" மின்காந்தம் என்ன ஏது எப்படி"

.              

    "  மின்காந்தம் என்ன ஏது எப்படி" 
(கருத்தும் எழுத்தும்: ரா_பிரபு)

மின்காந்த வியல் என்பது என்ன வென்று இன்று பார்ப்போம்.

அதை பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் விளக்கும் முன் உங்களுக்கு ஒன்றை சொல்லிவிடுகிறேன். நீங்கள் electromagnetic பற்றிய இந்த கட்டுரையை இந்த கணம் படித்து கொண்டிருப்பது.....electromagnetic இன் உதவியால் தான்.

மின்சாரம் என்பது என்ன ஏது என்று மின்சாரம் கட்டுரையில் எழுதி இருந்தேன்.
 அதாவது ஒரு காந்த புலத்தை கடத்தியை கொண்டு வெட்டினால் அந்த கடத்தியில் மின்சாரம் உற்பத்தியாகும் என்று பார்த்தோம்.(உதாரணம் உங்கள் சைக்கிள் டைனமோ.. அது சைக்கிள் வீலுடன் சேர்ந்து சுற்றும் போது காந்த புலத்தைதான் வெட்டுகிறது ..மின்னுற்பத்திக்காக)
நாம் பார்த்த இந்த தத்துவம் ஒரு சாதாரண தத்துவம் அல்ல இதுதான் Faraday's  law .. இதை சொன்னவர் மைகேல் பேரெடே...

இப்போது காந்தபுலன் இருந்தால் மின்சாரத்தை உற்பத்தி பண்ணலாம் என நாம் சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொண்டோம். இப்போ இந்த நாணயத்தின் அடுத்த பக்கத்தை பற்றி சொல்கிறேன்..
அதாவது நமக்கு தெரிந்த அந்த உண்மையை இப்படி திருப்பி போடுங்க..அதாவது காந்தம் இருந்தால் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்பதை போல மின்சாரம் இருந்தால் காந்ததை உற்பத்தி செய்யலாம்...
கையில் ஒரு ஆணியை எடுத்துக்கொள்ளுங்கள் அதில்  ஒரு இன்சுலேட் செய்யப்பட்ட கம்பியை நெருக்கமாக சுற்றுங்கள்... இப்போது கம்பியின் ஆரம்ப மற்றும் முடிவு முனைகளில் நீங்கள் சாதாரணமாக பயன்படுத்தும் ஒரு பாட்டரியை வையுங்கள்..
இப்போது ஒரு சின்ன இரும்பு துண்டை அருகில் கொண்டு சென்று பார்த்தல் ஆணி ஒரு தற்காலிக காந்தமாக மாறி இருப்பதை காணலாம்..

மின்சாரம் காந்ததையும்... காந்தம் மின்சாரத்தையும் மாறி மாறி உற்பத்தி செய்யும் என்றால் அது ஒரு அலை போல தொடர்ச்சியாக மாறி மாறி உண்டாகுமே.. ஆம் அந்த அலைகளுக்குதான் மின்காந்த அலைகள் என்று பெயர்..

மைகேல் பாரடே தொடங்கிவைத்த இந்த சமாச்சாரத்தை மேற்கொண்டு ஆராய ஒரு வின்ஞானி களம் இறங்கினார் அவர் பெயர் ஜேம்ஸ் கிளார்க் மார்க்ஸ்வெல்..மேலும்  Oliver Heaviside மற்றும் Heinrich Hertz என்பவர்கள் இதில் மானே ,தேனே ,பொண்மானே, சேர்ந்தவர்கள்.

 மைகேல் பாரடே தனது law வை சொன்ன போது அதை விளக்க ..கணித ரீதியாக விவரிக்க அவர் போதிய கல்வியறிவு அற்றவராக இருந்தார். பின்னால் வந்த மார்க்ஸ்வெல் இதில் சமன்பாடு களெல்லாம் அமைத்து "well mark" எடுத்தார்.
அவர்  இந்த மின்காந்த அலையின் திசைவேகதை கணக்கிட முனைந்த போது அது ஒளியின் திசைவேகதை ஒத்திருப்பதை கண்டார்.. அதன் பிறகு அவர் ஒரு உண்மையை கண்டு கொண்டார்.. அதாவது அது ஒளியை ஒத்து மட்டும் அல்ல அது ஒளியே தான்.. அதாவது ஒளியே எலெக்ட்ரோ மேக்னடிக் காக தான் வருகிறது.
ஒளி அலைகளில் உள்ளது போல மின்காந்த அலைகளும் அதிர்வெண் (frequency ) மற்றும் அலைநீளம் (wave length ) கொண்டு விவரிக்க படுகிறது.
Frequency ஐ அதிகரித்தல் மற்றும் wavelength குறைத்தல் போன்ற செயல் மூலமாக மின்காந்தாதால் .. ரேடியோ அலை மைக்ரோ அலை ..அகசிவப்புகதிர்... அப்புறம் கண்ணால் காண கூடிய ஓளி ...புறஊதா ..x ரே ..காமாரே.. இப்படி பல வடிவில் உங்களை நெருங்க முடியும்.
( அதிக அலைநீளம் கொண்ட சிகப்பு முதல் குறைந்த அலைநீளம் கொண்ட ஊதா வரை தான் நாம் கண்ணால் காண முடிய கூடிய ஓளி.. சிகப்பை விட அதிகம் அலைநீளம் கொண்டது அக சிவப்பு .அதை விட அதிகம் கொண்டது மைக்ரோ அலை...அதை விட அதிகம் கொண்டது தான் ரேடியோ அலை....
அதே போல ஊதாவை விட குறைந்த அலை நீளம் கொண்டது புறஊதா. அதை விட குறைவு எக்ஸ் ரே . மேலும் அதைவிட குறைவுதான் காமா ரே)

சுருக்கமாக மின்சார குணமும் காந்த குணமும் ஒன்றாக கொண்ட மின்காந்தம் எப்படி உருவாகிறது என்றால் . சிம்பிளாக எலக்ட்ரிகல் சார்ஜ கொண்ட துகள்கள் E M அலைகளை உண்டாக்கிகிறது எனலாம்.
ஆனால் இதன் பயன்பாடுகள் சிம்பிளானதல்ல ..
 நாம் கேட்கும் ரேடியோ .பார்க்கும் டிவி ..பாட்டு கேட்க உதவும் FM.. நாம் பேசும் செல்போன் கால் தொடங்கி  செயற்கை கோள் வரை.. வீட்டில் பயன்படுத்தும் மைக்ரோவேவ் ஓவன் தொடங்கி ஹாஸ்பிடலில் பயன்படுத்தும் எக்ஸ்ரே வரை இதன் பயன்பாடு கணக்கில் அடங்காதவை..
அப்புறம் முக்கியமாக...electro megnat இல்லை என்றால் இன்டர்நெட் இல்லை

<<

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"