" Parallel univerce: இணை பிரபஞ்சம்"



" Parallel univerce: இணை பிரபஞ்சம்"

(கருத்தும் எழுத்தும் : ரா.பிரபு)

நீங்கள் கண்ணால் காண கூடிய ..உணரக்கூடிய ,இந்த உலகம் அது நீங்கள் உணர்ந்த அளவு நீங்கள் புரிந்து கொண்ட படிதான் உண்மையில் இருக்கிறதா..எனது ஐன்ஸ்டைன் கட்டுரையின் முதல் பாகத்தில் சொன்னதை போல நம்மால் உணர கூடிய அளவில் மட்டும் தான் இந்த உலகை நாம் புரிந்து கொள்கிறோம் ஆனால் உண்மை என்பது எப்படி இருக்கும் என யாராலும் சரியாக சொல்ல முடியாது...

உதாரணமாக ஒரு வெற்று அறையில் நீங்கள் எதையும் காண முடியாது ஆனால் உங்களை சுற்றி இந்த கணத்தில் உள்ளது அது நீங்கள் பார்க்கும் வண்ணம் தான் உண்மையில் உள்ளதா...ஒரு பேச்சுக்கு உங்களுக்கு ரேடியோ ..டிவி மற்றும் செல்போன்களுக்கு உள்ளதை போன்ற எலெக்ட்ரோ மேக்னடிகை உள்வாங்கும் சென்சார் இருந்தால்.....மேலும் அவற்றை மீண்டும் ஒளி ஒலி யாக மாற்றும் தொழிநுட்பம் உங்கள் உடலிலேயே இருந்தால் நீங்கள் காலி அறையாக பார்ப்பது இப்போது பல வித ஒளி பரப்புகள் தொலைபேசி பேச்சுக்கள் லட்சக்கணக்கான விஷயங்கள் நிறைந்த ஒரு டிராபிக் ஆக  பார்ப்பீர்கள்.

அப்படி நம்மால் காண முடியாத உணர முடியாத பல பரிமாணங்கள் ..(உதாரணமாக மீஒலி... காஸ்மா கதிர் ..nutrino துகள் ..) இப்படி பல விஷயங்களை கொண்டது தான் நமது பிரபஞ்சம் இப்படி நம் கூடவே நம்மால் உணர முடியாத படி ஒரு மொத்த பிரபஞ்சமே இருக்கிறது...அதில் இங்கே நாம் பார்க்கும் மொத்த பொருளும் ...நீங்கள் நான் நீங்கள் வளர்க்கும் நாய்...எல்லாவற்றிற்கும் ஒரு காப்பி இருக்கிறது என்ற ஒரு கான்செப்ட் தான் அந்த இணை பிரபஞ்சம்.

நம்மால் காண முடியாத பல சக்திகளை நாம் உணரவாவது முடிகிறது.எலெக்ட்ரா மேக்னட் அலை இருப்பதை யாரும் சந்தேகிப்பதில்லை காரணம் நம் செல் போனே அதற்கு ஆதாரம்.அதேபோல் எலக்ட்ரான் இருப்பதை ஈர்ப்பு அலைகள் இருப்பதை நியூற்றினோ போன்ற சில நுண்ணிய துகள் இருப்பதை ஆராய்ச்சிமூலமாக நாம் கண்டு கொள்கிறோம்.அனால் நம்மால் ஆராய்ச்சியில் கூடகண்டுகாள்ளமுடியாத இது வரை நம்மால் எந்த வகையிலும் உணர முடியாத இன்னும் எத்தனை சங்கதிகளை இந்த பிரபஞ்சம் கொண்டிருக்கிறேதோ யாருக்கு தெரியும் அதில் நமது ஒவ்வொரு பிரதியும் இருக்கும் (என்ன கொஞ்சம் வேற ரூபத்தில்)என்ற  கோட்பாடு நம்பும் படியாகவா இருக்கு என நீங்க கேட்கலாம் ஆனால் இதை அறிவியலாரகள் இருக்குமோ என சந்தேகிக்க காரணம் இல்லாமல் இல்லை.

இந்த இணை பிரபஞ்சம் எப்போ எப்படி தோன்றி இருக்குமாம் தெரியுமா?
நமது பூமி உருவாகி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன..சூரியன் உருவாகி 500 கோடி ஆண்டுகள்.
மற்றும் இந்த மொத்த பிரபஞ்சமே 1200 கோடி ஆண்டுக்கு முன் நடந்த பிக் பாங் எனும் பெரும் வெடிப்பின் போது உருவானது தான்.அந்த நேரம் தொடங்கி இந்த பிரபஞ்சம் பல மாறுதலுக்கு உள்ளாகி இப்போது நாம் கண்ணால் காணும் இந்த வடிவை அடைந்திருக்கிறது.அது உருவான அதே கணத்தில் தான் இந்த இணை பிரபஞ்சம் உருவாகி இருக்க வேண்டும் மேலும் இங்கே நடந்த ஒவ்வொரு மாற்றத்திற்கும் அந்த பிரபஞ்சத்தில் அதற்கு நிகரான எதிர் மாற்றம் நடந்து நடந்து அந்த பிரபஞ்சம் வளர்ந்திருக்க வேண்டும்.

இப்படி ஒரு எண்ணம் எப்படி வந்தது?
உங்களை ஒரு மணல் பாங்கான இடத்தில அழைத்து சென்று உங்களுக்கு ஒரு வேலை கொடுக்க படுகிறது என வைத்து கொள்ளுங்கள் அதாவது 3அடி உயரமும் குறிப்பிட்ட சுற்றளவு கொண்ட ஒரு சின்ன மணல் மலையை நீங்கள் உருவாக்க வேண்டும் அதான் உங்களுக்கு இடப்பட்ட வேலை.உங்கள் கையில் மண்வெட்டி குடுத்தாயிற்று..இப்போது நீங்கள் மணலை தோண்டி எடுத்து அதை கொண்டு சுலபமாக அந்த வேலையை செய்து
 விடுவீர்கள்.ஆனால் இங்கு நீங்கள் உற்று கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது வெறும் மலையை தான் நீங்கள் செய்ய திட்டமிட்டீர்கள் ஆனால் நீங்கள் தோண்டிய அந்த பள்ளம்? அது நீங்கள் குன்று செய்ய எடுத்து கொண்ட அதே முயற்சியில் உருவானது தான் மேலும் உங்கள் குன்று என்ன உயரம் உள்ளதோ அதே ஆழம் தான் அந்த குழி அதாவது உங்கள் குன்றின் எதிர்மறை காப்பி தான் அந்த பள்ளம் .அந்த குன்று தான் இந்த பிரபஞ்சம் என்றால் அந்த குழி தான் அவ்ர்கள் சொல்லும் இணை பிரபஞ்சம் .

இப்படி குழியை தோண்டுவது மட்டும் அல்ல இந்த பிரபஞ்சத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் தனக்கே உரிய வேறு விதமான எதிர் பாதிப்பை உண்டாக்கி கொண்டுதான் இருக்கிறது.அது போல 1200 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த பிரபஞ்சம் உண்டான கணம் தொடங்கி இதில் நடந்த ஒவ்வொரு முக்கிய நிகழ்வும்...அது எரிகள் விழுந்து ஒருமுறை உலகம் அழிந்தாததாகட்டும் அல்லது பூகம்பம் வந்தாதாகட்டும் அல்லது பெரிய நட்சத்திர மண்டல ஆக்கம் அல்லது அழிவு ஆகட்டும் தனது பாதிப்பை அந்த இணை பிரபஞ்சத்தில் உண்டு பண்ணிக்கொண்டு தான் இருக்கும் .

அது போலவே நீங்களும் நானும் இந்த பிரபஞ்சத்தில் மிக சிறியவர்கள் என்றாலும் நமது பாதிப்பை அதில் உண்டாகி கொண்டு தான் இருக்கிறோம் .இந்த கனத்தில் அந்த பிரபஞ்சத்திக் ஒரு ரா.பிரபு இணை பிரபஞ்ச கட்டுரையை வேறு பரிமானத்தில் எழுதி கொண்டிருக்கிறான் என்பது கொஞ்சம் நம்ப கடினமானதாக தான் இருக்கிறது என்றாலும் பல அறிவியல் அறிஞர்கள் அதை நம்புகிறார்கள் .
அதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் அந்த பிரபஞ்சத்தில் வெறும் சக்தி ரூபத்தில் வாழும் அந்த மனிதர்கள்(மனிதன் னு சொல்லவா என்னனு சொல்ல) நம்மை போலவே இந்நேரம் இப்படி வேற ஒரு பிரபஞ்சம் உள்ளதை உணர்ந்து கொண்டார்கள் அவர்கள் நம்மை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள் அதற்கு ஆதாரம் இதொ பாருங்கள் என அவர்கள் காட்டுவது ...காஸ்மிக் கதிர்கள் காமா கதிர்கள் போல ஒருவித கதிர்களை ...என்ன அந்த கதிர்கள் நமது பிரபஞ்சத்தில் எதனாலும் உற்பத்தி செய்யப்படாத ...எங்கேயிருந்து வந்தது என்றே தெரியாத மர்ம கதிர்கள். (பூமியில் ஒரு உலோகம் கிடைத்து....அது இந்த பூமியை சார்ந்தது அல்ல என தெரிந்தால் நாம் என்ன நினைப்போம்)
மேலும் அந்த பிரபஞ்ச உருவாக்கம் நம்முடையதை விட கொஞ்சமே கொஞ்சம் பின்தங்கி இருக்க வாய்பிருப்பதால் இங்கு நடக்கும் சம்பவங்கள் அங்கு வேற வித மாக நடக்கவும் வாய்ப்புள்ளது(உதாரணமாக இங்கு விண்கல் மோதி டைனோசர் இனம் அழிந்து விட்டது அனால் அங்கு அந்த கல் கொஞ்சம் மிஸ் ஆனதால் அங்கு இன்னும் டைனோசர் வாழலாம்)என்கிறார்கள்.

எது எப்படியா இன்று வரை இறுதியாக நிரூபிக்க படவில்லை என்றாலும் இணை பிரபஞ்சம் என்கிற அந்த கான்செப்ட் மிக சுவாரிஷ்யமானது.

Comments

  1. Keep writing .. .தெளிவான நடை. ..புரியும் படியான எடுத்துக்காட்டுகள் .. easy to understand ...Super

    ReplyDelete
    Replies
    1. இந்த கருத்தினை நான் வழி மொழிகிறேன்....

      Delete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"