தங்கம் 2

 


"தங்கம் 2"

(அறிவியல் சிறுகதை )

 #ரா_பிரபு

தங்கம் சிறுகதை ஒரு பாகம் தான். ஆனால் நண்பர்கள் சிலர் சொன்னதற்கு இணங்க யோசித்து ஓரு பார்ட் 2 எழுதி இருக்கிறேன்.

பார்ட் 2..

"கியாபுக் கியா.  கிர்.. " என்றார் உருமாறிய பெஞ்சமின்.. தன் புதிய பன்றி மூஞ்சி அழகை கண்ணாடியில் ரசித்தார். ச்சை மனிதர்கள் முகம் தான் எவ்ளோ கேவலமா இருக்கு.. இந்த கூம்பு வடிவ முகம் தான் என்ன அழகு.  இதை ஏதோ ஒரு பூமியின் அருவெறுப்பான பிராணியுடன் ஒப்பிட்டு பேசுகிறாராகள் அந்த பிராணியை ஒரு முறை பார்க்க வேண்டும்.

கதவை தடவி தடவி திறந்த உதவியாளர் பீட்டர்" கியாரிக்.. கியப்பிக்கி... " என்றான்.

(நமக்கு ஜிர்கோனி தெரியாததால் இனி மொழி பெயர்க்க வேண்டியது கடமை )

"மரண வெற்றி பாஸ்.ம் "

"மனித உடல்ல பாக்க ரொம்ப அழகா இருக்க ஹி ஹி "

"பூமி வெற்றிகரமா கைப்பற்ற பட்டது .வாழ்க ஜிர்கோனி.."

" நான் யார் உடல்ல இருக்கேன் பாரு.  உலகத்துல இருக்கிற விஞ்ஞானிகள்ல இவர் தான் பெரிய உஸ்தாதாம்.. " 

"உலக முதன்மை விஞ்ஞானியையே பிடிச்சிடீங்க தலைவரே.. நீங்க கீர்த்தி மிக்கவர்..."

அந்த தலைவன் கொஞ்சம் முகம் மாறினான்.. 
"எதிரிகளை எப்போவும் குறைச்சி எடை போட கூடாது  உலக மக்கள் சொல்றாங்க என்பதால் இவன் பெரிய ஆள் ஆகிட மாட்டான்....
எதுக்கும் முழு ஆக்கிரமிப்பு முடியும் வரை உசாரா இருக்க சொல்லுங்க எல்லோரையும்.."

"ஏன் பாஸ்....."

 "உஸ்தாதுக்கும் பெரிய உஸ்தாத் எவனா எங்கனா இருப்பான்.. "

▪️▪️▪️

இந்திய விஞ்ஞானி ஈஸ்வர் தன் நாடி துடிப்பு ஏறுவதை கவனித்தார். அவர் அறையில் பிற இந்திய விஞ்ஞானிகள் திரையில் பார்த்த சம்பவங்கள் அவரின் இதய துடிப்பை பெட்ரோல் விலை போல சடாரென ஏற்றி இருந்தது.

ஈஸ்வர் ஒரு விசித்திர விஞ்ஞானி.. அறிவியலும் ஆன்மீகமும் ஒருங்கே நம்பிக்கை கொண்டவர்.. புதிய தொழில் நுட்பமும்.. பழைய பாரம்பரியமும் ஒன்றாக கலந்த பார்முலா அவர்.
ஈஸ்வர் இப்போ ஒரு விசித்திர  செயல் செய்தார்.. 
"எக்ஸ் கியூஸ் மீ " என்றவர் அடுத்த பக்கம் திரும்பி நாக்கை தொங்க போட்டு ஹா ஹா என மூச்சு வாங்கினார்.பின் திரும்பி சகஜமானார்..

"என்ன பாக்கரிங்க. உடம்புல ஜிர்கோனி புகுந்திடுச்சினா ..ஹா.. இது யோகாவில் உள்ள கோபத்தை பதட்டத்தை குறைக்க உதவும் முறை.. கோபமான காளி நாக்கை தொங்க போட்டு கொண்டிரும் படம் பார்த்து இருப்பீங்களே அந்த  கதையின் தாத்பரியம் இது தான்."
என்றார் சற்று நிமிர்ந்து 

"சரி சொல்லுங்க இப்போ என்ன நிலவரம்... " 

"சார் உலக அளவில் ஜீரகோனிகள்............ "

க்ரிக்...க்ரிக்.... அவர்கள் பேசும் முன் ஈஸ்வரின் போன்....

"சார் அவசரம்.. pm லைன் ல இருக்கார்....."

"ஓ.. உடனே இணைப்பை கொடுங்க.."

லைனில் வந்த இந்திய பிரதமர்...

"ரொம்ப அவசரம் ஈஸ்வர்.. அவர் உடனே உங்க கூட பேசணும் னு சொல்றார்...."

".. யார் சார்.. ??.."

"அமெரிக்க பிரதமர்..."

▪️▪️▪️

போன் காலுக்கு அரை மணி நேரம்  முன்பு... வெள்ளை மாளிகை....அமெரிக்கா ...

மாளிகையில் துப்பாக்கி சூடு புகை மூட்டம் நிரம்பி இருந்தது.. கூம்பு மூஞ்சி களை குறி வைத்து இன்னும் மனிதர்களாக இருந்தவர்கள் அதிரடி துப்பாக்கி சூடு வேட்டை நடத்தினார்கள்...
வாக்கி டாக்கி ஒன்று அலறி....

"முக்கிய தகவல்..முக்கிய தகவல்.. யாரும் போனை பயன் படுத்த  வேண்டாம்.. தூர தூக்கி எறிய உத்தரவு... அவர்கள் செல் மூலமாக உடலுக்குள் ஊடுருவதாக புதிய தகவல் வந்துள்ளது.. ஓவர்.... "

மாளிகையின் மிக பாதுகாப்பான அந்த ரகசிய அறையின் மகா திரைக்கு  முன் அந்த வழுக்கை தலைகள் அதிகம் கொண்ட கூட்டம் கூடி இருந்தது. 

"உலகம் பூரா முடிந்து விட்டதா.. " 
பிரதமர் குரலில் ஜெனரேட்டர் போல உதறல் ..

"இல்லை மிஸ்டர் பிரேஸிடெண்ட்.. ரொம்ப ஆச்சர்யமா .. உலகில் பல பகுதியில் ஊடுருவல் மிக குறைவு.  சில நாடுகள் சுத்தமா பாதிப்பு இல்லை.. அல்லது 5 சதம்.. மட்டும்.. ஆனால் நம்ம நாடு 80 சதம்.. "

"ஏன்.. ஏன் அப்படி... என்ன காரணம்..
அப்படி பாதிப்பு குறைவான ஏதாவது ஒரு நாட்டை சொல்லுங்க அங்கே உடனே நான் பேச வேண்டும்.."

"எஸ் சார்... இந்தியாவுக்கு கனெக்ட் பன்றோம்......"

▪️▪️▪️

இந்தியா .....

அந்த 3d ஒளி பரப்பில் அறை அரை இருளில் தெரிந்தார்கள் இந்திய.. அமெரிக்க பிரதமர்கள்.. கவலை மட்டும் இருவருக்கும் முகத்தில் பொது.

அ.பிரதமர் வாய் திறந்து உரையாடல் தொடங்கி வைத்தார்..

"இது எப்படி சாத்தியம் மிஸ்டர் ஈஸ்வர் உங்க நாட்டில் ஜிர்கோணி பாதிப்பு மிக குறைவாக இருக்கே.."

"மிக எளிய உண்மை மதிப்பிற்குரிய பிரேஸிடெண்ட்.. நமது உடல் அந்நிய ஊடுருவல் எதிரப்பு சக்தியை இயற்கையாக பெற்றுள்ளது.... "

"புரியல மிஸ்டர் ஈஸ்வர்.."

"ஒரு கிருமி உடலில் வந்தால் உடல் என்ன எதிர்வினை ஆற்றுமோ அதுவே தான் அந்நிய உலக ஜந்துகளுக்கும்..."

"கொஞ்சம் புரிஞ்சா மாதிரி இருக்கு ....ம்.. ஆனா ஏன் இந்தியாவில் பாதிப்பு குறைவு.. ஏன் அமெரிக்கா அதிகம்.."

"காரணம் நாங்கள் அதிகம் ஹைஜீனாக இருப்பது இல்லை மிஸ்டர் பிரேஸிடெண்ட் .."

"வாட்...." பிரதமர் குரலில் வியப்பு

" ஆம்.. ஒரு எளிய கேள்வி.. ஓரு குழந்தை A/C யிலேயே வளர்க்க படுகிறது மண்ணில் கால் படாமல் இன்னோரு குழந்தை மண்ணில் தூசியில் விளையாடி வளர்கிறது இவை இரண்டில் எது அதிக எதிர்ப்பு திறன் கொண்டிருக்கும்...? "

இந்திய பிரதமர் முந்தி கொண்டு..

"இரண்டாம் குழந்தை "என்றார் சின்ன சிரிப்புடன்.

"இன்னும் இருக்கு.. கேளுங்க ஒரு குழந்தை இந்திய பாரம்பரியத்தை கடை பிடித்து வளர்கிறது இன்னொன்று... மன்னிக்கவும்.. பிரேஸிடெண்ட்....உங்க நாடு கலாச்சார மோகத்தில் வளர்கிறது.. இவை இரண்டில்.........."

அமெரிக்க பிரதமர் இடை புகுந்து கை அமர்த்தினார்...

"....புரிந்து விட்டது மிஸ்டர் ஈஸ்வர்.."

"நன்றி சார்.. பல ஆண்டுகளுக்கு முன் கோரோனோ என்ற ஒரு வைரஸ் பரவியது நியாபகம் இருக்கலாம்.. அப்போ உலகமே இயற்கை வாழ்வு நோக்கி திரும்பியது . மனிதன் உடற் பயிற்சி செய்தான் . சரியான உணவு உண்டான். உணவில் மஞ்சள் சேர்த்தான்.. தினம் இஞ்சி எலுமிச்சை எடுத்து கொண்டான். வைட்டமின் C தேடி சென்றான். பீஸா பர்கர் தவிர்த்தான். 
ஆனால் அதெல்லாம் 5 ஆண்டுகளுக்கு தான் .மனிதன் மீண்டும் மறந்து போனான்.. ஆனால் இயற்கை அவனுக்கு நினைவு படுத்தி கொண்டே தான் உள்ளது.. 'பிட்னஸ் ஆப் சர்வைவல்' பிரேஸிடெண்ட்..  இயற்கை எச்சரிக்கை ஒலி கொடுத்து கொண்டே தான் இருக்கிறது...இப்போ பலமா. முன்பு எல்லாம் வைரஸ்..இப்போ ஏலியன் அனுப்புகிறது... "

"பிரதமர் தொங்கிய தலை உடன். இப்போ ஜிர்கோனி அட்டாக் நடந்த மனிதர்களை காப்பாற்ற வழி இல்லையா ஈஸ்வர்..."

" அதை பற்றி தான் பேசி கொண்டு இருந்தோம் நீங்கள் குறுக்கிடீர்கள்.."

"என்ன பன்னலாம் சொல்லுங்கள்.. " அவர் கண்ணில் ஆர்வம்..

"தனிமை படுத்துங்க..."

"வாட்.."

'' ஆம்..வைரஸ்க்கு செய்ததை போல தான்..பாதிக்க பட்ட அனைவரையும் ராணுவம் கொண்டு கைது பண்ணுங்கள் . பிற நாட்டு ராணுவ உதவி பெறுங்கள்..உங்க பாதுகாப்பில் வைத்து  அவர்களுக்கு உடல் எதிர்ப்பு கூட்டுங்கள்... அப்புறம்....."

"சொல்லுங்க ஈஸ்வர்.."

"உலகின் மிக சக்தி வாய்ந்த பதவியில் இருப்பவர் தங்கள் என்பதால் உங்களிடம் இந்த வேண்டுகோள்.. உலக மக்கள் இயற்கை வாழ்வு நோக்கி திரும்ப சட்டமும் சலுகையும் கொண்டு வாருங்கள்.. மனிதனை அழித்து வளரும் வியாபரங்களை தடை செய்யுங்கள்.. இயற்கையின் அடுத்த அரைகூவலுக்கு  மனிதன் முழுமையாக தயாராக இருக்கும் படி செய்யுங்கள்.. உங்களால் முடியும்.."

பிரதமர் கை கூப்பினார்...

"கண்டிப்பா பண்றேன்..."

தன் பிள்ளைகளின் மாற்றம் கண்டு பூமி தாய் ஆனந்தம் கொண்டாள்.

முற்றும்...

 🌏ரா.பிரபு ✍️





Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"