"ஜல்லிக்கட்டும் பீட்டாவும்" நம்மை சுற்றி ஒரு மாய வலை( பகுதி 1)







"ஜல்லிக்கட்டும் பீட்டாவும்" (பகுதி 1)

நம்மை சுற்றி ஒரு மாய வலை

(கருத்தும் எழுத்தும் : ரா .பிரபு)

ஜல்லிக்கட்டு தடையும் ...
அதன் பின்னால் இருக்கும் அரசியலும் நம்மை சுற்றி பின்னப்பட்டு வரும் நம் கண்ணுக்கு தெரியாத மாய சதி வலையும் அதன் பின்னணியும் நாம் கண்டிபாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

நம் நாட்டின் பாரம்பரியத்தின் மிக பெரிய அடையாளமான ஜல்லிக்கட்டை தடை செய்வதில் அதை முற்றிலும் அழித்து ஒழிப்பதில் சில பேரால் காட்ட படும் தீவிரம் ....மும்பரம்.... அந்த ஆர்வம்...உங்களை ஆச்சர்ய படுத்தி இருக்கலாம்...

ஆனால்...

ஜல்லி கட்டை அழிக்க நினைக்கும் நம் கண்ணுக்கு தெரியாத  எதிரிகளும்.... அவர்களது விபரீத நோக்கமும்... அதனால் அவர்கள் அடையபோகும் லாபமும் நாம் நினைப்பதற்கு அப்பாற் பட்டு மிக பெரியது
நமது எதிரிகளின் எண்ணிக்கையும் அவர்களது வலிமையையும் கூட நாம் நினைப்பதை விடவும் மிக பெரியது.

வெறும் விலங்குகளின் நலனுக்காக பாடுபடும் ஒரு அற செயல் இது அல்ல என்பதை புரிந்து கொள்ள அதிக அறிவு தேவை இல்லை ..

உதாரணமாக ராணுவம் முதல் குதிரை பந்தயம் வரை குதிரைகளை வதைப்பது (குள்ளமாக வளர்ந்து விட்டாலோ நோய் வந்து விட்டாலோ சுட்டு விடுவது)
யானைகளை பயன்படுத்துவது.....
ஒட்டகங்களை பயன் படுத்துவது .....
நாயை கட்டிவைத்து வளர்ப்பது.....
அவ்வளவு ஏன் மாடுகளை இறைச்சிக்காக ஆயிரக்கணக்கான மாடுகள் வதைக்க படுவது (உலக அளவில் இந்தியா வின் ஏற்று மதி மிக பெரிது பிங்க் ரெவலுஷன் என்பதை பற்றி படித்து பாருங்கள் )

இது எல்லாம் நடந்து கொண்டு இருக்கும் இந்த நாட்டில் தான் வருடம் ஒரே ஒரு முறை நடக்கும் ஜல்லி கட்டில் மாடு வதை படுவதாக இவர்கள் சொல்கிறார்கள் இது யாருக்கும் ஏற்புடையாதாக இருக்க வாய்ப்பில்லை.
 இதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் நோக்கம் வேறுவிதமானது என்பது "உள்ளங்கை நெல்லிக்கனி ......"

நம் கண்ணுக்கு தெரிவது பீட்டா என்ற ஒற்றை அமைப்பு மட்டும் தான் என்றாலும் அவன் வெறும் ஒரு கைப்பாவை...ஒரு கருவி மட்டும் தான் என்பது தான் உண்மை.

அவனை பின்னால் இருந்து இயக்கும் மகா சதியாளர்கள்.... அவர்கள் நோக்கங்கள் இவற்றை பற்றி தெரிந்து கொள்ளும் முன் இந்த பீட்டா யார் அவன் பின்னணி என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

1980 இல் "people for ethical treatment of animal " என்ற இந்த PETA நிறுவனம் தன்னை அமெரிக்காவில் அனாதையாக இருக்கும் விலங்குகளை பாதுகாக்கும் அமைப்பாக அடையாள படுத்தி கொண்டது..

இதன் வேலை தினம் வரும் 1000 கணக்கான தொலைபேசி அழைப்பு படி தகவல் கிடைத்த இடத்தில சென்று நாய் பூனை போன்ற அனாதை விலங்குகளை கொண்டு வந்து வைத்து கொல்வது ... ஆம் எழுத்து பிழையாக எழுத வில்லை வைத்து "கொல்வது" என்று தான் எழுதினேன்.

15 நாள் வரை தான் ஒரு நாயை பராமரிக்கும் பீட்டா அதற்குள் அந்த நாய்க்கு யாரும் சொந்தம் கொண்டாட வில்லை எனில் அதை கொன்று விடும்.
இப்படி 2015 இல் பீட்டா கொன்ற விலங்குகளின் எண்ணிக்கை மொத்தம் 35000 .

இப்படி விலங்குகளின் காவலன் என்ற பெயரில் விலங்குகளை காவு வாங்கி கொண்டு திரிந்த மொக்கை நிறுவனம் கால போக்கில் பணம் பண்ணுவதற்கு வேறு சில வழிமுறையை கண்டு பிடித்தது.

உதாரணமாக அமெரிக்காவில் வளர்ப்பு பிராணியின் விற்பனை என்கிற வர்த்தகம் பல கோடி யில் லாபம் ஈட்டும் ஒரு சந்தை ஆனால் அந்த நிறுவனத்திற்கு மிக பெரிய தடையாய் இருப்பது இந்த அனாதை விலங்குகள் தான்.(ஒரு நிறுவனர் உங்களிடம் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு நாயை விற்க வருகிறார் நாய் பிரியர் நீங்கள் என்பதால் வாங்க நினைக்கிறீர்கள் ஆனால் அவரை சந்திக்கும் வழியில் ஒரு அநாதை நாயை பார்க்கிறீர்கள் அதையே வளர்த்தால் போதுமே என்று நினைக்கிறீர்கள்..... இப்போ அவர் நாய் பிசினஸ் என்ன ஆவது?)

எனவே ஆண்டு தோறும் இந்த நிறுவனங்கள் பீட்டவுக்கு கோடி கணக்கில் கொடுத்து வருகிறது எதற்கு தெரியுமா ... விலங்குகளை பிடித்து கொண்டு போய் கொல்வதற்கு.

அடுத்ததாக இந்த பீட்டா உலகம் முழுவதும் செய்து வரும் ஒரு வியாபார யுக்தியை பற்றி சொல்கிறேன்..
நம் நாட்டில் ஜல்லி கட்டு போல இன்னும் பிற நாடுகளில் கோழி சண்டையோ குதிரை போட்டியோ நடக்கும் இடத்தில  சென்று அங்கு அதை தடை செய்ய சொல்லி போராடும் .. பிறகு அதை அந்த போராட்டத்தை அவர்கள் தடை செய்ததை .... இணையதள வாயிலாக விளம்பரம் செய்யும் ..இப்படி பட்ட நற்செயலை செய்யும் எங்களுக்கு உதவிடுங்கள் என்ற வகையில் அது விளம்பரம் செய்யும். இதற்கு உலகம் எல்லாம் இருந்து அதற்கு மில்லியன் கணக்கில் டாலர்கள் குவியும் .. பிறகு இது வேறு நாட்டிற்கு இதே வேலையை செய்ய கிளம்பி விடும்.

இந்த தகவலை சொன்னது தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு பீட்டா அமைப்பாளராக இருந்து இப்போது விலகி விட்ட முரளிதரன் என்கிற ஒருவர்.

எனவே இப்படி பட்ட கைக்கூலி நிறுவனம் பணத்திற்காக யாருக்கும் கைகூலியாக செயல் படுவதில் ஆச்சர்ய படுவதற்கு ஒன்றும் இல்லை..

இனி நம் எதிரிகளை பற்றி பார்ப்போம்
நாம் நினைப்பதை போல விலங்கு நல ஆர்வலர்கள் மட்டுமே நமது எதிரிகள் அல்ல ஜல்லிக்கட்டு தடையின் முக்கிய நோக்கம் மாடுகளை வதை படாமல் காப்பதுஅல்ல மாறாக அதை அடியோடு அழிப்பது.

இதற்கு பின்னணியில் வெளிநாட்டில் ஜெர்சி ..பிரெசியன் அமைப்பாளர்கள் தொடங்கி டிராக்டர் கம்பனி காரர்கள் ..
Animal well fair institute..
Blue cross...
P.F.C.A....
P.C.A.....
PETA......
Humans for animal society..
இப்படி நிறைய நிறுவனங்களின் ரகசிய கை இருக்கிறது.

இந்த விலங்கு நல வாரியத்தில் உள்ள ஒரு சின்ன உள் அரசியலை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்..
அதில் குறிப்பாக விளையாடும் இரண்டு நபர்களின் பெயர்களை குறிப்பிடுவதில் எனக்கு தயக்கம் இல்லை ஒன்று சின்னி கிருஷ்ணா .. மற்றவர் மேனகா காந்தி...
இதில் "அனிமல் வெல் பேர் ஆப் இந்தியா" வின் வைஸ் சேர்மேன் இந்த சின்னி கிருஷ்ணா .
அதே சமயம் அந்த அமைப்பின் ட்ரஸ்டி.. மேனகா காந்தி .

அப்படியே இங்கே வந்தால் ப்ளு கிராசின் சேர் மேன் அந்த சின்னி கிருஷ்ணா
பீபுல் ஃபார் அணிமலின் சேர்மேன் மேனகா காந்தி .. (இபோது அவரது பினாமி...)

மேலே சொன்ன அனிமல் வெல் ஃபேர்...
ப்ளூ கிராஸ்....
ஹுமன்ஸ்  பார் அனிமல்....
இப்படி பல அமைப்புகளும்,
"federation of India animal protection " என்ற அமைப்பின் கீழ் இயங்கி வருபவை ...
இந்த அமைப்பு யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்றால் அந்த சின்னி கிருஷ்ணா வின் கீழ் தான்.

முறைப்படி எலெக்ஷன் வைக்க படாமல் தொடர்ந்து அந்த பதவியில் நீடித்திருக்கும் அந்த நபர் மீதும் மேனகா காந்தி மீதும் ஒரு ஊழல் குற்ற சாட்டு உள்ளது ..
அதாவது இவர்கள் அமைபிற்கு பல பன்னாட்டு அமைப்பும் மத்திய அரசும் பல கோடி கணக்கில் தொகை ஒதுக்கி வருகிறது அதை இவர்கள் முறைப்படி ஒரு 300 இயக்கங்களுக்கு பிரித்து தர வேண்டும் ஆனால் இவர்கள் அந்த ஒதுக்கிய தொகையை பத்துக்கிய வேலையை செய்து கொண்டு உள்ளார்கள் என்பது தான் இவர்கள் மேல் உள்ள குற்றசாட்டு.

ஜல்லிக்கட்டில் தடை விதிக்கும் பீடாவிற்கு பின்னணியில் இருந்து உதவுவதில் முக்கிய பங்கு நம்நாட்டில் இந்த விலங்கு நல வாரியத்திற்கு உண்டு.

கோசாலா என்ற ஒரு அமைப்பு ..அதன் வேலை தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளை பராமரிப்பது ஆனால் அது இபோது செய்துவருவது என்ன வென்றால் தனது அமைப்பு மூலம் மாடுகளை கவர்ந்து கொண்டு வந்து அடி மாடுகளுக்கு அனுப்பும் நிறுவனங்களுக்கு "பணம் கொடுத்தால் கொடுக்கிறேன்" என்று நிபந்தனை யோடு மாட்டை விற்பது.

அதாவது வெளிநாட்டில் பீட்டா பணம் சம்பாதிக்க வைத்திருக்கும் பிரத்தியேக வழிமுறை போல இது இவர்களது பிரத்தியேக வழிமுறை.
இந்த கோசாலா எதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது என்றால் நான் முன் சொன்ன அந்த விலங்கு நல வாரியத்தின் கீழ் தான்.
மேலும் இந்த வாரியத்தின் முக்கிய வேலை தன்னை விலங்குகள் காவலராக காட்டி கொண்டு மக்களின் நன்கொடைகளை பெறுவது..

இது உள்நாட்டில் நம்மை சுற்றி நடக்கும் வலை..
இப்போது அடுத்த பகுதிக்கு செல்கிறேன்..

இந்த பீட்டாவுடன் சேர்ந்து ஜல்லிக்கட்டு எதிர்த்து உச்ச நீதி மன்றத்துக்கு சென்ற விலங்கு நல வாரியத்தின் எண்ணிக்கை மொத்தம் 7 .
இவர்களுக்கு இதற்கெல்லாம் பண உதவி செய்வது யார் ?

இப்போது தான் ...இங்கு தான்..நமது எதிரியின் கைகள் வெளிநாடு வரை நீளுகிறது.

மேற்சொன்ன அமைப்பிற்கு பண உதவி செய்து வருவது சில வெளிநாட்டு கம்பெனிகள் அவர்கள் யார் தெரியுமா அவர்கள் தான் ஜெர்சி ...ஃபெர்சியன்... போன்ற மாடுகளின் நிறுவனத்தை நடத்தி வருபவர்கள்.

ஆம் நம் நாட்டை போல அங்கு மாடுகள் தனிப்பட்ட விவசாயிகள் பொறுப்பில் இருப்பது இல்லை அவற்றை பணக்கார நிறுவங்கள் அபகரித்து தனக்கு சொந்தமாக ஆக்கி வைத்துள்ளனர் அவர்களின் முக்கியமானவர்கள்

"பெர்சியன் இண்டெர்நேஷ்னல்"

மற்றும் " ஜெர்சி கார்ப்பரேஷன் "

இவர்கள் மாடுகளை வைத்து செய்யும் வேலை என்ன தெரியுமா அவற்றை ஆராய்ச்சி செய்து ராசாயணங்களை புகுத்தி மாடுகளை 30 லிட்டர் 35 லிட்டர் பால் கறக்கும் ஒரு இயந்திரமாக மாற்றுவது .
 நிஜமாகவே அவர்கள் மாடுகளை ஒரு இயந்திரமாக தான் பார்க்கிறார்கள்
மாடுகளை சகோதரனாக பார்க்கும் நம் நாட்டு மக்கள் சில இடங்களில் மாடுகள் நடத்த படுவதை பார்த்தால் ரத்த கண்ணீர் விடுவது உறுதி.

இந்த ஜெர்சி கறக்கும் பால் வகை A1 என்றும் நம் நாட்டு மாடுகள் பால் வகை A2 என்றும் அழைக்க படுகிறது ..
இதில் நம் நாட்டின் பாலில் உள்ள சத்துகளோ நம் நாட்டின் கோமியம் மற்றும் சாணத்தில் உள்ள கிருமிநாசினி தன்மையோ அந்த A 1 மாடுகளில் இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்.....

கண்டதை மேய்ந்து... கொண்டதை தின்று வளரும் நம் நாட்டு மாடுகளை போல அந்த மாடுகளை வளர்க்க முடியாது அது விலையுயர்ந்த நாயை வளர்ப்பதை போல தான் அந்த மாடுகளை வளர்க்க வேண்டும்..
அவற்றிற்கு குளிர்பதன அமைப்பு வேண்டும் அவைகள் சாதாரணமாக புல் மேய்ந்தால் போதுமானது அல்ல அவற்றிற்கு பிரத்தியேக தீவனம் வேண்டும் ... அவ்வபோது மருந்துகள் கொடுக்க வேண்டும்..
இந்த தீவனம் ... மருந்துகள்... இவற்றை விற்கும் சந்தைகள் இவையெல்லாம் யாரிடம் இருக்கிறது என்றால் மேலே சொன்ன அந்த நிறுவனங்கள் இடம் தான் .

நம் நாட்டில் விவசாயின் பொறுப்பில் சும்மா திரிந்து கொண்டு எந்த பிரித்தியேக பராமரிப்பும் தேவை படாத ஊக்க மருந்து ... பிரத்தியேக தீவனம் ... குளிர் பதன வசதி ஏதும் தேவை படாத மிக சாதாரண ஒரு உயிரினமாக திரியும் நம் நாட்டு மாடுகள் நமக்கு கொடுக்கும் பால் மற்றும் அதன் சம்பந்தமான வியாபார சந்தை இருக்கிறதே ... அது வெளிநாட்டு நிறுவங்கள் வாய் பிளக்கும் அளவு 1 லட்சம் கோடி...
இவ்வளவு உற்பத்தி சந்தையை கொடுப்பதில் 85 சதம் பங்களிப்பு  விவசாயிகள் உடையது.

இந்த மொத்த சந்தையை அவன் அபகரித்து அவன் ஜெர்சி பசுவை நம் தலையில் கட்டி அவன் பால் பொருட்களுக்கு.. அவனது ஜெர்சி பசுவிற்கு... அதற்கான விந்து ஊசிகளுக்கு அதற்கான மருந்துகளுக்கு அதற்கான ராசயன தீவனதிற்கு....நாம் அவனை கையேந்தி நிற்க வைப்பது நமது லட்சம் கோடி சந்தையை அவன் அபகரிப்பது என்கிற இந்த திட்டம் இருக்கிறதே... அது... நம் நாட்டில் நம் உடன் பிறவா தோழனாக சகோதரனாக ...குடும்பதில் ஒருதனாக வாழ்ந்து வரும் உயிரினம் இந்த நாட்டு மாடு இருக்கும் வரை வெளிநாட்டு சதியாளர்களுக்கு சாத்தியம் இல்லை .

நம் நாட்டு பால் இருக்க அவன் தரும் A1 வகை பால் என்பது வள்ளுவர் சொன்ன " கணி இருக்க காய் கவர்தல் " கதை தான் என்பதால் அவனது மொத்த குறி நமது மாடுகள் மேல் தான்...

ஆமாம் .....அவனுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது பசு மாடு தானே அப்படி இருக்க அவன் நம் காளை மாடு மேல் குறிவைப்பது ஏன்.?

உங்களுக்கு கோவில் மாடு பற்றி தெரிந்திருக்கலாம் ஊருக்குள் 200 அல்லது 300 பசு மாடுகள் இருக்கலாம் அவைகள் எல்லாவற்றிக்கும் இணவிருத்திக்கு அந்த ஒரு கோவில் மாடு போதும்..

இப்போது கோவில் மாடு வழிமுறை சற்று அழிந்து விட்ட நிலையில் அந்த நற்பணியை செய்வது நமது ஜல்லி கட்டு முரட்டு காளைகள் தான் அதனால் தான் அவைகள் காய் அடிக்காமல் வைக்க பட்டு இருக்கும் ..
( சிலர் சொல்வதை போல் நாம் மாட்டை வைத்து காட்டு மிராண்டி விளையாட்டு விளையாடுவது உண்மை என்றால் நாம் அனைத்தையும் காய் அடித்து பயன் படுத்தி இருப்போம் காரணம் உங்களுக்கு தெரியும் காய் அடிக்க பட்ட காளை மற்ற காளை களை விட அதிக புஷ்டியாக அதிக ஆக்ரோஷமாகஎ இருக்கும் . ஆனால் நமது நோக்கம் அது அல்ல..)

 எனவே இந்த காளை மாடுகளை தடம் தெரியாமல் அழித்து விட்டால் போதும் 3 யிலிருந்து 5 ஆண்டுகள் போதும் பசு இனத்தை அழிக்க .

இந்த மகா சூழ்ச்சிக்கு தான் ஜல்லிகட்டை அழிக்க துடிக்கிறார்கள் . உங்களுக்கு தெரிந்திருக்கும் ஜல்லி கட்டு காளைகள் ஜல்லிக்கட்டு முற்றிலும் அழிந்து விட்டால் அதை வைத்து விவசாயிக்கு பயன் இல்லை அதன் பின் அந்த காளைகள் அந்த ஏழைகளுக்கு நஷ்டமே.
அதன் பின் அவைகளை அடிமாட்டுக்கு அனுப்புவது தான் ஒரே வழி.
இப்படி பட்ட சாதியை செய்யும் சதியாளர்களின் கைப்பாவை தான் பீட்டா எனும் கூலி நிறுவனம் .

ஏற்கனவே எனது "நீங்கள் சிந்திப்பது உங்கள் சிந்தனையா" என்ற கட்டுரையில் ஒரு விஷயம் சொல்லி இருப்பேன் அதாவது நமக்கு பழக்கமே இல்லாத நாம் துளியும் விரும்பாத சிகரெட் ...கோக் பெப்சி " முதலிய பொருட்களை நம்மிடையே வியாபாரமாக்கி ... நம்மை அதற்கு அடிமையாக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் நாம் பெரிதும் மதிக்கும் நட்சத்திரங்களை பயன் படுத்தினார்கள் என்று .

அதே வேலையை தான் பீட்டா இன்று செய்கிறது நட்சத்திரங்கள் ... அது க்ரிக்கெட்டோ அல்லது திரைப்படமோ .. அதில் உள்ள உச்ச நட்சத்திரங்களை பார்த்து அவர்களுக்கு "சிறந்த மனிதன் " அவார்ட் கொடுக்கிறது . நல்லவர்கள் நாலு பேர் சொன்னால் அவர்கள் குரல் கேட்காமல் போகலாம் நட்சத்திரம் சொன்னால் கேட்காமல் போகுமா.. ?
அதனால் தான் கலாச்சாரத்தை '"கட்டிகாப்பாற்றி"வளர்க்கும் நடிகைகள் நம்மை பார்த்து காட்டுமிராண்டி கலாச்சாரம் என்கிறார்கள்...

கடைசியாக..

நமக்கு எதிரிகள் ஒன்று இரண்டு அல்ல .. டிராக்டர் கம்பெனி தொடங்கி ..நமக்கு வெளிநாட்டில் இருந்து மருந்து விற்பவன் ... மாடு விற்பவன் என்று நம் கலாச்சாரத்தை ... ஜல்லிக்கட்டை ... நமது சகோதரன் காளையனை அழிக்க துடிப்பவர்கள் ஏராளம் அதில் உள்நாட்டு சில நிறுவன சதிகளும் தாராளம்.

இருந்தாலும் ......

என்னை ஒருவன் கைநீட்டி அடிக்கும் வரை எனது வலிமை அவனுக்கு தெரியாது .... எனக்கும் தெரியாது....
பீட்டாவிற்கு நாம் நன்றி கடன் பட்டிருக்கின்றோம்... நமது வலிமையை தமிழனின் ஒற்றுமையை எந்த அரசியல் தலைவர்களும் வெளிக்கொண்டு வந்து காட்ட முடியாத சூழலில் அதற்கு வாய்ப்பு உண்டு பண்ணி இருக்கிறான் பீட்டா...

நாகரிகம் இல்லாதவன்.... காட்டுமிராண்டி....
 நடிகர்கள் மோகத்தில் சுற்றுபவன்... என்றெல்லாம் தமிழர்கள் பற்றி நேற்று வரை பேசி வந்து இருக்கலாம் ... இன்று நிலைமை மாறி இருக்கிறது.
எந்த தலைமையும் ஒருங்கிணைக்காமல் .. எவர் காசு கொடுத்ததும் அழைக்காமல் வெறும் பொழுது போக்கு வீண் சாதனம் என்று சில பேரால் விமர்சிக்க படும் "முகநூல்" மற்றும் "பகிறியின் " யின் வாயிலாக உணர்வில் ஒன்றிணைந்து மெரினா வில் இன்னொரு கடலாக கிட்ட தட்ட 20000 பேர் திரண்ட தமிழ் இளைஞனின் கூட்டத்தை பார்த்து மிரண்டு போன அரசியல் தலைவர்கள் பல பேர்.
காரணம் கூட்டத்தை சேர்ப்பது என்பது எவ்வளவு கடினமான ஒன்று என்பதை அரசியல்வாதி நன்கு அறிவான்.
தன் நாட்டின் கலாச்சாரத்திற்கு ஆபத்து எனும் போது ஓங்கி ஒலிக்க வேண்டிய முதல் குரல் ஆட்சியாளர் உடையது .... அரசியல் வாதி உடையது....
ஆனால் அதை வேலை தேடி கொண்டு...
காதல் பண்ணி கொண்டு.... ஊர் சுற்றி கொண்டு இருக்கும் நமது இளைஞன் ஒன்று சேர்ந்து இன்று செய்திருக்கிறான்.
மெரினாவில் பற்றிய தமிழ் உணர்வு எனும் தீ ...உடனே மதுரை கோவை திருச்சி.... என மள மள வென காட்டு தீயாக பற்றி படர்கிறது....
பெண்கள் கல்லூரியில் கூட அது கொழுந்து விட்டு படர்ந்து செல்வது பார்க்க முடிகிறது....
அந்த காலத்தில் முதல் முதலில் நமது பண்பாட்டில் .. நமது நாகரிகத்தில் நாம் அடிமையாக்க பட்ட போது உண்மையில் நாம் படிப்பறிவு இல்லாத காட்டு மிராண்டியாகதான் இருந்தோம். அப்படி சில பேரால் நாம் வைக்க பட்டிருந்தோம்.
ஆனால் இன்று நாம் அப்படி அல்ல ..உலகை சுருக்கி தன் கைபிடிக்குள் வைத்திருக்கும்
கூகுளை நிர்வகிக்கும் தலைமை நிர்வாகி என்ன மொழி பேச கூடியவன் என்பது உலகுக்கே தெரியும்..

தீ ... ...
இபோது தான் பிடித்திருக்கிறது...
அது எங்கே பரவும் எப்படி எரிக்கும் ....
தன்னை ...தன் கலாச்சாரத்தை தொட்டவனை என்னவெல்லாம் செய்யும் என்பதை ...
பொறுத்திருந்து பார்ப்போம்...

நன்றி....

அன்பு நண்பன் : ரா.பிரபு

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"