"இன்று ஒரு தேடல்"

 



"இன்று ஒரு தேடல்" 


அறிவியல் காதலன் 

🌏ரா.பிரபு ✍️


⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳


வணக்கம் நண்பர்களே !


ஒரு அணுவை எடுத்து கொண்டு உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ஆராய்ந்து இது வரை சொன்ன உண்மைகள்... அந்த அணுவின் அனு அளவு தான் இருக்கும். அந்தளவு தேட தேட தகவலை புதைத்து வைத்து இருக்கும் ஒரு களஞ்சியம் தான் இந்த பிரபஞ்சம். 

எனவே உலகில் அரிய தகவல் என தேட தொடங்கினால் வாழ்நாள் பூரா தேடி கொண்டே இருக்கலாம்.

இந்த கட்டுரையில் அப்படி ஒரு 70 தகவல்களை பற்றி சொல்லி இருக்கிறேன் படித்து பயன்பெருங்கள்.பல தகவல்கள் உங்களுக்கு முன்பே தெரிந்ததாக இருக்கலாம் ஆனால் நிச்சயம் அனைத்து தகவலும் தெரிந்து இருக்க நியாயம் இல்லை.

(கட்டுரை 50 அத்தியாயம் என்றாலும் 70 தகவல்கள் கொண்டது. எப்படி என்பது இறுதி அத்தியாயத்தில் புரியும் படித்து பாருங்கள் )


வாருங்கள் தகவல் களஞ்சியத்தில் ஒரு துளி சுவைக்கலாம்....



⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛.


1.🔘 இரவில் விமானம் பறக்கும் போது கவனித்து இருக்கீங்களா சிகப்பு  பச்சை  மற்றும் வெள்ளை நிற ஒளி விளக்குகள் மின்னி கொண்டு போகும் எதற்கு அந்த பல வண்ண விளக்குகள் தெரியுமா ?


கவனித்து பார்த்தால் எப்போதும் விமானத்தில் வலது பக்க ரக்கையில் பச்சை நிறமும் இடது பக்க ரக்கையில் சிகப்பு நிறமும் பின்னாடி செங்குத்தாக தூக்கி கொண்டு நிற்கும் பின் பக்க ரக்கையில் வெள்ளை நிற ஒளிவிளக்கும் ஒளிர்ந்து கொண்டு இருக்கும். (இவைகள் position lights அல்லது navigation lights என்று அழைக்க படுகின்றன )

விமான கட்டுப்பாட்டில் என்ன தான் கருவிகள் பங்களிப்பு 90 சதம் இருந்தாலும் வெறும் கண் பார்வை கொண்டு செயலாற்றுவதும் விமான ஓட்டியின் பயிற்சியில் உள்ள ஒன்று தான்.


வானத்தில் வேறு விமானத்தை காண நேரும் ஒரு விமானி ஒருவருக்கு இது முதலில் இந்த பச்சை சிகப்பு வெள்ளை கலவையை காணும் போது இது கேஸ் பலூனோ.. அல்லது வேறு ஏதோ பறக்கும் சாதனமோ அல்ல இது ஒரு விமானம் தான் என்பதை உறுதி படுத்தி கொள்ள உதவுகிறது.

அடுத்ததாக அந்த விமானம் எந்த திசையில் இருந்து எந்த திசை நோக்கி செல்கிறது என்பதை உறுதி படுத்தி கொள்ள உதவுகிறது


உதாரணமாக ஒரு ஹெலிகாப்டர் ஓட்டி தனக்கு முன்னால் குறுக்காக ஒரு விமானம் கடந்து செல்வதை காண்கிறார் என்று வைத்து கொள்வோம். 

அவர் காண்பது சிகப்பு மற்றும் வெள்ளை விளக்குகள் என்றால் விமானம் தனக்கு வலது பக்கத்தில் இருந்து இடது நோக்கி போய் கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்வார். மாறாக பச்சை வெள்ளை கண்டால் விமானம் வலது பக்கம் நோக்கி போய் கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்வார்.

இவைகள் முதலில் இது பயன் படுத்த பட்டதே கப்பல்களிலும் படகுகளிலும்  தான் பிறகு தான் விமானத்துக்கு இதே முறையை பயன் படுத்தி கொண்டார்கள்


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


2."நீலம் ஒரு அபூர்வம் "


🔘 விலங்குகள் பல வண்ணங்களில் நாம் கண்டு இருப்போம். வெள்ளை நாய் கருப்பு பூனை சிகப்பு கோழி மஞ்சள் குருவி என்று. ஆனால் விலங்குகளில் மற்றும் பறவைகளில் நீல நிறம் கிடையாது என்பதை அறிவீர்களா ?

இல்லையே நான் நீல நிறத்தில் பறவை பட்டாம் பூச்சி மீன் எல்லாம் பார்த்து இருக்கேனே என்று நீங்கள் சொல்லலாம். இங்கே தான் ஒரு இயற்கை அதிசயம் உள்ளது. நீங்கள் காணும் சிகப்பு நிற பறவை மற்றும் விலங்கு சிகப்பு நிறமானது தான் ஆனால் நீல நிற பறவை அல்லது விலங்கு உண்மையில் நீல நிறமானது அல்ல.

குழப்பமாக இருக்கிறதா ? 

உண்மை என்ன வென்றால் விலங்குகள் தங்கள் உடல் நிறத்துக்கு காரணமான பிக்மெண்ட் மற்றும் ராசயணங்களை தங்கள் உடலில் கொண்டு இருக்கின்றன அது தான் அவைகளின் குறிப்பிட்ட உடல் நிறத்துக்கு காரணம் ( ஒரு வகை வெள்ளை கொக்குகள் தொடர்ந்து சிகப்பு மீன்களை உண்டு வருவதால் சிகப்பு நிற பிக்மெண்ட் பெற்று சிகப்பு கொக்காக மாறுவது கூட உண்டு ) 


ஆனால் நீல நிறத்தில் நீங்கள் காணும் உயிரினங்கள் மட்டும் நீல நிற பிக்மெண்ட் பெற்றவை அல்ல மாறாக அவைகள் நீல நிறத்தை மட்டும் எதிரொளிக்கும் படியான கட்டமைப்பை கொண்டவை.உதாரணமாக ஒரு நீல நிற பட்டாம் பூச்சியின் இறக்கை சக்திவாய்ந்த உறுபெருக்கு கொண்டு பார்த்தால் அவைகள் நிறமாலையின் நீலத்தை மட்டும் எதிரொளிக்கும் படியான நுணுக்கமான சிறப்பு அமைப்பை தங்கள் சிறகுகளில் பெற்று இருப்பதை காண முடியும். நீல நிறத்தில் நீங்கள் காணும் மீன்களும் இப்படி தான் பறவைகளும் இப்படி தான்.வானத்தில் நாம் காணும் நீலம் ஒரு மாயை அது ஒளி சிதறல் விளைவு என்பதை நாம் அறிவோம் ஆனால் அதே நீல மாயை தான் விலங்குகளிலும் உள்ளது என்பது தான் ஆச்சர்யம்.


இந்த நீல அபூர்வம் விலங்கில் மட்டும் அல்ல மற்ற பல விஷயத்திலும் நீங்கள் காணலாம். நீல நிற உணவு பொருட்களை நீங்கள் காண்பது அரிது. நீல நிற பழங்கள் நீங்கள் மிக அரிதாக தான் பார்க்க முடியும் நீல நிற பூக்கள் வெறும் 1 சதம் மட்டுமே உள்ளன. அவ்வளவு ஏன் மனிதர்களில் உள்ள நீல நிற கண்கள் கூட சிறப்பு கட்டமைப்பால் தான் நீல நிறத்தில் உள்ளன நிற பிக்மன்ட்களால் அல்ல.


சரி இயற்கையில் சுத்தமாகவே நீல நிற உயிரினம் இல்லையா. ? 

இருக்கிறது ஒரு வகை பட்டாம் பூச்சியில் சிறகில் ஒரு பகுதி உண்மையான நீலத்தை கொண்டுள்ளது. ஒரு வகை அடர் நீல நிறம் கொண்ட விஷ தவளை உண்மையான நீல தன்மை கொண்டுள்ளது. ஆனால் இவைகள் எல்லாமே உலகத்தில் உள்ள விலங்குகளில் ஒரே ஒரு சதம் மட்டுமே.


எனவே நீல நிறத்தில் ஏதாவது உயிரினம்  நீங்கள் கண்டால் அது மிகவும் தனி தன்மையானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



சின்ன போனஸ் க்விஸ் : எந்த உயிரினத்தின் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும் ??

விடை : "ஆக்டொபஸ். " காரணம் அது ரத்தத்தில் உள்ள Harmocyanin என்ற புரோட்டீன்.

(சரி எந்த உயிரினத்தின் வியர்வை பிங்க் நிறத்தில் இருக்கும் ?? விடை நீங்களே தேடி பெறுங்கள்...) 


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


3.🔘சிறுவர்கள் விளையாடும் ரூபி கியூப் பார்த்து இருப்பீங்க. அதில் கடையில் வாங்கும் போது அனைத்து பக்கமும் சீரான நிறங்கள் சரியாக அடுக்க பட்டு இருக்கும் ஆனால் வாங்கி விளையாட தொடங்கிய பின் நாம் நிறங்களின் வரிசை பல கலவைகளில் கலந்து குழப்பி விட முடியும் . சரி இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா ?

ஒரு 3x3x3 ரூபி கியூபை எத்தனை வகையில் மாற்றி மாற்றி வைக்க முடியும் தெரியுமா ? மூச்சை இழுத்து பிடித்து கொள்ளுங்கள்  மொத்தம் 43 252 003 274 489 856 000 காம்பினேஷன்கள். 

இதற்கான formula வேண்டும் என்கிறவர்களுக்கு...(1/2) * (8! x 3⁷) * (12! x 2¹¹) கணக்கில் ஆர்வம் உள்ளவர்கள் கணக்கிட்டு பார்த்து கொள்ளுங்கள்.

(இதுவே 4 x 4 என்றால் எத்தனை காம்பினேஷன் தெரியுமா ? 7401196841564901869874093974498574336000000000.)


சரி இப்போ சொல்ல போறது தான் செம மேட்டர் ...

மேலே சொன்ன அந்த மகா நம்பர்.... 43 quintillion 252 quadrillion 3 trillion 274 billion 489 million 856 thousand இத்தனை வகையில் மாற்றி அமைத்து வைத்தாலும்.. அந்த மாறிய ரூபி கியூபை மீண்டும் சரியாக ஒரே சீராக மாற்ற வெறும் 20 அல்லது அதற்கும் குறைவான நகர்வுகளே போதும்.


ஆக இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால்..... 

வாழ்க்கைல ..சிக்கல்..குழப்பம்... எவ்ளோ பெரிதாக இருந்தாலும் smart move பண்ணி அதை சுருக்கமா சால்வ் பண்ணலாம்...

(அட தகவலுடன் சேர்த்து தத்துவமும் சொல்லியாச்சு ) 


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


🔘 4. "நழுவும் ஆக்சிஜன் "


நமது வளிமண்டலத்தில் 21 சதம் ஆக்சிஜன் உள்ளது நமக்கு தெரியும். காற்றில் ஏன் ஹைட்ரஜன் இல்லை ? காரணம் அது லேசான வாயு எனவே எப்போவோ விண்வெளிக்கு தப்பி நழுவி விட்டது என்று நமக்கு தெரியும். நல்ல வேலை ஆக்சிஜன் லேசான வாயு இல்லை அதனால் தப்பித்தோம் என்று நினைப்பவர்கள் மட்டும் தொடர்ந்து படியுங்கள்..


நியூ ஜெர்சி யூனிவர்சிட்டி சார்ந்த வல்லுநர் ஒருவர் ஒரு முறை "பூமியில் கடந்த 10 லட்சம் ஆண்டுகளாக ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதா அல்லது அப்படியே உள்ளதா என்பதை நாம் அறிய வழி இல்லை "என்றார் . அதாவது பெட்ரோலியம் பொருட்களை மனிதர்கள் எரிக்க தொடங்கிய பின் தொடங்கும் முன் பூமியின் ஆக்சிஜன் நிலை மாறுதல் பற்றி சரியான தரவுகள் நம்மிடத்தில் இல்லை என்றார். ஆனால் புதிய ஆய்வாளர்கள் சிலர் கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் பண்டைய காலத்து பனிக்கட்டிகளுக்கு நடுவே சிக்கி உள்ள காற்றை ஆராய்வதன் மூலம் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு கடந்து 8 லட்சம் ஆண்டுகளில்  0.7 சத அளவு குறைந்துள்ளதாக சொன்னார்கள். அதன்பின் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விஷயம்தான் 'ஆக்ஸிஜன் தொடர்ந்து நமது வளிமண்டலத்தில் நழுவிக் கொண்டே இருக்கிறது 'என்பது.  

பூமியின் துருவ பகுதியில் தான் இந்த நழுவல் நடகிறது.

ஆக்சிஜனை பூமி விலங்குகள் தொடர்ந்து மறுசுழற்சி செய்து கொண்டு வருகிறது. பூமியில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு பூமியின் பரிணாம மாற்றத்துக்கு தகுந்தார்போல் அவ்வப்போது மாறிக் கொண்டு வரும் ஒன்றுதான். ஆனால் இம்முறை நடந்து கொண்டிருக்கும் ஆக்சிஜன் நழுவல் எதனால் நடக்கிறது என்பதை விஞ்ஞானிகள் சரியாக இன்றுவரை விளக்க முடியவில்லை என்பது தான் சுவாரஸ்யம். சில கோட்பாடுகள் உண்டு என்றாலும் உறுதியாக எதுவும் சொல்லப்படவில்லை. 


சரி அப்போ சீக்கிரம் ஆக்சிஜன் காலி ஆகி விடுமா என்று அச்ச பட வேண்டாம். கடல் அளவு பெரிய பாத்திரம் ஒன்றில் நீங்கள் நீர் சேர்த்து வைத்து இருப்பதாகவும் அந்த மகா பிரமாண்ட பாத்திரத்தில் ஒரு நிமிடத்திற்கு ஒரு சொட்டு என்கிற விகிதத்தில் நீர் போகம் அளவு ஒரு சின்ன ஓட்டை இருப்பதாகவும் கற்பனை செய்துகொள்ளுங்கள் அந்த அளவு தான் இந்த ஆக்சிஜன் நழுவல் நடக்கிறது.. அதாவது காற்றில் ஆக்சிஜன் அளவு 21 சதம் என்பது 20 சதம் ஆக மாற குறைந்த பட்சம் 10 லட்சம் ஆண்டுகள் ஆகும் என்பதால் இப்போதைக்கு கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


🔘 5."இரட்டையர்கள் பற்றிய ஒற்றை உண்மை "


ராமு சோமு இருவரும் ஒத்த இரட்டையர்கள்..(identicale twins ).. அவர்கள் இருவரும்.. தங்களை போலவே உள்ள வாணி ராணி என்கிற ஒரு identical twince  சகோதரிகளை சந்தித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று வைத்து கொள்ளுங்கள்.

அந்த இரண்டு ஜோடிக்கும் ஆளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது இப்போ இரண்டு குழந்தைகளுக்கு இடையில் உள்ள உறவு என்ன ? விடை எளிமையானது அண்ணன் தம்பி அதாவது கசின்.

ஆனால் உடலியல் ரீதியாக ஜெனடிக் அறிவியல் படி அவர்கள் கசின் சகோதர்கள் அல்ல மாறாக உடன் பிறந்த சகோதர்கள் தான்( siblings) .

நமது பெரியப்பா பையனாகிய ஒரு அண்ணனுக்கும் நமக்கும் உள்ள ஜெனடிக் ஒற்றுமை போல் அல்லாமல் நமது உடன்பிறந்த சகோதரன் ஒருவனுக்கும் நமக்கும் என்ன விதமான  ஜெனட்டிக் ஒற்றுமை இருக்குமோ அப்படி ஒரு ஒற்றுமைதான் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் இடையில் இருக்கும்.

ஆச்ரயம் தான் இல்ல....


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


"பூமிக்கொரு அருணாக்கயிறு "


🔘 6. ஒரு சின்ன கேள்வி...

ஒரு கற்பனைக்கு பூமியின் ஈகுவேடார் கோட்டை சுற்றி ஒரு கயிறு வைத்து இறுக்கமாக கட்டி விடுவதாக கற்பனை செய்வோம். அதாவது பூமிக்கே இடுப்பில் அருனாகயிரு கட்டி விடற மாதிரி..(பூமி ஒரு சரியான உருண்டை அல்ல ஒரு பேச்சுக்கு சரியான உருண்டை போல கற்பனை பண்ணி கொள்ளுங்கள் )

இப்போ பூமி ,"அய்யோ ரொம்ப இறுக்கமா கட்டி இருக்க கொஞ்சம் தளர்த்தி விடு பா " என்று சொல்கிறது என்று வைத்து கொள்ளுங்கள்.

இப்போ அந்த கயிறு பூமியின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் தரையில் இருந்து 1 அடி இடைவெளி இருக்கும் படி தளர்வாக கட்டப்பட வேண்டும் என்று சொன்னால் எத்தனை நீளம் கயிறு தேவை படும் ? இதான் கேள்வி .

'எவ்வளவு என்று எல்லாம் தெரியாது ஆனால் நிச்சயம் ரொம்ப பெரிய அளவு கயிறு இணைக்க பட வேண்டும் ' என்று நினைப்பீர்கள் அல்லவா.. ஆனால் விடை மிகவும் ஆச்சர்யமானது. நீங்கள் இணைக்க பட வேண்டிய கயிரின் நீளம் கிட்ட தட்ட 6.28 அடிகள் மட்டுமே ( 2π feet ) . ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்ன என்றால் ஒரு சிறிய பாஸ்கெட் பால் ஒன்ரை சுற்றி கயிறு கட்டி விட்டு பின் அதை மேலே சொன்னது போல அனைத்து பக்கத்தில் இருந்தும் ஒரு அடி இடைவெளி இருக்கும் படி  கயிறு நீங்கள் இணைக்க முற்பட்டால் அதற்கு தேவை படுவதும் இதே 6.28 அடி கயிறு தான்.  நீங்கள் எவ்வளவு பெரிய பந்தை எடுத்து கொண்டு இதை செய்தாலும் விடை அதே 6.28 அடிகள் தான்.


இதில் இன்னொரு சுவாரஸ்யம் சொல்கிறேன் மேலே சொன்ன படி இணைக்க பட்ட 6 அடி கயிறு இப்போது பூமியின் அனைத்து பக்கத்திலும் கணக்கிடாமல் ஏதாவது ஒரு இடத்தில் மட்டும் கயிறை பிடித்து மேலே தூக்குவதாக வைத்து கொண்டால் அது எவ்வளவு உயரத்திற்கு தூக்க முடியும் தெரியுமா ? கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை ஒன்றின் மேல் ஒன்றாக குறைந்தது 4 ...5.. சிலை வைக்கும் அளவுக்கு. (614.771 அடிகள் தூக்கலாம். ) 


இது எப்படி என்பதை கொஞ்சம் கணித ரீதியாக பார்த்தால்....

நமக்கு தெரியும் ஒரு வட்டத்தின் ஆரத்தை அல்லது விட்டதை வைத்து அதன் சுற்றளவு காண முடியும் என்று. அதற்கான சூத்திரம். 2x radius x π அதாவது வட்டத்தின் விட்டதை பை யின் மதிப்பாகிய 3.14 உடன் பெருக்கினால் நமக்கு கிடைப்பது வட்டத்தின் சுற்றளவு.

இப்போ பாருங்கள் பூமியின் ஆரம் ஈகுவேடர் இல்  6378 கிலோ மீட்டர். இதை அடியில் மாற்றினால் 20925196.9  அடிகள். இதை மேலே சொன்ன சூத்திரம் படி இரண்டால் பெருக்கி பை யால் பெருக்கினால்  சுற்றளவு 131410236.5 அடிகள் வருகிறது. இதில் ஆரத்தில் ஒரு அடியை கூட்டி கொண்டு மேற்கொண்ட கணக்கை போட்டால் இப்போ சுற்றளவு 131410242.811வருகிறது .அதாவது வித்யாசம் 6.2 அடிகள் மட்டுமே. ஆச்சர்யமா இருக்கு இல்ல..


ஆக இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் வாழ்க்கையில் ரொம்ப பூதாகரமாக தெரியும் பல பிரச்சனைகள் உண்மையில் ஆராய்ந்து கணக்கிட்டு பார்த்தால் பெரும்பாலும் மிகவும் சின்ன அளவானதாகவே இருக்கும்.. (அடடே மீண்டும் ஒரு தத்துவம்... ) 


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

7. எரிமலை மின்னல்


🔘 கருமேகம் சூழ்ந்த இரவில் பளிச்சென்ற மின்னல்கள் நாம் பார்த்து இருப்போம். அதாவது charge separation என்ற நிகழ்வு இது. அதாவது மேகத்தின் ice cristel கள் மோதி கொள்ளும் போது மேகத்தில் உள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் சார்ஜ்கள் மேகத்தில் மேல் மற்றும் கீழ் பகுதியில் தனி தனியாக பிரிந்து நிற்கும். நேரம் கிடைக்கும் போது எல்லாம் நெகட்டிவ் போய் பாசிட்டிவில் இணைந்து மோதும் இது தான் இடி மற்றும் மின்னல் .(சில நேரம் மேகத்தின் நெகட்டிவ் சார்ஜ் பூமியின் பாசிட்டிவ் நோக்கி விழும் ) இது நாம் சாதாரணமாக பார்க்கும் நிகழ்வுதான்.

ஆனால் எரிமலையில் உண்டாகும் மின்னல் பற்றி தெரியுமா ?


எரிமலைகள் குமுறி வெடிக்கும் போது  பெரிய மேகக் கூட்டத்தை உண்டு பண்ணுவதை பார்த்திருப்போம். அதில்  பாறை..லாவா ..தூசு மற்றும் சாம்பல் கலந்த துகள்கள் வீச படும் அந்த மேகக் கூட்டத்தில் உள்ள துகள்களுக்கு இடையில் உண்டாகும்

உரசல் வானத்தின் மேகம் போன்றே charge separation நிகழ்வுகளை உண்டு பண்ணும். அங்கேயும் மின்னல் உண்டாகி டால் அடிக்கும். இவைகள் எரிமலையில் எப்போதும் உண்டாவது இல்லை இவைகள் ஒரு அபூர்வ நிகழ்வு. ஒரு எரிமலை முதல் முதலாக வெடிக்க தொடங்கிய ஆரம்ப நேரத்தில் இவைகள் உண்டாகும். பூமிக்கு நெருக்கமான இடத்திலும் பின் எரிமலை மேகத்தின் உச்ச பகுதியிலும் இவைகள் உண்டாகின்றன.

வானத்தின் லைட்னிங் மட்டுமே பார்த்தவர்கள் 'Volcanic lightning ' என்று தேடிப்பாருங்கள் எரிமலை மின்னலின் நிறைய அழகிய புகைப்படங்கள் கிடைக்கும்.


போனஸ் தகவல் : பூமியின் பரப்பில் 80 சத பரப்பு ஆதிகால எரிமலை நிகழ்வால் உண்டாக்க பட்டது தான்.

இன்னோரு ஆச்சர்யமான தகவல் நமக்கு வளிமண்டலத்தை கொடுத்ததும் கடலை கொடுத்ததும் கூட எரிமலைகள் தான்.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


8 "கொல்லும் ஆக்சிஜன் "


🔘 சும்மா கற்பனைக்கு இந்த திகில் கதை சொல்வார்கள். ..

"ஒரு வேளை இப்படி இருக்குமோ....

எப்படி ? நாமெல்லாம் சாகா வரம் பெற்றவர்கள். ஆனால் அனைவரும் ஆக்சிஜன் எனும் 'ஸ்லோ பாயிசன் ' எடுத்து கொள்வதால் மெல்ல செத்து விடுகிறோம்.

இது சும்மா 'பேன்டஸி' கு சொல்ல படுவது தான் என்றாலும் அந்த கதையில் ஒரு நிஜம் ஒளிந்து இருக்கிறது.

ஆம் ஆக்சிஜன் நம்மை உண்மையில் மெல்ல கொல்கிறது.


நமக்கு தெரியும் நம்மால் ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியாது. நமது உடம்பின் ஒவ்வொரு செல்லும் சக்தியை தயாரிக்க ஆக்சிஜனை தான் நம்பி இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஆக்சிஜனில் 97 சத ஆக்சிஜன் இந்த சக்தி உருவாக்கம் செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. மீதி இருக்கும் 3 சத ஆக்சிஜன் தான் அந்த வில்லன் வேலை பண்ணுவது. அதுக்கு என்ன தான் பிரச்சனை அது என்னதான் செய்கிறது என்று பார்க்கலாம்.


ஆக்சிஜன் அணுவிற்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது.. அதன் அனுவின் வெளி சுற்றில் 8 எலக்ட்ரான் இருந்தால் தான் அதனால் நிலையாக நிம்மதியாக இருக்க முடியும். ஆனால் ஆக்சிஜனின் அனு அமைப்பு படி அதன் வெளி சுற்றில் மொத்தம் 6 எலக்ட்ரான்கள் தான் இருக்கும். எனவே எங்க, எவன் கிட்ட 2 எலக்ட்ரானை பெறலாம் என அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அதற்காக அது யாரிடமும் கூட்டணி வைக்க தயார். 

ஒரு ஆக்சிஜன் அனு இரண்டு ஹைட்ரஜன் அணுவுடன் இணைந்து ஹைட்ரஜன் அனுவின் ஒவொரு எலக்ட்ரானை பெற்றுக்கொண்டால் அதுதான் h2o அதாவது நீர். 

ஒரு இரும்பு துரு பிடிக்கும் செயலிலும் ஆக்சிஜனின் இந்த எலக்ட்ரான் தேடல் தான் காரணமாக இருக்கிறது. இரும்பு அனு எலக்ட்ரானை தர தயாராக இருக்க.... ஆக்சிஜன் அனு  எலக்ட்ரானை பெற தயாராக இருக்க ....இவைகளை இணைக்கும் பாலமாக எலக்ட்ரோலைட் ஒன்று (உதாரணம் நீர் ) கிடைத்து விட்டால் போதும்.. ஆக்சிஜனின் எலக்ட்ரான் வேட்டை எனும் வேதி வினையில்  நடக்கும் செயலுக்கு பெயர் தான் துரு பிடித்தல். இப்படி ஆக்சிஜனுடன் வேதியியல் ரீதியாக இணையும் செயலை தான் oxidize என்கிறோம்.


ஒரு ஆப்பிளை வெட்டி காற்றில் வைத்து விட்டால் அது சிகப்பு நிறமாக மாறுவதற்கும் இதே oxidize தான் காரணம். அதாவது வெட்ட பட்ட ஆப்பிளின் திசுக்களில்  ஆக்சிஜனின் கூட்டணி பண்ணும் வேலை.

சரி இப்போ நாம் சுவாசிக்கும் காற்றுக்கு வருவோம். 


நமது உடல் செல்களில் பயன் படுத்த படும் 97 சத ஆக்சிஜனை தவிர்த்து மீதி இருக்கும் அந்த மூன்று சத ஆக்சிஜன் 

தனது வெளி புற அடுக்கில் ஜோடி சேராத எலக்ட்ரான்களை கொண்டிருக்கும். இவைகளுக்கு பெயர் "free radical ''  இவைகள் தனக்கான எலக்ட்ரான் ஜோடியை பெற கிடைத்த இடத்தில் எல்லாம் எலக்ட்ரானை பிடுங்க பார்க்கும்.  நமது உடலில் நமக்கு முக்கியமான தேவையான புரதம் ..செல் மெம்பரின். கொழுப்பு..இவற்றில் உள்ள எலக்ட்ரானை இவைகள் தொடர்ந்து கொள்ளை அடிக்க முயற்சித்து கொண்டே இருக்கும். அப்படி இவைகளின் ஆசைக்கு இணங்கி இவற்றுடன் இணைந்து விடும் செல்களில் மூலக்கூறு வடிவமைப்பை இவைகள் மாற்றி விட்டு விடும் .இது கிட்ட தட்ட புற்று நோய் போல தான். ஆனால் இவற்றை எதிர்க்கும் சக்தி நமது உடலுக்கு இயற்கையாகவே இருப்பதால் தொடர்ந்து இது போன்ற செல்களை நமது உடலே அடையாளம் கண்டு அழித்து விடும். ஆனாலும் மேலே சொன்ன free radical களின் தொடர் போராட்டத்தின் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு உடலில் தோலில் சுருக்கம் விழுந்து வயது ஆவது என்ற நிகழ்வு நடந்து இறுதியில் மரணம் நிகழ்கிறது.


மேலே சொன்ன free radical களை நீங்கள் கட்டு படுத்த விரும்பினால் அதாவது வயதாகும் செயலை நீங்கள் தாமத படுத்த விரும்பினால் நீங்கள் anti oxident எடுத்து கொள்ள வேண்டும். இவைகள் தங்களிடம் உள்ள எலக்ட்ரான்களை வில்லன் ஆக்சிஜனுக்கு கொடுத்து அதன் பசியை ஆற்றி நம்மை காப்பாற்றுகின்றன .  Anti oxident கொண்ட பொருட்கள் என்னென்ன என்று தேடி (உதாரணமாக நெல்லிக்காய்.. பீன்ஸ்.. ஏன்.. பிளாக் சாக்லேட் கூட .. ) அவைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் வயதாவது எனும் செயலை தாமத படுத்த முடியும்.


ஒரு ஆணியை துரு பிடிக்க வைக்கும் ஆக்சிஜனின் அதே குணம் தான் நாம் வயதாவதற்கும் காரணமாக இருக்கிறது என்பது ஆச்சர்யம்  தானே....





- ஆமாம்... நீங்க அழுவும் போதும் சிரிக்கும் போதும் ஒரே மாதிரி செயல் ஒன்று உங்கள் உடலில் நடக்கிறதாமே... அது என்னனு தெரியுமா.. ?

சரி வாங்க அடுத்த தகவலில் பார்க்கலாம்.-


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


9. "அழுகைக்கும் என்டோர்பின் சிரிப்புக்கும் என்டோர்பின் "


🔘 வலி மிகுந்த தருணங்கள் அல்லது அதீத உணர்ச்சி வச படும் எந்த தருணமும் நமக்கு அழுகையை கண்ணீரை கொண்டு வரும் என நமக்கு தெரியும் ஆனால் அந்த கண்ணீர் கூடவே இயற்கை வலி நிவாரணி ஹார்மோன்களை கொண்டு வரும் என தெரியுமா ? 

கண்ணில் சுரக்கும் நீர் 3 வகையில் பிரிக்கிறார்கள்.

1.reflex tears

2.continuous tears

3.emotional tears

இதில் reflex  tear என்பது நமது கண்களில் தூசி அல்லது புகை பட்டால் கண்கள் அப்போது சுரக்கும் நீர்.

2.continuos tears என்பது எப்போதும் கண்களுக்கு ஈர பதம் வழங்க சுரந்து கொண்டே இருக்கும் பிசு பிசு நீர் இது கண்களை ஈரமாக வைத்து இருப்பதனுடன் நோய் தொற்றில் இருந்தும் காக்கிறது.

3.மூன்றாவதாய் இருப்பது தான் emotional tears நாம் சோகத்தில் இருக்கும் போது அதிக உணர்ச்சி வச படும் போது சுரப்பது. 

அழுவும் போது  oxytocin மற்றும் endogenous opioids,கள் சுரக்கின்றன( இதற்கு இன்னோரு பெயர் தான் endorphins.  இவைகள் உடலின் பிட்யூட்டரி சுரப்பி மற்றும் மைய நரம்பு மண்டலத்தின் மூலம் சுரக்கின்றன )


மருத்துவர்கள் ஆப்ரேஷனுக்கு பின் வலி தெரியாமல் இருக்க opioids எனும் ட்ரக் கொடுப்பார்கள் அது செய்யும் அதே வேலையை தான் இந்த endorphins கள் செய்கின்றன . இவைகள் நமக்கு உடல் மற்றும் மன ரீதியான வலியை போக்கி மகிழ்ச்சியை கொடுக்கிறன. 

(இந்த மகிழ்ச்சி ஹார்மோன் endorphins கள் அழுவும் போது மட்டும் இல்லை..சாப்பிடும் போது உடற்பயிற்சி செய்யும் போதும் .   உறவு கொள்ளும் போதும் கூட சுரக்கின்றன. )

இந்த endorphines களை சுரக்க வைக்க சில பயிற்சி டிப்ஸ் இப்போது பார்க்கலாம்.

1. தொடர்ச்சியாக 30 நிமிட உடற் பயிற்சி அதுவும் இதய துடிப்பை ஏற்றி மூச்சை அதிக படுத்தும் பயிற்சிக்கு பின் இவைகள் சுரக்கும்.

2.அக்குபஞ்சர் மூலம் இதை சுரக்க வைக்க முடியும்.

3. 2011 ஆய்வு ஒன்று படி 5 நிமிட தியான பயிற்சி மூலம் இது சுரப்பதாக கண்டுள்ளனர்.

4.2012 ஆய்வு ஒன்று( lavender aromatherapy ) படி சிறப்பான வாசனை திரவியம் மூலம் இவைகளை சுரக்க வைக்க முடியும் என கண்டுள்ளனர்.

இன்னும் நிறைய வழிமுறைகள் உண்டு... டார்க் சாக்லேட் உண்ணும்  போதும்.. சூரிய ஒளியில் நிற்கும் போதும் ,சுடு தண்ணீரில் குளிக்கும் போதும் ,காரமாக சாப்பிடும் போதும் ,குறிப்பா வாய் விட்டு சிரிக்கும் போதும் இவைகள் சுரக்கின்றன. குழந்தை பிறக்கும் போது வலியில் தாய்க்கு உதவ கூட இவைகள் சுரக்கின்றன.

(இவைகள் மன அழுத்தத்தை போக்கும் திறன் கொண்டவை என்பதால் ஸ்ட்ரெஸ் அதிகம் உள்ளவர்கள் மேல் உள்ள எதையாவது ஒன்றை அல்லது பலதை கடைபிடித்து ஸ்ட்ரெஸ் இல் இருந்து விடு படலாம் )


மனுசன் அழுவும் போதும் சரி சிரிக்கும் போதும் சரி ஒரே விதமான சுரப்பிகள் அவனை மகிழ்விக்கிறது அதே போல இனிப்பான டார்க் சாக்லேட் சாப்பிடும் போதும் காரமான உணவு சாப்பிடும் போதும் ஒரே சுரப்பி அவனை மகிழ்விக்கிறது ....

ஆச்சர்யம் தான் இல்ல !


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

10. "கார் Air bag க்கு காற்று எங்கிருந்து வருகிறது ? "


🔘 காரில் விபத்து நேரத்தில் air bag திறந்து புஸ்ஸ்ஸ் என ஊதி  மனிதர்களை  காப்பாற்றுவதை பார்க்கிறோம். சரி என்னைக்காவது இதை யோசித்து இருக்கிறோமா ..? மடித்து வைக்க பட்ட air bag பையிக்குள் வினாடி நேரத்தில்.. (உண்மையில் வினாடிக்கும் குறைவான நேரத்தில் ) திடீரென காற்று எங்கிருந்து வருகிறது ? வாங்க பார்க்கலாம்.


முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் air bag குள் நிரம்பி இருப்பது காற்று அல்ல அது நைட்ரஜன் வாயு. அது எப்படி எங்கே இருந்து வருகிறது என பார்த்தால்......

காரின் முன் பக்கம் ஒரு சென்சார் வைக்க பட்டு இருக்கும் அதன் பெயர் crash sensor  கார் 16 இல் இருந்து 24 கிமி வேகத்தில் போய் கொண்டு இருக்கும் போது திடீரென வேகம் முற்றிலும் தடை பட்டால் அந்த deceleration ஐ அது விபத்து என புரிந்து கொள்கிறது உடனே அதில் உள்ள சிறப்பு மெக்கானிக்கல் அமைப்பு ஒன்று இயங்கி 12 v மின்சாரத்தை inflator system என்ற ஒரு அமைப்பிற்கு அனுப்பி வைக்கிறது.அந்த inflator system க்குள் ஏற்கனவே sodium azide (NaN3) மற்றும் potassium nitrate (KNO3)  வைக்க பட்டு இருக்கும். அனுப்பி வைக்க பட்ட 12 v மின்சாரம் அங்கே இக்னேட் பண்ண பட்டு சின்ன பற்ற வைப்பு ஒன்றை நிகழ்த்துகிறது. அதன் விளைவாக அங்கே வைக்க பட்ட sodiam azide மற்றும் potassium nitrate உடனடியாக வினை புரிந்து நைட்ரஜன் வாயுவை உண்டு பண்ணி நைலானால் செய்ய பட்ட bag இல் புஸ்ஸ்ஸ் என நிரம்புகிறது.

விபத்து நடந்து வினாடியில் 10 இல் 3 பங்கு நேரத்துக்குள் இவைகள் நடந்து முடிந்து விடுகின்றன. (இவைகளில் இக்னேட் பண்ண மின்காந்த வகை ஸ்விட்ச் மற்றும் மெக்கானிக்கல் வகை ஸ்விட்ச் மற்றும் பீஸோஎலக்ட்ரிக்கல் வகை ஸ்விட்ச் என பல வகையில் கிடைக்கிறது.)


ஒரு air bag ஒரு முறை மட்டுமே பயன் பட கூடியது அதன் பின் அதை மாற்றியாக வேண்டும்.

உயிர் காற்று ஆக்சிஜன் னா.... உயிரை காப்பாற்றும் காற்று நைட்ரஜன் னு இப்போ தெரிந்து கொண்டீர்களா...


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

11. "Astantine எனும் அபூர்வ தனிமம்"


🔘தனிம வரிசை அட்டவணையில் 85 ஆவது இடத்தில் பார்த்தால் astantine னு ஒரு தனிமம் ஒன்னு இருக்கும் .மிக மிக அறிய வகை தனிமம் இது. எந்த அளவுக்கு என்றால் பூமியில் மொத்தமாக எப்போது நீங்கள் எடுத்து பார்த்தாலும் 25 கிராமுக்கு மேல் எடுக்க முடியாது இவைகள் அந்த அளவு மட்டும் தான் உண்டாகி இருக்கும். இவைகள் இயற்கையில் யுரேனியம் தோரியம் மற்றும் ஆக்டினியமின் ரெடியோஆக்டிவ் இல் உண்டாக கூடியது .  இவைகள் இந்தளவு அரிதாக கிடைக்க காரணம். இவைகளின் ஆயுள் காலம். அதி கதிர்வீச்சு தன்மை கொண்ட இவைகள் அநியாயத்துக்கு நிலை தன்மை அற்றவை. சில ஐசோடோப்களின் அரை ஆயுள் காலம் கிட்ட தட்ட  1 மணி நேரம் மட்டுமே .அதாவது சும்மா வைத்து இருந்தாலே ஒரு மணி நேரத்தில் பாதியாக கரைந்து விடும். இதன் ஒரு வகை ஐசோடோப்பில் அதிக பட்ச ஆயுள் காலமே 8 மணி நேரம் தான் (astantine 210 ) 


இவைகளை பிடிப்பது எந்த அளவு சிரமம் என்றால் இதன் நிறம் என்ன என்று இன்று வரை யாருக்கும் தெரியாது. (கருப்புக்கு கிட்ட தட்ட நிறமாக இது இருக்கும் என ஆய்வாளர்கள் யூகிக்கிறார்கள் ) இதை பற்றி பல தகவல் இன்னும் யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை உதாரணமாக இதன் கொதிநிலை என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆய்வு செய்து பார்க்கலாம் என்றால் 1 கிராம் கூட முழுசாக ஆய்வாளர்கள் கையில் இது சிக்காது. 


1980 களிலேயே இப்படி ஒன்று இருப்பது யூகிக்க பட்டது என்றாலும் 1940 களில் கலிபோர்னியா யூனிவர்சிட்டி சார்ந்த Dale R. Coson, Kenneth Ross Mackenzie மற்றும் Emilio Segrè எனும் ஆய்வாளர்கள் Bismuth ஐசோடோப்பில் ஆல்பா துகளை பாய்ச்ச்சி astantine 211 ஐ உண்டாக்கி காட்டினார்கள். (இந்த க்ரீக் பெயருக்கு அர்த்தமே நிலையில்லாதது என்பது தான் .)


ஆபத்தான கதிர்வீச்சு கொண்ட இதன் தொடர்பில் மனிதன் வர நேர்ந்தால் இது அயோடின் போல தைராய்டில் சேர கூடும் என்கிறார்கள். ஆனால் இதை கையாண்டால் புற்று நோயை குண படுத்த முடியும் என்பதும் கண்டு பிடித்து இருக்கிறாராகள். எதை செய்யவும் 'பயபுள்ள 'கையில் சிக்கினால் தானே.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


12.🔘 இப்போது நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 100 அடி சுற்றளவில் மனிதர்களை தவிர எத்தனை உயிரினங்கள் உள்ளன என்று சொல்ல முடியுமா ? உங்கள் விடை5 அல்லது  10 என இருக்கும்.. அல்லது 20 அல்லது அதிக பட்சம் 100 என இருக்கலாம் அவ்வளவு தான்.

ஆனால் நீங்கள் பூமியில்  மண்ணில் இருந்து ஒரு ஸ்பூன் அளவு மண்ணை எடுத்து பார்த்தால் அதில் உள்ள நுண்ணியிர்களின் எண்ணிக்கை இப்போது நீங்கள் இருக்கும் நாட்டில்  உள்ள மொத்த மனிதர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என்பது தான் உண்மை. (வளமான தோட்டத்து மண் என்றால் இன்னும் மிக அதிக அளவில் இருக்கும் ) .

அதே போல நமது உடலில் உள்ள நமது செல்களின் எண்ணிக்கையை விட நமது உடல் சாராத நுனியிர்களின் செல்களின் எண்ணிக்கை மிக அதிகம் (நல்ல வேலை அவைகள் அளவில் நமது செல்லை விட மிக சிறியது என்பதால் நாம் மனிதனாக இப்போது இருக்கும் உடலை கொண்டு இருக்கிறோம். ) 


இப்போ சொல்லுங்க உங்களை சுற்றி உள்ள 100 அடியில் எத்தனை உயிரினங்கள் உள்ளன.?

இப்போ நீங்க நடிகர் அஜித்  வசனத்தை சொல்லலாம்...


"ஏய்...நான் தனி ஆள் இல்ல....."


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

13. "Olympus Mons"


🔘 உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் அதன் உயரம் 29028 அடிகள். (கிட்ட தட்ட 8 கிலோ மீட்டர் உயரம் )

ஆனால் Olympus Mons எனும் எரிமலையில் உயரம் 72000 அடிகள் .(கிட்ட தட்ட 21 கிலோ மீட்டர் உயரம் ) மற்றும் அகலம் 600 கி.மி சுற்றளவு கொண்டது அப்போ அந்த எரிமலை பார்க்க எவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் என யோசியுங்கள் .

ஆனால் இது இருப்பது பூமியில் இல்லை. செவ்வாயில். 


பூமியில் உள்ள மிக பெரிய எரிமலை Mauna Loa வை விட 100 மடங்கு பெரியது இது. நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிக பெரிய எரிமலை இதுவே . இந்த எரிமலையை ஆய்வு செய்வதன் மூலம்

செவ்வாயின் கடந்த கால ,காலநிலையை ஆய்வு செய்ய முடியும் என ஆய்வாளர்கள் நம்புகிறாராகள்.


இது இப்போதும் இயக்கத்தில் இருக்கும் ஒரு எரிமலை என்பதால் எதிர்காலத்தில் எப்போது வேண்டும் என்றாலும் வெடித்து சிதறலாம். அது செவ்வாயில் கால நிலை மாற்றத்தை கூட உண்டு 


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

14.  " ரொம்ப 'சூடான ' தகவல்"


🔘 சூரியனின் மேற்பரப்பில் அதன் வெப்ப நிலை 5600 டிகிரி செல்சியஸ் இருக்கும். 

இதை போன்று ஒரு 5 மடங்கு அதிக வெப்பத்தை நமது பூமியில் இருந்து மேகம் இருக்கும் தொலைவில் வைத்தால் என்ன ஆகும் ? 

அவ்வளவு தான் பூமி மொத்தமா கருகிவிடும் னு நினைப்போம் அல்லவா.. ஆனால் நாம் காணும் மின்னல் உண்டாக்கும் வெப்பம் 30000 டிகிரி செல்சியஸ் என்றால் உங்களால் நம்ப முடியுமா ? 

ஓரு பாசிட்டிவ் சார்ஜ் கொண்ட மேகம் ஒன்றின் அருகில் வேறு ஒரு அனு நெருங்கும் போது..இந்த மேகம் தனது . பாசிட்டிவ் தன்மையால் அந்த அனுவின் எலக்ரானை மட்டும் கவர்ந்து இழுக்கும்.. புரோட்டனை உந்தி தள்ளும்... அப்படி தள்ள பட்ட புரோட்டான் அனு ஒரு மின்சுமை பெற்ற துகள் என்பதால் அது போகும் பாதையில் ஒரு பிளாஸ்மா மண்டலத்தை உண்டு பண்ணி கொண்டே போகும். இந்த பிளாஸ்மா மண்டலம் ஒரு சிறப்பான மின் கடத்தி பாதை என்பதால் சார்ஜ் கொண்ட மேகங்களில் இருந்து இந்த பாதையில் வேகமாக சார்ஜ் காற்றில் பரவும். பரவும் போது அதீத வெப்பத்தால் காற்றை சூடாக்கும்... அதுக்கு பெயர் தான் மின்னல்.


இந்த மின்னல் 30000 டிகிரி வெப்பம் உண்டு பண்ணாலும், நமக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க காரணம் அவைகள் மிக குறுகிய நேரத்துக்கு குறுகிய இடத்தில் மட்டும் உண்டாவது தான்.

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

15. "ஆக்சிஜன் எப்படி தயாரிக்கிறார்கள் "


🔘 மருத்துவமனையில் நீங்கள் ஆக்சிஜன் சிலிண்டர் பார்த்திருப்பீர்கள்.மேலும் தொழிற்சாலைகளிலும் ஆக்சிஜன் பயன்பாடு மிக இன்றியமையாதது . சரி இந்த ஆக்சிஜன் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ? வாருங்கள் ஆக்சிஜன் தயாரிப்பது எப்படி என்பதை இன்றைக்கு பார்க்கலாம்.


நீங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டி மற்றும் ஏசியில் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம்தான் ஆக்சிஜன் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா ?

எப்படி என்பதை பார்க்கலாம். 

முதலில் ஆக்சிஜன் என்பது ஏதோ புதிதாக ஒன்றை தயாரிக்கப்படுவது அல்ல அது காற்றில் இருக்கும் ஆக்சிஜனை நாம் பிரித்து எடுக்கிறோம் அவ்வளவுதான். காற்றில் மிக அதிக படியாக நைட்ரஜன் உள்ளது அதற்கு அடுத்த படியாக ஆக்சிஜன் உள்ளது பின் ஆர்கான். அதன் பின் மீதமுள்ள மிக சிறிய சதவீத்தில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் இதர சில வாயுக்கள் உள்ளன. இந்த அனைத்து வாயு விற்கும் கொதிநிலை என்பது வெவ்வேறாக இருக்கும். அதாவது அனைத்து வாயுக்களும் தனக்கே உரிய குறிப்பிட்ட வெப்பநிலையில் மட்டும் தான் வாயுவாக மாறும். இந்த ஒரு தன்மையை பயன் படுத்தி தான் இவைகளை நாம் பிரிக்க போகிறோம் எப்படி என்பதை பார்ப்போம்.


ஆக்ஸிஜன் தயாரிக்கும் சாதனத்தில் ஒரு புறத்தில் இருந்து காற்று வடிகட்டி மூலம் உள்ளே அனுப்பப்படுகிறது. வடிகட்டியில் காற்றில் உள்ள தூசுகளை வடிகட்டும் படுகின்றன. பின் இந்த காற்று ஒரு கம்ப்ரெஷர் மூலம் அழுத்தம் அதிகரிக்க படுகிறது. காற்றின் அழுத்தம் அதிகரித்தால் கூடவே வெப்பநிலையும் உயரும் என்று நமக்குத் தெரியும் . இப்போது இந்த உயர் அழுத்த வெப்ப காற்று ஒரு உருளை அமைப்பிற்குள் அனுப்ப படுகிறது. அந்த அமைப்பின் உள்ளே பார்த்தால் ஒரு குழாய் அமைப்பு சுற்றி சுற்றி ஓடி கொண்டு இருக்கும் அந்த குழாய்க்குள் மிக குளிரான நீர் பாய்ச்சப்பட்டு கொண்டிருக்கும் எனவே அந்த குழாய் மிகவும் குளிர்ந்து இருக்கும்.

கம்ப்ரசர் மூலம் அழுத்தம் கூட்டப்பட்ட வெப்பமான காற்று இந்தக் குளிர்ந்த குழாய்களில் மோதும் போது தனது வெப்பத்தை இழக்கிறது. (ஆனால் அழுத்தம் கொஞ்சம் அப்படியே தான் உள்ளது ). இப்போது அடுத்த படியாக expention பகுதி ஒன்றில் இந்த காற்று அனுப்ப படும். இது நமது வீட்டு குளிர் சாதனங்களில் உள்ள நுட்பம். அதாவது காற்று திடீரென அழுத்தம் குறைக்க பட்டால் அதாவது இது வரை அது பயணம் செய்து வந்த பாதையை மிக அகலம் ஆக்கினால் .. (ஒரு குறுகிய காரிடார் வழியாக 100 பேரை நெருக்கி அடித்து கொண்டு போய் திடீரென 1000 பேர் அமர கூடிய பிரமாண்ட ஹால் ஒன்றில் அவர்களை சுதந்திரமாக விட்டால் எப்படி இருக்கும் அப்படி....) இப்படி செய்தால் மைனஸ் அளவில் காற்று குளிர்ந்து போகும். இந்நிலையில் காற்றில் உள்ள கார்பன்டைஆக்சைடு மட்டும் திண்ணமாக மாறியிருக்கும் எனவே அதை மட்டும் தனியாக பிரித்து விட முடியும். இப்போ மீதம் இருக்கும் நைட்ரஜன் ,ஆர்கான்,ஆக்சிஜன் இவற்றை மீண்டும் அதே மாதிரியான ஒரு expention முறைக்கு ஆட்படுத்துவார்கள் (அந்த 100 பேரை இப்போ 2000 பேர் அமர கூடிய அடுத்த அறைக்கு மாற்றுவது போல ) 

இப்போது அங்கே இன்னும் இன்னும் அதிக குளிரூட்ட படுகிறது. 

ஆக்சிஜனின் கொதிநிலை - 183 டிகிரி

நைட்ரஜன் கொதிநிலை - 196 டிகிரி 

ஆர்கான் கொதிநிலை - 186 டிகிரி 

ஆகும்.எனவே இப்போ படி படியா குறைந்து கொண்டு வரும் வெப்பம் மைனஸ் 184 இலிருந்து மைனஸ் 183 ஐ அடையும் போது ஆக்சிஜன் மட்டும் இப்போது திரவமாக மாறிவிட்டிருக்கும். எனவே இவைகள் இருக்கும் அறையில் ஆக்சிஜன் மட்டும் திரவமாக மிதக்க மீதமுள்ள ஆர்கான் மற்றும் நைட்ரஜன் மேலே வாயுவாக மிதக்கும் இவற்றை இப்போது தனியாக குழாய் மூலம் பிரித்து விட முடியும் இப்போது மீதமிருப்பது ஆக்சிஜன் தான். இந்த திரவ வடிவ ஆக்சிஜன் உருளைகளில் அடைக்க பட்டு விடுகிறது.


மேற்கண்ட முறையில் நைட்ரஜனும் பெற படுகிறது. ஆர்கனும் கிடைக்கிறது ட்ரை ஐஸ் அதாவது திண்ம கார்பன்டை ஆக்சைடும் கிடைக்கிறது.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

16.🔘 நாம் கேட்கிற சுகமான சத்தத்தில் ஒன்னு எதுன்னு கேட்டா ATM ல கடைசியா வர்ற பணம் என்னுகிற சரர்ர் சத்தம் தான் னு சிலர் சொல்லுவாங்க.

நீங்க இதை கவனித்து இருக்கலாம் நீங்க 10ஆயிரம் எடுத்தாலும் சரி ஒற்றை 100 ரூ எடுத்தாலும் சரி ஒரே மாதிரி ஒரே நேரத்துக்கு சர சர என்று மெஷின் என்னி  பார்க்கும். (அடேய் நான் எடுக்கிற ஒரு 100 ரூ தாளையா இத்தனை வாட்டி என்னி பார்க்கிற னு நமக்கு தோணும் ) .

ஆனா உங்களுக்கு இது தெரியுமா மெஷின் நோட்டை என்னுவதே இல்லை. அது ஒரு போலி சப்தம்.

நீங்க கவனித்து இருப்பீங்க எலக்ட்ரிக் பைக் சத்தம் போடாது ஆனா  பைக் வருது னு மக்களுக்கு தெரிவிக்க சில எலக்ட்ரிக் பைக் ல போலியான 'விரர்ர்ர்ருரும்ம்ம்..' சத்தத்தை ஸ்பீக்கர் வச்சி கொடுத்து இருப்பாங்க. அதே போல 'அய்யா பணம் தயார் ஆயிடுச்சி ஒன்னும் கவலை படாதீங்க ...இதோ வந்துட்டே இருக்கு அய்யா ' னு நமக்கு சொல்ல தான் ஸ்பீக்கர் ல 'கர்ரர்ர்ர் ' சத்தத்தை மெஷின் ஒலிபரப்புகிறது.

உண்மையில் ATM மெஷின்கள் வேலை செய்யும் போது கொஞ்சம் கூட சத்தமே அற்ற செயல்பாடுகள் கொண்டவை.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

17. "பூமியின் energy budget தெரியுமா "


🔘 நாம் வாங்குகிற சம்பளத்தில் எவ்வளவு செலவு செய்கிறோம் என்று நாம் பட்ஜெட் போடுவது போல சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெறும் பூமிக்கு ஒரு எனர்ஜி பட்ஜெட் இருக்கிறது .

பூமி சூரியனிடமிருந்து ஆற்றலைப் வாங்குவது மட்டுமில்லை பதிலுக்கு ஆற்றலை கதிர் வீச்சாக வெளியே அனுப்பவும் செய்கிறது. சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் ஆற்றலில் எவ்வளவு பூமியால் வெளியே அனுப்ப படுகிறது என்கிற கணக்கை  தான்" energy budget ". என்கிறார்கள்.


பூமியின் காலநிலையை இந்த எனர்ஜி பட்ஜெட் தான் நிர்ணயம் செய்கிறது. பூமிக்கு வரும் ஆற்றல் பூமியிலிருந்து செல்லும் ஆற்றலை விட எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக பூமி சூடாக இருக்கும்.


சூரியனிடம் இருந்து பூமிக்கு சராசரியாக ஒரு சதுர மீட்டருக்கு 340.4 watts என்கிற அளவில் ஆற்றல் வருகிறது என்கிறார்கள். இதில் 99.9 w மேகங்கம்,தூசி,மற்றும் பனியால் மீண்டும் வானத்துக்கு அனுப்ப பட்டுவிடுகிறது. மீதி உள்ள 240.5 w இல் கால் பங்கு வளிமண்டலத்தால் உறிஞ்ச படுகிறது. மீதி உள்ளவை பூமியை அடைந்து அங்கே நீரை ஆவி ஆக்குதல் பூமியை சூடாகுத்தல் தொடங்கி அனைத்து விதமான வெப்ப வேலைகளையும் செய்கிறது.

பெரும்பாலும் உள்வாங்கும் ஆற்றலும் வெளியே போகும் ஆற்றலும் ஒன்றாக இருப்பது இல்லை.ஒரு 0.6 w /சதுர மீட்டர் அளவு தங்கி உலக வெப்பமயமாதலை செய்கின்றன. பூமியின் வளிமண்டலம் கதிர்வீச்சை உள்வாங்கி வெளியே அனுப்புவது மட்டுமின்றி பூமியை நோக்கியும் அனுப்புகிறது. சூரியன் பகல் நேரத்தில் மட்டும்தான் கதிர்வீச்சை பூமிக்கு அனுப்புகிறது ஆனால் வளிமண்டலம் 24 மணி நேரமும் அதைச் செய்கிறது. 


வரும் வருமானத்தில் செலவு செய்தது போக மீதி தங்கிவிடும் எண்ணிக்கை அதிகமாக இருப்பது நமது அன்றாட மனித பட்ஜட்டுக்கு வேணா நல்லதாக இருக்கலாம். ஆனால் பூமியை பொறுத்த வரை வந்ததை எப்போதும் சேர்த்து வைக்காமல் முழுதாக செலவு செய்து விடுவதே பூமிக்கு நல்லது.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

18. The cat telaphone experiment பற்றி தெரியுமா.


🔘 1929  ஆம் ஆண்டு   Princeton Universit ஐ சார்ந்த Professor Ernest Glen Wever மற்றும் அவரது ஆராய்ச்சி உதவியாளர் Charles William Bray ஒரு வித்தியாசமான ...கொஞ்சம் கொடூர ...ஆராய்ச்சி ஒன்றை செய்தார்கள்.


ஒரு பூனையை மயக்க மருந்து கொடுத்து அதை உயிருடன் அதன் மண்டை ஓட்டை பிரித்தார்கள். அதன் ஒலி உணரி நரம்பை தேடி பிடித்து அதில் டெலிபோனின் ஒரு வயர் முனையை இணைத்தார்கள் அந்த நீண்ட வயரின் இன்னோரு பக்கம் 50 அடி தள்ளி ரிசிவர் ஒன்று இணைக்க பட்டது.

இந்த அமைப்பை செய்த பின் ஒருவர் பூனையின் காதில் பேச அந்த சத்தம் பூனையின் காது வழியாக அதன் ஒலி உணர் நரம்புகள் வழியாக கடந்து அந்த வயரை கடந்து 50 அடி தள்ளி இருக்கும் கடைசி முனை வரை தெளிவாக கேட்டது. மேலும் சத்தத்தை அதிகரிக்கும்போது ரிசிவிங் சத்தமும் அதிகரிப்பதை கண்டார்கள்.


பின் இந்த அமைப்பை நரம்பை விட்டு எடுத்து வெறும் திசுக்களில் வைத்து செய்து பார்த்தார்கள் இப்பொழுது சப்தம் கேட்கவில்லை. பின் பூனையின் தலைக்கு செல்லும்  ரத்த ஓட்டத்தை நிறுத்திவிட்டு இந்த சோதனை செய்து பார்த்தார்கள் இப்பொழுதும் சத்தம் கேட்கவில்லை. இதை ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தமைக்காக இவர்கள் இருவருக்கும் ஆவர்ட் கொடுக்க எல்லாம் கூட கொடுக்க பட்டது. (first Howard Crosby Warren Medal of Society by the Society of Experimental Psychologists in 1936. ) 

பிற்காலத்தில் இவர்கள் இரண்டாம் உலக யுத்தத்தில் ஆராய்ச்சி கழகத்திலும்  பணியாற்றினார்கள்.


இந்த ஆராய்ச்சி கேட்க கொஞ்சம் கொடூரமாக இருந்தாலும் பிற்காலத்தில். கேட்கும் திறன் குறித்த ஆராய்ச்சிக்கு உதவிகரமாக இருந்தது மேலும்" cochlear implants " என்கிற சத்தத்தை சிக்னலாக மாற்றி சப்த நரம்புகளுக்கு அனுப்பி காது கேளாதவர்களுக்கு காது கேட்க உதவும் மின்னணு கருவியை கண்டு பிடிக்கவும் உதவியாக இருந்தது.


 மேலும் தகவலுக்கு " the cat telephone experiment " அல்லது "pirinceton cat experiment" என்று தேடி பாருங்கள் 


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

19. " Megaphragma mymaripenne"


 🔘 தகவல் சின்னதா இருந்தாலும் ஆச்சர்யம் பெரிதான ஒன்றை இன்று பார்க்கலாம்.


" Megaphragma mymaripenne" வாயில்  நுழையாத இந்த பெயர் ஒரு குளவியுடையது. 

உலகின் மிக சிறிய குளவி இதுவே. இதர குளவிகள் போலவே மூளை கண்கள் மற்றும் இதர  அமைப்பு கொண்டு இருந்தாலும் இதன் அளவு மிகவும் ஆச்சரிய பட தக்க அளவில் அமீபாவைவிட  சின்னது. ஆமாங்க நம்ம பாட புத்தகத்தில் படித்த ஒற்றை செல் அமீபாவை விட தான்...

ஆச்சரியமா இருக்கு இல்ல.

(ஆமாம் ...இவ்ளோ சின்ன குளவிக்கு 'mega ' னு தொடங்கி பெயர் வைத்து இருப்பது ஏனோ )


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

20. "இருளின் நிறம் என்ன "


🔘 நீங்கள் கண்களை மூடி கொண்டு இருக்கும் போது அல்லது முற்றிலும் ஒளி அற்ற இருள் அறையில் நீங்கள் காணும் நிறம் என்ன ? 

இந்த கேள்விக்கு பலரும் சொல்லும் பதில் "கருப்பு ". 

ஆனால் சரியான கருப்பு நிறத்தை நீங்கள் காண ஒளியின் உதவி தேவை என்பது தான் உண்மை. ஒளி அற்ற அறையில் அல்லது கண்ணை மூடி கொண்டு இருக்கும் போது நீங்கள் காணும் நிறம் 

 " Eigengrau " என்கிற அடர் சாம்பல் நிறம்.

பார்வை நரம்புகள் கொடுக்கும் சிக்னலால் தான் இந்த நிறத்தை நாம் பார்க்கிறோம்.


இரு நிறங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் எனில் வெளிச்சத்தில் ஒரு கருப்பு பொருளை பிடியுங்கள் இப்போது கண்ணை மூடி உள்ளே தெரியும் நிறத்தை கவனியுங்கள். பின் உடனே கண்ணை திறந்து அந்த கருப்பு பொருளை பாருங்கள் ஒப்பிட்டு பார்த்தால் வித்யாசம் உணர முடியும்.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

21 . பசிக்கு கொஞ்சம் பிளாஸ்டிக்.


🔘 உங்களால் பிளாஸ்டிக்கை உண்ண முடியுமா ? நிச்சயம் முடியாது. நாம் மட்டும் இல்லை உலகில் உள்ள எந்த உயிரியாலும் பிளாஸ்டிக்கை உண்ண முடியாது என்றுதான் நீங்கள் சொல்வீர்கள் சரியா ?


ஆனால் பிளாஸ்டிக்கையும் உண்ணக்கூடிய ஒரு உயிர் இருக்கிறது என்பது தான் உண்மை. அது ஒரு காளான். அதன் பெயர்

"Pestalotiopsis Microspora:" அமேசான் காடுகளில் காணக்கிடைக்கும் இவைகள் பிளாஸ்டிக்கின் இணைப்பை உடைத்து polyurethane ஐ உட்கொள்ள கூடியவை. (இது தான் பிளாஸ்டிக்கின் முக்கிய மூல பொருள் ) பிளாஸ்டிக்கை கரைத்து அதை கரிம பொருளாக மாற்றுவதற்கு எவ்வளவு ஒரு அதிசய திறன் தேவை சிந்தித்து பாருங்கள்.

எதிர் கால மனிதர்கள் பிளாஸ்டிக்கை உண்ணுவதை போல சுஜாதா அவர்கள் கதைனு நினைக்கிறேன் படித்த நியாபகம் அந்த கதையை எப்பொழுதோ நிஜமாக்கி கொண்டு இருக்கிறது இந்த "Pestalotiopsis Microspora:"


இதே போல பிளாஸ்டிக்கை சாப்பிடும் பாக்டீரியா ஒருத்தரும் இருகாப்டி.. அவர் பெயர் "Ideonella sakaiensis "


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

22.  "Polonium 210 : உலகின் அதி கொடூர விஷம்..''


🔘 உங்களிடம் யாராவது மிக கொடூரமான விஷதின் பெயரை கேட்டால் பலரும் சொல்லும் பெயர் " சயனைடு " காரணம் அது உட்கொண்ட சில வினாடிகளிலேயே ஆளை கொன்று விடும்.

ஆனால் சயனைடை விட ஒரு லட்சம் கோடி சக்தி வாய்ந்த ஒரு ஆட்கொல்லி பொருள் இருக்கு என்று சொன்னால் நம்ப மிக மிக கடினமாக தான் இருக்கும் அந்த பொருளின் பெயர் "polonium 210 "


உண்மையில் இதை விஷம் என்று  சொல்வது தவறு ஏனென்றால் இது கொல்லும் விதம் வேறுவிதமானது. அதாவது கதிர்வீச்சு முறையில் கொல்ல கூடியது. ஆனால் கொல்லும் திறன் மிக மிக அபாரமானது. கற்பனைக்கு எட்டாத மகா மரணதனமான பொருள். அதாவது எந்த அளவு ஆற்றல் என்றால் ஒரே ஒரு கிராம் polonium 210 வை வைத்து (நம்ப கடினமாக தான் இருக்கும்  ) 5 கோடி பேரை கொல்ல முடியும். அது கொன்னது போக கொசுறாக இன்னோரு 5 கோடி பேர் உடல்நிலையை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்க முடியும்.

ஆம் அந்த ஒரே ஒரு கிராம் வைத்து....


இப்போது உங்களுக்கு நியாயமான கேள்வி ஒன்று வந்து இருக்கும். 'அப்படி என்றால் இதை வைத்து உலகில் பலபேர் பலபேரை கொன்று இருப்பார்களே ' என்று. ஆனால் பதிவு செய்ய பட்ட polonium கொலைகள் மிக மிக குறைவு. அதும் உலவாளிகளை கொல்ல அரசாங்க அளவில் மட்டும் சொற்பமாக பயன் படுத்த பட்டுள்ளது. ஏன் இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தும் மிக குறைவான உயிரிழப்பு ? 


அதைப் பற்றி அறிய முதலில் பொலோனியம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். 

போலோனியம் வகையில் உள்ள 25...30  ஐசோப்ட்டோப்களில்..(ஒரு பொருளின் ஐசோட்டோப் என்பது அதன் கசின் பிரதர் மாதிரி னு வச்சிக்கோங்களேன்.) போலோனியம் 210 என்பது ஒரு ஐசோடோப். இந்த போலோனியம் எனும் அற்புத தனிமத்தை 1898 இல் கண்டு பிடித்தவர் வேற யாரும் அல்ல நம்ம ரேடியம் புகழ் மேரி கியூரி தான். ( அவர் கண்டு பிடித்த ரேடியம் ஐ விட சில ஆயிரம் மடங்கு அதிக கதிர் வீச்சு தன்மை கொண்டது இது.  அவ்வளவு ஏன் அணுகுண்டில் பயன் படும் நாம் அறிந்த மிக கொடூர கதிர்வீச்சு பொருளான யுரேனியத்தை விடவே 400 மடங்கு அதிக கதிர்வீச்சு தன்மை கொண்டது இது. புளுடோனியம் குளுடோனியம் னு..எதுவும் இதற்கு ஈடு இல்லை. ) கியூரி அவர்கள் இதை தனது போலந்து நாட்டில் பெயரின் நினைவாக இந்த பெயரை சூட்டினார்.


இயற்கையில் மிக அரிதாக தான் இது கிடைக்கிறது. 1 டன் யுரேனியம் தாதுவில் சலித்து எடுத்தால் 100 microgram (0.0001 கிராம் ) போலோனியம் கிடைக்கும். (பிஸ்மத்தில் நியூட்ரான் ஐ மோதி செயற்கையாக கூட இதை பெறலாம் )

மனிதன் அறிந்ததிலேயே மிகவும் கொடூரமான விஷத்தன்மை வாய்ந்த ஒன்றான இது நம்மைச் சுற்றியும் மற்றும் நமது உடலிலும் கூட மிகச் சிறிய அளவில் இருப்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம் அதாவது நம்மை பாதிக்காத அளவிற்கு மிகக் குறைந்த அளவு சிலவகை உணவு மூலமாக நம் உடலுக்கு இது வந்து சேர்கிறது. 


இதை சுவாசிக்க நேர்ந்தால் சுவாசித்த நுரையீரல் புற்றுநோய் காணும். இதை விழுங்க நேர்ந்தால் ரத்த சிவப்பணுக்களில் சென்று சேரும். கிட்னி லிவர் என்று அனைத்தையும் பாதிக்கும் .இது செல்லும் வழியில் எந்த மூலக்கூறு கிடைத்தாலும் அதனிடமிருந்து எலக்ட்ரானை உறிஞ்சிக்கொள்ளும் என்பதால் செல்லும் பாதை பூரா பாதிப்புதான். இது தனது ஆல்பா வகை ரேடியேஷனால்  டி.என்.ஏ வை தாக்கி  apoptasis உண்டாக்க கூடியது (அதாவது Cell sucide ) .


ஆனால் இவ்வளவு கொடிய கதிர்வீச்சை கொண்டு இருந்தாலும் இதன் கதிர் வீச்சின் 'வீச்சு ' மிக மிக குறைவு. அதாவது நீண்டதூரம் இதனால் பயணிக்க முடியாது. கைகளில் கொஞ்சம் தள்ளி பிடித்து கொண்டாலே போதும் உங்களை தாக்காது. மேலும் ஒரே ஒரு பேப்பர் போதும் இதை தடுத்து நிறுத்த. அது கூட வேண்டாம் நமது சதையை தாண்டி ஊடுருவ கூட இதனால் முடியாது. ஏதாவது வெட்டு காயம் வழியாக உள்ளே சென்றால் தான் உண்டு. அல்லது நாமே எடுத்து விழுங்கினால் தான் உண்டு.


அது மட்டும் இல்லாமல் இதன் ஆயுள் காலமும் மிக குறைவு.  140 நாட்களில் தனது கதிர்வீச்சின் பாதியை இவைகள் இழந்து விடுகின்றன. வெறும் 40 நாளில் இவைகளின் உடலில் பாதி அளவு கரைந்து போகின்றன. இதனால் இதை வைத்து கொலைகள் செய்யும் திட்டம் (நல்ல வேலையாக ) உருவாவது மிக  சிரமம்.

மனிதர்களை கொல்ல அதிக அளவில் இவைகள் உருவாக்க பட வேண்டும் ஆனால் உலகம் முழுக்க ஒரு ஆண்டு முழுவதும் நியூக்ளியர் ரியாக்டர் மூலம் உண்டாக்கும் போலோனியம் 210 வெறும் 100 கிராம் தான்.


போலோனியம் தொழிற்துறையில் நிறைய இடங்களில் பயன் படுகிறது.

அனு ஆயுத தயாரிப்பில் பவர் சப்லைக்கு உதவுவது இது தான்.மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் உதவுகிறது. ரஷ்ய lunar lander தனது craft ஐ இரவு நேரத்தில் சூடாக வைக்க இதை தான் உபயோக படுத்துகிறது. டேப்..ரோலிங் பேப்பர் தயாரிப்பில் கூட இவைகள் உதவுகின்றன.


எனவே என்ன தான் அதி பயங்கர கொடூர விஷ ஆற்றலை கொண்டு இருந்தாலும் இன்று வரை போலோனியம் 210 ஒரு 'நல்ல புள்ள 'தான்.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

23. "lacrimal punctum " கண்களின் வடிகால்


🔘 அழுது முடித்த உடன் மூக்கு ஒழுகுதே அது ஏன் என்று தெரியுமா ?

உங்கள் கண்களின் கீழ் பக்கம் இழுத்து பாருங்கள் மூக்கு ஓரமாக ஒரு சின்ன ஓட்டை பார்க்க முடியும். இதன் பெயர் "lacrimal punctum " கண்களின் நீர் வடிகால் அமைப்பு இது. 

அழும் போது வரும் நீரை மூக்குக்கு கடத்தி விடுவது இந்த ஓட்டைகள் தான்.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

24. நீங்கள் கடந்த காலத்தில் வாழ்கிறீர்கள்.


🔘 நீங்க தொலைக்காட்சியில் ஒரு லைவ் ஷோ பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு தெரியும் அது மிக துல்லியமாக லைவ் அல்ல குறைந்த பட்சம் 3 வினாடி தாமதம் அதில் உள்ளது. அந்த 3 விநாடிக்குள் காட்சிகள் எடிட் செய்ய பட்டால் நீங்கள் தவறான தகவலை பார்க்க கூடும் அல்லவா..

இப்போது இதை கவனியுங்கள் ஒரே நேரத்தில் உங்கள் ஒரு கையால் உங்கள் மூக்கையும் இன்னோரு கையால் பாதத்தையும் தொடுங்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் தொட்டதுபோல் தான் நீங்கள் உணர்வீர்கள் ஆனால் உணர்வு நரம்புகள் மூக்கிலிருந்து மூளைக்கு சிக்னல் அனுப்புதை விட காலில் இருந்து சிக்னல் அனுப்ப கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பது தான் உண்மை.. அது நாம் உணராத அளவில் மிகமிகச் சிறியது என்பதால் வித்தியாசத்தை நாம் உணர்வதில்லை. 


இதே போல தான்.....நீங்கள் இப்பொழுது இதே கணத்தில் உணர்ந்துகொண்டு அனுபவித்துக் கொண்டிருக்கும் எதுவும் நிகழ்காலத்தில் இல்லை என்பதுதான் உண்மை. நீங்கள் எதை ஒன்றையும் உணர்வதற்கு உங்கள் மூளை 80 மில்லி செகண்டுகள் எடுத்துக்கொள்கிறது என்பதால் நீங்கள் இங்கேயே இப்போதே இதே கணத்தில் உணர்ந்து கொண்டிருக்கும் யாவும் 80 மில்லி செகண்ட் களுக்கு முன் நடந்ததுதான்.

ஆக நாம் அனைவருமே 80 மில்லி செகண்ட் கடந்த காலத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


         "தங்கமே தங்கம்"


25. 🔘பூமியில் தொடர்ந்து தங்கம் அள்ளி கொண்டு இருக்கிறோமே... பூமியில் எவ்வளவு தங்கம் மிச்சமுள்ளது என்று ஏதும் ஐடியா இருக்கா ?

நிறைய குறைந்து போய் இருக்கும் னு உங்களில் சிலர் நினைக்கலாம். ஆனா நாம் பூமியில் கொஞ்சம் தூரம் தோண்டி எடுத்து கொண்டு இருக்கும் இந்த தங்கங்கள் வெறும் தூசி என்று உங்களுக்கு தெரியுமா ?

பூமியின் மையத்தில் உள்ள தங்கத்தை வைத்து மொத்த பூமியை தங்கத்தால் (அதுவும் கிட்ட தட்ட முட்டி கால் அளவு தடிமனுக்கு..)போர்த்தி மூடி விட முடியும்.


ஆனால் இது எல்லாம் நாம் அணுக முடியாத ஆழத்தில் அணுக முடியாத வெப்பத்தில் உள்ளது என்பது தான் சோகம்.

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

    "நிலா இல்லை என்றால்........."


26.🔘 நமது பூமிக்கு நிலா இல்லைனா என்ன ஆகும் னு தெரியுமா... ? 

அது எக்க சக்கமா நிறைய விளைவு நடக்கும்.. ஆனால் முக்கியமாக சில நிகழ்வுகள்.....


இரவு அநியாயத்துக்கு இருட்டா இருக்கும்.அதனால் என்ன நாம ஈஸியா டார்ச் அடிச்சிட்டி போயிடலாம் ஆனா அப்படி இல்லை . சிங்கம் முதல் ஆந்தை வரை பல விலங்குகள் நிலவொளியை கொண்டு வேட்டையாடுபவை அவைகள் எல்லாமே குழம்பி போய் உணவு தேடல் பாதிக்க படும். அப்படியே இன்னோரு பக்கம் பார்த்தால் கொரித்துண்ணிகள் (rodents) நிலவொளியில் ஒளிந்து வாழக்கூடியவைகள்.. அவைகள் இப்பொழுது தேவைக்கு அதிகமாக வெளியே வந்து சுற்றத் தொடங்கும். இதனால் குழப்பம் உண்டாகி உணவு சங்கிலியே பதிக்க பட கூடும்.


கடல் அலை இப்போ நாம் பார்க்கிற ஏரிகள்ல இருக்கும் அலை அளவு தான் இருக்கும். அது ஒன்றும் பெரிய பிரச்சினையாக தெரியவில்லையே என்று நாம் நினைக்கலாம் ஆனால் அதுவும் அப்படி அல்ல. நண்டு நத்தை பாசி தொடங்கி நிறைய உயிரினங்கள் இந்த அலையால் குறிப்பிட்ட வாழ்வு முறையை உண்டு பண்ணி வைத்துள்ளன. குறைந்த அலை  அவற்றை பாதிப்பதோடு அல்லாமல் அவைகளை உண்ணும் உயிரினங்களையும் பாதிக்கும் . இடம் விட்டு இடம் மாறும் பறவைகள் முதல் கரடிகள் வரை மறைமுகமாக பல வகையில் eco system பாதிக்க படும்.

இதோடு நிற்க வில்லை அலைகளின் ஏற்ற இறக்கம் கடலில் வெப்பத்தை கட்டுப்படுத்தி வானிலையை பாதிக்க கூடியது. எனவே நிலவின் மறைவு மொத்த வானிலையை பாதிக்க கூடியது.


நிலா இல்லாம சந்திர கிரகணம் இல்லைனு நாம ஈஸியா சொல்லிடலாம் ஆனா நிலா இல்லாம சூரிய கிராகணமும் இல்லை என்பதும் கொஞ்சம் யோசித்தால் புரியும்.

அப்புறம் முக்கியமா.....

பருவங்கள் வராது. பூமிக்கு மொத்தமா எந்த எந்த ஊரில் எந்த எந்த பருவம் இருக்கோ அப்படியே தான் வாழ் நாள் பூரா இருக்கும்.. (நம்ம ஊரை கோடை காலத்துலயே யாராவது செட் பண்ணி விட்டுட்டா என்ன ஆகறது..) 

அப்புறம் ஒரு நாள் என்பது வெறும் 6 மணி நேரமா இருக்கும். ஒரு வருடத்தில் 1000 நாட்களுக்கு மேல் இருக்கும்...


அப்புறம்.....

முக்கியமா கவிஞர்கள் கொஞ்சம் கஷ்ட படுவாங்க....


சரி இவ்வளவு விளைவுகளை கொண்ட நிலா உண்மையில் பூமியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறது என்பது தெரியுமா? 

ஆனால் பயப்பட தேவை இல்லை . நிலா நம்மை விட்டு முழுதாக பிய்த்து கொண்டு போக  15 பில்லியன் ஆண்டுகள் உள்ளது. அதற்குள் இன்னும் 6அல்லது 7பில்லியன் ஆண்டுகளில் சூரியனே ரெட் ஜியாண்டாக மாற உள்ளது.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


27. வாழை பழம் ஏன் வளைந்து இருக்கிறது ?


🔘 வாழை பழம் சாப்பிடும் போது என்றைக்காவது இது ஏன் நேராக இல்லை எப்போதும் வளைந்தே இருக்கிறதே என்ற கேள்வி வந்துள்ளதா ?? 

அதற்கான காரணத்தை இன்று பார்ப்போம். 


அதற்கு காரணம் வாழைப்பழம்  negative geotropism முறையில் வளர்வதால் ...

அதாவது புவி ஈர்ப்புக்கு எதிராக சூரியனை நோக்கி வளர்வதால். பழம் தனது ஆரம்ப நிலையில் கீழ் நோக்கி செல்ல அதில் இருந்து வரும் அடுத்தடுத்த நிலை மேல் நோக்கி செல்ல முயல்வதால் இந்த வளைவான நிலை உண்டாகி வாழை பழம் வளைந்து விடுகிறது.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

    "போலார் கரடியின் நிறம் கருப்பு "


28. 🔘 போலார் கரடியின் நிறம் என்ன என யாரை கேட்டாலும் வெள்ளை என தான் சொல்லுவார்கள் ஆனால் உங்களுக்கு தெரியுமா போலார் கரடிகளின் நிறம் கருப்பு.

ஆம் அவைகள் கருப்பு நிற தோலை கொண்டு இருக்கின்றன. ஓ.. அப்போ மேலே இருக்கும் முடியின் நிறம் தான் வெள்ளையா ? என்றால் அதுவும் இல்லை. 

உண்மையில் அந்த முடிகள் ஒளி ஊடுருவ கூடிய (transparant ) தன்மை கொண்ட கண்ணாடி மாதிரி பொருள். எனவே அதற்குள் வரும் ஒளிகள் பட்டு ஒளிருவதை தான் நாம் வெள்ளையாக காண்கிறோம்.

எனவே ஒரு போலார் கரடியின் முடிகள் உண்மையில் நிற மற்றவை.


போலார் கரடிகள் பற்றிய இன்னோரு உண்மை.. போலார் கரடிகள் அகச்சிவப்பு கேமராவில் சிக்குவது இல்லை..


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

"கதிர்வீச்சை தின்னும் சூரிய காந்தி  "


29 )🔘 கதிர்வீச்சு கொண்ட நிலத்தில் சூரிய காந்தி செடியை வைத்தால் அதனால் கதிர்வீச்சை குறைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா ?

சூரிய காந்திக்கு தேவையான சத்துக்கள் குறிப்பிட்ட வகை கதிர்வீச்சு ஐசோடோப்பில் உள்ளது என்பதால் கதிர்வீச்சு மண்ணை சூரிய காந்தி செடிகள் உணவாக உட்கொள்ள முடியும்.


ஹீரோஷிமா புகுஷிமா மற்றும் செர்னோபில் போன்ற அனு பாதிப்பு கொண்ட இடங்களில் இவைகள் நட பட்டு பயன் படுத்தபட்டு வருகின்றன.

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


"தோல்வி கொடுத்த வெற்றி Wi-Fi! "


30 )🔘 John O’Sullivan  னு ஒரு ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருதர் ..." பிளாக் ஹோலில் இருந்து ரேடியேஷன் வெளியே வருது அதானால் படி படியாக பிளாக் ஹோல் கரைகிறது " என்கிற ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூற்றால் கவர பட்டு இருந்தார். பிளாக் ஹோலில் இருந்து வரும் சிக்னலை கண்டறிய முடியும் அதன் மூலம் அனு அளவு பிளாக் ஹோல் ஐ கண்டு பிடிக்க முடியும் என நம்பினார். இதன் மூலம் ஹாக்கின்ஸ் தியரி உண்மை என நிரூபிக்க நினைத்தார். ஆனால் பிரபஞ்சம் எங்கும் பரவி இருக்கும் பல வகை சிக்னல் கூட்டத்தில் நடுவே அந்த குறிப்பிட்ட மிக வலுவிழந்த ஒரு சிக்னல் ஐ கண்டு பிடிப்பது என்பது 'வைக்க போர் ஊசி 'கணக்காக மிக பெரிய சவாலாக இருந்தது. 

அவரும் அவரது குழுவும் இதற்கு ஒரு தீர்வை சிந்தித்தார்கள். அதாவது அந்த குறிப்பிட்ட சிக்னலின் அலை வடிவை  மட்டும் வடிவம் மாற்றி அமைக்கும் படி  ஒரு கருவியை கண்டு பிடித்தால் அந்த சிக்னலை எளிதில் அடையாளம் கண்டு பிடித்து விட முடியும் அதன் மூலம் அந்த குட்டி பிளாக் ஹோல் ஐ கண்டு பிடித்து விடலாம் அல்லவா ?

அவரும் அவரது குழுவும் இதற்காக இதை நோக்கி உழைத்தார்கள். ஆனால் விளைவு என்ன ஆனது தெரியுமா...தோல்வி.. படுதோல்வி.

ஆம் அவர்கள் நினைத்த படி அந்த திட்டம் வேலை செய்ய வில்லை.


பல ஆண்டுகளுக்கு பின் 1992 ஆம் ஆண்டு...

John O’Sullivan இப்போது CSIRO எனும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். அவர்கள் ஒரு கணினியுடன் எந்த வித கம்பி தொடர்பும் இல்லாமல் அதை தொடர்பு கொள்ள முடியுமா என ஆராய்ந்து கொண்டு இருந்தார்கள்.

அப்போ திடீர் என அவருக்கு அந்த யோசனை வந்தது. 

தான் தோல்வி கண்ட அந்த தொழில் நுட்பத்தை இதற்கு பயன் படுத்தினால் என்ன ? அதாவது கணினியில் டேட்டாவை ரேடியோ அலையாக மாற்றி ஒளிபரப்பு செய்யும் கருவி ஒன்றை இணைத்து விட்டால்.... கூடவே அது கொடுக்கும் சிக்னல் ஐ கிரகித்து மீண்டும் டேட்டாவாக மாற்றும் அமைப்பு ஒன்றும் செய்தால் ??? இப்போ கணினியுடன் எந்த வயர் தொடர்பும் இல்லாமல் தொடர்பு கொள்ள முடியும் அல்லவா..?

ஜான் தனது கண்டுபிடிப்பை இங்கே செயல் படுத்தி பார்க்க அட.. அட்டகாசமாக அது வேலை செய்தது. வெற்றி அபார வெற்றி.தனது கடின உழைப்பு வீண் போக வில்லை என்பதை கண்டு மகிழ்ந்தார்.


அவர் மினி பிளாக்ஹோல் கண்டு பிடிக்கிறேன் னு போய் கண்டு பிடித்த அந்த அற்புத கண்டுபிடிப்பு வேற ஒன்னும் இல்ல. அது தான்.. இன்னைக்கு நாம் அனைவரும் பயன் படுத்தி கொண்டு இருக்கும்

"Wi-Fi "


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

 "Quarantine "எப்படி வந்தது 


31 ) 🔘இன்றைக்கு வித்தியாசமான ஒரு விஷயத்தை பற்றிய உண்மையை பார்க்கலாம்.

பிளாக் டெத் என்று சொல்ல படுகின்ற பிளேக் எனும் கொள்ளை நோய் வரலாற்றின் மிக பெரிய ஒரு நோய் பரவல் நிகழ்வு.


அப்போது வேறு நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக வரும் கப்பல்கள் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டு 40 நாட்கள் கடலில் தங்க வைக்க பட்ட பின்பே அனுமதிக்க பட்டன. 40 என்பதற்கான இத்தாலிய வார்த்தை quaranta இதில் இருந்து நோய் தொற்றுக்கு ஒதுக்கி வைக்கும் நிகழ்வுக்கு பெயர் quarantine என வந்தது. 


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

  "Jamais vu " தெரியுமா ?


32 ) 🔘 நீங்கள் deja vu  கேள்வி பட்டு இருப்பீங்க அதாவது முன் பின் பார்க்காத ஒன்றை முதல் முறை பார்க்கும் ஒன்றை இதற்கு முன் எங்கேயோ பார்த்த மாதிரி இருப்பது போன்ற உணர்வு.

ஆனால் jamais vu என்று ஒன்று இருக்கிறது தெரியுமா இது இன்னும் விசித்திரமானது.


நீங்கள் ஊட்டிக்கு ஒரு வேலையாக சென்று இருக்கிறீர்கள் .அங்கே உங்கள் பக்கத்து வீட்டு ஸ்கூல் பையன் சீனு வை பார்க்கிறீர்கள். "டேய் சீனு என்னடா இந்த பக்கம் " 

அவன் உங்களை ஏற இறங்க பார்த்து விட்டு 

"யார்ங்க நீங்க"  என்கிறான். உங்களுக்கு அதிர்ச்சி. தினம் ஸ்கூல் போகும் போது மரியாதையாக பாய் அங்கிள் னு சொல்லிட்டு போறவன் தானே இவன். என்ன யாருனே தெரியாத மாதிரி நடிக்கிறான்..

"டேய் நான் தான் டா பக்கத்து வீட்டு  லட்சுமணன் அங்கிள் என்ன டா முதல் முறை பாக்கிற மாதிரி நடிக்கிற " என்கிறீர்கள்.

"எங்க பக்கத்து வீட்டு அங்கிள் பேர் லட்சுமணன் தான். அது சரியா தான் சொல்றிங்க..  ஆனா நீங்க யாருன்னு தெரியலையே...."


இப்போ உங்கள் தலை சுற்றுகிறது.


என்ன ஆச்சு ? என்ன நடந்தது ???


ஒன்னும் இல்ல... அந்த கணத்தில் அவன் jamais vu ஆல் பாதிக்க பட்டு இருக்கலாம்.

Dejavu வுக்கு நேர் எதிரான ஒரு விளைவு தான் jamais vu .

அதாவது நீங்கள் அடிக்கடி பார்க்கும் ஒன்று நீங்கள் திடீரென மறந்து போகலாம்..

உங்கள் வீட்டில் தினம் சாப்பிடும் டைனிங் டேபிள் தீடீரென உங்களுக்கு அடையாளம் தெரியாமல் போகலாம்.. 5 ஆண்டுகளாக தினம் அதில் உட்கார்ந்து சாப்பிட்டு வந்த நீங்கள் திடீரென ஒரு நாள்.. " அம்மா இங்க வாயேன் இதென்ன புதுசா ஒரு டைனிங் டேபிள் வந்து இருக்கு நம்ம வீட்டுக்கு யார் வாங்கி வந்து வைத்தார்கள் " னு கேட்கலாம்...

மிக சில நேரங்களில் மிக சிறிய அளவு ஆட்களுக்கு ஏற்படும் மிக அரிய வகை (நோய் னு முழுசா சொல்ல முடியாது..  ) ஒரு வகை விளைவு தான் இது...


ஆமாம்.... இன்று ஒரு தேடல் னு ஒரு கட்டுரை வந்துட்டு இருக்கே ரொம்ப நல்லா இருக்கு... ஆமாம்..யார் எழுதறது அது......

🤔🤔🤔🤔.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


       "Interplanetary Superhighway " 


 33. 🔘 விண்வெளி பாரக்க முழு திறந்த வெளி போல இருந்தாலும் ஊர் விட்டு போகும் போது விரைவாக எளிதாக செல்ல ஷார்ட் ரூட் இருப்பது போல ,விண்கலம் வெளியில் பயணிக்க வெளியில் குறிப்பிட்ட எளிய பாதை உள்ளது என்பது தெரியுமா ? 

Martin Lo என்பவர் உருவாக்கிய மென்பொருள் ஒன்றில் இந்த வழி தடம் பதிவேற்ற பட்டுள்ளது. நாசா தனது விண்கலத்தை இந்த பாதையை பயன் படுத்தி ஏவும் போது அவைகள் நிலா மற்றும் சூரிய ஈர்ப்பை பயன் படுத்தி குறைந்த எரிபொருள் செலவில் பயணத்தை மேற் கொள்ள உதவுகின்றன.

இந்த கண்ணுக்கு தெரியாத விண்வெளி பாதையை "Interplanetary Superhighway " என்று அழைக்கிறார்கள்.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


       " இரவு பகல் நடுவே terminator "


34 ) 🔘  "The terminator " என்றால் என்ன என்று கேட்டால் 99 சத ஆட்கள் சொல்லும் பதில் : 'அது அர்னால்டு நடித்த சூப்பர் சயின்ஸ் பிக்ஸன் படம் ' என்பதாக தான் இருக்கும் (அந்த மீதி ஒரு சதம் ஆட்கள் அந்த படத்தை பார்க்காதவர்கள் )

ஆனால் உங்களுக்கு தெரியுமா பூமியில் ஒரு பக்கம் இரவு ஒரு பக்கம் பகல் என எப்போதும் இருக்குமே... அந்த பகல் இரவு என பூமியில் பிரிக்கும் கோட்டிற்கு பெயர் தான் terminator line.

இது ஒரு தெளிவான கோடு அல்ல.. கொஞ்சம் மங்களான கிட்ட தட்ட 60 கிமி அளவு கொண்ட ஒரு தெளிவற்ற கோடு. ஒரு பக்க பூமி உருண்டையில் சூரிய ஒளி நன்றாக பட அடுத்த பக்கத்தில் வளைந்து ஓரளவு ஊடுருவி.. மீதி அணுக முடியாத பகுதியை நாம் இரவு என்கிறோம். அந்த பகலையும் இரவையும் பிரிக்கும் கோடுகள் தான்  terminator line.  இந்த கோடுகள் பருவத்திற்கு ஏற்றார் போல மாற கூடியது. மேலும் எப்போதும் பூமியின் சுழலும் அச்சிற்கு இணையாக இருக்க கூடியது.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

                 "தாயுமானவன்"


35 ) 🔘 "10 மாசம் சுமந்து பாருங்க அப்போ தான் பெண்கள் கஷ்டம் என்னனு புரியும். " பெண்களின் இந்த புகழ் பெற்ற வசனம் ஒரு உயிரினத்துக்கு மட்டும் பொருந்தாது.  அது கடல் குதிரைகள். காரணம் அங்கே கர்ப்பம் சுமப்பது பெண் அல்ல ஆண்.


கடல் குதிரைகள், Syngnathidae எனும் மீன் வகையை சார்ந்தவைகள் . (இவற்றில் pipe fish,  sea dragon என தொடங்கி  300 வகைகள் உள்ளன. )இவைகளில் உள்ள விசித்திரம்...இவைகள் இணை சேரும் நிகழ்வில் ஆன் பெண் இருவரும் வாலை இணைத்து கொண்டு நடனமாடுகின்றன. (கிட்ட தட்ட 8 மணி நேரம் இந்த நடனம் நீடிக்கும்.) நடன முடிவில் பெண் குதிரை ஆணின் வயிற்றில் இருக்கும் ஒரு பை அமைப்பில் முட்டையை இடுகின்றன. (கங்காரு பை மாதிரி ஒரு அமைப்பு கடல் குதிரை ஆண்களுக்கு உண்டு ) .

கருவுறுதல் நிகழ கருமுட்டையுடன் இணைவதற்கு விந்தணுவை அதன் பின் தான் ஆண்கள் வெளியிடுகின்றன. பிறகு கருவுறுதல் நிகழ்ந்து முட்டைகள் உறுதி செய்ய பட்ட பின் அந்த முட்டையை குஞ்சு பொரிக்கும் வரை அடைகாப்பது அதற்கு தேவையான சத்துக்களை வழங்கி அதை பராமரிப்பது எல்லாமே ஆண்கள் தான். கர்ப்ப காலம் சில வாரங்கள் வரை நீடிக்கும். குட்டிகள் பிறக்கும் போது கிட்ட தட்ட சில டஜன் தொடங்கி 2000 ..3000.வரை குட்டிகளை பொரித்து தண்ணீரில் விடும். (இவ்வளவு குட்டிகள் இருக்க வேண்டிய தேவை உள்ளது.  காரணம் ஆயிரக்கணக்கில் பொரித்தாலும் அவற்றில் உயிர் பிழைப்பது வெறும் 0.5 சதம் தான் )


 இன்னோரு விசித்திரமும் இந்த இனத்தில் உள்ளது. பொதுவாக இதர உயிரினங்களில் இணை சேர வலுவான ஆண்கள் போட்டியில் பங்கேற்று தன்னை நிரூபிபார்கள். பென் அந்த வலுவான ஆணை இணை சேர தேர்ந்தெடுக்கும். (காரணம் தனது சந்ததிக்கு வலுவான ஜீன்கள் கடத்த பட வேண்டும் என்பதே.) இங்கே அது தலைகீழாக நடக்கிறது. தனது பையில் முட்டையிட ஆன் கடல் குதிரைகள் , வலுவான பெண் குதிரையை தேர்ந்தெடுகின்றன. ('அட கர்ப்பம் யார் வேணா தரிக்கலாம் பா..ஆனா வலுவான முட்டை வலுவான  பெண்ணால் தானே கொடுக்க முடியும் 'என்பது அந்த க.கு வாதம்.. )

இவ்வளவு தியாகம் செய்யும் ஆண்களுக்கு சின்ன இருண்ட பக்கமும் உண்டு. தான் நினைத்த படி பிடித்த இணை சேர முடியாமல் போனால் ..மனதுக்கு பிடிக்காத அந்த வலு குறைந்த பெண்ணின் முட்டைகளை ஆன் குதிரைகள் சரி வர பாதுகாப்பு கொடுத்து சத்துக்கள் கொடுத்து பராமரிப்பது இல்லை. (சொல்ல போனால் மாறாக அவற்றில் இருந்து சத்துக்களை உறிஞ்சி தனது அடுத்த கருவுறுத்தலுக்கு தன்னை ஊட்ட படுத்தி கொள்கின்றன.) ஏனோ தானோ என்று தனது கடமையை செய்து விட்டு ' ஹ்ம்ம் அடுத்த முறையாவது சரியானதா நல்ல வலுவான பெண் அமையட்டும் என காத்திருக்கின்றன.


எப்படி இருந்தாலும் கர்ப்பம் தரித்த அடை காக்கும் ஆன் கடல் குதிரைகள் "தாயுமானவன் " பட்டத்துக்கு தகுதியானவர்களே.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

"பிரபஞ்சத்தின் அதி குளிர் பிரதேசம்" 


36) 🔘 பிரபஞ்சத்தில் மிக அதிக குளிர் கொண்ட இடத்தின் பெயர் என்ன என்று தெரியுமா ?

அது தான் Boomerang Nebula பூமியில் இருந்து 5000 ஒளியாண்டுகள் தொலைவு கொண்ட இது . Absolute zero என சொல்ல படுகிற வெப்பத்தை விட ஒரு டிகிரி மட்டுமே அதிகம். 

அதாவது absolute zero என்பது -- 273.15 டிகிரி சென்டிகிரேட். பிரபஞ்சத்தில் அண்ட முடியாத குளிர் இதுவே...காரணம்  இந்த குளிரில் அணுக்கள் செயல் படுவதை நிறுத்தி விடும். இயற்கையில் இதைவிட ஒரு டிகிரி மட்டுமே அதிகம் வெப்பம் (--272.15 டிகிரி)  கொண்ட  ஒரு இடம் இது.

ஒரு நட்சத்திரத்தில் இருந்து வரும் வாயுகள் பீய்ச்ச பட்டு அது திடீரென அழுத்தம் குறையும் நிகழ்வு படி.. (அதாவது நமது வீட்டு குளிர் சாதனம் வேலை செய்யும் அதே நுட்பம்...) இவைகள் குளிர்கின்றன.


(மனிதன் செயற்கை முறையில் இதை விட அதிகம் குளிரை எட்டி இருக்கிறான் என்பது வேறு விஷயம்...) 


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

               "ஆயுள் கெட்டி"


37 )🔘 தனிமங்களின் அரை ஆயுள் காலம் என்பது கேள்வி பட்டு இருப்பீங்க.. அதாவது அவைகள் தன்னனில் பாதியாக கரைய எடுத்து கொள்ளும் காலம்.

யுரேனியதின் அரை ஆயுள் காலம் எவ்வளவு தெரியுமா ? 

4.468 பில்லியன் ஆண்டுகள். இது பிரபஞ்சத்தின் ஆயுள் காலத்தில் 3 இல் ஒரு பங்கு காலம். 


"அடேஎப்பா " என நீங்க சொல்வீர்கள் என்றால்.. ஒரு நிமிஷம் அவசர படாதீர்கள். "அங்கே என்ன சத்தம் " என்று ஒரு சத்தம் கேட்கிறது...

அது பிஸ்மதின்( bismuth 209 ) குரல். 

பிஸ்மதின் ஆயுள் காலம் எவ்வளவு தெரியுமா ? இந்த பிரபஞ்சத்தின் ஆயுள் காலத்தை போல 100 கோடி மடங்கு அதிக காலம் . (இப்போ நீங்க தாராளமாக  சொல்லலாம் அடேயப்பா.....! )


(அதே சமயம் பிஸ்மத் ஐசோடோப்பில் சில வெறும் 20 நிமிட அரை ஆயுள் கொண்டவையும் உண்டு...)


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

        " கண்டது கை மண் அளவு  "


38 ) 🔘 உங்களை சுற்றி நீங்கள் கான்பது அனைத்துமே கண்ணுற கூடிய ஒளி அலைவரிசைக்கு உட்பட்ட ஒளியை மட்டும் தான். ஆனால் இது நிஜ ஸ்பெக்டரமில் வெறும் 1 சதம் மட்டும் தான் என்பது உங்களுக்கு தெரியுமா ? அதாவது நீங்கள் காணும் உலகத்தை விட உங்களை சுற்றி நீங்கள் காணாத உலகமே அதிகம் நிறைந்து இருக்கிறது.


மனிதனின் கண்களுக்கு நிறமாலையில் குறிப்பிட்ட அலைவரிசைகுள் இருக்கும் ஒளியை மட்டுமே காணும் திறன் உண்டு. ஒரு தக்காளியை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால் தக்காளி பிரதிபலிக்கும் சிகப்பை உங்கள் கண்கள் காண முடியும் என்பதால் தான் தக்காளியை சிகப்பு நிறம் என்கிறோம்.

ஆனால் ஒளி எனும் மின்காந்த அலை குறுகிய எல்லை கொண்டது இல்லை. உதாரணமாக நம்மை சுற்றி எப்போதும் கண்ணால் காண முடியாத சிகப்பு பரவி இருக்கிறது. அது அகச்சிவப்பு. நீங்கள் காணும் ஒவொரு மனிதரும் அக சிவப்பு நிறத்தை வெளியிட்டு கொண்டு இருக்கிறான். (அதை காணும் கண்கள் இருந்தால் அநேகமாக நிற பேதம் இல்லாமல் இருந்து இருக்கும். 'அட கருப்பு உடம்பு காரன் வெளியிட்டற நிறம் கூட சிகப்பா தான் பா இருக்கு என சமாதானம் அடைந்து இருக்க கூடும் ) அதே போல நம்மை சூழ்ந்து இருக்கும் புற ஊதாவை நாம் காண முடியாது.. x ரேவை காண முடியாது காமா ரே வை காண முடியாது. மைக்ரோ அலைகளை காண முடியாது. காண முடியவில்லை என்றாலும் இவைகளும் ஒளி தான். (இதில் பல ஒளிகள் ஆபத்தானவை சிலது உடம்பில் சூடு தொடங்கி புற்று நோய் வரை வர வழிக்க கூடியது.. சிலது நமது உடல் அணுக்களை கிழித்து கூறு போட கூடியது...) 

380 நேனோ மீட்டர் தொடங்கி 700 நேனோ மீட்டர் வரை உள்ள ஒளியை மட்டும் தான் நாம் காண்கிறோம். நாம் காணும் அனைத்து பொருளும் இந்த அளவுக்குள் உள்ள ஒளியை பிரதிபளிப்பது தான்.. 380 க்கும் கீழ் அழைநீளதில் புறஊதா,x ரே,காமா ரே இருக்கிறது.. 700 நேனோ மீட்டருக்கும் மேல் அகச்சிவப்பு மைக்ரோ வேவ் ரேடியோ அலைகள் உள்ளன.

ஆக நாம் கற்றது கை மண் அளவு னு சொல்ற மாதிரி... இப்படியும் சொல்லலாம்.

"கண்டது கை மண் அளவு .காணாதது உலக அளவு.."


(அதெல்லாம் காணாதது என்பதை விட, 'எப்போதுமே காண முடியாதது ' என்பது தான் உண்மை...! )


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

           "மூளை வேலை.."


39 ) மூளையின் இடது பக்கமும் வலது பக்கமும் ஒரே மாதிரி வேலையை செய்வது இல்லை. அவைகள் தனி தனி வேலையை பங்கு போட்டு கொண்டுள்ளன என்பது தெரியுமா..? சுருக்கமா பார்க்கலாம்.


இடது மூளை வேலை :


வலது பக்க கையை கட்டு படுத்துவது இது தான் .

எழுத்து திறன், 

மொழி அறிவு,

தர்க்க அறிவு, 

அறிவியல் மற்றும் கணிதம் எல்லாம் நாம் புரிந்து கொள்வது இந்த பகுதியால் தான்.

வார்த்தைகளில் புரிந்து கொள்வது..

வரிசை கிரமம் புரிந்து கொள்வது எல்லாமே இடது மூளையின் வேலை தான்.


வலது பக்க மூளை வேலை : 


இடது கையை கட்டு படுத்துகிறது.

உணர்வுகளை கட்டு படுத்துவது 

எச்சரிக்கை திறன், 

கிரியேட்டிவிட்டி,

பரிமாணங்கள் புரிந்து கொள்ளுவது,

கலை இலக்கியம் படைப்பது..

கற்பனை திறன் மற்றும் உள்ளுணர்வுகளை கட்டு படுத்துகிறது.

அப்புறம் அதிகம் பகல் கனவு காண்பவர்கள் பார்த்து இருப்பீங்க அதற்கு காரணம் இந்த பகுதி தான்.


அதாவது ஒருவன் இடது மூளை அதிகம் உபயோகிபவனாக இருந்தால் அவன் சிறந்த சிந்தனைவாதியாக அறிவியல் ஆய்வாளராக இருப்பான். வலது மூளை யை அதிகம் உபயோகிபவனாக இருந்தால் 

சிறந்த கலைஞனாக இருப்பான்.


ஒரே நேரத்தில் நாம் ஒரு பக்க மூளை மட்டும் தனியாக பயன்படுத்துவது இல்லை எந்த செயல் செய்தாலும் இருபக்கமும் சேர்ந்து தான் செய்கிறது என்றாலும் இரண்டுக்கும் சற்று வித்தியாசம் உள்ளது.


சரி இப்போ மூளையைச் ஷார்ப்பா வெச்சிக்க சில சுருக்கமான டிப்ஸ்...


▪️பண்ணதையே திரும்ப திரும்ப பண்ணக்கூடாது முடிந்தளவு எதையும் புதிது புதிதாக செய்ய முயற்சிக்க வேண்டும். (Break your set patterns )

▪️படிக்கும் எழுதும் பழக்கம் மூளையை சக்தி வாய்ந்தவையாக மாற்றும் என்பது நிரூபிக்க பட்ட உண்மை.

▪️சின்னச்சின்ன சவால்களை எப்பொழுதும் எதிர்கொள்வது மூளையை விழிப்பாக வைத்திருக்கும்.

▪️எப்பொழுதும் புதிர்கள் சிக்கல்கள் விடுவிக்க ஆர்வம் கொள்ளுங்கள்.

▪️ அப்புறம் தியானம் மூலமாக மூளைக்கு அவ்வபோது ஓய்வு கொடுக்க வேண்டும்

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

40) Deja reve தெரியுமா 


🔘 Deja vu கேள்வி பட்டு இருப்பீங்க அதாவது ஒரு நிகழ்வை பார்க்கும் போது இது முன்னவே நடந்தது போல இருக்கே என உணர்வது. அப்புறம் jamais vu பற்றி இன்று ஒரு தேடலில் சமீபத்தில் தான் சொல்லி இருந்தேன். அதாவது அடிக்கடி பார்க்கும் ஒன்றை அடையாளம் தெரியாமல் போவது.

இன்றைக்கு இனொன்னு அறிமுகம் செயகிறேன் அதன் பெயர் deja reve .

தேஜா வு எப்படி முன்னவே நிகழ்வில் நடந்த உணர்வு தருகிறதோ... அதுபோல ஒரு நிகழ்வை காணும் பொழுது இது முன்னரே உங்கள் கனவில் நடந்தது போன்று தோன்றினால் அதன் பெயர் தான் deja reve.

இந்த பிரெஞ்சு வார்த்தையின் பொருள் "already dreamed ."


(இன்னும் எத்தனை தேஜாக்கள் உள்ளனவோ தெரியலையே.....)


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


         "Adermatoglyphia"


41 )  🔘பயணத்தில் ஒரு நாள்.....

தற்செயலாக ஒரு மனிதரை சந்திக்கிறீர்கள் பேசி பழகி நண்பராகிறார். பிரியும் சமயம் கை குலுக்கி விடை பெறுகிறீர்கள் அப்போதுதான் .....

அதை கவனிக்கிறீர்கள் என்ன ஒரு விசித்திரம் இந்த மனிதரின் கைகளில் ரேகைகளே இல்லை. உறுதிப்படுத்திக்கொள்ள கையைப்பிடித்து நெருக்கமாக வைத்துப் பார்க்கிறீர்கள் விரல்களில் சுத்தமாக ரேகையே இல்லை வழித்து எடுத்தார் போல உள்ளது. 

"என்னையா இது " நீங்கள் அதிர்ச்சி அடைகிறீர்கள். 

"ஆமாம் சார் எனக்கு கை ல மட்டும் இல்ல கால் ல கூட ரேகை இல்லை சார் " என்கிறார் அவர்..


இப்போ உங்கள் தலை சுற்றுகிறது...இவன் மனிதன் தானா இல்ல ஏலியனா இல்ல புது வகை ரோபோ எதுனாவா ? என நீங்கள் சந்தேகம் கொள்ள கூடும்.

ஆனால் அவன்  Adermatoglyphia எனும் அறிய வகை ஜெனடிக் டிசார்டரால் பாதிக்க பட்டவன் அவ்வளவு தான்.

மிக சில மனிதர்களுக்கு பரம்பரை வழியாக வரும் ஒரு நோய் இது. ஜீன் மியூடியேஷனில் மிக சிலருக்கு கைகளில் ரேகை இல்லாமல் போகும் . அவர்கள் கைரேகை பதிவு மூலம் கண்டு பிடிக்க முடியாதவர்கள்.


(இந்த காலத்துல ஆதார் கார்ட் ரேஷன் கார்ட் னு பல விஷயத்துக்கு சிரம படனுமே பாஸ்.....)


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


42  "முதலை கண்ணீர் "


🔘 போலியாக ஆழுபவர்களைப் பார்த்து முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று கூறுவதை கேள்விப்பட்டிருப்போம்.

காரணம் முதலைகள் உணவு உண்ணும் போது சில நேரம் கண்ணீர் விடும்.( தான் கொல்லும் இறையை நினைத்து கண்ணீர் விடுகிறது என்று மக்கள் கதை கட்டிய காலம் உண்டு )

நீன்ட காலம் ஆய்வாளர்கள் இதை பற்றி ஆராய்ந்தது உண்டு.  George Johnson  என்பவர் ஒரு முதலை கண்ணில் வெங்காயத்தையும் உப்பையும் தேய்த்தார் முதலை கண்ணீர் விட வில்லை. எனவே முதலை கண்ணீர் எனும் சொல்லே தவறு அது ஒரு கட்டு கதை என அறிவிதார்.


 ஆனால் 2006 இல் neurologist D Malcolm Shaner  தலைமையில் ஒரு ஆய்வு குழு 7 முதலையை உலர் நில ஆய்வகத்தில் உணவிட்டு ஆராய்ந்ததில் 7இல் 5 முதலைகள் கண்ணீர் விட்டதை பதிவு செய்ய முடிந்தது .

ஆய்வாளர்கள் இறுதியாக முதலையின் வாயின் அதீத வேகமான அசைவு அதன் முகத்தில் இருக்கும் சில சுரப்பிகளை தூண்டி விட்டு நீர் வடிய செய்கிறது. அதனால்தான் சில நேரங்களில் முதலைகள் உணவு உண்ணும் போது கண்ணீர் வடிப்பதை போல தெரிகிறது என அறிவித்தார்கள்.

மனிதர்களில் அரிதாக  “crocodile tear syndrome” அல்லது Bogorad syndrome என்று உண்டு அந்த மனிதர்கள் உணவு உண்ணும் போது அல்லது நீர் அருந்தும் போது கண்களில் நீர் வழியும்.


அந்த முதலை கண்ணீர் உண்மையில் நல்ல சத்து நிறைந்த நீர் என்பதால் பட்டாம்பூச்சி முதற்கொண்டு பல சிறிய வகை பூச்சிகள் அந்த நீரை வந்து உட்கொள்ளுகின்றன என்பது தான் ஆச்சர்யம்.



▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

43 ) 🔘 ஒரே வினாடியில் உடல் எடை குறைய ஒரு உபாயம் உள்ளது...

நிலாவுக்கு கீழ நில்லுங்க...


நிலா உங்கள் தலைக்கு நேர் மேலே உள்ள நேரங்களில் நீங்கள் உடல் எடை குறைந்து காண படுவீர்கள் என்பது தெரியுமா ? 

நிலா நம்மை மேல் நோக்கி (மேல் கீழ் என்பது ஏது.. நிலாவை நோக்கி னு வச்சிக்குவோம்...) இழுப்பதால் நாம் சற்றே எடை குறைந்து விடுகிறோம். ஆனால் உணராத அளவு அளந்து அறியாத அளவு மிக குறைவாக தான் குறைகிறோம்.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


44 ) 🔘நீங்கள் ஏன் கண்ணுக்கு தெரிகிறீர்கள் ?


நீங்கள் ஒரு ஜன்னல் கண்ணாடியை காண்கிறீர்கள் . கண்ணாடி அங்கே இருக்கிறது. ஆனால் நீங்கள் கண்ணாடியைத் தாண்டி பார்க்க முடிகிறது.

அதாவது ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதாக இருக்கிறது. அதாவது கண்ணாடி உங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை ஆனால் மனிதர்கள் நாம் ஏன் கண்ணுக்கு தெரிகிறோம் ?கண்ணாடி போல transparent ஆக ஏன் நாம் இல்லை...? 


ஒரு அணுவில் எக்க சக்கமாக இருப்பது இடைவெளி தான் என்பது நமக்கு தெரியும் எனவே அதன் வழியாக ஒளி ஊடுருவிச் சென்று விடும் தானே அப்பொழுது நாம் அனைவரும் கண்ணாடி போல கண்ணுக்கு தெரியாதவர்களாக தானே இருக்க வேண்டும் ? நான் கேட்பது புரிகிறதா ??


இல்லையெனில் இதை கவனியுங்கள்...

ஒரு அணுவை ஒரு பெரிய அறை அளவுக்கு பெரிதாக்கினால்... அதன் உட்கரு அதாவது நடுவே இருக்கும் நியூட்ரான் புரோட்டான் கொண்ட பகுதி ஒரு குண்டூசியின் தலை அளவு தான் இருக்கும். மீதி இருக்கும் எக்க சக்க இடத்தில் எலக்ட்ரான்கள் சுத்திக் கொண்டிருக்கும். எனவே இந்த இடைவெளி வழியாக ஒரு ஒளி போட்டான் வரும்பொழுது அது தாராளமாக இந்த அறையை கடந்து அடுத்த பக்கம் சென்று விட முடியும் தானே.போட்டான் நம் கண்ணுக்கு பிரதிபலிக்காமல் கடந்து சென்றுவிட்டால் அதை நாம் பார்க்க முடியாது... அப்புறம் நாம் கண்ணாடி போல் ஆகி விடுவோம் .ஆனால் அப்படி நடப்பதில்லை அது ஏன்?


ஒரு அணுவில் எலக்ட்ரான்கள் ஏனோதானோ என்று சுற்றிக் கொண்டிருப்பது இல்லை மாறாக ஒவ்வொரு எலக்ட்ரான் தனக்கு உரிய ஆற்றல் மட்டத்தில் தான் சுற்றும். அதாவது ஒரு குறிப்பிட்ட தூரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் எலக்ட்ரானுக்கு நீங்கள் ஆற்றலை வழங்கினால் அது இப்பொழுது வேறு ஒரு உயரமான மட்டத்திற்கு சென்று சுற்றத் தொடங்கும். இது எலக்ட்ரானின் குணம். 


இந்நிலையில் ஒரு அணுவை ஒரு போட்டான் கடந்து செல்லும்போது  குறிப்பிட்ட அளவு ஆற்றல் இருந்தால் அந்த எலக்ட்ரானால் ஆற்றல் உறிஞ்ச பட்டு உயர் மட்டத்திற்கு சென்று சுற்ற தொடங்கும். போதிய அளவு ஆற்றல் இல்லை எனில் கடந்து சென்று விடும்.

சிலிக்கா மற்றும் ஆக்ஸிஜன் கலவையால் செய்யப்பட்ட கண்ணாடி ஆனது இதன் எலக்ட்ரான் மட்டம் மிக அதிக இடைவெளி கொண்டு இருக்கும் என்பதால் கண்ணுறு ஒளியால் எலக்ட்ரானை அதற்கு ஆற்றலை கொடுத்து ஒரு மட்டத்தில் இருந்து உயர் மட்டதிற்கு அனுப்ப முடிவது இல்லை.

இதுவே மனிதனின் உடலில் இருக்கும் அணுக்கள் போட்டானை நன்கு உறிஞ்சி உள் வாங்கிக் கொள்கின்றன. என்பதால் மனித உடல் நன்றாக கண்ணுக்கு தெரிகிறது.

இதுவே x ரே நமது உடலில் கண்ணாடியில் கடந்து செல்லும் கண்ணுறு ஒளியைப் போல கடந்து சென்று விடும் என்பதால் எக்ஸ்ரே வைப் பொறுத்தவரை நாம் ஒரு கண்ணாடி தான்.


சரி அடுத்த ஒரு கேள்வி...

அணுக்கள் இவ்வளவு வெற்று வெளியை கொண்டவை என்றால். நாம் ஒரு பொருளை தொடும் போது அப்படியே தொட முடியாமல் பேய் படத்தில் ஆவியை தொட முயலும் மனிதன் போல கை பொருட்கள் வழியாக நழுவ வேண்டும் அல்லவா ? அனுக்கள் இவ்வளவு இடைவேளை கொண்டவை என்றால் நாம் எப்படி தரையில் நிற்க முடியும் அப்படியே கால் அனுவின் இடைவெளியும் தரை அனுவின் இடைவெளியும் ஒன்றாகி உள்ளே புதைந்து போக மாட்டோமா.. ? 

பதில் அடுத்த தேடலில் தருகிறேன்.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

45 ) பொருட்களை எப்படி தொட முடிகிறது ?


 🔘ஒவ்வொரு அணுவிலும் எக்கச்சக்கமாக இடைவெளி தான் உள்ளது என்று நமக்கு தெரியும். அதாவது இந்த பூமியில் உள்ள மொத்த அணுக்களில் உள்ள இடைவெளியை மட்டும் நீக்கிவிட்டால் மொத்த பூமி பந்தை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம் (அந்த மினி பூமி ஒரிஜினல் பூமி அளவு நிறை கொண்டிருக்கும் என்பது இன்னும் ஆச்சர்யம்) அந்த அளவு இடைவெளி நிறைந்தது அணு.

சரி அப்படி என்றால் நாம் ஒரு பொருளை தொடும் பொழுது எப்படி தொட முடிகிறது ? இடைவெளியும் இடைவெளியும் ஒன்றுசேர்ந்து அந்தப் பொருளை தொட முடியாமல் காற்றைப் பிடிப்பது போல கை பொருளை ஊடுருவி செல்லும்படி தானே ஆகி இருக்க வேண்டும் ? ஆனால் நம்மால் பொருட்களை தொட முடிகிறதே எப்படி ?


அதற்கு காரணம் எலக்ட்ரான்கள்.

ஒவ்வொரு அணுவிலும் வெளிப்பகுதியில் எலக்ட்ரான்கள் சுற்றிக் கொண்டிருப்பது நமக்கு தெரியும். எனவே ஒரு பொருள் இன்னொரு பொருளை நெருங்கும் பொழுது இரு எலக்ட்ரான்களும் எதிர் மின்சுமை கொண்டவை என்பதால் ஒன்றையொன்று விலக்கும் .அந்த விலக்கு விசையை தான் நாம் தொடுதல் என்பதாக உணர்கிறோம்.

அணு அளவில் பொருட்கள் ஒன்றை ஒன்று தொட்டு கொள்வதே இல்லை என்பது தான் உண்மை.


எலக்ட்ரான் ஸ்பின் நிலையில் ஒன்றை ஒன்று நெருங்கி விலக்கி இழுத்துக்கொண்டு சுற்ற இவைகளால் முடியும். அல்லது இரண்டு அலைகள் ஒன்று சேர்ந்து பெரிய அலையாவதை போல ஒன்றாக இணையவும் முடியும் அப்படி இணைந்த தொகுப்பை தான் நாம் முழு உடலாக பொருளாக காண்கிறோம்.


எனவே எலக்ட்ரான் இல்லை என்றால் நாம் எந்த பொருளையும் தொடவும் முடியாது பார்க்கவும் முடியாது.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


    "ஒளிர்ந்த சிறுநீர் "


46 )🔘 அறிவியல் கண்டுபிடிப்புகளை பொருத்தவரை எதையோ கண்டு பிடிக்கப் போய் எதையோ கண்டு பிடித்த கதைகள் தான் ஏராளம். குட்டி பிளாக் ஹோல் கண்டு பிடிக்க போய் வைபை யை கண்டு பிடித்த கதையை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் நினைவு இருக்கலாம்.

இன்றைக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்.


 1669 ஆம் ஆண்டு அது. ஒரு

German alchemist அவர் பெயர்  Hennig Brand . தனது ஆய்வகத்தில் 1500 கேலன்  சிறுநீரை பிடித்து வைத்துக் கொண்டு எதையோ ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். 

அவர் பொருட்களை தங்கமாக மாற்றும் ரசவாத கலையில் நம்பிக்கை கொண்டு இருந்தவர். இப்பொழுதும் அவர் சிறுநீரில் தேடிக் கொண்டிருப்பது வேறொன்றுமில்லை தங்கத்தை தான்.


 முதலில் சிறுநீரை அதன் நாற்றம் போகும் வரை வைத்திருந்து காத்திருந்தார். பிறகு அதை கொதிக்க வைத்தார் கொதிக்க வைத்தார் மேலும் கொதிக்க வைத்தார் அவர் ஆய்வகத்தில் உள்ள எரிபொருள் தீரும் வரை கொதிக்க வைத்தார் சிறுநீர் கொதித்து கொதித்து பசை ஆகும் வரை கொதிக்க வைதார். பின் அந்த சிறுநீர் பேஸ்ட்டை மேலும் அதிக வெப்பநிலைக்கு கொதிக்க வைத்தார் அதில் வந்த ஆவியை நீரின் வழியாக கடத்தி பார்த்தார். அப்போது அது நிகழ்ந்தது... 

வெள்ளை நிறதில் மெழுகு போன்ற ஒரு பொருள் ஒளிர்ந்தது.... அது வேற ஒன்னும் இல்ல அவர் எதிர் பார்த்த மாதிரி தங்கமும் இல்ல.. அது தான்" பாஸ்பரஸ்."


உலகத்தில் முதல் முதலில் பாஸ்பரஸ் கண்டு பிடிக்க பட்டது இப்படி தான்.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

47 )       "12 magnitude நில நடுக்கம் பூமியை                            பிளக்குமா ?"


🔘 12 magnitude அளவு நில நடுக்கம் உண்டானால் அது பூமியை இரண்டாக பிளந்து விடும் என்று சொல்வார்கள். அது உண்மையா ? 


நீங்கள் 2012 எனும் ஹாலிவுட் படம் பார்த்து இருப்பீர்கள் அதில் 10.9 ரிக்டர் அளவு பூகம்பம் வந்தால் அது பார்க்க எப்படி இருக்கும் என காட்டி இருப்பார்கள்.


உண்மையில் 10 க்கு மேல் ரிக்டர் அளவு ஏற்பட பூமியில் சாத்தியம் இல்லை என்பதே உண்மை.

நாம் அறிந்த அதிக படியான அளவு 9.5 தான். 

நில நடுக்கம் என்பது பூமியின் டெக்நானிக் பிளேட் நகர்வால் உண்டாவது என்பதால் அந்த பிளேட்டின் எல்லை கோடு நீளத்தை இது சார்ந்து இருக்கிறது. பூமியின் எந்த பிளேட் எல்லை கோடும் 10 magnitude கு அதிகமாக நிலநடுக்கத்தை உண்டு பண்ணும் அளவு போதுமானதாக இல்லை என்பதால் 12 என்பது ஏற்பட எவ்வகையிலும் சாத்தியம் இல்லை. 


ஒரு விஷயம் பொதுவாக இந்த அளவுகள் எல்லாம் நாம் நினைப்பது போல் இல்லை.அதாவது 9 ரிக்டர் அளவு என்பது 8 ரிக்டர் விட ஒரு எண்ணிக்கை தான் அதிகம் எனவே ஓரளவு கொஞ்சம் 8 ஐ விட அதிகமாக இருக்கும் என்று நாம் நினைக்கலாம்..ஆனால் ரிக்டர் அளவு என்பது  ஒரு அளவுக்கும் அடுத்த அளவுக்கும் சக்தி அளவில் 32 மடங்கு அதிக வேறுபாடு இருக்கும் .எனவே 8க்கும் 9 கும் உள்ள சேதார வித்தியாசம் மிக அதிகம் எனவே..10 magnitude என்பதே நினைத்து பார்க்க முடியாத அளவு சேதாரம் கொண்டிருக்கும்.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

48 "குளிர் என்ற ஒன்று இல்லை "


🔘இந்த பிரபஞ்சத்தில் குளிர் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று சொன்னால் ஆச்சரியமாக தான் இருக்கும் ஆனால் இதைப் புரிந்து கொள்வதற்கு முதலில் வெப்பம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 


துகள்கள் ஆற்றலைப் பெற்றிருப்பது தான் வெப்பம். அதாவது எந்த ஒரு பொருளையும் நாம் வெப்பப்படுத்தும் போது அதில் உள்ள அணுக்கள் ஆற்றலைப் பெற்று நடனமாட தொடங்குகின்றன அணுக்களின் இந்த அதிர்வுகள் இயக்க ஆற்றலை பெற்றவை. ஆற்றலை கடத்த தயாராக உள்ளவை. நாம் குளிர் பிரதேசத்தில் குளிரை உணர காரணம் நமது உடலில் அதிர்ந்து கொண்டிருக்கும் துகள்கள் தங்கள் அதிர்வை உடலை சுற்றி உள்ள சுற்று சூழலில் ...காற்றில் அதிர்வு குறைவான துகள்களுக்கு வேகமாக தங்கள் ஆற்றலை வழங்கி விடுவதால் தான்.

அதாவது குளிரை நாம் உணரும் போது...நமது உடலில் துகள்களின் அதிர்வு குறைந்து கொண்டு வருகிறது நம்மை சுற்றி இருக்கும் காற்றில் உள்ள துகள்கள் அந்த ஆற்றலைப் பெற்று முன்பை விட சற்று அதிகம் அதிர தொடங்குகிறது என்று அர்த்தம்.


ஒப்பீட்டளவில் எது அதிகமாக அதிர்வுகளைக் கொண்டு இருக்கிறதோ அது வெப்பம் என்றும் அதிர்வுகள் குறைவாக கொண்டிருப்பதை குளிர் என்றும் நாம் கூறுகிறோம். உதாரணமாக நம் கையை ஒப்பிடும் போது பனி கட்டியின் அணுக்களின் அதிர்வு குறைவாக இருக்கும் எனவே நம் கையை ஒப்பிடும் போது பனிக்கட்டி குளிர் எனலாம் ஆனால் இதுவே திரவ நைட்ரஜனை ஒப்பிட்டால் இப்போ பனிக்கட்டி தான் இங்கே சூடு. காரணம் திரவ நைட்ரஜனில் உள்ள அணுக்களின் அதிர்வு பனிக்கட்டி அணுவை விட மிக குறைவாக இருக்கும். ஆனால் அங்கேயும் அதிர்வு என்பது கொஞ்சமாவது இருக்கவே செய்யும். அணுக்களில் அதிர்வு என்பது இருக்கும் வரை அவைகளுக்குள் வெப்பம் என்பது இருக்கிறது என்பதுதான் பொருள். 

எனவே குளிர் என்பதை எதனுடனும் ஒப்பிட்டாமல் நம்மால் கூறவே முடியாது. குளிர் என்று சொல்லும்பொழுது 'வேறு ஒன்றுடன் ஒப்பிடும்பொழுது குளிர் 'என்று தான் கூற முடிகிறது.

அப்படி சற்றும் அணுக்களில் அதிர்வே இல்லாத... இயக்க ஆற்றலே இல்லாத ஒரு இடம் தான் உண்மையான ஒப்பிடு அற்ற குளிர் என்று நாம் கூற முடியும். அந்த நிலை என்பது தான் abzolute zero என்கிறோம். 


ஆனால் அப்படி ஒரு இடம் பிரபஞ்சத்தில் எங்கேயும் இல்லை. எனவே உண்மையில் பிரபஞ்சத்தில் குளிர் என்ற ஒன்று இல்லை


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

49. சயனைடு எப்படி கொல்கிறது..??


🔘உலகம் முழுக்க தீவிர வாத கும்பல் ஆகட்டும் அல்லது விரைவில் நிமிட நேர மரணம் விரும்பும் யாரும் ஆகட்டும் பயன்படுத்தும் ஒரு மரண கெமிக்கல் சயனைடு தான். 

2 ஆம் உலக போர் நேரத்தில் கூட எதிரியிடம் பிடிபடும் வீரர்கள் இதை பயன் படுத்தி உயிரை விட்டார்கள்.

சயனைடு எப்படி மனிதனை கொல்கிறது ?

நமது உடலில் உள்ள செல்களில் ATP என்கிற ஒரு சமாச்சாரம் உள்ளது. (Adenosine triphosphate) இதை energy currency என்று சொல்லுவார்கள். செல்கள் இயங்க ஆற்றலை சேமிக்க மற்றும் பயன் படுத்த உதவும் மூலம் இது தான் இது உண்டாக வில்லை எனில் எந்த செல்லும் பெட்ரோல் இல்லாத பைக் போல சடாரென வேலை நிறுத்தம் செய்து விடும்.


சயனைடு கொல்லும் விதத்தை பற்றி படிப்பதே திகிலான ஒன்றாக இருக்கும்..சொல்கிறேன் கேளுங்கள்... சயனைடு மனித உடலுக்குள் புகுந்த உடன் அது தொட்ட எல்லா செல்களிலும் ATP உருவாக்கத்தை நிறுத்தி விடும்.( பொதுவாக சைனடின் மூலக்கூறுகள் மிகச் சிறியவை என்பதால் உடலில் அதனால் வெகுவிரைவாக பரவ முடியும்.) எனவே உட்கொண்ட உடன் இப்போ நுரையீரல் தசைகள் வேலை செய்வதை நிறுத்த ...மூச்சு விட முடியாமல் தவிப்போம். அதே சமயம் இதய தசை வேலை நிறுத்தம் செய்ய... 2 நிமிடங்களில் (அதிக பட்சம் 5 நிமிடங்களில் ) உயிர் டாடா காட்டி விடும். 

அந்த சில நிமிடங்கள் கூட அவனால் பேசவோ நிதானமாக சிந்திக்கவோ முடியாது.. முழுமூச்சாக துடிப்பது மட்டுமே அவனால் செய்ய முடிந்த ஒரே செயலாக இருக்கும். 

சயனைடு பற்றி பொதுவாக "வலியில்லாத விரைவான மரணம் "என்ற ஒரு கருத்து உள்ளது ஆனால் அது முற்றிலும் தவறு. அறிவியல் அதை மறுக்கிறது. மாறாக அந்த 2 முதல் 5 நிமிடம் அவன் துளி துளியாக அணு அணு வாக தன் உடலில் நடக்கும் மாற்றத்தை உணர்ந்த படி... சித்திரவதையை அனுபவித்து மிக கொடூரமான ஒரு மரணத்தை அவன் அடைவான் என்கிறது ஆய்வு.


போனஸ் குறிப்பு : சயனைடின் சுவை யாருக்கும் தெரியாது. காரணம் அதை சுவைத்தவர்கள் யாரும் உயிரோடு இல்லை. 

ஒரு விஞ்ஞானி அதன் சுவையை கண்டு பிடித்து சொல்கிறேன் என கூறி உயிரை பணயம் வைத்து முயற்சி செய்து.... 

கூறுவதற்குள் இறந்து போனார். (இத்தனைக்கும் அவர் அந்த நேரத்தில் பேச முடியாது என தெரிந்து ஒவொரு சுவையும் ஒவொரு பேப்பரில் எழுதி அருகில் பரப்பி வைத்து இருந்தார். எந்த சுவையோ அதை சும்மா டிக் அடித்தால் போதும் என ) ஆனால் டிக் அடிக்க கூட முடியாமல் மரணத்தை தழுவி விட்டார் என்பது தான் சோகம்.


இப்போ சொல்ல போவது ஒரு குறிப்பிட தகுந்த இன்னோரு சோகம்... இந்தியாவின் கொச்சியை சார்ந்த Mp பிரசாத் எனும் நகை வியாபாரி (நகை செய்ய சயனைடு பயன்படுகிறது ) திரவத்தில் சயனைடை கரைத்து தனது பேனாவால் கலக்கி இருக்கிறார். பின் மறதியாக விஷம் தோய்ந்த பேனா முனையை வாயில் வைத்து விட்டிருக்கிறார். அந்த துளி சையைடு உடலில் பரவி அவர் உயிரை பறித்து விட்டது. அவர் இறந்து போகும் முன் பின் வரும் குறிப்பை எழுதி இருக்கிறார்.“Doctors, potassium cyanide. I have tasted it. It burns the tongue and tastes acrid.”

ஹிந்துஸ்தான் டைமில் இந்த செய்தி வந்தது.


உலகில் சயனைடின் சுவை பற்றி எழுத பட்ட ஒரே குறிப்பு இதுவே. ஆனால் அவர் கண்டுபிடிப்பு இன்று வரை எங்கேயும் முறையாக அங்கீகரிக்க பட வில்லை.



▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

🔘 50 இறுதி பகுதி ...


இந்த பகுதியில் 21 தேடல் தகவல்கள் ஒன்றாக சுருக்கமாக தருகிறேன். வாருங்கள்...


1🔘பணம் எதால் செய்ய பட்டது என்றால் அனைவரும் பேப்பரில் என்று தான் சொல்வோம். ஆனால் பணம் பருத்தியால் செய்ய பட்டது என்பதே சரியான உண்மை. (75 சதம் பருத்தி 25 சதம் லினன் என்பது )


2🔘 இதை கவனித்து இருக்கீங்களா சும்மா இருக்கும் போது எபோவோம் உங்க நாக்கு முனை உங்கள் வாயில் கீழ் பகுதியில் தங்கி இருப்பது இல்லை மாறாக மேல் பக்கத்தில் ஒட்டிய படியே உள்ளது


3🔘 பிளாக் ஹோல்கள் நட்சத்திரங்களையே சாப்பிட்டு ஏப்பம் விடக்கூடியது என்பதால் பயங்கர சூடாக இருக்கும் என்று நாம் நினைப்போம் ஆனால் உண்மை என்றால் ஒரு ஹோலின் வெப்பநிலை..

0.பக்கத்தில் 13 சைபர் அளவு கெல்வின் அதாவது கிட்ட தட்ட absolute zero (இதற்கு காரணம் அதீத ஈர்ப்பு விசையால் இது வெப்ப கதிர் வீச்சையும் வெளியிடாமல் இருப்பது தான் .


4🔘 ஆய்வாளர்கள் கணக்கு படி 15 நிமிடத்துக்கு ஒரு முறை பிரபஞ்சத்தில் எங்காவது இரு பிளாக் ஹோல்கள் ஒன்றை ஒன்று நெருங்கி கலந்து ஒன்றிணைந்து கொண்டு இருக்கின்றன.


4🔘 கண் தானம் செய்யும் போது முழு கண் மாற்ற படுவது இல்லை.கண்ணில் உள்ள cornia பகுதி மட்டும் தான் மாற்ற படுகிறது. இதர பகுதிகள் மூளையுடன் நேரடி தொடர்பில் உள்ளதால் மாற்ற முடியாது.


5🔘 இருட்டில் கொசு நம்மை  எப்படி கண்டு பிடித்து சரியாக கடிக்கிறது ? 

நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடின் வாசமும் நமது உடலின் வெப்பத்தை உணர்வதின் மூலமும் தான்.


6🔘 விமானங்கள் எப்போதும் ஏன் வெள்ளை நிறத்தில் மட்டுமே உள்ளது ? 

ஒளியை நன்கு எதிரொளிக்கும் நிறம் என்பதால் விமானம் அதிகம் வெப்பத்தை ஏற்காது மேலும் ஆயில் கசிவு மற்றும் விரிசல் இருந்தால் எளிதில் கண்டு பிடிக்க இந்த நிறமே ஏற்றதாக உள்ளது.


7🔘 வியர்வை எதனால் ஆனது ?

உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்க உதவும் வியர்வை பெரும்பான்மை நீர் மற்றும் அதனுடன் சோடியம் பொட்டாசியம் கால்சியம் மக்னீசியம் போன்ற மினரல்கள் உள்ளன. மேலும் லாக்டிக் ஆசிட் மற்றும் யூரியா கூட...


8🔘 மூளையும் இதயமும் இல்லாத உயிரினம் எது : விடை ஜெல்லி மீன்.


9🔘 எறும்புகளால் எதையும் மென்று தின்ன முடியாது.மாறாக அதன் தாடை பக்க வாட்டில் அசைந்து கத்தரி போல்  உணவை கத்தரித்து அதில் உள்ள சாறை உண்கின்றன.


10.🔘ஒருவேளை உங்கள் காரை நீங்கள் விண்வெளி நோக்கி செலுத்தும் படி இருந்தால் இப்போ அது சாதாரணமா போகும் வேகத்தில் போனாலே ஒரு மணி நேரத்தில் செயற்கை கோள் சுற்றும் தூரம் விண்வெளி க்கு சென்று விடலாம்.


11🔘 நமது சூரியனுக்கு பக்கத்தில் இருக்கும் நட்சத்திரம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்கிற விகிதத்தை புரிந்துகொள்ள ஒரு அளவீடு சொல்கிறேன் கேளுங்கள். ஒருவேளை நமது சூரியனை ஒரு இன்ச் சுற்றளவு உள்ள ஒரு குட்டி பந்தாக கற்பனை செய்துகொண்டால் பக்கத்தில் இருக்கும் நட்சத்திரம் என்பது 716 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்.


12🔘 விண்வெளி வீரர்களால் ஏப்பம் விட முடியாது. அதற்கு காரணம் விண்வெளியில் நமது உடலிலுள்ள திரவத்தில் இருந்து வாயுவைப் பிரிக்க  ஈர்ப்புவிசை இல்லை


13🔘 பலருக்கு இது தெரியாது தெர்மாமீட்டரை கண்டுபிடித்தது கலிலியோ.


14🔘 உங்கள் வயிற்றில் உள்ள ஜீரண அமிலம் உங்கள் வயிற்றை அரித்து கரைப்பது இல்லையே ஏன் ?

அதற்கு காரணம் வயிற்றில் உள் சுவரில் உள்ள mucus எனும் படலம் தான்.


15 🔘 நாம் படிக்கட்டுகளில் ஏறும் போது கடினமாக பிரயத்தனப்பட்டு ஏறுவோம் ஆனால் இறங்கும்போது மிக எளிமையாக இறங்குவோம்.

ஆனால் மாடுகள் படிக்கட்டுகளில் ஏற நேரும் பொழுது மிக எளிமையாக ஏறும் இறங்கும் பொழுது மிகவும் கடின பிரயத்தனப்பட்டு இறங்கும்.


16 🔘 கடலில் உள்ள மொத்த உப்பை காய்ச்சி எடுத்தால் அனைத்து கண்டங்களையும் 500 அடி உயரம் வரை உப்பால் மூடலாம்.


17.🔘புற்று நோயாளிகள் முடியை இழப்பதை பார்த்து இருப்பீர்கள் ஆனால் அவர்கள் மீண்டும் முடி முளைக்கும் போது அது வரை இல்லாத நிறம் அல்லது இல்லாத சுருள் முடி இல்லாத நேர் முடி என டிசைன் மாறி வரும் என்பது தெரியுமா ? 


18.🔘 ஒரு பொருள் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து தப்பிச் செல்ல அதன் விடுபடு திசைவேகம் (escape velocity ) ஐ தாண்ட வேண்டும் என்று கேள்வி பட்டு இருப்பீர்கள். பூமியின் எஸ்கேப் வேலாசிடி என்பது எவ்வளவு வேகம் தெரியுமா ? அது கிட்ட தட்ட ஒரு நிமிடத்தில் நீங்கள் பெங்களூரில் இருந்து கன்னியாகுமரியை எட்டும் அளவு வேகம். 


19.🔘Stegosaurus வகை டைனசோர்.. 30 அடி நீளம் கொண்ட 7 டன் எடை கொண்ட உயிரினம் .ஆனால் ஆய்வு படி அதன் மூளை ஒரு அக்ரூட் அளவு மட்டுமே இருந்துள்ளது.


20.🔘 உடலில் எங்கே அடிபட்டாலும் நமக்கு வலி உணர்வை மூளை தருகிறது ஆனால் மூளைக்கு வலி உணரும் திறன் இல்லை. மூளையில் ஒருவனுக்கு அடி பட்டாலோ அல்லது ஒரு பகுதி மூளையை வெட்டியே எடுத்தாலோ கூட அவனால் வலியை உணர முடியாது.


🔘 ஆக்டொபஸ் 3 இதயமும் நீல நிற ரத்தமும் 9 மூளையும் கொண்டது. ஒரு மைய கட்டுப்பாட்டு மூளை ஒன்று இருக்க.. 8 கரங்களிலும் 8  இதர சிறு மூளைகள் உள்ளன.



இன்று ஒரு தேடல் பகுதி பிடித்து இருந்ததால் உங்கள் கருத்துகளுக்கு 


வாட்ஸ் அப் எண் : 9841069466


தேடல் தகவல்களை தினம் பெற ' தேடலில் திடல் " எனும் fb closed group இல் இணையுங்கள்.


அன்பு நண்பன், தேடலின் தோழன்

🌏ரா.பிரபு ✍️










Comments

  1. Thank you for your service ☺️

    ReplyDelete
  2. நீங்கள் தொடர்ந்து ‌இது போன்ற புது புது தகவல்களை போட வேண்டும். நான் தினமும் உங்கள் வலைப்பக்கத்தை பார்த்து கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  3. உங்கள் வட்ஸ்அப் குழுவில் இணைவது எப்படி?

    ReplyDelete
    Replies
    1. எனது வாட்ஸ் அப் நம்பர் 9841069466

      Delete
  4. Replies
    1. எனது வாட்ஸ் அப் நம்பர் 9841069466 வேண்டிய நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம்

      Delete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"