"ஜீன் என்ன ஏது எப்படி"



ஜீன் என்ன ஏது எப்படி

(கருத்தும், எழுத்தும் : ரா_பிரபு)

இன்றைக்கு DNA என்கிற சிக்கலை கொஞ்சம் எளிமையாக்கி பார்ப்போம்.

பிரபஞ்சத்தில் பிரமாண்டமான...பெரி்தினும் பெரிதான நட்சத்திரங்கள், ப்ளாக்ஹோல்ஸ்கள், யூனிவர்ஸ்கள், க்லெஸ்டர்கள், இவைகளை உற்று பார்க்கும் போது என்ன வியப்பு ஏற்படுமோ அதே வியப்புதான் பிரபஞ்சத்தில் சிரிதினும் சிறிதான அணுக்கள் , உயிர்செல்கள் இவைகளை உற்று பார்க்கும் போது ஏற்படுகிறது .

இன்றைக்கு நாம் வியக்க இருப்பது.. செல்களில் அடங்கி உள்ள ஜீன்களை பார்த்து.

ஜீன்களை பற்றி புரிந்து கொள்ளும் படி எளிமையாக விளக்கும் முன் ஒரு அடிப்படையான கேள்வி ...உங்கள் உடல் பல கோடி கணக்கான அணுக்களால் ஆனது என்பது சரியா ? அல்லது செல்களால் ஆனது  என்பது சரியா ? என்றால் உடல்  செல்களால் ஆனது ஆனால் அந்த செல்கள் அனுகளால் ஆனது  என்பது தான் சரி  . அதுவும் 37.2 trillions செல்கள் .  அதை எப்படி  எண்ணனீங்க  என கேட்டால் ஒரு செல்லின் எடை ஒரு நானோ கிராம் என்பது எங்களுக்கு தெரியும் ஒருமனிதன் சராசரியா 70 கிலோ என வைத்து கொண்டால் 70 kg யில் எத்தனை நானோகிராம் அடங்கும் என்று கணக்கிடலாம்...
அனால்....
நாங்கள் அப்படியெல்லாம் கனக்கு பண்ணவில்லை. அது தவறான கணக்கு என்கிறார்கள்.
 இன்னொரு வழி இருக்கு ஒரு செல் இவ்வளவு இடத்தை அடைத்து கொள்ளும் என்ற ஒரு கணக்கு உள்ளது அதன் படி ஒரு மனிதனின் அடர்த்தி எவ்வளவு என அளந்து பார்த்து இந்த அடர்த்தியை எவ்வளவு செல் பிடிக்கும் என அளக்கலாம்..
ஆனால்...
நாங்கள் அப்படியும் அளக்கவில்லை என்கிறார்கள் (என்ன ...கட்டுரை ஆரம்பத்துலயே கொழப்புதே...)
எப்படித்தான்யா அளந்தீங்க என்றால் கூட்டி கழித்து நம்மிடம் என்னமோ "அளகிறார்கள்".

இதை விளக்கி கொண்டிருந்தால் கட்டுரை நோக்கம் வேற திசையில் போகும் என்பதால் (அதான் பல கோடினு சொல்லிட்டன் இல்ல விடுங்க) நேரே ஜீன்க்கு வந்து விடுகிறேன்.

ஜெனெட்டிக் மாறுபாட்டால் வித்தியாசமான திறமைகொண்ட மியுடன்ட்களாக மாறிவிடும் மனிதர்களை காட்டும் ஹாலிவுடின் XMan படம் பார்த்திருப்பீர்கள். அந்த series இன் கதை சொல்லும் பாணியை கவனித்தீர்களா ? முதலில் ஒரு கதை அப்புறம் அதற்கு அடுத்த பார்ட்டில் அதற்கு முந்தின கதை.
 அதற்கும் அடுத்த பார்ட்டில் அதற்கும் முந்தின கதை இப்படி...

அந்த ஸ்டைலில் நம்ம கதையை அணுகினால்..

ஜீன் என்பது என்ன ?(அதே X மேன் படத்தில் ஒரு கதாபதிரத்தின் பெயர் கூட ஜீன் தான் . அதை இப்போது நினைக்க வேண்டாம்)
ஜீன் என்பது DNA வின் தொகுப்பு..

DNA வா அப்படினா? அது என்னவிதமான பொருள் அது எங்க இருக்கும்?

DNA என்பது நியூக்லியோடைடு எனும் சிறிய கூட்டனுகளால் ஆன ஒரு பொருள். அது உட்கருவில் இருக்கும்.

நியூக்லியோடைடா அப்படினா? உட்கருவா அப்படினா?

அணுவுக்குள் மத்தியில் அணுக்கரு இருப்பதை போல உயிர் செல்களின் மையத்தில் கெட்டியாக இருப்பது உட்கரு அல்லது நியூக்ளியஸ்.
அந்த நியூக்லியோடைடு என்ற சமாச்சாரம் நான்கு வகைகளால் ஆனது அது அடினைன்,தயோமின்,சைட்டோசின், குவானின் சுருக்கமாக ATCG .

அப்போ குரோமோசோம்னு சொல்றாங்களே அது.... R. N. A என்பது?
ஜீன் மியூட்டியேஷன் என்பது? அமினோஅமிலங்கள்னு சொல்றாங்களே அது...???

பொறுங்கள் ஒவ்வொன்றாக பார்ப்போம் ..
இப்போதைக்கு நமது செல்லில் உள்ள ஒரு பொருள் தான் DNA இதன் தொகுப்புத்தான் ஜீன் என்கிற அளவில் புரிந்தால் போதும் மேலே தொடரலாம்..

இந்த ஜீன்கு கடவுள் கொடுத்திருப்பது இரண்டே இரண்டு வேலைதான். ஒன்று புரதம் உற்பத்தி செய்வது ..
 இன்னொன்று தன்னை போலவே பிரதி எடுப்பது..
மனித உடலில் என்றில்லை உலகில் நீங்கள் காணும் அணைத்து உயிரின் செல்லை ஆராய்ந்து பார்த்தாலும் இந்த ஜீன் கட்டமைப்பு மட்டும் ஒரே மாதிரியான மூலகூறுதான்.
இது உடலில் உள்ள ஏதோ ஒரு செல்லில் அல்ல உடலில் உள்ள ஒவ்வொரு சொல்லிலும் உள்ளது.
 அந்த D N A என்கிற சமாச்சாரத்தில் தான் மொத்தம் 46 குரோமோசோம் என்கிற ஒரு மேட்டர் உள்ளது ... அதாவது பிஸிக்ஸ் இல் ஒரு தனிமத்தை இந்த தனிமம் இதுவென நிர்ணையப்பது அதில் உள்ள எலக்ட்ரான் புரோட்டான் களில் எண்ணிக்கை போல் உயிரியளில் இது இந்த விலங்கு என நிர்ணயிப்பது இந்த குரோமோசோம் தான் (46 கு பதில் 48 குரோமோசோம் இருந்தால் நீங்கள் மனிதன் அல்ல சிம்பான்சி...)

இந்த குரோமோசோம் மிக அதிசயமான ஒரு விஷயம் காரணம் .. உங்கள் நிறம் என்ன உங்கள் முடி சுருட்டையா இல்லை நீளமா .. நீங்கள் உயரமா அல்லது குள்ளமா.. கண்ணின் நிறம் என்ன இப்படி உங்களை பற்றிய அனைத்து தகவலையும் தனக்குள்ளே டைரிகுறிப்பு போல எழுதி வைத்துள்ளது. என்ன.......அது எழுதி வைத்திருப்பது முன்பு நான் சொன்ன அந்த ATCG பாஷையில் .

இந்த தகவல் இதில் ஒளிந்து இருப்பதால் தான் உங்கள் தலை முடி கொடுத்தால் போதும் DNA டெஸ்ட் செய்து உங்கள் ஜாதகத்தை உங்கள் கையில் கொடுக்க முடிகிறது.
 இந்த குரோமோசோம் கொண்ட DNA பார்க்க ஒரு நூலெனி போல இருக்கும் . இதற்கு கடவுள் கொடுத்திருப்பது இரண்டு வேலை என்று சொன்னேன். ஒன்று புரதம் அதாவது புரோட்டீன் உற்பத்தி செய்வது இரண்டு பிரதி எடுப்பது...

புரதம் எதற்காக .. உங்கள் உடலை உண்டாக்க தான் புரதம் கருவில் வெறும் செல்லாக இருந்து இன்று பல கோடி செல்களாக உங்கள் உடல் வளர்ந்திருப்பது இந்த புரததால் தான். D. N. A  புரத உற்பத்தியின் போது மட்டும் R. N. A வாக பிரதியெடுக்க படுகிறது (ribo nucleic acid) பின் இது ரிபோசோம் உடன் சேர்ந்து அமினோ அமிலங்களை உற்பத்தி செய்கிறது இந்த அமினோ அமிலம் ஒன்று சேர்ந்தது தான் புரதம்.

அப்புறம் பிரதி எடுத்தல் என்பது? முன்பே சொன்னேனே ஒவ்வொரு செல்லிலும் இந்த தகவல் இருக்கும்னு எனவே புது செல் உற்பத்தியானால் அதில் அந்த நம்மை பற்றிய அந்த தகவல் டேட்டா வை பிரதி எடுத்து வைக்கிறது .

இந்த 46 குரோமோசோம் என்று பார்த்தோமே அதில் 23 தாயிடம் பெற்றது மேலும் 23 தந்தையிடம். எனவே 23 ஜோடி குரோமோசோம் என்பது தான் சரி. எனவே உங்களிடம் உங்கள் தாயின் குணநலன்கள் பற்றிய தகவல் அடங்கிய டேட்டா பேஸ் 23 மற்றும் தந்தை தகவல் பெட்டகம் 23 உள்ளது. இந்த 46 குரோமோசோம் எண்ணிக்கை என்பது எல்லா செல்லிலும் இருக்கும் என முன்பு சொன்னது 99 சதம் தான் உண்மை.. காரணம் விந்தனுவில் 23 தான் இருக்கும் அதேபோல கருமுட்டையிலும் 23 தான் இருக்கும்(அப்போது தான் குழந்தைக்கு தாயின் 23 தந்தையின் 23 குரோமோசோம் தர முடியும்.) இதை தவிர குரோமோசோம் சுத்தமாக இல்லாத இடம் ஒன்று உள்ளது அது ரத்த சிகப்பனு..

குரோமோசோமின் மாயாஜாலமே என்னவென்றால் தகவலை தலைமுறை தலை முறையாக கடத்துவதுதான் உதாரணத்திற்கு ஒரு தாயின் கண் நீல நிறம் தந்தை கருப்பு நிறம் என்றால் அவர்கள் குழந்தை உற்பத்தி ஆகும் போது அதன் DNA வில் இந்த இரண்டு நிற தகவலும் இருக்கும். ஆனால் குழந்தையின் கண் உற்பத்தி ஆகும் போது எந்த தகவல் முந்தி கொள்கிறதோ அந்த நிறத்தில் தான் குழந்தையின் கண் இருக்கும் ஆனால் அந்த குழந்தையிடம் மறைந்திருக்கும் தகவல் இருக்கிறதே அது அதன் DNA  வின் inbox இல்  பத்திரமாக இருந்து 10 தலைமுறை தாண்டி கூட தன்னை வெளிப்படுத்தும்(லைட்டாக 7 ஆம் அறிவு படம் நினைவு வருகிறதா)
இந்த தகவல் பிரதி எடுக்கும் போது சிறு சிறு பிழை நிகழ்வதுண்டு அப்போது ஒரிஜினல் போல இல்லாமல் அதன் தலை முறை சற்று வேறு டைப்பாக மாற வாய்ப்பு உள்ளது. அதற்கு ஜீன் மியூடேயேஷன் என்று பெயர் இந்த தவறு எதற்கு தேவை படுகிறது என்றால் சூழ்நிலை மாற்றத்திற்கு தகுந்தாற்போல தன்னை மாற்றி உயிர்வாழ்வதற்கு.. அப்படி சூழ்நிலை கு தன்னை மாற்றி கொண்ட உயிரினங்கள் தான் பூமியில் பிழைக்கும் அப்படி அல்லாத உயிரினங்களின் இனம் அழிந்து போகும் (உதாரணம் டைனோசர்கள்)

கண்ணுக்கே தெரியாத செல்லில் கணக்கில் அடங்காத ஆச்சர்யம் இருக்கிறது.. நான் காட்டியது ஒரு அடிப்படை அறிமுகம் மட்டும்தான் . X கிரோமோசோம்Y கிரோமோசோம் பற்றிய தகவல் என்ன..DNA தகவலை திருத்தி எழுதுவது எப்படி... வேண்டிய மனிதனை வேண்டிய நிறத்தில் வேண்டிய உயரத்தில் உற்பத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


ஒரு மளிகை கடைக்கு போயி இந்தந்த பொருட்களையெல்லாம் வேண்டும் என்று ஆர்டர் கொடுப்பதை போல... அல்லது சிவில் இன்ஜினீரை கூப்பிட்டு வைத்து இந்த இடத்துல ஜன்னல் இந்த இடத்துல கிச்சன் என டிசைன் சொல்லி வீட்டை கட்டுவதை போல எதிர்காலத்தில் இப்படி இப்படி வடிவமைபோட தனக்கு குழந்தை வேண்டும் ( சுருட்ட முடி, சிகப்பு கலர் அப்புரம் மூக்கு கூர்மையா இருக்கணும் ...ஏங்க கண்ணு மட்டும் எனக்கு பிடித்த மாதிரி பச்சை கலர்ல வச்சிகலாங்க..எங்கிற ரீதியில் மனைவிமார்கள் கேட்க...) என்று ஆர்டர் பண்ணி எதிர் காலத்தில் மனிதர்களை உற்பத்தி பண்ண கூடிய சாத்தியக்கூறு கொண்ட துறை தான் ஜெனடிக்..

இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?
 குளோனிங் னு சொல்றாங்களே அது என்ன?
டெஸ்ட் டியூப் பேபி என்கிறார்களே அது என்ன? (குழந்தை ஏதோ டெஸ்ட் டியூப் இல் வளரும் போல என நினைப்பவர்கள் இருக்கிறார்கள்)
 மரபணு மாற்றுனு சொல்றாங்களே அதை எப்படி செய்கிறார்கள்..?
 X man படத்தில் காட்டப்படும் சக்தி வாய்ந்த மியூடியேஷன் மனிதர்கள் சாத்தியமா?
போன்ற கேள்விகளுக்கான விடைகளை இந்த கட்டுரை வாயிலாக ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலில் கருத்தரித்தலின் போது என்ன நடக்கிறது என்றால் பெண்ணின் கருமுட்டையில் விந்தனு வந்து இணைந்ததும் கருத்தரித்தல் நடைபெறுகிறது..உடலில் எல்லா செல்லிலும் 46 குரோமோசோம் இருந்தாலும் விந்தனு மற்றும் அண்டனுவில் மட்டும் 23 தான் இருக்கும் என போன கட்டுரையில் பார்தோம்.
இதில் ஆணின் உடலில் X மற்றும் Y குரோமோசோம்கள் இருக்கின்றன ஆனால் பெண்ணின் உடலில் வெறும் X குரோமசோம் மட்டும்தான் இருக்கிறது.. (அதாவது xy இருந்தால் அது ஆன் xx இருந்தால் அது பெண்)

இப்போது குழந்தை உற்பத்தி என்று வரும் போது ஆணின் குரோமோசமும் பெண்ணின் குரோமோசோமும் இணைகிறது அப்படி இணையும் போது பெண்ணின் X உம் ஆணின் X உம் இணைந்தது விட்டால் அது பெண் குழந்தையாகிறது.
அப்படி அல்லாமல் பெண்ணின் X ஆணின் y உடன் இனைந்து விட்டால் (xy இருந்தால் அது ஆன் என்று பார்த்தோமே)  அது ஆண் குழந்தையாகிறது  (எனவே குழந்தை ஆனா பெண்ணா என்பதை ஆண் உடல் தான் நிர்ணயிக்கிறது...(எனவே பெண்களே.. இந்த ''பொட்டை புள்ளய பெத்துடியேடி ''என்று யாரவது ஆண் பிள்ளை உங்களை திட்டினால்.... "நான் என்னங்க பண்றது நான் என்கிட்ட இருந்த X குரோமோசோம தான் கொடுத்தேன்... உங்கள யாரு பதிலுக்கு X குரோமோசோமயே கொடுக்க சொன்னது.. ஆம்பல புள்ள வேணும்னா அதுக்கு ஒழுங்கா Y யை கொடுத்திருக்க வேண்டியது தானே " என கேட்கலாம்)

அந்த குரோமோசோமில் சம்பந்த பட்டவர்கள் பற்றிய அணைத்து விஷயங்களும் இருக்கும் என பார்த்தோம் அல்லவா...
இப்போது ஒரு கருமுட்டையை எடுத்து கொண்டு அதில் உள்ள மரபணுவை நீக்கி விட்டு புதிதாக வேறொருவரின் மரபணுவை உள்ளே செலுத்தி கருவுற செய்தால்.. அந்த குழந்தை அச்சு அசலாக அந்த மரபனுக்கு சொந்த காரன் போலவே இருக்கும் இந்த செயலுக்கு தான் குலோனிங் என்று பெயர்... இதில் ஒரு தாயின் மரபணு கொண்டு ஒரு பெண்ணை உற்பத்தி செய்தால்.. அந்த தாய் இந்த குழந்தை வயதில் எப்படி இருந்திருப்பாலோ அப்படியே இருக்கும்.
ஒட்டி பிறந்த இரட்டை குழந்தையிடம் கூட நீங்கள் பல வித்தியாசத்தை கண்டு பிடிக்கலாம் ஆனால் குலோனிங் என்பது அப்படியே ஒரு போட்டோவை இரண்டு காபி எடுப்பதை போல...
இவனுக்கு இடது கையில் குறிப்பிட்ட இடத்தில் மச்சம் இருந்தால் அவனுக்கும் அதே இடத்தில அதே மச்சம் இருக்கும்.. இவன் தலைமுடி குறிப்பிட்ட இடத்தில சுழி இருந்தால் அவனுக்கும் அதே....

இப்படி ஒரு தொழில்நுட்பம் எங்கே கொண்டு போய் விடும் என்று யோசித்து பாருங்கள் ....

 நாளை ஒரு கொலைகாரன்  உங்களுடன் டீ கடையில் டீ குடிப்பதை பார்த்து நீங்கள் ஆச்சரியம் அடைய.... அட பயப்படாதீங்க பாசு நான் ஒன்னும் கொலைகாரன் இல்லை நான் அவனோட குலோனிங் என சொல்லலாம்..
இதில் பல சிக்கல் இருக்கிறது... ஒபாமா போல இன்னும் ஒரு ஒபாமா.. அல்லது ஒசாமா போல இன்னும் ஒரு ஒசாமா இப்படி இருந்தால் என்னாகும் யோசித்து பாருங்கள்...அதனால் முதன் முதலில் டாலி என்கிற ஆட்டை குலோனிங் முறையில் உண்டுபண்ணினார்கள்.அப்புறம் மனிதர்கள் மேல் இதை பயன்படுத்த தடை செய்து விட்டார்கள்
(ஒசாமா போல தீவிரவாதி மற்றும் பெரும் பணக்காரர்கள் ரகசிய ஆராய்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்து உலகத்தில் தடை செய்யப்பட்ட இதை செய்து பார்ப்பதாக சொல்ல படுகிறது..யோசித்து பாருங்கள் ஒரிஜினல் ஒசாமாபின்லேடன் இன்னும் உயிரோடு இருக்க இறந்து போனது அவரது குலோனிங்காக இருந்தால் எப்படி இருக்கும்)

மரபணு பரிசோதனைகள் பொத்தாம் பொதுவாக நன்மை இல்லாதவைகள் இல்லை ..
பல வருடங்களுக்கு முன் அழிந்து போன ஒரு குறிப்பிட்ட வகை காளை மாட்டு இனத்தை இதை கொண்டு உயிர்ப்பித்து காட்டியிருக்கிறார்கள் ( நோட் பண்ணி வைங்க பா தமிழ்நாட்டு காளைகளுக்கு இந்த நிலமை தான் வரும் போல) ஸ்பீல் பெர்க் தனது ஜுரசிக் பார்க் படத்தில் இந்த காலத்தில் டைனோசர் எப்படி வந்தது என்பதற்கு லாஜிக்காக இதை பயன்படுத்தி இருப்பார்.. பல கோடி ஆண்டுகளுக்கு முன் டைனோசரை ஒரு கொசு கடிக்க அது ஒரு மர பிசினில் மாட்டி படிகமாகி போக இந்நாளில் அதை கண்டெடுத்து அதற்கு உள்ளே ஒளிந்து இருந்த டைனோசர் DNA வை தவளையின் மரபணு கலப்பு பண்ணி முதல் டைனோசர் முட்டையை உண்டு பண்ணுவதாக அதில் கதை வரும்.

இந்த கருவுறுதல் என்பது இயற்கையாக பெண்ணின் உடலில் நடக்க வேண்டிய சமாச்சாரம்.. ஆனால் இது அங்கு தான் நடைபெற வேண்டும் என்றில்லை... கருமுட்டையை தனியாக பிரித்து எடுத்து.. அதில் விந்தனுவை உள்ளே செலுத்தி ஒன்று சேர்த்தால் அதில் கருவுற்பத்தி நடந்து விடும் இவ்வளவும் ஒரு டெஸ்ட் டயுபில் நடந்து விடும் அப்படி உற்பத்தி ஆன கரு தான் டெஸ்ட் டியூப் பேபி (இந்த குழந்தை பிறக்க ஆன் பெண் இணைவு அவசியம் இல்லை )
அனால் அந்த கரு வளர கருப்பை தேவை... (டேய் எப்பா விஞானிகளா... இதுக்கும் ஒரு செயற்கை கருப்பையை கண்டு பிடிச்சிடாதீங்க டா புண்ணியமா போகும்)

அடுத்ததாக...

விந்தனு மற்றும் அண்ட அணு.. (கருமுட்டை யின் இன்னொரு பெயர் ) இதில்  உள்ள குரோமோசோமில் சம்பந்த பட்டவர்களின் தகவல்கள் டைரி குறிப்பு போல (அந்த ATCG எழுத்தை பயன்படுத்தி) எழுத பட்டுள்ளது என்று போன கட்டுரையில் பார்த்தோம் அல்லவா.இப்போது யோசித்து பாருங்கள் டைரியை படிக்க தெரிந்து விட்டால் இயற்கை எழுதிய அந்த கதையை இவர்கள் அடித்து திருத்தி எழுதிவிட முடியாதா... குழந்தைக் கருப்பு கலர் என்ற தகவலை அடித்து விட்டு வெள்ளை கலர் என கொடுத்து விட்டால் குழந்தை வெள்ளை ஆகிவிடாதா?
 நிச்சயமாக ஆகும் .. அதை எப்படி அடித்து திருத்த வேண்டும் என்றால் வேறு ஒரு மரபணுவில் வெள்ளை தோல் என்கிற தகவல் அடங்கிய மரபணுவை தேடி பிடித்து கத்தரித்து இந்த மரபணுவில் உள்ள கருப்பு நிற தகவல் அடங்கிய பகுதியை வெட்டி எடுத்து அதில் ஒட்டி விட்டால் முடிந்தது..
ஆனால் இதில் பல சிக்கல்கள்  உள்ளது முதலில் அந்த டைரியை ஆராய்ச்சியாளர்களால் (நல்ல வேலையாக) இன்னும் முழுதும் படித்து புரிந்து கொள்ள முடியவில்லை இரண்டாவது தேவையான தகவல் அடங்கிய மரபணுவை ஒன்று சேர்த்து ஒருங்கிணைப்பதும் சாதாரண காரியம் இல்லை..

அதே சமயதில் இந்த மரபணு மாறுதலுக்கு இயற்கையான வழிமுறை ஒன்று உண்டு அதற்கு ஜீன் மியூடியேஷன் என்று பெயர் .. உலகத்தில் இயற்கையாக ஜீன் மியூடியேஷன் அடைந்து சக்தி பெற்றவர்கள் (X man படத்தில் காட்ட படுவதை போல) இருக்கிறார்களா என்றால்... நீங்கள் கற்பனை பண்ணுவதை விடவும் அதிகமான எண்ணிக்கையில் ,மற்றும் கற்பனை பண்னுவதை விடவும் அதிகமான  சக்திகளுடன் இருக்கிறார்கள் ..இரும்பு ஸ்பானரை வெறும் கையால் வளைத்து மஹா சக்தியை வெளி படுத்துபவன்.... இருட்டில் பார்க்கும் சக்தி உடையவன்.. உலோக பொருட்களை உடலில் ஒட்டி கொள்ளும் காந்த சக்தி வாயந்தவன் (மெக்னிட்டோ..) ...ரப்பரை போல உடலை வலைப்பவன்.. மனிதசக்திக்கு அப்பாற்பட்ட டெசிபல் சத்தத்தோடு கத்துபவன்... உலக மஹா கணக்கை நொடிக்கும் குறைவான நேரத்தில் முடிப்பவன் .. தன் வாழ்நாளில் நடந்த அணைத்து நிகழ்வையும் நினைவில் கொண்டுள்ளவன்....ஐஸ் இல் படுப்பவன் வலியை தாங்குபவன்...உடலில் எந்த பாதிப்பும் இல்லாமல் மின்சாரத்தை கட்டி பிடிப்பவன்....இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது (யூ டியு்பில் சென்று stanly's super human என தேடி பாருங்கள் ... இதில் காட்டபட்டவர்கள் அனைவருமே மரபணு மாறுத்தலால் திறமை பெற்றவர்கள் அல்ல என்றாலும் பெரும்பான்மையாக அப்படி இருக்கிறார்கள்) கிளியோபேட்ரா படத்தில் நடித்த எலிசபெத் டெய்லர் என்ற ஹாலிவுட் நடிகையை பற்றி கேள்வி பட்டிருப்பீர்களே.. அவரது கண்கள் மக்கள் இடையே ரொம்ப பேமஸ் (நம்ம ஊரு ஐஸ்வர்யா போல) உலகமெங்கும் அவரது கண்ணுக்கு மட்டும் பல லட்ச கணக்கான பேன்ஸ் இருக்கிறார்கள். இன்றைய தேதிக்கும் ஒருவருடத்திற்கு 3 லட்சத்திற்கும் மேலானவர்கள் டைலரின் கண்ணை "search"  ச்சுவதாக கூகுள் சொல்கிறது.
அதற்கு காரணம் அவரது கண்ணின் நிறம் மிக அறிய வைலட் நிறமாக இருக்கும் ...பார்த்தால் யாருக்கும் அடடே இவ்ளோ அழகா இருக்கே என கொஞ்ச நேரம் நின்னு ரசிக்க தோணும் அளவுக்கு காந்த கண்கள் அவருக்கு (அப்படி ஒருவனால் ரசிக்க முடியவில்லை என்றால் அவன் ஜீனில் ஏதோ கோளாறு என்று அர்த்தம)..மேலும் மேல் இமை போல கீழ் இம்மையும் நன்றாக வளர்ச்சி அடைந்து கண் சிமிட்டினால் சும்மா பட்டாம் பூச்சி சிரகடிப்பதை போல் இருக்கும் என்பது கூடுதல் ஸ்பெஷல்...அந்த ஸ்பெஷல் கண்களுக்கு காரணம் ஜெனடிக் தான்

இவ்வளோ நல்ல விஷயம் இருந்தாலும் இந்த ஜீன்மியூடேஷனில் ஒரு மஹா சிக்கல் இருக்கிறது  ..
இயற்கையாக மரபணு மாறுதல் அடைந்து வேறுமாதிரியாக மாற பல காலங்கள் பிடிக்கும்.

அப்படி இருந்தும் ப்ரைட்மேன் என்கிற ஒரு மரபு ஆராய்ச்சியாளர் ஒரு செயலை செய்து காட்டினார்.. அவர் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க மருந்து கொடுப்பதை எதிர்க்கும் குழுவில் இருப்பவர்.." ஜெனடிக் எனும் இயற்கை வழி இருக்கும் போது ஏன் ஊக்க மருந்து கொடுத்து உங்கள் திறமையை வளர்க்க வேண்டும்" என்று சொல்லி விட்டு விளையாட்டை சிறப்பாக விளையாடும் மரபணுக்கள் பொறுக்கி எடுத்து ஊசி மூலம் விளையாட்டு வீரர்கள் உடலில் செலுத்தி திறமையை மேம்படுத்தி காட்டினார். உடலில் மரபணுவை கடத்த ஒரு போஸ்ட்மேனை போல அவர் பயன்படுத்தியது .. தீமை செய்யாத வைரஸ்களை.

அனால் மரபணு ஆராய்ச்சி எப்போதும் எதிர்பார்த்த விளைவை தரும் என்று சொல்ல முடியாது.. பல நேரங்களில் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஓன்று நினைக்கும் என்ற கதையாகி விடும் .
 மரபணு ஆராய்ச்சியாளர்கள் செம மொக்கை வாங்கின கதை ஒன்று சொல்கிறேன்... இந்த முட்டைகோஸ் .. முள்ளங்கி ...உருளை கிழங்கு..இப்படி பட்ட செடியில் கீழ்பகுதி பயனுள்ளது ஆனால் இலைகள் பயனற்றது... அது போல இந்த கீரைவகைகள் இருக்கே அதில் இலைகள் தான் பயனுள்ளது வேர்கள் நமக்கு பயனற்றது...
 நம்ம மரபணு மண்டையர்கள் ஒரு ஐடியா பண்ணினார்கள் அதாவது ரெண்டு செடியை மரபணு மாறுதலுக்கு ஆளாக்கி ஒரு செடியை செய்ய வேண்டியது அந்த செடி எப்படி இருக்கும் தெரியுமா? இலையில் கீரையையும் வேரில் முள்ளங்கியையும் கொண்டிருக்கும்.. ஆராய்ச்சி என்னமோ நல்லா தான் பண்ணாங்க ... ஆனா விளைவு என்னாச்சுனா முள்ளங்கியின் இலையுடனும் கீரையின் வேருடனும் முழு பயனற்ற செடியாக அது பல்லை இளித்தது...

இதை தவிர்த்து இயற்கையான மரபணு மாறுதலிலும் பல தீமைகள் அடங்கி இருக்கிறது

அதாவது அடிதொண்டையில் எக்ஸ்ட்ரா சதை வளர்தல்... wisdom tooth எனப்படும் பல் வளர்தல்.. கண்ணுக்குள் சதை வளர்தல்.. குடல் வால் வளர்தல் ...நிஜ வால் வளர்தல்( நிஜ வால் பையன்கள் உலகில் உண்டு ) உடல் முழுதும் கரடி ரேஞ்சுக்கு முடி வளர்தல்..இப்படி பல விஷயங்களுக்கு காரணமும் ஜெனடிக் தான்.. அவ்வளவு ஏன் இது அடுத்த தலைமுறைக்கு தகவலை கடத்தும் என்று சொன்னேன் அல்லவா... தகவலை மட்டும் அல்ல டையாப்டீஸ் போன்ற நோயையும் சேர்த்தே கடத்தும்..

ஜெனடிக் எனும் இந்த துறை மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை.. இனி உலக யுத்தம் வந்தால் அதில் அணுகுண்டை விட பயலாஜிகல் வெப்பன் என படும் வித வித வைரைஸ் கள் தான் அதிக பங்கேற்கும் ..எதிர் காலத்தில் குழந்தைகளை கட்டுரை தொடக்கத்தில் பார்த்ததை போல  ஆர்டர் பண்ணி வாங்கலாம்.. குறிப்பிட்ட வகை கருக்கள் ரெடிமேடாக கிடைக்கலாம். (கிரிக்கெட் வீரனாகனுமா.. இந்தா இந்த கரு.. பாடகர் ஆகணுமா.. அதோ அந்த டப்பாவை எடுத்துக்குங்க...ரேஞ்சில்...)

மிகுந்த நன்மையையும் (உதாரணமாக மரபணு மாற்றம் செயது பல நோயை குண படுத்தல்..) அதே போல மிக மிக தீமை யையும் (பயாலஜிகல் வெப்பன்) இவை இரண்டையும்  ஒருங்கே கொண்டது தான் இந்த துறை...நமது வரம்பை மீறாமல் இயற்கை எழுதிய டைரியை படிப்பதோடு நிறுத்தி கொண்டு அதில் நம் பேனாவை வைத்து கிருக்காமல் இருந்தால் ... ஜீன் எனும் ஜக ஜால கில்லாடியை கொண்டு அனைவரும் பயனடையலாம்.. 

Comments

  1. இரண்டாம் பாகம் செல்வது எப்படி நண்பரே..

    ReplyDelete
  2. இரண்டாம் பாகம் செல்வது எப்படி நண்பரே..

    ReplyDelete

  3. நான்கு யுகம் உன்தன் வாழ்க்கை முறையை குறிக்கும்.

    கிா்த யுகம் - முதல் யுகம் - உன் கரு - அணு(atom)
    திரேதா யுகம் - இரண்டாம் யுகம் - நீ கேட்கும் கட்டுகதை - [எலக்ட்ரான் (e-)]
    துவாபர யுகம் - மூன்றாம் யுகம் - உனக்கான தேடல் - [P(புரோட்டான்)(He,She), N(நீயுட்ரான்)(She/He)]
    கலி யுகம் - நான்காம் யுகம் - நீ யார் என்று உணரும் நிலை - நீயுக்ளியஸ்(N/P) .
    Then boom.
    அண்டமும் பிண்டமும் அணு ஒன்று.✌️

    ReplyDelete
  4. innum virivaana katturai kidaikkumaa nanbare...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"