பிரளயம் ஆரம்பம்

''பிரளயம் ஆரம்பம்."

(கதை , :ரா.பிரபு)



இக்கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையில் நடந்தவை....கதை மட்டும் எனது கற்பனை....
இனி கதைகு செல்வோம்...

             பூமிகோர் சவகுழி...

வருடம் 2025...
நாசாவின் அந்த முக்கியமான அரங்கத்தில் மிக முக்கிய மனிதர்கள் கூடி இருந்தார்கள்...
அரங்கில் பெரிதாக டிஜிட்டல் ஓவியத்தில் சக்கர நாற்காலியில் சிரித்து கொண்டு இருந்தவர்...இந்நூற்றாண்டின் மாபெரும் விஞ்சானி ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ்...
மைக் முன்நால் இருந்த பேர்விழி பேச தொடங்கினார்...குரலில் இருந்தது உற்சாகமா இல்லை சோகமா என கண்டுபிடிக்க முடிய வில்லை...
"மதிப்பிற்குரிய ஹாக்கின்ஸ் இன்று நம்முடன் இல்லை ஆனாலும் அவர் பிறந்த தினத்தை undestroybal word's day உலக அழிவின்மை தினமாக கொண்டாடு கிறோம் என்றால் அதற்கு காரணம் அவர் தன் வாழ் நாளி்ன் இறுதியில் எடுத்து கொண்ட ஆராய்ச்சி..."
அவர் மேலும் பேசும் முன் அவர் சொல்வதை முழுதும் புரிந்து கொள்ள நாம் கொஞ்சம் வருடம் பின்னோக்கி சென்று வர வேண்டி உள்ளது....
அவர் உரையை முடிக்கும் முன் வந்துவிடலாம் என்ற உறுதியோடு கூட்டி செல்கிறேன் வாருங்கள்...

வருடம் 1979...
தேர்தல் நேரத்து தொகுதிகள் போல ..உலகம் திடீர் பரபரப்புக்கு ஆளானது
பத்திரிக்கைகளில் மர்லின் மண்ட்ராவின் பறக்கும் பாவாடையை மறந்து முதல் பக்கத்தை ஆர்வமாக பார்த்தார்கள்.....யாராவது அவர்களிடம்
"ஏன் இவ்ளோ பதட்டமா இருக்கீங்க என்ன உலகமா அழிய போகுது" என கேட்டிருந்தால்...அவர்கள் கடுப்புடன்..."யோவ் அமான்யா" என்றிருப்பார்கள்...
காரணம்...ஸ்கை லாப்...
1973 இல் அமெரிக்காவால் அனுப்ப பட்ட முதல் வின் ஆய்வு கூடம்...அவ்வப்போது மூன்று மூன்று பேர் கொண்ட குழு 3 முறை சென்று ...தங்கி..ஆய்வு..செய்து...என நன்றாக தான் போய் கொண்டிருந்தது...
இப்போது அதில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு...சரி வேண்டாம் தரை இறக்கி விடுவோம் என்றால் அதில் தான் சிக்கல்...ஸ்கை லேப் வானில் தங்கி ஆராய்ச்சி செய்ய வடிவமைக்க பட்டிருந்தது...ஆனால் மீண்டும் பூமிக்கு தரையிறக்கம் செய்ய அல்ல (நெறய செலவு ஆவதால் விட்டு விட்டோம் என விஞ்சானிகள் தெரிவித்திருந்தார்கள்)
ஸ்கை லேப் கிட்டத்தட்ட 100 அடி நீளம் 50 அடி அகலம் 77 டன் எடை கொண்ட ராட்சதன்... அதை இசகு பிசகாக தரை இறங்கினால் என்னாகும் என யாரோ கேட்டு வைக்க...மோதுர வேகத்தில் உலகமே அழியும் அபாயம் உள்ளது என சொல்ல பட்டது...அனைவருக்கும் முகத்தில் வேர்த்து போனதற்கு காரணம் அது தான்...
1979 ஜூலை 11ஆம் நாள் உலகமே அண்ணாந்து பார்த்து கொண்டிருந்தது...
அது ஏற்படுத்த போகும் விளைவு என்ன என்பதை அறிய காத்திருந்தார்கள்...
.ஸ்கை லேப் மோதி அடிபட்டால் குறிப்பிட்ட தொகை தருவதாக ஸ்கை லேப் இன்சூரன்ஸ் என்று சிலர் விளம்பரம் செய்தார்கள்...
ஸ்கை லாபின் உடைந்த பகுதியில் முதல் 72 மணி நேரத்தில் கொண்டு வந்து கொடுத்தால் 10000 டாலர் தருவதாக..ஒரு கம்பெனி அறிவித்திருந்தது...
நாசாவின் தலைமை வழுக்கை தலைகள்..எமனை எப்படியாவது.இந்து மகா சமுத்திரத்தில் இறக்கிட போராடினார்கள்....அது பூமியை தொட்ட போது...அதன் பல பகுதி கடலில் விழுந்தாலும் பெரும் பகுதி மக்கள் வாழும் பகுதியில் மேற்கு ஆஸ்திரேலியா நில பரப்பில் சென்று மோதியது...
அனால் அதிர்ஷ்ட வசமாக யாருக்கு ஒன்றும் ஆக வில்லை..
ஹப்படா என்று உலகம் முகத்தை துடைத்து கொண்டது... பாச கார நாசா வாசிகள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி கொண்டார்கள்....
அந்த கால கட்டடத்தில் பிறந்த நிறைய குழந்தைகளுக்கு ஸ்கை லேப் என பெயர் வைத்தார்கள்...
உலக உருண்டை எந்த பிரச்னையும் இல்லாமல் வழக்கம் போல் உருள தொடங்கியது...

இப்போது ..வருடம் 1910..

அந்த அழகிய வால் பொருந்திய ஹாலியின் எரிகல் பூமியை நெருங்கி கொண்டிருந்தது...
அதன் 72 வருட சுற்று வட்டத்தின் பயணத்தில் இம்முறை வழியில் பூமி கிரகத்தை குசலம் விசாரிக்க இருந்தது....
அதன் வாலின் நீளம் மொத்தம் 50 கிலோமீட்டர் ? 100 கிலோமீட்டர்?....ம்ஹூம்...
1000 ...அல்லது 2000 கிலோமீட்டர்...ம்ஹூம்...
60000 ...80000 அல்ல...அல்ல ..மொத்தம் அதன் நீளம் 250 லட்சம் கிலோமீட்டர்...பூமி கண்டிப்பாக அதன் வால் வழியாக கடந்து செல்ல வேண்டும்....
அது மோத கூட வேண்டாம் புவி வளிமண்டலத்தில் தொடர்பு கொண்டால் போதும்...தன்னகத்தே வைத்துள்ள உயிரை எடுக்கவல்ல வேதி பொருள் சைநேசன் ஐ தெளித்து விடும்..
உலகத்தின் முகத்தில் மீண்டும் பய வியர்வை துளிர்திருந்தது...
20 மே 1910 அந்த வால் பய்யன் எந்த குறும்பும் செய்யாமல் உலகை கடந்து போனான்...
அவனால் உயிரிழந்த எண்ணிக்கை....
தன் நண்பர்களுடன் மொட்டை மாடியில் வால் நட்சத்திரத்தை வேடிக்கை பார்க்க போய் கீழே விழுந்து இறந்த எமி ஹாக்கின்ஸ் என்ற பெண் மட்டும் தான்....
பூமி மீண்டும் உற்சாகமாய் சுற்ற தொடங்கியது..

வருடம்..2015..
சூரியன் வெளியிட போகும் கதிர்வீச்சு அலையை சமாளிக்க தயாராகுங்கள் என அறிவுறுத்தப்பட்டது...அந்த பயத்திற்கு ஒரு காரணம் இருந்தது....1859 இல் சூரியனிலிருந்து கிளம்பிய பெரிய அலை சூரிய புயலாக மாறி பூமி பந்தை தாக்கியது...அப்போது இருந்த எல்லா தொலை தொடர்பு சாதனங்களும் பல மணிநேரத்துக்கு செயல் இழந்து போனது...500 ஆண்டுகளின் மிக பெரிய சூர்ய புயல் என அது வர்ணிக்க பட்டது...
எனவே 2015 சூரியனை எல்லோரும் கண்ணை சுருக்கி உற்று நோக்கினார்கள்..
கண்ணால் காண கூடிய மிக பெரிய சூரிய அலை என்ற பெயரை தவிர எந்த ஆபத்தும் இல்லாமல் புயல் கரை ஏறியது....

வருடம் 2012..

மாயன் காலண்டர் முடிந்து போனது தொடங்கி பைபிள் இல் சொல்லப்பட்டது வரை மேற்கோள் காட்டப்பட்டது வரை எடுத்து சொல்லி உலக அழிவை நம்ப செய்தார்கள்....அதை இறை வாக்காக நம்பிய பல பேர் கூட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்...இறைவனிடம் செல்வதாக சந்தோசமாக சொல்லி சென்றார்கள்....
30 நாளுக்கு தேவையான உணவுடன் தண்ணீரில் மிதக்க கூடிய நோவாவின் பேழை யை பல பேர் தயார் செய்து கொண்டார்கள்....
அனால் 2012 என்ற சூப்பர் ஹிட் ஹாலிவூட் படத்திற்கு கதைக்கு உதவியதை தவிர 2012 ஆல் எந்த ஆபத்தும் இல்லாமல் அது கடந்து போனது.....

இன்று...2025...நாசா அரங்கம்...அவர் பேசுவதை தொடர்ந்து கேட்போம் வாருங்கள்...
ஏதோ ஜோக் செல்லப்பட்டிருக்க வேண்டும் அரங்கம் கரகோஷம் இட்டு முடிந்திருந்தது...அவர் தொடர்ந்து பேசி கொண்டிருந்தார்...
"அப்படிப்பட்ட மதிப்பிற்குரிய ஹாக்கின்ஸ்... தனது வாழ்நாளில் கடைசியாக எடுத்து கொண்ட ஆராய்ச்சி இந்த உலகம் எப்போது மிக சரியாக அழியும் என்பதைத்தான்...பல லட்ச காணக்கான வெளி தரவுகளை கொண்டு ஆராய்ச்சி செய்ய அவருக்கு தேவைப்பட்ட உலக மகா சூப்பர் கம்ப்யூட்டரை நாங்கள் வழங்கினோம்....அவரது ஆராய்ச்சி முடிவில் அவர் சொன்னது என்ன தெரியுமா..பூமிக்கு வெளி சூழலை பல லட்சம் தரவுகளை கொண்டு ஆராய்ச்சி செய்ததில் பூமியை அழிக்க எந்த சக்தியாலும் முடியாது...குறைந்த பட்சம்..அடுத்த 20 லட்சம் ஆண்டுகளுக்கு...".அரங்கம் மீண்டும் கரகோஷம் இட்டது...
"எனவேதான்  அவர் பிறந்த தினத்தை உலக அழிவின்மை தினமாக கொண்டாட முடிவு செய்து உள்ளோம்..ஹாக்கின்ஸ் மேலும் சொன்னது...'உண்மையை இன்னும் துல்லியமாக தெரிவிக்க சில ஆயிரம் உள் தரவுகளை உட்சேலுத்தி இருக்கிறேன் அடுத்த சந்திப்பில் அதை சொல்கிறேன்' என்றார் அனால் அதற்குள் அவர் இறந்து போனார்...
அவர் சொல்ல வந்ததை அவர் விட்டு சென்ற கம்ப்யூட்டர் மூலம் கேட்டு மகிழ்வோம் வாருங்கள்.."
சொல்லிவிட்டு அவர் சில ரகசிய பொத்தானை அமுக்க அரங்கம் ஆச்சர்யத்தில் மூழ்கியது காரணம் அரங்கில் திடீர் என தோன்றியது...சாட்சாத் ஹாக்கின்ஸ்...அதும் சக்கர நாற்காலி உதவி இல்லாமல் ஆனால் ஹாலோக்ராபிக் உருவத்தில்......
குரலும் அவருடையதே...
மூளையும் மெமரியும் கம்ப்யூட்டர் உடையது அதை ஒளி பரப்ப எடுத்து கொண்ட உருவம் ஹாக்கின்ஸ் உடையது....
பணிவாக அனைவருக்கும் வணக்கம் என்றார் ஜப்பான் மொழியில் ..கூட்டம் குழம்ப....
"வாய்ஸ் மாடுலெக்ஷனுக்கு ஏற்றார் போல கருத்துக்கு ஏற்றார் போல எந்த மொழியையும் தேர்ந்தெடுத்து கொள்ள அவருக்கு program செய்யப்பட்டுள்ளது."..என்றார் முன் பேசியவர்...
இப்போது கம்ப்யூட்டர் பக்கம் திரும்பி கேட்டார் "இந்த உலகம் எப்போது அழியும்" .
2 லட்சம் ஆண்டுகளுக்கு உலகை எதாலும் அழிக்க முடியாது எனர பதிலை எதிர் பார்திருந்தவர் அதிர்ந்தார்...."ங்கோயாலே கூடிய சீக்கிரம் நீங்கள்ளாம் காலி "என்றது  ஹாக்கின்ஸ் உருவ கம்ப்யூட்டர்...
வாட் என்ன மொழியா பேசுது இப்போ என்று கிசு கிசுதார் ..அதை கேட்டு கொண்ட கம்ப்யூட்டர் ..
"தமிழ்"
என்றது சத்தமாக ...அனைவருக்கும் மொழி பெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப்படும் ஏற்பாடு அவசர அவசரமாக செய்யப்பட்டது
"உண்மைகளை உரக்க சொல்ல ஏற்ற மொழி "என்றார் பெருமையாக...
கருவியில் ஏதோ கோளாறு என்று தலைமை விஞ்சானி முனக ....."கோளாறு ஏன் கிட்ட இல்ல உங்ககிட்டதான்...உங்க உலகத்தை அழிக்க எந்த வெளிசக்தியும் தேவை இல்லை கண்ணுங்களா....வலிமையான மனிதனின் உள்ளே இருந்து அழிக்க கூடிய புற்று நோய் போல உங்க பூமியை அழிக்க போகும் புற்று நோய்க்கு பெயர் குளோபல் வார்மிங்..உலக வெப்பமயமாதல்...
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நீங்கள் கட்டும் தொழிற்சாலை அது வெளியிடும் புகை...காற்று நீர் நிலம் மாசு படும் மாறு நீங்கள் செயது கொண்டிருக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நீங்கள் அனுபவிக்கபோகிறீர்கள்....
காட்டை அழித்தல் நீர் நிலைகளை வற்ற வைத்தல்...இயற்கை வளங்களை சுரண்டுதல்... இதெல்லாம் கடும் நோயாக உங்கள் பூமி மாதாவை பாதித்துள்ளதை அறியவில்லையா....நீங்கள் பயன் படுத்தும் வாகனம் கொஞ்சம் அதிகம் புகையை விடுவது கூட உலத்துக்கே ஆபத்தான காரணிகளில் ஒன்று என்று தெரியுமா...
உங்களை அழிக்க வேற்றுகிராகத்திலிருந்து ஆள் வர வேண்டுமா....ஹா ஹா செம தமாஷ்...
நேரலையில் கேட்டு கொண்டிருந்த உலக மக்கள் அதிர்ந்து போயி பார்த்து கொண்டிருந்தார்கள்....
" என்னோட கணக்கு படி இப்படியே போனால் இன்னும் ஒரு நூற்றாண்டு கூட நீங்க தான்றது கஷ்டம்...ஹா ஹா" என்று விட்டு ட்விக் என மறைந்து போனார் ஹாக்கின்ஸ் .....
பூமி மாதா தனது அடுத்த சுற்றை சுற்ற தொடங்கினாள்..
.சுற்றும் பொது .......
இம்முறை .......
லேசாக தலை சுற்றுவதாக உணர்ந்தாள்..

Comments

  1. அருமை நண்பரே.....

    ReplyDelete
  2. நீங்கள் Google Adsense உடன் உங்கள் பிளாக் இணையுங்கள் Money Earn Pannalam

    ReplyDelete
  3. நீங்கள் Google Adsense உடன் உங்கள் பிளாக் இணையுங்கள் Money Earn Pannalam

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"