உருவாகும் போதே சுழற்சியால் மைய்ய நோக்கு விசையால் கனமான பொருட்கள் நடுவேவும் கணம் குறைந்த பொருட்கள் ஓரத்திலும் ஒதுங்கி கொண்டன.

நடுவே இருக்கும் இரும்பு கருவில் ஓரங்களில் நிக்கல் மற்றும் பாறை குழம்பு மேக்மாவும் கலந்துள்ளது.. பூமியின் மிக சூடான பகுதி இது தான். இவ்வளவு சூடு இதற்கு எங்கே எப்படி வந்தது என்றால் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் இருந்து பிரிந்து வந்த போது இருந்த சூடு படிப்படியாக குறைந்து ஆறி இறுகி போக இன்னும் மைய பகுதி மட்டும் வெப்பத்தை சுமந்து கொண்டுள்ளது.

பூமியின் இந்த மைய பகுதி மட்டும் மற்ற பகுதியை விட அதிகம் வேகமாக சுழலுகிறது..
450 கோடி ஆண்டுகளாய் இன்னும் சூடு குறையாமல் இருக்க சில பல காரணம் இருக்கிறது..

1) பூமி ஆரம்ப நாட்களில் பெற்ற வெப்பமே இன்னும் தீராமல் உள்ளது.
2) friction effect அதாவது உராய்வு இருக்கும் இடம் சூடு இருக்கும் என நமக்கு தெரியும். பூமி பல அடுக்குகள் வெவேறு வேகத்தில் சுழலுவதை சொன்னேன் அதில் ஏற்படும் உராய்வு சூடு ஒரு காரணம்.
3)ரேடியோ அக்ட்டிவிடி கொண்ட பொருட்களினால் (அதாவது நிலையில்லாத அணுக்கள் கதிர்வீச்சு மூலம் தொடர்ந்து ஆற்றலை வெளிப்படுத்துவது) உண்டாகும் வெப்பம்
4) மற்றும் வெப்பம் கதிர் வீச்சாக வெளியேறாமல் மூடிவைத்து தடுக்க பட்டு விட்டது (பிளாஸ்க் மாதிரி).
இப்படி பல காரணங்களால் இன்னும் சூடு குறையாமல் உள்ளது.

இரும்பு தொடர்ந்து உரசி கொண்டே சுழல்வதால் தான் காந்த புலமே உண்டாகிறது என்கிறார்கள்..
இந்த காந்த புலம் இல்லை என்றால் நாமெல்லாம் காலி..
காரணம் சூரிய ஒளி நாம் நினைப்பதை போல இதமானது அல்ல அது மனிதனை கொல்லும் UV கதிர்களை நம்மை நோக்கி அனுப்பி கொண்டுள்ளது. அதை நம்மை நெருங்க விடாமல் தடுப்பது இந்த காந்த புலம் தான்.

Center core of the earth என்பது ஒரு கான்செப்ட் தான் உன்மையில் 100 சதம் அங்கே இப்படி தான் உள்ளது என்பதை எந்த அறிவியலாளரும் அடித்து சொல்ல முடியவில்லை

 எனவே
மேல் பகுதியில் நாம் என்னதான் கெத்து காட்டினாலும் பூமியின் மைய்ய பகுதி இன்னும் "நெருப்புடா ...நெருங்கு டா ..முடியுமா" என யாரும் அண்ட முடியாத அதிசயமாக உள்ளது .


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

22. "மரணம் துரத்திய பயணிகள்"


ஏப்ரல் 15 1912 அதிகாலை வட அடலான்டிக் கடலில் நடந்த டைட்டானிக் என்ற சரித்திர சோகத்தை பற்றி எல்லோருக்கும் தெரியும்...
அதில் பயணம் செய்த 2224 பயணிகளில் உயிர் தப்பியவர்கள் 705 பேர்.
1997 இல் வெளிவந்து சக்கை போடு போட்ட டைட்டானிக் திரை படம் மூலம் இந்த தகவல்கள் எல்லாம் உலகில் பல பேருக்கு தெரிய வந்தது...

ஆனால்..

அந்த உயிர் தப்பிய பயணிகளில் பல பேருக்கு அதன் பின் நிகழ்ந்ததை பற்றி நம்மில் பல பேருக்கு தெரியாது. குறிப்பாக டைட்டானிக் இல் உயிர் தப்பிய பல பேர் அடுக்கடுக்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சர்ய படுவீர்கள் உதாரணமாக ...

டைட்டானிக் மூழ்கி 6 மாதம் கழித்து.
ஏனே ராபின்சன் என்ற பெண்மணி ...நீராவி கப்பலில் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.. அவர் டைட்டானிக் இல் ஸ்டீவாய்டிங் வேலை செய்தவர்..

வாஷிங்டன் டாட்ஜ் என்பவர் 1919 இல் தன்னை தானே சுட்டு கொண்டு தன் உயிரை மாய்த்து கொண்டார்.

1927 இல் ஹென்றி வில்லியம் ஒரு மருத்துவமனையின் 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்
இவர் கொஞ்சம் குண்டு ஆக்ருதி கொண்டவர் . டைட்டானிக் இல் தப்பும் போராட்டத்தில் லைப் போட் இல் குதித்த போது ஒரு பெண்ணின் மேல் குதித்து அந்த பெண்ணின் இடுப்பு எலும்பை உடைத்திருந்தார்.

1927 ஜான் நிகின்சன் ..ஒரு தங்கம் தேடும் பேர்விழி... தனக்கு தானே தீ வைத்து கொண்டு இறந்து போனார்.

1945  இல் ஜான் தேயர்... டைட்டானிக் இல் தன் தந்தையை பறிகொடுத்து தாய் உடன் உயிர் தப்பியவர்.. தனது கை நரம்பு மற்றும் கழுத்தை அறுத்து கொண்டு இறந்து போனார்.

1951 ஜான் மார்கன் டேவிட் அதீத போதை வஸ்து வால் இறந்து போனார்..

பில்லிஸ் ஜென் குவிக்கி டைட்டானிக் இல் தப்பிய குழந்தை ..அவர் வளர்ந்து 45 வயதில் தன்னை தானே சுட்டு கொண்டார்...

பிரெட்ரிக் பிலீட்... ஐஸ் பாறை டைட்டானிக் ஐ நெருங்குவதை லைவ் இல் பார்த்து கத்தி கூச்சல் இட்டவர்..
1964 இல் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்..

இப்படி டைட்டானிக் சர்வைவர் பல பேர் தற்கொலை செய்து கொள்வதை ஆராய்ந்த போது அவர்களுக்கு தனிப்பட்ட வெவேறு காரணங்கள் இருப்பது தெரிந்தது..உதாரணமாக வாஷிங்டன் டாட்ஜ் ஊழல் வழக்கில் சிக்கியவர்.. ஜான் நிக்கின்சன் தங்கம் கிடைக்காத விரக்தியில் இறந்தவர்.
இப்படி இருந்தாலும் ...இப்படி இறந்தாலும்....ஆய்வாளர்கள் டைட்டானிக் தற்கொலை களுக்கு காரணம் அவர்களுக்குள் மறைந்திருந்த டைட்டானிக் டிஸாஸ்டர் என்ற பூதம் தான் அவர்களை தற்கொலைகு தூண்டியது என்றார்கள்.. அதாவது அன்று நடந்து கசப்பான அனுபவம் அவர்கள் மனதில் அதீத  பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது என்றார்கள்..

ஆய்வாளர்கள் இப்படி சொன்னாலும் மக்கள் வேறு மாதிரி பேசி கொண்டார்கள் அதாவது தப்பி பிழைத்தவர்களை டைட்டானிக் சாபம் பின் தொடர்வதாக நம்பினார்கள்..

அந்த சாபத்திற்கு ஆளானவர்களில் ஒருவர் தான் masaboomi hosono டைட்டானிக் இல் உயிர் தப்பிய ஒரே ஜப்பானியர்..
அங்கே இறந்தவர் மற்றும் தப்பி தற்கொலை செய்தவர் இவர்கள் இரண்டையும் விட பரிதாபமானவர் ஹோசோனா...
ரஷ்யாவின் ரயில்வே சிஸ்டமை ஆராய ஜப்பான் ட்ரான்ஸ்பர்டேஷன் மினிஸ்டரி யால் அனுப்ப பட்டவர் தான் மாசாபூமி ஒசானோ..
சம்பவம் நடந்து 30 நிமிடம் கழித்து 2 ஆம் வகுப்பு பயனியால் எழுப்ப பட்டார் இவர் ஜப்பானியர் என்பதால் இவருக்கு 3 வது வகுப்பு தான் ஒதுக்க பட்டிருந்தது..
மிகுந்த சிரமத்திற்கு பின் தான் இவரால் லைப் போட்டில் ஏறி உயிர் தப்ப முடிந்தது... காப்பாற்ற பட்டு அமெரிக்கா சென்று பின் தன் தாயகம் திரும்பினார் .
ஆனால் அவர் தாயக பயணம் அவருக்கு இனிமையாக அமையவில்லை...

இவரை பார்க்கும் பொது ஜனம் எல்லாம் அவரை தூற்றி கேவல படுத்தினார்கள்... இத்தனை பேர் இறந்து இருக்க நீ மட்டும் உயிர் தப்பி இருக்க கூடாது என்றார்கள்.. அவர்களுடன் சேர்ந்து நீயும் இறந்து இருக்க வேண்டும் அதுதான் நியாயம் என்றார்கள்..'  இது என்ன நியாயம் ' என்று உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்.
சற்று சிந்தித்து பாருங்கள் ஒரு குறிப்பிட்ட நபர் வீட்டு பய்யன் அவன் பக்கத்துக்கு வீட்டு பய்யனுடன் பைக்கில் செல்லும் போது ஆக்ஸிடென்டில் கொடூரமாக இறந்து போக அந்த பக்கத்து வீட்டு பய்யன் மட்டும் எந்த அடியும் படாமல் தப்பி விட்டால் .. இந்த வீட்டு காரர்கள் அந்த பையனை பார்க்கும் போதெல்லாம் என்ன தோணும்" பாவி இவனும் அதே பைக்கில் தானே போனான் இவன் மட்டும் இப்படி தப்பிசிட்டானே பாவம் நம்ம புள்ள மட்டும் செத்து போச்சே "  என்ற ஒரு பொறாமை கொண்ட காழ்ப்புணர்ச்சி உண்டாகும் அல்லவா..
அப்படி பட்ட உணர்ச்சி அந்த நாடு பூராவும் அவர் மேல் காட்டியது...
அந்த நாடு பூராவும் அவரை சமூக துரோகி என முத்திரை குத்தியது..
நாளேடுகள் அவரை கேவலமாக சித்தரித்தன...

நாள்தோறும் பல பேர் அவரை தற்கொலை செய்ய வற்புறுத்தி நாலெடுகளுக்கு கடிதம் எழுதினார்கள்..
பாட புத்தகத்தில் அங்கத்தி புரபசர்கள் ஆலோசனை படி அவரை நாட்டின் களங்கதிர்கான்  அடையாளம் என சித்தரித்தார்கள்..
அவருடைய வேலையை அவரது அரசாங்கம் பிடுங்கி கொண்டது பிறகு நீண்ட இடைவேளைக்கு பின் அவரை வாடகைக்கு அமர்த்தி சாகும் வரை இங்கேதான் வேலை செய்ய வேண்டும் என பணித்தது.. இம்முறை அவரது பழைய வேலை அவருக்கு திருப்பி தரப்பட வில்லை
நீ சீக்கிரம் செத்து போ என்கிற போன் கால்கள் அவருக்கு வந்த வண்ணம் இருந்தது...

இத்தனையும் பொறுத்து கொண்டு மஸுபூமி ஓசொனோ ஒரு முறைகூட தற்கொலை செய்து கொள்ள வில்லை என்றாலும் தான் டைட்டானிக் இல் செத்திருக்கலாமே என்று நினைத்து ஏங்காத நாள் இல்லை.
அவர் தனது டைட்டானிக் அனுபவத்தை யாரிடமும் வாய் திறந்து பகிர்ந்து கொள்ளவில்லை அவரிடம் பரிதாப பட்டு அதை கேட்க ஆள் யாரும் இல்லை..

தான் உயிர் தப்பியதை தவிர தான் செய்த தவறென்ன என்பது புரியாமல்
1939 வரை வாழ்ந்து இறந்து போனார்.
அவர் மரணத்திற்கு பின்னும் அவர் குடும்பத்தை நாட்டுக்கே களங்கமான குடும்பம் என்ற முத்திரை சூழ்ந்தது..
அவர் டைட்டானிக் இல் தனது மனைவிக்கு எழுதிய கடிதம் ஒன்று இருந்தது .. டைட்டானிக் இல் காப்பாற்ற பட்ட ஒரே பொருள் அதுதான் என்ற உண்மை.....1997 இல் ஜேம்ஸ் கேமரூன் வந்து டைட்டானிக் படம் எடுக்கும் வரை
உலகத்துக்கு தெரியாமல் இருந்தது..
அந்த படத்தை பார்த்த பின் தான் ஜப்பான் மக்கள் அந்த பரிதாபத்துக்குரிய ஜீவன் மீது கொஞ்சம் கருணையோடு நினைத்து பார்க்கவே தொடங்கினார்கள்..

டைட்டானிக் இல் பயணித்தவர்கள் அனைவரும் உண்மையில் சாபம் துரத்திய பயணிகள் தானா அல்லது விதிஎனும் விளையாட்டின் கோர பிடியில் சிக்கி கொண்டவர்களா என்பது விதியை படைத்தவனுக்கு தான் வெளிச்சம்..


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

23."மின்சாரம் மின்காந்தம் "


இன்றைக்கு நாம் பார்க்க போகும் விஷயம் இருக்கிறதே அதை தமிழ் நாட்டில் கொஞ்சம் தேடி தான் பார்க்க வேண்டும்.. அதாவது மின்சாரம்.

இந்த மின் உற்பத்தி என்று வரும் போது நீங்கள் காற்றாலை மின்சாரம்... நீர் மின்சாரம்..அனல்மின்சாரம் ...அனுமின்சாரம் ...என்றெல்லாம் கேள்வி பட்டிருப்பீர்கள்.
இதில் நிறைய பேருக்கு ஏற்பட்டிருக்கும் தவறான கருத்தோட்டம் என்னவென்றால் ... இந்த மின்சாரத்தை தண்ணியில் இருந்து காற்றில் இருந்து எல்லாம் எடுப்பாங்க போல என்று.

உண்மையில் இதில் எதிலும் மின்சாரம் இல்லை.. அது எப்படி உற்பத்தி செய்ய படுகிறது என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் மின்சாரத்தின் அடிப்படை உருவாக்க தத்துவம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வாருங்கள் மின்சாரத்தை கொஞ்சம் எளிமையாக்கி பார்ப்போம்..

'Magnetic flux ஐ conductor வெட்டின்னால் மின்சாரம் உண்டாகும் 'என்பது தான் ஒரு வரி சுருக்கம்.(இப்படி சுருக்கமா தான் பல விஷயத்த பாட புத்தகத்துல சொல்லிட்டு போயிடராங்க...நமக்கு ஒன்னும் புரியமாட்டேன்னுது)
அது என்ன மேட்டர் என்று பார்த்தால்....
உங்கள் கையில் ஒரு காந்தம் உள்ளது . அதை சுற்றி குறிப்பிட்ட தூரத்திற்கு கண்ணனுக்கு தெரியாத அதனுடைய காந்த புலம் பரவி இருக்கும் என்பது நமக்கு தெரியும். அதற்கு magnetic flux என்று பெயர் அந்த கண்ணனுக்கு தெரியாத காந்த புலத்தை conductor கொண்டு( அதாவது இரும்பு போல கடத்தும் பொருள் கொண்டு  ) வேக வேக மாக வெட்டினால் அந்த கடத்தியில் மின்சாரம் உண்டாகும் ...சிம்பிள் அவ்ளோ தான்.

நீங்கள் பார்க்கும் மின்சாரத்தில் 98 சத மின்சார உற்பத்தி இப்படி தான் நடக்கிறது.(மீதி 2 சதம் சோலார் மாதிரி சமாச்சாரம் அதை அப்புறம் சொல்கிறேன்).
மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையத்தில் காந்த புலம் நிறைந்த ஒரு அமைப்பும் அதற்குள் ஒரு கடத்தும் பொருள்... அதான் அந்த conductor ..சுழலும் வகையிலும் வைக்க பட்டிருக்கும் அந்த அமைப்பிற்கு ஆல்டெர்னேட்டர் என்று பெயர்...
 மொத்தமாக அந்த கருவி தான் ஜெனரேட்டர். இப்போ மேலே நாம பார்த்த தத்துவத்தின் படி அந்த conductor ஐ வேகமாக சுழற்றினால் என்னாகும்?
அது அங்கே நிறைந்திருக்கும் காந்த புலத்தை வெட்டும் அப்படி வெட்டினால் ..நமக்கு தான் தெரியுமே மின்சாரம் உற்பத்தி ஆகும். இப்ப கேள்வி என்னன்னா ... அத சுத்தறது யாரு..? அல்லது எப்படி? (அவசர பட்டு மோட்டார் வச்சி சுத்துங்கன்னு சொல்லிடாதீங்க மோட்டார் ஓட மின்சாரம் தேவை அந்த மின்சாரத்தை தான் நாம உற்பத்தியே செய்ய போறோம்.)

அதை சுற்ற வைக்க தான் காற்று ...நீர்...அனல் ....எல்லாம்..அதை எப்படி செய்கிறார்கள்?

முதலில் நீர் மின் நிலையங்களில் என்ன நடக்கிறது என்று பாப்போம்...
அணையில் தேங்கியுள்ள நீரை திறந்து விட்டு அது வேகமாக கீழே விழும் இடத்தில ஒரு சுழலும் turbine அமைப்பு வைப்பார்கள் ...
தண்ணீரின் விசையால் அது சுழல தொடங்கும் அதனுடன் சேர்த்து சுழலும் படி நம்ம கண்டெக்டரை இணைத்திருப்பார்கள். எனவே அது சுற்ற சுற்ற மின் உற்பத்தி நடக்கும்.

அடுத்து அனல் மின் நிலையத்தில் என்ன நடக்கிறது என்று பாப்போம். அங்கு நிலகரியை எரித்து அனலை எடுப்பார்கள். அந்த அனலை கொண்டு தண்ணீரை சுட வைப்பார்கள் அதை ஆவியாக்கி வேகமாக மேலே நாம் பார்த்த அந்த turbine அமைப்பில் பீச்சுவார்கள்..  அது நீராவி விசையால் சுழலதொடங்க மின்சாரம் உற்பத்தி ஆகும்..

அனு மின் நிலையத்தில் எப்படி மின்சாரம் எடுக்கிறார்கள்? நீங்கள் நினைப்பதை போல் அனு சக்தியிலிருந்து அல்ல ... அணுவை இணைத்தால் நெறய வெப்பம் கிடைக்கும் என E=MC 2 கட்டுரையில் சொல்லி இருந்தேன் நினைவு இருக்கிறதா... அந்த வெப்பத்தை கொண்டு தண்ணீரை சுட வைப்பார்கள்..அதை நீராவி ஆக்கி...... மேலே சொன்ன அதே பிராசஸ்....

காற்றாலை நிலையத்தில்?
காற்றினால் காற்றாலையின் பிரமாண்ட ரெக்கைகள் சுற்றுகிறதல்லவா. அந்த சுழற்சியில் ஜென்ரேட்டரின் சுழற்ற பட வேண்டிய பாகம் சுழலும் படி அமைதிருப்பார்கள்.(ஆக மொத்தத்தில் நமக்கு தேவை எதையாவது பண்ணி காந்த புலத்தை வெட்ர மாதிரி கடத்திய சுத்தனும் அவ்ளோதான் ...நீங்கள் கையால் சுத்தமுடிந்தால் கூட சரி சுற்றினால் மின்சாரம் வந்து விடும்)

இப்போ ஒரு கேள்வி வந்திருக்கலாம் காற்றாலை காத்தாடி அவ்ளோ மெதுவா சுத்துதே ஜெனரேட்டர்கு அது போதுமா?
காற்றாலை யின் சுற்றும் அமைப்பு பெரிய விட்டம் கொண்டதாக இருக்கும் அதனுடன் பல் சக்கர அமைப்பில் சின்ன விட்டம் கொண்ட அமைப்பு சுற்றும் ..அப்புறம் அதனுடன் அதை விட சின்ன உருளை...இப்படி கடைசியாக சின்னதான் சக்கரம் வரை வந்து விட்ட பின் அந்த பெரிய சக்கரம் ஒரு சுற்றுசுற்றினால் இந்த சின்ன சக்கரம் வேகமாக பல சுற்று சுற்றும்.

இந்த காந்தம் ...கடத்தி...வெட்றது...குத்துறது னு இல்லாம மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாதா? செய்யலாமே... அதான் சோலார் பேணல்..

அதை புரிந்து கொள்ளும் முன் ..மின்சாரம் என்பது என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை விளக்க இன்னும் ஒரு மூணு பாரா தேவைப்படும் ....என்று நீங்கள் நினைத்தால் ..அப்படி அல்ல வெறும் மூணு வார்த்தை போதும்(இப்போதைக்கு இது போதும்)
அதாவது...'எலக்ட்ரான்களின் ஒட்டமே மின்னோட்டம் ' அவ்ளோ தான்.

சோலார் பேனலில் சிலிகான் அணுக்கள் இருக்கும் அதில் சூரிய ஓளி யில் உள்ள போட்டான் துகள் மோதும் போது அது எலெக்ட்ரானை ஓடும் படி தூண்டும்.. எலெக்ட்ரான்களின் ஓட்டம் தான் மின்னோட்டம் என்பது நமக்கு தான் தெரியுமே...

இன்னும் சிம்பலான....குழந்தை கூட செய்ய கூடிய மின்சார உற்பத்தி இருக்கிறது சொல்லவா..

ஒரு பேப்பரை எடுத்து மிக சின்ன துண்டுகலாய் கிழித்து வைத்து கொள்ளுங்கள். இப்போது ஒரு கண்ணாடி ஸ்கேலை எடுத்து உங்கள் தலையில் நன்றாக தடவுங்கள்..பின் டக்கென்று காகித துண்டுகளை மேல காட்டுங்கள்... அது காந்தம் போல ஓடி வந்து ஒட்டி கொள்வதை பார்ப்பீர்கள்...
அதற்கு காரணம்.... மின்சாரம்.
மேலும் பாலூனை ஊதி அதை தலையில் தடவி மெலிதாக ஊற்றும் நீர் அருகே கொண்டு சென்றால் அது நீரை இழுப்பது.. ஆரஞ்சு மிட்டாயின் பிளாஸ்டிக் கவரை தேய்தால் அது கையில் ஒட்டி கொள்வது.. இதெல்லாம் கூட மின்சாரத்தின் வே(லீ)லை தான்.
இந்த வகை மின்சாரத்திற்கு நிலை மின்சாரம் (electrostatic) என்று பெயர். இதை கம்பி மாதிரி ஏதாவது கடத்தியை கொண்டு கடத்த முடியாது..

மின்சாரம் பற்றி விரிவாக நிறைய காலப்போக்கில் சொல்கிறேன் (நான் ஜூனியர் இன்ஜினீராக பணியாற்றி கொண்டிருக்கும் எனது துறையே இதுதான் என்பதால் இதை குறித்து அவ்வபோது நெறய சொல்ல விரும்புகிறேன்) இப்போதைக்கு இத்துடன் இன்றைய  கட்டுரையை நிறைவு.....ஐயையோ கரண்ட் கட் !!

அடுத்து மின்காந்தம் பற்றி பார்ப்போம்

"மின்காந்தம் என்ன ஏது எப்படி"

மின்காந்த வியல் என்பது என்ன வென்று இன்று பார்ப்போம்.

அதை பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் விளக்கும் முன் உங்களுக்கு ஒன்றை சொல்லிவிடுகிறேன். நீங்கள் electromagnetic பற்றிய இந்த கட்டுரையை இந்த கணம் படித்து கொண்டிருப்பது.....electromagnetic இன் உதவியால் தான்.

மின்சாரம் என்பது என்ன ஏது என்று மின்சாரம் கட்டுரையில் எழுதி இருந்தேன்.
 அதாவது ஒரு காந்த புலத்தை கடத்தியை கொண்டு வெட்டினால் அந்த கடத்தியில் மின்சாரம் உற்பத்தியாகும் என்று பார்த்தோம்.(உதாரணம் உங்கள் சைக்கிள் டைனமோ.. அது சைக்கிள் வீலுடன் சேர்ந்து சுற்றும் போது காந்த புலத்தைதான் வெட்டுகிறது ..மின்னுற்பத்திக்காக)
நாம் பார்த்த இந்த தத்துவம் ஒரு சாதாரண தத்துவம் அல்ல இதுதான் Faraday's  law .. இதை சொன்னவர் மைகேல் பேரெடே...

இப்போது காந்தபுலன் இருந்தால் மின்சாரத்தை உற்பத்தி பண்ணலாம் என நாம் சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொண்டோம். இப்போ இந்த நாணயத்தின் அடுத்த பக்கத்தை பற்றி சொல்கிறேன்..
அதாவது நமக்கு தெரிந்த அந்த உண்மையை இப்படி திருப்பி போடுங்க..அதாவது காந்தம் இருந்தால் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்பதை போல மின்சாரம் இருந்தால் காந்ததை உற்பத்தி செய்யலாம்...
கையில் ஒரு ஆணியை எடுத்துக்கொள்ளுங்கள் அதில்  ஒரு இன்சுலேட் செய்யப்பட்ட கம்பியை நெருக்கமாக சுற்றுங்கள்... இப்போது கம்பியின் ஆரம்ப மற்றும் முடிவு முனைகளில் நீங்கள் சாதாரணமாக பயன்படுத்தும் ஒரு பாட்டரியை வையுங்கள்..
இப்போது ஒரு சின்ன இரும்பு துண்டை அருகில் கொண்டு சென்று பார்த்தல் ஆணி ஒரு தற்காலிக காந்தமாக மாறி இருப்பதை காணலாம்..

மின்சாரம் காந்ததையும்... காந்தம் மின்சாரத்தையும் மாறி மாறி உற்பத்தி செய்யும் என்றால் அது ஒரு அலை போல தொடர்ச்சியாக மாறி மாறி உண்டாகுமே.. ஆம் அந்த அலைகளுக்குதான் மின்காந்த அலைகள் என்று பெயர்..

மைகேல் பாரடே தொடங்கிவைத்த இந்த சமாச்சாரத்தை மேற்கொண்டு ஆராய ஒரு வின்ஞானி களம் இறங்கினார் அவர் பெயர் ஜேம்ஸ் கிளார்க் மார்க்ஸ்வெல்..மேலும்  Oliver Heaviside மற்றும் Heinrich Hertz என்பவர்கள் இதில் மானே ,தேனே ,பொண்மானே, சேர்ந்தவர்கள்.

 மைகேல் பாரடே தனது law வை சொன்ன போது அதை விளக்க ..கணித ரீதியாக விவரிக்க அவர் போதிய கல்வியறிவு அற்றவராக இருந்தார். பின்னால் வந்த மார்க்ஸ்வெல் இதில் சமன்பாடு களெல்லாம் அமைத்து "well mark" எடுத்தார்.
அவர்  இந்த மின்காந்த அலையின் திசைவேகதை கணக்கிட முனைந்த போது அது ஒளியின் திசைவேகதை ஒத்திருப்பதை கண்டார்.. அதன் பிறகு அவர் ஒரு உண்மையை கண்டு கொண்டார்.. அதாவது அது ஒளியை ஒத்து மட்டும் அல்ல அது ஒளியே தான்.. அதாவது ஒளியே எலெக்ட்ரோ மேக்னடிக் காக தான் வருகிறது.
ஒளி அலைகளில் உள்ளது போல மின்காந்த அலைகளும் அதிர்வெண் (frequency ) மற்றும் அலைநீளம் (wave length ) கொண்டு விவரிக்க படுகிறது.
Frequency ஐ அதிகரித்தல் மற்றும் wavelength குறைத்தல் போன்ற செயல் மூலமாக மின்காந்தாதால் .. ரேடியோ அலை மைக்ரோ அலை ..அகசிவப்புகதிர்... அப்புறம் கண்ணால் காண கூடிய ஓளி ...புறஊதா ..x ரே ..காமாரே.. இப்படி பல வடிவில் உங்களை நெருங்க முடியும்.
( அதிக அலைநீளம் கொண்ட சிகப்பு முதல் குறைந்த அலைநீளம் கொண்ட ஊதா வரை தான் நாம் கண்ணால் காண முடிய கூடிய ஓளி.. சிகப்பை விட அதிகம் அலைநீளம் கொண்டது அக சிவப்பு .அதை விட அதிகம் கொண்டது மைக்ரோ அலை...அதை விட அதிகம் கொண்டது தான் ரேடியோ அலை....
அதே போல ஊதாவை விட குறைந்த அலை நீளம் கொண்டது புறஊதா. அதை விட குறைவு எக்ஸ் ரே . மேலும் அதைவிட குறைவுதான் காமா ரே)

சுருக்கமாக மின்சார குணமும் காந்த குணமும் ஒன்றாக கொண்ட மின்காந்தம் எப்படி உருவாகிறது என்றால் . சிம்பிளாக எலக்ட்ரிகல் சார்ஜ கொண்ட துகள்கள் E M அலைகளை உண்டாக்கிகிறது எனலாம்.
ஆனால் இதன் பயன்பாடுகள் சிம்பிளானதல்ல ..
 நாம் கேட்கும் ரேடியோ .பார்க்கும் டிவி ..பாட்டு கேட்க உதவும் FM.. நாம் பேசும் செல்போன் கால் தொடங்கி  செயற்கை கோள் வரை.. வீட்டில் பயன்படுத்தும் மைக்ரோவேவ் ஓவன் தொடங்கி ஹாஸ்பிடலில் பயன்படுத்தும் எக்ஸ்ரே வரை இதன் பயன்பாடு கணக்கில் அடங்காதவை..
அப்புறம் முக்கியமாக...electro megnat இல்லை என்றால் இன்டர்நெட் இல்லை


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

  24  "வாயேஜர் ஒரு வியப்பான வண்டி"


உங்களுக்கு வாயேஜர் 1 என்ற வண்டியை பற்றி தெரியுமா? ஏதோ புது மாடல் கார் என்று எண்ணிவிட வேண்டாம். இது ஒரு செயற்கைகோள் .
எத்தனை இசை அமைப்பாளர் வந்தாலும் இளையராஜா ஒரு தனி இடத்தை பிடித்து இருப்பதை போல விண்கலங்களிலேயே விஞ்சாணிகள் மனதில் தனி இடம் பிடித்துள்ள விண்கலம் தான் வாயேஜர் 1.
நேற்றைக்கு விட்ட ராக்கெட் இந்திய பெருங்கடலிலும் முந்தாநாள் விட்ட ராக்கெட் பசிபிக் கடலிலும் விழுந்து  கிடக்க 1977 இல் விட்ட ஒரு வண்டி கிட்டத்தட்ட  40 ஆண்டுகள் கழித்து இன்னும் கடமை உணர்ச்சி தவறாமல் வேலை செய்கிறது தகவல் அனுப்பி கொண்டு உள்ளது என்பது எவ்வளவு ஆச்சர்யம்?

இப்போது அது எங்கே உள்ளது? புவி சுற்றுப்பாதையிலா அல்லது நிலவின் சுற்று பாதையிலா? அது நமது சூரிய குடும்பத்திலேயே இல்லை.

சூரியனிலிருந்து புறப்படும் சூரிய காற்று (solar wind) ஒரு பிளாஸ்மா சமாச்சாரம் அதாவது திட திரவ வாயு இது மூன்றும் கடந்த நிலை. இது மின்சுமை கொண்ட அயணிகள் கொண்டுள்ளதால் மின்காந்ததால் உந்தப்படுபவை இதன் காரணமாக உண்டாகும் ஆற்றலை கொண்டு சூரியனின் ஈர்ப்புவிசையை மீறி புறப்பட்டு வருபவை. இவை சூரியனின் ஈர்ப்பு விசை எல்லையாகிய ப்ளூடாவின் சுற்றுவட்டம் வரை கண்ணுக்கு தெரியாத ஒரு bubbles போன்ற அமைப்பை உருவாக்கி வைத்துள்ளது சூரியனின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த bubbles போன்ற அமைப்பின் பெயர் helospiar .அந்த சூரிய காற்று இந்த எல்லையை தாண்டி போக முடியாதவை . அந்த எல்லையை தாண்டினால் அதன் பின் அந்த ஏரியா பெயர் interstellar. (அம்மாங்க அந்த movie பெயர் இதனால் தான்)
அந்த எல்லை தாண்டி சென்ற ஒரே வாகனம் வாயேஜர்.

2012 இல் heliosphere எல்லையை வெற்றிகரமாக கடந்தது வாயேஜர் 1. மனிதன் கண்டுபிடித்த பொருளில் பூமியை விட்டு மிக தொலைவு சென்றுள்ள ஒரே பொருள் வாயேஜர் 1
நமது சூரிய குடும்பத்தை தாண்டி சென்றது மட்டுமே வாயேஜரின் சாதனை அல்ல. அது எடுத்து அனுப்பிய சில படங்கள் மிகவும் இன்றியமையாதவை .

முதல் முதலில் வையேஜர் அனுப்ப பட்ட பொது அதன் பெயர் marinar probs. சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் மற்றும் அதன் நிலவுகளை ஆராய்வதுதான் அதன் வேலை..பின்னாளில் தான் அதற்கு வாயேஜர் என்ற பெயர் வந்தது. வாயேஜர் 2 என்று ஒரு விண்கலத்தையும் அனுப்பினார்கள் நீங்கள் நினைபதை போல வாயேஜர் 1 கு பிறகு அனுப்ப பட்டது அல்ல .வையேஜர் 2 விண்கலம் வையேஜர் 1 கு முன்னாள் அனுப்ப பட்டது அதுவும் தனது கடமையை சிறப்பாகவே செய்தது.

 வெளிகிரகத்தை ஆராயும் முதல் செயற்கை கோல் இது அல்ல pioneer போன்ற விண்கலங்கள் பூமியை விட்டு பல காத தூரம் சென்று ஆராய்ச்சி செய்தவை என்ற போதிலும் அதை எப்போதோ தாண்டி சென்று விட்டது வாயேஜர்.
இது எடுத்து அனுப்பிய வியாழன் மற்றும் சனி யின் மேற்பரப்பு மற்றும் அதன் நிலவுகளின் புகைப்படங்கள் (கிட்டத்தட்ட 3 லட்சம் கிமி நெருங்கி எடுத்தவை) வைத்து தான் அந்த கோள்கள் குறிப்பாக அதன் நிலவுகள் பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடிந்தது அதையெல்லாம் புகைப்படம் எடுத்த முதல் விண்கலம் இதுதான்.

வாயேஜர் நிறைய வகையில் நம்மை ஆச்சர்ய படுத்துகிறது. இது தகவல் அனுப்ப பூமியை நோக்கியே எப்போதும் இருக்கும் வண்ணம் வைக்க பட்டுள்ள ஆன்டெனா வெறும் 12 அடி தான் .அதை கொண்டு தான் இவ்வளவு தூரம் இன்னும் தகவல் அனுப்பி கொண்டு உள்ளது என்ன..... அதை ரிசிவ் செய்து கொள்ள தான் பூமியில் 100 அடி விட்டமுள்ள பிரமாண்ட ஆன்டெனா கொண்டு படாத பாடு பட வேண்டி உள்ளது.

 ப்ளூடோவை எல்லாம் எப்போதோ தாண்டி சென்றுவிட்ட வாயேஜர் இன்றைய தேதிக்கு கிட்டத்தட்ட 30 ஆயிரம் கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால் 69 A U தொலைவு(A U எனபது astronomical  unit ஒரு AU என்பது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தோராய தொலைவு)
இப்போது வாயேஜர் என்ன  வேகதில் சென்று கொண்டிருக்கிறது தெரியுமா? வினாடிக்கு 17 கிலோமீட்டர் என்ற அசாத்திய வேகம். இவ்வளவு வேகத்தை கொடுத்தது அந்த வண்டியில் உள்ள வேகமூட்டும் கருவிகள் அல்ல .
இது வியாழன் மற்றும் சனியை நெருங்கிய போது அதன் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி தன்னை வேக படுத்தி கொண்டது.

இவ்வளவு வேலையை செய்யும் அந்த வாயேஜரின் தொழில்நுட்பம் உண்மையில் உங்களின் ஐ போனை விட பல மடங்கு குறைந்தது .
மேலும் அது பயன்படுத்தும் திறன் வெறும் 420 வாட்ஸ் அதாவது கிட்டத்தட்ட ஒரு ஹாலஜன் பல்பு அளவுதான் (எல்லாம் 1977 இல் இருந்த தொழில்நுட்பம் அவ்வளவுதான்)

 இது போற போக்கை வைத்து எதிற்காலத்தில் எங்கே செல்லும் என்றெல்லாம் கூட இப்போதே கணித்து வைத்து விட்டார்கள் அதாவது இன்னும் 300 ஆண்டுகள் கழித்து oort cloud என்ற நட்சத்த்திர கூட்டத்தில் இது நுழையும் அந்த கூட்டத்தை கடக்க  3000 ஆண்டுகள் எடுத்து கொள்ளும் மேலும் இன்னும் 4000 வருடங்களுக்கு அதன் ஜாதக பலன் படி அது எந்த நட்சத்திரத்திலும் மோதாது..
இதையெல்லாம் சொன்னாலும் அதன் பிரோக்ராம் படி 2025 கு பின் வாயேஜர் செயல் படாது என்று சொல்கிறார்கள் அதன் சென்சார் மற்றும் பல வகை உணற்கருவிகள் ஆயுட்காலம் காரண்டி வாரண்டி பீரியடெல்லாம் முடிந்து விடுவதால் செயல் படாமல் போய்விடும்.

இதையெல்லாம் தவிர வாயேஜரில் ஒரு சுவாரஷ்யஷயமான சங்கதி ஒன்று உள்ளது அதில் ஒரு தங்க தகட்டில் பூமியின் பல வகை ஒலிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குழந்தையின் அழுகை கடல் அலையின் ஓசை..அமெரிக்க ப்ரெசிடென்டின் உரை இப்படி பல... அங்க ஆளே இல்லாத கடையில யாருக்காக இந்த டீ ஆத்தி இருக்காங்க தெரியுமா வேற்றுகிராகத்தில் மனிதனை போல அறிவுவளர்ச்சி அடைந்த உயிரினங்கள் இருந்தால் அது பூமியை தொடர்பு கொள்ள. (அது predator ,indipendansday Pacific rim, போன்ற படத்தில் உள்ளது போன்றவைகளாக இருந்து தொலைத்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை)
இருந்தாலும் வாயேஜர் என்பது ஒரு வியப்பான வண்டி என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

25.  "விமானமும் வேக்வம் கிளீனரும்'

Aerodynamics  principle... அதாவது விமானம் பறக்கும் தத்துவத்தை இன்று பார்க்கலாம்.

"அன்று நான் விமானத்தை பார்த்த அதே ஆச்சரியத்தோடு தான் இன்று என் மகன் மாட்டு வண்டியை பார்க்கிறான்"

என்று எங்கோ படித்த நியாபகம்....கால மாற்றத்தால் மாறுதல் அடைந்த வாழ்க்கை முறையை விளக்குவதற்காக அதை யாரோ சொல்லி இருக்க கூடும்...
ஆனால் உண்மையிலேயே இப்போது விமானம் பறப்பதை கண்டு நீங்கள் ஆச்சார்ய படவில்லையா? அப்படி என்றால் ஒன்று உங்களுக்கு அதன் தத்துவம் தெரிந்து விட்டிருக்க வேண்டும்
அல்லது உங்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் curiosity குறைந்து போயி விட்டிருக்க வேண்டும்
விமானம் எப்படி பறக்கிறது என்பதை தான் நான் இப்போது விளக்க போகிறேன்.

அதுக்கு முன் ஒரு சின்ன காட்சியை கொஞ்சம் கவனியுங்கள்...

நீங்கள் விமானம் ஏறி ஊருக்கு போக இருக்கிறீர்கள் அதற்க்கு முன் கொஞ்சம் வளர்ந்து விட்ட தாடியை shave செய்ய விரும்புகிறீர்கள் பார்பர் ஷாப் போய்...ஷேவ் செய்து கொள்கிறீர்கள்.(விமான பணிப்பெண்ணை நினைத்து கொண்டீர்களா தெரியாது)
அப்புறம் கிளம்பி வீட்டுக்கு வருகிறீர்கள் வழியில் கார்ப்பரேஷன் காரர் கையில் மருந்தடிக்கும் கருவி கொண்டு மருந்து அடித்து கொண்டிருக்கிறான்...
வரும் வழியில் குழந்தைகள் சோப்பு தண்ணீரை பைப்பை வைத்து உறிஞ்சி எடுத்து முட்டை விட்டு கொண்டு விளையாடுகிறார்கள்.....அப்புறம் நீங்களும் உங்கள் காதலியும் ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்து ஒரு கூல்ட்ரிங்ஸ் இல் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிக்கிறீர்கள்...
அப்புறம் வீட்டிற்கு அம்மாவிடம் விடை பெறுகிறீர்கள் அப்போது அம்மா வேக்குவம் கிளீனரை வைத்து வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்...
அவரிடம் விடை பெற்று கொண்டு வந்து உங்கள் flight ஐ பிடிக்கிறீர்கள்....

"இதென்ன...flight எப்படி பறக்கிறதுனு விளக்குகிறேன்னு என்னென்னமோ சம்பந்தம் சம்பந்தமில்லாமல்  பேசரேன்னு நினைக்காதீங்க.
மேல நான் சொன்ன காட்சிக்கும் விமானம் வானில் பறப்பதில் உள்ள அறிவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு...தொடர்ந்து படியுங்கள்.

விமானம் போவதை யாரவது அண்ணாந்து ஆச்சர்யமாய் பார்த்தால் நாம் அவனை பட்டிக்காட்டான் என்போம்....
ஆனால் அவ்ளோ எடை உள்ள ஒரு பொருள் வானில் அவ்வளவு உயரம் பறப்பது எப்படி என்பது சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் ஆச்சர்யம் தான்...

வில்பர் ...ஆர்வில் ...இவர்களை உங்களுக்கு தெரியுமா என கேட்டால் தெரியாது என்பீர்கள் ஆனால் ரைட் சகோதரரகள்  என்றால் ரைட்டாக கண்டுபிடித்து விடுவீர்கள்.....

"என்னடா தம்பி எப்ப பாத்தாலும் மர பலகையை போட்டு அப்படி என்னதான் பண்றீங்க "

என கேட்டவர்களிடம் நாங்கள் பறவை போல வானத்தில் பறக்கும் வண்டியை செய்கிறோம் என்றார்கள் ...

."ஓ அப்படியா பா நல்லது நல்லா பண்ணுங்க பா " என சொன்னவர்கள் கொஞ்சம் தள்ளி போய்

"பாத்தியா டா காமடிய..... வானதுல பறக்க போறாங்களாம் ." என சிரித்து விட்டு நகர்ந்தார்கள்.

அந்த ரைட் சகோதரர்கள் ..தனது லட்சிய கண்டுபிடிப்பில் கண்டிப்பாக வெற்றியை அடைந்தே தீருவோம் என மஹா உறுதியாகவும் வெறியாகவும் இருந்தார்கள். எந்த அளவுக்கு என்றால் விமானத்தை கண்டுபிடிப்பதற்காக  இருவரும் திருமணமே செய்து கொள்ள வில்லை...

இதில் ஆர்வில் அருவா மீசை கொடுவா
பார்வை .வில்பர் வழுக்கை தலை மென்மை பார்வை அகன்ற காதுகள்.
விமானம் கண்டு பிடிக்கும் முன் இருவருமே அச்சக வேலையும் அதை தொடர்ந்து மிதிவண்டி பழுது பார்த்தல் மற்றும் விற்பனை...(அது ஆள் இன் ஆள் அழகுராஜா கடை என்பது அப்போது உலகத்துக்கு தெரியாது)

ஆனால் வானில் முதலில் பறந்த மனிதர்கள் என்ற பெருமை அவர்களுக்கு தான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு...
அவர்களுக்கு விமானம் கண்டு பிடிக்க இன்ஸ்பரஷனே ...ஒருவர் க்ளைடர் என்ற இயந்திரம் இல்லாத கருவியில் பறந்து காட்டிதை பத்திரிக்கைகளில் படித்தது தான்.

1903 இல் தனது மகத்தான சாதனை யை செய்தபோது அவர் வானில்பறந்த மொத்த நேரம் வெறும் 12 வினாடிகள்...
தூரம் 120 அடி...வேகம் கிட்டத்தட்ட ஒரு சைக்கிள் அளவு ...30 கி.மி வேகம்...

 ஒரு விஷயம் சொன்னால் நீங்கள் ஆச்சர்ய படுவீர்கள்...விமானம் பறக்கும் தத்துவம் நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் தெரிந்து வைத்து கொண்டு தான் இருக்கிறோம்....
அதாவது அழுத்தம் அதிகமாக இருக்கும் இடத்தில இருந்து அழுத்தம் குறைவான இடத்தை நோக்கி தான் எது ஒன்றும் நகரும்..ஆனால் இந்த தத்துவத்தை  பயன்படுத்தி விமானத்தையே பறக்கவைக்கலாம் என்பது தான் அந்த இரண்டு ரைட்களும் கண்டு கொண்ட டபுள் ரைட் சங்கதி..

பார்பர் கடையில் பார்பர் நம் முகத்தில் தண்னீர் அடிக்கிறாரே அந்த தண்ணீர் எப்படி வெளியே வருகிறது என்றால் இந்த அழுத்த மாறுபாடுத்தான்..கார்ப்பரேஷன் மருந்து அடிக்கும் கருவி...அல்லது நாம் கூல் ட்ரிங்க்ஸ் பயன்படுத்தும் போது.... இப்படி பல இடங்களைக் இந்த தத்துவத்தை பயன் படுத்துகிறோம்.

அந்த தத்துவத்தின் பெயர்..bernouli's princepell. .(நான் சொன்ன காட்சிகளின் தொடர்பு புரிந்ததா...)

ஸ்ட்ரா போட்டு உரிஞ்சிறது ஓகே
அது எப்படி விமானத்தில் வேலை செய்கிறது?..

அதற்கு நீங்கள் உற்று பார்க்க வேண்டியது விமானத்தின் இறக்கைகளை தான் அப்படி பார்த்தால்.. அதன் கீழ் பகுதி தட்டையாகவும் (கண்ணாடி ஸ்கேல் இன் அடிப்பகுதியை போல...)அதன் மேல் பகுதி சற்று குவிந்து கூம்பு போலவும் ..(அதே கண்ணாடி ஸ்கேல் இன் மேல் பகுதி போல..) இருக்கும் இப்படி பட்ட ஒரு அமைப்பில் காற்று வேகமாக கடந்து சென்றால் அதன் ரெக்கை யின் அடி பாகத்தில் அதிக காற்று அழுத்தமும் மேல் பாகத்தில் குறைந்த காற்று அழுத்தமும் உண்டாகும் அதன் விளைவாக விமானம் மேல் நோக்கி தூக்க படும்....

தலைமை காரணம் இது தான் என்றாலும் விமானம் பறக்க 4 வகை விசைகள் தேவை அது...

மேல் நோக்கிய உந்து விசை(மேலே சொன்னது)

கீழ் நோக்கிய இழுவிசை(இதை க்ராவிட்டி பார்த்து கொள்கிறது)

முன் நோக்கிய தள்ளு விசை (இதை உண்டாக்க தான் இன்ஜின்.)

மற்றும் பின் நோக்கிய இழுவிசை(அதற்கு தான் பின்னால் குட்டி வால்...)

தரையில் இருக்கும் போது மேல் நோக்கிய உந்து விசையை ஏற்படுத்த இருக்கைகளில் காற்று பலமாக மோதுவது அவசியம்...இதற்காக தான் விமானம் ஓடு பாதையில்..அவ்வளவு வேகமாக ஓடுகிறது....சரி விமானத்தை நிறுத்தி வைத்து செயற்கையாக அதன் ரக்கைகளில் காற்றை பலமாக பீய்ச்சினால் என்னாகும்...? சந்தேகம் இல்லாமல் விமானம் ஜிவ்வென மேலே எழும்பும்... ஆனால் அவ்வளவு பலமாக காற்று புயலில் வீசுவது இல்லை மேலும் இறக்கைகள் அப்படி இப்படி சற்று சுழற்றி கொள்ளும் வசதி கூடியவை என்பதால் அப்படி நடப்பது இல்லை.

ஒரு கொசுறு செய்தி
விமானம் பறக்கும் போது ஏன் சக்கரத்தை இழுத்து கொள்ள வேண்டும் அப்படியே இருக்கலாம் தானே....? காற்றில் பறக்கும் போது உராய்வினால் வேகம் குறையாமல் இருக்க தான் (பறவைகளை கவனியுங்கள் பறக்கும் போது கால்களை பின் நோக்கி வளைத்து கொள்ளும் காரணமும் இது தான்)...

நம்ம வீட்டில் உள்ள வேக்குவம் கிளீனரும் வானில் பறக்கும் விமானமும் ஒரே தத்துவத்தில் தான் வேலை செய்கிறது என்பது  ஆச்சர்யம் தானே?


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

26. "விளக்கின் மேல் வெளிச்சம் "

வெளிச்சத்தை கொடுக்கும் சில விளக்கு களின் மேல் வெளிச்சம் போட்டு அவைகள் எப்படி வேலை செய்கின்றன என்று இன்று பார்ப்போம்..

LED என படும் மின் விளக்கு...சொல்ல போனால் மின்னணு விளக்கு ...அதை பற்றி... அது வேலை செய்வதில் உள்ள அறிவியல் என்ன என்பதை பற்றியும் இன்று பார்க்கலாம்..

முதலில் LED என்பது ஒரு பல்பே அல்ல காரணம் நாம் பல்பு க்கு என்ன தத்துவத்தை வைத்திருக்கிறோமோ அந்த தத்துவத்தில் இது வேலை செய்வது இல்லை..
சாதாரணமாக நமக்கு அறிமுகமான பல்பின் அடிப்படை தத்துவம் என்ன.. ? எந்த பொருளாக இருந்தாலும் அதை சூடாக்கினால் அது ஒளி உமிழும் பொருளாக மாறும். அப்படி நன்கு வெளிச்சத்தை வெளிப்படுத்தும் அதே சமயத்தில் அந்த வெப்பத்தை தாங்கும் வலிமை கொண்ட டங்ஸ்டன் இழை கொண்டது தான் நமக்கு முதலில் அறிமுகம் ஆன குண்டு புல்புகள்..இதில் உள்ள இழை எதற்கு கண்ணாடியில் மூடப்பட்டு உள்ளே மந்த வாயு நிரப்ப பட்டுள்ளது தெரியுமா... இல்லை என்றால் இழை ஏற்படுத்தும் வெப்பத்தில் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து நிஜமாகவே எரிந்து விடும் ஆபத்து உள்ளது.. ஒரு வெற்றிடத்தில் வைக்க பட்டால்  இழை மட்டுமே போதும் குண்டு பல்பு வேலை செய்யும்... (இங்கே வெற்றிடம் உருவாக்கி சிரம படுவதற்கு பதில் பல்பில் உள்ள காற்றை நீக்கி விட்டு inert gas நிரப்பி விடுகிறார்கள் .. அவவளவு தான்.)

இது கொஞ்சம் வழக்கொழிந்த நிலையில் அதை விட அட்வான்ஸாக வந்த ஒரு விளக்கு தான் CFL
Compact florasant lamp  ...அல்லது light என படும் இந்த CFL விலையில் கொஞ்சம் குண்டுபல்புகளை விட கூடுத்தலானது... அதே சமயம் மிக குறைவான மின்சாரத்தை பயன் படுத்த கூடியது. ஒரு 60 வாட்ஸ் குண்டு பல்பின் வெளிச்சத்தை 20 வாட்ஸ் CFL கொண்டு நாம் பெற முடியும். மேலும் இதன் வாழ்நாளும் அதிகம்.

இப்போது இது எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்..
இதற்குள் ஆர்கான் வாயு அப்புறம் கொஞ்சூண்டு மெர்க்குரி வேப்பர் கலந்த ஒரு tube இருக்கும் .இதன் வழியாக மின்சாரத்தை பாய்ச்சும் போது இது ஒளியை வெளியிடும் ... ஆனால் அந்த ஒளி நாம் கண்ணால் காண முடியாத அல்ட்ரா வைலட் ஒளி.... அது அந்த tube இன் உள் சுவற்றில் பூசப்பட்டிருக்கும் புளோரசண்ட் (பாஸ்பரால் ஆனது) பூச்சில் படும் போது தான் நமக்கு கண்னுக்கு தெரியும் ஒளியாக வெளிவருகிறது.
நமது சாதாரண டியூப் லைட்டிலும் இதே தத்துவத்தில் தான் ஓளி கிடைக்கிறது..

அனால் LED கொஞ்சம் வித்யாசமான தத்துவத்தில் வேலை செய்கிறது.
இது சாதாரண குண்டு பல்ப் மற்றும் முன் சொன்ன CFL விடவும் அதிக விலை அதிகம்.. அதே சமயம் மற்ற இரண்டை விட அதிக ஆயுள்காலம் மற்றும் குறைந்த மின்செலவை கொண்டது.. 60 வாட்ஸ் குண்டுபல்பின் வெளிச்சத்தை 5 அல்லது 7 வாட்ஸ் LED கொன்டு பெறமுடியும்.

இவை DC சப்ளையில் மட்டுமே வேலை செய்யக்கூடியது என்பதால் வீட்டு உபயோகத்திற்கு இதனுடன் சேர்ந்து AC யை DC யாக மாற்றும் ட்ரைவும் இதனுடன் சேர்ந்தே வருகிறது.
இனி இது எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்கலாம் ..இது மற்ற எல்லா விளக்குகளை விடவும் முற்றிலும் மாறுபட்ட தத்துவத்தில் வேலை செய்கிறது.

LED என்பது ஒரு அரைகடத்தி எலெக்ட்ரானிக்சை பொறுத்த வரை அங்கே ஆட்சி செய்வது அரைகடத்திகள் தான். இதன் விரிவாக்கம் light emitting diode .இருமுனை கொண்ட எதையும் நாம் டையோடு என்று அழைக்கலாம். இதில் உள்ள இரண்டு முனை ஆணோடு (பாசிடிவ் சார்ஜ் தரும் முனை.) மற்றும் கேத்தோடு (நெகடிவ் சார்ஜ் தரும் முனை) என்று அழைக்க படுகிறது. சார்ஜை மாற்றி கொடுத்தால் இவை வேலை செய்யாது..

LED இரண்டு வெவேறு பொருளை ஒன்று சேர்த்து செய்யப்பட்டவை.. அதில் ஒன்று நெகடிவ் சார்ஜ் கொண்ட எலக்ட்ரானை உமிழ கூடியது..இன்னொன்று பாசிடிவ் சார்ஜ் கொண்ட ஹோல்ஸ் என படுபவைகளை வெளியிட கூடியது. சுருக்கமாக இந்த இணைப்பு PN junction என்று அழைக்க படுகிறது.
சரியான பையாசில் சார்ஜை கொடுக்கும் போது P பகுதி ஹோல்சையும் N பகுதி எலெக்ற்றானையும் வெளிப்படுத்த கூடியது. அந்த எலக்ட்ரான்கள் பக்கத்தில் உண்டான ஹோல்சில் சென்று அடைக்கலம் புகுந்து கொள்ள கூடியது ஒவ்வொரு ஹோல்சிலும் ஒவ்வொரு எலக்ட்ரான் குடிபுகுந்து கொள்ள தனக்கு தங்க வீடு இல்லாத எலெக்ட்ராங்கள் தான் ஒளி எனும் ஆற்றலாக வெளிவருகிறது..


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

27 ."ஐமாக்ஸ்  எனும் அசத்தல் தொழில் நுட்பம்"



நிறைய ஆங்கில படங்களின் போஸ்டரில் அடியில் Imax என்று போட்டு இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அது என்ன அந்த imax என்பதை யோசித்து இருக்கிறீர்களா.
அது ஒரு அசத்தல் தொழில் நுட்பம். அந்த தொழில் என்ன ஏது என்பதை பற்றி தான் நாம் இன்று பார்க்க போகிறோம்.

Image maximum என்பதன் சுருக்கம் தான் இந்த imax .
நாம் சாதாரணமாக பார்க்கும் படத்திற்கும் இதற்கும் அப்படி என்ன வித்தியாசம் என்று கேட்டீர்களேயானால்....  எல்லாமே வித்யாசம் தான்.
ஒரு கருப்பு வெள்ளை படத்திற்கும் கலர் படத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விட அதிகம் வித்யாசம் என்று கூட சொல்லலாம்.

பீரங்கி குண்டுகளை பீரங்கியில் வைத்து தான் சுட முடியும்.... கைத்துப்பாகியில் அல்ல...
அது போல imax தொழில் நுட்பத்தில்.. imax கேமரா வை கொண்டு எடுக்க பட்ட படத்தை பார்க்க imax திரையில் தான் முடியும்.
அந்த திரை எந்த வகையில் நம்ம சாதா திரையில் இருந்து மாறுபட்டது ??
முதலில் அதன் பிரமாண்டம்.....குறைந்த பட்சமாக 16 மீட்டர் உயரம்...22 மீட்டர் அகலம் கொண்ட பிரமாண்ட திரை இது (52 அடி உயரம் ...72 அடி அகலம் அதாவது கிட்ட தட்ட 6 மாடி கட்டிடதை அருகே நின்று பார்ப்பதை போன்றது )
குறைந்த பட்சம் என்று சொன்னதை கவனிக்க வேண்டும் காரணம் உலகில் மிக பெரிய imax திரை 98 அடி உயரம் (கிட்ட தட்ட 10 மாடி அளவு ) கொண்டது.
இவ்வளவு பெரிதை அன்னாந்து பார்த்து கொண்டு இருக்க முடியாது... அதனால் அந்த தியேட்டர்கள் தனி தன்மையுடன் அனைவரும் திரையை பார்க்கும் படி வடிவமைப்புடன் கட்ட பட்டு நன்றாக பார்க்கும் படி (6 மாடி கட்டிடத்தை அருகே நின்று பார்க்காமல் பக்கத்து பிலடிங் போய் 4 வது மாடி ஜன்னல் வழியே பார்ப்பதை போல ) வடிவமைக்க பட்டு இருக்கும்.
அடுத்ததாக அந்த திரையே நமது சாதாரண திரை போன்ற வடிவில் இல்லாமல் டூம் அமைப்புடம் வளைவாக
கட்ட பட்டு கிட்ட தட்ட நீங்கள் திரையால் சூழ பட்டு இருப்பதை போல வடிவமைக்க பட்டு பார்க்கும் இடத்தில எல்லாம் திரைதான் இருக்கு என்று சொல்லும் படி இருக்கும்.

இப்படி பட்டதை ஒளி பரப்பும் புரோஜக்டரும் ரீலும் சாமான்யமாக இருக்குமா என்ன ?? அதிலும் பிரமாண்டம் தான். சாதாரண ரீல் 35 mm என்று அழைப்பார்கள் காரணம் அதன் அகலம் 35 mm. மேலும் பார்க்க பிலிம் ரோல் நீட்டு வாட்டத்தில் இருந்தாலும் திரை நமக்கு கிடைமட்டமாக தான் இருக்கிறது என்பதால் போக்கஸ் இல் அதை கிடைமட்ட வடிவாக மாற்றி ஒளி பரப்புவர்கள் . மேலும் அது ஓடும் வேகம் வினாடிக்கு 24 பிரேம்கள்.
ஆனால் imax இன் பிலிம் ரோல்கள் 15 x 70 mm கொண்ட ரோல்கள் அவைகளை போகஸ் இல் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இதன் வேகம் வினாடிக்கு 48 பிரேம்கள். (நாம் சாதாரணமாக கேள்வி படும் 70 mm படம் என்பதுடன் இதை குழப்பி கொள்ள கூடாது இது 15 x 70 mm என்பது வேறு )
இதன் இமேஜ் சாதாரண பிலிமை விட 10 மடங்கு பெரிது என்று சொல்லலாம்.

இப்படி பட்டதை ஒளி பரப்ப சாதாரண ப்ரொஜெக்டர் வேலைக்கு ஆகாது. இதற்கென உள்ள சிறப்பு ப்ரொஜெக்டரால் தான் இது சாத்தியம்.
சாதா ப்ரொஜெக்டரில் பிலிம் மேலிருந்து கீழாக ஓடுவதை பார்த்து இருப்பீர்கள் இதில் படங்கள் இடம் இருந்து வலமாக ஓடும்..
மேலும் இதன் எடை கிட்ட தட்ட 2 ஆயிரம் கிலோ .
அப்புறம் இனொன்று சாதாரண பிலிமில் சைடில் ஆடியோ பதியும் ட்ராக் இருக்கும் ஆனால் இதில் ஆடியோ வை மொத்தமாக வேறாக ரெக்கார்டு பண்ணி தனியாக இணைப்பார்கள் . (ஓரளவு dts இல் இதை நாம் உணர்ந்து இருப்போம் )

இப்படி பட்ட படங்களை உண்டாகுவதில் இரண்டு தொழில் நுட்பம் உண்டு ஒன்று..
சாதா 35 mm ஐ imax கு தகுந்தாற் போல மாற்றுவது.
இனொன்று... உண்மையான imax கேமராவில் அதை பதிவு செய்வது.
அந்த உண்மையான imax கேமரா என்று சொன்னேனே அது பிரம்ம பிரயத்தனம் செய்து படம் எடுப்பதை போன்றது.
காரணம் அந்த கேமரா மொத்தம் 3 நிமிடம் தான் ஒடுமாம் அப்புறம் 20 நிமிடம் ஒய்வு கொடுக்கணுமாம் அது ரீலோட் ஆக.
ஓடும் போது செயின் சா... ஓடற மாதிரி சப்தம் கேட்குமாம் நடிகர்களே திசை திரும்புவார்களாம். அதே போல சாதா கேமரா வெறும் 18 கிலோ என்றால் இது 100 கிலோ எடை கொண்டதாம். அளவில் வழக்கத்தை விட மிக பெரிது என்பதால் அதை கையாள அதற்கென இருக்கும் சிறப்பு க்ரேன் சிஸ்டம் கூடவே எடுத்து கொண்டு சுற்ற வேண்டுமாம். விலை தாருமாறா இருக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... இன்னோரு விஷயம் உலகத்தில் மொத்தமே 2 imax கேமரா தான் இருக்கிறதாம்.

இவ்வளவு ஏற்பாடுகள் இவ்வளவு பிரமாண்டங்கள் எதற்கு தெரியுமா ?? இது வரை உணராத புதிய அனுபவத்திற்கு தான்.
சாதா 35 mm போல இதில் பிரேம் நகர்வை துளி கூட கண்டு பிடிக்க முடியாது என்கிறார்கள்.
இருட்டு மழை போன்ற காட்சிகளில் சாதா 35 mm பிலிம்கள் காட்சி நகர்வில் பிலிமை ஓட்டி ஏமாற்றி விடலாம். ஆனால் imax இல் உங்கள் பார்வையில் இருந்து எதுவும் தப்ப முடியாது . மழை காட்சி என்றால் மழையின் ஒவ்வொரு துளியும் உங்களால் உணர முடியும்.
இது வரை கண்டிராத அசாத்திய துல்லியம் தான் இதன் சிறப்பு.
நெடு வாட்டத்தில் இருந்து கிடைமட்டமாக்கும் வேலை எல்லாம் இதில் இல்லை என்பதால் இதன் அனுபவம் வேறு விதமாக இருக்கும். மேலும் வேகம் 48 பிரேம் என்பதால் துல்லியம் அள்ளும்.

திரையில் காட்சியின் நகர்வுக்கு ஈடு கொடுக்க முடியாமல் புதிதாக imax போன சில பேருக்கு உடல் நிலை சரி இல்லாமல் போன கதைகள் கூட உண்டு என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

நம்ம ஊரில் வெகு சொற்பமாகவே இந்த வகை திரை அரங்கு உள்ளது.
நேரம் கிடைத்தால் போயிட்டு வாங்க.
சரி...நம்ம ஊர்ல imax படங்கள் எடுபங்களா...?
அதற்க்கு கொஞ்சம் நாள் ஆகும் என்று தோன்று கிறது.
அப்படியே எடுப்பதாய் இருந்தாலும் முதலில் நான் குறியிட்ட 35 ஐ imax ஆக மாற்றுவது..... அந்த தொழில் நுட்பத்தை தான் முதலில் பயன்படுத்துவார்கள்.
நேரிடையாக imax படம் எடுக்கும் வாய்ப்பு கொஞ்சம் குறைவு தான்.

மனிதனை மகிழ்விக்க புதிய புதிய தொழில் நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதில் பொழுது போக்கு துறையில் imax  ஒரு மைல் கல் என்பதில் சந்தேகம் இல்லை


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

28 MORSE CODE என்றால் என்ன


விவேகம் படதில் அஜித் தனது மனைவி உடன் மோர்ஸ் கோடில் பேசுவதும்,
கிளைமாக்ஸ் இல் அவர் மனைவி கண் அசைவுகள் மூலம் மோர்ஸ் கோட் செய்து வில்லனின் இருப்பிடத்தை ஹீரோவுக்கு காட்டி கொடுப்பதும் பார்த்து இருப்பீர்கள்.
அந்த மோர்ஸ் கோட் என்றால் என்ன அதெப்படி கண் அசைவில் எல்லாம் பேச முடியும் . என்பதை இப்போது பார்க்கலாம். (பெண்கள் கண் அசைவில் பேசுவதில் வல்லவர்கள். ஆனால் நாம் பார்க்க இருப்பது அதை பற்றி அல்ல )

Samual f.b morse என்பவரின் பெயரால் அழைக்க படுவது தான் இந்த மோர்ஸ்.
அவர் தான் தந்தியின் தந்தை அதாவது கண்டுபிடிப்பாளர்.
தந்தியில் டக டக என தட்டுவதை பார்த்து இருப்பீர்கள் . அது ஏனோ தானோ என்று தட்ட படுவது அல்ல. அதில் ஒரு ஒழுங்கு உண்டு. அது ஒரு பாஷை...தந்தி பாஷை.
கணிணிக்கென்று ஒரு பாஷை உண்டு அல்லவா 0 மற்றும் 1 என்று..
அதை போல தந்திக்கு ஒரு மொழி உண்டு அது புள்ளி அல்லது கோடு என்ற மொழி.
உதாரணமாக மோர்ஸ் கோட் படி A என்றால் ஒரு புள்ளி ஒரு கோடு...
அப்போ AA என்பதை எப்படி எழுதுவீங்க ? புள்ளி கோடு ,புள்ளி கோடு.. சரி தானே..
B என்றால் அதன் பாஷையில் ஒரு கோடு அதை தொடர்ந்து மூணு புள்ளி.( கோடு .புள்ளி .புள்ளி .புள்ளி)
இப்ப AB என்று எழுத வேண்டும். முயற்சி செய்து பாருங்கள்...

  ( ✴ ______   ______✴ ✴ ✴)இப்படி வரும் சரியா ?

இதில் டிட் டாட் டேஸ் என்பார்கள். டிட் என்றால் கோடு டாட் என்றால் புள்ளி டேஸ் என்பது இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளி.
ஒரு கோடு என்பது 3 புள்ளிகள் சேர்ந்த அளவில் இருக்கும் .ஒவொரு வார்த்தையும் ஒரு புள்ளி அளவுள்ள டேஸ் அதாவது இடைவெளியால் பிரிக்க பட்டு இருக்கும். மற்றும் இரண்டு வார்த்தைகள் 7 புள்ளி அளவு கொண்ட இடைவெளியால் பிரிக்க பட்டு இருக்கும்.
இந்த புள்ளி கோடுகள் வெறும் ஆங்கில எழுத்துக்களை மட்டும் அல்ல நம்பர்களையும் குறிக்க பயன்படுகிறது.
மோர்ஸில் உள்ள மிக சிறிய எழுத்து என்பது E . (வெறும் ஒரு புள்ளி தான் மோர்ஸ் பாஷையில் E)

சரி எதற்கு இந்த புள்ளி கோடு ...இதனால் என்ன வசதி ?
இப்போ ஒரு அறையில் நீங்கள் அடைக்க பட்டு இருக்கிறீர்கள் அடுத்த அறைக்கு உங்களால தொடர்பு கொள்ள முடியாது ஆனால் சுவரில் தட்டினால் அல்லது கீறினால் அடுத்த பக்கம் கேட்கும் என்றால் . சுவருக்கு இருபுறமும் உள்ளவர்கள் மோர்ஸ் கோட் தெரிந்தவர்கள் எனில் சுவரில் தட்டுவதை புள்ளி எனவும் கீறுவதை கோடு எனவும் கொண்டு தகவலை பரிமாற முடியும். (கோட் பற்றி தெரியாதவர்களுக்கு சுவரில் மாறி மாறி ஏதோ தட்டுவதும் கீறுவதும் போல தெரியும் )

சரி இப்போ இதை கவனியுங்கள் ..நீங்கள் உயரமான ஒரு கட்டிடத்தில் பெரும் வெள்ளம் அல்லது புயலில் சிக்கி இருக்கிறீர்கள். தூரத்தில் மீட்பு படை கண்ணுக்கு தெரிகிறது ஆனால் கூப்பிடும் எல்லை தாண்டி இருக்கிறார்கள். சைகை செய்யலாம் என்றால் நீங்கள் சிக்கி இருப்பது கும் இருட்டில். என்ன செய்வீர்கள் ?இப்போது உங்களிடம் டார்ச் இருந்தால் போதும் நீங்கள் தகவலை பரிமாறலாம்.
அதாவது டார்ச்சை அணைத்து அணைத்து போட்டால் அது புள்ளி...
சில வினாடி நீட்டாக எரிய விட்டால் அது
கோடு என்று கணக்கு வைத்து கொண்டு மோர்ஸ் கோடு மூலம் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்று தெரிவிக்கலாம் .
உலகம் எங்கும் "உயிர் ஆபத்தில் உள்ளது "என்பதை குறிக்க பயன் படுத்த படும் வார்த்தை... "S. O. S ."
இதன் முழு அர்த்தம் "SAVE OUR SOLE "

நம்ம மோர்ஸ் கோடில் sos என்பதை எப்படி தெரிவிக்க வேண்டும் என்று முயற்சி செய்து பாரதால் "புள்ளி புள்ளி புள்ளி..கோடு கோடு கோடு புள்ளி புள்ளி புள்ளி " என்று வரும்.
(✴✴✴ ____   ____   _____ ✴✴✴  )
டார்ச்சை வைத்து இதை சொல்ல முயன்றால் மூன்று முறை குறுகிய இடைவெளியிலும் அதை தொடர்ந்து கொஞ்சம் அதிகம் இடைவெளியில் மூன்று முறையும் டார்ச்சை அணைத்து அணைத்து போட வேண்டும்.
உங்கள் கையில் ஏதாவது இசை இருந்தால் ..டிக் டிக் டிக் ...டீக் டீக் டீக் ... டிக் டிக் டிக் என்று ஒலிக்க வேண்டும்.
விமாணிகளுக்கு ...ராணுவத்தில்...மீட்பு படையில்.... பல உயிர் ஆபத்தில் ... அவசரத்தில் என்று பல இடங்களில் மோர்ஸ் பயன் படுகிறது.

விவேகம் படத்தில் காஜல் செய்தது என்ன என்று இப்போ புரிந்திருக்கும் .
அதாவது கண்ணை சிமிட்டினால் புள்ளி தொடர்ந்து மூடினால் கோடு.

இனி எங்காவது பெண்கள் கண்களை சிமிட்டி சிக்னல் கொடுத்தால் புரிந்து கொள்வீர்கள் தானே....


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

29. ''டாவின்சியின் விசித்திர கண்டுபிடிப்புகள்."


மோனாலிஸாவின் மோகன புன்னகையை உலகத்திற்கு வழங்கிய லியரண்டோ டாவின்சியை நமக்கு ஒரு ஓவியர் என்கிற வகையில் தான் அதிகம் தெரியும் ஆனால் அவர் ஒரு பன்முக திறமையும் பல துறைகளில் ஆர்வமும் கொண்ட ஒரு மனிதர்.

அவர் ஒரு கட்டிட கலை நிபுணர் கூடவே பொறியியளில் அதிகம் ஆர்வம் கொண்டவர்,கூடவே சிற்பக்கலை கட்டிட கலை, ஓவியம் போன்றவற்றில் திறமை வாய்ந்தவர்.
அறிவியல் ,இசை,கணிதம்,இலக்கியம்,புவியியல்,வானசாஸ்திரம்,தாவரவியல் வரலாறு போன்றவைகளில் ஈர்ப்பு உண்டு. அவர் ஒரு எழுத்தாளர் கூட..
இவைகளை தாண்டி பல கண்டுபிடிப்புகளை கொடுத்த விஞ்ஞானியும் கூட..
எதிரிநாட்டு வீரர்களை வீழ்த்த தனது பொறியியல் அறிவை பயன்படுத்தியவர். அவருடைய குறிப்பேடுகளில் நிறைய அநாடமி பற்றிய ஓவியங்களும் குறிப்புகளும் பல பொறியியல் குறிப்புகளும் காண கிடைக்கின்றன.

ஒரு கதை சொல்வார்கள் . அதாவது எதிரிநாட்டு கப்பல் தங்கள் நாட்டை நெருங்கும் போது டாவின்சி தன் நாட்டுக்கு ஒரு கண்டுபிடிப்பை கொடுத்தாராம். அதன்படி எதிரிக்கப்பல் நெருங்கி வர அதை இந்த நாட்டு ரெண்டு சிறு படகுகள் பக்க வாட்டில் இருபுறமும் ஒரே நேரத்தில் நெருங்குமாம்.
 மூன்றும் நேர் கோட்டில் வந்தவுடன் ஒரு மேஜிக் நடக்கும் நடுவில் உள்ள எதிரி கப்பல் சடாரென ஏதோ ராட்சத மீனால் கடித்து இழுக்க பட்டத்தை போல நடுவில் நொறுக்க பட்டு கடலில் உள்ளிழுக்க படுமாம்.
இரு புறமும் உள்ள படகுகள் அடியில் கடலில் தொங்கி கொண்டு வரும் ஒரு மெகாணிசத்தை கொண்டிருக்கும். சரியாக பக்க வாட்டில் நேர்கோட்டில் வந்து இருப்படகுகளும் ஒரு விசையை இயக்கினால் நடுவே உள்ள கருவி விடுபட்டு மேல் நோக்கி பாய்ந்து வந்து அடியில் இருந்து ஒரு ராட்சத சுத்தியை வைத்து தாக்கியதை போல தாக்கி கப்பலை மூழ்கடிக்குமாம்.

இந்த கதை எந்தளவு உண்மை தெரியாது. ஆனால் டவின்சியின் பல விச்சித்திர கண்டுபிடிப்புகளை பற்றி படிக்கும் போது நிச்சயம் அவர் இதை செய்திருக்க கூடியவர் தான் என்றே தோன்றுகிறது.
மோனாலிஸா வின் ஓவியராக மட்டுமே அதிகம் தெரிந்தவர் கண்டுபிடித்த அப்படி பட்ட சில விச்சித்திர  கண்டு பிடிப்புகளை பற்றி வரிசையாக பார்கலாமா?

 ☸ Anemometer : காற்றின் வேகத்தை அளக்கும் கருவி. இதை நாம் நிறைய இடத்தில பார்த்து இருப்போம்.  பக்கவாட்டில் திரும்பிய 4 கிண்ணங்களை எதிரெதிராக பொறுத்த பட்ட ஒரு சுழலும் அமைப்பு தான் காற்றுமானி.
இக்கால அனிமோ மீட்டர்கள் சுழலும் போது அதனுடன் சேர்ந்து சுழலும் படி டைனமோ அமைப்பு இருக்கும். காற்றின் வேகத்திற்கு ஏற்ப்ப மின்சாரம் உற்பத்தி மாறுபடுவதை வைத்து காற்று வீசும் வேகத்தை அளக்க முடியும். இக்காலத்தில் சரிதான் ஆனால் டைனமோ கண்டுபிடிக்க படாத அந்த காலத்தில் (14 ஆம் நூற்றாண்டு ) அவர் இதை வைத்து எப்படி கண்டுபிடித்தார் தெரியுமா ?

சுழலும் வேகத்திற்கேற்றாற்போல அந்த கருவி மேலெழும்பும் படி அமைக்க பட்டிருக்கும். அது மேலே உயரும் இடத்தில ஒரு ஸ்கேல் அமைப்பு பொறிக்க பட்டு இருக்கும் அதில் எவ்வளவு உயர்ந்து உள்ளது என்பதை வைத்து காற்று வீசும் வேகத்தை அறிய முடியும்.

☸  flying machine : பறக்கும் கருவியை இக்காலத்து ஹெலிகாப்டருக்கு முன்பே வடிவமைத்தவர் டாவின்சி. அவருடைய
பறக்கும் வண்டியின் பெயர் "ornithopter"
தனது இந்த கண்டுபிடிப்பு வௌவால் மற்றும் பறவைகளை பார்த்து உண்டாகியதாக அவருடைய நோட்டு குறிப்புகளில் உண்டு.
இந்த கருவியில் ஒரு பெடல் அமைப்பு இருக்கும் விமானி அதை பெடல் செய்ய செய்ய இருபுறமும் 33 அடிக்கு நீண்டு இருக்கும் பட்டுதுணியால் போர்த்த பட்ட ரக்கைகள் பட பட வென அடிக்க தொடங்கும். இந்த அமைப்பு பறந்ததா ?
உயரமான இடத்தில் இருந்து தரை இறங்க இது வெற்றி பெற்றாலும் .. டாவின்சி திட்டமிட்டதை போல தரையில் இருந்து பெடல் பண்ணி வானில் எழுந்து பறக்க முடியவில்லை என்பதால் இந்த திட்டம் 100 சதம் வெற்றி என்று சொல்ல முடியாது.

☸ Aerial screw : இது ஒன்றும் இல்லை இக்கால ஹெலிகாப்டரின் முன்னோடித்தான். ஹெலிகாப்டரின் அதே தொழில் நுட்பத்தை உள்வாங்கி கிட்ட தட்ட அதே தத்துவத்தில் இயங்கும் வண்டி ஒன்றை செய்திருந்தார் டாவின்சி. அதை குறித்து அவர் வர்ணனையில் காற்றை சுழற்றி சுழற்றி மேலெழும்பும் அமைப்பு என்று எழுதி இருப்பது இக்கால ஹெலிகாப்டரை குறிப்பதை போலவே இருபத்து வியப்பு.

இக்கருவி 15 அடி அகலம் கொண்டிருந்தது நடுவில் நாலு பேர் சேர்ந்து ஷாப்ட்டை சுற்ற சுற்ற... மேலே ஒரு காற்றாடி சுற்றும் அதனால் மேல் நோக்கு விசை கிடைக்க பெற்று வண்டி மேலே எழும்பும் இதான் திட்டம். ஆனால் 4 பேர் சேர்ந்து இயக்க வேண்டி இருந்ததால் எடை அதிகமாகி மேலே எழும்பாமல் போனது. ஆனால் பறப்பதற்கு அவர் யோசித்து இருந்த தத்துவம் சரியானது தான் என்பதை நாம் மறக்க கூடாது.

☸ Parachute : பாராசூட்டை 1783 இல் கண்டுபிடித்தவர் sebastien Lenormand என்பவர் ஆனால் அதற்க்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே தனது குறிப்பில் பாரசூட்டை வர்ணித்து விட்டு  இப்படி ஒரு அமைப்பை வைத்து ஒருவன் உயரமான இடத்தில் இருந்து எந்த காயமும் இன்றி குதிக்க முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

☸  33-barreled organ : அகாலத்தில் பயன்படுத்த பட்டு வந்த பீரங்கிகளில் ஒரு மிக பெரிய குறைபாடு இருந்ததை கண்டார் டாவின்சி. அதாவது அது ஒவ்வொரு முறையும் லோட் ஆக எடுத்து கொள்ளும் நேரம். அதை தனது தொழிற்நுட்ப அறிவால் சரி செய்தார். 11 துப்பாக்கி அமைப்பை கொண்ட 3 வரிசையை உண்டாகி வட்டமாக சுழலும் அமைப்பில் பொறுத்தினார் ஒவொரு வரிசையிலும் 11 துப்பாக்கி மொத்தம் 33 துப்பாக்கிகள் ஒரு வரிசை சுட்டு முடித்து லோட் பண்ணும் போது மற்ற வரிசை தொடர்ந்து சுட தொடங்கும். இதன்மூலம் தடை இன்றி தொடர்ச்சியாக சுட முடிந்தது.

☸   armored car  : பீரங்கிகளை சுமந்து செல்லும் இக்காலத்து டேங்க் அமைப்பை போன்ற ஆயுதங்களை தாங்கிய வண்டி ஒன்றை டாவின்சி வடிவமைத்து இருந்தார்.
360 டிகிரி சுழல கூடிய பிளாட்பார அமைப்பில் வரிசையாக பீரங்கிகளை வைத்து கட்டினார். நடுவே கண்காணிக்கும் சேம்பர் கூட இருந்தது.
அந்த வண்டி இயங்க விசை உள்ளே இருக்கும் 8 பேரால் கொடுக்க  பட்டது. அவர்கள் ஷாப்ட்டை சுற்ற சுற்ற
வண்டி இயங்கும்.

☸  giant crossbow : போர் ஆயுதங்களை பொறுத்தவரை டவின்சியின் ஆயுதங்கள் எதிரியை மனோரீதியாக அச்சத்தை ஊடுவதாக அமைந்து இருந்ததாக சொல்வார்கள் அப்படி ஒரு அமைப்புதான்  "giant crossbow. " இது ஒரு ராட்சத வில் இரு பக்கமும் ஆறு ஆறு சக்கரங்கள் பொருத்தப்பட்ட நகரும் அமைப்பின் மேல் பொறுத்த பட்ட ராட்சத வில் அமைப்பு இதை விசையை கூட்ட ஒருவர் அதன் பல்சக்கர அமைப்பை சுற்ற வேண்டும் வில் பின்னோக்கி இழுக்க படும் அதில் பறக்கும் நெருப்பு உருண்டைகளை கூட வைத்து அனுப்பலாம். அம்பு விடுபட விசையை இழுத்து பிடித்து நிறுத்தி வைத்திருக்கும் ஒரு பின் ஐ சுத்தியால் தட்ட வேண்டும்.
போர்க்களத்தில் நிஜமாகவே மிரட்டிய ஒரு கண்டுபிடிப்பு இது.

☸   triple barrel canon :  அந்நாட்டின் மிலிட்டரி என்ஜினீராக இருந்தவர் டாவின்சி ராணுவத்தில் இடப்பெயர்ச்சி என்பது மிக அவசியம் என்று கருத்தை கொண்டிருந்தார். அக்கால பீரங்கிகள் ஒரே இடத்தில் நிலையாக நிலை நிறுத்த பட்டவை மேலும் லோட் செய்ய சிரமமானவை .டாவின்சி இரண்டு குறைகளையும் போக்கினார். பீரங்கிகளை சக்கரம் கொண்ட வண்டிகளாக மாற்றியதோடு இல்லாமல் லோடு செய்வதை எளிமையாக்கினார். அக்காலத்தில் வெடிமருந்து கண்டுபிடிக்க பட்டு இருந்தாலும் அதன்பயன்பாடு மக்கள் அவ்வளவாக அறிந்திருக்க வில்லை. ஆனால் எதிர்காலத்தில் இது தான் அனைவராலும் பயன்படுத்த பட போகிறது என்று அறிந்தவர் போல டாவின்சி தொடர்ந்து வெடிமருந்துகளை தான் பயன்படுத்தினார்.

☸  Clock : கடிகாரத்தை கண்டுபிடித்தவர் டாவின்சி அல்ல ஆனால் அவர் அதை துல்லியமான கடிகாரமாக மாற்றினார். மணிக்கு தனியே நிமிடத்திற்கு தனியே மெகாணிசம் செய்தார். மேலும் அவர் கடிகாரத்தில் அன்ன்னைக்கு உள்ள நிலவின் அமைப்பு காட்டும் அமைப்பும் இருந்தது. ஸ்பிரிங் ஐ இணைத்து கடிகாரத்தின் எடையை குறைத்தார். மேலும் உராய்வு உள்ள பகுதிகளில் விரைவில் தேயாமல் இருக்க மெட்டல் களுக்கு பதிலாக வைரம் போன்ற எளிதில் தேயாத கற்களை பயன்படுத்தினார். இன்றும் தரமான கடிகாரங்களிலில் இதை பின் தொடர்கிறார்கள். நீங்கள் உங்கள் கைகடிகாரங்களில் 12 ஜுவல் 15 ஜுவல் என்றெல்லாம் எழுதி இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அவைகள் எல்லாம் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்களின் எண்ணிக்கை தான்.

☸  Colossus : இது bronze ஆல் செய்ய பட்ட உலோக குதிரை. (Bronze என்பது செம்பு மற்றும் நிக்கல் ,ஜிங்க், அலுமினியம் கலந்த கலவை) அந்நாட்டு அரசன் இந்த உலகத்திலேயே மிக பெரிய  உலோக குதிரை செய்ய பணித்து இருந்தார். எனவே டாவின்சி முதலில் களிமண் குதிரை தயாரித்தார் பிறகு 80 ஆயிரம் கிலோ bronze உலோகம் சேகரித்து வைத்தார். ஆனால் தலைவிதி கொஞ்சம் விளையாடியதில் கடைசியில் அந்த உலோகம் பிரான்ஸ் நாட்டுக்கு பீரங்கி செய்ய தான் பயன்பட்டது.
அந்த பிராஜக்ட் 1977 யில் ஒரு பைலட்டால் மீண்டும் தொடங்க பட்டு 17 ஆண்டுகள் தயாரிக்க பட்டு டாவின்சி வாழ்ந்த இத்தாலியின் மிலன் என்ற ஊர் மக்களுக்கு பரிசளிக்க பட்டது.

☸ Ideal city : டவின்சியின் பன்முக திறமைகள் எல்லாமே ஒரே திட்டத்தில் காட்டினால் எப்படி இருக்கும் அப்படி அவருடைய கட்டிட கலை சிற்ப திறமை கலை அறிவு பொறியியல் அறிவு எல்லாம் சேர்ந்து அவர் செய்த ப்ராஜெக்ட் தான் ideal city .
அவர் வாழ்ந்த மிலன் நகரை பிளேக் நோய் ருத்ர தாண்டவம் ஆடி மூன்றில் ஒரு பங்கு ஆட்களை கொன்று குவித்து இருந்தது அதை தொடர்ந்து இதைவிட மேம்பட்ட நகரத்தை உண்டாக்க எண்ணினார் டாவின்சி .அவர் தீட்டி படி உருவான நகரம் கழிவு நீர் கால்வாய் தொடங்கி கட்டிடங்கள் வரை பல வகைகளில் மேம்பட்டு இருந்தது. பிளேக் தொற்றுக்கு மிலன் நகரின் நெருக்கமான தெருக்கள் முக்கிய காரணம் என உணர்ந்த டாவின்சி இம்முறை அகலமான தெருக்களை வைத்தார். முக்கியமாக குதிரைகள் பராமரிக்க அவர் நகரத்தில் தனி இடம் ஒதுக்க பட்டிருந்தது.

☸ Robotic Knight : பொதுவாக டாவின்சி தயாரிப்புகள் பல புல்லி , சக்கர அமைப்பு, களை கொண்ட ஒரு தானியங்கி தன்மையுடன் திகழ்ந்ததால் அவைகளை ரோபோகளின் முன்னோடிகள் என சொல்வார்கள். ஆனால் அவர் குறிப்பேடுகளில் நிஜமாவே ரோபோ அமைப்பை குறித்து வைத்து இருந்தது ஆசார்யமானது. அதாவது போர் வீரன் உடை அணிந்த சிலை போன்ற அமைப்பு ஒன்று உள்ளுக்குள் ரோப் கள் புல்லி கள் சக்கரங்கள் கொண்டு தானியங்கி தன்மை கொண்டிருந்தது. இந்த மனித அமைப்பு நடக்க நிற்க எட்டி பார்த்து கண்காணிக்க உட்கார கூடியதாக இருந்திருக்கும் என்கிறார்கள்.

☸  self-propelled cart : குதிரைகளை வைத்து வண்டியை இழுத்து கொண்டிருந்த கால கட்டத்தில் குதிரைகள் இல்லாத தானே ஓட கூடிய வண்டியை வடிவமைத்தார். இன்றைய விளையாட்டு பொம்மை காரில் ஸ்பிரிங் வைத்து நாம் ஓட்டுவதை போல தான் அந்த வண்டி ஸ்பிரிங் ஆல் இயங்கக்கூடியதாக இருந்தது. கூடவே ஸ்டியரிங் மற்றும் பிரேக் அமைப்பும் இருந்தது தனி சிறப்பு.

☸ scuba gear : வெனிஸ் இல் வேலை செய்த போது டாவின்சி எதிரி கப்பல்களை நீர் மூழ்கி வீரர்கள் தண்ணீருக்கு அடியில் இருந்து தாக்க சிறப்பு உடையை வடிவமைத்தார். இக்காலத்தில் ஆக்சிஜன் உருளை பொருத்த படுவது போல அக்காலத்தில் அவர் ஒரு டியூபை மிதக்க விட்டார் அது நீரின் மேல் தளம் வரை வந்து அங்கு மிதந்து கொண்டிருக்கும் மணி போன்ற அமைப்புடன் இனைந்து இருக்கும் காற்று மேலே இருந்து டியூப் வழியாக உள்ளே சென்று சேரும்.
மேலும் அந்த உடையில் வால்வு மூலம் கட்டுப்படுத்த கூடிய பலூன் அமைப்பு ஒன்று இருந்தது அது எவ்வளவு ஆழத்தில் மூழ்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் தொழில் நுட்பம். அதில் உள்ள காற்றை வெளியேற்றுவதன்  மூலம் உள்ளே மூழ்க வெளியே வர முடியும்.

☸  Revolving bridge : நீர்நிலைகளில் ஆறுகளில் ராணுவ வீரர்கள் கடந்து செல்ல தளவாடங்களை கொண்டு செல்ல தற்காலிக பாலம் ஒன்றை வடிவமைத்தார் டாவின்சி... அது தேவைப்பட்டால் சுருட்டி கொள்ள கூடிய தேவையான இடத்தில வைத்து பயன்படுத்தி கொள்ள கூடிய தற்காலிக பாலம் .இவைகளும் வழக்கம் போல தான் புல்லிகளும் ரோப்புகளும் கொண்டிருந்தன.

டாவின்சி இருக்கும் திறமைகள் போதாதென்று உடல் கூறு அனாடமியும் பயின்றார். 30 உடற்கூறு பிரேத பரிசோதனியில் கலந்து கொண்டார். வலது கை போலவே இடது கையில் படம் வரைய ...எழுத தெரிந்த விசித்திர மனிதன் இவர். டாவின்சியின் கண்டுபிடிப்புகள் பல அவர் முளையிலேயே தங்கி விட்டு இருக்கலாம். பல அவர் குறிப்பேடுகளில் இன்னும் கருத்து வடிவத்தில் உள்ளது. பலது ஆராய்ச்சிக்கு உட்படுத்த பட்டுள்ளது. தான் குடியேறிய மிலன் நகரத்தின் வளர்ச்சிக்கு டாவின்சி மிக முக்கிய பங்காற்றினார். இத்தாலி அவரை நினைத்து பெருமை கொள்கிறது.

கிட்ட தட்ட இதே போல்..........

மெக்கானிக்கல் , எலக்ட்ரிக்கல், தாவரவியல், இன்ஜினியரிங், கண்டுபிடிப்பாளன் , பிஸ்னஸ்மேன் என்று பல துறையில் பன் முக திறமை கொண்ட மனிதர் நம் ஊரில் ஒருவர் வாழ்ந்தார் அவர் பெயர் ஜி.டி.நாயடு.
நமது நாட்டிற்கு அவரும் பல கண்டுபிடிப்புகளை வழங்கினார். ஆனால் இத்தாலியின் டாவின்சி அளவிற்கு அவருக்கு அங்கீகாரம் அளிக்க பட வில்லை . சரியான இடத்தில் ஜி.டி. நாயடு பிறந்து இருந்தால் உலகம் முழுக்க அவரை பற்றி படித்து கொண்டிருக்கும். அவ்வளவு திறமையும் அறிவு கொண்டவர் ஜி.டி நாயடு அவருடைய அதிசய கண்டுபிடிப்புகள் பற்றி வேறு கட்டுரையில் விரிவாக சொல்கிறேன்.


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

30. "டைமண்ட் பேட்டரி என்றால் என்ன

மின்சாரத்தை தேக்கி வைக்கும் பேட்டரிகள் பல இடங்களில் பல வகைகளில் பல பயன்பாடுகளுடன் நாம் பார்த்து இருப்போம் குறிப்பாக நாம் அனைவரும் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் பேட்டரி தீரும் பிரச்னையை அனுபவித்து இருப்போம்.
ஆனால் நான் சொல்ல போகும் ஒரு பேட்டரியை நீங்கள் உங்கள் கடிகாரத்திலோ வாகணத்திலோ... ஸ்மார்ட் போனிலோ மாட்டி விட்டால் அது சார்ஜ் இறங்க நீங்க நினைப்பதை விட நீண்ட நாள் ஆகும் என்று சொன்னால் மகிழ்வீர்கள்.
 எவ்ளோ அந்த நீண்ட நாள் என்றால் ஒரு 5000 ..... 10000 ஆண்டுகள் என்றால் திகைப்பீர்கள்.  ஆனால் நான் சொல்ல போகும் பேட்டரியை நீங்கள் சரியாக 7746 ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்திவிட்டு பார்த்தால் பேட்டரி 50 சதம் சார்ஜ் இறங்கி இருக்கும். அப்படி ஒரு அசத்தல் பேட்டரி தான் diamond battery. இது உண்டாக்க பட போவது ஒரு கழிவில் இருந்து. கழிவு என்றால் ஏதோ சாதாரணமான கழிவு அல்ல அணுஉலை கழிவு.
அது என்ன தொழில்நுட்பம் ?எப்படி அது சாத்தியம்?? சொல்கிறேன் அதற்க்கு முன்....

நீங்கள் iron man ஹாலிவூட் படம் பார்த்து இருப்பீங்க இல்லையா... (பாக்கலனா பார்த்திடுங்க அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் ஆர்வம் கொண்டவர்களை அந்த படம் மிக கவரும் ) அதில் டோனி ஸ்டார்ட் அந்த சகலகலா வல்லமை வாய்ந்த கவச சூட் ஐ போட்டு கொண்டு பறப்பது சுடுவது ,ஸ்கேன் பண்ணுவது, அதிலேயே போன் பேசுவது என்று நிறைய காரியம் செய்வார். அதற்கெல்லாம் ஆற்றல் அல்லது அந்த இரும்பு சூட் மொத்தமாக இயங்க எரி பொருள் என்ன எப்படி எங்கே இருந்து கிடைக்கிறது என்றால் ..அதில் நெஞ்சு பகுதியில் பொறுத்த பட்ட ஆர்க் ரியாக்டர் எனும் சிறிய பேட்டரி போன்ற ஒரு கருவியை காட்டி இருப்பார்கள். கதை படி அந்த கருவிக்குள் கதிரியக்க தன்மை கொண்ட பொருள் ஒன்றை நுழைத்து பொருத்தி விட்டால் அந்த பொருள் வெளியிடும் கதிரியக்க ஆற்றலை வைத்து அந்த மொத்த சூட் ஐ யும் இயக்கலாம் என்று லாஜிக் சொல்லி இருப்பார்கள். உண்மையில் டைமண்ட் பேட்டரியின் கான்செப்ட் கூட அது தான்.

ரேடியம் ஆகட்டும் அல்லது யுரேனியம் ஆகட்டும் கதிர்வீச்சு தனிமங்கள் என்றாலே அவைகள் 24 மணிநேரமும் தன்னிச்சையாக ஆற்றலை வெளியிட்டு
கொண்டே இருக்கும். (கொசுறு குறிப்பு : தலை கனம் கூடி போன மனிதன் நிலை தன்மை இல்லாமல் ஆட்டம் போடுவதை போல அணு எண் அதிகம் கொண்ட... கனமான தனிமங்களின் அணுக்கள் நிலை தன்மை இல்லாமல் உள்ளே இருக்கும் விசை பிணைப்புக்கு மதிக்காமல் தங்களை தாங்களே ஆற்றலாக மாற்றி கொண்டிருக்கும் நிகழ்வுக்கு பெயர் தான் கதிர்வீச்சு...)
எனவே அந்த ஆற்றலை வீணாக்காமல் பயன் படுத்த முடிந்தால் ???? அதான் கான்செப்ட் .
(இந்த கதிர்வீச்சு கொண்ட தனிமங்களின் பெயர்கள் மட்டும் "யம்".."யம்" னு முடியற மாதிரி வச்சிஇருக்காங்களே எதுக்கு ? நீண்ட நாள் சந்தேகம் எனக்கு )

இதற்க்கு அவர்கள் தேர்ந்தெடுத்து உள்ளது C 14 என்ற கார்பன் பொருளை.
அவர்கள் என்றால் எவர்கள்?
the University of Bristol Cabot Institute ஐ சேர்ந்த அறிஞர்கள் 25 நவம்பர்  2016 இல் நடந்த ஆண்டு விழா சொற்பொழிவில் தான் இந்த யோசனையை முதல் முதலில் சொன்னார்கள். எனவே இவர்கள் தான் அந்த அவர்கள்.

இந்த கார்பன் C14 எங்கே கிடைக்கும் என்றால் அணு உலையில் பயன் படுத்த படும் "neutron moderator "இல் பயன் படுத்த படும் கிராபைடில் உள்ள ஒரு பொருள் தான் அந்த கார்பன். அது என்ன "neutron moderator "?

அணு உலை எனும் ராட்சத வண்டிக்கு நியூட்ரான் எனும் துகள் தான் ஆக்சிலேட்டர். அதாவது அதை பயன் படுத்தி தான் யுரேனியம் .. புளுடோனியம் போன்ற கனமான தனிமங்களின் அணுக்களை பிளப்பார்கள்.
அந்த அணு உலையில் "நியூட்ரான் மாடரேட்டர் "என்ற அமைப்பு தான் அந்த வண்டிக்கு பிரேக்... அதாவது வேக கட்டுப்பாட்டு கருவி என்று சொல்லலாம். அங்கே கிராபைட்டை உள்ளே வைத்து இருப்பார்கள் இதில் நம்ம கார்பனின் வேலை பாய்ந்தோடும் நியுட்ரானை பிடித்து அணு உலையின் வேகத்தை மட்டு படுத்துவது.

அப்படி செய்யும் போது என்ன நடக்கும் தெரியுமா ?
நம்ம கார்பன் ஆரம்ப நிலையில் கதிர்வீச்சு எல்லாம் இல்லாத நல்லவன் தான். அப்போது அவன் பெயர் C 12. இங்கே நியூட்ரான் உடன்  ஓடி பிடித்து விளையாட விளையாட கதிர்வீச்சை வெளிப்படுத்தும் பொருளாய் மாறுகிறான் இப்போ அவன் பெயர் C 14.

(எல்லா C12 களும் மாறி விடுவது இல்லை நியுட்ரானை பிடிக்கும் சில மட்டும்... )

 நம்ம வீட்டில் குப்பை நிறைய சேர்ந்தால் அதை அப்புற படுத்துவது ஒரு தலைவலி வேலை அல்லவா அப்படி அணு உலையில் பயன்படுத்த பட்ட கழிவான... அந்த C 14 ஐ அப்புற படுத்துவதும் ஒரு தலைவலி வேலை தான் காரணம் அது ஒரு கதிர்வீச்சு பொருள். மேலும் அதன் 'அரை ஆயுள்' 5730 ஆண்டுகள் .
(தனிமங்களின் அரை ஆயுள் என்றால் என்ன என்று ஏற்கனவே குவாண்டம் எனும் கடல் கட்டுரையில் குறிபிட்டு இருந்தேன் நினைவு இருக்கிறதா ? அதாவது ஒரு 100 கிராம் கார்பன் ஆற்றலாக மாறுகிறது என்றால் 5730 ஆண்டு கழித்து 50 கிராம் மிச்சம் இருக்கும் . அப்போ இன்னோரு 5730 ஆண்டில் முழுதும் அழிந்து விடுமா என்றால் இல்லை 50 இல் பாதி 25 கிராம் இருக்கும் அப்புறம் இன்னோரு 5730 ஆண்டு கழித்து 12.5 கிராம்.... இப்படி  எத்தனை ஆண்டுகளில் தன்னில் சரிபாதியாகிறது என்பது தான் அந்த தனிமத்தின் அரை ஆயுள் . )

நம்ம வீட்டு குப்பையில் இருந்து யாராவது மின்சாரம் எடுக்கலாம் என்று சொன்னால் ஒரு பிரச்னை தீர்ந்தது என்று நாம் நினைப்பதை போல அந்த கழிவை வைத்து டைமண்ட் பேட்டரி செய்யலாம் என்று சொன்னால் அவர்களுக்கு அப்புற படுத்தும் அல்லது அதை அழிக்கும் பிரச்னை தீர்ந்தது (இது ஒரு பக்க விளைவு நன்மை னு வச்சிகோங்களேன் )

சரி இவ்ளோ நேரமா டைமண்ட் டைமண்ட் னு சொல்றோமே... இங்க டைமண்ட் ஏன் ..எதற்கு...எப்படி வந்தது.?
டைமண்ட் என்ன பொருள்? கார்பன். நாம இவ்ளோ நேரமா எதை பற்றி பேசுகிறோம் கார்பனை பற்றி..  அப்போ டைமண்டை பற்றி தான் பேசி கொண்டு இருக்கிறோம்.
 எல்லாம் கார்பனும் வைரம் ஆகாது ஆனால் C14 ஐ சூடாகி எரித்து புகை ஆக்கினால் அந்த கரி புகை ஆகி அதிக வெப்பதில் குறைந்த அழுத்தத்தில் படியும் போது நமக்கு அந்த படிவத்தில் கிடைபது வைரம் .

(இயற்கை வைரம் இல்லாமல் மனிதன் உண்டாக்கும் வைரம் மொத்தம் 4 வகை யில் உண்டாக்க படுகிறது ..
1. அதிக வெப்பம் அதிக அழுத்தம் முறை
2. வேதியியல் படிவங்கள் முறை.
3. சில கார்பன் பொருளை வெடிக்க வைத்து பெரும் முறை.
4. சில கார்பன் இல் அல்ட்ரா சோனிக் கேவியேஷன் பயன்படுத்தி பெரும் முறை )

இப்போதைக்கு நம்ம படிவத்தில் கடைசியாக கிடைத்த அந்த வைரம்... அதுவும் கதிர் வீச்சு கொண்ட ஒரு கார்பனாகவே இருக்கிறது  இந்த டைமண்ட்கள் மீண்டும் ஒரு கதிர் வீச்சு பகுதியில் வைக்க படும் போது சிறிது அளவு மின்சாரத்தை உண்டாக்க கூடியது . அந்த மின்சாரத்தை தான் நான் சொன்ன பேட்டரியில் பயன் படுத்த போகிறோம். கார்பனின் கதிர் வீச்சு கடினமான பொருளால் தடுக்க படும் போது தான் அந்த மின்சாரம் உண்டாகிறது. நமக்கு தெரிந்த மிக கடினமான பொருள் வைரம் தான் எனவே இந்த மொத்த அமைப்பும் வெளியிடும் கதிர்வீச்சிலிருந்து காக்க
கதிர் வீச்சை வெளிப்படுத்தாத C 12 கார்பனால் செய்ய பட்ட இன்னோரு வைரத்தால் இந்த மொத்த அமைப்பும் மூட படுகிறது.

இப்போது இந்த அமைப்பின் அரை ஆயுள் 7746 ஆண்டுகள். இப்போது இவைகள் பீட்டா கதிரை உள்ளுக்குள் வெளியிடும் ஒரு பீட்டாவோல்டிக் பொருள் ..(' பீட்டா வோல்டிக் ' என்றால் இப்படி பீட்டா கதிரை வைத்து மின்சாரம் கொடுக்கும் பொருள்..என்று பொருள் )

இப்படி தயாரிக்க பட்ட  இந்த அமைப்பு தான் இந்த கட்டுரையின் தலைப்பான
"டைமண்ட் பேட்டரி ''

இந்த வைர மின்களனின் (தமிழ் ல அப்படி தானே வரும் !?) மிக பெரிய நன்மை அதன் ஆயுள் ... இதற்க்கு சார்ஜ் பண்ணும் வேலையோ... பராமரிப்போ எதுவும் கிடையாது ஒரு முறை இயக்கத்தை ஆரம்பித்து விட்டால்.. பல  தலை முறைக்கு மின்சாரம் கொடுத்து கொண்டே இருக்கும்.
இதன் மிக பெரிய குறைபாடு என்ன வென்றால் நாம் நினைப்பதை போல இதில் 230 வோல்ட் 440 வோல்ட் எல்லாம் எடுக்க முடியாது.

 இதில் எடுக்க முடிய கூடிய மிக அதிக பட்ச மின்சாரமே 2 வோல்ட் தான். அதாவது கிட்ட தட்ட நம்ம சாதா AAA பேட்டரி அளவு தான். ஆனால் எண்ணிக்கையை கூட்டுவதன் மூலம் இதை இதயத்தில் பொருத்தும் பேஸ் மேக்கர் கருவி முதல் ராக்கெட் வரை இதன் ஆற்றலை நிச்சயம் எதிர்காலத்தில் பயன் படுத்த முடியும் என்கிறார்கள் இதன் ஆய்வாளர்கள்.
இது பயன் பாட்டில் வருவதில் உள்ள மிக பெரிய தடை எது என்று நீங்களே யூகித்து இருப்பீர்கள். ஆம் ஒரு பேட்டரி வாங்கும் பணத்தில் நீங்கள் பல நூறு போன்கள் வாங்கி விடலாம். (மொபைலில் இந்த தொழில் நுட்பம் வந்தால் மொபைல் திருடு போகிறதோ இல்லையோ பேட்டரி திருடு போய் விடும் )

எப்படியோ வைர பேட்டரி வெளியாவதில் உள்ள தடையை மீறி அவைகள் பயன்பாட்டிற்கு வந்தால் எனர்ஜி சோர்ஸ்...மற்றும்  பேட்டரி உலகில் நிச்சயம் அவைகள் ஒரு புரட்சியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை...


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

31 "ஹிக்ஸ் பூஸான் ஆச்சர்யமும் ஆபத்தும்"


கடவுள் துகள் என்று அழைக்க படும்
ஹிக்ஸ் போஸான்கள்  (higgs boson )பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். அவைகள் மொத்த பிரபஞ்சத்தையே ஒட்டுமொத்தமாய் அழித்திடும் ஆற்றல் கொண்டவை தெரியுமா ?

ஒரு பெரிய விண்கல் வந்து மோதி பூமி அழியும் என்று சொன்னால் நம்பலாம். ஆனால் கண்ணுக்கு தெரியாத அணுவுக்குள் ஒளிந்திருக்கும் தம்மாதுண்டு துகள் அதுவும் உலகத்தை கூட அல்ல மொத்த பிரபஞ்சத்தை அழிக்குமா எப்படி ?
அதை பற்றி தெரிந்து கொள்ளும் முன் இந்த ஹிக்ஸ் பூஸான் என்பது என்ன சமாச்சாரம் என்பதை கொஞ்சம் பார்க்கலாம்.

அணு ஆராய்ச்சியில்.... குவாண்டம் பிஸிக்ஸ் இல் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் அவ்வபோது புது புது துகளை கண்டு பிடிப்பது இயல்பு தான். ஆனால் 2012 ஜூலை 4  அன்று cern விஞ்ஞானிகள் ஹிக்ஸ் பூஸான் இருப்பதை கண்டு பிடித்த போது வழக்கத்தை விட அதிக வரவேற்பும் அதிக ஆரவராமும் இருந்தது .அதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை.

முதல் முதலில் 1960 களிலேயே இப்படி ஒரு துகள் இருக்க வேண்டும் என்று சில ஆய்வாளர்கள் கணித்து இருந்தார்கள். (அப்படி கணித்த peter higgs என்பவர் பெயரால் தான் இவைகளுக்கு இந்த பெயர் ) ஆனால் அதை உறுதி செய்ய 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதை கண்டுபிடித்த cern ஆய்வகம் தான் உலகத்திலேயே மிக பெரிய ஆய்வகம். அதை கண்டுபிடித்த லார்ஜ் ஹைட்ரான் கொலைடர் என்ற கருவித்தான் உலகத்திலேயே மிக அதிக விலையுயர்ந்த கருவி (உலகின் மிக சிறிய துகள்களை ஆராய உலகின் மிக பெரிய கருவி தேவை படுகிறது பாருங்கள் ) ஏன் இந்த துகளுக்கு மட்டும் நட்சத்திர அந்தஸ்து என்று கேட்டால் இந்த மொத்த பிரபஞ்சத்தையே பிக் பாங்கிலிருந்து உண்டாகியதே இந்த ஹிக் பூஸான் துகள் தான் என்கிறார்கள்.

இயற்பியலில் அணுக்களை ஆராய பார்ட்டிகள் பிசிக்கிஸ் .. ஆட்டம் பிசிக்கிஸ் என்று இரு பிரிவு உண்டு. அதில் இந்த  துகள்கள் "பார்ட்டிகள் பிசிக்கிஸ் "இல் உள்ள standerd model இல் வரும் ஒரு ஐட்டம்.
(Standard model படி நாம் அறிந்த அணுக்களில் 12 வகை துகள்கள் உண்டு அதில் 6 லெபட்டான் தொகுதியிலும் 6 குவார்க் தொகுதியிலும் வருபவை. புரோட்டான் நியூட்ரான் எல்லாம் குவார்க்  தொகுதித்தான். எலெக்ட்ரான் மற்றும் எலெக்ட்ரோ நியூட்ரினோ லேப்டான் பகுதியை சார்ந்தவை. லேப்டான் குவார்க் என்பவை மேலும் பிரிக்க முடியாத ஒன்று ).

இந்த பிரபஞ்சத்தில் மொத்தம் 4 விசைகள் தான் நிறைந்து இருக்கின்றன ஒன்று ஈர்ப்பு விசை இனொன்று மின்காந்த விசை அடுத்தது அணுக்களுக்குள் இருக்கும் வலிமையான விசை அப்புறம் அணுக்களுக்குள் இருக்கும் வலிமை அற்ற பலகீனமான விசை . இதில் ஈர்ப்பு விசையை தவிர்த்து மீதி 3 விசைகளை பற்றி விளக்குபவை தான் நாம் மேலே பார்த்த standerd model எனும் அணு பிரிவு.
இதில் ஹிக்ஸ் பூஸான் எப்படி முக்கியத்துவம் அடைகின்ற என்றால் மற்ற துகளிகளில் நிறையை உண்டு பண்ணும் வேலையை செய்வது இந்த துகள்கள் தான்.

 ஹிக்ஸ் பூஸான் ஹிக்ஸ் பீல்ட் என்ற ஒன்றை உண்டு பண்ணுகின்றன அந்த பீலிடு எல்லையில் வரும் துகளை நிறை கொண்டவைகளாக செய்கின்றன . தனக்கு அருகே வரும் துகள்களை ஒரு பிணைப்பு மூலம் இவைகள் இனைத்து பிடிக்கின்றன வெறும் ஆற்றல் நிறையாக மாறும் அதிசயம் நடப்பது இங்கே தான்.
நிறை என்பது அந்தந்த பொருக்குள் இருந்து செயல்படும் ஏதோ ஒன்று என்ற கருத்தை மாற்றி ஒரு ஆற்றல் பீல்டில் உள்ளே நுழையும் துகள்கள் நிறையை உணர்கின்றன என்ற கருத்தை கொண்டு வந்தது இந்த ஹிக் பூசான்கள் தான். (ஒளியின் போட்டான் துகள்களிடம் மட்டும் இவைகள் பாட்சா பலிப்பது இல்லை. ஒளியை எடை கொண்டதாக மாற்ற பிரபஞ்சத்தில் எந்த சக்தியாலும் முடியாது ) எனவே பிரபஞ்சத்தின் மொத்த நிறையுமே உண்டு பண்ணினது இந்த ஹிக்ஸ் பூஸான்கள் தான். அதனால் தான் இவைகளுக்கு அந்த நட்சத்திர அந்தஸ்து.

உருவத்திற்கும் அருவத்திற்கும் ... இருப்பியலுக்கும் இல்லாமைக்கும் இடையில் உள்ள ஒரு பாலம் தான் இந்த ஹிக்ஸ் பூஸான்கள்.
இவைகள் மற்ற துகள்களை போல சுழல்வது இல்லை. இவைகளுக்கு மின் சுமை இருப்பது இல்லை. நிறமும் இல்லை. மேலும் மற்ற துகள்களாக decaying என்று சொல்ல பட கூடிய ஒன்றை செய்ய கூடியவை. அதாவது ஒரு துகள் பலவாக பிரிந்து பல குட்டி துகள் ஆவது decaying ஆனால் அந்த துகள்களின் நிறை மூல துகள் அளவை விட குறைவாக இருக்கும்.

சரி இந்த ஹிக் பூஸான்களின் ஆச்சர்யத்தை பார்த்தோம் இனி ஆபத்தை பார்ப்போம்....

ஸ்டீப்பன் ஹாக்கின்ஸ் gordon kane என்பரிடம் 100 டாலருக்கு ஒரு பெட் கட்டி இருந்தார் அதாவது ஹிக் பூஸான் என்பது கற்பனை கருத்தாக இருந்த போது . இதை எந்த விஞ்ஞானியும் கண்டு பிடிக்க முடியாது என்று. ஆனால் 2012 cern விஞ்ஞானிகள் அதை கண்டு பிடித்தார்கள் அதற்க்கு ஹாக்கின்ஸ்
"it made physics less interesting."
என்று கருத்தை தெரிவித்து இருந்தார்.
மேலும் இந்த துகள் தான் பிரபஞ்சத்தையே அழிக்க போகிறது என்றார். (அதை போய் எதுக்கு நோண்டிக்கிட்டு என்ற பொருளில் )
அப்படி என்ன செய்யும் இந்த துகள் ?

பொதுவாக இந்த துகள்கள் down energy status இல் இருக்க கூடியவை. அவைகள் உயர் எனர்ஜி ஸ்டேட் ஐ அடைய நிறைய ஆற்றல் தேவை அப்படி அந்த ஆற்றலை அவைகள் பெற்றுவிட்டால் அவைகளால் இந்த பிரபஞ்சத்தை காலி பண்ண முடியும்.
இவைகள் பிரபஞ்சத்தை எப்படி அழிக்கும் தெரியுமா ?

வெறும் வெளியில் இவைகள் ஒரு வெற்றிட குமிழ்களை உண்டு பண்ணனுமாம். (Vacuvam bubble )அந்த குமிழ்கள் பிரபஞ்சத்தில் பரவி பெரிதாக மாறுமாம். அந்த குமிழ்கள் பெரிதாகி பெரிதாகி இந்த பிரபஞ்சத்தையே விழுங்கும் அதில் சிக்கும் பொருட்களின் நிறைகள் பறிக்க பட்டு பொருள் அற்ற நிலையாக ஒன்னும் அற்றதாக மாற்ற படும்.இந்த மொத்த பிரபஞ்சத்தையே இது அப்படி மாற்றும்.

Fermi ஆய்வாகதை சேர்ந்த Joseph Lykken, இதைப்பற்றி கருத்து தெரிவிக்கையில் ஆம் அது நடக்கும் ஆனால் பயப்பட தேவை இல்லை அது நடக்க ஒரு 100 ஆண்டுகள் ஆகும் என்றார் . (பயப்படாதீர்கள் 100 ஆண்டுகளுக்கு பின்னால் நூறு சைபர்களை சேர்த்து கொள்ள சொன்னார் ) அல்லது அது ஏற்கனவே உண்டாகி விட்டது அந்த bubbls நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது. ஆம் அப்படியும் இருக்கலாம் என்றார். அப்படி வந்து கொண்டு இருப்பதாய் இருந்தால் அவைகள் ஒளியின் வேகத்தில் நம்மை நெருங்கி வரும் என்பதால் அது  அழிக்க போவதை நாம் எந்த வகையிலும் உணர போவதே இல்லை.

சரி....வெறும் 125 GeV நிறை கொண்ட ஒரு துகளால் தான் பிரபஞ்சமே அழிய போகிறது என்று இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும். குமிழ் சீக்கிரம் நெருங்கி தொலைக்காமல் இருந்தால் சரி


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

32. "அலெக்ஸ்சாண்ட்ரியாவின் அதிசய இன்ஜினியர்"

" அலெக்ஸான்ரியா"
எகிப்தின் மிக பிரபலமான ஒரு நகரம். குறிப்பாக அந்த கால உலக அதிசயம் கலங்கரை விளக்கமும் .. இடைக்காலத்தில் உலக அதிசயமான நெக்ரோபோலீஸ் எனும் கல்லறைகள் கட்டிடங்களுக்காகவும் உலக பிரசித்தம்.
இதற்கும் மேல் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அலெக்ஸான்ரியாவின் எரிந்து போன மகா பெரிய நூலகம். உலகத்தின் அணைத்து போக்கிஷியங்களும் அங்கே கொட்டி கிடந்தன. (அந்த நூலகம் வார கணக்கில் எரிந்ததாம் அவ்ளோ பெரிது )

அலெக்ஸாண்ட்ரியா கி. மு 331 இல் அலெக்ஸ்சாண்டரால் நிறுவப்பட்ட நகரம். அது பண்டைய கடவுள்கள் ஆட்சி செய்த ஒரு புராண நகரம். அந்த நகரத்தின் மக்கள் கடவுளுக்கு மிக பக்தியாக  இருந்தார்களா தெரியாது ஆனால் மிக பயந்து இருந்தனர். அதற்க்கு காரணம் அங்கே இருந்த பிரமாண்ட கோவில் களின் கடவுள்கள் மிக உயிரோட்டமாக இருந்தது தான். ஆம் அந்த கடவுள்கள் அந்த மாநகர மக்கள்களுடன் பல வகைகளில் பேசினார்கள் தொடர்பு கொண்டார்கள் பய முறுத்தினார்கள். அக்கால கிரேக்க கடவுள் ஜூயுஸ் பற்றி இன்றைய பல ஹாலிவூட் திரைப்படங்களில் நாம் பார்த்து இருபோம்.
குறிப்பாக  அலெக்சான்றியாவை அன்றைய காலத்தில் மிரட்டி இருந்தது அன்றைய கடவுள் serapis .

சேராபிஸ் க்கு மிக பிரமாண்ட கோவில் இருந்தது. மக்கள் கோவிலுக்கு பயம் கொண்ட பக்தியுடன் செல்ல காரணம்  அங்கே ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்லும் போது அவர்கள் ஒரு மாயா ஜால உலகத்திற்கு சென்று வந்தார்கள்.
அங்கே உள்ளே செல்ல கதவுகள் சாத்த பட்டிருக்கும் அதை திறக்கும் ஆட்கள் அங்கே யாரும் கிடையாது. மாறாக கடவுளுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நெருப்பை கொளுத்தி வேண்ட வேண்டும்.
 திருப்தியான கடவுள் கொஞ்சம் நேரம் கழித்து கதவை திறப்பார்.மாயாஜாலமாக தானாக திறக்கும் கதவை கடந்து சென்றால். உள்ளே கோவிலில் நடுவில் பிரமாண்ட ஹாலில் ஒரு உலோக ரதம்  கிளம்பி மெல்ல காற்றில் எழும். அங்கே முன்னால் பிரமாண்டமாக அமர்ந்து இருக்கும் சேராப்பிஸ் முகத்தில் சூரிய ஒளி தோன்றும் அந்த கணம் அந்த ரதம் அப்படியே காற்றில் எழும்பி பறக்கும்.
மக்கள் கடவுளின் சக்தியை கண்டு பிரமித்து விழுந்து வணங்குவார்கள்.

அங்கே இடிகளின் கடவுள் சிலை முன் நின்று வணங்கும் போது அந்த சிலைகள் சில நேரம் இடி சத்தத்தை கொடுக்கும். அங்கே இருந்த சில சிலைகள் உறுமும். அப்புறம் சில தேவதைகள் காணிக்கை நேரத்தில் கண்களில் இருந்து ரத்தம் வழியும். இன்னோரு தேவதை காணிக்கை நேரத்தில் திடீரென மார்பில் இருந்து பால் பீச்சி அடிக்கும்.
இது போன்ற கடவுளின் சக்தியை நேரடியாக தினம் தினம் காணும் அந்த நகரத்தின் மக்கள் கடவுளை ரத்தமும் சதையுமாக உணர்ந்ததாக நம்பினார்கள். வணங்கினார்கள். பயந்தார்கள்.

 ஆனால் பாவம்...
அவர்களுக்கு தெரியாது. இந்த மாயா ஜாலத்திற்கு பின்னால் இருந்தது கடவுள் சக்தி அல்ல அது ஒரு திறமை வாய்ந்த  இன்ஜினியரிங் மூளை என்று.
அந்த மகா மூளை கொண்ட இன்ஜினியரை hero of alexandriya  என்று அழைக்கிறார்கள் .(கதாநாயகன் என்ற பொருளில் அல்ல..அது அவன் பெயர்.) அவன் பெயர் heron அதை தான் அப்படி அழைக்கிறார்கள் .ஹெரான் ஒரு கணிதவியல் மற்றும் பொறியியல் வல்லுனர். அக்காலத்தில் மின்சாரமோ மோட்டாரோ இல்லாத காலத்தில் அவன் செய்து வைத்திருந்த கண்டுபிடிப்புகள் ..தானியங்கிகள்.. தொழில்நுட்பங்கள் எல்லாமே இக்கால நவீன கண்டுபிடிப்புக்கு சவால் விடுபவை. உதாரணமாக சில....

அந்த கோவிலில் ஒரு சிலை இருந்தது ஒரு பிளாட்பார அமைப்பு அதில் ஒரு பக்கம் ஒரு குதிரை நிற்கும் அதற்க்கு எதிரே ஒரு மனிதன் கையில் வாளுடன் திரும்பி நிற்பான் திடீரென அந்த மனித சிலை திரும்பும் அந்த குதிரையின் கழுத்தில் வாளை வைத்து அப்படியே வெட்டும் .. அந்த வாள் குதிரை கழுத்தை அறுத்து கொண்டே சென்று அடுத்த பக்கம் வருவதை பார்க்கலாம் கழுத்தில் வெட்ட பட்ட கோடும் தெரியும் ஆனால் குதிரை தலை துண்டாகாமல் அப்படியே தான் இருக்கும் அந்த மனிதன் திரும்ப திரும்ப குதிரையை வெட்டி கொண்டே தான் இருப்பான். இதை தவிர அந்த குதிரை வாயில் தண்ணீர் வைக்க பட்டால் அழகாக உறிஞ்சி வேறு குடிக்கும். இதை பார்க்கும் மக்கள் தலை கிறுகிறுக்கும்.
அந்த அமைப்பை யாரவது உடைத்து பார்த்து இருந்தால் தெரிந்து இருக்கும் அங்கே அடியில் அந்த சிலையில் ஒரு ஓட்டை இருப்பதும் அதில் தண்ணீர் நிரம்ப நிரம்ப ஒரு குழாயில் வெற்றிடம் உண்டாகி குதிரை வாயில் வைக்க பட்ட தண்ணீரை உருஞ்சுவதும்.
மேலும் அந்த கத்தி வெட்டி கொண்டு முன்னேற முன்னேற கழுத்தின் உள்ளே கழுத்தை இணைத்து பிடிக்கும் பலசக்கர அமைப்பு இருந்ததும்.இவ்வளவும் இயங்குவது தண்ணீரின் சக்தியால் மட்டுமே.

இதே போல இன்னொரு சிறு சிலை .. அதில் ஒரு முனையில் ஒருவன் வில்லை இழுத்து பிடித்து இருப்பான் எதிர் முனையில் ஒரு டிராகன் இருக்கும் ஒரு குறிப்பிட்ட விசை இழுக்க பட்டதும் அவன் டிராகனை நோக்கி அம்பு விடுவான் அப்போது டிராகன் கர்ரர் என உறும்பும். இதுவும் தண்ணீரின் மாயாஜாலம் தான் விசை இழுக்க பட்ட உடன் ஒரு பாத்திரத்தின் நீர் கீழ் நோக்கி வடியும் அப்போது உண்டாகும் வெற்றிடடத்தில் காற்று புகுந்து டிராகன் உறும்பும் சப்தம் கொடுக்கும்.

ஒரு நீண்ட சதுர வடிவ மர குழாய் அமைப்பில் ஒரு  முள் முள்ளாக இருக்கும் இரும்பு பந்து போடப்பட்டு அந்த அமைப்பு ஊஞ்சல் போல மேலே கீழே ஆட்ட படும் போது உருளும் அந்த பந்து எழுப்பும் கட கட ஓசை... அந்த சிலைக்கு வெளியே இருந்து கேட்பவருக்கு இடியின் ஓசை போல இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக...

தேவதை முன்னால் நெருப்பில் காணிக்கை செலுத்தும் மக்கள் அந்த தேவதைக்குள் நடந்து கொண்டிருக்கும் சூட்சமம் பற்றி துளியும் அறியாமல் இருந்தார்கள்.
அவர்கள் எரிக்கும் நெருப்பு உள்ளே இருக்கும் ஒரு பாத்திரத்தை சூடாக்கும் அதற்க்கு உள்ளே வைக்க பட்ட நீர் படி படியாக சூடாகி பாத்திரத்தின் நீராவி அழுத்தத்தை கூட்டும். அந்த பாத்திரத்தில் இணைக்க பட்ட ஒரு குழாய் அடுத்த பாத்திரதுடன் இணைக்க பட்டிருக்கும் .
அந்த இன்னொரு பாத்திரத்தில் செயற்கை ரத்தம் வைக்க பட்டிருக்கும். மக்கள் நெருப்பு தொடர்ந்து எரிக்க எரிக்க குழாயில் அழுத்தம் அதிகமாகும். குழாயில் அழுத்தம் அதிகமாகி பாத்திரத்தில் உள்ள ரத்தம் அதனுடன் இணைக்க பட்ட அடுத்த குழாய் வழியாக மேலேறும் அந்த குழாய் தேவதை சிலையின் கண்களில் உள்ள மெல்லிய ஓட்டையில் உள்பக்கமாக இணைக்க பட்டிருக்கும். எனவே குறிப்பிட்ட நேரம் நெருப்பை மூட்டிய பின் அந்த தேவதை ரத்த கண்ணீர் வடிக்கும். சில தேவதை மாரில் பால் வடிவதும் இப்படி தான்.

ஹெரான் இப்படி பட்ட பல தகிடு தித்தங்களை செய்து கொடுத்தான். கடவுள்களின் தூதர்கள் ..மத போதகர்கள் அவனிடம் மக்களை கடவுளை நம்ப வைக்கும் படி கருவிகள் செய்து தர சொல்லி பணித்து இருந்தார்கள். அவனது எல்லாம் கண்டுபிடிப்பும் வெறும் ஈர்ப்பு விசை ...நீரின் சக்தி மற்றும் நீராவியின் சக்தி இதை கொண்டது இதை வைத்தே பெரிய மாய ஜாலங்களை நிகழ்த்தி காட்டினான்.
மிதக்கும் உலோக ரதம் ஒரு காந்த சக்தி கருவியாக இருக்கலாம் என்கிறார்கள்.
ஹெரானின் கருவிகள் ஆச்சர்யமானவை ... அதில் எங்கோ ஒரு இடத்தில கொளுத்த படும் நெருப்பு ஒரு இடத்தில் நீராவியை உண்டு பண்ணி விசையை முறுக்கி கோவில் கதவை திறக்க பண்ணியது.
சில தேவதையை சிரிக்க வைத்தது.. சில கடவுளை உறும வைத்தது. காற்றால் சுழல வைக்க பட்ட காற்றாடி அதனுடன் இணைந்த ஒரு அமைப்பின் மூலம் இசையை வழங்கியது.
புனித நீரை விநியோகிக்கும் ஜாடியின் மேலே போட பட்ட நாணயம் உண்டில் போல உள்ளே சென்று ஒரு விசையை தட்ட ஒரு வால்வ் சில வினாடிகள் திறக்க பட்டு புனித நீரை விநியோகித்து.

ஹெரானின் இந்த அற்புத பொறியியல் நுட்பத்திற்கு காரணம் அங்கே இருந்த அந்த உலகத்தின் அணைத்து பொக்கிஷத்தை அறிவை தனக்குள்ளே சுமந்திருந்த அலெக்ஸான்ரியா நூலகம் தான் என்கிறார்கள்.

ஹெரான் என்ன தான் அற்புத கருவிகளை கண்டு பிடித்து இருந்தாலும் ஒரு டாவின்சி போல ...
ஒரு ஆர்கிமிடிஸ் போல ... அவனுக்கு போதிய அங்கீகாரம் தருவது சரி அல்ல என்றே பலரும் கருதினார்கள் ஆம் அது சரியான கருத்தும் கூட.
காரணம் ஹெரானின் கண்டுபிடிப்புகள் எதுவுமே மக்களுக்கானது அல்ல மாறாக கடவுள் பெயரை சொல்லி மக்களை நிரந்தர முட்டாள் ஆக்கி வைத்திருக்க விரும்பிய மத குருமார்களுக்கானது.

கடவுள் சிலைகளுக்குள் அவன் செய்து வைத்திருந்த தகிடு தித்தம் ஒருவேளை மக்களுக்கு தெரிந்து இருந்தால் அவர்கள் அவனை கடவுளுக்கு காணிக்கை ஆக்கும் நெருப்பில் அவனை காணிக்கை ஆக்கி இருப்பார்களோ என்னவோ. ஆனால் எப்படியாகினும் தொழிற்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் ஹெரானின் அதிசய பொறியியல் கருவிகள் நம்மை ஆச்சர்ய பட வைக்க தவறுவது இல்லை.

( மேலும் தகவலுக்கு heron of alexandriya என்று தேடி பாருங்கள் )


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

நண்பர்களுக்கு வணக்கம்..
அவ்வபோது எழுதிட்ட பல நெடும் கட்டுரை தொடர்கள் தவிர்த்து அவ்வபோது எழுதிய பல சிறு கட்டுரைகளின் தொகுதியில் முதல் தொகுதி இப்போ நீங்கள் படித்தது.

நமது நோக்கம் "அனைவருக்கும் எளிய தமிழில் கடின அறிவியல் " அநோக்கம் நிறைவேறிட நல்ல கட்டுரைகளை அனைவருக்கும் பகிர்ந்திடுங்கள்.

⚛ அன்பு நண்பன்
அறிவியல் காதலன் ⚛ ரா. பிரபு

☯ (கட்டுரை குறித்த கருத்துக்களுக்கு
வாட்ஸ் அப் எண் 9841069466)

☯ எனது அறிவியல் கட்டுரைகளை fb பேஜ் இல் படித்திட தேடல் திடல் fb பேஜ் ஐ லைக் செய்யுங்கள்.


Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"