முழுமை எனும் உண்மை பாகம் 3




முழுமை எனும் உண்மை (பாகம் 3)

(கருத்தும்,எழுத்தும் #ரா_பிரபு)

உலகை பொருளியல் ரீதியாக ஆராய முற்பட்ட அறிவியலாளர்கள் .பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது என்பதை கண்டார்கள்.. பின் அந்த அணு எதனால் ஆனது என ஆராய்ந்து பார்த்து அதன் சப் அடமிக் பார்டிகல்களை கண்டார்கள் பின்பு அதையும் தாண்டி தோண்டி நோண்டி பார்த்த போது வெறும் பஞ்சு பொதி போல தான் அதன் தொடக்கம் இருப்பதை பார்த்தார்கள் மிக ஆழத்தில் பொருட்கள் ஒன்றும் இல்லாத சூனியமாக இருப்பதை பார்த்தார்கள்.. ஏதும் அற்ற சக்தி நிலையில் இருந்து இப்படி கண்ணுற கூடிய பொருட்கள் உண்டாகி இருப்பதை பார்த்து அதிசையித்தார்கள் .
.
கிட்ட தட்ட இதே ரீதியில் தான் தனக்குள் தேடிய மெய்ஞான விஞ்ஞாணிகளும் முதலில் தனக்குள் பிரமாண்டமாய் இருப்பது மனது தான் என்பதை பார்த்து அந்த மனம் என்பது என்ன என்று ஆராய்ந்து பார்த்த போது அது ஒன்னும் இல்லாத ஒன்று அதாவது மனம் என்ற ஒன்றே இல்லாததை கண்டு அதிசையித்தார்கள்..

உலகமெங்கும் உள்ள மெய்ஞான விஞ்ஞாணிகளும் இந்த விஷயத்தில் மட்டும் ஒத்து போகிறார்கள். மனம் என்பது வெறும் எண்ணங்களின் குவியல் தான் அகந்தை இல்லாமல் தனியாக மனதால் இருக்க முடியாது என்கிறார் ரமணர்..' நான்' என்று நாம் உணரும் அந்த உணர்வை தான் அகந்தை என்கிறார் ரமணர்.
"உண்மையைப் உணர நான் என்கிற அகந்தை அழிய வேண்டும் "என்கிறார் ராமகிருஷ்ணர். "குழந்தை போல இருப்பவர்கள் தான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்" என்கிறார் இயேசு..குழந்தைகளுக்கு அகந்தையோ மனமோ இல்லை.

"மனம் என்பது உங்களால் சக்தி அளிக்க பட்டு இயங்கும் ஒரு இயந்திரம் நீங்கள் சக்தி ஊட்டுவதை நிறுத்தி விட்டால் மனம் செத்து விடும் என்கிறார் ஓஷோ.

இவர்கள் சொல்வதை கேட்டால் நமக்கு குழப்பம் தான் மிஞ்சுகிறது மனம் என்பது இல்லை என்றால் நாம் அனுபவிக்கும் சுகம் துக்கம் இன்பம் துன்பம் எல்லாம் எப்படி? என கேட்டால் மனம் என்பது உங்கள் படைப்பு அது ஒரு மாயை என்கிறார்கள்.
 ஒரு திரையரங்க திரையில் தொடர்ச்சியாக பிரோஜெக்டர் கொண்டு பிம்பம் விழ செய்வதை உதாரணமாக காட்டுகிறார் ஓஷோ. தொடர்ச்சியாக பிம்பம் விழும் போது திரையில் மலை ..கடல் .. விமானம்..புல்வெளி..நகரம் ..பாடல் எல்லாம் மாறி மாறி திரையில் தெரிகிறது அனால் இது எதுவும் திரையின் உண்மையான முகம் அல்ல நாம் காணும் காட்சிகள் ஒரு மாயை..ஒளி பரப்பை நிறுத்தி விட்டால் தெரிவது வெறும் வெள்ளை திரை மட்டும்தான்.

அப்படிதான் தொடர்ச்சியான எண்ண சங்கிலியால் தான் மனம் என்ற ஒன்று இருப்பதாக தெரிகிறது (வேகமாக தொடர்ச்சியாக மின் விசிறி சுற்றுவதால் அது ஒரு டிஸ்க் போல இருப்பதாக தெரிவதை போல) எண்ணங்களின் ஓளிபரப்பை நிறுத்தி வைத்து பார்த்தல் நமக்குள் ஒரு வெள்ளை திரை இருப்பது தெரிவிறது அதன் பெயர் விழிப்புணர்வு..
இது தான் நமது உண்மை நிலை என்பது தான் தன்னை தேடியவர்களின் முடிவு.
இப்போது தன்னை தேடுவதை கொஞ்சம் வேறு கோணத்தில் பார்ப்போம். அதாவது நீங்கள் ஒரு உயரமான கட்டிடத்தில் ஏற வேண்டும். உங்களிடம் நான் ஒரு கயிறு ..ஒரு ஏணி மற்றும் ஒரு சாவி கொடுக்கிறேன் அந்த சாவி படிக்கட்டு எங்கே இருக்கிறதை என்பதை கண்டு பிடிப்பதற்கானது. என்றால் நீங்கள் கட்டிடத்தில் எப்படி ஏறுவீர்கள்..? நீங்கள் கயிறு அல்லது ஏணி அல்லது படிக்கட்டு இப்படி உங்களுக்கு வசதியான ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுப்பீர்கள். ஆனால் உங்களிடம் உள்ள ஏதோ ஒன்றை கொண்டு தான் முயற்சிப்பீர்கள் அல்லவா.. அப்படி தனக்குள் தேட தன்னிடம் உள்ள சில வற்றை பல பேர் பல விதமாக பயன்படுத்தினார்கள் .

நிமிடம் உடல் இருக்கிறது .மனம் இருக்கிறது (மனம் மாயையே பேழையோ ஆக மொத்தத்தில் இருக்கிறது) அப்புறம் முக்கியமாக நாம் மிகவும் நம்பும்... எதையும் தர்க்க ரீதியாக சிந்திக்க கூடிய அறிவு இருக்கிறது..
இப்போது விழிப்புணர்வு தான் நமது உண்மைநிலை என்றால் நிமிடம் உள்ள ஏதோ ஒன்றை கொண்டு தான் அதை அடைய வேண்டி உள்ளது.. சில பல யோக வேலைகளை தொடர்ந்து செய்வதன் மூலம் விழிப்புணர்வை அடையலாம் என்று சொன்னவர்கள் இந்த உடலை பயன்படுத்தி உண்மையை தேடியவர்கள். அவர்கள் இதை ராஜ மார்க்கம் என்றார்கள்.
ஏன் எதற்கு எப்படி என கேள்வி கேட்டு நாம் புற உலக விஞ்ஞாணத்தை ஆராய்வது போல அறிவை கொண்டு நமக்குள் தொடர்ச்சியாக கேள்வி கேட்டு உண்மையை கண்டு கொள்வது நமது அறிவை பயன்படுத்தி உணமையை அடைவதை அவர்கள் ஞான மார்க்கம் என்கிறார்கள் ..
இது ரமனரின் வழி.. நம்மை தோண்டி பார்க்க அவர் நமக்கு கொடுத்த கீ வர்ட் கேள்வி.. "நான் யார்"  இதை தொடர்ந்து தனக்குள் கேட்டு கொண்டே வந்து அதில் வரும் விடையை ஆராய்ந்து கொண்டே வா என்ன நடக்கிறது என்று பார் என்றார் ரமணர். மீதி உள்ள மனம் என்பதை பயன்படுத்தி கடவுளை அடைவதை ( மனம் உள்ளே நுழைந்த உடன் 'உண்மை' என்ற வார்த்தை பிரயோகத்தை ' கடவுள் 'என்று மாற்றி விட்டேன் என்பதை கவனிக்கவும் ) இதை பக்தி மார்க்கம் என்கிறார்கள்.

யானைக்கு தேவை தும்பிக்கை என்பதை போல பக்தி மார்கத்துக்கு மிக தேவை நம்பிக்கை ..
நம்பிக்கை அல்லது இடத்தில பக்திக்கு இடம் இல்லை . குறிப்பாக தர்க்கரீதியாக சிந்திக்கும் அறிவுக்கு பக்தியிடம் இடம் இல்லை. பக்தியை அணுக நீங்கள் மிகுந்த மனோ ரீதியானவராக இருக்க வேண்டும் அறிவு ரீதியானவராக அல்ல..
ஏன் அப்படி?

காரணம் அறிவை கொண்டும் ஆராயும் போது அங்கே நம்பிக்கை என்ற சொல் நம்பிக்கை இழந்து போகிறது.
எதையும் ஆய்ந்து பார்க்கும் முன் இதை நம்பு நீ நம்பினால் தான் உண்டு என்று சொன்னால் அதை இன்னொரு கோணத்தில் அறிவு அலசி பார்க்கிறது.. அதாவது நீங்கள் நம்பிக்கை என்று சொல்வது எதனால் என்றால் உங்களுக்கே அது அறுதியாக தெரியாததால் தான் என்று தர்க்க அறிவு சொல்கிறது..

எப்படி என்பதை சொல்கிறேன் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

உங்களிடம் உங்கள் வலது கையில் 5 விரல் உள்ளதா என்றால் நீங்கள் "5 விரல் இருப்பதாக நம்புகிறேன் "என ஒரு போதும் சொல்ல மாட்டீர்கள் காரணம் அது இருப்பது உங்களுக்கு மிக உறுதியாக திட்ட வட்ட மாக தெரியும் . எனவே அங்கே நீங்கள் நம்பிக்கை என்ற வார்த்தை யை பயன்படுத்த மாட்டீர்கள். மாறாக நம்பிக்கையை நீங்கள் எங்கே பயன்படுத்துவீர்கள் என்றால் உதாரணமாக இந்த முறை கிரிக்கெட்டில் இந்தியா ஜெயிக்கும் என நம்புகிறேன் என நீங்கள் சொல்லலாம் ஏனென்றால் அது உங்களுக்கு அறுதியாக தெரியவில்லை எனவே வேறு வழி இல்லாமல் நீங்கள் அதை நம்புகிறீர்கள். எந்த உண்மையையும் நாம் உறுதியாக உணர்ந்து கொண்ட பின் அதை நாம் நம்ப வேண்டிய அவசியம் இல்லை காரணம் அது இருப்பதற்கு இப்போது நாமே சாட்சி யாகிவிட்டோம்.. இனி நம்பிக்கைக்கு அங்கே வேலை இல்லை ..

எனவே அறிவின் இந்த சிந்தனை கொண்டு பார்த்தல் இருவர் கடவுளை மிக அதிகமாக நம்புகிறார் என்றார் அவர் கடவுள் மேல் மிக அதிகம் சந்தேகம் உடையவராக இருக்கிறார் என்று பொருள் .கடவுளை உணடர்ந்து விட்டால் அதன் பின் அவர் நம்பி கொண்டு இருக்க மாட்டார்.. உலகத்தில் பசி எடுக்கும் யாரும் எனக்கு பசிப்பதாக நம்புகிறேன் என்று சொல்வது இல்லை.

சரி பக்தனை மொக்கை ஆகியாச்சு இபோது அறிவு ரீதியாக தர்க்க ரீதியாக ஆராய்ந்து விட்டால் எதையும் கண்டு உணர முடியுமா என்றால் அங்கு தான் தர்க்க அறிவு மகா மொக்கை வாங்குகிறது சாதாரணமான ஒரு சின்ன துகள் அணுவுக்குள் இருக்கும் பார்ட்டிகள்களில் நுழைந்து பார்த்த போது அங்கே தர்க்க அறிவு மண்ணை கவ்வுகிறது..

 ஒரு துகள் ஒன்று வலது பக்கம் சுழல வேண்டும் அல்லது இடது பக்கம் சுழல வேண்டும்  ஒரே நேரத்தில் இருபக்கமும் சுழன்றால் அதை என்ன வென்று தர்க்க அறிவு கொண்டு விளக்குவது..கூட சேர்ந்து நம்ம தலைதான் சுழலுகிறது. பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளும் ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில இருக்க முடியாது என்பது தான் இயற்பியல் விதி ஆனால் அந்த விதிக்கு பெப்பே காட்டிவிட்டு பல அணு நுண் துகள்கள் ஒரே நேரத்தில் டபுள் ஆக் ஷன் கொடுத்து அசத்துகிறது .
நம்மால் காண கூடிய ஒரு சின்ன துகளையே இன்னும் முழுதாக புரிந்து கொள்ள முடியாத நம்மால் கடவுள் என்ற  கோக்கு மாக்கு ஆசாமியை எப்படி புரிந்து கொள்வது??
இறுதியாக ...
அறிவியலை கொண்டு கடவுளை விளக்க முடியுமா முடியாதா... ஒரே வார்த்தையில் சொல் என்றால்..
"முடியாது"
என்று சொல்லி முடிக்கிறேன்..
நன்றி..

பின்னுரை:

ஒரு தன்னிலை விளக்கம்:
எனது பல கருத்துகளால் என்னை கடவுள் நம்பிக்கை அற்ற நாத்தீகன் என என்னிட வேண்டாம் அவை யாவும் என் கருத்துகள் அல்ல.
அதற்காக என்னை நம்பிக்கை கொண்ட ஆத்திகன் என என்னிட வேண்டாம் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை..
மாறாக எனக்கு ஒன்றும் தெரியாது என்று உலகை வியந்து நோக்கும் குழந்தை போல நான் ஒரு தேடல்வாதி...
அவ்வளவு தான்.

Comments

  1. நீங்க நல்லவரா இல்ல கெட்டவ்ரா

    ReplyDelete
  2. இன்று வரை இப்பிரபஞ்ஞத்தில் பதில் கிடைக்காது உயிர்ப்புடன் உள்ள கேள்வி Who am i நான் என்பது என்ன.. மற்றையது முழுமை என்பது என்ன எது முழுமையானது.ரமணர்.ஓஷோ.ராம கிருஷ்ணர்.கருத்ததுக்களின் தோகுப்பு அருமை சகோ.

    ReplyDelete
  3. இன்று வரை இப்பிரபஞ்ஞத்தில் பதில் கிடைக்காது உயிர்ப்புடன் உள்ள கேள்வி Who am i நான் என்பது என்ன.. மற்றையது முழுமை என்பது என்ன எது முழுமையானது.ரமணர்.ஓஷோ.ராம கிருஷ்ணர்.கருத்ததுக்களின் தோகுப்பு அருமை சகோ.

    ReplyDelete
  4. Unmaiyil manam illai. Naan meditation panrapo manam maraivadhai naan feel pannirukean.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"